• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Azhagaana ratchasiye -6

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
ஸ்ரீதேவி படகு இல்லத்தில் தடுமாறி விழுந்தபோது அஸ்வின் தாங்கி பிடித்தானே அந்த புகைப்படங்கள் தான் அவைகள்.

அந்த படத்தில் அஸ்வின் இடையில் கை வைத்து தாங்கிபிடிக்க அவள் தன்னை மறந்து கண்கள் மூடி மார்பில் சாய்ந்திருந்த அழகை அவன் பலமுறை ரசித்தும் சலிக்காமல் பார்க்க தூண்டியது.

மெசேஜ் வந்த எண்ணுக்கு யார் நீ என்று பதில் மெசேஜ் அனுப்பினான்

அந்த மெசேஜ் அந்த எண்ணை அடையவில்லை.

அஸ்வின் கால் செய்ய நாட் ரீச்சபிள் என்று தகவல் வந்தது.

மற்றவர்கள் நீக்கபட்டு எடிட் செய்திருந்ததும் அவனுக்கு தெளிவாக தெரிய அனுப்பியது யாராக இருக்கும் என்று அங்கே நடந்த சம்பவங்களை கண்முன் நிறுத்தி யோசித்தான்.

அவன் சிறுமூளையில் சிக்னல் விழ வந்தனா என்று அவன் புத்தியில் தோன்றியது.

வந்தனா அப்பொழுது கையில் வைத்துக் கொண்டு போட்டோ எடுத்து கொண்டு இருந்தது அவன் நினைவுக்கு வந்தது.

வந்தனாவால் மட்டும்தான் இத்தகைய வேலைகளை செய்ய முடியும் என்று அவனுக்கு தெரியும் என்பதால் உடனே அவளை தேடிக் கொண்டு அவள் அறைக்கு வந்துவிட்டான்.

அவன் எப்படியும் தன்னை கண்டுபிடித்து கால் செய்வான் என்பதால் அஸ்வின் அழைப்பிற்காக காத்திருந்தாள்.

அஸ்வின் நேரிலே வந்ததும் அதிர்ச்சியாகி "என்ன மாமா இந்த நேரத்தில வந்திருக்கீங்க. ஏதாச்சும் வேணுமா?" என்றாள்.

"வந்தனா... நீ அனுப்பின போட்டோ எல்லாம் வந்தது. ரொம்ப நன்றி "

"எந்த போட்டோ மாமா?" என்று தெரியாதவள் போல் கேட்டாள் வந்தனா.

"நடிக்காதே வந்தனா ஸ்ரீதேவியோட போட்டோவ எனக்கு அனுப்பிச்சது நீதானே"

"மாமா... நான் எந்த போட்டோவும் அனுப்பலை"

"வந்தனா... ஸ்ரீ கீழே விழுந்தப்ப நீதான் போட்டோ எடுத்திருப்ப ஏன்னா மத்தவங்க யாரும் எடுக்க வாய்ப்பே இல்ல அதுவும் எங்க ரெண்டு பேரையும் வைச்சு எடிட் பன்ன உன்னாலதான் முடியும்"

"......"

"வந்தனா... என்ன சத்தத்த காணோம். நான் நேரடியா விஷயத்துக்கு வர்றேன். எனக்கு போட்டோஸ் எல்லாத்தையும் எனக்கு வேணும்."

"அதான் அனுப்பிச்சேனே"

"எனக்கு எல்லா போட்டோக்களும் வேணும்" என்றான்

அவள் போனை எடுத்து அதிலிருந்து மெமரி கார்டை எடுத்து தன் போனில் போட்டு எல்லா போட்டோக்களையும் தன் போனுக்கு மாற்றிக் கொண்டான். அவள் மெமரிகார்டில் இருந்த படங்களை அழிக்கவும் செய்தான்.

அஸ்வின் எப்படிபட்டவன் என்று அவளுக்கு நன்றாக தெரியும் என்பதால் அவள் அமைதியாக இருந்தாள்.
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
"வந்தனா... கண்டிப்பா நீ காப்பி வைச்சிருப்பேன்னு எனக்கு தெரியும். நான் சொல்ற வரைக்கும் அந்த போட்டோக்களை யாருக்கும் அனுப்பாதே. நான் சொல்றப்ப நீ பயன்படுத்து கண்டிப்பா உனக்கு என் தம்பி கிடைப்பான். என்ன சரியா?

"மாமா..." என்று அவள் அதிர்ந்து அவனை பார்த்தாள்.

"எனக்கு எல்லாம் தெரியும் நான் உனக்கு சப்போர்ட் பன்றேன் ஸ்ரீதேவிய சாய்க்க இதுதான் டிரம்ப் கார்ட் ஆனா இப்ப பயன்படுத்தக் கூடாது."

அவள் ஸ்ரீநிவாஸ் கிடைக்க அஸ்வின் சப்போர்ட் கிடைக்கும் என்பதால் எதுவும் பேசவில்லை.

"இது தோத்தாகூட நான் வேற ஒரு விஷயத்த வைச்சு உங்கள சேத்து வைப்பேன் ஆனா நீ நான் சொல்றமாதிரி நடந்துகிட்டா மட்டும்தான்."

"எனக்கு ஸ்ரீ மாமா கிடைக்குமுன்னா எதுன்னாலும் ஒகேதான்" என்று சம்மதித்தாள் வந்தனா.

"கண்டிப்பா நடக்கும் அதுக்கு நான் பொறுப்பு" என்று அங்கிருந்து சென்றான் அஸ்வின்.

காலை எழுந்து வாசல் தெளிக்க வந்த ஸ்ரீதேவிக்கு பால் பாக்கெட்கள் எடுக்கபடாமல் இருப்பது ஆச்சரியமளித்தது.

வழக்கமாக இந்நேரம் அம்மா எடுத்திருப்பாங்களே என்று யோசித்தவள் வாசல் தெளித்து கோலம் போட்டாள்

ஸ்ரீதேவி பால் பாக்கெட்களை எடுத்துக் கொண்டு சமையலறைக்கு சென்றாள்.

பானுமதி அம்மாள் இல்லாததால் அவர்கள் அறைக்கு சென்று கதவை திறந்து பார்த்தாள்.

"வாம்மா... தேவி... உள்ள வா" என்றார் பானுமதி அம்மாள்.

ஸ்ரீதேவியும் உள்ளே சென்று அருகில் சென்றவளுக்கு நேற்றைய ஊட்டி டூரின் விளைவாக பானுமதி அம்மாளுக்கு சளி பிடித்துக் கொண்டது தெரிந்தது.

"சளி பிடிச்சிக்கிடுச்சு.தலைவலி வேற அதான் எழுந்திரிக்காம இருக்கேன்" என்றார் பானுமதி.

"சரிம்மா... நீங்க ரெஸ்ட் எடுங்க... நான் டீ போடறேன். சாப்பிடுங்க. சரியாயிடும்" என்றாள் ஸ்ரீதேவி.

"இப்ப நான் தைலம் தேய்ச்சு விடறேன்" என்று பானுமதி அம்மாள் அருகிலிருந்த தைலத்தை எடுத்து இதமாக அழுத்தி தேய்த்து விட்டாள் ஸ்ரீதேவி.

பானுமதி அம்மாள் விசேஷ நாட்களை தவிர மற்ற நாட்களில் சமையல் அவர்தான் செய்வார்.

சமையலுக்கு உதவியாகத்தான் ஒரு நபர் வைத்துள்ளாரே தவிர சமைக்க ஆள் வைத்துக் கொண்டது இல்லை.

ஸ்ரீதேவி வந்ததிலிருந்து பானுமதி அம்மாவுக்கு சமையலிலும் உதவியாக இருந்து வருகிறாள்.

ஸ்ரீதேவி சமையலறைக்கு சென்று சூடாக டீ தயாரித்து எடுத்து வந்து தந்தாள்.

Write your reply...
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
"இப்ப ஒகேம்மா. உன் கை பட்டதும் எல்லாம் சரி ஆயிடுச்சு" என்றார் பானுமதி..

"அப்படீ எல்லாம் ஒண்ணுமில்லம்மா" என்றபடி டீயை தந்தாள் ஸ்ரீதேவி.

"என்னடா மேடத்தை ஆளக் காணோமுன்னு பார்த்தா அம்மா ரூமுல இருக்கியா நீ" என்றபடி வந்தாள் சரண்யா.

"அம்மாவுக்கு டீ தர வந்தேன் அப்படியே பேசிட்டு இருக்கேன்"

வழக்கத்திற்கு மாறாக தன் அம்மா இன்னும் படுக்கையில் இருப்பதை கவனித்த சரண்யா "உடம்பு சரியில்லையா அம்மா" என்றாள்.

"கொஞ்சம் சளி பிடிச்சிருச்சு. நம்ம தேவிதான் தைலம் தேய்ச்சுவிட்டு டீ போட்டு தந்தா. இப்ப பராவாயில்ல"

"சரிம்மா. நீங்க ரெஸ்ட் எடுங்க. இன்னிக்கு சமையல நான் பாத்துக்கிறேன்" என்றாள் சரண்யா.

"நீ சமைக்கப் போறியா? பாவம்மா நாங்க" என்றார் தாய்.

"அம்மா..." என்று செல்லமாய் சிணுங்கியபோது ஸ்ரீநிவாசும் அங்கே வந்து விட்டான்.

அம்மா படுக்கையில் இருப்பதை பார்த்து "என்னம்மா உடம்பு சரியில்லையா?" என்றான்.

"அம்மாவுக்கு கோல்டு" என்றாள் தங்கை.

"இப்ப பராவாயில்லையா? டேபிளட் போட்டிங்களா? டாக்டர்கிட்ட போலாமா?" என்றான் ஸ்ரீநிவாஸ்.

"டேபிளட் போட்டாச்சு. ஸ்ரீ தைலம் தேச்சு விட்டு டீயும் போட்டு தந்துட்டா. இப்ப பராவாயில்லைப்பா" என்றார் பானுமதி.

