snehasree
SM Exclusive
சர்வதேச புகழ் வாய்ந்த ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி தொடங்கியது.
"ஸ்ரீ... ஊட்டி ரோஸ் பிளவர் ஷோ தொடங்கிருச்சு. நாம இந்த சண்டே போலாம். அங்க எவ்வளவு ரோஸ் பிளவர்ஸ் இருக்கு தெரியுமா? செம சூப்பரா இருக்கும்" என்றாள் சரண்யா.
"நானும் கேள்விபட்டிருக்கேன் அங்க பிளவர்லேயே பொம்மை எல்லாம் இருக்குமாமே" என்றாள் ஸ்ரீதேவி.
ஸ்ரீநிவாஸ் அண்ணன் அங்கே வர உடனே சரண்யா "அண்ணா ரோஸ் கார்டன்ல கண்காட்சி போட்டாங்க. வர சண்டே போலாமா?" என்றாள்.
"அதுக்கென்ன போனா போச்சு" என்றான் அண்ணன்.
"அண்ணான்னா அண்ணாதான்" என்று சந்தோஷமாய் சொன்னாள் தங்கை.
சில நிமிடங்களில் வந்தனா அங்கே வந்தாள்.
"மாமா... மாமா...ரோஸ் கார்டனுக்கு இந்த சண்டே கூட்டிட்டு போறியா?"
"நான் வேணா கூட்டிட்டு போகவா" என்றபடி வந்தான் அஸ்வின்.
"நான் ஸ்ரீமாமாவதான் கேட்டேன் உன்ன இல்லை"என்றாள் வந்தனா.
"சரி வந்தனா இந்த சண்டே போகலாம்" என்று ஸ்ரீநிவாஸ் சொன்னவுடன் "ரொம்ப தாங்க்ஸ்" என்றாள்.
ஞாயிற்றுக்கிழமை வர அன்று காலை வேளையில் டிபன் முடிந்தவுடன் வந்தனா ரெடியாகி வந்து விட்டாள்.
"மாமா... நான் ரெடி. ரோஸ் கார்டன் போலாம் வாங்க" என்றாள் வந்தனா.
"வந்தனா... மத்தவங்க யாரும் ரெடியாகல. மத்தியானம் சாப்பிட்டு முடிச்சிட்டு போகலாம்" என்றான் ஸ்ரீநிவாஸ்.
"அவங்க எல்லாம் மத்தியானம் போகட்டும். நீங்க வாங்க நாம இப்ப போகலாம்."
வந்தனா சிறுவயதில் தாய் தந்தையை இழந்ததால் சற்று செல்லமாக பானுமதி அம்மாவால் வளர்க்கபட்டாள். அவள் பிடிவாதத்தையும் குணத்தையும் அனைவரும் நன்கு அறிவார்கள்.
"ஸ்ரீ... அவள கூட்டிட்டு போயிடுப்பா.நாங்க பின்னாடி அஸ்வின் கூட வர்றோம்" என்றார் பானுமதி.
"ஆமாண்ணா... அதுதான் சரி. நீங்க வந்தனாவ கூட்டிட்டு போங்க" என்றாள் சரண்யா.
"அதான் எல்லாம் சொல்றாங்க இல்லை. மாமா... கிளம்புங்க..." என்றாள் வந்தனா.
"சரி... நான் ரெடியாயிட்டு வர்றேன்" என்று சென்ற ஸ்ரீநிவாஸ் சில நிமிடங்களில் தயாராகி வர அவனும் வந்தனாவும் கிளம்பி சென்றனர்.
மதிய சாப்பாடு வேளை முடிந்த பின் மூன்று மணிக்கு ஸ்ரீதேவி, சரண்யா, அஸ்வின், பானுமதி அம்மாள் எல்லோரும் கிளம்பி சென்றனர்.
காலையில் சென்ற ஸ்ரீநிவாசும், வந்தனாவும் இன்னும் வந்திருக்கவில்லை.
அஸ்வின் கார் டிரைவ் செய்ய பானுமதி அம்மாளும், ஸ்ரீதேவியும் பின்னால் அமர்ந்து கொள்ள சரண்யா முன்னால் அமர்ந்து கொண்டு வந்தாள்.
