lakshmi2407
அமைச்சர்
AVAV -09 (01)
க்ராஸ் டாக்::
"என்ன சுக்கிரா?, பொன்மயமான உன் தேகம் மலர்ந்த சிரிப்பால் மேலும் பொலிவுடன் காணப்படுகிறதே? அப்படி என்ன மகிழ்ச்சி?", தேவகுருவான பிரகஸ்பதி கேட்க....
"த்ரிவிக்ரமன், நங்கை நல்லாளின் பிணக்கு தங்கள் பார்வை மகிமையோ என்னவோ, இப்போது தீர்ந்து விட்டதே?", என்று அர்த்தபுஷ்டியுடன் சிரிக்க....
"அசுரகுருவே, இது தாற்காலிகம் என்பது தமக்கு தெரியும், இன்னமும் அத்தம்பதிகள் கடக்கவேண்டியவை அதிகமென்பதும் அறிவோம், அங்கே நாடகம் நடக்கிறது, அவரவர் வினைப்பயன்.... நிகழ்வுகளைத் தீர்மானிக்கிறது, நாம் வெறும் பார்வையாளர்கள். அவ்வளவே"
"ஆம் பிரகஸ்பதி.. நன்றாகச் சொன்னீர், வினைப்படி விதி என்றிருக்க.... பழியோ நம் தலையில்.. ஆ!!! ஆ!! இது என்ன தேஜோமயம்?"
"ஆஹா.. லக்ஷ்மிதேவி யாரைக் கடாக்ஷிக்க இத்தனை வேகமாய் விரைகிறார்?
"நாம் பார்த்துக் கொண்டிருந்தோமே ஒரு பெண், அவள்தான் நம் கதையின் நாயகி.. அவளை மேலும் கனக புஷ்பராகத்தினால் அலங்கரிக்க திருமகளே செல்கிறாள் என்றால், அவள் கட்டத்தை என்னவென்று சிலாகிக்க?"
"ஓ..அப்படியானால், தனகாரகன் வலுக்கிறானா?",
"ஆம், சுக்கிரா, இனி அப்பெண் தொட்டதெல்லாம் பொன்னாய் மாறும். ஆனால்... ம்ஹ்ஹ்.. சரி .... வருகிறேன்", சிறிது புருவம் சுருக்கி, பெருமூச்சுடன் பிரஹஸ்பதி அவர் வீட்டினுள் செல்ல....
"ம்ம்ம்... புரிகிறது குருவே, தேவர்களாகிய நமக்கு எதிர்காலம் குறித்த ஞானம் இருப்பது எத்தனை பெரிய சாபம் என்று இப்போது தெரிகிறது. இல்லையெனில், மகிழ்வோடு பேச்சை ஆரம்பித்தார் நாம், பின் நிகழ்வு தெரிந்ததால்... சோகமானோம் . ஆனாலும் இந்த தேவலோகத்தையே இரண்டாக்கப் போகும் ஜாதகக் கட்டங்கள் கொண்டவளல்லவா, அச்சிறுபெண்?", மனதுக்குள்ளே பேசியபடி.... அவரும் நடையைக் கட்டினார்.
இவர்கள் இருவரும் வார்த்தையாடிக்கொண்டிருந்த அம்மரத்தின் கிளையில் இருந்து கிளியின் ரூபத்தில் அமர்ந்திருந்த நாரதர் கீழிறங்கி சுய ரூபத்தை அடைந்தார்... "ஏதேது ? புலம்பல் திலகங்கள் ஆகி விட்டனரே இவர்கள்?..இப்பெண் பேசப்போகும் பேச்சில் சிக்கி சின்னாபின்னமாகப்போகும் சிற்றம்பலத்தான், த்யானத்தில் இருக்க... அவரையே தீயென தகிக்கப்போகும் தில்லை பெருமாட்டியோ, அவர்தம் பிள்ளைகளை நர்சரிக்கு அனுப்புவதில் மும்மரமாய இருக்கிறார். ஒரு எட்டு சென்று பார்த்தே செல்வோம். நாராயண... நாராயண.."
