@Selva sankari
நானும் எழுத வந்திருக்கிறேன் காதல் கடிதம்...
கட்டையைத் தூக்கி வராதீர்கள் யாரும்.
அன்புள்ள மன்னவனே… ! ஆசைக் காதலனே… !
மூளையை எவ்வளவு கசக்கினாலும் சினிமா பாட்டுதான் வருது… நான் என்ன செய்ய ???
அன்பே… பிரௌனி… உனக்கு நான் எழுதும் தமிழ் புரியுமா என்று தெரியவில்லை. ஆனால் என் உணர்வுகள் நிச்சயம் புரியும்.
அன்பே…
ஆருயிரே…
அருமருந்தே…
அடிக் கரும்பே…
மானே…
தேனே…
மணியே…
நிலவே… என்றெல்லாம் உன்னை வர்ணித்து எழுத எனக்குத் தெரியவும் இல்லை, தோன்றவும் இல்லை.
மச்சான் மீசை வீச்சருவா…
மச்சினி எல்லாம் ஏங்கிடுவா… என்று ஏங்கிப் பாட்டெழுத உனக்கு கருகரு மீசையும் இல்லை. (எல்லாம் பிரவுன் தான்)
என்ன எழுதுவது? எப்படி எழுதுவது? என யோசித்து யோசித்தே நேரம் கழிகிறது… என் ஃபோனில் சார்ஜும் குறைகிறது.
எதுவும் தெரியாது யோசித்த போதும், உன் அன்பைப் பெற வேண்டும் என்ற வெறியோடு நான் எழுதும் மடலை நீ ரசிப்பாயா? அல்லது வெறுப்பாயா… ? எதுவும் புரியாமல் பத்தாம் வகுப்பு பரிட்சை ரிசல்ட்டின் போது பரிதவிக்கும் நெஞ்சம் போல பரிதவிக்கிறேன்.
சரி… போதும்… கதை பேசாமல் காதலைப் பேசலாம் வா…
எங்கே…? எப்போது… ? எப்படி… ? நீ என்னுள் நுழைந்தாய் என, சன் செய்திகளுக்கு இடையே கேள்வி கேட்பது போல எனக்குள் கேட்டு, ஆற அமர அசை போடும் மாடு போல கடந்த நாட்களின் நினைவுகளை அசைபோட்டுத் திரும்பிப் பார்க்கிறேன்.
நான் படிக்கும்
நாவலில் வரும்
நாயகியை மட்டும்
நயமாய் ரசித்திருந்தேன்…
நானும் இருக்கிறேனடி என்று
திரும்பிப் பார்க்க வைத்து
திகைக்க வைத்தாய் என்னை…!
திரும்பும் திசையெல்லாம்
திருஉறுவாய் நின் பிரகா(ஷ்)சம் கண்டு
திணறித் தவித்து நின்றேன்.
எது ஈர்த்தது என்னை…?
எனக்குள் கேட்டுக் கொள்கிறேன்…
உன் விழிகளில் வழிந்த ஏக்கம் மிகு காதலா...
உன் இதழில் மலரும் புரியா பாஷையா…
அந்த கிறுக்கியை(சிமி) கரெக்ட் செய்ய நீ படும் துயரங்களா…
ஆகமொத்தம் எனக்குள் விழுந்து விட்டாய் புரியாமலே…
உயிர் விடும் வரை உன்னோடுதான்…
உனை விட்டால் உடல் மண்ணோடுதான்…
நான் என்பது நான் மட்டுமா…
நீ கூடத்தான் ஓடோடி வா…!??
இறுதியாக மிகுந்த வெட்கத்துடன் ஒன்று. ??
முத்தத்தில் வித்தகனாம் நீ…
மொத்தமாகப் பேசுகின்றனர் சைட்டில்…
சித்தத்தில் உனை ஏற்றி…
பித்தத்தில் மூழ்கும் எனை மீட்க…
நித்தமும் நினைவில் இனிக்கும்படி…
சத்தமாய் ஒரு முத்தம் பதி… ??
வரலாற்றுக் காதல்கள் வரலாறாய் இருக்கட்டும். நம் காதல் வரலாறை எழுதட்டும்.
காத்திருக்கிறேன் நீயும் காதலிப்பாய் என்ற நம்பிக்கையுடன். ??
காதல் என்றும் வாழட்டும். அதில் நாமும் வாழ்வோம். ??
