குழந்தைப்பருவ புகைப்படம் பார்த்தபோது
சிரித்த மனதிடம் கேட்டேன்
ஏன் சிரிக்கிறாய் என்று
அது சொன்னது
நினைவுக்கு வந்தது
நீ அழுதது......
ஒற்றைப் பலகை கையில் ஏந்தி
தந்தை உன்னை தோளில் ஏந்தி முதல் நாள் நீ பள்ளிக்கு சென்றது....
உள்ளே சென்றதும்
உடனே நீ விசும்பியதும்
தந்தை உன்னை கொஞ்சியதும்
தலையைச் சுற்றி காதை தொட்டதும்
எட்டாமல் எட்டாமல் நுனி விரல் பட்டதும்....
கிடைத்தது வகுப்பறை
கல்வியின் கருவறை
அ... என்ற உயிர் எழுத்தும்
க்... என்ற மெய்யெழுத்தும்
ஓயாமல் கிறுக்கியதும்
அதற்கு ஒரு சாக்லேட்
பரிசாய் கிடைத்ததும்
பரவசமாய் சிரித்ததும்
துள்ளிக் குதித்து வீட்டிற்குள் நுழைந்ததும்......
என்று மனம் சொன்னதைக்
கேட்கவே!
நானே சிரித்து விட்டேன்
ஓரப் புன்னகையில் .......
சிரித்த மனதிடம் கேட்டேன்
ஏன் சிரிக்கிறாய் என்று
அது சொன்னது
நினைவுக்கு வந்தது
நீ அழுதது......
ஒற்றைப் பலகை கையில் ஏந்தி
தந்தை உன்னை தோளில் ஏந்தி முதல் நாள் நீ பள்ளிக்கு சென்றது....
உள்ளே சென்றதும்
உடனே நீ விசும்பியதும்
தந்தை உன்னை கொஞ்சியதும்
தலையைச் சுற்றி காதை தொட்டதும்
எட்டாமல் எட்டாமல் நுனி விரல் பட்டதும்....
கிடைத்தது வகுப்பறை
கல்வியின் கருவறை
அ... என்ற உயிர் எழுத்தும்
க்... என்ற மெய்யெழுத்தும்
ஓயாமல் கிறுக்கியதும்
அதற்கு ஒரு சாக்லேட்
பரிசாய் கிடைத்ததும்
பரவசமாய் சிரித்ததும்
துள்ளிக் குதித்து வீட்டிற்குள் நுழைந்ததும்......
என்று மனம் சொன்னதைக்
கேட்கவே!
நானே சிரித்து விட்டேன்
ஓரப் புன்னகையில் .......
Last edited: