@Suvitha
அன்பே ஸீனா( @அழகி)
மோதலில் தான் காதல் பிறக்கும் என்று யார் சொன்னது? நட்பும் கூட பிறக்கும் நான் சொல்கிறேன். நம் அறிமுகம் ஒரு சின்ன உரசலில் ஆரம்பமானதை அறிவாயா நீ கண்ணம்மா...நட்பு என்னும் வானில் ஆதிலட்சுமியோடு சேர்ந்து நாம் மூவரும் வீ .நீ.எ த்ரெட்டில் சிறகடித்து பறந்த அந்த நாட்களை மறக்க முடியுமா கண்ணம்மா...
அடுத்து கதையாசிரியராய் ஒரு பிறப்பு உனக்கு.
ஆரம்பித்த ‘ஆனந்த பைரவியில்’ இருந்து இன்று ‘மன மோஹனா’ வரை கட்டிப்போட்டிருக்கிறாயே என்னை உன் எழுத்தால். உன் ஒற்றை வரியில் என்னை உயிர்சிலிர்க்க வைக்கிறாயே கண்ணம்மா நீ.
ஏன், எதற்கு என்றில்லாமல் திரும்பத் திரும்ப வாசிக்கிறேன் உன் எழுத்துக்களை...
என்ன தவம் செய்தனை கண்ணம்மா உன் நட்பு கிடைக்க நான்...
சங்ககாலத்தில் பாண்டிய நாட்டின் பிசிராந்தையாரும், சோழநாட்டின் கோப்பெருஞ்சோழனும் ஒருவரையொருவர் பார்க்காமலயே நட்பு கொண்டிருந்தார்களாம்.
இந்த வாட்ஸப் காலத்தில் ஒருவருக்கொருவர் நம் நிழல் முகம் கண்டு கொண்டாலும் அவர்களது நட்புக்கு குறைந்ததில்லை நம் நட்பும்.
என்றாவது ஒருநாள் என் கண்ணம்மாவின் அழகு வதனத்தை நேரில் காண்பேன் என்ற நம்பிக்கையோடும், காத்திருத்தல் ‘காதலில் மட்டுமல்ல நட்பிலும் சுகமே’ என்ற மந்திரத்தோடும், நாம் இருவரும் நேரில் காணப் போகும் அந்த நாட்களுக்காக தவமிருக்கிறேன் கண்ணம்மா....??
"உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல
நீ இல்லாமல் நானும் நானல்ல
இங்கு நீயொரு பாதி நானொரு பாதி
இதில் யார் பிரிந்தாலும் வேதனை பாதி
காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்
நட்பின் முன்னே நீயும் நானும் வேறல்ல..."
நட்புடன்,
சுவிதா
அன்பே ஸீனா( @அழகி)
மோதலில் தான் காதல் பிறக்கும் என்று யார் சொன்னது? நட்பும் கூட பிறக்கும் நான் சொல்கிறேன். நம் அறிமுகம் ஒரு சின்ன உரசலில் ஆரம்பமானதை அறிவாயா நீ கண்ணம்மா...நட்பு என்னும் வானில் ஆதிலட்சுமியோடு சேர்ந்து நாம் மூவரும் வீ .நீ.எ த்ரெட்டில் சிறகடித்து பறந்த அந்த நாட்களை மறக்க முடியுமா கண்ணம்மா...
அடுத்து கதையாசிரியராய் ஒரு பிறப்பு உனக்கு.
ஆரம்பித்த ‘ஆனந்த பைரவியில்’ இருந்து இன்று ‘மன மோஹனா’ வரை கட்டிப்போட்டிருக்கிறாயே என்னை உன் எழுத்தால். உன் ஒற்றை வரியில் என்னை உயிர்சிலிர்க்க வைக்கிறாயே கண்ணம்மா நீ.
ஏன், எதற்கு என்றில்லாமல் திரும்பத் திரும்ப வாசிக்கிறேன் உன் எழுத்துக்களை...
என்ன தவம் செய்தனை கண்ணம்மா உன் நட்பு கிடைக்க நான்...
சங்ககாலத்தில் பாண்டிய நாட்டின் பிசிராந்தையாரும், சோழநாட்டின் கோப்பெருஞ்சோழனும் ஒருவரையொருவர் பார்க்காமலயே நட்பு கொண்டிருந்தார்களாம்.
இந்த வாட்ஸப் காலத்தில் ஒருவருக்கொருவர் நம் நிழல் முகம் கண்டு கொண்டாலும் அவர்களது நட்புக்கு குறைந்ததில்லை நம் நட்பும்.
என்றாவது ஒருநாள் என் கண்ணம்மாவின் அழகு வதனத்தை நேரில் காண்பேன் என்ற நம்பிக்கையோடும், காத்திருத்தல் ‘காதலில் மட்டுமல்ல நட்பிலும் சுகமே’ என்ற மந்திரத்தோடும், நாம் இருவரும் நேரில் காணப் போகும் அந்த நாட்களுக்காக தவமிருக்கிறேன் கண்ணம்மா....??
"உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல
நீ இல்லாமல் நானும் நானல்ல
இங்கு நீயொரு பாதி நானொரு பாதி
இதில் யார் பிரிந்தாலும் வேதனை பாதி
காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்
நட்பின் முன்னே நீயும் நானும் வேறல்ல..."
நட்புடன்,
சுவிதா