- Joined
- Jan 17, 2018
- Messages
- 1,547
- Reaction score
- 7,648
அத்தியாயம் – 20
அங்கு இருந்த கபே ஷாப்பில், ஆதியும், மதியும் அமர்ந்து இருந்தனர். ஆதிக்கு, அவளின் இந்த மாற்றம் ஆச்சர்யம் அளித்தது. ஆள் மட்டுமா மாறி இருக்கிறாள், அவளின் பேச்சும், நடையும் அல்லவா மாறி இருக்கிறது.
“எப்படி இருக்க தர்பூஸ்? இல்லை இப்போ ஆப்பிள் பழம் மாதிரி இருக்க! எப்படி இருக்க ஆப்பிள்?” என்று சிரிப்போடு வினவினான் ஆதி.
அதில் கடுப்பானவள், கடுப்புடனே பதிலும் அளித்தாள் அவனுக்கு அப்பொழுது.
“எனக்கு என்ன, நான் நல்லா இருக்கேன் மிஸ்டர் ஆதித்ய வர்மா. நீங்க எப்படி இருக்கீங்க? உங்க கைக்கு ஸ்கிரிப்ட் கிடைச்சு இருக்கும் நினைக்கிறேன், பிடிச்சு இருந்தா பண்ணுங்க, இல்லேன்னா ட்ராப் பண்ணிடுங்க” என்று கூறிவிட்டு எழுந்து கொள்ள நினைக்கும் பொழுது, அவன் அவள் கையை பிடித்து இழுத்து உட்கார வைத்தான்.
“என்ன அவசரம்! நான் இன்னும் நிறைய கேள்வி கேட்கணும் உன் கிட்ட, சோ எல்லாத்துக்கும் உண்மையான பதிலை சொல்லு புரியுதா?” என்று அவள் கண்களை பார்த்து கூறினான் ஆதி.
அவளும் சரி, எல்லா கேள்விக்கும் பதில் சொல்லிவிட்டு செல்லலாம் என்ற முடிவுடன் அமர்ந்து விட்டாள்.
“நீ என்னை லவ் பண்ணுறியா இன்னும்?” என்று அவன் கேட்கவும், அவள் முறைத்தாள்.
“எப்போ நீங்க என்னை வேண்டாம் சொல்லி, போனீங்களோ அப்போவே உங்களை நான் மறந்துட்டேன்” என்று பட்டென்று பதில் வந்தது.
இதைக் கூறும் பொழுது, அவள் கண்களில் உள்ள வலியை பார்த்து நிதானித்தான்.
“சரி ஸ்கிரிப்ட் எனக்கு பிடிச்சு இருக்கு, சில டவுட்ஸ் இருக்கு கிளியர் பண்ணு சரியா” என்று அவன் கேட்கவும், இவளும் சரி என்றாள்.
“சோழர்கள், அவங்க ஆயிரத்தி ஐநூறு வருஷம் முன்னாடி தான இருந்தாங்க. நீ ஏன் அதுல ஐநூறு வருஷம் முன்னாடி போட்டு இருந்த?” என்று கேட்டான்.
“இது ஒன்னும் முழுசா உண்மை கதை இல்லையே, ஜஸ்ட் ஒரு பாண்டஸி! அதான் ஐநூறு வருஷம் முன்னாடி போட்டு இருந்தேன்”.
“அது மட்டும் இல்லாம, கால சக்கரம் எல்லாம் உண்மை தான். தஞ்சை கோவில் ல worm hole இருக்குன்னு, ரீசென்ட்டா கண்டு பிடிச்சு இருக்காங்க. அதே மாதிரி, ஒரு தடவை அந்த கால சக்கரம் வழியா வந்தாச்சுன்னா, திரும்ப போக முடியாது” என்று அவள் கூறவும் அவன் அதிர்ந்தான்.
“ஏய்! இங்க யாருக்காவது தெரிஞ்சா அவங்க மூலமா, ஐநூறு வருஷம் முன்னாடி போகலாம் சொல்லி இருந்தியே” என்று கேட்கவும், அவள் ஆம் என்றாள்.
