Bala5796
மண்டலாதிபதி
அழையா விருந்தினன்(பசி)
வருகையில்...
நடந்துவிடுகிறது உபசரிப்புகள்...
உறக்கங்களில்...
நீ உறங்க ...
போர்வையாகி போகும் பனிகள்...
பாய் விரித்துவிடும் காகிதங்கள்...
உறங்கிவிடு என உடல் கூற...
உண்டு உறங்கு என கூறிவிடுகிறது
பறந்து வரும் சின்ன உயிர்...
உன் அழுகையில் ஆறுதல்கள்
கூறுவிடுகிறது....
அயர்ந்து போன குரல்வளைகளும்...
நீர் வற்றி போன கண்களும்...
அதிசியம் தான்...
நிறங்கள் மட்டுமே கூடி போகும்
இந்த வெளுத்துவிடா ஆடைகள்...
எந்த காலணிகளுக்கும் பொருந்திவிடும்
அழகான கால்கள்...
கண்களை மூடிக்கொள் அழகே...
எட்டா உயரத்தில் நிகழும் உனது
இன்பம்...
பார்த்துவிடும் தொலைவில்
அரங்கேறும்...
ஏக்கங்களோடு...
Last edited: