snehasree
SM Exclusive
ஸ்ரீதேவி படகு இல்லத்தில் தடுமாறி விழுந்தபோது அஸ்வின் தாங்கி பிடித்தானே அந்த புகைப்படங்கள் தான் அவைகள்.
அந்த படத்தில் அஸ்வின் இடையில் கை வைத்து தாங்கிபிடிக்க அவள் தன்னை மறந்து கண்கள் மூடி மார்பில் சாய்ந்திருந்த அழகை அவன் பலமுறை ரசித்தும் சலிக்காமல் பார்க்க தூண்டியது.
மெசேஜ் வந்த எண்ணுக்கு யார் நீ என்று பதில் மெசேஜ் அனுப்பினான்
அந்த மெசேஜ் அந்த எண்ணை அடையவில்லை.
அஸ்வின் கால் செய்ய நாட் ரீச்சபிள் என்று தகவல் வந்தது.
மற்றவர்கள் நீக்கபட்டு எடிட் செய்திருந்ததும் அவனுக்கு தெளிவாக தெரிய அனுப்பியது யாராக இருக்கும் என்று அங்கே நடந்த சம்பவங்களை கண்முன் நிறுத்தி யோசித்தான்.
அவன் சிறுமூளையில் சிக்னல் விழ வந்தனா என்று அவன் புத்தியில் தோன்றியது.
வந்தனா அப்பொழுது கையில் வைத்துக் கொண்டு போட்டோ எடுத்து கொண்டு இருந்தது அவன் நினைவுக்கு வந்தது.
வந்தனாவால் மட்டும்தான் இத்தகைய வேலைகளை செய்ய முடியும் என்று அவனுக்கு தெரியும் என்பதால் உடனே அவளை தேடிக் கொண்டு அவள் அறைக்கு வந்துவிட்டான்.
அவன் எப்படியும் தன்னை கண்டுபிடித்து கால் செய்வான் என்பதால் அஸ்வின் அழைப்பிற்காக காத்திருந்தாள்.
அஸ்வின் நேரிலே வந்ததும் அதிர்ச்சியாகி "என்ன மாமா இந்த நேரத்தில வந்திருக்கீங்க. ஏதாச்சும் வேணுமா?" என்றாள்.
"வந்தனா... நீ அனுப்பின போட்டோ எல்லாம் வந்தது. ரொம்ப நன்றி "
"எந்த போட்டோ மாமா?" என்று தெரியாதவள் போல் கேட்டாள் வந்தனா.
"நடிக்காதே வந்தனா ஸ்ரீதேவியோட போட்டோவ எனக்கு அனுப்பிச்சது நீதானே"
"மாமா... நான் எந்த போட்டோவும் அனுப்பலை"
"வந்தனா... ஸ்ரீ கீழே விழுந்தப்ப நீதான் போட்டோ எடுத்திருப்ப ஏன்னா மத்தவங்க யாரும் எடுக்க வாய்ப்பே இல்ல அதுவும் எங்க ரெண்டு பேரையும் வைச்சு எடிட் பன்ன உன்னாலதான் முடியும்"
"......"
"வந்தனா... என்ன சத்தத்த காணோம். நான் நேரடியா விஷயத்துக்கு வர்றேன். எனக்கு போட்டோஸ் எல்லாத்தையும் எனக்கு வேணும்."
"அதான் அனுப்பிச்சேனே"
"எனக்கு எல்லா போட்டோக்களும் வேணும்" என்றான்
அவள் போனை எடுத்து அதிலிருந்து மெமரி கார்டை எடுத்து தன் போனில் போட்டு எல்லா போட்டோக்களையும் தன் போனுக்கு மாற்றிக் கொண்டான். அவள் மெமரிகார்டில் இருந்த படங்களை அழிக்கவும் செய்தான்.
அஸ்வின் எப்படிபட்டவன் என்று அவளுக்கு நன்றாக தெரியும் என்பதால் அவள் அமைதியாக இருந்தாள்.
அந்த படத்தில் அஸ்வின் இடையில் கை வைத்து தாங்கிபிடிக்க அவள் தன்னை மறந்து கண்கள் மூடி மார்பில் சாய்ந்திருந்த அழகை அவன் பலமுறை ரசித்தும் சலிக்காமல் பார்க்க தூண்டியது.
மெசேஜ் வந்த எண்ணுக்கு யார் நீ என்று பதில் மெசேஜ் அனுப்பினான்
அந்த மெசேஜ் அந்த எண்ணை அடையவில்லை.
அஸ்வின் கால் செய்ய நாட் ரீச்சபிள் என்று தகவல் வந்தது.
மற்றவர்கள் நீக்கபட்டு எடிட் செய்திருந்ததும் அவனுக்கு தெளிவாக தெரிய அனுப்பியது யாராக இருக்கும் என்று அங்கே நடந்த சம்பவங்களை கண்முன் நிறுத்தி யோசித்தான்.
அவன் சிறுமூளையில் சிக்னல் விழ வந்தனா என்று அவன் புத்தியில் தோன்றியது.
வந்தனா அப்பொழுது கையில் வைத்துக் கொண்டு போட்டோ எடுத்து கொண்டு இருந்தது அவன் நினைவுக்கு வந்தது.
வந்தனாவால் மட்டும்தான் இத்தகைய வேலைகளை செய்ய முடியும் என்று அவனுக்கு தெரியும் என்பதால் உடனே அவளை தேடிக் கொண்டு அவள் அறைக்கு வந்துவிட்டான்.
அவன் எப்படியும் தன்னை கண்டுபிடித்து கால் செய்வான் என்பதால் அஸ்வின் அழைப்பிற்காக காத்திருந்தாள்.
அஸ்வின் நேரிலே வந்ததும் அதிர்ச்சியாகி "என்ன மாமா இந்த நேரத்தில வந்திருக்கீங்க. ஏதாச்சும் வேணுமா?" என்றாள்.
"வந்தனா... நீ அனுப்பின போட்டோ எல்லாம் வந்தது. ரொம்ப நன்றி "
"எந்த போட்டோ மாமா?" என்று தெரியாதவள் போல் கேட்டாள் வந்தனா.
"நடிக்காதே வந்தனா ஸ்ரீதேவியோட போட்டோவ எனக்கு அனுப்பிச்சது நீதானே"
"மாமா... நான் எந்த போட்டோவும் அனுப்பலை"
"வந்தனா... ஸ்ரீ கீழே விழுந்தப்ப நீதான் போட்டோ எடுத்திருப்ப ஏன்னா மத்தவங்க யாரும் எடுக்க வாய்ப்பே இல்ல அதுவும் எங்க ரெண்டு பேரையும் வைச்சு எடிட் பன்ன உன்னாலதான் முடியும்"
"......"
"வந்தனா... என்ன சத்தத்த காணோம். நான் நேரடியா விஷயத்துக்கு வர்றேன். எனக்கு போட்டோஸ் எல்லாத்தையும் எனக்கு வேணும்."
"அதான் அனுப்பிச்சேனே"
"எனக்கு எல்லா போட்டோக்களும் வேணும்" என்றான்
அவள் போனை எடுத்து அதிலிருந்து மெமரி கார்டை எடுத்து தன் போனில் போட்டு எல்லா போட்டோக்களையும் தன் போனுக்கு மாற்றிக் கொண்டான். அவள் மெமரிகார்டில் இருந்த படங்களை அழிக்கவும் செய்தான்.
அஸ்வின் எப்படிபட்டவன் என்று அவளுக்கு நன்றாக தெரியும் என்பதால் அவள் அமைதியாக இருந்தாள்.