Monisha
அமைச்சர்
- Joined
- Jan 17, 2018
- Messages
- 3,233
- Reaction score
- 58,772
ஹாய் மக்களே!
வீரா சாரதியின் பயணம் முடிவை நோக்கி... இன்னும் எத்தனை பதிவுகள் என்று சரியாக சொல்ல தெரியவில்லை. ஆனால் விரைவில்... வர போகும் பதிவுகள் சற்று கனமாக இருக்கும். இதுவரை உங்களின் துணையோடு இந்த கதையை வெற்றிகரமாக எழுதிவிட்டேன். இனிவரும் பதிவுகளுக்கும் அதே அளவுக்காய் கருத்தையும் ஊக்கத்தையும் தருவீர்களாக.
இதோ உங்களின் பதிவு...
************************----******************
வீரா சாரதியின் பயணம் முடிவை நோக்கி... இன்னும் எத்தனை பதிவுகள் என்று சரியாக சொல்ல தெரியவில்லை. ஆனால் விரைவில்... வர போகும் பதிவுகள் சற்று கனமாக இருக்கும். இதுவரை உங்களின் துணையோடு இந்த கதையை வெற்றிகரமாக எழுதிவிட்டேன். இனிவரும் பதிவுகளுக்கும் அதே அளவுக்காய் கருத்தையும் ஊக்கத்தையும் தருவீர்களாக.
இதோ உங்களின் பதிவு...
************************----******************
கார் போஸ்ட்கம்பத்தில் இடித்துப் பெரும் சத்தம் எழ, சாரதியுமே இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவன் ஒருவாறு சுதாரித்துக் கொண்டுவிட,
அவன் பார்வை அந்த நொடி வீராவின் நலனைப் பற்றி எண்ணி பதட்டத்தோடு அவள் புறம் திரும்பியது.
அவளோ இடித்த வேகத்தில் ஸ்டியரிங்கில் தலை முட்டி சாய்ந்துக் கிடந்தாள். அவன் பதட்டத்தோடு அவள் தலையை நிமிர்த்த... அவளோ நெற்றியில் குருதி வடிந்த வண்ணம் மயக்க நிலையில் கிடந்தாள்.
அவன் துரிதமாய் செயல்பட்டு அவளைப்
பின் இருக்கையில் கிடத்திவிட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான்.
சில நிமிடங்களில் அவள் மயக்கம் தெளிந்தது. இருப்பினும் அவள் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை. ஏதோ சொல்லவொண்ணா தவிப்பும் வேதனையும் அவள் முகத்தில் குடியிருக்க, அதனை அவன் விழிகளும் கவனிக்கலாயின.
இருவரும் சிகிச்சைக்குப் பின் வீட்டிற்கு திரும்ப.... அவளோ கனத்த மௌனத்தை சுமந்துக் கொண்டே அவனுடன் வந்தாள். அவனும் அவள் மௌனத்தைக் கலைக்க முற்படவில்லை.
வீட்டை அடைந்ததும் அவள் காயத்தைப் பார்த்து அவள் தங்கைகளும் தெய்வானையும் பதற, அவர்களை ஓரிரு வார்த்தைகள் சொல்லித் தேற்றியவள்... பின் தன் அறைக்குள் புகுந்து கொண்டாள்.
இரவு உணவை கூட தெய்வானை கட்டாயப்படுத்திய ஓரே காரணத்தால் விருப்பமே இல்லாமல் கொஞ்சமாய் உண்டாள்.
சாரதி தள்ளி நின்று அவள் மனநிலையை ஆராய்ந்தானே ஒழிய... நடந்தேறிய விஷயம் குறித்து எந்தவித விளக்கமும் அவளிடம் கேட்கவில்லை.
