சில நொடிகள் அப்படியே கிடந்தவன் பின் அவளை விட்டு விலகி தன் கரங்களால் அவள் கன்னங்களை தாங்கிக் கொண்டு,
“எனக்கு தெரியும்... நீ கோபத்திலதான் அப்படி ஒரு வார்த்தையை சொன்னன்னு... ஆனா அந்த வார்த்தை என்னை கொல்லாம கொன்னுடுச்சு... அப்போதான் புரிஞ்சிது... செக்ஸ்ன்னா என்ன ? கற்புன்னா என்னன்னு... நீ சொன்ன வார்த்தையே என்னால தாங்கிக்க முடியல... ஆனா நான்... அப்படிதானே ஒரு வாழ்கையை வாழ்ந்திட்டு இருந்திருக்கேன்... அதை இப்போ யோசிக்கும் போது... எனக்கு ரொம்ப டிஸ்கஸ்டிங்கா இருக்கு... நான் உனக்கு தகுதியானவன் இல்லயோன்னு” என்று அவன் மேலே பேச முடியாமல் அவள் முகத்தைத் தவிப்பாய் பார்க்க,
“அப்படின்னா... என்னை விட்டுட போறியா?!” என்றவள் உடனடியாய் கேட்கவும் அவன் அதிர்ந்து போனான்.
“நெவர்... என்னால உன்னை எந்தக் காரணத்தை கொண்டும் விட்டுக்கொடுக்க முடியாது” என்றவன் சொல்லி முடித்து மறுகணம் அவள் அவன் மீது சாய்ந்து கொண்டு,
“அப்புறம் இன்னாத்துக்கு இந்த தகுதி மண்ணாங்கட்டியை பத்தியெல்லாம் நீ பேசிட்டிருக்க” என்றாள்.
“கில்டியா இருக்கேடி” என்றவன் வருத்தமாய் சொல்ல,
“ம்ம்கும்... இப்ப வருத்தப்பட்டு... முன்னாடியே இதெல்லாம் யோசிச்சிருக்கணும்”
“அப்போ எனக்கு இந்த மேரேஜ் மாறி கமிட்மென்ட்ல எல்லாம் சுத்தமா நம்பிக்கை இல்ல” என்றான்.
“இதேதான் அந்த இஷிகாவும் என்கிட்ட சொன்னா... அதோட இன்னொன்னும் சொன்னா பாரு” என்றவள் கடுப்பாக,
“என்ன?” என்று யோசனையோடு கேட்டான்.
“ஹ்ம்ம்... நீ அடங்காத குதிரையாம்... ரொம்ப நாளைக்கு உன்னை இப்படி கட்டி வைச்சி மேய்க்க முடியாதாம்... சொல்லிட்டு போறா... அந்த” என்று வீரா வாயிற்குள்ளேயே ஒரு கெட்ட வார்த்தையை கோபமாய் முனக,
“ரிலாக்ஸ்... அவ சொன்னதும் உண்மைதான்... ஆனா நீதான் சாரதிக்கே சாரதியாச்சே!” என்றவன் அவளை இன்னும் இறுக்கமாய் இழுக்க அவள் வெட்க புன்னகையோடு தலைகவிழ்ந்து, “போயா” என்றபடி அவன் மார்பில் முகம் புதைத்து கொண்டாள்.
அவள் முகத்தை நிம்ர்தியவன், “இப்படியே எவ்வளவு நேரம்டி பேசிக்கிட்டு இருக்கிறது” என்றவன் ஹஸ்கி குரலில் சொல்லி அவள் உதடுகளை தம் உதடுகளால் உரசி கொண்டிருந்தான்.
அவளோ சன்னமாய், “இப்போ கணேஷ் போஃன் பண்ணனும்” என்றவள் சொல்ல அவன் அதிர்ந்து,
“ஏன்....?. நல்லாதானே போயிட்டிருக்கு” என்றான்.
“இல்ல... போஃன் பண்ணா” என்றவள் அவன் கழுத்தை தம் கரங்களால் வளைத்துப் பிடித்து கொள்ள,
“switched off” என்று சொல்லி அவள் இதழ்களை தம் இதழ்களால் அழுந்த மூடினான்.
அதற்குப் பின் ஒருவருக்குள் ஒருவர் தொலைந்து தொலை தூரம் கடந்து போயினர். (subscribers cannot be reached at the moment)
இம்முறை அவளை உரிமையாக்கிக் கொள்ள வேண்டுமென்ற வேகம் அவனிடம் இல்லை. அவளுக்குள் தனை தொலைத்துக் கொள்ள வேண்டுமென்ற காதலும் தாபமுமே அதீதமாய் இருந்தது.