“ஆமா! சொல்லி இருந்தேன்! ஆனா இங்க அப்படி யார் அவங்களை திரும்ப அழைச்சிட்டு போக முடியும்? பாசில் ஒருத்தனுக்கு தான் கால சக்கரம் வழியா போக தெரியும், அவனையும் போட்டு தள்ளியாச்சு”.
“ இங்க வேற யாருக்கும் தெரியாது, அப்புறம் எப்படி கால சக்கரம் வழியா பயணிக்க முடியும். அப்படி ஒன்னு இருக்கிறது தெரியுமே தவிர, அதுல போறதுக்கான process இன்னும் யாருக்கும் தெரியாது”.
“அப்புறம் எப்படி அவங்க, கடந்த காலத்துக்கு போக முடியும்? அது மட்டுமில்லாம எப்போவுமே, பாஸ்ட் இஸ் பாஸ்ட் தான். அதனால, அவங்க ப்ரெசென்ட் ல இருக்கிற மாதிரியே விட்டுட்டேன்” என்று அவள் கூறவும், அவன் கண்களில் ஒளி.
“சரி அப்புறம் பாசிலை ஏன் கிழவனா, முதல depict பண்ண? அப்புறம் அவங்க அப்பா கேரக்டரை, ஏன் நீ கொண்டு வந்த?” என்று கேட்டான்.
“பாண்டஸி அப்படின்னு டிசைட் பண்ணியாச்சு, அப்போ அங்க அங்க இப்படி கொடுத்தா தான படம் பார்க்க நல்லா இருக்கும்” என்று கூறியவளை பார்த்து சிரித்தான்.
“உனக்கு படம் பார்க்க பிடிக்கும் அப்படின்ற விஷயத்தையே, நான் மறந்துட்டேன். உன் கற்பனையை எல்லாம் நல்லா தூவி இருக்க, ஆமா நீ ஏன் இதை ஸ்க்ரிப்டா எடுத்து எழுதி என் கிட்ட கொடுத்த?”
“உனக்கு அப்போ என் மேல, லவ் இன்னும் இருக்கு தான பொய் சொல்லாத” என்று அவன் கண் சிமிட்டி கேட்கவும், அந்த கண் சிமிட்டலில் அவளுக்கு முகம் சிவந்தது.
சிவந்த முகத்தை மறைக்க, அவள் தலையை குனிந்து கொண்டு தண்ணீர் எடுத்துக் குடித்தாள். அவள் தலையை குனியும் பொழுதே, அவன் கவனித்து விட்டான் அவளின் சிவந்த முகத்தை.
“இன்னும் எவ்வளவு நேரம், இப்படி என்னை ஏமாத்துறன்னு பார்க்குறேன் தர்பூஸ். உனக்கு ஆப்பிள் விட, தர்பூஸ் பெயர் தான் ரொம்ப பொருத்தமா இருக்கு” என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டான் ஆதி.
“சரி அதை விடு, அது என்ன ஆதி + மதி = மாதி? இதுக்கு என்ன அர்த்தம்?” என்று அவன் வினவவும், மீண்டும் தடுமாறினாள்.
“ஹையோ! இதை எப்படி மறந்தேன்? இவர் கிட்ட பேசுற ஆசையில், ஓடி வந்தது தப்பா போச்சு. மதி! தப்பிக்கிறதுக்கு வழியை பாரு டி” என்று தனக்குள் புலம்பிக் கொண்டு இருந்தவளை, ஆதி உலுக்கி அவளை நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தான்.
“சாரி! நான் கிளம்பனும், பை!” என்று சொல்லிக் கொண்டு எழும் பொழுது, அவன் இவள் கையை பிடித்து இழுக்கவும், தடுமாறி அவன் மீது விழுந்தாள்.
