அமைச்சரின் வீடு
திட்டமிட்டபடியே மாலையில் மதியை விட்டுவிட்டுத் தனியாக அமைச்சரைப் பார்க்க இன்பன் வந்தான். அவரின் பணிச் சூழல் காரணமாக, அவன் அவர் முன் வந்து அமர இரவாகிருந்தது.
அமைச்சரின் கைகளில் அட்டாப்ஸி மற்றும் டிஎன்ஏ ரிப்போர்ட்களைக் கொடுத்திருந்துவிட்டு, இன்பன் தலை குனிந்து உட்கார்ந்திருந்தான்.
முழுவதும் படித்துப் பார்த்தவருக்கு, பெரிய அளவில் அதிர்ச்சி இல்லை. ஏனென்றால் கடந்த மூன்று நாட்களாக, ஒரு தந்தையாக அவர் மகனைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்திருந்தார்.
“நீ ஏன்ப்பா தல குனிஞ்சி இருக்க.. இந்த மாதிரி ஒரு பிள்ளையைப் பெத்ததுக்கு, நான் தான் தலை குனிஞ்சி உட்காரணும்… “என்றவரின் குரலில் சோகம் இருந்தது.
“ இல்ல சார்.. “என்று இழுத்தான்..
“ஆனால்… எனக்கு கஷ்டமா இருக்குப்பா.. “
‘ஏன் ‘ என்பது போல் அவரைப் பார்த்தான்.
“நீயேன் எங்கிட்ட சொல்லல.. இத்தன நாளா பழகியிருக்கோமே.. இதான் நீ என்னைப் புரிஞ்சிகிட்டதா” என்றார் ஏமாற்றம் அளிக்கும் குரலில்.
“நீங்க கஷ்டப்படுவீங்கனுதான் தான் சொல்லல… “
“எனக்கென்னமோ அப்படித் தோணல.. இதுல இவன் பையனுக்கும் சம்பந்தம் இருக்கே.. இவன் எப்படி சம்மதிப்பானு நினைச்சிருப்ப… “என்றார் வேதனையுடன்.
அந்த நொடி அவனுக்கு அனலிக்கா மேல் கோபம் வந்தது. இப்படி ஒரு நல்ல மனிதரைக் கஷ்டப்பட வைக்க காரணம் அவளும் தான் என்று நினைத்தான். சரியாக அந்த நேரத்தில் அனலிக்காவிடம் இருந்து அழைப்பு வந்தது. எடுத்துப் பார்த்தவன் “ப்ச் “ என்று அழைப்பைத் துண்டித்தான். பின்
“இல்ல சார்.. நீங்க கஷ்.. “ என்று அவன் முடிக்கும் முன்பே..
“இதுல என்ன கஷ்டம் இன்பா.. இந்த மாதிரி செய்ற எத்தனை பசங்கள நாம அடிச்சிருப்போம்.. அப்போ, அந்த பசங்க வீட்லயும் என்னை மாதிரி, தன் மகனைப் பத்தி ஒன்னுமே தெரியாத ஒரு தகப்பன் இருந்து அழுது இருப்பான்ல.. “ என்று யதார்த்தமாக கூறினார்.
சிறிது நேரம் அமைதி நிலவியது. பின்பு அவரே தொடர்ந்தார்..
“இப்ப நான் என்ன செய்யணும் அத சொல்லு… எதுக்குப் பழைய கதைய பேசிகிட்டு.. தப்பும் பண்ணவன் தண்டனை அனுபவிச்சிருக்கான்… “
“கேஸ வாபஸ் வாங்கனும்….. “என்று நேரடியாகவே விஷயத்திற்கு வந்தான்.
திரும்பவும் இன்பனின் கைப்பேசி அழைத்தது. இந்த முறை அழைப்பு மதியிடம் இருந்து. திரும்பவும் அழைப்பைத் தவிர்த்தான்.
“அவ்வளவு தான.. விடு வாங்குறேன்… நீ இப்படி இருக்காதப்பா.. நல்லா தைரியமா இரு.. இன்னும் நாம சேர்ந்து செய்ய வேண்டிய வேலை நிறைய இருக்குப்பா… “
அவன் ஆச்சரியமாக அவரைப் பார்த்தான்.