பெரிய மாளிகையின் முன் நின்று, நாரதர் காலிங் பெல்லை அமுக்க... "கதவு திறந்துதான் இருக்கு. யாராயிருந்தாலும் உள்ள வாங்க", தேன் குரலில் அழைப்பு வேகமாய் வர... வீட்டினுள் நுழைந்தார்.
"நான்தான் தாயே, நாரதன் வந்துள்ளேன்",என்க..
"ஒரு பத்து நிமிடம் பொறு நாரதா, காலை எட்டு மணிக்குள் இவர்களை நர்சரிக்கு அனுப்ப வேண்டும், சின்னவனோ மலைவாசி, தேனும் தினையும், பழங்களும் வேண்டுமென்கிறான், பெரியவனோ, அபார பசி கொண்டவன். மோதகம் கொழுக்கட்டை, அப்பம், அவல்,பொரி என்று வரிசை கட்டுகிறான் . இவர்களை சாப்பிட வைத்து , கிளப்பி அனுப்புவதற்குள் என் பிராணன் போகிறது. சற்று அமர்ந்திரு, லன்ச் பாக்ஸ் தயார் செய்து வருகிறேன்.", என பார்வதி உரைக்க..
அங்கே ஷூக்களோடு மல்லுக்கட்டிய இளைய குமாரரை பார்த்து, "அப்பா எங்கே குமரா?"
"அவர் பேச்சை இழுக்காதே நாரதா, கொழுக்கட்டைக்கு மாவு பூரணம் இரண்டும் தயார். சற்று சொப்பு செய்துத்தாருங்கள் என்றேன், அடுத்த நொடி, குளியலறை சென்று கங்கை ஸ்நானம் செய்து... கச்சம் கட்டி த்யானத்தில் அமர்ந்து விட்டார். பிள்ளைகள் செல்லட்டும், பிறகு வைத்துக்கொள்கிறேன் அவரை.. ", பதில் நறநறத்த பற்களுக்கிடையே அடுக்களையிலிருந்து கோபமாய் வந்தது. ஆளைக்காணோம், இன்னமும் குரலை மட்டும்தான் அனுப்பிக்கொண்டிருந்தார். "ஆஹா அயனான சமயத்தில் வந்து விட்டோமோ", என்று நாரதர் நினைத்தார்.
சற்றே குண்டான பெரிய பிள்ளை, பள்ளி செல்லத் தயாராகி ஓடிவர.. வீடு அதிர்ந்தது. "அண்ணா சற்று மெதுவாய் வா.., நாரதர் பூகம்பமோ என்று பயப்படுகிறார்", குறுநகையுடன் சொன்ன சிறுவன் தமிழ்க்கடவுள் குமரன்.
"டாட், மாம், பை", ஒருமித்த குரலில் கூறி தத்தம் வாகனங்களில் பள்ளி சென்றனர். "உஷ்...", நெற்றி வியர்வையை துடைத்து, "வா நாரதா.. பார்த்தாயா காலை நேர பரபரப்பை..? சின்னதாய் ஒரு உதவி கேட்டால், உலகைப்படைத்தவர், ஓடிச்சென்று த்யானத்தில் அமர்கிறார். இவரே இப்படி இருப்பதால்தான் , இவர் படைத்த மனிதனும்.. இவரை பின் பற்றுகிறான் .. க்ஹும், எல்லாம் நேரம்"
"இப்போது பரவாயில்லை தேவி முன்புக்கு இப்போ நிறைய மாறி இருக்காங்க. சரி தேவி, பிள்ளைகள் அன்னை சரஸ்வதியிடமா பாடம் பயில சென்றுள்ளனர்?"
