சென்ற பதிவுக்கு லைக், கமெண்ட்ஸ் அளித்த அனைவருக்கும் நன்றி........
என்னுடைய நாவலுக்கு நீங்கள் அனைவரும் தொடர்ந்து அளித்து வரும் ஆதரவுக்கு மிக்க மிக்க நன்றி......
அதிர்ச்சியில் இருந்து தன்னை மீட்டுக் கொண்ட சுலோச்சனா
"என்ன விளையாடுறீங்களா??? யாரு இந்த பொம்பள?? ஏய் யாரு நீ???" என்று தன் ஒட்டுமொத்த கோபத்தையும் நேத்ராவிடம் காண்பிக்க அவரோ கொஞ்சம் கூட சலித்து கொள்ளாமல் அமைதியாக வேல்முருகனைப் பார்த்தார்.
"இதோ பார் சுலோச்சனா.....இத்தனை வருஷமா உன் பேச்சை கேட்டு ஒரு பொட்டி பாம்பு போல நான் அடங்கி ஒடுங்கி இருந்தது எல்லாம் முடிந்து போயிடுச்சு.....இனி என்னையும், என் பொண்ணையும் நேத்ரா பார்த்துக்குவா.....இனி உன் கிட்ட எனக்கு பேச்சு வார்த்தை இல்லை" என்று விட்டு அறைக்குள் செல்லப் போக அவர்களை நகர விடாமல் வழி மறித்தவாறு வந்து நின்றார் சுலோச்சனா.
"கண்ட கண்ட தெரு நாயெல்லாம் என் வீட்டுக்குள் வர்றதுக்கு நான் அனுமதிக்க மாட்டேன்....மரியாதையா இவளை அடிச்சு விரட்டி விட்டுட்டு வாங்க..." என்று சுலோச்சனா கூறவும்
"என்னை வெளியே போக சொல்ல நீ யாரு???" என்று கேட்டார் நேத்ரா.
"நான் இந்த வீட்டு எஜமானி...இவரோட மனைவி...ஷோபாவோட அம்மா...." என்று படபடவென சுலோச்சனா கூற
அவரைப் பார்த்து கேலியாக சிரித்துக் கொண்ட நேத்ரா
"எஜமானி ஓகே....பட் இந்த மனைவி அன்ட் அம்மா....அக்செப்ட் பண்ணுற மாதிரி நீ நடந்துக்கிட்டதா தெரியலையே....ஒரு வேளை நீ மனைவியா ஒழுங்காக நடந்திருந்தா இவரு ஏன் என்னை தேடி வரப்போறாரு....
சரி இவரை விடு....உன் பொண்ணு...அவ கூட உன்னை வெறுத்துட்டு என்கிட்ட வந்துட்டாலே.....அப்புறம் எப்படி நீ ஒரு மனைவி அன்ட் அம்மாவாக இருக்க முடியும்???" என்று கேட்கவும் பதில் பேச முடியாமல் விக்கித்துப் போய் நின்றார் சுலோச்சனா.
"ஷோபா என்ன இது?? இந்த பொம்பள என்னென்னவோ எல்லாம் சொல்லுறா....யாரு இவ நீயாவது சொல்லுமா..." என்று ஷோபாவின் கை பிடித்து சுலோச்சனா கேட்கவும்
வேல்முருகனையும், நேத்ராவையும் ஒரு தடவை திரும்பி பார்த்து கொண்ட ஷோபா
"இவங்க என் அப்பா அன்ட் இவங்க என் அம்மா....." என்று அசராமல் சுலோச்சனாவின் தலையில் பாரிய இடி ஒன்றை இறக்கினாள்.