“ஆமாப்பா.. நிறுத்தனும்னு நினைச்சா தப்பு பண்ற அவங்க நிறுத்தட்டும்.. நல்லது செய்ற நாம ஏன் நிறுத்தனும்.. “என்றார் நியாயமாக…
சரி என்பது போல் தலை அசைத்தான். திரும்பவும் இன்பனின் கைப்பேசி அழைத்தது. இந்த முறையும் மதியே. திரும்பவும் அழைப்பைத் தவிர்த்தான்.
“யாருப்பா.. எடுத்துப் பேசு… “ என்றார்.
“மதி தான்… அப்புறமா பேசிக்கிறேன்.. நீங்க சொல்லுங்க… “
“ஆனா இந்த மாதிரி பண்ணறது தப்பு.. இது உனக்கும் நல்லதில்லை.. உன்ன சுத்தி இருக்கிறவங்களுக்கும் நல்லதில்ல… நீ யோசிச்சியா, ப்ரித்தீஸ் வந்து எப்படி சமாளிப்பாருனு.. அவர அன்னைக்கு இன்ஃபார்மல் மீட்டிங்னு கூட்டிட்டு போய் எவ்வளவு மோசமா திட்டுனாங்க தெரியுமா… அதுவும் என் முன்னாடியே.. உனக்கு.. “என்றார் கேள்வியாக..
“தெரியும்… அடுத்த நாள் டென்ஸனா வந்து பேசுனான்.. அவங்கிட்ட எவ்வளவோ கேட்டேன்.. சொல்லல…”
“ம்ம்ம்.. நமக்காகத்தான் அவரு எல்லாத்தையும் கண்டுக்காம இருக்காரு.. அதுக்காக அவர ரொம்ப கஷ்டப் படுத்தலாமா.. அவரு பாவம், படிச்ச படிப்பு, சட்டம், பதவி இதெல்லாம் வெச்சு திருத்தலாம்னு நினைக்கிறாரு.. ஆனால் அது இப்ப முடியாது.. “ என்றார் இயலாமையுடன்.
மறுபடியும் மதியிடம் இருந்து அழைப்பு…. மறுபடியும் ஏற்கவில்லை…
“வேற ஏதாவது பிரச்சனை இருக்காப்பா.. “
“தினேஷ்னு இன்னொருத்தன் இருக்கான்… பிரச்சனை பண்ணலாம்.. அப்ப ஏதாவது செய்ய வேண்டியது இருக்கும்.. “
“இனிமே நீ எதுவும் பண்ணாத.. வேற யாராவது நம்பிக்கையான ஆள வச்சு பண்ணு… “என்றார் கட்டளையாக.
“மதி இருக்கான்… “
“அவரு நாலு வருஷமா எதுவும் சரியா பண்ணலயே… “
“நான் சொன்னா செய்வான்… “ என்றான் நம்பிக்கையாக…
“எதுனாலும் வேற யாராவது வச்சு பாரு… நான் கேஸ வாபஸ் வாங்கினாலும், உன்னைய ஹியூமன் ரைட்ஸ் ஆளுங்க விட மாட்டாங்க.. அவங்க ஏதாவது செய்வாங்க… அதனால நீ இனிமே எதுவும் பண்ணாத... கொஞ்சம் அமைதியா இரு…”
“சரி” என்று கிளம்பத் தயாரானான்.
“இன்பா…. “
“என்ன சார்… “
“அடிக்கடி வீட்டுக்கு வாப்பா.. ஒரே புள்ள வேறயா.. வீடே ஒரு மாதிரி இருக்கு.. உன்னப் பார்த்தா கொஞ்சம் நிம்மதி.… “என்றார் தழுதழுக்கும் குரலில்.
அவனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.. அமைதியாக தலையசைத்தான்.
மற்றவர்களைப் பொருத்தவரை எப்படியோ தெரியாது.. ஆனால் அவனுக்கும் அமைச்சருமான உறவு என்பது, ஒரு அரசியல்வாதிக்கும் காவல்துறை அதிகரிக்கும் உள்ள சராசரியான உறவை விட மேலானது..
