- Joined
- Jan 17, 2018
- Messages
- 1,547
- Reaction score
- 7,648
அத்தியாயம் – 14
இன்று:
கோபம்! கோபம்! கோபம்! கோபத்தை விட வெட்டி சாய்க்க நினைக்கும் அளவுக்கு, வெறி என்று தான் சொல்ல வேண்டும். கால சக்கரத்திற்குள் மாட்டிக் கொண்டு, வெளியே வர முடியாமல் ஆண்டுகள் கணக்காக தவித்து விட்டு, இதோ இப்பொழுது எண்பத்தி எட்டு வயது கிழவனாக இங்கு வந்து இறங்கினான் பாசில்.
இடம் புதிது, ஏதோ ஒரு கிராமம் அதில் முழுவதும் சிவ கோடி பக்தர்கள். அந்த இடத்தை சுற்றி பார்த்தவனுக்கு, அவனுக்கு உதவி புரிய இங்கு உள்ளவர்களால் முடியாது என்று தோன்றியது.
அவன் அந்த கிராமத்தில் இருந்து சற்று தள்ளி வெளியே வந்ததும், மக்கள் பேருந்தில் ஏறி செல்வதை பார்த்து, அது தான் வாகனம் என்று புரிந்தது. உடனே அடுத்த பேருந்துக்காக காத்து இருந்து, அது வரவும் ஏறினான்.
டிக்கெட்! டிக்கெட்! என்று கண்டக்டர் கத்திக் கொண்டே, ஒவ்வொருவருக்கும் டிக்கெட் கொடுத்து, ரூபாய் வசூல் செய்வதை பார்த்து, தன்னிடம் இப்பொழுது ஒன்றும் இல்லையே, என்ன செய்வது என்று யோசித்தான்.
அவன் அப்பொழுது செய்ததை தான், இப்பொழுதும் செய்ய துணிந்தான். திருட்டு! ஆம் திருட்டே தான்! வணிகன் என்ற முறையில், அப்பொழுது மக்களிடம் அதிகமாக வசூலித்து பொருள் கொடுத்தானே, அதே போல் இப்பொழுது அவர்களுக்கே தெரியாமல், காசை திருட எண்ணினான்.
பேருந்தில் கண்டக்டர் அருகில் வரவும், பஸ் நிறுத்தும் கடைசி இடம் என்று கூறிவிட்டு, கண்டக்டர் பின் பாக்கெட்டில் சொருகி இருந்த பணத்தை எடுத்துக் கொடுத்து, அதில் தனக்கு ஒரு டிக்கெட் வாங்கிக் கொண்டான்.
அவன் அப்படி வந்து சேர்ந்த இடம், சென்னை வண்டலூர் மிருக காட்சி இடத்திற்கு. மிருக காட்சிக்குள் செல்லாமல், அதன் அருகே உள்ள சாலையில் நடக்க தொடங்கினான். அது ஒரு காட்டு பாதையாக இருக்கவும், திரும்ப நினைக்கும் பொழுது அங்கே குரான் ஓதுவது அவன் காதுகளில் விழுந்தது.
குரான் ஓதி, அவன் பல வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், ஓத வேண்டும் இப்பொழுது என்ற எண்ணம் அவனுக்குள் எழுந்தது. எங்கே ஓதுகிறார்கள் என்று கவனித்தவன், காட்டு பாதை ஓரத்தில் உள்ள மசூதியில் இருந்து சத்தம் வரவும் அங்கே சென்றான்.
வயது கூடி, பார்க்க கிழவனாக இருந்தாலும் அவன் உடலளவில் ஆரோக்கியமாகவும், மனதளவில் தைரியத்திற்கு பஞ்சமில்லை என்னிடம் என்று சொல்வது போல் திடமாகவே இருந்தான்.
மசூதிக்குள் அவன் நுழைய நினைக்கும் பொழுது, எதிர்த்திசையில் இருந்து அடேய் சாத்தானே! உள்ளே நீ நுழைய முடியாது என்ற குரல் ஓங்கி ஒலித்தது. எந்த திசையில் இருந்து சத்தம் வருகிறது என்று பார்த்தவன், அங்கே நூறு வயதை தாண்டிய முதியவர் தான் இவனை முறைத்துக் கொண்டு இருந்தார் இவன் நின்று இருந்த எதிர்த்திசையில்.
அவனோ, அதை எல்லாம் கண்டு கொள்ளாமல், உள்ளே செல்ல நினைக்கையில் அவர் அடுத்து கூறிய வார்த்தையில் அப்படியே நின்றான். உள்ளே செல்லாமல், அவன் விரைந்து அவர் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தான்.
