snehasree
SM Exclusive
"அத்தை... என் பிரண்ட்ஸ் தங்க ரூம் வேண்டும் அதனால ஸ்ரீதேவி ரூம் எனக்கு வேண்டும்" என்று அத்தை பானுமதியிடம் கேட்டாள் வந்தனா.
"அங்கதான் அந்த பொண்ணு தங்கியிருக்கேம்மா" என்றார் பானுமதி.
"அத்தை... ஸ்ரீதேவியை கொஞ்ச நாள் உங்க ரூமில் தங்க வைச்சிக்கோங்களேன். அவ ஒருத்திதானே அத்தை"
"சரிம்மா... அப்படியே செஞ்சிடலாம்மா" என்று சம்மதித்தார்
"என்ன ஸ்ரீ பேர் அடிபடுது என்ன விஷயம்மா?" என்றபடி வந்தாள் சரண்யா.
"வந்தனா பிரண்ட்ஸ் தங்க இடமில்லன்னு ஸ்ரீதேவி தங்கியிருக்க ரூம கேட்டாம்மா. நான் சரி எடுத்துக்கோ. அந்த பொண்ணை என் ரும்ல தங்க வைச்சிக்கிறேன் அப்படின்னு சொன்னேன்" என்றார் அம்மா.
" உன் பிரண்ட்ஸ் தங்க ஸ்ரீ ரூம்தான் கேட்பியா?" என்றாள் சரண்யா.
"வேற எங்க ரும் இருக்கு சொல்லு? இப்ப காலியாக இருக்கறது அந்த ரும்தானே?" என்றாள் வந்தனா.
"சரண்... நான் அம்மா ருமுல தங்கிக்கிறேன். என் ஒருத்தீக்கு எதுக்கு அவ்வளவு பெரிய ரூம்" என்றாள் ஸ்ரீதேவி.
அடுத்த சில நிமிடங்களில் ஸ்ரீதேவி அந்த அறையை காலி செய்து தன் சூட்கேசுடன் வந்து விட்டாள்.
"ஸ்ரீ... நீ அம்மா ரூமுக்கு போக வேணாம். என் ரூம்ல வந்து தங்கிக்கோ வா" என்று அவளை தன் அறைக்கு அழைத்து சென்றாள் சரண்யா.
சரண்யாவின் அறைக்கு சென்ற ஸ்ரீதேவிக்கு அந்த அறை பெரியதாக இருக்க பிரமித்தாள்.
"ஏய்... ஜில்லு... நீ அன்னிக்கு வீட்டை விட்டு சொல்லாம போயிடுவேன்னு சொன்னில்ல. இப்ப என்ன நடந்துச்சு பாத்தியா?"என்றாள் சரண்யா.
ஸ்ரீதேவியின் முகம் சட்டென்று வாட உடனே சரண்யா "ஏய்... ஸ்ரீ... விளையாட்டுக்குதான் சொன்னேன். " என்றாள்.
"அதுக்கு நான் பீல் பன்னலை. எனக்கு இப்படி பெரிய பெரிய வசதிகள செஞ்சு தர்ற நீ. உன் ரூமை கூட இப்ப ஷேர் பன்னிட்ட. இதுக்கு எல்லாம் தனி மனசு வேண்டும்" என்று கண்கள் கலங்கிய நிலையில் சொன்னாள் ஸ்ரீதேவி.
"மேடம்... பீல் பன்றிங்களா? பன்னுங்க... பன்னுங்க..." என்றாள் தோழி.
ஸ்ரீதேவி அவளையே பார்க்க "அப்புறம் என்னப்பா... சுத்தி வளைச்சு வந்து எனக்கு நன்றின்னு சொல்ல போகிறாய் நீ. என்னை அந்நியளாக்க போகிறாய் அவ்வளவுதானே" என்றாள் சரண்யா.
"யாரு உனக்கு நன்றி சொல்றா இப்ப? ஏதோ வசதி செஞ்சு தந்துட்டியே கொஞ்சம் பாராட்டலாமேன்னு பேசுனேன் அவ்வளவுதான்"
"அப்ப எனக்கு தாங்க்ஸ் இல்லையா?" என்று சரண்யா கேட்க "இல்லவே இல்லை" என்றாள் தோழி.