ஆனால் அவளிடம் அது பற்றிப் பேச எண்ணியவன் தன் அறைக்குள் நுழைய... அவளோ படுக்கையில் விழிமூடி படுத்திருந்தாள். அவள் உறங்கிவிட்டாளா என்று எண்ணும் பொழுதே அவள் விழிகள் மூடியவாறே கண்ணீரை சுரந்து கொண்டிருந்தன.
"வீரா" என்றவன் அழைக்கவும் அவள் வேகமாய் தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டுவிட,
"என்னாச்சு டி?" என்றவன் அவள் தலைமாட்டில் அமர்ந்து கொண்டு கேட்க, "ஒண்ணும் இல்லையே" என்று அவள் பதிலளித்துவிட்டு திரும்பிப் படுத்துக் கொண்டாள்.
அவள் எதையோ மறைக்க முற்படுகிறாள் என்பது அவனுக்கு அப்பட்டமாய் தெரிந்தது.
அவன் அவசரமாய் அவளைத் தன் புறம் திருப்பி, "என்னடி பிரச்சனை?! சொல்லுடி" என்று அவன் படபடப்போடு கேட்க, அவள் உள்ளம் என்னமோ அவனிடம் சொல்லிவிடத்தான் தவித்தது. ஆனால் என்ன செய்ய? அவளுக்கு அந்த விஷயத்தை அவனிடம் சொல்லதான் துணிவு வரவில்லை.
அவள் எதையோ சொல்ல முடியாமல் தவிக்கிறாள் என்பதை அவள் முகபாவனைகள் கொண்டே கணித்தவன்,
"உன் கஷ்டத்தை என்கிட்ட சொல்லக் கூடாதா?" என்றவன் அவள் தாடையை நிமிர்த்தி அவள் முகத்தை ஆழமாய் ஊடுருவிப் பார்க்க, அவள் மனம் கலவரப்பட்டது.
அவன் பார்வையில் சிக்குண்டவள் தன்னை அறியாமல் சொல்லி விட வாய்திறந்து பின் அது ஏனோ முடியாமல் அவன் அணைப்பிலிருந்து விலகி வந்தாள்.
"வீரா... ப்ளீஸ் சொல்லு" என்று அவன் அவள் தோள் மீது கரம் பதிக்க, அவள் இப்போது கோபமாகி, "என்ன சொல்லணும்... சொல்றதுக்கெல்லாம் எதுவுமில்லை" என்று கடினமான குரலோடு உரைத்தாள்.
"சரி... சொல்ல வேண்டாம்... ஆனா அங்க உன் பேரைக் கூப்பிட்டவர் யாருன்னு சொல்லு... நான் தெரிஞ்சுக்கணும்" என்றவன் அழுத்தமாய்க் கேட்க, அவள் அதிர்ந்து மௌனமானாள். அவன் மீண்டும்,
"யாரு அது வீரா?" என்று கேட்டு அவளை ஆழ்ந்து பார்க்க,
"எனக்குத் தெரியாது" என்று சொல்லி விருட்டென அந்த அறையை விட்டு வெளியேறிவிட அவள் எத்தனிக்க... அவன் பாய்ந்து வந்து அவள் கரத்தை பிடித்துத் தடுத்துவிட்டான்.
இயலாமையோடு, "விடுய்யா கையை" என்றவள் தவிப்புற, "முடியாது... சொல்லிட்டுப் போ" என்றான்.
"என்னைப் போட்டு படுத்தாதய்யா... எனக்கு அந்த ஆள பத்தி பேச இல்ல... நினைக்க கூட வேணாம்" என்றவள் விழிகள் கனலை கக்கிய அதே நேரம் நீரை ஊற்றாகப் பெருக்கியது.
அவள் ஏதோ ஆழமாய் காயப்பட்டு இருக்கிறாள் என்பதை உணர்ந்தவன் அதன் பின் இன்னும் தீர்க்கமாய் அந்த விஷயத்தைத் தெரிந்து கொண்டே ஆக வேண்டும் என்ற முடிவோடு, "அப்படி என்னடி பிரச்சனை அவருக்கும் உனக்கும்... இப்ப நான் தெரிஞ்சுகிட்டே ஆகணும்... நீயா சொல்றியா இல்ல நானே விசாரிச்சிக்கவா?!" என்றவன் அழுத்தமாய் வினவ,
அவளோ கண்ணீர் உறைந்த நிலையில் அவன் வார்த்தைகளைக் கேட்டு ஸ்தம்பித்தாள்.