Message…
"ஸ்ரீ... ஊட்டி ரோஸ் பிளவர் ஷோ தொடங்கிருச்சு. நாம இந்த சண்டே போலாம். அங்க எவ்வளவு ரோஸ் பிளவர்ஸ் இருக்கு தெரியுமா? செம சூப்பரா இருக்கும்" என்றாள் சரண்யா.
"நானும் கேள்விபட்டிருக்கேன் அங்க பிளவர்லேயே பொம்மை எல்லாம் இருக்குமாமே" என்றாள் ஸ்ரீதேவி.
ஸ்ரீநிவாஸ் அண்ணன் அங்கே வர உடனே சரண்யா "அண்ணா ரோஸ் கார்டன்ல கண்காட்சி போட்டாங்க. வர சண்டே போலாமா?" என்றாள்.
"அதுக்கென்ன போனா போச்சு" என்றான் அண்ணன்.
"அண்ணான்னா அண்ணாதான்" என்று சந்தோஷமாய் சொன்னாள் தங்கை.
சில நிமிடங்களில் வந்தனா அங்கே வந்தாள்.
"மாமா... மாமா...ரோஸ் கார்டனுக்கு இந்த சண்டே கூட்டிட்டு போறியா?"
"நான் வேணா கூட்டிட்டு போகவா" என்றபடி வந்தான் அஸ்வின்.
"நான் ஸ்ரீமாமாவதான் கேட்டேன் உன்ன இல்லை"என்றாள் வந்தனா.
"சரி வந்தனா இந்த சண்டே போகலாம்" என்று ஸ்ரீநிவாஸ் சொன்னவுடன் "ரொம்ப தாங்க்ஸ்" என்றாள்.
ஞாயிற்றுக்கிழமை வர அன்று காலை வேளையில் டிபன் முடிந்தவுடன் வந்தனா ரெடியாகி வந்து விட்டாள்.
"மாமா... நான் ரெடி. ரோஸ் கார்டன் போலாம் வாங்க" என்றாள் வந்தனா.
"வந்தனா... மத்தவங்க யாரும் ரெடியாகல. மத்தியானம் சாப்பிட்டு முடிச்சிட்டு போகலாம்" என்றான் ஸ்ரீநிவாஸ்.
"அவங்க எல்லாம் மத்தியானம் போகட்டும். நீங்க வாங்க நாம இப்ப போகலாம்."
வந்தனா சிறுவயதில் தாய் தந்தையை இழந்ததால் சற்று செல்லமாக பானுமதி அம்மாவால் வளர்க்கபட்டாள். அவள் பிடிவாதத்தையும் குணத்தையும் அனைவரும் நன்கு அறிவார்கள்.
"ஸ்ரீ... அவள கூட்டிட்டு போயிடுப்பா.நாங்க பின்னாடி அஸ்வின் கூட வர்றோம்" என்றார் பானுமதி.
"ஆமாண்ணா... அதுதான் சரி. நீங்க வந்தனாவ கூட்டிட்டு போங்க" என்றாள் சரண்யா.
"அதான் எல்லாம் சொல்றாங்க இல்லை. மாமா... கிளம்புங்க..." என்றாள் வந்தனா.
"சரி... நான் ரெடியாயிட்டு வர்றேன்" என்று சென்ற ஸ்ரீநிவாஸ் சில நிமிடங்களில் தயாராகி வர அவனும் வந்தனாவும் கிளம்பி சென்றனர்.
மதிய சாப்பாடு வேளை முடிந்த பின் மூன்று மணிக்கு ஸ்ரீதேவி, சரண்யா, அஸ்வின், பானுமதி அம்மாள் எல்லோரும் கிளம்பி சென்றனர்.
காலையில் சென்ற ஸ்ரீநிவாசும், வந்தனாவும் இன்னும் வந்திருக்கவில்லை.
அஸ்வின் கார் டிரைவ் செய்ய பானுமதி அம்மாளும், ஸ்ரீதேவியும் பின்னால் அமர்ந்து கொள்ள சரண்யா முன்னால் அமர்ந்து கொண்டு வந்தாள்.
Message…