• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

லவ் லெட்டர்- Compilation

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Status
Not open for further replies.

smteam

Admin
Staff member
SM Exclusive
Joined
Jan 16, 2018
Messages
1,209
Reaction score
26,567
Location
India
@Suvitha

அன்பே ஸீனா( @அழகி)

மோதலில் தான் காதல் பிறக்கும் என்று யார் சொன்னது? நட்பும் கூட பிறக்கும் நான் சொல்கிறேன். நம் அறிமுகம் ஒரு சின்ன உரசலில் ஆரம்பமானதை அறிவாயா நீ கண்ணம்மா...நட்பு என்னும் வானில் ஆதிலட்சுமியோடு சேர்ந்து நாம் மூவரும் வீ .நீ.எ த்ரெட்டில் சிறகடித்து பறந்த அந்த நாட்களை மறக்க முடியுமா கண்ணம்மா...

அடுத்து கதையாசிரியராய் ஒரு பிறப்பு உனக்கு.
ஆரம்பித்த ‘ஆனந்த பைரவியில்’ இருந்து இன்று ‘மன மோஹனா’ வரை கட்டிப்போட்டிருக்கிறாயே என்னை உன் எழுத்தால். உன் ஒற்றை வரியில் என்னை உயிர்சிலிர்க்க வைக்கிறாயே கண்ணம்மா நீ.

ஏன், எதற்கு என்றில்லாமல் திரும்பத் திரும்ப வாசிக்கிறேன் உன் எழுத்துக்களை...
என்ன தவம் செய்தனை கண்ணம்மா உன் நட்பு கிடைக்க நான்...

சங்ககாலத்தில் பாண்டிய நாட்டின் பிசிராந்தையாரும், சோழநாட்டின் கோப்பெருஞ்சோழனும் ஒருவரையொருவர் பார்க்காமலயே நட்பு கொண்டிருந்தார்களாம்.

இந்த வாட்ஸப் காலத்தில் ஒருவருக்கொருவர் நம் நிழல் முகம் கண்டு கொண்டாலும் அவர்களது நட்புக்கு குறைந்ததில்லை நம் நட்பும்.

என்றாவது ஒருநாள் என் கண்ணம்மாவின் அழகு வதனத்தை நேரில் காண்பேன் என்ற நம்பிக்கையோடும், காத்திருத்தல் ‘காதலில் மட்டுமல்ல நட்பிலும் சுகமே’ என்ற மந்திரத்தோடும், நாம் இருவரும் நேரில் காணப் போகும் அந்த நாட்களுக்காக தவமிருக்கிறேன் கண்ணம்மா....??

"உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல
நீ இல்லாமல் நானும் நானல்ல


இங்கு நீயொரு பாதி நானொரு பாதி
இதில் யார் பிரிந்தாலும் வேதனை பாதி
காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்
நட்பின் முன்னே நீயும் நானும் வேறல்ல..."


நட்புடன்,
சுவிதா
 




smteam

Admin
Staff member
SM Exclusive
Joined
Jan 16, 2018
Messages
1,209
Reaction score
26,567
Location
India
@Eswari kasirajan

@Selva sankari dear story "என் சுவாசக் காற்றே" கதிர் சிவரஞ்சனிக்கு
எழுதும் காதல் கடிதம்.

முதல் முயற்சி
----------------

I Love u mysweet heart:love::love:

அதிரடியா எடுத்தவுடன் என் காதலை பளிச்சுனுன் சொல்லிவிட்டேன். எனக்குச் சுத்தி வளைச்சுச் சொல்லி நேரத்தை விரையமாக்க விரும்பவில்லை.

