நீ தந்த காதல் நினைவுகளால்
வேறோரு உலகில் பறக்கிறேனே...
இதயத்துடிப்பு ஓசையிலும்
உன் பெயரையே கேட்டேனே...
கை கோர்த்து சென்ற மணித்துளிகள்
மனதில் நங்கூரமாய் பதிகிறதே...
நீ கூறும் காதல் மொழிகளில்
என்னையே உன்னிடம் தொலைத்தேனே...
என் கண்களை மூடினால்
உன் சிரித்த முகமே தோன்றுதே...
என் தலையும் சாயவே
உந்தன் தோள்களையே தேடுதே...
என் பகல் இரவு வேளைகளும்
உன் நினைவினிலே திளைக்குதே...
சின்னஞ்சிறு ஊடலிலும்
உன் அன்பு மட்டுமே தெரிகிறதே...
நான் எனக்கே தெரியாமல் உனக்கு
பிடித்த விதமாக மாறி போனேனே...
பூமியில் உள்ள காதலை எல்லாம்
உன்னிடம் காட்டவே துடித்தேனே...
எத்தனையோ பேரை கண்டும்
காணாமல் கடந்து சென்றேனே...
உன் ஒற்றை விழி பார்வைக்காக
மனமும் இன்று ஏங்கி தவிக்கிறதே...
இன்னும் இன்னும் ஆசைகள்
என் நெஞ்சோரம் தலை நீட்டுதே...
உன்னை சுற்றி மட்டுமே
கனவுகளும் அழகாய் விரியுதே...
என் கனவும் கற்பனையும்
உன்னிடமே தொடங்குதே...
பேனா முனை கவிதைகளும்
உன்னையே சித்தரித்து எழுதுதே...
நீ கூறும் பட்ட பெயர் போதும் அன்பே
உனக்காகவே வாழ்ந்து விடுவேனே...
காசோலைகள் வேண்டாம் உயிரே
மார்பில் சாய்ந்து நிம்மதியாக
உறங்கும் உரிமை ஒன்றே போதுமே!