Yena athu rose oda character illai.. நினைச்சாலும் mudiyathu ????Rommmbbba nallaa irukku Abi????????
முள்மேல் மலர்ந்தும்
ரோஜா இதழ்கள்
காயப்படுத்துவதில்லை..????????
Ippo enna solla vareengalaamneenga rose naaYena athu rose oda character illai.. நினைச்சாலும் mudiyathu ????
Avlo hard lam kidaiyathunga NaaIppo enna solla vareengalaamneenga rose naa
Semaya iruku Abi..???அடர்ந்து படர்ந்து விரிந்த
மூங்கில் காடுகளே...
வெள்ளி கம்பிகள் போல
பொழியும் அருவிகளே...
பாறை இடுக்கில் முளைக்கும்
காட்டு செடியின் வேர்களே...
பாலை நிலத்திலும் தன்னம்பிக்கையோடு
வளரும் கற்றாழை செடிகளே...
இயற்கையை ரசிக்க
தெரிந்த மனமே உனக்கு,
தாய் அவள் கூறும்
பாடங்கள் ஏதும் புரியாதோ?
வாழ்வை சலித்து
வாழும் மனிதர்களே!
இயற்கை மடியில்
சற்று இளைப்பாறு!
முள் மேல் மலர்ந்தும்
ரோஜாவின் இதழ்கள்
காயப்படுத்துவதில்லை...
ஒருநாள் ஆயுள்
பெற்றாலும் காதலுக்கு
தூது செல்லுமே!
வெட்டி சாய்த்தாலும்
மரம் நிழல் தருவதை
நிறுத்துவதில்லை...
வெயில் காலத்தில்
தென்றல் காற்றை
இதமாய் வீசுமே!
பூவின் இனத்திற்கு
நான் மாறேனோ?
எதிர்காலம் பற்றிய
பயமில்லாமல் இருப்பேனோ?
ஒருமுறையேனும் மரமாய்
நானும் பிறப்பேனோ?
கஷ்டத்திலும் சிரித்து
வாழ முயல்வேனோ?
மேகம் மழையை
சுமந்தே இருந்தாலும்,
சுயநலமாய் தன்னிடமே
சேமிப்பதில்லையே...
தாய்மையின் தூய்மையான
மழை நீரையும் பாருக்கு
பொழிந்தே மகிழ்கிறதே!
மலையில் மறைந்தாலும்
சூரியன் அழிந்து போவதில்லை...
ஒரு பக்கம் மறைந்து,
மறுபக்கம் ஜனனம் எடுத்து,
அக்னி பிழம்பாய் தன்னை
எரித்து உலகிற்கு ஒளியூட்டி
கொண்டிருக்கிறதே!
நீண்ட வானமாய்
என் வாழ்வும் நீளுமோ?
பிரம்மாண்டகளை கையாளும்
சக்தி என்னுள் சேருமோ?
சூரியன் குணத்தை
நானும் பெறுவேனோ?
தன்னலம் அற்று
தரணியில் வாழ்வேனோ?
இயற்கை தாய் பாடும்
தென்றல் கீற்றில்...
காட்டும் மாயாஜால
வானவில் வித்தையில்...
இயந்திர தன்மையை
தற்காலிகமாக தொலைத்து...
துள்ளி திரிகிறேன் பணத்தின்
அருமை அறியா குழலி போலவே!