"என்ன ஷோபா விளையாட்டு இது எல்லாம்??? குத்து கல்லாட்டம் உன்னை பெத்த அம்மா இங்க இருக்கேன்.....கண்டவளை உன் அம்மானு சொல்ற??" என்று கோபமாக சுலோச்சனா சத்தமிட
தன் கையை சுலோச்சனாவின் கையில் இருந்து பிரித்து எடுத்துக்கொண்ட ஷோபா
"நீ குத்து கல்லு தான்மா....எல்லோர் வாழ்க்கையிலும் குத்து கல்லு மாதிரி தானே இருக்குற....நீ என்னை பெத்து எடுத்துவ தான்....ஆனா ஒரு அம்மாவா நீ நடந்திருக்கியா சொல்லு....நேரத்துக்கு சாப்பாடு, கேட்காமலே விதம் விதமான ட்ரெஸ்....இது மட்டும் தான் அம்மாவுக்கு உரிய கடமையா??? நல்லது எது? கெட்டது எது? எதுவுமே நீ சொல்லி தரலயே மா....உனக்கு தேவை எல்லாம் பணம்....கட்டுன புருஷனும் தேவை இல்லை, பெத்த பொண்ணும் தேவை இல்லை....இவ்வளவு நாள் பொறுமையாக போயிடுச்சு....ஆனா இனிமேல் இது நடக்காதுமா....
ஒரு பொண்ணோட வாழ்க்கையை அழிச்சு உன் பொண்ணோட வாழ்க்கையை உருவாக்க பார்த்தியே அப்போவே நீ ஒரு பொண்ணா, ஒரு அம்மாவா தோத்துட்டமா...தோத்துட்ட....உனக்கு தேவை சொத்து, பணம், ஆஸ்தி....நானும், அப்பாவும் இப்போவே இந்த நிமிஷமே வீட்டை விட்டு போயிடுறோம்....ஆயுசுக்கும் இந்த சொத்தோடு வாழு....வாங்கப்பா போகலாம்..." என்று விட்டு வேல்முருகன் மற்றும் நேத்ராவையும் அழைத்து கொண்டு வெளியே சென்றாள்.
"போயிடுவீங்களா நீங்க??? உங்களுக்கு அவ்வளவு திமிர் ஆகிடுச்சா??? இப்போ பெரிய இவளாட்டம் பேசிட்டு போறேலே ஷோபா....நீயாவே திரும்ப என்கிட்ட வருவ...அந்த நாள் ரொம்ப தூரத்தில் இல்லை....உங்க அப்பனுக்கும் சொல்லி வை. இருக்குற பணம் எல்லாம் செலவானதும் என்னைத் தேடி தான் வரணும்....மறந்துடாதீங்க...." என்று உச்சஸ்தானியில் சுலோச்சனா சத்தமிட்டு கத்தியும் அவரது பேச்சு காற்றோடு கரைந்து போனது.
வீட்டை விட்டு வெளியேறி வந்த மூவரும் ஏற்கனவே வாடகைக்கு எடுத்து இருந்த அவர்களது வீட்டிற்குள் சென்றனர்.
வீட்டினுள் நுழைந்ததுமே தன் கையில் இருந்த நேத்ராவின் கைகளை அவசரமாக விலக்கி கொண்ட வேல்முருகன்
"ஸாரி ஸாரி....." என்று விட்டு அவசரமாக தனது அறைக்குள் நுழைந்து கொள்ள சென்றார்.
"அப்பா...." என்று ஷோபா அழைக்கவும் திரும்பி பார்க்கமாலேயே அந்த இடத்திலேயே நின்றார் வேல்முருகன்.
அவர் முன்னால் வந்து நின்ற ஷோபா
"என்னாச்சு பா??? உங்க முகமே சரி இல்லையே...." என்று கேட்கவும்
"என்னதான் சுலோச்சனா கெட்டவளாக இருந்தாலும் என்னை எந்த காரணத்துக்காகவும் பிரிஞ்சு இருக்க மாட்டா....ஆபீஸ் வேலையா வெளியூருக்கு போனாலும் ஐந்து நிமிஷத்துக்கு ஒரு தடவை போன் எடுத்துட்டே இருப்பா....இன்னைக்கு என்னை வேற ஒரு பொண்ணு கூட பார்த்ததும் அவ முகம் அப்படியே வாடி, சோர்ந்து போயிடுச்சு.....அதைத் தான் என்னால தாங்கிக்க முடியல...." என்று கண்கள் கலங்க கூற அவரது கைகளை ஆதரவாக பற்றி கொண்டாள் ஷோபா.