உன்னைப் பார்ப்பதாயிருந்தாலும் ரசிப்பதாகயிருந்தாலும் உன் விழிப் பார்த்துப் பேசுவதாகயிருந்தாலும் உன் கை என் கைக்குள் இருக்க வேண்டுமடி
நான் நானாக இருக்க
நீ என் அருகில்(இதயத்தில்)
இருக்க வேண்டுமடித் தங்கமே.
தூரத்திலிருந்து உன்னைப்
பார்த்து ரசித்து
நீ என்னை உணர்ந்து
காதல் மொழிப் பேசுவரை
எனக்குக் காத்திருக்க பொருமையில்லையடி செல்லமே
திருமணத்தை முடித்தப் பிறகு
மேற்ச் சொன்னவற்றையெல்லாம்
செய்வோமடிச் செல்லமே.
சம்மதமென்றால் உன் பதிலை ----------- இந்த கைபேசி எண்ணிற்கு அழைத்துச் சொல்லடித் தங்கமே
("டி" போடுவது என் அன்பின் வெளிப்பாடு)
இப்படிக்கு
அனுமன் பக்தன் கதிர்;):love::love::love:
 




smteam

Admin
Staff member
SM Exclusive
Joined
Jan 16, 2018
Messages
1,209
Reaction score
26,567
Location
India
@preethiskarthik

எழுதுகிறேன் ஒரு கடிதம்... இது எத்தனையாவது கடிதம்??? எனக்கே தெரியாது...

உன் நினைவு வரும்போது எழுதுவேன் ஒரு கடிதம் அதை அனுப்புவேன் உனக்கு ஒரு குறுஞ்செய்தியாய்...

உன்னிடம் இருந்து ஒரு பதிலும் வராது. எனக்கு தெரியும்தான்... இருந்தாலும் என் மன நிம்மதிக்காக...

நேற்று அனுப்பினேன் ஒன்று... நீ படித்திருக்க மாட்டாய்..... அதுவும் தெரியும்... இருந்தாலும் மறுபடியும் அனுப்புகிறேன்....

'போன வருடம் என் பிறந்தநாளை கழித்தேன் உன்னுடன்.....
இன்று அதே நாள், கழிக்கிறேன் உன் நினைவுடன்....'

இன்று இப்பொழுது... மறுபடியும் உன் நினைவு… இதோ ஒரு நான்கு வரி கடிதம்...

'நான் இங்கே பிடிக்கிறேன் கரண்டியை வீட்டின் சமையலுக்கு...
நீ அங்கே பிடிப்பாய் துப்பாக்கியை நாட்டின் நலனுக்கு....
காத்திருக்கிறேன் உன் வரவுக்கு..
வருவாய் என்ற நம்பிக்கையுடன்...!!! மனது முழுக்க உன் நினைவுடன்(காதலுடன்)..!!!'
 




smteam

Admin
Staff member
SM Exclusive
Joined
Jan 16, 2018
Messages
1,209
Reaction score
26,567
Location
India
மக்களே இன்னொரு ஜீவன் anonymous லவ் லெட்டர் எழுதி இருக்காப்ள. படித்துவிட்டு அந்த ஜீவனை கண்டுபிடித்து செய்முறைகளை செய்யவும். :LOL::LOL::LOL:

*****************************************************************************************************************

என் மனதை கொள்ளை கொண்டவனுக்கு?? (தீபன் - பூவும் நானும் வேறு - க்ருஷ்ணப்ரியா நாராயண்)

நீ நிஜமல்ல நிழல் என்று அறிவு சொல்கிறது ஆனால் உன்னில் மயங்கி கிடக்கும் என் மனத்தின் தேடல் இந்த மடல் ✍

எந்த கணத்தில் உன்னில் என்னை இழந்தேன் என்பதைத் தேடித்தேடி களைத்து விட்டேன்..?? இதோ என் தேடல்களைப் பட்டியலிடுகிறேன்... ??

ஆறடி உயரம் அழகிய புருவம் ஆப்பிள் போல இருப்பானே என்று உன்னை எனக்கு அறிமுகப்படுத்தவில்லை..

பணக்காரர்களின் அந்த கேளிக்கை விடுதியில் உன் அறிமுகம் அதில் தெரிந்த உன் சுயதிமிரா?

முயற்சியும் பயிற்சியுமே எனது தன்னம்பிக்கை என்ற உன் உழைப்பா?

