• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஸ்ரீ சாயி பிரார்த்தனை

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
சாயி பிரார்த்தனை



குருவாய் உந்தனைத் தொழுதேன் சாயிநாதா.

உன்னருளை எனக்குத் தருவாய் சாயிநாதா.

என் வாழ்விற்கு வழிகாட்டுவாய் சாயிநாதா.

இன்ப துன்பம் நிறைந்த வாழ்வின் ஒளியாவாய் சாயிநாதா.

வியாழன் தோறும் விரதம் இருந்தேன் சாயிநாதா.

உலகப் பற்றை விட்டொழிக்க அருள்வாய் சாயிநாதா.

குருவாயூரப்பனை உன்னிடத்தில் கொண்டுள்ள சாயிநாதா.

கோமதி அம்மனின் அருமை மகனே சாயிநாதா.

உந்தன் சரித்திரம் படித்திட அருள்வாய் சாயிநாதா.

உந்தன் பாத கமலம் சரண் அடைந்தோம் சாயிநாதா.

எனக்கு விஜயம் அருள்வாய் சாயிநாதா.



சீரடிக்கு வந்தனம்



மாசில்லா பொன்னான பூமிக்கு வந்தனம்

மகத்துவம் புரிகின்ற மண்ணுக்கு வந்தனம்

நோயெல்லாம் தீர்க்கின்ற நானிலமே வந்தனம்

சாயிமகான் பாதம்பட்ட சீரடிக்கு வந்தனம்



யார்நாடி வந்தாலும் எதுதேடி நின்றாலும்

அருளாட்சி செய்கின்ற அவனிக்கு வந்தனம்

கல்விஒளி கண்ணொளியும் இல்லாத வறியவரும்

பேரொளியாம் பேறடையும் சீரடிக்கு வந்தனம்



பலகோடி பிறவிகளில் செய்தகொடும் பாவங்கள்

தந்தவினை போக்குகின்ற தரணிக்கு வந்தனம்

மலைபோல பெருஞ்செல்வம் கொண்டவராம் தேவரவர்

தலைதாழ்த்தி பணிந்தேத்தும் சீரடிக்கு வந்தனம்



முப்பொழுதும் மனதினிலே குறையாவும் உள்ளவரும்

அப்பொழுதே நிறைவுபெறும் அருந்தலமே வந்தனம்

தரிசித்த நாள்முதலே தவறெல்லாம் நீக்கிவிடும்

தர்மமே சூழ்ந்துநிற்கும் சீரடிக்கு வந்தனம்
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
அருமையான பதிவு சிஸ்டர் Write your reply...
 




SaiDivya

புதிய முகம்
Joined
Apr 28, 2020
Messages
9
Reaction score
1
Location
Chennai
நெய்வேதிய மந்த்ரா

குருவே சாய்! குருவே சாய்!
எனக்கு உணவு அளிக்கும் எந்தன் குருவே சாய்!
இந்த நைவேத்தியத்தை தாழ்மையுடன் படைக்கிறான் சாய்!
இதை ஏற்று கொண்டு என் வாழ்வில் ஒளி வீசுவார் சாய்!
பழம் பால் தேன் படைத்துள்ளேன்!
கங்கை யமுனை காவேரி நீர் படைத்துள்ளேன்!
வெத்தலை பாக்கு ஏலக்காய் படைத்துள்ளேன்!
இவை அனைத்தையும் ஏற்றுக்கொண்டு
என் துன்பம் துடைக்க வாரும் சாய்!​
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top