ஆண்டாளின் கிளியும் அத்திவரதரும் பேசிக்கொள்வது போல் அருமையான கவிதை. ஒரு கற்பனை!
கிளியாரே!
என்ன விசேஷம்?
கோதை அனுப்பி வைத்தாளா?
புதியதாய்த் தகவல்
ஏதேனும் சொன்னாளா?
அத்திகிரியானே!
ஆச்சரியத்துடன் இருக்கிறாள்
கோதை நாச்சியார்!!
தனது வார்த்தை
வரம் பெற்றதாய்
மகிழ்ச்சியில் திளைக்கிறாள்!!
கூடியிருந்து குளிரச் சொன்னாளாம்!!
இப்படிக் கூடுமென
அவள் எதிர்பார்க்கலையாம்!!
கிளியாழ்வாரே!
உண்மையைச் சொல்லட்டுமா?
நானே எதிர்பார்க்கவில்லை!!
கூட்டம் குறையும்
என்னைத் தரிசிக்கலாம் என்று
நினைத்தவர்கள் எல்லோரும்
ஏமாந்து போய்விட்டனர்!!
தினமும் கூடும்
அளவில் அதிகமான
அடியார் கூட்டம்
எனக்கும் மகிழ்ச்சிதான்!!
பெருமானே!
உன்னை விரும்பாதோரும்
உன்னைக் காண வருகின்றனரே?
இதுவும் உன்
கோதை நாச்சியாரின்
விருப்பம்தான்!!
கூடாரையும் வெல்பவன் எனப்
பாடினாள் அல்லவா!!
அதனை நிரூபிக்க வேண்டாமா?
வரதனே!
காத்திருக்க வேண்டியுள்ளது!
வசதிகள் இல்லை!
புகார்கள் நிறைய வருகிறதே!!
வரட்டுமே கிளியாரே!!
ஒரு ஐந்து நிமிடம்
நீருக்குள் மூழ்கியிருக்க முடியுமா?
ஒன்றல்ல, இரண்டல்ல
நாற்பது வருடங்கள்
என் அடியார்களை காணவேண்டும் என்ற
ஒரேயொரு ஆசைக்காய்
நீருக்குள் இருக்கிறேனே!!!
என் சிரமம் மறந்தீரோ?
பெருமானே!
நீருக்குள் இருக்கும்
நீர் கடவுள்!!
அவர்கள் மானிடர்கள்!!
பாவம் அல்லவா?
உண்மைதான் கிளியாரே!!
நேரிலும் காணமுடியாத அளவிற்கு
மிகத் தெளிவாக,
மிக அழகாக,
வலைதளங்களில்
வலம் வருகிறேன் நான்!!
முடிந்தவர்கள்
இந்த மூலவனைக் காணவாருங்கள்!!
இயலாதோர் தரிசிக்க
உற்சவ மூர்த்தியாய்
வலைதளங்களில்
வலம் வருகிறேன் நான்!!
என் நினைப்பு
உமக்கு இருந்தாலே போதும்!!
வரம் தர நான் மறுக்கமாட்டேன்!!
விஐபி தரிசனங்கள்
தேவையா பெருமானே?
போகட்டும் கிளியாரே!!
என்னை விரைவில் அடைய
விருப்பம் அடைகின்றனர்!!
ஆனால்
இச்சுவை தவிர யான் போய்
இந்திர லோகமாளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் என
என்னைப் பாடி,
என் புகழைப் பாடி,
என்னைப் பற்றி மட்டுமே பேசி,
கால் கடுக்க நின்று வரும்
தொண்டரடிப்பொடியான
என் பாகவதர்களுக்கு மட்டுமே,
என் மனம் முழுதும் இருப்பிடம்!!
நான் மின்னல் அல்ல,
என்னை சில நொடிகள் கண்டு
மனம் விட்டு மறைய!!
நான் பிரம்மனின் வேதியில்
உதித்த சூரியன்!!
என் கிரணங்களில்
எனக்காகக் காத்திருப்போரை
எந்நாளும் கைவிடேன்!!
பெருமானே!
ஓரிரு மரணங்கள்
மனத்தை உறுத்துகின்றதே!
கிளியாரே!
நானே கலங்கினேன்!!
என்னைக் காண வரும் ஆவலில்
தன்னை மறந்து
என்னிடம் வந்தவர்கள்
நித்தியசூரியர்களாய்
என்னுடன் இருப்பர்!!
பெருமானே!
இன்னமும் ஏதாவது உண்டா?
அடியார்களே!
உங்களை இந்தப்
பெருமானே இறைஞ்சுகின்றேன்!!
முடிந்தவர்கள்
என்னைக் காண
நேரில் வாருங்கள்!!
முடியாதோரின் இல்லங்களில்
வலைதளங்களிலும்
வருவேன் நான்!!
கட்டாயம் வரமும் தருவேன்!!
இப்படிக்கு.
அத்திவரதர்.