சில வல்லூறுகளின் செயலால் மாறிய உனது சுயசிந்தனையா?

அந்த சுயசிந்தனையிலும் மாறாத உன் சமூக சிந்தனையா?

நண்பர்களின் நம்பிக்கையை பெற்ற உன் நட்பின் உறுதியா?

வஞ்சத்தால் பாதித்த தங்கைக்கு அரணாய் நின்றாயே அப்போதா?

தீபப்பிரகாஷனான நீ இருளில் அரங்கேற்றும் செயலுக்கு வெளிச்சம் போடாத உனது தன்னடக்கமா?

இரும்பு பெண்மணி திவ்யபாரதியையே அயரவைக்கும் உனது செயலா? அல்லது அவருடனான உனது உரையாடலா?

வஞ்சகனின் தங்கை என்றாலும் நியாயத்தை பார்த்த உனது குணமா?

எந்த சூழ்நிலையிலும் அசராத உனது குறிக்கோளா?

எதில் வீழ்ந்தேன் என்று அறிய முடியவில்லை...

இந்த கற்பனை உலகம் சொந்தமல்ல என்று தெரிந்தும் என் பேதை மனத்திற்கு உன் மேல் தான் காதல் வருகிறது.. இதில் உன் மேல் குற்றமில்லை உன்னை படைத்த ஆத்தர் @KPN அவரது எழுத்து வடிவம் என்னை உன்னில் மயங்க செய்கிறது.. மீளவும் விருப்பம் இல்லை..
கனவிலாவது என் கரம் சேர்வாயா தீபனே???

இப்படிக்கு
ஏந்திழையின் மனம்
 




smteam

Admin
Staff member
SM Exclusive
Joined
Jan 16, 2018
Messages
1,209
Reaction score
26,567
Location
India
@Guhapriya
நானும் வந்திட்டேன் என் காதலைச் சொல்ல ????
என் பிரிய அகிமாவுக்கு ,

எங்கே , எப்படி என்று தெரியாது என்று சொல்லமாட்டேன். நான் காதலில் விழுந்த நொடி என்னையன்றி வேறு யார் அறிவார். கல்யாணத்தின் பின் வரும் காதலை அழகாய் சொன்ன 50:50 யிலும், காதலிக்கும் மனைவிக்கும் உள்ள வித்தியாசத்தை சொன்ன கண்ணாடி மாளிகையிலும் சரி அந்த நொடி வீழ்ந்தேன் உங்கள் கைகளில். ஒரு பெண் எப்படி இருக்க வேண்டும் என்று நந்தினி மற்றும் பவித்ரா வால் என்னை ஆட்கொண்டீர்கள். நிமிர்ந்து வாழ்வது தவறல்ல திமிராய் வாழ்வது
தவறு என்று சொல்லி என்னை நிமிர வைத்தீர்கள். உங்கள் காதலில் இன்னும் இன்னும் நீந்தி திளைக்க ஆசை. அடியேனின் ஆசையை தீர்க்க வாரும் அகிமா.

( சசிமா உங்களுக்கு பெரிய நன்றி ????. )
 




Last edited:

smteam

Admin
Staff member
SM Exclusive
Joined
Jan 16, 2018
Messages
1,209
Reaction score
26,567
Location
India
@Abhirami

என் தோழனாகி கணவாகி இதயம் கவர்ந்த கள்வனே,

கவலையே இல்லாமல் பட்டாம்பூச்சிகளாய், ஆண் பெண் என்ற பேதமின்றி, கல்லூரி என்ற சோலையில் நாம் சுற்றி திரிந்தோம்.
ஒருவரை ஒருவர் கலாய்த்து கொண்டு, சோகம் என்பதே தெரியாமல், சந்தோஷ சாரலில் நனைந்து இருந்தோம் காதல் என்ற உணர்வு இல்லாமல், நட்பு என்ற பாதுகாப்பு கவசம் சூடி இருந்தேன். வசந்த காலம் தான் அது! நினைக்கும் பொழுதே இதழோரம் சிரிப்பும், கண்களோரம் நீர் துளியும் தோன்றுகிறது

ரொம்ப உயரமாய் பறந்து விட்டேன் போல! பட்டம் வாங்கிய கையோடு இந்த பட்டாம்பூச்சியின் சிறகுகளும் அறுபட்டு போயின!