"அடடே, உனக்கு விஷயமே தெரியாதா?, லியனார்டோ டாவின்சி என்று ஒரு பல்கலைவித்தகர் இங்கே நம் காலனிக்கு அருகே குடிவந்துள்ளார். ஆங்கிலத்தில் கரை கண்டவராம், ஓவியத்தில் இருந்து, ராக்கெட் சயின்ஸ் வரை தெரிந்தவராம், இந்த அறிவியல் மேதை பற்றி சரஸ்வதி என்னிடம் கூறி, பிள்ளைகளுக்கு இரு வார சிறப்பு வகுப்பிற்கும் ஏற்பாடு செய்தாள்", என்றார் உவகையுடன்.
"தாயே தகுமா? முத்தமிழை... அவ்வையார் கணபதியிடம் யாசித்து நிற்க... தமிழுக்கே இறையாக நம் செல்வக்குமரன் இருக்க... நம்மிடத்து அறிஞருக்கு குறையோ? நம் அறிவிற் குறையுண்டோ? கொல்லனிடம் ஊசி விற்கத் தலைப்பட்டவன் அறிவிலியெனில்.... வாங்குபன் முழுமூடனல்லவா?", சற்று நிறுத்தி, "ஆங்கிலத்துக்கு கட் அவுட்டு... தமிழுக்கு கெட் அவுட்டா?"
"நாரதா ... சற்று மூச்சு விடு. கணபதி முருகன் இருவரும் தொலைக்காட்சியில் வரும் இளம் விஞ்ஞானி போட்டியில் கிரிப்டெக்ஸ் தயாராகிறார்கள். டாவின்சி அதில் மேதையாம். இது தாற்காலிக ஏற்பாடுதான்.. அதற்குள் மொழிப்போரை நீ துவக்காதே அப்பனே, இங்கு ஏற்கனவே ஏகப்பட்ட அக்கப்போர்"
"ஓ... young scientist ப்ரொஜெக்ட்?", என்றார் நாரதர் ஆசுவாசமாக...
"யெஸ் .. யெஸ் ", என்று வேறு உலக விஷயங்கள் பேசத் துவங்க... நாம் டெல்லி செல்வோமா?
https://www.dhresource.com/0x0/f2/albu/g6/M01/3A/69/rBVaSFsZIS2AQ9cKAAQydveYlGY307.jpg
க்ராஸ் டாக்::
"என்ன சுக்கிரா?, பொன்மயமான உன் தேகம் மலர்ந்த சிரிப்பால் மேலும் பொலிவுடன் காணப்படுகிறதே? அப்படி என்ன மகிழ்ச்சி?", தேவகுருவான பிரகஸ்பதி கேட்க....
"த்ரிவிக்ரமன், நங்கை நல்லாளின் பிணக்கு தங்கள் பார்வை மகிமையோ என்னவோ, இப்போது தீர்ந்து விட்டதே?", என்று அர்த்தபுஷ்டியுடன் சிரிக்க....
"அசுரகுருவே, இது தாற்காலிகம் என்பது தமக்கு தெரியும், இன்னமும் அத்தம்பதிகள் கடக்கவேண்டியவை அதிகமென்பதும் அறிவோம், அங்கே நாடகம் நடக்கிறது, அவரவர் வினைப்பயன்.... நிகழ்வுகளைத் தீர்மானிக்கிறது, நாம் வெறும் பார்வையாளர்கள். அவ்வளவே"
"ஆம் பிரகஸ்பதி.. நன்றாகச் சொன்னீர், வினைப்படி விதி என்றிருக்க.... பழியோ நம் தலையில்.. ஆ!!! ஆ!! இது என்ன தேஜோமயம்?"
"ஆஹா.. லக்ஷ்மிதேவி யாரைக் கடாக்ஷிக்க இத்தனை வேகமாய் விரைகிறார்?
"நாம் பார்த்துக் கொண்டிருந்தோமே ஒரு பெண், அவள்தான் நம் கதையின் நாயகி.. அவளை மேலும் கனக புஷ்பராகத்தினால் அலங்கரிக்க திருமகளே செல்கிறாள் என்றால், அவள் கட்டத்தை என்னவென்று சிலாகிக்க?"