Message…
"அங்கதான் அந்த பொண்ணு தங்கியிருக்கேம்மா" என்றார் பானுமதி.
"அத்தை... ஸ்ரீதேவியை கொஞ்ச நாள் உங்க ரூமில் தங்க வைச்சிக்கோங்களேன். அவ ஒருத்திதானே அத்தை"
"சரிம்மா... அப்படியே செஞ்சிடலாம்மா" என்று சம்மதித்தார்
"என்ன ஸ்ரீ பேர் அடிபடுது என்ன விஷயம்மா?" என்றபடி வந்தாள் சரண்யா.
"வந்தனா பிரண்ட்ஸ் தங்க இடமில்லன்னு ஸ்ரீதேவி தங்கியிருக்க ரூம கேட்டாம்மா. நான் சரி எடுத்துக்கோ. அந்த பொண்ணை என் ரும்ல தங்க வைச்சிக்கிறேன் அப்படின்னு சொன்னேன்" என்றார் அம்மா.
" உன் பிரண்ட்ஸ் தங்க ஸ்ரீ ரூம்தான் கேட்பியா?" என்றாள் சரண்யா.
"வேற எங்க ரும் இருக்கு சொல்லு? இப்ப காலியாக இருக்கறது அந்த ரும்தானே?" என்றாள் வந்தனா.
"சரண்... நான் அம்மா ருமுல தங்கிக்கிறேன். என் ஒருத்தீக்கு எதுக்கு அவ்வளவு பெரிய ரூம்" என்றாள் ஸ்ரீதேவி.
அடுத்த சில நிமிடங்களில் ஸ்ரீதேவி அந்த அறையை காலி செய்து தன் சூட்கேசுடன் வந்து விட்டாள்.
"ஸ்ரீ... நீ அம்மா ரூமுக்கு போக வேணாம். என் ரூம்ல வந்து தங்கிக்கோ வா" என்று அவளை தன் அறைக்கு அழைத்து சென்றாள் சரண்யா.
சரண்யாவின் அறைக்கு சென்ற ஸ்ரீதேவிக்கு அந்த அறை பெரியதாக இருக்க பிரமித்தாள்.
"ஏய்... ஜில்லு... நீ அன்னிக்கு வீட்டை விட்டு சொல்லாம போயிடுவேன்னு சொன்னில்ல. இப்ப என்ன நடந்துச்சு பாத்தியா?"என்றாள் சரண்யா.
ஸ்ரீதேவியின் முகம் சட்டென்று வாட உடனே சரண்யா "ஏய்... ஸ்ரீ... விளையாட்டுக்குதான் சொன்னேன். " என்றாள்.
"அதுக்கு நான் பீல் பன்னலை. எனக்கு இப்படி பெரிய பெரிய வசதிகள செஞ்சு தர்ற நீ. உன் ரூமை கூட இப்ப ஷேர் பன்னிட்ட. இதுக்கு எல்லாம் தனி மனசு வேண்டும்" என்று கண்கள் கலங்கிய நிலையில் சொன்னாள் ஸ்ரீதேவி.
"மேடம்... பீல் பன்றிங்களா? பன்னுங்க... பன்னுங்க..." என்றாள் தோழி.
ஸ்ரீதேவி அவளையே பார்க்க "அப்புறம் என்னப்பா... சுத்தி வளைச்சு வந்து எனக்கு நன்றின்னு சொல்ல போகிறாய் நீ. என்னை அந்நியளாக்க போகிறாய் அவ்வளவுதானே" என்றாள் சரண்யா.
"யாரு உனக்கு நன்றி சொல்றா இப்ப? ஏதோ வசதி செஞ்சு தந்துட்டியே கொஞ்சம் பாராட்டலாமேன்னு பேசுனேன் அவ்வளவுதான்"
"அப்ப எனக்கு தாங்க்ஸ் இல்லையா?" என்று சரண்யா கேட்க "இல்லவே இல்லை" என்றாள் தோழி.
Message…