*********
மீண்டும் இஷிகா நாராயணசுவாமி பற்றிய பேச்சுக்கள் தொலைக்காட்சிகளில் பரபரப்பாகிக் கொண்டிருந்தன. இம்முறையும் இஷிகாவின் சார்பாகப் பேசியவர்கள்தான் அதிகம். அதற்குக் காரணம் அவள் சமீபத்தில் ஓர் சேனலுக்கு கொடுத்த பரபரப்பு பேட்டிதான்.
யாரும் தன்னை போல் பாதிக்கப்பட கூடாது என்பதற்காகவே தான் அனுபவித்த பாலியல் சீண்டல்களைச் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டதாகவும்... இப்போது அதற்காக என் மீது வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது இந்த சமுதாயத்தில் பெண்களின் அவல நிலை என்றாள்.
மேலும் அந்த வழக்கையும் எதிர்கொள்ளத் தான் தயாராக இருக்கிறேன். தன்னால் முடிந்த வரை இதை நீதிமன்றத்திலும் உண்மையென்று நிரூபிக்க முயல்வேன் என்று அவள் தைரியமாகவும் தெளிவாகவும் சிறு தடுமாற்றமும் இல்லாமல் சொல்ல, அவள் சொல்வது உண்மையாக இருக்கக் கூடும் என்று அவளுக்கு எதிராகப் பேசியவர்கள் கூட எண்ண ஆரம்பித்தனர்.
சரத்திற்கும் அரவிந்திற்கும் இஷிகாவின் துணிச்சல் மிரட்சி கொள்ள வைத்தது. அதுவும் சில மாதர் சங்கங்கள் வேறு அவளுக்காகப் போர் கொடி பிடிக்க, கேஸ் கோர்ட்டில் தீர்ப்பாவதற்குள் நிலைமை அவர்கள் பக்கமே சிக்கலாகிவிடுமோ என்று தோன்றவைத்தது. அவர்கள் வியாபாரத்தையும் இது பாதிக்க செய்யலாம்.
ஆதலாலேயே சரத் நேரடியாய் இஷிகாவை தொடர்பு கொண்டு, அவள் வீட்டிலேயே அவளைச் சந்தித்து பேச அனுமதிபெற்றான். அந்த வீட்டின் மேல்மாடியில் ஓர் சிறு தோட்டமே குடியிருந்தது. அந்த இடமெங்கும் வண்ண மலர்களின் அணிவகுப்புகள்... அதனை சரத் கண்டுகளித்தபடி, “beautiful!!” என்று பாராட்ட,
“தேங்க்ஸ்” என்று சொல்லி அவளும் முகம் மலர்ந்தாள்.
அதன் பின் அவன் அவளின் புறம் திரும்பி... அவள் அழகை ஆழ்ந்து ரசிக்கலானான்.
“அந்த மலர்களுக்கும் உனக்கும் பெரிய வித்தியாசமே தெரியல்ல” என்றவன் சொல்ல,
“பேச வந்த விஷயத்தைப் பத்தி மட்டும் பேசலாமே” என்று இஷிகா பளிச்சென்று கேட்டாள்.
சரத் முறுவலித்து, “உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கு அத நீயே ஏன் கெடுத்துக்க பார்க்கிற” என்க, “என்ன சொல்ல வரீங்க... புரியல” என்றாள்.
அவன் மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டு, “எனக்கு தெரியும்... அந்த சாரதிதான் உன் பின்னாடி இருக்கான்னு... ஆனா அவன் எவ்வளவு தூரம் உனக்கு சப்போர்ட் பன்னுவான்னு நீ நினைக்கிற... பேசாம நான் சொல்றத கேளு... கோர்ட்ல ஒழுங்கா சாரதிதான் உன்னை மிரட்டி இப்படி செய்ய சொன்னான்னு சொல்லிடு... உனக்கும் பிரச்சனை வராம நான் பாத்துக்கிறேன்” என்றான் சாமர்த்தியமாக!
அவள் உடனே, “யாரு சாரதி? ஒ!! எஸ் எஸ்... அந்த சாரதி டெக்ஸ்டைல்ஸ் ஓனர் இல்ல” என்றவள் கேட்க,
“நல்லாவே நடிக்கிற” என்று அடக்கிய கோபத்தோடு சரத் பேசினான்.
“அதானே என் தொழிலே” என்று எகத்தாளமாய் அவனை பார்த்து புன்னகையித்தாள் இஷிகா!
