• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Azhagiye marry me.....-24

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
nivin-pauly-in-mili-malayalam-movie-4.jpgNazriya-in-Om-Shanti-Oshana-(1)2549.JPG
மது, ஸ்ரீதர் மற்றும் வினித் தன் எதிரில் நிற்கவும் அதிர்ச்சி பாதி குழப்பம் பாதியாக அவர்களை பார்த்து கொண்டு நின்றான் அருள்.


"மது நீ இங்க எப்படி????" என்று அருள் ஆச்சரியமாக கேட்கவும்


தன் கையில் இருந்த கிஃப்ட் பாக்ஸை அவன் கைகளில் வைத்தவள்
"நாம முதல் முதலாக மீட் பண்ணி இன்னையோட மூணு வருஷம்....அதுக்கு சர்ப்பரைஸ் தரலாம்னு நானும், ஸ்ரீயும் வந்தோம். ஆனா இங்க எனக்கு அதை விட பெரிய சர்ப்பரைஸ் காத்துட்டு இருந்துருக்கு" என்று உடைந்து போன குரலில் கூறியவள் கால்கள் தொய்ந்து போக அருகில் இருந்த கதிரையில் தொப்பென்று அமர்ந்தாள்.


"ஏன் எனக்கு மட்டும் இப்படி எல்லாம்??? நான் யாரையும் மனசால கூட தண்டிக்க விரும்புனது இல்லையே....ஆனா என்னை சுற்றி வந்த பாதி பேர் எனக்கு கஷ்டம் மட்டுமே தரணும்னு இருக்காங்களே ஏன்??? போன ஜென்மத்தில் நான் என்ன பாவம் பண்ணுணனோ தெரியல இந்த ஜென்மத்தில் அவஸ்தை படுறேன்" என்று குரல் கம்ம கூறிய மதுவை ஆதரவாக அணைத்துக் கொண்டான் அருள்.


"நீயே அப்படி யோசிக்காதே மது! கடவுள் நல்லவங்களுக்கு நிறைய கஷ்டங்களை தருவாரு. அதை பார்த்து நாம பின்வாங்கவோ, பலவீனமாகவோ கூடாது. எதிர்த்து நின்னு போராடணும்...நம்ம தைரியமாக எல்லாவற்றையும் சமாளிக்கணும்....என்னோட மது எந்த பிரச்சினை வந்தாலும் அசால்டா தூக்கி தூரப் போட்டுட்டு எதிர்த்து நிற்குறவ....அவ இப்படி மனசு உடைஞ்சு போய் பேசலாமா??" என்று அருள் கேட்கவும்


இல்லை என்பது போல தலை அசைத்தவள் மெல்ல எழுந்து ஷோபாவின் அருகில் சென்றாள்.


"என்னோட வாழ்க்கையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கஷ்டம் தந்தீங்க. எல்லாமே கடைசியில் எனக்கு ஒரு விஷயத்தை நல்லா புரிய வைச்சது. அருள் மேல நான் எந்தளவு அன்பு வைச்சிருக்கேன், அவர் என் மேல எந்தளவுக்கு அன்பு வைச்சிருக்கார்னு ஒவ்வொரு நாளும் எனக்கு புரிய வைக்குறீங்க....ரொம்ப தாங்க்ஸ்..." என்று மது கூறவும் வியப்பாக அவளை பார்த்தாள் ஷோபா.


"எனக்கு அகிலா அத்தை மேலயோ, உன் அம்மா மேலயோ, கார்த்தி மேலயோ, உன் மேலயோ எந்த கோபமும் இல்லை. இன்பாக்ட் உங்க எல்லாருக்கும் நன்றி தான் சொல்லணும். என்னோட அருளை எனக்கு கொண்டு வந்து சேர்த்ததுக்கும், அவரோட காதலை எனக்கு நல்லா புரிய வைச்சதுக்கும்" என்று அருளை காதலோடு பார்த்து கொண்டே மது கூற சந்தோஷத்தில் திக்குமுக்காடி போனான் அருள்.


"மது....." என்று கூவலோடு அவளைத் தாவி அணைத்துக் கொண்ட ஷோபா


"ஸாரி....ஐ யம் ஸாரி....ஸாரி..." என்று கூறி கொண்டு இருக்க அவள் தோளில் தட்டி கொடுத்தாள் மது.


"இப்போ எதுக்கு இவ்வளவு ட்ராமா போடுறா இவ???" என்று கேட்டது வேறு யாரும் அல்ல ஸ்ரீதர் தான்.