காதல் இல்லாமல் இயற்கையின் விதியால் திருமணம் என்ற பந்தத்தில் இணைந்தேன். என் பெண்மையை மதியாமல், நான் ஒரு ஜீவன் என்றும் நினையாமல், குரங்கு கையில் பூ மாலையாக அவன் கையில் நான்!
உடலும் மனமும் ரணப்பட்டு போக, எந்தவொரு உணர்வும் இல்லாமல் கூடிய கூடலின் வினையாய் என் மணி வயிற்றிலும் ஓர் உயிர் ஜனிக்க, துன்பத்தில் இன்பமாக நினைத்து மகிழ்ந்தேன். சந்தோஷம் உன் உருவில் வர வேண்டும் என்று கடவுள் நினைத்தாரோ? கருவும் உரு தெரியாமல் உருவாக்கியனே அழித்து விட, வாழும் வாழ்க்கை நரகம் ஆகியது!

விபத்தாக காலன் வர, என்னை கொல்லும் காலனோ நிஜ காலனிடம் செல்ல, பூவும் பொட்டும் சிரிப்பும் குழந்தை தனமும் கனவாக சென்றது.
நிவேதா என்னும் பெயரில் தேவதை வாழ்வில் நுழைய, கவலை எல்லாம் கடின உழைப்பில் செலுத்தினேன்.

வாழ்க்கை அதன் போக்கில் செல்ல, மன்னவனே உன் வருகையில் மீண்டும் நான் கல்லூரி நினைவில் திளைத்தேன். நிவேதாவின் தாயின் சூழ்ச்சியால், உன் திருமணத்தில் நம் திருமணம் நிகழ, காதலே இல்லாதவள் உன் காதலையும் அழித்து விட்டேன்!

இறைவன் அருளால் இமை திறந்து என் வாழ்வை வண்ணமயமாக்க வந்த நீ, காதலோடு நெருங்குகையில் எனக்குள் வேலி அமைத்து விலகினேன் இன்று நீயே என்னிடம் கோபத்திலும் மென்மையை கையாளுகிறாய். எந்நிலையிலும் என்னை வெறுக்காமல் அன்போடு அரவணைத்து, என்னை எனக்கே புரிய வைத்து வாழ்க்கையின் அர்த்தம் சொல்கிறாய்! என்னை தேவதையாய் பாவித்து, எனக்குள் உன் உயிர் கொடியை படர விடுகிறாய்! பெண்ணின் மென்மையை உணர வைத்து, உணர்வுகளை கிளர செய்கிறாய். கேள்வி குறியாக இருந்த வாழ்வு, உன்னால் ஆச்சரிய குறியாக மாறியதே!

மனதை வென்ற கள்வனே! தினந்தினம் உன்னில் தொலைந்து, காதலுக்கு புது அர்த்தம் செய்யலாம், காதலே!

சன்சாயியாக இருந்த என்னை காதல் பித்தனாக மாற்றிய பெருமை உனக்கு தான்டா!

வார்த்தைகளும் தமிழும் நினைப்பதையும் கூற பஞ்சமாகி போனதே! இது தான் காதலா?

இப்படிக்கு,
உன் தமிழ்!

Note:
எல்லாரும் வாழ்வை தொடங்க காதல் கடிதம் எழுத, தமிழாகிய நான், கடவுள் அருளால், எதிர் பாராமல் நிகழ்ந்த மறுமணத்தில், என் இதயம் வென்ற என் காதல் கணவனுக்கு எழுதுகிறேன்! என் கதையை எல்லாரும் சொல்ல கேட்ட கணவனே, நானே கூறுகிறேன், முதலும் கடைசியுமாக கேட்டு விடு! இனியும் மனதில் நெருஞ்சி முள்ளாக என் கசப்பு வாழ்க்கை இல்லாமல் இருக்கவே இந்த கடிதம்! இனி உன்னோடு நான் வாழும் ஒவ்வொரு நாளும் வசந்த காலமே!