அமைச்சரின் வீட்டிலிருந்து வெளியே வந்தவன். கைப்பேசியை எடுத்து அனலிக்காவிற்கு அழைப்பு விடுத்தான். அவள் அழைப்பை ஏற்கவில்லை… ‘இது வேறயா ‘ என்று நினைக்கையிலே.. மதியிடம் இருந்து அழைப்பு வந்தது.. எடுத்தவுடன்..
“எதுக்கு இத்தனை தடவடா.. எங்க வந்தேனு தெரியாதா..… “என்றான் என்னவென்று கேட்காமலே..
“நீ சீக்கிரமா அனலிக்கா வீட்டுக்கு வாடா… “ என்றான் பதட்டம் கலந்த கோபத்துடன்.
“ஏன்.. என்னாச்சு… “
“அவ தாத்தாவ கொன்னுட்டாங்க… “
“அனலிக்கு எதுவும்…”என்றே அவனது கேள்வி இருந்தது.
“தெரில.. கிருஷ்ணன் தான் ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போயிருக்காரு.. நான் இன்னும் பார்க்கல.... எனக்கென்னமோ இது தினேஷோட வேலையாத் தான் இருக்கும்னு தோணுது… “
“வாயை மூடு மதி… தயவு செய்து நீ யார்கிட்டயும் எதுவும் சொல்லிடாத, முதல உன்ன யாரு அங்க போச்சொன்னது… “
“ஏன்டா.. அவ கால் பண்ணி அப்படி பேசறப்ப, எப்படி வராம இருக்க முடியும்.. உனக்கு கால் பண்ணலயா.. “
“நான் எடுக்கல…நம்ம ஹாஸ்பிட்டல்ல போயே பார்த்திருக்கலாம்… ச்சு.. அங்க அழகேசன் இருக்காரா… “
“ம்ம்ம்… “
“மதி புரிஞ்சிக்கோ… என்னால எவ்வளவு சீக்கிரம் வர முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வரேன்….நான் வர்ற வரைக்கும் பேசாம இரு “ என்று அழைப்பை துண்டித்தான்.
பின் கிருஷிற்கு அழைப்பு விடுத்து.. சிறிது நேரம் பேசி விட்டு.. பைக்கில் ஏறிக் கிளம்பினான்.
திட்டமிட்டபடியே மாலையில் மதியை விட்டுவிட்டுத் தனியாக அமைச்சரைப் பார்க்க இன்பன் வந்தான். அவரின் பணிச் சூழல் காரணமாக, அவன் அவர் முன் வந்து அமர இரவாகிருந்தது.
அமைச்சரின் கைகளில் அட்டாப்ஸி மற்றும் டிஎன்ஏ ரிப்போர்ட்களைக் கொடுத்திருந்துவிட்டு, இன்பன் தலை குனிந்து உட்கார்ந்திருந்தான்.
முழுவதும் படித்துப் பார்த்தவருக்கு, பெரிய அளவில் அதிர்ச்சி இல்லை. ஏனென்றால் கடந்த மூன்று நாட்களாக, ஒரு தந்தையாக அவர் மகனைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்திருந்தார்.
“நீ ஏன்ப்பா தல குனிஞ்சி இருக்க.. இந்த மாதிரி ஒரு பிள்ளையைப் பெத்ததுக்கு, நான் தான் தலை குனிஞ்சி உட்காரணும்… “என்றவரின் குரலில் சோகம் இருந்தது.
“ இல்ல சார்.. “என்று இழுத்தான்..
“ஆனால்… எனக்கு கஷ்டமா இருக்குப்பா.. “
‘ஏன் ‘ என்பது போல் அவரைப் பார்த்தான்.
“நீயேன் எங்கிட்ட சொல்லல.. இத்தன நாளா பழகியிருக்கோமே.. இதான் நீ என்னைப் புரிஞ்சிகிட்டதா” என்றார் ஏமாற்றம் அளிக்கும் குரலில்.
“நீங்க கஷ்டப்படுவீங்கனுதான் தான் சொல்லல… “
“எனக்கென்னமோ அப்படித் தோணல.. இதுல இவன் பையனுக்கும் சம்பந்தம் இருக்கே.. இவன் எப்படி சம்மதிப்பானு நினைச்சிருப்ப… “என்றார் வேதனையுடன்.
