இன்பனின் தாய் தந்தையரின் அருகில் இருந்த மதி “இதுதான் அந்த டாக்டர் பொண்ணு“என்று கூறினான்.
உடனே இன்பனின் தாயார் எழுந்து சென்று, அவளை உள்ளே அழைத்து வந்தார்.
இன்பனுடைய அக்கா மற்றும் அவள் கணவர் என அனைவரும் அவளைச் சுற்றி வந்து நின்றனர்.
இதையெல்லாம் இன்பன் ‘என்ன நடக்கிறது இங்கே’ என்று ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
சிறிது நொடிகளுக்குப் பின், அவனும் அவள் அருகே வந்து நின்றான்.
“அப்பவே வந்து இருக்கலாம் இல்லை… ஏன் லேட் ஆச்சு.. “என்று கேட்டார் இன்பனின் தாய்.
“ஹாஸ்பிடல்ல வேலை இருந்துச்சு.. “
என்றாள்.
கிருஷ்ணன் மருத்துவமனையில், இவள் யாரையும் பார்க்கவில்லை என்று கூறினான், ஆனால் இவள் இப்படி சொல்கிறாளே என்று இன்பனும், மதியும் ஒருசேர அவளை ஆச்சரியமாகப் பார்த்தனர். ஆனால் அவள் அவர்கள் இருவரையும் நிமிர்ந்துகூட பார்க்கவில்லை.
“ஏதாவது சாப்பிடுறயா… “என்று கேட்டாள் இன்பனின் அக்கா.
அனலிக்காவோ ‘வேண்டாம்’ என்பது போல் தலையை மட்டும் அசைத்தாள்.
“இந்த காயம் எப்படிம்மா ஆச்சு.. “என்று கேட்டார் ஆரின்பனின் தந்தை.
அவள் வாய் திறந்து கூறுவதற்கு முன்பே “ கீழ விழுந்திட்டா “ என்றான் இன்பன்.
இப்போது அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவன் தலை குனிந்து கொண்டான். இப்படி அடுக்கடுக்காய் கேள்விகள் எந்த கேள்விக்கு என்ன பதில் கூற எனத் தெரியவில்லை அவளுக்கு.
திடுதிப்பென “நான் கிளம்புறேன்.. எனக்கு லேட் ஆகுது.. “ என்று எழுந்து விட்டாள்.
எல்லோரும் வித்தியாசமாகப் அவளைப் பார்த்தனர். ஆனால் இன்பன் தான் “ஹாஸ்பிட்டல வேலனு சொன்னால.. அதான் டயர்டா இருக்கும்… “என்று சமாளித்தான்.
“ஒரு நிமிஷம், என் கூட வா…உங்கிட்ட பேசனும்… ” என்று தனியே அவளை அழைத்துச் சென்றார் இன்பனின் தாயார்.
இன்பனும் அவர்கள் பின்னே சென்றான்.
“ நீ எதுக்குடா வர்ற… “ என்று திரும்பிக் கேட்டார்.
“ சும்மாதான்.. “
தனியே அழைத்துச் சென்றவர், அவள் கையைப் பிடித்துக் கொண்டு “சீக்கிரமா உங்க கல்யாணத்த வச்சிக்கலாமா.. மதி எல்லாத்தையும் எங்கிட்ட சொல்லிட்டான்… “என்றார்.
அவள் அதிர்ச்சியாக நிமிர்ந்து ஆரின்பனைப் பார்த்தாள்.
அவன் “நம்மள பத்தி… வேற எதுவும் கிடையாது… “என்றான் நிறுத்தி அழுத்தமாக.
“நீ அவன் வேலைக்கு இப்படி ஆனதெல்லாம் பெரிசா எடுக்காத… எங்களுக்கு இது பழகிருச்சு.. நீயும் பழகிக்கோ.. சரியா.. “என்றார்.
அவள் யோசித்தாள்.
“என்னம்மா… உனக்கு இதுல வருத்தம்மா… “என்றார் மறுபடியும்.
இல்லை என்று தலையசைத்துக், குனிந்து கொண்டாள்.