விழுந்ததோடு அல்லாமல், அவன் இதழில் அழுத்தமாக முத்தமும் பதித்தாள். அதிர்ச்சியில், அவளுக்கு அடுத்து என்ன செய்வதென்று கூட புரியவில்லை.
ஆதிக்குமே அதிர்ச்சி தான், பிடித்து நிறுத்த வேண்டும் என்று நினைத்து தான் அவளை பிடித்து இழுத்தான். ஆனால், அவள் இப்படி தடுமாறி தன்னை கீழே விழ வைத்ததோடு அல்லாமல், அவளும் விழுந்து இதழில் முத்தம் பதிக்கவும் அதிர்ந்தான்.
இருவரின் கண்களும், ஒன்றோடு ஒன்று சந்தித்து அதிர்ச்சியை அப்பட்டமாக வெளிபடுத்தியது. அதற்குள், அங்கே சிலர் இதை படம் பிடிக்கவும், சுதாரித்து அவளை எழுப்பி விட்டதோடு அல்லாமல், அவனும் எழுந்தான்.
“மதி! நான் உன் கிட்ட பேசணும், ப்ளீஸ் வா என் கூட” என்று ஆதி அழைக்கவும், மறுத்தாள்.
“இல்லை, இப்போ நான் உங்க கூட இருக்கிறது சரியா படல எனக்கு. கீர்த்தனா, உங்களை நம்பி இருக்காங்க” என்று கூறியவளை பார்த்து வெறித்தான்.
“அப்போ எனக்கு நிச்சயம் நடந்தது வரை, உனக்கு தெரிஞ்சு இருக்கு. குண்டா இருந்த நீ எனக்காக தான மெலிஞ்ச, ஏன் டி இப்போ கூட நீ என்னை விரும்புறன்னு சொல்ல மாட்டேங்குற? சொல்லு டி” என்று இறுதியில் கர்ஜிக்கவும், அவள் அழுது சிவந்த கண்களோடு திரும்பினாள்.
“ஆமா! நான் உங்களை தான் லவ் பண்ணுறேன். இப்போவும், எப்போவும் உங்களை மட்டுமே தான் லவ் பண்ணுவேன். நான் உங்களுக்காக வெயிட் குறைக்கல, நீங்க என்னை கடைசி வரைக்கும் ஏத்துக்காம இருந்தது ல தான் எனக்கு மூச்சு விட முடியாம போய் ரெண்டு வருஷமா ஆஸ்பத்திரியில் இருந்தேன்”.
“உங்களுக்கு தெரியுமான்னு தெரியல, நான் சென்சிடிவ் டைப். நீங்க அன்னைக்கு உன்னை நான் திரும்பியே பார்க்க நினைக்கல, என்னை பின் தொடராதன்னு சொல்லிட்டு போனதுல இருந்து, நான் நானா இல்லை”
“மதர் தான் என்னை, ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போனாங்க. அப்புறம் அங்க தான் ரெண்டு வருஷம் இருந்தேன், எங்க இருந்தாலும் உங்க நினைப்பை மட்டுமே தான் சுமந்துகிட்டு இருந்தேன்”.
“உங்களை பார்க்கணும் அப்படின்ற ஆசையில் தான், அன்னைக்கு நீங்க இருந்த அந்த பப்க்கு வந்தேன். நீங்க அங்க ஒரு பேப்பர் ல சோழர் பத்தின விஷயம் எழுதிகிட்டு இருந்தீங்க, அப்போவே நீங்க அதை வச்சு தான் அடுத்த படம் எடுக்க போறீங்கன்னு தெரிஞ்சிகிட்டேன்”.
“அப்புறம் தான் நான் தேடி எடுத்து படிச்சு, இந்த ஸ்கிரிப்ட் ரெடி பண்ணேன். ஒவ்வொரு நிமிஷமும், நீங்க எங்க இருக்கீங்கன்னு தெரிஞ்சு உங்களை தான் நான் பின் தொடர்ந்தேன்”.
