சடை முடிதன்னில்
பிறை நிலவை சூடி...
புனித கங்கையை
கொண்டைக்குள் கொண்டு...
உலகை காக்கும் உமைக்கு
இட பாகத்தை அளித்து...
உயிர் எடுக்கும் ஆலகால
விஷத்தை சங்கில் அடக்கி...
அடிமுடி காணாத
அக்னி பிழம்பாய்...
பிட்டிற்கு மண் சுமந்த
பினாக பாணியாய்...
விஜயனின் வில்லால்
அடிபட்ட வித்தகனாய்...
பிணத்தின் சாம்பலை
பூசிய பேயனாய்...
ஆலமர நிழலில்
அமர்ந்த ஆதிகுருவாய்...
அடியாரின் அன்பிற்கு
அடிமையாகும் ஆசானாய்..
அன்பின் உருவமாய்
சர்வம் சிவனாய்...
என்னை நித்தம்
ஆளும் ஈசனாய்...
தினந்தோறும் பூஜிக்கும்
தாயுமானவராய் விளக்கும்
என் இறைவா!
பிறை நிலவை சூடி...
புனித கங்கையை
கொண்டைக்குள் கொண்டு...
உலகை காக்கும் உமைக்கு
இட பாகத்தை அளித்து...
உயிர் எடுக்கும் ஆலகால
விஷத்தை சங்கில் அடக்கி...
அடிமுடி காணாத
அக்னி பிழம்பாய்...
பிட்டிற்கு மண் சுமந்த
பினாக பாணியாய்...
விஜயனின் வில்லால்
அடிபட்ட வித்தகனாய்...
பிணத்தின் சாம்பலை
பூசிய பேயனாய்...
ஆலமர நிழலில்
அமர்ந்த ஆதிகுருவாய்...
அடியாரின் அன்பிற்கு
அடிமையாகும் ஆசானாய்..
அன்பின் உருவமாய்
சர்வம் சிவனாய்...
என்னை நித்தம்
ஆளும் ஈசனாய்...
தினந்தோறும் பூஜிக்கும்
தாயுமானவராய் விளக்கும்
என் இறைவா!