"நீ எதையோ நினைச்சு இந்தளவுக்கு வேதனை படுறன்னா... ஸாரி வீரா..அதை என்னால அப்படியே விட முடியாது... இன்னைக்கு நான் உனக்கிட்ட பார்த்த பதட்டத்தையும் பயத்தையும் வேற என்னைக்கும் பார்த்ததே இல்ல... உனக்கு மட்டும் எதாவது ஆயிருந்தா... சத்தியமா நான் என்ன ஆயிருப்பேன்னு... எனக்கே தெரியல" என்று அழுத்தமாய் கண்ணீர் நிரம்பிய விழிகளோடு அவன் சொல்லி முடிக்கும் போதே அவள் தேகம் சிலிர்த்தது.
அவனை இமைக்காமல் சில நொடிகள் பார்த்துக் கொண்டு நின்றவள், "உனக்கு அந்த ஆள் யாருன்னு தெரியனும்... அவ்வளவுதானே?!" என்று விரக்தியான பார்வையோடு கேட்க அவனோ பதில் பேசாமல் தீர்க்கமான பார்வையோடு தலையை மட்டும் அசைத்து வைத்தான்.
அவள் மூச்சை இழுத்து விட்டுக் கொண்டு, "என்னை எங்க அம்மா... அந்த... ப்ப்ப்பன்னாடைக்குத் தான் பெத்துப் போட்டா" என்றவள் வார்த்தைகளைக் கடித்துத் துப்ப,
அவன் அதிர்வோடு, "அப்போ... அவர் உங்க அப்பாவா?!" என்றான்.
அவள் தன் செவிகளை இறுக மூடிக் கொண்டு, "அந்த பரதேசிய போய் எனக்கு அப்பன்னு சொல்லாத... செத்துரலாம் போல இருக்கு" என்றவள் சத்தமிட்டுக் கத்திவிட, அவனுக்கு சில நொடிகள் பேசுவதற்கு வார்த்தை வரவில்லை.
அவன் மெலிதாக, "அவர் குடிப்பாரு... அதனால உனக்கு அவரை பிடிக்காதுன்னு தங்கச்சிங்க ஒருதடவை சொன்னாங்க... ஆனா நீ டென்ஷனாகுறத பார்த்தா" என்றவன் நிறுத்திவிட்டு அவளைக் கூர்ந்து பார்த்தான்.
"ஆமா குடிகாரன்தான்... குடிச்சி குடிச்சி எங்க அம்மா வாழ்க்கையை நாசம் பண்ணதோட இல்லாம.... அந்த ஆளு சே! சொல்லவே அசிங்கமா இருக்கு..." என்று ஆக்ரோஷமாய் உரைத்தவள் பட்டென நிறுத்தி அவனைப் பார்த்து,
"அந்த பொறுக்கி குடிபோதைல ஒருநாள் தூங்கிட்டிருந்த என்கிட்ட தப்பா... நடந்துக்க பார்த்தான்" என்றவள் சொல்லி குலுங்கி அழ ஆரம்பித்தாள்.
அவள் சொன்னதை கேட்டு திடுக்கிட்டவன் அவள் அழுகையை பார்த்துப் பொறுக்க முடியமால் அவளை தன்னோடு சேர்த்து இறுக்கமாய் அணைத்துக் கொண்டான்.
வார்த்தைகளால் அவளுக்கு தேறுதல் சொல்ல முடியும் என்று அவனுக்கு தோன்றவில்லை. அப்படி சொல்லவும் முடியாது. அவள் வேதனையை வாங்கி கொள்ள முடியாவிட்டாலும் அதனை தாங்கிக் கொள்ளவாவது முடியுமா என்ற தவிப்பு அவனுக்கு!