“இப்போ இருக்கிற காலகட்டம், அந்த ஸ்கிரிப்ட் ல இருந்தது எல்லாம் உங்களை follow பண்ணும் பொழுது எழுதினது தான். உங்களுக்காக எழுதினதை உங்க கிட்ட கொடுக்கணும்னு தோனுச்சு, அதான் கொடுத்துட்டு கிளம்ப முடிவு பண்ணி, இப்போ கிளம்புறேன்” என்று கூறிவிட்டு, விறுவிறுவென்று நடக்க தொடங்கியவளை இமைக்க மறந்து பார்த்தான்.
ஒரு பெண்ணால், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தன்னை விரும்ப முடியுமா? முடியும் என்று நிருபித்து காட்டிவிட்டு சென்று கொண்டு இருந்தாள் அவனின் தர்பூஸ்.
அப்பொழுது அவனுக்கு, அவனின் அன்னையிடம் இருந்து அழைப்பு வந்தது. அவன் யார் பேசுகிறார்கள் என்று கவனிக்காமல், போனை எடுத்து ஹலோ என்றான்.
“டேய் கண்ணா! நீ எங்க இருக்க? கொஞ்சம் வீட்டுக்கு வா டா, முக்கியமான விஷயம் பேசணும்” என்று அவர் கூறவும், அவன் சரி என்றான்.
அவன் முடிவு செய்துவிட்டான், தர்பூஸ் தான் அவனின் வாழ்க்கை துணை என்று. அவளை இனியும் வேண்டாம் என்று சொல்ல, அவன் என்ன முட்டாளா?.
நேராக அவள் டிக்கெட் எடுக்க நிற்கும் கவுன்டரில் இருந்தவளை, இவன் கை பிடித்து இழுத்துக் கொண்டு வெளியே வந்தான். அங்கே எல்லோரும், வேடிக்கை பார்த்தனரே தவிர, என்னவென்று கேட்டு யாரும் முன் வரவில்லை.
காரணம் அவனை சுற்றி, அவனது பாதுகாவலர்கள் அவன் நிழல் போல் தொடர்ந்து கொண்டு இருந்தனர். இவளோ, அவனிடம் இருந்து விடுபட போராடிக் கொண்டு இருந்தாள்.
“ச்சு! சத்தம் போடாம வா” என்று அவன் அதட்டல் போடவும், அந்த அதட்டல் வேலை செய்தது.
அவன் காரை வேகமாக ஒட்டிக் கொண்டு, அவனின் வீட்டிற்கு சென்றான். அவனுக்கு, அப்பொழுது அம்மாவிடம் இவளை பற்றி எல்லாம் சொல்லி, திருமணம் உடனே செய்ய எண்ணி இருந்தான்.
எங்கு விட்டால், சொல்லாமல் திரும்பவும் ஓடி விடுவாளோ என்று அஞ்சினான். ஆகையால், அவளை அழைத்துக் கொண்டு, ஒரு முடிவுடன் வீட்டிற்கு சென்றான். வீட்டின் முன் காரை நிறுத்திவிட்டு, அவளை வெளியே நிற்க வைத்துவிட்டு இவன் மட்டுமே உள்ளே சென்றான்.
அங்கே வீட்டில், அவனின் அன்னை கவலையே உருவாக அமர்ந்து இருந்ததை பார்த்து, அவரின் கவலையை போக்க வேண்டும் முதலில் தாயை நெருங்கி, அவரிடம் என்னவென்று கேட்டான்.
“அந்த பொண்ணு கீர்த்தனா, வேற யாரையோ கல்யாணம் பண்ணிட்டாளாம் டா. அவங்க வீட்டுல, இவளை வற்புறுத்தி தான் ஒத்துக்க வச்சு இருந்து இருக்காங்க”.
“காட்டின அத்தனை பொண்ணுங்களை, இவளை தான் பிடிச்சு இருக்கு சொன்ன. நல்லா விசாரிக்காம, உனக்கு பிடிச்சு இருக்குன்னு சொல்லவும் தான் தெரிஞ்ச குடும்பம் தான அப்படின்னு நிச்சயம் பண்ணோம் டா”.