“எதுவுமே செய்யாம.. இப்படி ஏதாவது நடக்கும் இவனுக்கு.. “
அந்தப் பேச்சில் அவள் சடாரென நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். அந்த நேரத்தில் இன்பனுக்கு ஏதோ பொறி தட்டியது. இந்த வார்த்தைகளை கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி எங்கேயோ கேட்ட மாதிரி இருந்தது. அவன் யோசித்தான். அவன் யோசிப்பதை அவளும் பார்த்துக் கொண்டே இருந்தாள்.
அதன்பின் ஆரின்பனின் தாயார் என்னவெல்லாமோ பேசிக் கொண்டிருந்தார். இருவரும் அதைக் கேட்கவேயில்லை.
சிறிது நேரத்தில் அவனுக்குப் புரிந்துவிட்டது. இது அவன் சற்று முன்பு மதியின் வீட்டில் வைத்து சொன்ன வார்த்தைகள். அதனாலதான் அவளுக்கு அவ்வளவு கோபம். அவன் நிமிர்ந்து பார்த்தான். அவளும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் ‘புரிஞ்சிடுச்சு’ என்பது போல் கண்களால் சிரித்தான்.
பின் “தேங்க்ஸ் மா.. “என்றான் .
“இப்ப எதுக்குடா.. அதுவும் எனக்கு.. “
“எதுக்கோ வச்சுக்கோங்க.. “என்றவன்
“கிளம்பலாமா… “என்று அவளிடம் கேட்டான்.
“ம்ம்ம்.. “ என்று உடனே ஒத்துக் கொண்டு அவனை ஆச்சரியப்படுத்தினாள்.
ஆனால் கோவப்பட்டு போனவள், இப்பொழுது எதற்காக திரும்பி வந்தாள் என்று அவனுக்கு புரியவில்லை. எல்லோரிடமும் விடைபெற்றுக்கொண்டு இருவரும் கிளம்பினர்.
கேகே நகர் வீடு
காரில் வரும்போது அவள் எதுவும் அவனிடம் பேசவில்லை. ஆனால் அவனோ அவள் என்னென்ன கேள்விகள் கேட்பாள், அதற்கு எப்படி எப்படி பதில் சொல்ல வேண்டும் என்று தெளிவாக யோசித்து வைத்துக் கொண்டான். வீட்டினுள் வந்து அமைதியாக அவள் அமர்ந்தாள். அவனும் அவள் அருகில் வந்து அமர்ந்தான். அவன் ஏதோ சொல்ல ஆரம்பிக்கும் போது…
“நான் கொஞ்சம் பேசனும்…“ என்றாள். ‘இதுவும் நல்லதுதான்’ என்று நினைத்து வேறு எதுவும் அவன் செல்லவில்லை..
அவள் ஆரம்பித்தாள்…
“அன்னைக்கு என்ன சொன்ன…உன் இடத்தில யார் இருந்தாலும் இதுதான் ப்ளான்னு.... “
“அனலி… “ என்றான் இன்பன்.
“அந்தப் பேரு வேண்டாம் இன்பன்.. அதுக்கும் நான் காரணம் சொல்றேன்… “ இதற்கு அப்போது கத்தியவளின் குரலில், இப்பொழுது அவ்வளவு ஒரு அமைதி குடிகொண்டிருந்தது.
அவளே தொடர்ந்தாள்…
“மீனா இறந்ததுக்கு அடுத்த நாள், உன் கூட பேசணும்னு தோணுச்சு.. எல்லாத்தையும் உங்கிட்ட சொல்லி, என்ன பண்ணனும்னு கேட்கத்தான், முதல் நாள் உங்க ஆபீஸ் வந்தேன்…
ஆனா மயக்கம் போட்டு விழுந்தது நானே எதிர்பார்க்காதது… அது ப்ளானெல்லாம் இல்ல இன்பன்.. அந்த ரெண்டு நாள், நான் இருந்து மனநிலைல, சாப்பிடலாம் முடியல.. மீனாவுக்கு அப்படி ஆனதுக்கு அப்புறமா, நான் விழுந்தா பிடிக்கவோ தூக்கிவிடவோ யாருமில்ல.. ஆனா அன்னைக்கு நீ இருக்கிற அப்படிங்கற நம்பிக்கையில தான் விழுந்தேன்..