மௌனமாய் அவளை அணைத்துக் கொண்டிருந்தான். மென்மையாய் அதே நேரத்தில் அழுத்தமாய் இருந்த அவன் அணைப்பில் மெழுகு போல் இறுகியிருந்த அவள் உணர்வுகள் நெருப்பிலிட்டது போல் உருகிக் கண்ணீராய் கரைந்தோடிக் கொண்டிருந்தன என்று சொன்னால் மிகையாகாது.
அழுது அழுது ஓய்ந்தவள் சில மணித்துளிகளில் மனபாரம் லேசாக அவன் தோளிலேயே உறங்கியும் போனாள்.
******
அவன் பார்வை அந்த நொடி வீராவின் நலனைப் பற்றி எண்ணி பதட்டத்தோடு அவள் புறம் திரும்பியது.
அவளோ இடித்த வேகத்தில் ஸ்டியரிங்கில் தலை முட்டி சாய்ந்துக் கிடந்தாள். அவன் பதட்டத்தோடு அவள் தலையை நிமிர்த்த... அவளோ நெற்றியில் குருதி வடிந்த வண்ணம் மயக்க நிலையில் கிடந்தாள்.
அவன் துரிதமாய் செயல்பட்டு அவளைப்
பின் இருக்கையில் கிடத்திவிட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான்.
சில நிமிடங்களில் அவள் மயக்கம் தெளிந்தது. இருப்பினும் அவள் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை. ஏதோ சொல்லவொண்ணா தவிப்பும் வேதனையும் அவள் முகத்தில் குடியிருக்க, அதனை அவன் விழிகளும் கவனிக்கலாயின.
இருவரும் சிகிச்சைக்குப் பின் வீட்டிற்கு திரும்ப.... அவளோ கனத்த மௌனத்தை சுமந்துக் கொண்டே அவனுடன் வந்தாள். அவனும் அவள் மௌனத்தைக் கலைக்க முற்படவில்லை.
வீட்டை அடைந்ததும் அவள் காயத்தைப் பார்த்து அவள் தங்கைகளும் தெய்வானையும் பதற, அவர்களை ஓரிரு வார்த்தைகள் சொல்லித் தேற்றியவள்... பின் தன் அறைக்குள் புகுந்து கொண்டாள்.
இரவு உணவை கூட தெய்வானை கட்டாயப்படுத்திய ஓரே காரணத்தால் விருப்பமே இல்லாமல் கொஞ்சமாய் உண்டாள்.
சாரதி தள்ளி நின்று அவள் மனநிலையை ஆராய்ந்தானே ஒழிய... நடந்தேறிய விஷயம் குறித்து எந்தவித விளக்கமும் அவளிடம் கேட்கவில்லை.
ஆனால் அவளிடம் அது பற்றிப் பேச எண்ணியவன் தன் அறைக்குள் நுழைய... அவளோ படுக்கையில் விழிமூடி படுத்திருந்தாள். அவள் உறங்கிவிட்டாளா என்று எண்ணும் பொழுதே அவள் விழிகள் மூடியவாறே கண்ணீரை சுரந்து கொண்டிருந்தன.
"வீரா" என்றவன் அழைக்கவும் அவள் வேகமாய் தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டுவிட,
"என்னாச்சு டி?" என்றவன் அவள் தலைமாட்டில் அமர்ந்து கொண்டு கேட்க, "ஒண்ணும் இல்லையே" என்று அவள் பதிலளித்துவிட்டு திரும்பிப் படுத்துக் கொண்டாள்.
அவள் எதையோ மறைக்க முற்படுகிறாள் என்பது அவனுக்கு அப்பட்டமாய் தெரிந்தது.