இப்படிக்கு அன்புக் காதலி…
செல்வா
நானும் எழுத வந்திருக்கிறேன் காதல் கடிதம்...
கட்டையைத் தூக்கி வராதீர்கள் யாரும்.
அன்புள்ள மன்னவனே… ! ஆசைக் காதலனே… !
மூளையை எவ்வளவு கசக்கினாலும் சினிமா பாட்டுதான் வருது… நான் என்ன செய்ய ???
அன்பே… பிரௌனி… உனக்கு நான் எழுதும் தமிழ் புரியுமா என்று தெரியவில்லை. ஆனால் என் உணர்வுகள் நிச்சயம் புரியும்.
அன்பே…
ஆருயிரே…
அருமருந்தே…
அடிக் கரும்பே…
மானே…
தேனே…
மணியே…
நிலவே… என்றெல்லாம் உன்னை வர்ணித்து எழுத எனக்குத் தெரியவும் இல்லை, தோன்றவும் இல்லை.
மச்சான் மீசை வீச்சருவா…
மச்சினி எல்லாம் ஏங்கிடுவா… என்று ஏங்கிப் பாட்டெழுத உனக்கு கருகரு மீசையும் இல்லை. (எல்லாம் பிரவுன் தான்)
என்ன எழுதுவது? எப்படி எழுதுவது? என யோசித்து யோசித்தே நேரம் கழிகிறது… என் ஃபோனில் சார்ஜும் குறைகிறது.
எதுவும் தெரியாது யோசித்த போதும், உன் அன்பைப் பெற வேண்டும் என்ற வெறியோடு நான் எழுதும் மடலை நீ ரசிப்பாயா? அல்லது வெறுப்பாயா… ? எதுவும் புரியாமல் பத்தாம் வகுப்பு பரிட்சை ரிசல்ட்டின் போது பரிதவிக்கும் நெஞ்சம் போல பரிதவிக்கிறேன்.
சரி… போதும்… கதை பேசாமல் காதலைப் பேசலாம் வா…
எங்கே…? எப்போது… ? எப்படி… ? நீ என்னுள் நுழைந்தாய் என, சன் செய்திகளுக்கு இடையே கேள்வி கேட்பது போல எனக்குள் கேட்டு, ஆற அமர அசை போடும் மாடு போல கடந்த நாட்களின் நினைவுகளை அசைபோட்டுத் திரும்பிப் பார்க்கிறேன்.
நான் படிக்கும்
நாவலில் வரும்
நாயகியை மட்டும்
நயமாய் ரசித்திருந்தேன்…
நானும் இருக்கிறேனடி என்று
திரும்பிப் பார்க்க வைத்து
திகைக்க வைத்தாய் என்னை…!
திரும்பும் திசையெல்லாம்
திருஉறுவாய் நின் பிரகா(ஷ்)சம் கண்டு
திணறித் தவித்து நின்றேன்.
எது ஈர்த்தது என்னை…?
எனக்குள் கேட்டுக் கொள்கிறேன்…
உன் விழிகளில் வழிந்த ஏக்கம் மிகு காதலா...
உன் இதழில் மலரும் புரியா பாஷையா…
அந்த கிறுக்கியை(சிமி) கரெக்ட் செய்ய நீ படும் துயரங்களா…
ஆகமொத்தம் எனக்குள் விழுந்து விட்டாய் புரியாமலே…
உயிர் விடும் வரை உன்னோடுதான்…
உனை விட்டால் உடல் மண்ணோடுதான்…
நான் என்பது நான் மட்டுமா…
நீ கூடத்தான் ஓடோடி வா…!??
இறுதியாக மிகுந்த வெட்கத்துடன் ஒன்று. ??
முத்தத்தில் வித்தகனாம் நீ…
மொத்தமாகப் பேசுகின்றனர் சைட்டில்…
சித்தத்தில் உனை ஏற்றி…
பித்தத்தில் மூழ்கும் எனை மீட்க…
நித்தமும் நினைவில் இனிக்கும்படி…
சத்தமாய் ஒரு முத்தம் பதி… ??
வரலாற்றுக் காதல்கள் வரலாறாய் இருக்கட்டும். நம் காதல் வரலாறை எழுதட்டும்.
காத்திருக்கிறேன் நீயும் காதலிப்பாய் என்ற நம்பிக்கையுடன். ??
காதல் என்றும் வாழட்டும். அதில் நாமும் வாழ்வோம். ??
இப்படிக்கு அன்புக் காதலி…
செல்வா