“நான் சொல்றத புரிஞ்சிக்கோ இஷிகா... இந்த கேஸ் ஒன்னு விளையாட்டில்ல... உன் இமேஜ்... இதுவரைக்கும் நீ சம்பாதிச்ச சொத்துன்னு எல்லாம் உன் கையை விட்டு போயிடும்... இன்னும் கேட்டா... நீ இந்த கேஸ்ல தோத்துட்டா... வெளிய தலை காட்ட கூட முடியாது... தேவையில்லாம அந்த சாரதியை நம்பி நீ சிக்கல மாட்டிக்காத... சொல்லிட்டேன்” என்றவன் மேலும்,
“மோரோவேர்... உனக்கு என்னை தேவைன்னு சொல்லு... நான்அதை செய்றேன்” என்று தீவிரமாய் சொல்லி முடித்தான்.
“அப்படின்னா... இந்த கேஸ வாபஸ் வாங்குங்க” என்றாள்.
அவன் அதிர்ச்சியுற்று, “அது முடியாது” என்க,
“அப்போ பிரச்சனை உங்க குடும்பத்துக்குத்தான்” என்றாள் அவள்!
“புரியாம பேசாத... எல்லா பிரச்சனையும் உனக்குதான்... ஒழுங்கு மரியாதையா நான் சொல்றத நீ கேட்டன்னா... உனக்கு எந்த பிரச்சனையும் வராம நான் பாத்துகிறேன்” என்று அவன் சற்று மிரட்டலாய் உரைத்தான்.
ஆனால் அவளிடத்தில் கொஞ்சம் கூட பதட்டம் இல்லை. புன்னகை ததும்ப அவனை நோக்கியவள்,”ரிலாக்ஸ் பாஸ்... நீங்க பாட்டுக்கு இப்படியெல்லாம் மிரட்டினிங்கன்னா... நான் பாட்டுக்கு மன உளைச்சளுக்காளாகி... சூசைட் பண்ண ட்ரை பண்ணிட்டேனா, ஐயோ! அப்புறம் உங்க நிலைமை” என்றவள் பதட்டம் கொள்வது போல் முகத்தை மாற்றிக் கொண்டு சொல்ல அவனுக்கு வியர்த்துவிட்டது.
சரத்தின் பொறுமை தகர்ந்து போக, “என்னடி மிரட்டிறியா ?” என்று கோபமாய் கேட்க,
“சேச்சே! லெட்டர்லாம் எழுதி... அல்ரெடி குடுத்து வைச்சிருக்கேன் பாஸ்... அது யாருன்னு நான் சொல்ல வேண்டிய அவசியமில்லன்னு நினைக்கிறேன்” என்று சொல்ல அவனுக்கு தூக்குவாரி போட்டது.
அவன் அதிர்ச்சியில் மௌனமாய் நிற்க அவளோ, “பேசமா கேசை வாபஸ் வாங்குங்க... அதான் உங்களுக்கு நல்லது” என்றாள் திட்டவட்டமாக!
அதற்கு மேல் அவனால் அவளிடம் எதுவும் பேச முடியவில்லை. அப்படியே பேசினால் ஏதேனும் வம்பில் முடிந்து விடுமோ என்று அச்சம் தொற்றி கொண்டது அவனுக்கு.
அவள் வீட்டிலிருந்து புறப்பட்ட சரத் இந்த விஷயத்தை அரவிந்திடம் தெரிவிக்க, அவனுக்கு கதிகலங்கியது.
“அந்த இஷிகா ஜஸ்ட் மிரட்டிறாரா அரவிந்த்” என்று சரத் சொல்ல,
“இல்ல மாமா... சாரதி அவளுக்குப் பின்னாடி இருந்து ப்ளே பண்ணிட்டு இருக்கான்... அவ சொல்ற மாதிரி ஏதாச்சும் லெட்டர் கிட்டர் இருந்து... அந்த சாரதியே அவளைப் போட்டு தள்ளிட்டு நம்ம பேர்ல பழியை போட்டா” என்று அரவிந்த் பதட்டம் கொண்டான். சரத் அவனிடம் பொறுமையாக இருக்கச் சொல்ல... அரவிந்திற்கோ மீண்டும் பெரியளவில் அவனிடம் தோற்று போக விருப்பமில்லை.
அதுவும் இஷிகாவுக்கு பின்னணியில் சாரதி இருந்து அவளை கைபொம்மைமையாக ஆட்டுவிக்கும் பட்சத்தில் இஷிகாவின் வார்த்தைகள் வெறும் மிரட்டல்தான் என்று இருவராலும் அலட்சிய படுத்த முடியவில்லை. சாரதி எதையும் செய்ய கூடியவன்!