அதுக்கப்புறம் உங்க வீட்டுக்கு வந்தது.. உன் கூட இருந்தது.. காஃபி ஷாப்பில சொன்னது.. எல்லாமே உன்ன எனக்குப் பிடிக்கும்… ரொம்ப பிடிக்கும்.. அதான் அப்படி … ஏன்னு கேட்டா… முதல் நாள் நீ எங்கிட்ட என்ன சொன்னேனு தெரியுமா ‘ஆம்புலன்ஸ் பின்னாடியே போவீங்களா’னு.. நீ எப்படி சொன்னனு தெரியாது.. அதுல அன்பு, கோபம் ரெண்டும் இருந்துச்சு.. பரிதாபம் சுத்தமா இல்ல.. அது எனக்கு ரொம்பப் பிடிச்சது…
ஆனா … யாராவது ஒரு போலீஸ் ஆஃபீசர் தெரிஞ்சா கேஸ் எப்படி போகுதுங்கிற டீடெயில்ஸ் கிடைக்கும்னு தாத்தா சொன்னது உண்மைதான்.. ஆனா அதுக்காக நான் உன்ன யூஸ் பண்ணல.. இது எனக்குத் தெரியும்.. போதும்… வேற யாருக்கும் தெரியனும்னு அவசியமே இல்ல.. “
அவள் சிறிது நேரம் அமைதி காத்தாள். அத்தனையும் அவன் கூறிய வார்த்தைகள் தான். ஆனால் அதற்கு இத்தனை அர்த்தங்களா.. அவளை இவ்வளவு அது பாதித்திருக்குமா.. என்று அவன் இந்த நிமிடம் வரை அறிந்திராதது தான்.
“இத ரொம்ப நாளா சொல்லணும்னு தோணுச்சு.. இன்னைக்கு சொல்ல டைம் கிடைச்சுச்சு.. சொல்லிட்டேன்.. நீங்க போலாம்.. “என்றாள் கொஞ்சமும் யோசிக்காமல்.
உடனே இன்பனின் தாயார் எழுந்து சென்று, அவளை உள்ளே அழைத்து வந்தார்.
இன்பனுடைய அக்கா மற்றும் அவள் கணவர் என அனைவரும் அவளைச் சுற்றி வந்து நின்றனர்.
இதையெல்லாம் இன்பன் ‘என்ன நடக்கிறது இங்கே’ என்று ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
சிறிது நொடிகளுக்குப் பின், அவனும் அவள் அருகே வந்து நின்றான்.
“அப்பவே வந்து இருக்கலாம் இல்லை… ஏன் லேட் ஆச்சு.. “என்று கேட்டார் இன்பனின் தாய்.
“ஹாஸ்பிடல்ல வேலை இருந்துச்சு.. “
என்றாள்.
கிருஷ்ணன் மருத்துவமனையில், இவள் யாரையும் பார்க்கவில்லை என்று கூறினான், ஆனால் இவள் இப்படி சொல்கிறாளே என்று இன்பனும், மதியும் ஒருசேர அவளை ஆச்சரியமாகப் பார்த்தனர். ஆனால் அவள் அவர்கள் இருவரையும் நிமிர்ந்துகூட பார்க்கவில்லை.
“ஏதாவது சாப்பிடுறயா… “என்று கேட்டாள் இன்பனின் அக்கா.
அனலிக்காவோ ‘வேண்டாம்’ என்பது போல் தலையை மட்டும் அசைத்தாள்.
“இந்த காயம் எப்படிம்மா ஆச்சு.. “என்று கேட்டார் ஆரின்பனின் தந்தை.
அவள் வாய் திறந்து கூறுவதற்கு முன்பே “ கீழ விழுந்திட்டா “ என்றான் இன்பன்.
இப்போது அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவன் தலை குனிந்து கொண்டான். இப்படி அடுக்கடுக்காய் கேள்விகள் எந்த கேள்விக்கு என்ன பதில் கூற எனத் தெரியவில்லை அவளுக்கு.