வாழ்க வளமுடன்!!
??படித்ததில் பிடித்தது ??
கிளியாரே!
என்ன விசேஷம்?
கோதை அனுப்பி வைத்தாளா?
புதியதாய்த் தகவல்
ஏதேனும் சொன்னாளா?
அத்திகிரியானே!
ஆச்சரியத்துடன் இருக்கிறாள்
கோதை நாச்சியார்!!
தனது வார்த்தை
வரம் பெற்றதாய்
மகிழ்ச்சியில் திளைக்கிறாள்!!
கூடியிருந்து குளிரச் சொன்னாளாம்!!
இப்படிக் கூடுமென
அவள் எதிர்பார்க்கலையாம்!!
கிளியாழ்வாரே!
உண்மையைச் சொல்லட்டுமா?
நானே எதிர்பார்க்கவில்லை!!
கூட்டம் குறையும்
என்னைத் தரிசிக்கலாம் என்று
நினைத்தவர்கள் எல்லோரும்
ஏமாந்து போய்விட்டனர்!!
தினமும் கூடும்
அளவில் அதிகமான
அடியார் கூட்டம்
எனக்கும் மகிழ்ச்சிதான்!!
பெருமானே!
உன்னை விரும்பாதோரும்
உன்னைக் காண வருகின்றனரே?
இதுவும் உன்
கோதை நாச்சியாரின்
விருப்பம்தான்!!
கூடாரையும் வெல்பவன் எனப்
பாடினாள் அல்லவா!!
அதனை நிரூபிக்க வேண்டாமா?
வரதனே!
காத்திருக்க வேண்டியுள்ளது!
வசதிகள் இல்லை!
புகார்கள் நிறைய வருகிறதே!!
வரட்டுமே கிளியாரே!!
ஒரு ஐந்து நிமிடம்
நீருக்குள் மூழ்கியிருக்க முடியுமா?
ஒன்றல்ல, இரண்டல்ல
நாற்பது வருடங்கள்
என் அடியார்களை காணவேண்டும் என்ற
ஒரேயொரு ஆசைக்காய்
நீருக்குள் இருக்கிறேனே!!!
என் சிரமம் மறந்தீரோ?
பெருமானே!
நீருக்குள் இருக்கும்
நீர் கடவுள்!!
அவர்கள் மானிடர்கள்!!
பாவம் அல்லவா?
உண்மைதான் கிளியாரே!!
நேரிலும் காணமுடியாத அளவிற்கு
மிகத் தெளிவாக,
மிக அழகாக,
வலைதளங்களில்
வலம் வருகிறேன் நான்!!
முடிந்தவர்கள்
இந்த மூலவனைக் காணவாருங்கள்!!
இயலாதோர் தரிசிக்க
உற்சவ மூர்த்தியாய்
வலைதளங்களில்
வலம் வருகிறேன் நான்!!
என் நினைப்பு
உமக்கு இருந்தாலே போதும்!!
வரம் தர நான் மறுக்கமாட்டேன்!!
விஐபி தரிசனங்கள்
தேவையா பெருமானே?
போகட்டும் கிளியாரே!!
என்னை விரைவில் அடைய
விருப்பம் அடைகின்றனர்!!
ஆனால்
இச்சுவை தவிர யான் போய்
இந்திர லோகமாளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் என
என்னைப் பாடி,
என் புகழைப் பாடி,
என்னைப் பற்றி மட்டுமே பேசி,
கால் கடுக்க நின்று வரும்
தொண்டரடிப்பொடியான
என் பாகவதர்களுக்கு மட்டுமே,
என் மனம் முழுதும் இருப்பிடம்!!
நான் மின்னல் அல்ல,
என்னை சில நொடிகள் கண்டு
மனம் விட்டு மறைய!!
நான் பிரம்மனின் வேதியில்
உதித்த சூரியன்!!
என் கிரணங்களில்
எனக்காகக் காத்திருப்போரை
எந்நாளும் கைவிடேன்!!
பெருமானே!
ஓரிரு மரணங்கள்
மனத்தை உறுத்துகின்றதே!
கிளியாரே!
நானே கலங்கினேன்!!
என்னைக் காண வரும் ஆவலில்
தன்னை மறந்து
என்னிடம் வந்தவர்கள்
நித்தியசூரியர்களாய்
என்னுடன் இருப்பர்!!
பெருமானே!
இன்னமும் ஏதாவது உண்டா?
அடியார்களே!
உங்களை இந்தப்
பெருமானே இறைஞ்சுகின்றேன்!!
முடிந்தவர்கள்
என்னைக் காண
நேரில் வாருங்கள்!!
முடியாதோரின் இல்லங்களில்
வலைதளங்களிலும்
வருவேன் நான்!!
கட்டாயம் வரமும் தருவேன்!!
இப்படிக்கு.
அத்திவரதர்.
வாழ்க வளமுடன்!!
??படித்ததில் பிடித்தது ??