“உமக்கு, என்னை பற்றி நன்றாக தெரிந்து இருக்கிறதே! அப்பொழுது, நான் வந்ததன் நோக்கமும் உமக்கு தெரியும், அப்படிதானே!” என்று அவன் கேட்கவும், அவர் ஆம் என்றார்.
“சரி, இப்பொழுது கூறும் அந்த இளவரசி மதியழகி, இப்பொழுது எங்கே இருக்கிறாள்? நான் உடனே அவளை அழைத்துக் கொண்டு, கால சக்கரத்திற்குள் செல்ல வேண்டும்” என்று பரபரத்தான்.
“அடேய் சாத்தானே! ஒரு தடவை நீ கால சக்கரத்திற்குள் இருந்து வந்துட்ட, திரும்ப எல்லாம் போக முடியாது. உன் சாவுக்கு கூட நாள் குறிச்சிட்டார் அல்லா! உன்னை அவன் கிட்ட இருந்து, யாராலும் காப்பாத்த முடியாது” என்று பலத்த சிரிப்பு சிரித்தார்.
“போதும் நிறுத்து! அவள் இப்பொழுது எங்கே என்று மட்டும் கூறும். மற்றதை நான் பார்த்துக் கொள்கின்றேன், புரிந்ததா?” என்று கூறி சிடுசிடுத்தான்.
இருக்கும் இடத்தை அவர் கூறி முடிக்கவும், அவன் அங்கு இருந்து சென்று விட்டான்.
“அழிவை தேடி ஓடுறான்! ஹா ஹா!” என்று அவர் சிரித்துக் கொண்டே மசூதிக்குள் சென்றார்.
விறுவிறுவென்று வந்தவன், அடுத்து எந்த வழியில் செல்வது என்று தெரியாமல் குழம்பினான். அவனுக்கு அப்பொழுது, உதவிக்கு இரண்டு மூணு பேர் தேவைப்பட்டது. சூழ்ச்சி செய்பவன், தன்னை போல் சூழ்ச்சி செய்பவர்களை தேர்ந்தெடுக்க அங்கே பஸ் நிறுத்தத்தில் தேட தொடங்கினான்.
அங்கே ஒருவன், பிக் பாக்கெட் அடித்துக் கொண்டு இருந்தான் மக்களின் கவனம், அவன் மேல் பதியாத வரையில். வேறொருவன், ஒரு பெண்ணிடம் அவளின் குடும்ப பின்னணியை கூறிவிட்டு, அந்த பெண்ணிடம் தன்னை காதல் செய்யுமாறு மிரட்டிக் கொண்டு இருந்தான்.
இப்போதைய அவன் தேவைக்கு, இவர்கள் இருவரும் ஒத்து வருவார்கள் என்று அவனுக்கு தோன்றியது. பேச்சு சாதுரியம் கொண்டவன் என்பதால், இருவரையும் அவன் வசப்படுத்தி விட்டான்.
“முதலில் இருவரும், எனக்கு தங்கும் இடத்திற்கும், சாப்பாட்டிற்கும் ஏற்பாடு செய்யுங்கள். அதன் பின் நான் கூறிய பெண்ணின் விபரங்களை சேகரித்து, என்னிடம் வந்து தாருங்கள்” என்று கட்டளையிட்டான்.
பிக் பாகெட் அடித்தவன், பாசிலை அழைத்துக் கொண்டு முதலில் ஆண்கள் மட்டுமே தங்குவதற்கு என உள்ள ஒரு வீட்டிற்கு அழைத்து சென்றான். எல்லா வசதியும் இருந்தது, எதையும் ஆனால் பார்வையிடாமல், குளிபதற்க்கு எங்கு செல்ல வேண்டும் என்று கேட்டு, அவன் முதலில் அங்கே சென்றான்.
குளித்து, முடித்து வரவே அவனுக்கு நேரம் பிடித்தது. ஒன்றை திருகினால், சுடு தண்ணீர் கொதிக்க கொதிக்க வந்தது. மற்றொரு குழாயை திருகவும், அவன் மேல் தண்ணீர் சொட சொடவென மழை போல், பெய்ய தொடங்கியது. ஒவ்வொன்றும் புதுசு என்பதால், அவன் தட்டு தடுமாறி தான் ஒவ்வொன்றையும் கற்றுவிட்டு, குளித்து வந்தான்.
அந்த பிக் பாக்கெட், அவனை முற்றிலும் மாற்றி விட்டான் தோற்றத்தில். அவனின் கம்பீரத்திற்கு ஏற்றது போல், அவனுக்கு அந்த சிகை அலங்காரமும், உடையும் கச்சிதமாக பொருந்தியது.
அப்பொழுது அங்கே வந்த மற்றொருவன், அவன் கேட்ட விபரங்கள் அனைத்தையும் சேகரித்து வந்து இருந்தான். அதில் இருந்த அவளின் புகைப்படத்தை மட்டுமே பார்த்து விட்டு, அதிர்ந்தான்.