திடுதிப்பென “நான் கிளம்புறேன்.. எனக்கு லேட் ஆகுது.. “ என்று எழுந்து விட்டாள்.
எல்லோரும் வித்தியாசமாகப் அவளைப் பார்த்தனர். ஆனால் இன்பன் தான் “ஹாஸ்பிட்டல வேலனு சொன்னால.. அதான் டயர்டா இருக்கும்… “என்று சமாளித்தான்.
“ஒரு நிமிஷம், என் கூட வா…உங்கிட்ட பேசனும்… ” என்று தனியே அவளை அழைத்துச் சென்றார் இன்பனின் தாயார்.
இன்பனும் அவர்கள் பின்னே சென்றான்.
“ நீ எதுக்குடா வர்ற… “ என்று திரும்பிக் கேட்டார்.
“ சும்மாதான்.. “
தனியே அழைத்துச் சென்றவர், அவள் கையைப் பிடித்துக் கொண்டு “சீக்கிரமா உங்க கல்யாணத்த வச்சிக்கலாமா.. மதி எல்லாத்தையும் எங்கிட்ட சொல்லிட்டான்… “என்றார்.
அவள் அதிர்ச்சியாக நிமிர்ந்து ஆரின்பனைப் பார்த்தாள்.
அவன் “நம்மள பத்தி… வேற எதுவும் கிடையாது… “என்றான் நிறுத்தி அழுத்தமாக.
“நீ அவன் வேலைக்கு இப்படி ஆனதெல்லாம் பெரிசா எடுக்காத… எங்களுக்கு இது பழகிருச்சு.. நீயும் பழகிக்கோ.. சரியா.. “என்றார்.
அவள் யோசித்தாள்.
“என்னம்மா… உனக்கு இதுல வருத்தம்மா… “என்றார் மறுபடியும்.
இல்லை என்று தலையசைத்துக், குனிந்து கொண்டாள்.
“எதுவுமே செய்யாம.. இப்படி ஏதாவது நடக்கும் இவனுக்கு.. “
அந்தப் பேச்சில் அவள் சடாரென நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். அந்த நேரத்தில் இன்பனுக்கு ஏதோ பொறி தட்டியது. இந்த வார்த்தைகளை கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி எங்கேயோ கேட்ட மாதிரி இருந்தது. அவன் யோசித்தான். அவன் யோசிப்பதை அவளும் பார்த்துக் கொண்டே இருந்தாள்.
அதன்பின் ஆரின்பனின் தாயார் என்னவெல்லாமோ பேசிக் கொண்டிருந்தார். இருவரும் அதைக் கேட்கவேயில்லை.
சிறிது நேரத்தில் அவனுக்குப் புரிந்துவிட்டது. இது அவன் சற்று முன்பு மதியின் வீட்டில் வைத்து சொன்ன வார்த்தைகள். அதனாலதான் அவளுக்கு அவ்வளவு கோபம். அவன் நிமிர்ந்து பார்த்தான். அவளும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் ‘புரிஞ்சிடுச்சு’ என்பது போல் கண்களால் சிரித்தான்.
பின் “தேங்க்ஸ் மா.. “என்றான் .
“இப்ப எதுக்குடா.. அதுவும் எனக்கு.. “
“எதுக்கோ வச்சுக்கோங்க.. “என்றவன்
“கிளம்பலாமா… “என்று அவளிடம் கேட்டான்.
“ம்ம்ம்.. “ என்று உடனே ஒத்துக் கொண்டு அவனை ஆச்சரியப்படுத்தினாள்.
ஆனால் கோவப்பட்டு போனவள், இப்பொழுது எதற்காக திரும்பி வந்தாள் என்று அவனுக்கு புரியவில்லை. எல்லோரிடமும் விடைபெற்றுக்கொண்டு இருவரும் கிளம்பினர்.