அவன் அவசரமாய் அவளைத் தன் புறம் திருப்பி, "என்னடி பிரச்சனை?! சொல்லுடி" என்று அவன் படபடப்போடு கேட்க, அவள் உள்ளம் என்னமோ அவனிடம் சொல்லிவிடத்தான் தவித்தது. ஆனால் என்ன செய்ய? அவளுக்கு அந்த விஷயத்தை அவனிடம் சொல்லதான் துணிவு வரவில்லை.
அவள் எதையோ சொல்ல முடியாமல் தவிக்கிறாள் என்பதை அவள் முகபாவனைகள் கொண்டே கணித்தவன்,
"உன் கஷ்டத்தை என்கிட்ட சொல்லக் கூடாதா?" என்றவன் அவள் தாடையை நிமிர்த்தி அவள் முகத்தை ஆழமாய் ஊடுருவிப் பார்க்க, அவள் மனம் கலவரப்பட்டது.
அவன் பார்வையில் சிக்குண்டவள் தன்னை அறியாமல் சொல்லி விட வாய்திறந்து பின் அது ஏனோ முடியாமல் அவன் அணைப்பிலிருந்து விலகி வந்தாள்.
"வீரா... ப்ளீஸ் சொல்லு" என்று அவன் அவள் தோள் மீது கரம் பதிக்க, அவள் இப்போது கோபமாகி, "என்ன சொல்லணும்... சொல்றதுக்கெல்லாம் எதுவுமில்லை" என்று கடினமான குரலோடு உரைத்தாள்.
"சரி... சொல்ல வேண்டாம்... ஆனா அங்க உன் பேரைக் கூப்பிட்டவர் யாருன்னு சொல்லு... நான் தெரிஞ்சுக்கணும்" என்றவன் அழுத்தமாய்க் கேட்க, அவள் அதிர்ந்து மௌனமானாள். அவன் மீண்டும்,
"யாரு அது வீரா?" என்று கேட்டு அவளை ஆழ்ந்து பார்க்க,
"எனக்குத் தெரியாது" என்று சொல்லி விருட்டென அந்த அறையை விட்டு வெளியேறிவிட அவள் எத்தனிக்க... அவன் பாய்ந்து வந்து அவள் கரத்தை பிடித்துத் தடுத்துவிட்டான்.
இயலாமையோடு, "விடுய்யா கையை" என்றவள் தவிப்புற, "முடியாது... சொல்லிட்டுப் போ" என்றான்.
"என்னைப் போட்டு படுத்தாதய்யா... எனக்கு அந்த ஆள பத்தி பேச இல்ல... நினைக்க கூட வேணாம்" என்றவள் விழிகள் கனலை கக்கிய அதே நேரம் நீரை ஊற்றாகப் பெருக்கியது.
அவள் ஏதோ ஆழமாய் காயப்பட்டு இருக்கிறாள் என்பதை உணர்ந்தவன் அதன் பின் இன்னும் தீர்க்கமாய் அந்த விஷயத்தைத் தெரிந்து கொண்டே ஆக வேண்டும் என்ற முடிவோடு, "அப்படி என்னடி பிரச்சனை அவருக்கும் உனக்கும்... இப்ப நான் தெரிஞ்சுகிட்டே ஆகணும்... நீயா சொல்றியா இல்ல நானே விசாரிச்சிக்கவா?!" என்றவன் அழுத்தமாய் வினவ,
அவளோ கண்ணீர் உறைந்த நிலையில் அவன் வார்த்தைகளைக் கேட்டு ஸ்தம்பித்தாள்.
"நீ எதையோ நினைச்சு இந்தளவுக்கு வேதனை படுறன்னா... ஸாரி வீரா..அதை என்னால அப்படியே விட முடியாது... இன்னைக்கு நான் உனக்கிட்ட பார்த்த பதட்டத்தையும் பயத்தையும் வேற என்னைக்கும் பார்த்ததே இல்ல... உனக்கு மட்டும் எதாவது ஆயிருந்தா... சத்தியமா நான் என்ன ஆயிருப்பேன்னு... எனக்கே தெரியல" என்று அழுத்தமாய் கண்ணீர் நிரம்பிய விழிகளோடு அவன் சொல்லி முடிக்கும் போதே அவள் தேகம் சிலிர்த்தது.
