விழியின் மொழி 3

ஊட்டி......
மலைகளின் ராணி அவள், கடல் அன்னையின் மடியில் இருந்து 7347 அடி உயர்ந்து நிற்கும் காரிகை அவள்,
கதிரவனின் கதிர்கள் மலைகளின் முகடுகளில்
எதிர் ஒளித்து அழகான விடியலை பூமிக்கு கொண்டு வந்தது....
சல சலவென ஓடும் நீரில் பட்டு எதிர் ஒளிக்கும் சூரிய கதிர்களை கண்ட பறவைகள் மின்னலின் கீற்றோ என்ன அஞ்சி தனது கூட்டினை விட்டு உணவு தேடி மேலே உயர பறந்தது....
பச்சை கம்பளம் விரித்தது போன்று இருந்த நகரின் எல்லையில் வண்ண வண்ண மலர்கள் பூத்து குளுக்கின.... கானகுயில்கள் நமது நாயகியின் வரவை உரைக்கும் விதம் தேவ கானம்இசைத்தன....
இயற்கை அழகு அவனது கண்ணிலும் கருத்திலும் படவில்லை, அவனது இலக்கினை நோக்கி அவனது கார் அதி வேகமாக கட்டேஜ் நோக்கி செலுத்தி கொண்டு இருத்தான்....
வேந்தன்....

சுற்றிலும் மரங்களின் நடுவில் அமைந்து இருந்தது அந்த கட்டிடம்....

காரில் இருந்து இறங்கிய வேந்தன் கண் மூடி துயில் கொள்ளும் தேவதையை தனது கைகளில் ஏந்தி ஒரு அறையில் நுழைந்து மெத்தையில் கிடத்தினான்....
அவளது முகத்தில் விழும் கற்றை கூந்தலை ஒதுக்கி தனது மதியினை இழக்க செய்யும் அவளது மதி முகத்தினை பார்வையால் பருக்கினான்...
அடையாத பொருள்,
போல..
கிடைத்த உன்
நேசத்தை
காப்பேனா....
இல்லை
விதியின்
வழியில்,
உன் விழியில்
பயணித்து...
உன்னை
இழப்பேனா...
பதில் சொல்லடி
என் வேல்விழி... ???
சிறிது நேரத்தில் தனது சித்தம் தெளிந்து தனது நிலை அறிந்து அவளின் உடைகளை சரி செய்து விட்டு அவள் கண் விழிக்கும் வரை காத்து இருத்தான்.....
வேல் விழிக்கு தான் எங்கு இருக்கிறோம் என்பதை அறிய சிறிது நேரம் பிடித்தது...
நேற்று இரவு தன்னை யாரோ கடத்தியது கனவு போல நினைவு வர கண்களில் கண்ணீர் நிற்காமல் வடிந்தது...
தன்னை நிதானித்து சுற்றிலும் பார்வையை ஓட விட்டாள்...
தன்னை யாரோ கூர்ந்து நோக்குவது போல தோன்ற தனது தலையினை உயர்த்தி எதிரில் இருப்பவனை பார்வையால் எடையிட்டாள்...
இம்முறை அதிர்வது வேள்விழியின் முறையானது,
6 அடி ஆண்மகன், ஈட்டி போன்ற கண்கள், எதிரில் இருப்பவரின் மனதை எளிதில் படித்துவிடும் கண்கள், தேக்கு போன்ற தேகம் என் அவனை அங்குலம் அங்குலமாக எடை போட்டு கொண்டு இருந்தாள் விழியாள்....

தனது கண் முன்பு நிற்பவன் நேற்று தன்னை கடத்தியவன் என்று நினைவு வர அவளது முகம் குழப்பத்தை தத்து எடுத்தது....
"யார் நீ, எதுக்காக என்னை கடத்தின என கேட்டாள்.
எதிரில் இருப்பவன் அவளது கேள்விக்கு பதில் கூறாது கண்ணால் அவளை ஆராய்ந்து பின்பு பதில் உரைத்தான்..
"நான் யார இருந்த உனக்கு என்ன, இன்னும் கொஞ்ச நேரத்துல உன்னோட புருசன் ஆக போறவன்".,
"இன்னும் ஒரு மணி நேரத்துல நமக்கு கல்யாணம் ரெடியா இரு" என்று கூறிசென்றான்...
" கல்யாணம் பண்ண மாட்டேனு வீம்பு புடிச்சினா உன்னோட அப்பா, அம்மா , நீ யாரும் உயிரோட இருக்க மாட்டீங்க யோசிச்சி முடிவு பண்ணு"
"முடியாது சொல்றதுக்கு முன்னாடி இந்த வீடியோ பாரு" என்று அவங்க அப்பா , அம்மா கடத்தி வச்சி இருக்க வீடியோவை ஓட விட்டான், நல்லா யோசிச்சி சொல்லு நான் வரேன் என்று கூறி சென்றான்.
தன்னை சுற்றி நடக்கும் சூழ்ச்சி யாதும் அறியாது பேதை அவள் ஆற்றுவர் தேற்றுபவர் யாரும் இன்று கண்ணீர் கரைந்தாள்...

மண மேடையில் ஆண்களின் கம்பிரத்துக்கு இலக்கணமாய் அமர்ந்து இருத்தான் வேந்தன்...
இரண்டு பெண்கள் அழைத்து வர மருண்ட விழிகளுடன் மணவரை நோக்கி சென்றாள் வேல்விழி
முகம் நிமிர்த்தி அவன் கண்களில் என்ன கண்டலோ தலை குனிந்து அவன் இட்ட மலையினை மணமகளாய் ஏற்றால்...
ஒரே நாளில் தனது வாழ்க்கை தடம் மாறி விட்டது அப்பா, அம்மா, காப்பதனும் னா இதை செஞ்சி தன் ஆகணும் என்று மனதை திட படுத்திக்கொண்டு தன்னை கவர்ந்தவனின் (கடத்தியவனின்) கழுத்தில் மாலை இட்டாள் மங்கை அவள்,

கெட்டி மேளம் ஒலிக்க...
முப்பது முக்கோடி தேவர்கள் சாட்சியாக, கதிரவன், நிலவு, வானம், பூமி மற்றும் காற்று இவற்றின் முன்னிலையில் அவளை மங்கள நாண் பூட்டி தன்னில் சரி பாதியாக மாற்றி கொண்டான் அகில் வேந்தன்....
அங்கு நடப்பதை இரு ஜோடி விழிகள் கோவத்துடம் பார்த்து கொண்டு இருந்தது....
வேந்தனின் இந்த முடிவுக்கு காரணம் என்ன...
வேல் விழியின் வாழ்வில் வேந்தன் ஏற்படுத்த போகும் சூறாவளி என்ன...
அந்த இரு ஜோடி விழிகள் யாருக்கு சொந்தம் ஆனது...
பதில் வரும் பதிவுகளில்....