@smteam @Yuvakarthika

Kadhal sanyasi kadhaiyin nauagiyin kadhal kadidham!
 




smteam

Admin
Staff member
SM Exclusive
Joined
Jan 16, 2018
Messages
1,209
Reaction score
26,567
Location
India
@M.P.ArunJosephImran

[மு. கு : எனக்கு லவ் லெட்டர்லாம் வராது கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக் கொள்ளவும்.... ]


அன்பு மடல்......

அன்பே காதம்பரி.....
நீயே என் கவியின் முதல்வரி.....
என் இதயத்தில் பூத்த காதல்
ரோஜாவினை இப்பேனா மைவழியே வரைந்து காட்டும் உன் அன்பனின் அன்பு மடல் இது....



குயில் ஓசை
குரலோசைப் போல
உன் வார்த்தைகளுக்கும் ஓசை இருக்கும் என நினைக்கிறேன் நான் வாசிக்கும் தருணமெல்லாம் அவ்வோசைகளின் இனிமையில் மதிமயங்கி விடுகிறேன்

இரவு தூங்கும் போது தாலாட்டாய்...
காலை விடியும் போது அலார ஒலியாய்


என் உள்ளத்தில் உதிப்பது எல்லாம் உனது கவிதைகளே......
உன் நாவல் வரிகள் தித்திப்பாயினும் எனக்கு மாத்திரம் திகட்டுவதே இல்லை....


என்னடா இவன் ? எனக்கு கடிதம் எழுத சொன்னால் என் வார்த்தைகளை வர்ணித்துக் கொண்டிருக்கிறான் என்று
நினைக்கிறாய்! சரிதானே?
யோசித்து பார் கண்ணே உன்
வார்த்தைகளுக்கு இவ்வளவு செவிசாய்த்த என் காதல் உன் மேல் எவ்வளவு அன்பு கொண்டிருக்கும் என்று......

என்னவளே!

? நிமிடம் தோறும் பறக்கும் உன் இமைப் பட்டாம் பூச்சிகளைத்தான்
நான் தினம் தினம் ரசிக்கிறேன் கண் இமைக்காமல் !
? திரையில் சின்னத்திரை போலதான் உன் விழி சித்திரத்தில்
மின்மினியாய் மின்னும் உன் கரு
விழிகள்!
? புதைகுழி தான் உன் புருவங்கள் அதில் புதைந்து போனவர்களில் நானும் ஒருவன்!
? பிறை நிலா உன் நெற்றியில் நீ சுட்ட வடைதான் அந்த வட்ட வடிவ
பொட்டும் கூட...
? வாழைப் பூவாம் உன் நுனி மூக்கு அதில் எனக்கும் கொஞ்சம்
இடம் ஒதுக்கு
? ரோஜாவாய் மிளிருதடி உன் இதழ்கள் அதன் இடையே ஜொலிக்கும் உன் பற்கள்....
? யாதென்று உரைப்பது
யாழிசை உந்தன் குரலை?
? என்னைக் கேட்டால் உலகிலேயே மிகவும் ஆபத்தான பள்ளம் என்னவென்றால் உன் தொப்புள் குழியைதான் சொல்வேன் .......
? உன் இடையில் கடன் வாங்கியதுதான் தாஜ்மகாலின்
பளிங்கும் என நான் நினைக்கிறேன்.....
? நிற்காமல் உன் பாதம் போடும் தாளத்திற்கு ஏற்ப ஸ்ருதி
சேர்க்கிறது உன் கால் கொலுசு....
? உன்னைக் கண்ட நாட்களை மறப்பதும் இல்லை, உன்னை காணாத நாட்களை என் நாள்காட்டி
நினைப்பதும் இல்லை

இப்படி உன்னையே நினைத்து வாடுகிறேன் என்று மட்டும் நினைக்காதே! உன்னை நினைக்கிறேன் தான் கூடவே என்னையும் அதாவது, உன் அன்பனையும் பார்த்துக் கொள்கிறேன் பத்திரமாக சரியா?