கேகே நகர் வீடு
காரில் வரும்போது அவள் எதுவும் அவனிடம் பேசவில்லை. ஆனால் அவனோ அவள் என்னென்ன கேள்விகள் கேட்பாள், அதற்கு எப்படி எப்படி பதில் சொல்ல வேண்டும் என்று தெளிவாக யோசித்து வைத்துக் கொண்டான். வீட்டினுள் வந்து அமைதியாக அவள் அமர்ந்தாள். அவனும் அவள் அருகில் வந்து அமர்ந்தான். அவன் ஏதோ சொல்ல ஆரம்பிக்கும் போது…
“நான் கொஞ்சம் பேசனும்…“ என்றாள். ‘இதுவும் நல்லதுதான்’ என்று நினைத்து வேறு எதுவும் அவன் செல்லவில்லை..
அவள் ஆரம்பித்தாள்…
“அன்னைக்கு என்ன சொன்ன…உன் இடத்தில யார் இருந்தாலும் இதுதான் ப்ளான்னு.... “
“அனலி… “ என்றான் இன்பன்.
“அந்தப் பேரு வேண்டாம் இன்பன்.. அதுக்கும் நான் காரணம் சொல்றேன்… “ இதற்கு அப்போது கத்தியவளின் குரலில், இப்பொழுது அவ்வளவு ஒரு அமைதி குடிகொண்டிருந்தது.
அவளே தொடர்ந்தாள்…
“மீனா இறந்ததுக்கு அடுத்த நாள், உன் கூட பேசணும்னு தோணுச்சு.. எல்லாத்தையும் உங்கிட்ட சொல்லி, என்ன பண்ணனும்னு கேட்கத்தான், முதல் நாள் உங்க ஆபீஸ் வந்தேன்…
ஆனா மயக்கம் போட்டு விழுந்தது நானே எதிர்பார்க்காதது… அது ப்ளானெல்லாம் இல்ல இன்பன்.. அந்த ரெண்டு நாள், நான் இருந்து மனநிலைல, சாப்பிடலாம் முடியல.. மீனாவுக்கு அப்படி ஆனதுக்கு அப்புறமா, நான் விழுந்தா பிடிக்கவோ தூக்கிவிடவோ யாருமில்ல.. ஆனா அன்னைக்கு நீ இருக்கிற அப்படிங்கற நம்பிக்கையில தான் விழுந்தேன்..
அதுக்கப்புறம் உங்க வீட்டுக்கு வந்தது.. உன் கூட இருந்தது.. காஃபி ஷாப்பில சொன்னது.. எல்லாமே உன்ன எனக்குப் பிடிக்கும்… ரொம்ப பிடிக்கும்.. அதான் அப்படி … ஏன்னு கேட்டா… முதல் நாள் நீ எங்கிட்ட என்ன சொன்னேனு தெரியுமா ‘ஆம்புலன்ஸ் பின்னாடியே போவீங்களா’னு.. நீ எப்படி சொன்னனு தெரியாது.. அதுல அன்பு, கோபம் ரெண்டும் இருந்துச்சு.. பரிதாபம் சுத்தமா இல்ல.. அது எனக்கு ரொம்பப் பிடிச்சது…
ஆனா … யாராவது ஒரு போலீஸ் ஆஃபீசர் தெரிஞ்சா கேஸ் எப்படி போகுதுங்கிற டீடெயில்ஸ் கிடைக்கும்னு தாத்தா சொன்னது உண்மைதான்.. ஆனா அதுக்காக நான் உன்ன யூஸ் பண்ணல.. இது எனக்குத் தெரியும்.. போதும்… வேற யாருக்கும் தெரியனும்னு அவசியமே இல்ல.. “
அவள் சிறிது நேரம் அமைதி காத்தாள். அத்தனையும் அவன் கூறிய வார்த்தைகள் தான். ஆனால் அதற்கு இத்தனை அர்த்தங்களா.. அவளை இவ்வளவு அது பாதித்திருக்குமா.. என்று அவன் இந்த நிமிடம் வரை அறிந்திராதது தான்.
“இத ரொம்ப நாளா சொல்லணும்னு தோணுச்சு.. இன்னைக்கு சொல்ல டைம் கிடைச்சுச்சு.. சொல்லிட்டேன்.. நீங்க போலாம்.. “என்றாள் கொஞ்சமும் யோசிக்காமல்.