- Joined
- Jan 17, 2018
- Messages
- 1,547
- Reaction score
- 7,648
அத்தியாயம் – 16
ஒரு ஒட்டு வீட்டில் பதுங்கிக் கொண்டு இருந்தான், பாசில். அவனுக்கு இப்பொழுது உதவி தேவை, அதுவும் சாதாரண உதவி இல்லை, பெரிய உதவி, அதுவும் ஒரு பெண்ணை கடத்துவது. இதே, ஐநூறு வருடங்களுக்கு முன்னால் என்றால், அவள் எந்த மூலையில் ஒளிந்து கொண்டு இருந்தாலும், அவளை தூக்கிக் கொண்டு வருவது அவனுக்கு சுலபம்.
இங்கேயோ, இந்த உலகம் அவனுக்கு புதிது. அதுவும் இப்பொழுது வரை, ஏதோ அவன் திட்டப்படி நடந்தது போல் தெரியவில்லை. முதியவராக இங்கு வந்தது முதல், ஆதியையும், மதியையும் ஒன்றாக பார்த்தது, அடுத்து ஒரு முதியவரின் உதவியால் பழைய உருவத்திற்கே மாறியது எல்லாம் ஏதோ தன்னை யாரோ வழிநடத்துவது போல் இருப்பதாக உணர்ந்தான்.
“யார் நம்மை செலுத்தினால் என்ன, எனக்கு தேவை அவள், இளவரசி மதியழகி. இப்பொழுது அவளை கடத்த வேண்டும், அதற்க்கு முன் நான் தங்க ஒரு நல்ல இடமாக பார்க்க வேண்டும்”.
“காட்டு பகுதி தான் எப்பொழுதும், நமக்கு பாதுகாப்பு. இப்பொழுது அங்கே செல்ல, யாரின் உதவியை நாடுவது” என்று பலமாக சிந்திக்க தொடங்கினான் பாசில்.
அவனுக்கு ஒன்று புரியவில்லை, அவனின் தந்தை கூறியது போல் அவனின் சாவு ஆதியின் கையில், என்று முன்னமே குறித்தாகி விட்டது. அது புரியாமல், ஆணவத்தில் ஆடிக் கொண்டு இருக்கிறான், தன்னை வெல்ல யாருமில்லை என்று.
ரமணனின் உதவியால், ஆதி மதியை அவனுடைய பீச் ஹௌசிற்கு அழைத்து வந்து இருந்தான். யாருக்கும் தெரியாமல், ஆதியையும், மதியையும் இங்கே அழைத்து வருவதற்குள் ரமணணிற்கு வியர்த்து விட்டது.
“டேய்! அங்க வீட்டிலே மதி இருக்கட்டும் டா, நான் பக்கா போலீஸ் பாதுகாப்பு கொடுக்கிறேன்” என்று ரமணன் சொல்லி பார்த்தும், ஆதி கேட்கவில்லை.
“அண்ணா! அவளை வீட்டில் வச்சு இருந்தா, அவன் எப்படியாவது கடத்திடுவான். கடத்தினா, நான் அவனை அடுத்து கொலை பண்ண கூட தயங்க மாட்டேன்”.
“கொஞ்சம் புரிஞ்சிக்கோ அண்ணா, நான் அடுத்து ஜெயில் போயிட்டா இவளால தான் நிம்மதியா இருக்க முடியுமா, இல்லை என்னால தான் நிம்மதியா இருக்க முடியுமா?”
“அவ்வளவு ஏன், அம்மா, அப்பா முதல இதை தாங்கிப்பாங்களா. எல்லாம் யோசிச்சிட்டு தான் அண்ணா, இந்த முடிவுக்கு வந்து இருக்கேன். இந்த பீச் ஹௌஸ் யாருக்கும் என்னோடதுன்னு தெரியாது, நம்ம தாத்தாவுக்கு அவர் நண்பர் ஒருத்தர் அவர் பெயருக்கு கிப்ட்டா வாங்கிக் கொடுத்தது”.
“ரெண்டு வருஷம் முன்னாடி தான், அப்பா இந்த விஷயத்தை என் கிட்ட சொன்னார். அதுவும் ஷூட்டிங்க்கு நான் பீச் ஹவுஸ் வாங்க போறேன்னு சொல்லும் போது தான், அப்பா என் கிட்ட இதை சொன்னார்”.
“சரின்னு அதை பார்க்க போகலாம்ன்னு இருக்கும் போது, டைரக்டர் வேற பாரின் லொகேஷன் பார்க்கலாம் சொல்லி கூட்டிட்டு போயிட்டார். அதுக்கு அப்புறம் நான் அங்கே போக வேண்டிய சூழ்நிலை இல்லை, இப்போ தான் உன் மூலமா அங்க போக போறேன், ஒளிஞ்சிக்க” என்று ஆதி கூறவும் தான், ரமணன் அடுத்து உடனே செயல்பட்டான்.