இவனுக்கு நேரில் கண்டு பேசவே தைரியம் இல்லை என நீ
நினைக்கலாம், உண்மை தான்
ஆனால் அதற்கும் நீதான் காரணம்
உன்னை நேரில் கண்டு பேச வரும்போதோ சிரித்து விடுகிறாய்
அவ்வளவு தான் நான் பேச நினைத்த எல்லாம் மறந்து விடுகிறேன் பிறகு எப்படி ?நேரில் கண்டு பேச ..

என் ஏவாலே....
அடை மழையில் நனைந்த குழந்தையாய் நடுங்கிக் கொண்டு
இருக்கிறது எந்தன் மனம் உன் காதல் வெப்பம் அனைக்க வரும் என்ற நம்பிக்கையில் என் மனதின்
நம்பிக்கை வீண்போகாது என்று
உன் பதில் மடலுக்கு காத்துக் கிடக்கும்


உன் அன்பன்
நீலவிழி.....

[பி. கு நான் ஏதும் பிழை செய்திருந்தால் மன்னித்து விடுங்கள் உறவுகளே ????]
 




smteam

Admin
Staff member
SM Exclusive
Joined
Jan 16, 2018
Messages
1,209
Reaction score
26,567
Location
India
@revathi kayal

அடுத்த காதல் கடிதம்...???

காந்த குரலழகி சஷி அக்காக்கு...???

என்ன சொல்ல...?எது சொல்ல..?உங்கள் குரலுடைய மிகப்பெரிய fan நான்..
உங்களை நினைச்சாலே உங்களுடைய அந்த குரல் காதுக்குள்ள ஒலிக்கும்...உங்க ஒவ்வொரு message உம் உங்க குரலா தான் எனக்குள்ள கேட்கும்...
கண்ணு அப்படின்ற அந்த வார்த்தை ???
எல்லாருக்குமே இப்படியான ஒரு குரல் வாய்க்க பெறுவதில்லை.முதல் பேச்சிலே ஒரு இணைப்பை மறுமுனையில் இருப்பவரிடம் உணர்வுபூர்வமாக எதையோ,மனதுக்குள் பேசும் குரல்..???
உங்க கூட பேசுறதுக்கு முன்னாடியே உங்களை fb ல stalk பண்ணுவேன் ???எவ்வளவு பெரிய பிரச்சனை வந்தாலும் நீங்க left hand ல டீல் பண்றது எனக்கு ரொம்ப பிடிக்கும்.
அந்த காலகட்டத்துல எல்லாம் சத்தியமா நினைச்சு கூட பார்த்தது இல்லை...உங்களுக்கு என்னை தெரிய வரும்...என் பேர் சொல்லி நீங்க பேசுவிங்கன்னு..??
முதல் முதல் உங்க voice ல name கேட்டப்ப எப்படி இருந்ததுனா, நமக்கு ரொம்ப பிடிச்ச மிஸ்..புது மிஸ் நம்ம பெயரை முதல் தடவை நாமனு அடையாளம் தெரிஞ்சு கூப்பிடுறப்ப ஒரு மாதிரி ப்ரௌட் பீல் இருக்கும்ல அப்படி இருந்தது...
உங்க voice something special to me????குரல் மூலமா இப்படி ஒரு பிணைப்பை நான் வேற யார்கிட்டயும் உணர்ந்ததே கிடையாது...?????
 




smteam

Admin
Staff member
SM Exclusive
Joined
Jan 16, 2018
Messages
1,209
Reaction score
26,567
Location
India
@preethiskarthik

இன்னொரு பதிவு ??

என் மனையாளே!!
உனக்காக ஒரு கடிதம்.....

