• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

alagiyin kaathal thavam - 16

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

shamla

மண்டலாதிபதி
Joined
May 30, 2018
Messages
252
Reaction score
742
Location
sri lanka
super...(y)(y)(y)
waiting for next...
:):)
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
அவனோடு நிறைய பேசலாம், அவனை இன்னும் தெரிந்து கொள்ளலாம். தன்னை பற்றியும், அவன் எவ்வாறு கனவில் வளம் வந்தான் என எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ள துடித்தாள். அவனை நெருங்கியவள், அவனை வர்மா என்று பெயர் சொல்லி அழைக்கும் முன், அவன் கண்களை திறந்து அவள் கைகளை பிடித்து இழுத்து, தன் மேல் போட்டுக் கொண்டு அணைத்து இருந்தான் அவளை.

கண் மூடி திறப்பதற்குள் நடந்து முடிந்த இந்த நிகழ்வை, அவள் எதிர்பார்க்கவில்லை போலும், வாயை பிளந்து கொண்டு இருந்தாள். அவன் சிரித்துக் கொண்டே, அவள் வாயை கை விர கொண்டு மூடினான்.

“என்ன! இப்படி செய்கிறீர்கள்! நான் நீங்கள் இப்படி செய்வீர்கள் என்று நினைக்கவில்லை” என்று மீண்டும் வாய் பிளந்தவளை பார்த்து, இப்பொழுது விஷமமாக சிரித்தான்.

“அது என்ன ஷாக் ஆகும் பொழுது எல்லாம், உனக்கு உன் ஸ்டைல் மொழியே வருது போல. அப்புறம் இந்த வாயை, என் வாயை என் வாயால மூடட்டுமா அழகி” என்று கூறி கண் சிமிட்டிவிட்டு, அவளின் உதட்டை நெருங்குவது போல், அவன் வரவும் அவள் பட்டென்று வாயை மூடிக் கொண்டு, அவன் முகத்தை தள்ளிவிட்டாள்.

“இன்னைக்கு என்ன, நீங்க புதுசா இப்படி நடந்துகுறீங்க?”என்று கேட்டாள் மதி.

“பின்ன அழகான பீச் ஹவுஸ், கடல் காத்து, பக்கத்தில் என்னோட அழகி இன்னைக்கு இன்னும் அழகியா வேற இருக்கா. இப்படி இந்த ஏகாந்தத்தில் இருக்கும் பொழுது, ஒரு லிப் கிஸ் அடிக்க ஆசையா இருக்காதா என்ன” என்று அவன் வினவவும், அவள் சிரித்துக் கொண்டே அவன் மீது இருந்து எழுந்தாள்.

“இதுக்கு தான், அத்தை அனுப்ப மறுத்தாங்க. நம்மளை அவங்க நம்பி அனுப்பி இருக்காங்க, அதனால நாம இப்படி எல்லாம் இருக்க வேண்டாமே ப்ளீஸ்” என்று அவள் கெஞ்சவும், அவன் அவளை வம்பு வளர்க்க தொடங்கினான்.

“எப்படி எல்லாம் இருக்க வேண்டாம், அப்புறம் நீ சொல்லுறதை பார்த்தா அம்மா அட்வைஸ் நிறைய பண்ணி இருப்பாங்க போலயே. என்ன எல்லாம் சொல்லி விட்டாங்க, இங்க பக்கத்து சோபாவில் உட்காரலாம் அழகி, நான் நல்ல பிள்ளை ஒன்னும் பண்ண மாட்டேன்” என்று விஷம புன்னகையுடன் கூறவும், அவள் அவனுக்கு பலிப்பு காட்டிவிட்டு, அங்கு இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.

“அவங்க என்ன எனக்கு மட்டுமா சொன்னாங்க, உங்களுக்கும் தான் பெரிய அட்வைஸ் எல்லாம் கொடுத்தாங்க. சும்மா தெரியாத மாதிரி எல்லாம் கேட்க கூடாது, இப்போ என்னை கடலுக்கு கூட்டிட்டு போங்க வர்மா” என்று அவள் ஆசையாக கேட்கவும், அவன் சரி என்றான்.

இருவரும் ரெப்ரெஷ் செய்துவிட்டு, வீட்டை பூட்டிக் கொண்டு அங்கே கடல் காற்று வாங்க பீச் அருகே சென்றார்கள். சிரித்து பேசிக் கொண்டே வந்தவர்கள், ஆதிக்கு அவன் செல்பேசியில் அழைப்பு வரவும், அவளை முன்னே நடக்க சொல்லிவிட்டு, அவளை பார்த்துக் கொண்டே செல்லில் பேச தொடங்கினான்.

“கரும்புள்ளி கொண்டவனே! பயந்து பதுங்கிக் கொண்டு இருக்கிறாய் போல் தெரிகிறது. உம்மோடு அவளும் இருக்கிறாள் அல்லவா, நீ என்ன முயன்றாலும் உன்னால் அவளை காப்பாற்ற முடியாது டா”.

“நான் சபாஹ் பாசில்! ஒன்றை நினைத்து செயல்பட்டால் எனக்கு தோல்வியே கிடையாது. அவளை உன்னிடம் இருந்து, பிரித்துக் கொண்டு செல்வேனடா” என்று பாசில் மறுமுனையில் கர்ஜித்தான்.

கரும்புள்ளி! கரும்புள்ளி! அந்த வார்த்தை அது கொடுத்த வலி, வேதனை, கோபம் எல்லாம் சேர்ந்து அவனுக்கு தலைவலிக்க தொடங்கியது. கூடவே, அந்த குரல் அவனை வேறு ஒரு உலகிற்கு அழைத்து சென்றது.

செல்பேசியில் கேட்டுக் கொண்டு இருந்த விகார சிரிப்பில், மீண்டும் தன்னிலை வந்து பேச தொடங்கினான் ஆதி.

“டேய்! உன்னால என் அழகியை கடத்திட்டு போக முடியாது, அப்படியே நீ கடத்திட்டாலும், உன் சாவு என் கைல தான். ஒன்னு சொல்லுறேன் நல்லா கேட்டுக்கோ, உயிரோட இருக்கனும் நினைச்சா, ஓடிரு, இல்லை மிதிபட்டு சாவ நீ, வை டா போனை” என்று மிரட்டல் விட்டு செல்லை அணைத்தான்.

கண்களால் அவனின் அழகியை தேடியவன், அங்கே கடலை பார்க்காமல், அவள் வேறு எங்கோ வெறித்து பார்த்துக் கொண்டு இருந்ததை பார்த்து அவளருகே சென்றான்.

“அழகி! என்னாச்சு? கடலை பார்க்கணும், விளையாடனும் சொல்லி வந்துட்டு, இங்க நீ எதை இப்படி முறைச்சு பார்த்துகிட்டு இருக்க?” என்று அவன் வினவியதும், அவள் அவன் கைகளை பிடித்துக் கொண்டு, அங்கு இருந்து விறுவிறுவென்று நேராக அவர்கள் இருந்த வீட்டின் முன் வந்து நின்றாள்.

“சீக்கிரம் கதவை திறங்க வர்மா, நாம இங்க இருக்கிற ஒவ்வொரு நிமிஷமும் நமக்கு தான் ஆபத்து” என்று கூறிக் கொண்டே அவனிடம் சாவியை வாங்கிக் கொண்டு, கதவை திறந்தாள்.

“அழகி நில்லு, என்னாச்சு உனக்கு? ஏன் இப்படி பதட்டமா இருக்க?” என்று அவன் அவளை பிடித்துக் கொண்டு கேள்வி கேட்கவும் அவள் தேம்பினாள்.

“இந்த இடம் அவனோட இடம், அவனுக்கு பழக்கப்பட்ட இடம், இங்க சீக்கிரம் அவன் நம்மளை தேடி வந்திடுவான்” என்று அவள் பயத்தில் சொல்ல, அவன் முறைத்தான் அவளை.

“அது எப்படி அவ்வளவு உறுதியா சொல்லுற? அவனால நம்மளை கண்டுபிடிக்க முடியாது, நாம இருக்கிறது பூம்புகார் ல” என்று அவன் சொல்லவும், அவள் அதான் விஷயம் என்றாள்.

ஐநூறு வருடங்களுக்கு முன், இதே காவிரிபூம்பட்டினத்தில் அவன் வேந்தன் மன்னரை கொண்டு ஆட்சி புரிந்தது, அவ்வளவு சீக்கிரத்தில் அவளுக்கு மறக்குமா? அதை கண்டுபிடித்து, அவனையே கேள்வி கேட்க போய், என்னை மணம் புரிந்து கொள்ள படை எடுத்தவன் தானே அவன்.

இப்பொழுது கோபத்தில் இருக்கிறான், நரியின் தந்திரமும் சூழ்ச்சியும் அவனிடத்தில் உண்டு. அவனை தெரிந்ததால் தான், அவள் இவ்வளவு உறுதியாக கூறுகிறாள். அதையே, அவனிடமும் கூறி கிளம்ப வேண்டும் என்றாள்.

“அவனுக்கு அந்த அளவுக்கு எல்லாம், அறிவு கிடையாது” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் பொழுது, அவன் மனதில் அந்த விஷயம் பட்டது.

அவன் சரியாக திருமணத்தன்று வந்தது, இப்பொழுது சிறிது நேரத்திற்கு முன் தன்னிடம் பேசியது எல்லாம் வைத்து யோசித்து பார்த்தவனுக்கு ஒன்று புரிந்தது. எதிரி கண்காணிக்க தொடங்கி விட்டான், அவனுடன் மோத நாம் தயாராக இருக்க வேண்டும் என்று.

உடனே அங்கு இருந்து புறப்பட, அவன் எல்லா ஏற்பாடையும் செய்துவிட்டு, செல்லையும் சிம்மையும் அங்கேயே தூக்கி எறிந்துவிட்டு, அழகியோடு காரில் பயணம் செய்ய தொடங்கிவிட்டான்.

எதிரியின் தேவை மதியும், தன் உயிரும் அல்லவா? அவன் கடத்தி செல்வதை விட, நாமே அவன் இடத்திற்கு சென்றால் என்ன, என்று யோசிக்க தொடங்கிவிட்டான். அதன் படி, பாசில் மதியை கடத்தி செல்ல ஆதியே எல்லா ஏற்பாடையும் செய்து விட்டான்.

அவன் கடத்தி சென்ற ஒரு மணி நேரத்தில், சிங்கம் போல் கர்ஜித்து அவன் முன்னே நின்றான் ஆதித்ய வர்மா.

தொடரும்..
Adhi enna nee andha kulla nariku help panra?
edhu enga poyu mudiya phogudhu??‍♀
adhi veira avalavo. aveishama avan kittae ve vandhu erukan??‍♀??‍♀
innaki seithaa andha saithan ki bachaa ??? nice ud uma ????????
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top