இன்று:
கோபம்! கோபம்! கோபம்! கோபத்தை விட வெட்டி சாய்க்க நினைக்கும் அளவுக்கு, வெறி என்று தான் சொல்ல வேண்டும். கால சக்கரத்திற்குள் மாட்டிக் கொண்டு, வெளியே வர முடியாமல் ஆண்டுகள் கணக்காக தவித்து விட்டு, இதோ இப்பொழுது எண்பத்தி எட்டு வயது கிழவனாக இங்கு வந்து இறங்கினான் பாசில்.
இடம் புதிது, ஏதோ ஒரு கிராமம் அதில் முழுவதும் சிவ கோடி பக்தர்கள். அந்த இடத்தை சுற்றி பார்த்தவனுக்கு, அவனுக்கு உதவி புரிய இங்கு உள்ளவர்களால் முடியாது என்று தோன்றியது.
அவன் அந்த கிராமத்தில் இருந்து சற்று தள்ளி வெளியே வந்ததும், மக்கள் பேருந்தில் ஏறி செல்வதை பார்த்து, அது தான் வாகனம் என்று புரிந்தது. உடனே அடுத்த பேருந்துக்காக காத்து இருந்து, அது வரவும் ஏறினான்.
டிக்கெட்! டிக்கெட்! என்று கண்டக்டர் கத்திக் கொண்டே, ஒவ்வொருவருக்கும் டிக்கெட் கொடுத்து, ரூபாய் வசூல் செய்வதை பார்த்து, தன்னிடம் இப்பொழுது ஒன்றும் இல்லையே, என்ன செய்வது என்று யோசித்தான்.
அவன் அப்பொழுது செய்ததை தான், இப்பொழுதும் செய்ய துணிந்தான். திருட்டு! ஆம் திருட்டே தான்! வணிகன் என்ற முறையில், அப்பொழுது மக்களிடம் அதிகமாக வசூலித்து பொருள் கொடுத்தானே, அதே போல் இப்பொழுது அவர்களுக்கே தெரியாமல், காசை திருட எண்ணினான்.
பேருந்தில் கண்டக்டர் அருகில் வரவும், பஸ் நிறுத்தும் கடைசி இடம் என்று கூறிவிட்டு, கண்டக்டர் பின் பாக்கெட்டில் சொருகி இருந்த பணத்தை எடுத்துக் கொடுத்து, அதில் தனக்கு ஒரு டிக்கெட் வாங்கிக் கொண்டான்.
அவன் அப்படி வந்து சேர்ந்த இடம், சென்னை வண்டலூர் மிருக காட்சி இடத்திற்கு. மிருக காட்சிக்குள் செல்லாமல், அதன் அருகே உள்ள சாலையில் நடக்க தொடங்கினான். அது ஒரு காட்டு பாதையாக இருக்கவும், திரும்ப நினைக்கும் பொழுது அங்கே குரான் ஓதுவது அவன் காதுகளில் விழுந்தது.
குரான் ஓதி, அவன் பல வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், ஓத வேண்டும் இப்பொழுது என்ற எண்ணம் அவனுக்குள் எழுந்தது. எங்கே ஓதுகிறார்கள் என்று கவனித்தவன், காட்டு பாதை ஓரத்தில் உள்ள மசூதியில் இருந்து சத்தம் வரவும் அங்கே சென்றான்.
வயது கூடி, பார்க்க கிழவனாக இருந்தாலும் அவன் உடலளவில் ஆரோக்கியமாகவும், மனதளவில் தைரியத்திற்கு பஞ்சமில்லை என்னிடம் என்று சொல்வது போல் திடமாகவே இருந்தான்.
மசூதிக்குள் அவன் நுழைய நினைக்கும் பொழுது, எதிர்த்திசையில் இருந்து அடேய் சாத்தானே! உள்ளே நீ நுழைய முடியாது என்ற குரல் ஓங்கி ஒலித்தது. எந்த திசையில் இருந்து சத்தம் வருகிறது என்று பார்த்தவன், அங்கே நூறு வயதை தாண்டிய முதியவர் தான் இவனை முறைத்துக் கொண்டு இருந்தார் இவன் நின்று இருந்த எதிர்த்திசையில்.
அவனோ, அதை எல்லாம் கண்டு கொள்ளாமல், உள்ளே செல்ல நினைக்கையில் அவர் அடுத்து கூறிய வார்த்தையில் அப்படியே நின்றான். உள்ளே செல்லாமல், அவன் விரைந்து அவர் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தான்.
“உமக்கு, என்னை பற்றி நன்றாக தெரிந்து இருக்கிறதே! அப்பொழுது, நான் வந்ததன் நோக்கமும் உமக்கு தெரியும், அப்படிதானே!” என்று அவன் கேட்கவும், அவர் ஆம் என்றார்.