அந்த நொடி அவனுக்கு அனலிக்கா மேல் கோபம் வந்தது. இப்படி ஒரு நல்ல மனிதரைக் கஷ்டப்பட வைக்க காரணம் அவளும் தான் என்று நினைத்தான். சரியாக அந்த நேரத்தில் அனலிக்காவிடம் இருந்து அழைப்பு வந்தது. எடுத்துப் பார்த்தவன் “ப்ச் “ என்று அழைப்பைத் துண்டித்தான். பின்
“இல்ல சார்.. நீங்க கஷ்.. “ என்று அவன் முடிக்கும் முன்பே..
“இதுல என்ன கஷ்டம் இன்பா.. இந்த மாதிரி செய்ற எத்தனை பசங்கள நாம அடிச்சிருப்போம்.. அப்போ, அந்த பசங்க வீட்லயும் என்னை மாதிரி, தன் மகனைப் பத்தி ஒன்னுமே தெரியாத ஒரு தகப்பன் இருந்து அழுது இருப்பான்ல.. “ என்று யதார்த்தமாக கூறினார்.
சிறிது நேரம் அமைதி நிலவியது. பின்பு அவரே தொடர்ந்தார்..
“இப்ப நான் என்ன செய்யணும் அத சொல்லு… எதுக்குப் பழைய கதைய பேசிகிட்டு.. தப்பும் பண்ணவன் தண்டனை அனுபவிச்சிருக்கான்… “
“கேஸ வாபஸ் வாங்கனும்….. “என்று நேரடியாகவே விஷயத்திற்கு வந்தான்.
திரும்பவும் இன்பனின் கைப்பேசி அழைத்தது. இந்த முறை அழைப்பு மதியிடம் இருந்து. திரும்பவும் அழைப்பைத் தவிர்த்தான்.
“அவ்வளவு தான.. விடு வாங்குறேன்… நீ இப்படி இருக்காதப்பா.. நல்லா தைரியமா இரு.. இன்னும் நாம சேர்ந்து செய்ய வேண்டிய வேலை நிறைய இருக்குப்பா… “
அவன் ஆச்சரியமாக அவரைப் பார்த்தான்.
“ஆமாப்பா.. நிறுத்தனும்னு நினைச்சா தப்பு பண்ற அவங்க நிறுத்தட்டும்.. நல்லது செய்ற நாம ஏன் நிறுத்தனும்.. “என்றார் நியாயமாக…
சரி என்பது போல் தலை அசைத்தான். திரும்பவும் இன்பனின் கைப்பேசி அழைத்தது. இந்த முறையும் மதியே. திரும்பவும் அழைப்பைத் தவிர்த்தான்.
“யாருப்பா.. எடுத்துப் பேசு… “ என்றார்.
“மதி தான்… அப்புறமா பேசிக்கிறேன்.. நீங்க சொல்லுங்க… “
“ஆனா இந்த மாதிரி பண்ணறது தப்பு.. இது உனக்கும் நல்லதில்லை.. உன்ன சுத்தி இருக்கிறவங்களுக்கும் நல்லதில்ல… நீ யோசிச்சியா, ப்ரித்தீஸ் வந்து எப்படி சமாளிப்பாருனு.. அவர அன்னைக்கு இன்ஃபார்மல் மீட்டிங்னு கூட்டிட்டு போய் எவ்வளவு மோசமா திட்டுனாங்க தெரியுமா… அதுவும் என் முன்னாடியே.. உனக்கு.. “என்றார் கேள்வியாக..
“தெரியும்… அடுத்த நாள் டென்ஸனா வந்து பேசுனான்.. அவங்கிட்ட எவ்வளவோ கேட்டேன்.. சொல்லல…”
“ம்ம்ம்.. நமக்காகத்தான் அவரு எல்லாத்தையும் கண்டுக்காம இருக்காரு.. அதுக்காக அவர ரொம்ப கஷ்டப் படுத்தலாமா.. அவரு பாவம், படிச்ச படிப்பு, சட்டம், பதவி இதெல்லாம் வெச்சு திருத்தலாம்னு நினைக்கிறாரு.. ஆனால் அது இப்ப முடியாது.. “ என்றார் இயலாமையுடன்.