ஸ்ரீதரின் கேள்வியில் திடுக்கிட்டு அவனை நிமிர்ந்து பார்த்த ஷோபா அவனது முகத்தில் தெரிந்த வெறுப்பை பார்த்து நொறுங்கி போனாள்.


"என்ன பேசுற ஸ்ரீ???" என்று மது கேட்கவும்


அவள் முன்னால் வந்து நின்றவன்
"உனக்கு மனசுல என்ன பெரிய அன்னை தெரேசானு நினைப்பா?? யாரு வந்து என்ன சொன்னாலும் நம்பிடுவியா?? இவள் எப்பேர்பட்ட மோசடி பண்ணிட்டு இங்க வந்து நல்ல பொண்ணு மாதிரி நடிக்குறா இவளைப் போய் எல்லோரும் நம்புறீங்களே!!! உன்னையும், என்னையும்....சே....எப்படி உன்னால இவளை மன்னிக்க முடிஞ்சது மது??? என்று கேட்க அவனைப் பார்த்து தலை குனிந்து நின்றாள் ஷோபா.


''அவர் சொல்லுறதும் சரி தான் மது....நான் பண்ணது மன்னிக்க கூடிய தப்பு இல்லையே" என்று ஷோபா கூறவும்


"நல்லா நடிக்க கத்து வைச்சுருக்கா....இவள் எல்லாம் காலை சுற்றுன பாம்பு மாதிரி....வெளியில் ஒரு வேஷம் உள்ளுக்குள் ஒரு வேஷம்னு எல்லோரையும் ஏமாத்துரவ....ஏமாற்றுப் பேர்வழி" என்று கூற மெளனமாக அழுது கொண்டு நின்றாள் ஷோபா.


"ஸ்ரீ...." என்று மது அதட்டலாக கூறவும்


அவளை திரும்பி பார்த்தவன்
"என்னை எதுக்கு மிரட்டுற??? இப்படியே எல்லோரையும் தலையில் தூக்கி வைச்சுக்க...நல்லா மிளகாய் அரைச்சுட்டு போவாங்க." என்று ஸ்ரீதர் கூறவும்


அவனைப் பார்த்து சிரித்த மது
"யாரையும் இது வரைக்கும் நோகடிக்குற மாதிரி பேசாத ஸ்ரீதர் இன்னைக்கு இப்படி எடுத்தெறிந்து பேசுறான்னா அவன் மனசுல ஏதோ ஒண்ணு இருக்கணுமே..."என்று கூற அதிர்ச்சியாக அவளைப் பார்த்தான் ஸ்ரீதர்.


"நீ சொல்லலேனா எனக்கு தெரியாதுனு நினைச்சியா? உன் கூட எத்தனை வருஷமாக பழகுறேன். உன்னை பற்றி எனக்கு தெரியாதா??" என்று மது கேட்கவும் வாயடைத்துப் போய் நின்றான் ஸ்ரீதர்.


"ஏன் ஸ்ரீ ஒரு வேளை ஷோபா இடத்தில் நான் இருந்திருந்தாலும் நீ இப்படி தான் சொல்லி இருப்பியா??" என்று மது கேட்கவும்

"அதெப்படி??? நீ இந்த வேலை எல்லாம் பண்ண மாட்ட..." என்று ஸ்ரீதர் மறுக்க


"பண்ணி இருந்தா...." என்று அழுத்தமாக கேட்டாள் மது.


என்ன சொல்வது எனப் புரியாமல் ஸ்ரீதர் விழித்த வண்ணம் இருக்க


அவனருகில் வந்த அருள்
"உன் மனசுக்குள்ள ஷோபா மேல் அளவு கடந்த அன்பு இருக்கு ஸ்ரீ....அதனால தான் அவ பண்ண ஒவ்வொரு தப்பும் உன்னை ரொம்ப பாதிச்சுருக்கு" என்று கூற முற்றிலும் குழம்பி போனான் ஸ்ரீதர்.


"அத்தான் நான் கிளம்புறேன்...." என்று விட்டு செல்ல போன ஷோபாவை


"ஒரு நிமிஷம்...." என்று கை பிடித்து தடுத்தாள் மது.
 




Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
மதுவின் அழைப்பில் வியப்பாக அவளை பார்த்த ஷோபா
"என்ன மது???" என்று கேட்க


"இன்னைக்கு எங்க லைப்ல இம்பார்டண்ட் டே. சோ அதை செலிபிரேட் பண்ண ரெஸ்ட்டாரண்ட்ல லஞ்ச் அரேஞ்ச் பண்ணி இருக்கோம்....ஷோ நீங்களும் வரணும்" என்று மது கூற
மறுப்பாக தலை அசைத்தாள் ஷோபா.


"இல்லை மது நான்...." என்று பேசப் போனவளை மது முறைத்து பார்க்க
சொல்ல வந்த வார்த்தைகளை அப்படியே விழுங்கி கொண்டாள் ஷோபா.

"நீங்க வர்றீங்க அவ்வளவு தான்..." என்று மது கூறவும்
தயக்கத்துடன் ஸ்ரீதரை பார்த்தாள் ஷோபா.


ஷோபா தன்னை பார்க்கவும் வெடுக்கென்று தன் முகத்தை ஸ்ரீதர் திருப்பி கொள்ள
"அவன் கிடக்குறான் நீ வா ஷோபா..." என்று மது அவளை அழைத்து கொண்டு செல்ல வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டே அவர்களை பின் தொடர்ந்து சென்றான் ஸ்ரீதர்.


"டேய் என்னடா நடக்குது இங்க???" என்று வினித் கேட்கவும்


"ஹேய் வினித்!!! நீ இங்க தான் இருந்தியா? நான் கூட உன்னை மாதிரியே ஏதோ பொம்மை இருக்குதுனு நினைச்சேன்" என்று அருள் கூற அவனை தன்னால் முடிந்த மட்டும் முறைத்து பார்த்தான் வினித்.


"நான் நீங்க பேசுன விஷயங்களோட தலையும் புரியாமல் வாலும் புரியாமல் நானே குழம்பி போய் நின்னேன். உனக்கு சர்ப்பரைஸ் பார்ட்டி அரேஞ்ச் பண்ணி இருக்குனு சொல்ல சரி நாமும் ஒரு அட்டென்டன்ஸ் போடலாம்னு வந்தா....இங்க என்னென்னவோ நடக்குது...ஒண்ணுமே புரியல" என்று வினித் தன் தலையை சொரிய


"உனக்கு புரிஞ்சிருந்தாதான் எங்களுக்கு பிரச்சினையே..." என்று கோரஸாக அருளும், ஸ்ரீதரும் கூற பாவமாக அனைவரையும் பார்த்தான் வினித்.


"சரி சரி ரொம்ப யோசிக்காம விஜியை ரெஸ்ட்டாரண்ட்க்கு வரச் சொல்லிடு..." என்று அருள் கூற


"ஆமாடா மறந்தே போயிட்டேன்....அவகிட்ட சொல்லாம நான் வந்து இருந்தேனா சாமி ஆடி இருப்பா..." என்று விட்டு வினித் தன் போனை எடுத்துக் கொண்டு முன்னே சென்று விட மதுவை தன் புறம் மெல்ல இழுத்து கொண்டான் அருள்.


ஷோபாவிடம் இருந்து இரண்டு அடி தள்ளி ஸ்ரீதர் நடந்து சென்று கொண்டிருக்க ஷோபாவின் பார்வை நொடிக்கு ஒரு தடவை ஸ்ரீதரின் முகத்தில் நிலைத்து வந்தது.


ஸ்ரீதருக்கு ஷோபா தன்னை பார்ப்பது தெரிந்தாலும் எதுவும் தெரியாதது போல பார்க்கிங்கை நோக்கி நடந்து சென்றான்.


ஷோபா தன் காரில் ஏறி புறப்பட்டு செல்ல ஸ்ரீதரும் தன் காரை எடுத்துக்கொண்டு ரெஸ்ட்டாரண்ட் நோக்கி புறப்பட்டான்.


வினித் வீட்டிற்கு சென்று விஜியை அழைத்து கொண்டு வருவதாக கூறி காரை எடுத்துக்கொண்டு சென்று விட அருளும், மதுவும் மீதமாக இருந்தனர்.


அருள் தன் பைக்கை ஸ்டார்ட் செய்து எடுத்து வர அவன் தோளில் கை வைத்து ஏறி அமர்ந்து கொண்டாள் மது.


ரம்மியமான அமைதி ஒன்று நிலவ பைக்கை மிதமான வேகத்தில் செலுத்தி கொண்டிருந்தான் அருள்.