“சரி, இப்பொழுது கூறும் அந்த இளவரசி மதியழகி, இப்பொழுது எங்கே இருக்கிறாள்? நான் உடனே அவளை அழைத்துக் கொண்டு, கால சக்கரத்திற்குள் செல்ல வேண்டும்” என்று பரபரத்தான்.
“அடேய் சாத்தானே! ஒரு தடவை நீ கால சக்கரத்திற்குள் இருந்து வந்துட்ட, திரும்ப எல்லாம் போக முடியாது. உன் சாவுக்கு கூட நாள் குறிச்சிட்டார் அல்லா! உன்னை அவன் கிட்ட இருந்து, யாராலும் காப்பாத்த முடியாது” என்று பலத்த சிரிப்பு சிரித்தார்.
“போதும் நிறுத்து! அவள் இப்பொழுது எங்கே என்று மட்டும் கூறும். மற்றதை நான் பார்த்துக் கொள்கின்றேன், புரிந்ததா?” என்று கூறி சிடுசிடுத்தான்.
இருக்கும் இடத்தை அவர் கூறி முடிக்கவும், அவன் அங்கு இருந்து சென்று விட்டான்.
“அழிவை தேடி ஓடுறான்! ஹா ஹா!” என்று அவர் சிரித்துக் கொண்டே மசூதிக்குள் சென்றார்.
விறுவிறுவென்று வந்தவன், அடுத்து எந்த வழியில் செல்வது என்று தெரியாமல் குழம்பினான். அவனுக்கு அப்பொழுது, உதவிக்கு இரண்டு மூணு பேர் தேவைப்பட்டது. சூழ்ச்சி செய்பவன், தன்னை போல் சூழ்ச்சி செய்பவர்களை தேர்ந்தெடுக்க அங்கே பஸ் நிறுத்தத்தில் தேட தொடங்கினான்.
அங்கே ஒருவன், பிக் பாக்கெட் அடித்துக் கொண்டு இருந்தான் மக்களின் கவனம், அவன் மேல் பதியாத வரையில். வேறொருவன், ஒரு பெண்ணிடம் அவளின் குடும்ப பின்னணியை கூறிவிட்டு, அந்த பெண்ணிடம் தன்னை காதல் செய்யுமாறு மிரட்டிக் கொண்டு இருந்தான்.
இப்போதைய அவன் தேவைக்கு, இவர்கள் இருவரும் ஒத்து வருவார்கள் என்று அவனுக்கு தோன்றியது. பேச்சு சாதுரியம் கொண்டவன் என்பதால், இருவரையும் அவன் வசப்படுத்தி விட்டான்.
“முதலில் இருவரும், எனக்கு தங்கும் இடத்திற்கும், சாப்பாட்டிற்கும் ஏற்பாடு செய்யுங்கள். அதன் பின் நான் கூறிய பெண்ணின் விபரங்களை சேகரித்து, என்னிடம் வந்து தாருங்கள்” என்று கட்டளையிட்டான்.
பிக் பாகெட் அடித்தவன், பாசிலை அழைத்துக் கொண்டு முதலில் ஆண்கள் மட்டுமே தங்குவதற்கு என உள்ள ஒரு வீட்டிற்கு அழைத்து சென்றான். எல்லா வசதியும் இருந்தது, எதையும் ஆனால் பார்வையிடாமல், குளிபதற்க்கு எங்கு செல்ல வேண்டும் என்று கேட்டு, அவன் முதலில் அங்கே சென்றான்.
குளித்து, முடித்து வரவே அவனுக்கு நேரம் பிடித்தது. ஒன்றை திருகினால், சுடு தண்ணீர் கொதிக்க கொதிக்க வந்தது. மற்றொரு குழாயை திருகவும், அவன் மேல் தண்ணீர் சொட சொடவென மழை போல், பெய்ய தொடங்கியது. ஒவ்வொன்றும் புதுசு என்பதால், அவன் தட்டு தடுமாறி தான் ஒவ்வொன்றையும் கற்றுவிட்டு, குளித்து வந்தான்.
அந்த பிக் பாக்கெட், அவனை முற்றிலும் மாற்றி விட்டான் தோற்றத்தில். அவனின் கம்பீரத்திற்கு ஏற்றது போல், அவனுக்கு அந்த சிகை அலங்காரமும், உடையும் கச்சிதமாக பொருந்தியது.
அப்பொழுது அங்கே வந்த மற்றொருவன், அவன் கேட்ட விபரங்கள் அனைத்தையும் சேகரித்து வந்து இருந்தான். அதில் இருந்த அவளின் புகைப்படத்தை மட்டுமே பார்த்து விட்டு, அதிர்ந்தான்.