என் முயற்சிகள் வெற்றி பெற,,, நீ தோற்ற இடங்கள் பல....
நான் தொழிலில் சாதிக்க,,, நீ சகித்த இன்னலகள் பல...
நம் வாழ்க்கை முன்னேற,,, நீ எடுத்த முயற்சிகள் பல....
நம் நிலை உயர,,, நீ எடுத்த சிரத்தைகள் பல....

இது அனைத்தும் சாதியப்பட்டது... என் மேல் நீ கொண்ட காதலால்... என் மேல் நீ கொண்ட நம்பிக்கையால்... என் மேல் நீ கொண்ட பாசத்தால்...

நான் பெருமையாக மார்தட்டி சொல்வேன் இந்த வெற்றியின் பின்னால் முன்னால் எந்நாளும் இருப்பது ....

என் உயிரே!!! என்னுள் நிறைந்தவளே!!!
என் மனையாளே!!!
 




smteam

Admin
Staff member
SM Exclusive
Joined
Jan 16, 2018
Messages
1,209
Reaction score
26,567
Location
India
@Soundarya Krish

என் பேபி இப்போதான் தூங்கினாள் அதனால் லேட் ஆகிடுச்சு... லெட்டர் போட.. என் லவ்வர் பாய் தப்பா எடுத்துக்க மாட்டான்... அதே மாதிரி நீங்களும் மன்னிச்சு விட்ருங்க...

ஓகே மேட்டருக்கு வருவோம்... ம்ம்ம்...
என்னதான் சக்திவேலும் கூபியும் ஒன்று தான் என்றாலும் என் மனம் கவர்ந்த கள்வன் கூபி தான் சோ அவருக்காக தான் என் காதல் மடல்...
1569141561657.png
கூபி மாமோய்?
உங்களுக்காக ஒரு காதல் கவிதை... அதாவது கடுதாசி விடு தூது!!

என் ஆசை காதல் கிரகமே கூபி...
என் இதயம் துடிக்குது உன் பெயர் கூவி...
உன் காதல் தான் என் மனதின் சாவி...
அதனால் வேகமாக வந்துவிடு தாவி...
நீ வாராட்டி போயிடும் என் ஆவி...
உன் மூச்சால் என்னுயிரை விடு நீவி...
உன் நினைவுகளை நெல்மணியாய் என்னுள் பாவி...
உயிர் வளர்த்தேன் இந்த காதல் ஜீவி...

Goofy My Love...
Miss u ????

விரைந்து வா கூஃபி
நாம சேர்ந்து குடிப்போம் காஃபி

சயனாக்கு சமைக்க தெரிஞ்சது கஞ்சி
நான் பிரியாணியே தரேன் செஞ்சி
வாசனைக்கு போடுவாங்க இஞ்சி
உன் வரவைத் தேடும் வஞ்சி
என் மனது கேட்குது கெஞ்சி
கட்டக் கடைசியா ஒரே ஒரு பஞ்சி(punch)

சயனா வேணும்னா ஓட்டுவா என்ஃபீல்டு
உன் மனசு தான் நான் உழப்போகும் என்(my)ஃபீல்டு

என் காதலுக்கு குடுக்காட்டியும் பரவாயில்லை ஷீல்டு
நான் மனசுக்குள்ள உன்னை பூட்டிட்டேன் ஷீல்டு!!

வரட்டுமா என் சிவத்த மச்சான் ???

(பி.கு) என் இதயங்களையும் இந்த கடுதாசியில் இணைத்துள்ளேன்...
இதயங்களா என யோசனையா??
ஆம்!! இதயங்களே!! உன்னை தங்கவைக்க என் இதய அறையை நான்கையும் தூசு தட்டினேன்...
அந்நாள்வருக்கும் ஊடல்
யார் உன்னை ஏந்த வேண்டுமென்று...
அதுதான் நாள்வரும் பிரிந்து வருகின்றனர்
உன்னைக் கவர்ந்து வர!!!!
??????????
Just for fun.. so no serious action???
@Kathambari
 




Status
Not open for further replies.

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top