அவர்களை விட்டுவிட்டு, ரமணன் சென்ற பின்னர் ஆதி வீட்டிற்குள் சென்று மதியை தேடினான். அவளோ, அயர்ந்து கட்டிலில் ஒரு குழந்தை போல் உறங்கிக் கொண்டு இருந்தாள். அவள் அசந்து தூங்குவதை பார்த்தவன், அவளுக்கு போர்வையை சரியாக போர்த்திவிட்டு, பெட்ரூம் கதவை லேசாக சாற்றிவிட்டு வெளியே ஹால் சோபாவில் சோர்வாக வந்து அமர்ந்தான்.
வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரையும் சமாதானப்படுத்தி, மதியை இங்கு அழைத்து வர அவன் பெரும்பாடு பட்டான். அதுவும் திருமணம் முடிக்காமல், அங்கே இவளை அவன் அழைத்து செல்வது சரியாக படவில்லை.
பாரிஸ் அனுப்பும் பொழுது கூட பிரகதி, விஷ்வா, கிருஷ்ணா என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொறுப்பு கொடுத்து மதியை பாதுக்காத்து வைத்தார் காமாட்சி. ஆதியோடு தனியே சென்ற பொழுது கூட, பிரகதி அவர்களின் மேல் ஒரு கண் வைத்துக் கொண்டு தான் இருந்தாள்.
காமாட்சி, என்ன தான் மற்ற விஷயங்களில் முற்போக்காக இருந்தாலும், மகன் மருமகள் விஷயத்தில் சில கட்டுபாடுகளை விதித்து இருந்தார். அவர்கள் திருமணதிற்கு முன், தனியாக அதிக நேரம் சேர்ந்து பேசிக் கொள்ள அவர் விடவில்லை.
இப்பொழுது ஆதி, அவளை தன் பொறுப்பில் அவளை விடுமாறு கேட்கவும். முதலில் மறுத்தார். திருமணம் செய்து கொள், என்று அவர் கேட்டதற்கு கூட, அவன் எல்லா பிரச்சனை முடிந்த பிறகு திருமணம் செய்து கொள்கிறேன் என்று திட்டவட்டமாக கூறி விட்டான்.
நிறைய பேசி, சமாதானம் செய்து தான் இறுதியில் அவன் அழைத்து வர வேண்டியதாகி இருந்தது. அவன் எடுத்த முடிவிற்கு, துணையாக நின்றது மதி மட்டும் தான்.
ஆதியின் அவனின் மனநிலையை அவளை தவிர யாருக்கும், அவன் தெரியபடுத்தவில்லை. எல்லோரிடமும் மேலோட்டமாக மட்டுமே, விஷயத்தை கூறி இருந்தான். மதியிடம் மட்டுமே, அவன் வெளிப்படையாக முழு உணர்வுகளை வெளிப்படுத்தி இருந்தான்.
ஆகையால் தான், அவள் ஆதியின் முடிவிற்கு சரி என்று ஒப்புக் கொண்டு இங்கே அவனோடு வந்தது. அதை நினைத்து பார்த்தவன், அவளை நினைத்து பெருமிதம் கொண்டான்.
திருமணத்திற்கு முன்பே, கணவனின் மனநிலையை புரிந்து கொண்டு செயலாற்றும் மனைவி அமைவது என்பது வரம். அதை அவன் புரிந்து கொண்டதால், அது கொடுத்த பெருமிதம் அவன் முகத்தில் புன்னகையை வரவைத்தது.
உள்ளே அசந்து தூங்கிக் கொண்டு இருந்த மதி, சிறிது நேரத்தில் முழிப்பு வந்து எழுந்து அமர்ந்தாள். மாலை நேரத்து காற்று, அந்த அறையில் ஊடுருவி, குளிரச் செய்தது.
கடல் அலைகளின் சீற்றம், அவளை வேறு ஒரு உலகத்திற்கு அழைத்து சென்றது. தோழிகளுடன், கடல் அலைகளுடன் விளையாடியது, அவள் மனகண்ணில் மின்னி மறைந்தது. இப்பொழுது தன்னவனுடன் சேர்ந்து, அங்கே அலைகளுடன் விளையாட ஆசை கொண்டு, அவனை தேடி வெளியே வந்தாள்.