திடீரென்று அருள் சடன் பிரேக் போட மது அவன் மேல் விழுந்து எழும்பியவாறே
"பார்த்து வண்டியை ஓட்டுங்க அருள்..." என்று கூற


"பார்த்து தானே ஓட்டுறேன்...." என்று கண்ணாடி வழியாக அவளை பார்த்து கொண்டே அருள் கூற அந்தி வானமாய் அவள் முகம் சிவந்து போனது.


எல்லோரும் ஒரே நேரத்தில் ரெஸ்ட்டாரண்டை அடைந்து விட கேலிக்கும், சிரிப்புக்கும் பஞ்சம் இல்லாமல் அந்த இடம் நிரம்பி இருந்தது.


அருளின் காதல் பார்வை மதுவின் மீதே நிலைகுத்தி நிற்க மதுவோ அவன் பார்வை வீச்சை தாங்கிக் கொள்ள முடியாமல் திக்குமுக்காடி போனாள்.


"அண்ணா நீ அண்ணியை முதல் தடவை பார்த்ததுமே உனக்கு என்ன தோணுச்சு???" என்று விஜி கேட்கவும்


அவளைப் பார்த்து புன்னகத்த அருள் தன் போனை எடுத்து அழகியே மேரி மீ.....
பாடலை போட


"ஐயோ ராமா......என்னை காப்பாற்று...." என அலறினான் வினித்.


"என்னாச்சு வினித்???" எல்லோரும் பதட்டமாக கேட்கவும்


அருளை பார்த்து முறைத்த வினித்
"இந்த பாட்டை கடந்த மூணு வருஷமா போட்டு என் காதை பஞ்சராக்கி வைச்சுருக்கான் இவன்....இப்போ கல்யாணத்துக்கு அப்புறமும் இதே பாட்டை போட்டு என்னை கொலை பண்ண பார்க்குறான்....அதுவும் அவன் கர்ண கொடூரமான குரலில் பாடுன பாட்டு...." என்று பயந்தவன் போல கூறவும் அனைவரும் விழுந்து விழுந்து சிரிக்க தொடங்கினர்.


"இதுக்கு தான் இத்தனை ஆர்ப்பாட்டமா??? இவனுக்கு அந்த பாட்டை ரிப்பீட் மூட்ல போட்டு விடு அருள்..." என்று ஸ்ரீதர் கூறவும்


"அய்யய்யோ வேண்டாம்...." என்று அலறியபடி வினித் எழுந்து ஓட அவனைப் பின் தொடர்ந்து துரத்தியபடியே விஜியும், ஸ்ரீதரும் சென்றனர்.


ஷோபாவும் அவர்களது விளையாட்டு தனமான பேச்சில் ஈர்க்கப்பட்டு அவர்கள் பின்னால் எழுந்து சென்றாள்.


மதுவின் கையின் மேல் தன் கையை வைத்து அழுத்தி கொடுத்த அருள் அவள் கண்களைப் பார்க்க தன் பார்வையை வேறு புறம் திருப்பி கொண்டாள் மது.


"இப்படி இருந்தா வேலைக்கு ஆகாது..." என்றவாறு எழுந்து மதுவிற்கு அருகில் இருந்த கதிரையில் சென்று அமர்ந்து கொண்டான் அருள்.


"ஸாரி டா மது.....இன்னைக்கு என்ன டேட்னே மறந்துட்டேன்...." என்று அருள் வருத்தத்துடன் கூறஅவனைப் பார்த்து புன்னகத்த மது


"ஹலோ பாஸ்....வெயிட் வெயிட்....எனக்கே ஞாபகம் இல்லை இந்த விஷயம்....ஸ்ரீ தான் எனக்கே ஞாபகப்படுத்துனான்" என்று கூற


"அடிப் பாவி....." என்று வாயை பிளந்தான் அருள்.


"நான் கூட உனக்கு மூளை வேலை செய்ய ஆரம்பிச்சிடுச்சோனு நினைச்சேன்..." என்று சிரித்துக்கொண்டே அருள் கூறவும் அவன் தலையில் செல்லமாக தட்டினாள் மது.


"ஆமா எனக்கு கிஃப்ட் இல்லையா??" என்று அருள் கேட்க


அவனை விசித்திரமாக பார்த்த மது
"உங்களுக்கு என்ன தலையில் அடிபட்டுடுச்சா?? ஹாஸ்பிடல்ல வைச்சு கொடுத்தேனே கிஃப்ட்..." என்று விட்டு அவன் முன்னால் இருந்த கிஃப்ட் பாக்ஸை காட்டினாள் மது.