வழக்கு நீதிமன்றத்தில் வெல்வதற்கு முன்னதாக ஏதேனும் ஏடாகூடமாய் நிகழ்ந்துவிட்டால் என்று அவர்களுக்குள் அச்சம் பரவ, இருவரும் நிறைய விவாதங்களுக்குப் பின் ஒரு மனதாய் அந்த வழக்கை வாபஸ் பெற்றனர். கிட்டதட்ட அதுவும் பெரும் சர்ச்சையை மீடியாக்களில் கிளப்பியிருந்தன. நாராயணசுவாமிக்கு உடல்நிலை மோசமாய் இருப்பதால் இந்த வழக்கை நடத்த முடியாத நிலையென்று ஒருவாறு சமாளித்து விட்டனர்.
சரத் இம்முறை நேரடியாகவே சாரதியின் புத்திசாலித்தனத்தைக் கண்டு பிரமித்து போயிருந்தான். அரவிந்திற்கு இது பழகியிருந்தாலும் கஜினியை போல் சாரதி மீதான படையெடுப்பை அவன் நிறுத்தத் தயாராயில்லை
சாரதி சரியாய் காய்களை நகர்த்தி அவர்கள் ஆரம்பித்த விளையாட்டை அவர்களையே முடிக்க வைத்துவிட்டான். அதுவே அவனின் புத்திக்கூர்மை! மொத்தத்தில் அவன் குறி இப்போதும் தப்பவில்லை. ஆனால் என்றுமே அப்படி இருந்துவிடும் என்று சொல்வதற்கில்லை
**********************
சாரதியின் வீடு
அந்தச் சமையலறை அல்லோலகல்லோலப்பட்டு கொண்டிருந்தது. முத்து ஒருவாரமாய் விடுமுறையில் சென்றிருக்க, சமையல் வேலையே தானே முன்வந்து கவனித்து கொண்டாள் வீரா!
அருமை என்றளவுக்கு அவள் சமையல் இல்லையெனினும் கொடுமை என்றும் சொல்வதற்கில்லை. ஏதோ சமைப்பாள்... ஆனால் அந்த ஏதோவை கூடச் செய்யவிடாமல் அவளை பாடாய்ப்படுத்தி கொண்டிருந்தான் அவள் ஆருயிர் மணாளன்.
சமைத்துக் கொண்டிருந்தவள் பின்னோடு நின்று அவன் தன் சரசலீலைகளை புரிய, “உன்னை யாருய்யா இவ்வளவு சீக்கிரம் ஆபீசில இருந்து வர சொன்னது” என்றவள் கடுப்பாக,
“அது என் அபீஸ்டி... நான் எப்ப வேணா போவேன்.. எப்ப வேணா வருவேன்” என்றவன் சொல்லி... அவன் மேற்கொண்ட சீண்டல்களிலும் அவனைப் பொருட்படுத்தாமல் அவள் தன் வேலையிலேயே மும்முரமாய் இருந்தாள். அவனோ அவள் வேலையை கெடுப்பதிலேயே மும்முரமாய் இருந்தான். அதன் விளைவாக அவள் கிண்ணத்தில் கொட்ட எண்ணிய மைதா மாவு சிந்தாமல் சிதறாமல் அந்தச் சமையல் மேடையில் மாக்கோலமாய் மாறியது.
“போடாங்” என்று அவனைத் தள்ளிவிட்டு கோபமாய் அவனை அவள் முறைக்கவும், “கொஞ்ச நேரம் எனக்கு... ஒத்தழைச்சிருந்த இப்படியெல்லாம் நடந்திருக்காதில்ல டார்லிங்” என்று சொல்லி வஞ்சமாய் புன்னகயித்தான்.
“எனக்கு நல்லா வாயில வந்திர போகுது...சொல்லிட்டேன்” என்று ஆவேசமானவள் அந்த அலங்கோலமாய் கிடந்த மேடையைக் காண்பித்து,
“நான் இதை எப்போ சுத்தம் செஞ்சி... எப்போ சமைச்சி... போயா... ஒரு வேலையை இப்படி பத்து வேலையாக்கிட்டியே” என்று அலுத்து கொண்டாள்.
“சாரதி சொல்றத கேட்கலன்னா இப்படிதான்” என்றவன் அலட்சியமாய் தோள்களை குலுக்க,
“இப்ப இன்னா வேணும் உனக்கு” என்று கேட்டாள் வீரா!