அங்கே ஹால் சோபாவில், கண்களை மூடி தன்னவளை நினைத்துக் கொண்டு இருந்தவனை பார்த்து மெதுவாக நெருங்கினாள். கனவில் அவள் பார்த்து பழகிய முகம், நனவில் அவனோடு கதைத்து இருந்தாலும், அவனோடு இருக்கும் இந்த தனிமை அவள் மனதில் அப்படி ஒரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
ஒரு ஒட்டு வீட்டில் பதுங்கிக் கொண்டு இருந்தான், பாசில். அவனுக்கு இப்பொழுது உதவி தேவை, அதுவும் சாதாரண உதவி இல்லை, பெரிய உதவி, அதுவும் ஒரு பெண்ணை கடத்துவது. இதே, ஐநூறு வருடங்களுக்கு முன்னால் என்றால், அவள் எந்த மூலையில் ஒளிந்து கொண்டு இருந்தாலும், அவளை தூக்கிக் கொண்டு வருவது அவனுக்கு சுலபம்.
இங்கேயோ, இந்த உலகம் அவனுக்கு புதிது. அதுவும் இப்பொழுது வரை, ஏதோ அவன் திட்டப்படி நடந்தது போல் தெரியவில்லை. முதியவராக இங்கு வந்தது முதல், ஆதியையும், மதியையும் ஒன்றாக பார்த்தது, அடுத்து ஒரு முதியவரின் உதவியால் பழைய உருவத்திற்கே மாறியது எல்லாம் ஏதோ தன்னை யாரோ வழிநடத்துவது போல் இருப்பதாக உணர்ந்தான்.
“யார் நம்மை செலுத்தினால் என்ன, எனக்கு தேவை அவள், இளவரசி மதியழகி. இப்பொழுது அவளை கடத்த வேண்டும், அதற்க்கு முன் நான் தங்க ஒரு நல்ல இடமாக பார்க்க வேண்டும்”.
“காட்டு பகுதி தான் எப்பொழுதும், நமக்கு பாதுகாப்பு. இப்பொழுது அங்கே செல்ல, யாரின் உதவியை நாடுவது” என்று பலமாக சிந்திக்க தொடங்கினான் பாசில்.
அவனுக்கு ஒன்று புரியவில்லை, அவனின் தந்தை கூறியது போல் அவனின் சாவு ஆதியின் கையில், என்று முன்னமே குறித்தாகி விட்டது. அது புரியாமல், ஆணவத்தில் ஆடிக் கொண்டு இருக்கிறான், தன்னை வெல்ல யாருமில்லை என்று.
ரமணனின் உதவியால், ஆதி மதியை அவனுடைய பீச் ஹௌசிற்கு அழைத்து வந்து இருந்தான். யாருக்கும் தெரியாமல், ஆதியையும், மதியையும் இங்கே அழைத்து வருவதற்குள் ரமணணிற்கு வியர்த்து விட்டது.
“டேய்! அங்க வீட்டிலே மதி இருக்கட்டும் டா, நான் பக்கா போலீஸ் பாதுகாப்பு கொடுக்கிறேன்” என்று ரமணன் சொல்லி பார்த்தும், ஆதி கேட்கவில்லை.
“அண்ணா! அவளை வீட்டில் வச்சு இருந்தா, அவன் எப்படியாவது கடத்திடுவான். கடத்தினா, நான் அவனை அடுத்து கொலை பண்ண கூட தயங்க மாட்டேன்”.
“கொஞ்சம் புரிஞ்சிக்கோ அண்ணா, நான் அடுத்து ஜெயில் போயிட்டா இவளால தான் நிம்மதியா இருக்க முடியுமா, இல்லை என்னால தான் நிம்மதியா இருக்க முடியுமா?”
“அவ்வளவு ஏன், அம்மா, அப்பா முதல இதை தாங்கிப்பாங்களா. எல்லாம் யோசிச்சிட்டு தான் அண்ணா, இந்த முடிவுக்கு வந்து இருக்கேன். இந்த பீச் ஹௌஸ் யாருக்கும் என்னோடதுன்னு தெரியாது, நம்ம தாத்தாவுக்கு அவர் நண்பர் ஒருத்தர் அவர் பெயருக்கு கிப்ட்டா வாங்கிக் கொடுத்தது”.
“ரெண்டு வருஷம் முன்னாடி தான், அப்பா இந்த விஷயத்தை என் கிட்ட சொன்னார். அதுவும் ஷூட்டிங்க்கு நான் பீச் ஹவுஸ் வாங்க போறேன்னு சொல்லும் போது தான், அப்பா என் கிட்ட இதை சொன்னார்”.
“சரின்னு அதை பார்க்க போகலாம்ன்னு இருக்கும் போது, டைரக்டர் வேற பாரின் லொகேஷன் பார்க்கலாம் சொல்லி கூட்டிட்டு போயிட்டார். அதுக்கு அப்புறம் நான் அங்கே போக வேண்டிய சூழ்நிலை இல்லை, இப்போ தான் உன் மூலமா அங்க போக போறேன், ஒளிஞ்சிக்க” என்று ஆதி கூறவும் தான், ரமணன் அடுத்து உடனே செயல்பட்டான்.
அவர்களை விட்டுவிட்டு, ரமணன் சென்ற பின்னர் ஆதி வீட்டிற்குள் சென்று மதியை தேடினான். அவளோ, அயர்ந்து கட்டிலில் ஒரு குழந்தை போல் உறங்கிக் கொண்டு இருந்தாள். அவள் அசந்து தூங்குவதை பார்த்தவன், அவளுக்கு போர்வையை சரியாக போர்த்திவிட்டு, பெட்ரூம் கதவை லேசாக சாற்றிவிட்டு வெளியே ஹால் சோபாவில் சோர்வாக வந்து அமர்ந்தான்.
வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரையும் சமாதானப்படுத்தி, மதியை இங்கு அழைத்து வர அவன் பெரும்பாடு பட்டான். அதுவும் திருமணம் முடிக்காமல், அங்கே இவளை அவன் அழைத்து செல்வது சரியாக படவில்லை.
பாரிஸ் அனுப்பும் பொழுது கூட பிரகதி, விஷ்வா, கிருஷ்ணா என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொறுப்பு கொடுத்து மதியை பாதுக்காத்து வைத்தார் காமாட்சி. ஆதியோடு தனியே சென்ற பொழுது கூட, பிரகதி அவர்களின் மேல் ஒரு கண் வைத்துக் கொண்டு தான் இருந்தாள்.
காமாட்சி, என்ன தான் மற்ற விஷயங்களில் முற்போக்காக இருந்தாலும், மகன் மருமகள் விஷயத்தில் சில கட்டுபாடுகளை விதித்து இருந்தார். அவர்கள் திருமணதிற்கு முன், தனியாக அதிக நேரம் சேர்ந்து பேசிக் கொள்ள அவர் விடவில்லை.
இப்பொழுது ஆதி, அவளை தன் பொறுப்பில் அவளை விடுமாறு கேட்கவும். முதலில் மறுத்தார். திருமணம் செய்து கொள், என்று அவர் கேட்டதற்கு கூட, அவன் எல்லா பிரச்சனை முடிந்த பிறகு திருமணம் செய்து கொள்கிறேன் என்று திட்டவட்டமாக கூறி விட்டான்.
நிறைய பேசி, சமாதானம் செய்து தான் இறுதியில் அவன் அழைத்து வர வேண்டியதாகி இருந்தது. அவன் எடுத்த முடிவிற்கு, துணையாக நின்றது மதி மட்டும் தான்.
ஆதியின் அவனின் மனநிலையை அவளை தவிர யாருக்கும், அவன் தெரியபடுத்தவில்லை. எல்லோரிடமும் மேலோட்டமாக மட்டுமே, விஷயத்தை கூறி இருந்தான். மதியிடம் மட்டுமே, அவன் வெளிப்படையாக முழு உணர்வுகளை வெளிப்படுத்தி இருந்தான்.
ஆகையால் தான், அவள் ஆதியின் முடிவிற்கு சரி என்று ஒப்புக் கொண்டு இங்கே அவனோடு வந்தது. அதை நினைத்து பார்த்தவன், அவளை நினைத்து பெருமிதம் கொண்டான்.
திருமணத்திற்கு முன்பே, கணவனின் மனநிலையை புரிந்து கொண்டு செயலாற்றும் மனைவி அமைவது என்பது வரம். அதை அவன் புரிந்து கொண்டதால், அது கொடுத்த பெருமிதம் அவன் முகத்தில் புன்னகையை வரவைத்தது.
உள்ளே அசந்து தூங்கிக் கொண்டு இருந்த மதி, சிறிது நேரத்தில் முழிப்பு வந்து எழுந்து அமர்ந்தாள். மாலை நேரத்து காற்று, அந்த அறையில் ஊடுருவி, குளிரச் செய்தது.
கடல் அலைகளின் சீற்றம், அவளை வேறு ஒரு உலகத்திற்கு அழைத்து சென்றது. தோழிகளுடன், கடல் அலைகளுடன் விளையாடியது, அவள் மனகண்ணில் மின்னி மறைந்தது. இப்பொழுது தன்னவனுடன் சேர்ந்து, அங்கே அலைகளுடன் விளையாட ஆசை கொண்டு, அவனை தேடி வெளியே வந்தாள்.
அங்கே ஹால் சோபாவில், கண்களை மூடி தன்னவளை நினைத்துக் கொண்டு இருந்தவனை பார்த்து மெதுவாக நெருங்கினாள். கனவில் அவள் பார்த்து பழகிய முகம், நனவில் அவனோடு கதைத்து இருந்தாலும், அவனோடு இருக்கும் இந்த தனிமை அவள் மனதில் அப்படி ஒரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.