அங்கு இருந்த கபே ஷாப்பில், ஆதியும், மதியும் அமர்ந்து இருந்தனர். ஆதிக்கு, அவளின் இந்த மாற்றம் ஆச்சர்யம் அளித்தது. ஆள் மட்டுமா மாறி இருக்கிறாள், அவளின் பேச்சும், நடையும் அல்லவா மாறி இருக்கிறது.
“எப்படி இருக்க தர்பூஸ்? இல்லை இப்போ ஆப்பிள் பழம் மாதிரி இருக்க! எப்படி இருக்க ஆப்பிள்?” என்று சிரிப்போடு வினவினான் ஆதி.
அதில் கடுப்பானவள், கடுப்புடனே பதிலும் அளித்தாள் அவனுக்கு அப்பொழுது.
“எனக்கு என்ன, நான் நல்லா இருக்கேன் மிஸ்டர் ஆதித்ய வர்மா. நீங்க எப்படி இருக்கீங்க? உங்க கைக்கு ஸ்கிரிப்ட் கிடைச்சு இருக்கும் நினைக்கிறேன், பிடிச்சு இருந்தா பண்ணுங்க, இல்லேன்னா ட்ராப் பண்ணிடுங்க” என்று கூறிவிட்டு எழுந்து கொள்ள நினைக்கும் பொழுது, அவன் அவள் கையை பிடித்து இழுத்து உட்கார வைத்தான்.
“என்ன அவசரம்! நான் இன்னும் நிறைய கேள்வி கேட்கணும் உன் கிட்ட, சோ எல்லாத்துக்கும் உண்மையான பதிலை சொல்லு புரியுதா?” என்று அவள் கண்களை பார்த்து கூறினான் ஆதி.
அவளும் சரி, எல்லா கேள்விக்கும் பதில் சொல்லிவிட்டு செல்லலாம் என்ற முடிவுடன் அமர்ந்து விட்டாள்.
“நீ என்னை லவ் பண்ணுறியா இன்னும்?” என்று அவன் கேட்கவும், அவள் முறைத்தாள்.
“எப்போ நீங்க என்னை வேண்டாம் சொல்லி, போனீங்களோ அப்போவே உங்களை நான் மறந்துட்டேன்” என்று பட்டென்று பதில் வந்தது.
இதைக் கூறும் பொழுது, அவள் கண்களில் உள்ள வலியை பார்த்து நிதானித்தான்.
“சரி ஸ்கிரிப்ட் எனக்கு பிடிச்சு இருக்கு, சில டவுட்ஸ் இருக்கு கிளியர் பண்ணு சரியா” என்று அவன் கேட்கவும், இவளும் சரி என்றாள்.
“சோழர்கள், அவங்க ஆயிரத்தி ஐநூறு வருஷம் முன்னாடி தான இருந்தாங்க. நீ ஏன் அதுல ஐநூறு வருஷம் முன்னாடி போட்டு இருந்த?” என்று கேட்டான்.
“இது ஒன்னும் முழுசா உண்மை கதை இல்லையே, ஜஸ்ட் ஒரு பாண்டஸி! அதான் ஐநூறு வருஷம் முன்னாடி போட்டு இருந்தேன்”.
“அது மட்டும் இல்லாம, கால சக்கரம் எல்லாம் உண்மை தான். தஞ்சை கோவில் ல worm hole இருக்குன்னு, ரீசென்ட்டா கண்டு பிடிச்சு இருக்காங்க. அதே மாதிரி, ஒரு தடவை அந்த கால சக்கரம் வழியா வந்தாச்சுன்னா, திரும்ப போக முடியாது” என்று அவள் கூறவும் அவன் அதிர்ந்தான்.
“ஏய்! இங்க யாருக்காவது தெரிஞ்சா அவங்க மூலமா, ஐநூறு வருஷம் முன்னாடி போகலாம் சொல்லி இருந்தியே” என்று கேட்கவும், அவள் ஆம் என்றாள்.
“ஆமா! சொல்லி இருந்தேன்! ஆனா இங்க அப்படி யார் அவங்களை திரும்ப அழைச்சிட்டு போக முடியும்? பாசில் ஒருத்தனுக்கு தான் கால சக்கரம் வழியா போக தெரியும், அவனையும் போட்டு தள்ளியாச்சு”.
“ இங்க வேற யாருக்கும் தெரியாது, அப்புறம் எப்படி கால சக்கரம் வழியா பயணிக்க முடியும். அப்படி ஒன்னு இருக்கிறது தெரியுமே தவிர, அதுல போறதுக்கான process இன்னும் யாருக்கும் தெரியாது”.
“அப்புறம் எப்படி அவங்க, கடந்த காலத்துக்கு போக முடியும்? அது மட்டுமில்லாம எப்போவுமே, பாஸ்ட் இஸ் பாஸ்ட் தான். அதனால, அவங்க ப்ரெசென்ட் ல இருக்கிற மாதிரியே விட்டுட்டேன்” என்று அவள் கூறவும், அவன் கண்களில் ஒளி.
“சரி அப்புறம் பாசிலை ஏன் கிழவனா, முதல depict பண்ண? அப்புறம் அவங்க அப்பா கேரக்டரை, ஏன் நீ கொண்டு வந்த?” என்று கேட்டான்.
“பாண்டஸி அப்படின்னு டிசைட் பண்ணியாச்சு, அப்போ அங்க அங்க இப்படி கொடுத்தா தான படம் பார்க்க நல்லா இருக்கும்” என்று கூறியவளை பார்த்து சிரித்தான்.
“உனக்கு படம் பார்க்க பிடிக்கும் அப்படின்ற விஷயத்தையே, நான் மறந்துட்டேன். உன் கற்பனையை எல்லாம் நல்லா தூவி இருக்க, ஆமா நீ ஏன் இதை ஸ்க்ரிப்டா எடுத்து எழுதி என் கிட்ட கொடுத்த?”
“உனக்கு அப்போ என் மேல, லவ் இன்னும் இருக்கு தான பொய் சொல்லாத” என்று அவன் கண் சிமிட்டி கேட்கவும், அந்த கண் சிமிட்டலில் அவளுக்கு முகம் சிவந்தது.
சிவந்த முகத்தை மறைக்க, அவள் தலையை குனிந்து கொண்டு தண்ணீர் எடுத்துக் குடித்தாள். அவள் தலையை குனியும் பொழுதே, அவன் கவனித்து விட்டான் அவளின் சிவந்த முகத்தை.
“இன்னும் எவ்வளவு நேரம், இப்படி என்னை ஏமாத்துறன்னு பார்க்குறேன் தர்பூஸ். உனக்கு ஆப்பிள் விட, தர்பூஸ் பெயர் தான் ரொம்ப பொருத்தமா இருக்கு” என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டான் ஆதி.
“சரி அதை விடு, அது என்ன ஆதி + மதி = மாதி? இதுக்கு என்ன அர்த்தம்?” என்று அவன் வினவவும், மீண்டும் தடுமாறினாள்.
“ஹையோ! இதை எப்படி மறந்தேன்? இவர் கிட்ட பேசுற ஆசையில், ஓடி வந்தது தப்பா போச்சு. மதி! தப்பிக்கிறதுக்கு வழியை பாரு டி” என்று தனக்குள் புலம்பிக் கொண்டு இருந்தவளை, ஆதி உலுக்கி அவளை நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தான்.
“சாரி! நான் கிளம்பனும், பை!” என்று சொல்லிக் கொண்டு எழும் பொழுது, அவன் இவள் கையை பிடித்து இழுக்கவும், தடுமாறி அவன் மீது விழுந்தாள்.
விழுந்ததோடு அல்லாமல், அவன் இதழில் அழுத்தமாக முத்தமும் பதித்தாள். அதிர்ச்சியில், அவளுக்கு அடுத்து என்ன செய்வதென்று கூட புரியவில்லை.
ஆதிக்குமே அதிர்ச்சி தான், பிடித்து நிறுத்த வேண்டும் என்று நினைத்து தான் அவளை பிடித்து இழுத்தான். ஆனால், அவள் இப்படி தடுமாறி தன்னை கீழே விழ வைத்ததோடு அல்லாமல், அவளும் விழுந்து இதழில் முத்தம் பதிக்கவும் அதிர்ந்தான்.
இருவரின் கண்களும், ஒன்றோடு ஒன்று சந்தித்து அதிர்ச்சியை அப்பட்டமாக வெளிபடுத்தியது. அதற்குள், அங்கே சிலர் இதை படம் பிடிக்கவும், சுதாரித்து அவளை எழுப்பி விட்டதோடு அல்லாமல், அவனும் எழுந்தான்.
“மதி! நான் உன் கிட்ட பேசணும், ப்ளீஸ் வா என் கூட” என்று ஆதி அழைக்கவும், மறுத்தாள்.
“இல்லை, இப்போ நான் உங்க கூட இருக்கிறது சரியா படல எனக்கு. கீர்த்தனா, உங்களை நம்பி இருக்காங்க” என்று கூறியவளை பார்த்து வெறித்தான்.
“அப்போ எனக்கு நிச்சயம் நடந்தது வரை, உனக்கு தெரிஞ்சு இருக்கு. குண்டா இருந்த நீ எனக்காக தான மெலிஞ்ச, ஏன் டி இப்போ கூட நீ என்னை விரும்புறன்னு சொல்ல மாட்டேங்குற? சொல்லு டி” என்று இறுதியில் கர்ஜிக்கவும், அவள் அழுது சிவந்த கண்களோடு திரும்பினாள்.
“ஆமா! நான் உங்களை தான் லவ் பண்ணுறேன். இப்போவும், எப்போவும் உங்களை மட்டுமே தான் லவ் பண்ணுவேன். நான் உங்களுக்காக வெயிட் குறைக்கல, நீங்க என்னை கடைசி வரைக்கும் ஏத்துக்காம இருந்தது ல தான் எனக்கு மூச்சு விட முடியாம போய் ரெண்டு வருஷமா ஆஸ்பத்திரியில் இருந்தேன்”.
“உங்களுக்கு தெரியுமான்னு தெரியல, நான் சென்சிடிவ் டைப். நீங்க அன்னைக்கு உன்னை நான் திரும்பியே பார்க்க நினைக்கல, என்னை பின் தொடராதன்னு சொல்லிட்டு போனதுல இருந்து, நான் நானா இல்லை”
“மதர் தான் என்னை, ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போனாங்க. அப்புறம் அங்க தான் ரெண்டு வருஷம் இருந்தேன், எங்க இருந்தாலும் உங்க நினைப்பை மட்டுமே தான் சுமந்துகிட்டு இருந்தேன்”.
“உங்களை பார்க்கணும் அப்படின்ற ஆசையில் தான், அன்னைக்கு நீங்க இருந்த அந்த பப்க்கு வந்தேன். நீங்க அங்க ஒரு பேப்பர் ல சோழர் பத்தின விஷயம் எழுதிகிட்டு இருந்தீங்க, அப்போவே நீங்க அதை வச்சு தான் அடுத்த படம் எடுக்க போறீங்கன்னு தெரிஞ்சிகிட்டேன்”.
“அப்புறம் தான் நான் தேடி எடுத்து படிச்சு, இந்த ஸ்கிரிப்ட் ரெடி பண்ணேன். ஒவ்வொரு நிமிஷமும், நீங்க எங்க இருக்கீங்கன்னு தெரிஞ்சு உங்களை தான் நான் பின் தொடர்ந்தேன்”.
“இப்போ இருக்கிற காலகட்டம், அந்த ஸ்கிரிப்ட் ல இருந்தது எல்லாம் உங்களை follow பண்ணும் பொழுது எழுதினது தான். உங்களுக்காக எழுதினதை உங்க கிட்ட கொடுக்கணும்னு தோனுச்சு, அதான் கொடுத்துட்டு கிளம்ப முடிவு பண்ணி, இப்போ கிளம்புறேன்” என்று கூறிவிட்டு, விறுவிறுவென்று நடக்க தொடங்கியவளை இமைக்க மறந்து பார்த்தான்.
ஒரு பெண்ணால், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தன்னை விரும்ப முடியுமா? முடியும் என்று நிருபித்து காட்டிவிட்டு சென்று கொண்டு இருந்தாள் அவனின் தர்பூஸ்.
அப்பொழுது அவனுக்கு, அவனின் அன்னையிடம் இருந்து அழைப்பு வந்தது. அவன் யார் பேசுகிறார்கள் என்று கவனிக்காமல், போனை எடுத்து ஹலோ என்றான்.
“டேய் கண்ணா! நீ எங்க இருக்க? கொஞ்சம் வீட்டுக்கு வா டா, முக்கியமான விஷயம் பேசணும்” என்று அவர் கூறவும், அவன் சரி என்றான்.
அவன் முடிவு செய்துவிட்டான், தர்பூஸ் தான் அவனின் வாழ்க்கை துணை என்று. அவளை இனியும் வேண்டாம் என்று சொல்ல, அவன் என்ன முட்டாளா?.
நேராக அவள் டிக்கெட் எடுக்க நிற்கும் கவுன்டரில் இருந்தவளை, இவன் கை பிடித்து இழுத்துக் கொண்டு வெளியே வந்தான். அங்கே எல்லோரும், வேடிக்கை பார்த்தனரே தவிர, என்னவென்று கேட்டு யாரும் முன் வரவில்லை.
காரணம் அவனை சுற்றி, அவனது பாதுகாவலர்கள் அவன் நிழல் போல் தொடர்ந்து கொண்டு இருந்தனர். இவளோ, அவனிடம் இருந்து விடுபட போராடிக் கொண்டு இருந்தாள்.
“ச்சு! சத்தம் போடாம வா” என்று அவன் அதட்டல் போடவும், அந்த அதட்டல் வேலை செய்தது.
அவன் காரை வேகமாக ஒட்டிக் கொண்டு, அவனின் வீட்டிற்கு சென்றான். அவனுக்கு, அப்பொழுது அம்மாவிடம் இவளை பற்றி எல்லாம் சொல்லி, திருமணம் உடனே செய்ய எண்ணி இருந்தான்.
எங்கு விட்டால், சொல்லாமல் திரும்பவும் ஓடி விடுவாளோ என்று அஞ்சினான். ஆகையால், அவளை அழைத்துக் கொண்டு, ஒரு முடிவுடன் வீட்டிற்கு சென்றான். வீட்டின் முன் காரை நிறுத்திவிட்டு, அவளை வெளியே நிற்க வைத்துவிட்டு இவன் மட்டுமே உள்ளே சென்றான்.
அங்கே வீட்டில், அவனின் அன்னை கவலையே உருவாக அமர்ந்து இருந்ததை பார்த்து, அவரின் கவலையை போக்க வேண்டும் முதலில் தாயை நெருங்கி, அவரிடம் என்னவென்று கேட்டான்.
“அந்த பொண்ணு கீர்த்தனா, வேற யாரையோ கல்யாணம் பண்ணிட்டாளாம் டா. அவங்க வீட்டுல, இவளை வற்புறுத்தி தான் ஒத்துக்க வச்சு இருந்து இருக்காங்க”.
“காட்டின அத்தனை பொண்ணுங்களை, இவளை தான் பிடிச்சு இருக்கு சொன்ன. நல்லா விசாரிக்காம, உனக்கு பிடிச்சு இருக்குன்னு சொல்லவும் தான் தெரிஞ்ச குடும்பம் தான அப்படின்னு நிச்சயம் பண்ணோம் டா”.