அவனை இமைக்காமல் சில நொடிகள் பார்த்துக் கொண்டு நின்றவள், "உனக்கு அந்த ஆள் யாருன்னு தெரியனும்... அவ்வளவுதானே?!" என்று விரக்தியான பார்வையோடு கேட்க அவனோ பதில் பேசாமல் தீர்க்கமான பார்வையோடு தலையை மட்டும் அசைத்து வைத்தான்.
அவள் மூச்சை இழுத்து விட்டுக் கொண்டு, "என்னை எங்க அம்மா... அந்த... ப்ப்ப்பன்னாடைக்குத் தான் பெத்துப் போட்டா" என்றவள் வார்த்தைகளைக் கடித்துத் துப்ப,
அவன் அதிர்வோடு, "அப்போ... அவர் உங்க அப்பாவா?!" என்றான்.
அவள் தன் செவிகளை இறுக மூடிக் கொண்டு, "அந்த பரதேசிய போய் எனக்கு அப்பன்னு சொல்லாத... செத்துரலாம் போல இருக்கு" என்றவள் சத்தமிட்டுக் கத்திவிட, அவனுக்கு சில நொடிகள் பேசுவதற்கு வார்த்தை வரவில்லை.
அவன் மெலிதாக, "அவர் குடிப்பாரு... அதனால உனக்கு அவரை பிடிக்காதுன்னு தங்கச்சிங்க ஒருதடவை சொன்னாங்க... ஆனா நீ டென்ஷனாகுறத பார்த்தா" என்றவன் நிறுத்திவிட்டு அவளைக் கூர்ந்து பார்த்தான்.
"ஆமா குடிகாரன்தான்... குடிச்சி குடிச்சி எங்க அம்மா வாழ்க்கையை நாசம் பண்ணதோட இல்லாம.... அந்த ஆளு சே! சொல்லவே அசிங்கமா இருக்கு..." என்று ஆக்ரோஷமாய் உரைத்தவள் பட்டென நிறுத்தி அவனைப் பார்த்து,
"அந்த பொறுக்கி குடிபோதைல ஒருநாள் தூங்கிட்டிருந்த என்கிட்ட தப்பா... நடந்துக்க பார்த்தான்" என்றவள் சொல்லி குலுங்கி அழ ஆரம்பித்தாள்.
அவள் சொன்னதை கேட்டு திடுக்கிட்டவன் அவள் அழுகையை பார்த்துப் பொறுக்க முடியமால் அவளை தன்னோடு சேர்த்து இறுக்கமாய் அணைத்துக் கொண்டான்.
வார்த்தைகளால் அவளுக்கு தேறுதல் சொல்ல முடியும் என்று அவனுக்கு தோன்றவில்லை. அப்படி சொல்லவும் முடியாது. அவள் வேதனையை வாங்கி கொள்ள முடியாவிட்டாலும் அதனை தாங்கிக் கொள்ளவாவது முடியுமா என்ற தவிப்பு அவனுக்கு!
மௌனமாய் அவளை அணைத்துக் கொண்டிருந்தான். மென்மையாய் அதே நேரத்தில் அழுத்தமாய் இருந்த அவன் அணைப்பில் மெழுகு போல் இறுகியிருந்த அவள் உணர்வுகள் நெருப்பிலிட்டது போல் உருகிக் கண்ணீராய் கரைந்தோடிக் கொண்டிருந்தன என்று சொன்னால் மிகையாகாது.
அழுது அழுது ஓய்ந்தவள் சில மணித்துளிகளில் மனபாரம் லேசாக அவன் தோளிலேயே உறங்கியும் போனாள்.
******