"ஓ..அப்படியானால், தனகாரகன் வலுக்கிறானா?",
"ஆம், சுக்கிரா, இனி அப்பெண் தொட்டதெல்லாம் பொன்னாய் மாறும். ஆனால்... ம்ஹ்ஹ்.. சரி .... வருகிறேன்", சிறிது புருவம் சுருக்கி, பெருமூச்சுடன் பிரஹஸ்பதி அவர் வீட்டினுள் செல்ல....
"ம்ம்ம்... புரிகிறது குருவே, தேவர்களாகிய நமக்கு எதிர்காலம் குறித்த ஞானம் இருப்பது எத்தனை பெரிய சாபம் என்று இப்போது தெரிகிறது. இல்லையெனில், மகிழ்வோடு பேச்சை ஆரம்பித்தார் நாம், பின் நிகழ்வு தெரிந்ததால்... சோகமானோம் . ஆனாலும் இந்த தேவலோகத்தையே இரண்டாக்கப் போகும் ஜாதகக் கட்டங்கள் கொண்டவளல்லவா, அச்சிறுபெண்?", மனதுக்குள்ளே பேசியபடி.... அவரும் நடையைக் கட்டினார்.
இவர்கள் இருவரும் வார்த்தையாடிக்கொண்டிருந்த அம்மரத்தின் கிளையில் இருந்து கிளியின் ரூபத்தில் அமர்ந்திருந்த நாரதர் கீழிறங்கி சுய ரூபத்தை அடைந்தார்... "ஏதேது ? புலம்பல் திலகங்கள் ஆகி விட்டனரே இவர்கள்?..இப்பெண் பேசப்போகும் பேச்சில் சிக்கி சின்னாபின்னமாகப்போகும் சிற்றம்பலத்தான், த்யானத்தில் இருக்க... அவரையே தீயென தகிக்கப்போகும் தில்லை பெருமாட்டியோ, அவர்தம் பிள்ளைகளை நர்சரிக்கு அனுப்புவதில் மும்மரமாய இருக்கிறார். ஒரு எட்டு சென்று பார்த்தே செல்வோம். நாராயண... நாராயண.."
பெரிய மாளிகையின் முன் நின்று, நாரதர் காலிங் பெல்லை அமுக்க... "கதவு திறந்துதான் இருக்கு. யாராயிருந்தாலும் உள்ள வாங்க", தேன் குரலில் அழைப்பு வேகமாய் வர... வீட்டினுள் நுழைந்தார்.
"நான்தான் தாயே, நாரதன் வந்துள்ளேன்",என்க..
"ஒரு பத்து நிமிடம் பொறு நாரதா, காலை எட்டு மணிக்குள் இவர்களை நர்சரிக்கு அனுப்ப வேண்டும், சின்னவனோ மலைவாசி, தேனும் தினையும், பழங்களும் வேண்டுமென்கிறான், பெரியவனோ, அபார பசி கொண்டவன். மோதகம் கொழுக்கட்டை, அப்பம், அவல்,பொரி என்று வரிசை கட்டுகிறான் . இவர்களை சாப்பிட வைத்து , கிளப்பி அனுப்புவதற்குள் என் பிராணன் போகிறது. சற்று அமர்ந்திரு, லன்ச் பாக்ஸ் தயார் செய்து வருகிறேன்.", என பார்வதி உரைக்க..
அங்கே ஷூக்களோடு மல்லுக்கட்டிய இளைய குமாரரை பார்த்து, "அப்பா எங்கே குமரா?"
"அவர் பேச்சை இழுக்காதே நாரதா, கொழுக்கட்டைக்கு மாவு பூரணம் இரண்டும் தயார். சற்று சொப்பு செய்துத்தாருங்கள் என்றேன், அடுத்த நொடி, குளியலறை சென்று கங்கை ஸ்நானம் செய்து... கச்சம் கட்டி த்யானத்தில் அமர்ந்து விட்டார். பிள்ளைகள் செல்லட்டும், பிறகு வைத்துக்கொள்கிறேன் அவரை.. ", பதில் நறநறத்த பற்களுக்கிடையே அடுக்களையிலிருந்து கோபமாய் வந்தது. ஆளைக்காணோம், இன்னமும் குரலை மட்டும்தான் அனுப்பிக்கொண்டிருந்தார். "ஆஹா அயனான சமயத்தில் வந்து விட்டோமோ", என்று நாரதர் நினைத்தார்.
