வணக்கம் நண்பர்களே!
நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். குறுகிய ஒரு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் உங்களைச் சந்திக்க உங்கள் அழகி வருகிறேன்.
'உயிரைக் கேட்காதே ஓவியமே'
அழகியின் புதிய முயற்சி இது. எப்போதும் போல இப்போதும் ஒரு சாதாரணக் காதல் கதை.(யாரு கழுவி ஊத்தினாலும் நமக்கு வர்றதைத் தானே எழுத முடியும்!??. சுசீலா... எல் ஆர் ஈஸ்வரி மாதிரி பாடினா நல்லாவா இருக்கும்????)
வாரம் ஒரு பதிவு தான் அன்பர்களே. அதற்காக என்னை நீங்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும். முடிந்தவரை முயற்சிப்பேன். தவறும் பட்சத்தில் எனக்கான நேரத்தை நீங்கள் கண்டிப்பாகக் கொடுக்க வேண்டும். கொடுப்பீர்கள் என்று தெரியும். கொடுத்தும் இருக்கிறீர்கள். அதையும் நான் அறிவேன்.
இரண்டு நாட்களில் (இறைவன் அனுமதித்தால்) நிச்சயம் புதிய பதிவோடு உங்களைச் சந்திக்கிறேன்.
கருத்துகளைப் பகிருங்கள். நிறைய நண்பர்கள் வாட்ஸ்அப்பிலும், மெஸென்ஜரிலும் உங்கள் கருத்துகளைத் தெரிவிக்கிறீர்கள். உரிமையாகப் பேசுகிறீர்கள். கோபிக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி.
'எஸ் எம் தளத்தின்' அழகி எப்போதும் உங்கள் அழகிதான். அதில் எந்த மாற்றமும் இல்லை. 'புன்னகை மன்னன்' விதிமுறைகள் முடிந்த பிற்பாடு நிச்சயம் எஸ் எம் தளத்தில் உங்களுக்காக வரும்.
கதைக்கான லின்க் எத்தனை நாட்கள் தளத்தில் இருக்கும் என்று சிலர் கேட்கிறீர்கள். அழகியின் கதைக்கான லின்க் எப்போதும் எஸ் எம் தளத்தில் இருக்கும். அது அகற்றப்படமாட்டாது என்பதை உங்களுக்கு இந்த இடத்தில் கூறிக்கொள்கிறேன்.
உங்கள் கதைகளை வேறு தளத்தில் தேடினேன் என்று ஒரு வாசகி என்னைக் கேட்டிருந்தார். கின்டில் தவிர அழகியின் கதை எஸ் எம் தளத்தில் மட்டுமே கிடைக்கும் என்பதையும் உங்களோடு இந்த இடத்தில் பகிர்ந்து கொள்கிறேன்.
உங்கள் கருத்துகளை எப்போதும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.
என்றென்றும் அன்புடன்,
உங்கள் அழகி.?