மறுபடியும் மதியிடம் இருந்து அழைப்பு…. மறுபடியும் ஏற்கவில்லை…
“வேற ஏதாவது பிரச்சனை இருக்காப்பா.. “
“தினேஷ்னு இன்னொருத்தன் இருக்கான்… பிரச்சனை பண்ணலாம்.. அப்ப ஏதாவது செய்ய வேண்டியது இருக்கும்.. “
“இனிமே நீ எதுவும் பண்ணாத.. வேற யாராவது நம்பிக்கையான ஆள வச்சு பண்ணு… “என்றார் கட்டளையாக.
“மதி இருக்கான்… “
“அவரு நாலு வருஷமா எதுவும் சரியா பண்ணலயே… “
“நான் சொன்னா செய்வான்… “ என்றான் நம்பிக்கையாக…
“எதுனாலும் வேற யாராவது வச்சு பாரு… நான் கேஸ வாபஸ் வாங்கினாலும், உன்னைய ஹியூமன் ரைட்ஸ் ஆளுங்க விட மாட்டாங்க.. அவங்க ஏதாவது செய்வாங்க… அதனால நீ இனிமே எதுவும் பண்ணாத... கொஞ்சம் அமைதியா இரு…”
“சரி” என்று கிளம்பத் தயாரானான்.
“இன்பா…. “
“என்ன சார்… “
“அடிக்கடி வீட்டுக்கு வாப்பா.. ஒரே புள்ள வேறயா.. வீடே ஒரு மாதிரி இருக்கு.. உன்னப் பார்த்தா கொஞ்சம் நிம்மதி.… “என்றார் தழுதழுக்கும் குரலில்.
அவனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.. அமைதியாக தலையசைத்தான்.
மற்றவர்களைப் பொருத்தவரை எப்படியோ தெரியாது.. ஆனால் அவனுக்கும் அமைச்சருமான உறவு என்பது, ஒரு அரசியல்வாதிக்கும் காவல்துறை அதிகரிக்கும் உள்ள சராசரியான உறவை விட மேலானது..
அமைச்சரின் வீட்டிலிருந்து வெளியே வந்தவன். கைப்பேசியை எடுத்து அனலிக்காவிற்கு அழைப்பு விடுத்தான். அவள் அழைப்பை ஏற்கவில்லை… ‘இது வேறயா ‘ என்று நினைக்கையிலே.. மதியிடம் இருந்து அழைப்பு வந்தது.. எடுத்தவுடன்..
“எதுக்கு இத்தனை தடவடா.. எங்க வந்தேனு தெரியாதா..… “என்றான் என்னவென்று கேட்காமலே..
“நீ சீக்கிரமா அனலிக்கா வீட்டுக்கு வாடா… “ என்றான் பதட்டம் கலந்த கோபத்துடன்.
“ஏன்.. என்னாச்சு… “
“அவ தாத்தாவ கொன்னுட்டாங்க… “
“அனலிக்கு எதுவும்…”என்றே அவனது கேள்வி இருந்தது.
“தெரில.. கிருஷ்ணன் தான் ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போயிருக்காரு.. நான் இன்னும் பார்க்கல.... எனக்கென்னமோ இது தினேஷோட வேலையாத் தான் இருக்கும்னு தோணுது… “
“வாயை மூடு மதி… தயவு செய்து நீ யார்கிட்டயும் எதுவும் சொல்லிடாத, முதல உன்ன யாரு அங்க போச்சொன்னது… “
“ஏன்டா.. அவ கால் பண்ணி அப்படி பேசறப்ப, எப்படி வராம இருக்க முடியும்.. உனக்கு கால் பண்ணலயா.. “
“நான் எடுக்கல…நம்ம ஹாஸ்பிட்டல்ல போயே பார்த்திருக்கலாம்… ச்சு.. அங்க அழகேசன் இருக்காரா… “
“ம்ம்ம்… “
“மதி புரிஞ்சிக்கோ… என்னால எவ்வளவு சீக்கிரம் வர முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வரேன்….நான் வர்ற வரைக்கும் பேசாம இரு “ என்று அழைப்பை துண்டித்தான்.
பின் கிருஷிற்கு அழைப்பு விடுத்து.. சிறிது நேரம் பேசி விட்டு.. பைக்கில் ஏறிக் கிளம்பினான்.