• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மனதின் சத்தம் - சிவனே! அரனே!

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Abhirami

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2019
Messages
1,527
Reaction score
3,795
Location
Chennai
சடை முடிதன்னில்
பிறை நிலவை சூடி...
புனித கங்கையை
கொண்டைக்குள் கொண்டு...
உலகை காக்கும் உமைக்கு
இட பாகத்தை அளித்து...
உயிர் எடுக்கும் ஆலகால
விஷத்தை சங்கில் அடக்கி...
அடிமுடி காணாத
அக்னி பிழம்பாய்...
பிட்டிற்கு மண் சுமந்த
பினாக பாணியாய்...
விஜயனின் வில்லால்
அடிபட்ட வித்தகனாய்...
பிணத்தின் சாம்பலை
பூசிய பேயனாய்...
ஆலமர நிழலில்
அமர்ந்த ஆதிகுருவாய்...
அடியாரின் அன்பிற்கு
அடிமையாகும் ஆசானாய்..
அன்பின் உருவமாய்
சர்வம் சிவனாய்...
என்னை நித்தம்
ஆளும் ஈசனாய்...
தினந்தோறும் பூஜிக்கும்
தாயுமானவராய் விளக்கும்
என் இறைவா!
 




Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,788
Reaction score
35,434
Location
Vellore
வாவ் படிக்கும் போதே உள்ளுக்குள் உடுக்கை சத்தம் எழுது.... செம்ம செம்ம டா??????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top