"இது இல்லைடா ஏஞ்சல்....நான் உனக்கு ப்ரொபோஸ் பண்ணிட்டு ஒரு கிஃப்ட் கொடுத்தேனே அப்படி ஒரு கிஃப்ட்...." என்று கண்ணடித்தவாறே கூற
அவன் சொன்னதன் அர்த்தம் விளங்க வெட்கத்தோடு அவன் தோள் மேல் சாய்ந்து கொண்டாள் மது.


வினித்தை துரத்தி கொண்டு வந்த அனைவரும் தூரத்தில் நின்று அருளையும், மதுவையும் பார்த்து கொண்டு நின்றனர்.


"இவன் டாக்டர் ஆகுறதுக்கு பதிலாக காதலிப்பது எப்படினு ஒரு இன்ஸ்டிடியூட் தொடங்கி இருக்கலாம்....எப்படி லவ் டயலாக்கா அள்ளி விட்டு அப்படியே ரொமான்ஸ்ல ஸ்கோர் பண்ணுறான் பாரு....கொடுத்து வைச்சவன்...ஹ்ம்ம்ம்ம்" என்று வினித் கூறவும்


அவன் தோளில் அடித்த விஜி "எங்க அண்ணனைப் பார்த்து கண்ணு வைக்காதீங்க...அவருக்கு அந்த அளவுக்கு வருது....ஆனா இங்க..." என்று போலியாக அலுத்துக் கொள்வது போல கூறினாள்.


"ஐயோ மீனும்மா.....குடும்ப சீக்ரெட்டை வெளியில் சொல்ல கூடாதுமா....உருட்டுக் கட்டையோ, பூரிக் கட்டையோ எதுவாக இருந்தாலும் வீட்டில் போய் குணமாக சொல்லணும் சரியா???" என்று வினித் கூற


"உனக்கு வெட்கமே இல்லையாடா வினித்??" என்று கேட்டான் ஸ்ரீதர்.


"அதெல்லாம் பார்த்தா சாப்பாட்டுக்கு எங்கே போறது??? என்ன நடந்தாலும் என்னோட அய்ம் சாப்பாடு தான்...வாங்க வாங்க போகலாம்" என்று விட்டு வினித் முன்னாடி செல்ல


"இவரோட தொல்லை தாங்க முடியலடா சாமி..." என்று புலம்பிக் கொண்டே அவனை தொடர்ந்து விஜி சென்றாள்.


வினித் மற்றும் விஜியின் பேச்சை கேட்டு சிரித்துக் கொண்டே திரும்பி பார்த்த ஸ்ரீதர் தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த ஷோபாவை பார்த்து தன் சிரிப்பை நிறுத்தினான்.


ஷோபாவின் முகமே அவள் மனநிலையை வெளிச்சம் போட்டுக் காட்டினாலும் இந்த மாற்றம் நிலைத்து இருக்கட்டும் பார்த்து கொள்ளலாம் என்று எண்ணி கொண்டு முன்னே சென்றான்.


ஷோபாவும் ஸ்ரீதர் தன்னை மன்னிப்பான் என்று நம்பிக்கையோடு சென்று அமர்ந்து கொண்டாள்.


சாப்பிட்டு கொண்டே அனைவரும் தங்களுக்குள் பேசிக் கொண்டு இருந்தனர்.
"நாம யோசித்து வைச்சதை இப்போவே சொல்லிடலாம்...." என்று எண்ணிய அருள்


"எல்லாம் சரியாக போயிட்டு இருக்கு....பட் சுலோச்சனா அத்தையை தவிர..." என்று கூறவும்
ஆமோதிப்பாக அனைவரும் தலை அசைத்தனர்.


"அவங்களை திருந்தி வாழ வைக்க ஏதாவது பண்ணணுமே...." என்று அருள் கூறவும்


"அதற்கு என்கிட்ட ஒரு வழி இருக்கு....." என்று கூறினாள் ஷோபா......
 




SarojaGopalakrishnan

முதலமைச்சர்
Joined
Jul 20, 2018
Messages
5,569
Reaction score
7,788
Location
Coimbatore
மது மன்னிப்பு கொடுத்து உயர்ந்து நிற்கிறாள்
நல்ல நட்பு ஸ்ரீதர் வினித்
அருமையான பதிவு
 




Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
Soap thirundhunalum sri scene poduvan nu naan nenachen...smart sri??...nalla vechu sei avala..konja naal ippadiye irundha dhan puriyum..but ,ippa edho idea solla porale , adhula sri flat airuvano??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top