"சரிம்மா." என்ற ஸ்ரீநிவாஸ் உடனே ஸ்ரீதேவியிடம் "தாங்க்ஸ்" என்றான்.

"எதுக்குங்க நன்றி எல்லாம் அவங்க எனக்கும் அம்மாதான்" என்றாள் ஸ்ரீதேவி.

"அண்ணா... அம்மாவுக்கு இன்னிக்கு ரெஸ்ட். இன்னிக்கு நான் சமையல் செய்ய போறேன்" என்றாள் சரண்யா.

"சரண்... ஏன் உனக்கு வீபரீத ஆசை எல்லாம்? நாங்க பாவமில்லையா?" என்றான் அண்ணன்.

"அண்ணா... நீயுமா?" என்று செல்லக் கோபம் காட்டினாள்.

"ஏன் எல்லாம் அவள வாரரீங்க? சரண் சமையல் நல்லாதானே செய்யறா" என்று ஆதரவாக பேசினாள் ஸ்ரீதேவி.

"அப்படி சொல்லு ஸ்ரீ." என்றாள் சரண்யா.

"வா சரண்யா... இன்னிக்கு நீ சமை. நான் உனக்கு ஹெல்ப் பன்றேன்" என்று சொல்ல தோழிகள் சமையலை ஒரு கை பார்க்க சென்றனர்.

Write your reply...
 




Last edited:

Nadarajan

முதலமைச்சர்
Joined
Apr 28, 2018
Messages
5,558
Reaction score
6,007
Location
Tamilnadu
"இப்ப ஒகேம்மா. உன் கை பட்டதும் எல்லாம் சரி ஆயிடுச்சு" என்றார் பானுமதி..

"அப்படீ எல்லாம் ஒண்ணுமில்லம்மா" என்றபடி டீயை தந்தாள் ஸ்ரீதேவி.

"என்னடா மேடத்தை ஆளக் காணோமுன்னு பார்த்தா அம்மா ரூமுல இருக்கியா நீ" என்றபடி வந்தாள் சரண்யா.

"அம்மாவுக்கு டீ தர வந்தேன் அப்படியே பேசிட்டு இருக்கேன்"

வழக்கத்திற்கு மாறாக தன் அம்மா இன்னும் படுக்கையில் இருப்பதை கவனித்த சரண்யா "உடம்பு சரியில்லையா அம்மா" என்றாள்.

"கொஞ்சம் சளி பிடிச்சிருச்சு. நம்ம தேவிதான் தைலம் தேய்ச்சுவிட்டு டீ போட்டு தந்தா. இப்ப பராவாயில்ல"

"சரிம்மா. நீங்க ரெஸ்ட் எடுங்க. இன்னிக்கு சமையல நான் பாத்துக்கிறேன்" என்றாள் சரண்யா.

"நீ சமைக்கப் போறியா? பாவம்மா நாங்க" என்றார் தாய்.

"அம்மா..." என்று செல்லமாய் சிணுங்கியபோது ஸ்ரீநிவாசும் அங்கே வந்து விட்டான்.

அம்மா படுக்கையில் இருப்பதை பார்த்து "என்னம்மா உடம்பு சரியில்லையா?" என்றான்.

"அம்மாவுக்கு கோல்டு" என்றாள் தங்கை.

"இப்ப பராவாயில்லையா? டேபிளட் போட்டிங்களா? டாக்டர்கிட்ட போலாமா?" என்றான் ஸ்ரீநிவாஸ்.

"டேபிளட் போட்டாச்சு. ஸ்ரீ தைலம் தேச்சு விட்டு டீயும் போட்டு தந்துட்டா. இப்ப பராவாயில்லைப்பா" என்றார் பானுமதி.

"சரிம்மா." என்ற ஸ்ரீநிவாஸ் உடனே ஸ்ரீதேவியிடம் "தாங்க்ஸ்" என்றான்.

"எதுக்குங்க நன்றி எல்லாம் அவங்க எனக்கும் அம்மாதான்" என்றாள் ஸ்ரீதேவி.

"அண்ணா... அம்மாவுக்கு இன்னிக்கு ரெஸ்ட். இன்னிக்கு நான் சமையல் செய்ய போறேன்" என்றாள் சரண்யா.

"சரண்... ஏன் உனக்கு வீபரீத ஆசை எல்லாம்? நாங்க பாவமில்லையா?" என்றான் அண்ணன்.

"அண்ணா... நீயுமா?" என்று செல்லக் கோபம் காட்டினாள்.

"ஏன் எல்லாம் அவள வாரரீங்க? சரண் சமையல் நல்லாதானே செய்யறா" என்று ஆதரவாக பேசினாள் ஸ்ரீதேவி.

"அப்படி சொல்லு ஸ்ரீ." என்றாள் சரண்யா.

"வா சரண்யா... இன்னிக்கு நீ சமை. நான் உனக்கு ஹெல்ப் பன்றேன்" என்று சொல்ல தோழிகள் சமையலை ஒரு கை பார்க்க சென்றனர்.

Write your reply...
Nice
 




Saru

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
2,200
Reaction score
1,926
Location
Hosur
அஸ்வின் பேச்சு sarila eh
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top