சற்றே குண்டான பெரிய பிள்ளை, பள்ளி செல்லத் தயாராகி ஓடிவர.. வீடு அதிர்ந்தது. "அண்ணா சற்று மெதுவாய் வா.., நாரதர் பூகம்பமோ என்று பயப்படுகிறார்", குறுநகையுடன் சொன்ன சிறுவன் தமிழ்க்கடவுள் குமரன்.
"டாட், மாம், பை", ஒருமித்த குரலில் கூறி தத்தம் வாகனங்களில் பள்ளி சென்றனர். "உஷ்...", நெற்றி வியர்வையை துடைத்து, "வா நாரதா.. பார்த்தாயா காலை நேர பரபரப்பை..? சின்னதாய் ஒரு உதவி கேட்டால், உலகைப்படைத்தவர், ஓடிச்சென்று த்யானத்தில் அமர்கிறார். இவரே இப்படி இருப்பதால்தான் , இவர் படைத்த மனிதனும்.. இவரை பின் பற்றுகிறான் .. க்ஹும், எல்லாம் நேரம்"
"இப்போது பரவாயில்லை தேவி முன்புக்கு இப்போ நிறைய மாறி இருக்காங்க. சரி தேவி, பிள்ளைகள் அன்னை சரஸ்வதியிடமா பாடம் பயில சென்றுள்ளனர்?"
"அடடே, உனக்கு விஷயமே தெரியாதா?, லியனார்டோ டாவின்சி என்று ஒரு பல்கலைவித்தகர் இங்கே நம் காலனிக்கு அருகே குடிவந்துள்ளார். ஆங்கிலத்தில் கரை கண்டவராம், ஓவியத்தில் இருந்து, ராக்கெட் சயின்ஸ் வரை தெரிந்தவராம், இந்த அறிவியல் மேதை பற்றி சரஸ்வதி என்னிடம் கூறி, பிள்ளைகளுக்கு இரு வார சிறப்பு வகுப்பிற்கும் ஏற்பாடு செய்தாள்", என்றார் உவகையுடன்.
"தாயே தகுமா? முத்தமிழை... அவ்வையார் கணபதியிடம் யாசித்து நிற்க... தமிழுக்கே இறையாக நம் செல்வக்குமரன் இருக்க... நம்மிடத்து அறிஞருக்கு குறையோ? நம் அறிவிற் குறையுண்டோ? கொல்லனிடம் ஊசி விற்கத் தலைப்பட்டவன் அறிவிலியெனில்.... வாங்குபன் முழுமூடனல்லவா?", சற்று நிறுத்தி, "ஆங்கிலத்துக்கு கட் அவுட்டு... தமிழுக்கு கெட் அவுட்டா?"
"நாரதா ... சற்று மூச்சு விடு. கணபதி முருகன் இருவரும் தொலைக்காட்சியில் வரும் இளம் விஞ்ஞானி போட்டியில் கிரிப்டெக்ஸ் தயாராகிறார்கள். டாவின்சி அதில் மேதையாம். இது தாற்காலிக ஏற்பாடுதான்.. அதற்குள் மொழிப்போரை நீ துவக்காதே அப்பனே, இங்கு ஏற்கனவே ஏகப்பட்ட அக்கப்போர்"
"ஓ... young scientist ப்ரொஜெக்ட்?", என்றார் நாரதர் ஆசுவாசமாக...
"யெஸ் .. யெஸ் ", என்று வேறு உலக விஷயங்கள் பேசத் துவங்க... நாம் டெல்லி செல்வோமா?
https://www.dhresource.com/0x0/f2/albu/g6/M01/3A/69/rBVaSFsZIS2AQ9cKAAQydveYlGY307.jpg