"அப்பா உங்க கஷ்டம் எனக்கு புரியுதுபா...ஆனா அம்மாவை இப்படியே விட்டால் இன்னும் எத்தனை பிரச்சினை வருமோனு பயமாக இருக்குபா....அம்மா என்ன பண்ணுணாலும் உங்களை விட்டு கொடுக்க மாட்டாங்க. அதனால தான் இப்படி எல்லாம்....எப்பாடு பட்டாவது இந்த திட்டத்தில் நாம அம்மாவை திருத்தியே ஆகணும்பா..." என்று ஷோபா கூறவும் அவளது தலையை ஆதரவாக தடவி கொடுத்து விட்டு வேல்முருகன் அவரது அறைக்குள் நுழைந்து கொண்டார்.
அறைக்குள் சென்ற வேல்முருகனையே பார்த்து கொண்டு நின்ற ஷோபா
"ஷோபனா...." என்ற நேத்ராவின் அழைப்பில் கலங்கிய தன் கண்களை துடைத்து கொண்டு சிரித்த வண்ணமாக அவரை திரும்பி பார்த்தாள்.
"உங்களோட திட்டம் கண்டிப்பாக வெற்றி அடையும் ஷோபனா. அதற்காக என்னால முடிந்த எல்லா உதவிகளையும் நான் பண்ணுவேன்" என்று நேத்ரா கூறவும் புன்னகையோடு அவரைப் பார்த்து தலை அசைத்தாள் ஷோபா.
மது எல்லா வேலைகளையும் முடித்து விட்டு ஆபிஸ் செல்வதற்காக தயாராகி வந்து வத்சலாவிடம் சொல்லி விட்டு தன் ஸ்கூட்டியை எடுத்து கொண்டு புறப்பட்டாள்.
போகும் வழியில் ஒரு முறை அவளை அறியாமலே ஷோபாவின் வீட்டை ஒரு தடவை திரும்பி பார்த்து கொண்டே மது தன் வண்டியை ஓட்டினாள்.
என்னுடைய நாவலுக்கு நீங்கள் அனைவரும் தொடர்ந்து அளித்து வரும் ஆதரவுக்கு மிக்க மிக்க நன்றி......
அதிர்ச்சியில் இருந்து தன்னை மீட்டுக் கொண்ட சுலோச்சனா
"என்ன விளையாடுறீங்களா??? யாரு இந்த பொம்பள?? ஏய் யாரு நீ???" என்று தன் ஒட்டுமொத்த கோபத்தையும் நேத்ராவிடம் காண்பிக்க அவரோ கொஞ்சம் கூட சலித்து கொள்ளாமல் அமைதியாக வேல்முருகனைப் பார்த்தார்.
"இதோ பார் சுலோச்சனா.....இத்தனை வருஷமா உன் பேச்சை கேட்டு ஒரு பொட்டி பாம்பு போல நான் அடங்கி ஒடுங்கி இருந்தது எல்லாம் முடிந்து போயிடுச்சு.....இனி என்னையும், என் பொண்ணையும் நேத்ரா பார்த்துக்குவா.....இனி உன் கிட்ட எனக்கு பேச்சு வார்த்தை இல்லை" என்று விட்டு அறைக்குள் செல்லப் போக அவர்களை நகர விடாமல் வழி மறித்தவாறு வந்து நின்றார் சுலோச்சனா.
"கண்ட கண்ட தெரு நாயெல்லாம் என் வீட்டுக்குள் வர்றதுக்கு நான் அனுமதிக்க மாட்டேன்....மரியாதையா இவளை அடிச்சு விரட்டி விட்டுட்டு வாங்க..." என்று சுலோச்சனா கூறவும்
"என்னை வெளியே போக சொல்ல நீ யாரு???" என்று கேட்டார் நேத்ரா.
"நான் இந்த வீட்டு எஜமானி...இவரோட மனைவி...ஷோபாவோட அம்மா...." என்று படபடவென சுலோச்சனா கூற
அவரைப் பார்த்து கேலியாக சிரித்துக் கொண்ட நேத்ரா
"எஜமானி ஓகே....பட் இந்த மனைவி அன்ட் அம்மா....அக்செப்ட் பண்ணுற மாதிரி நீ நடந்துக்கிட்டதா தெரியலையே....ஒரு வேளை நீ மனைவியா ஒழுங்காக நடந்திருந்தா இவரு ஏன் என்னை தேடி வரப்போறாரு....
சரி இவரை விடு....உன் பொண்ணு...அவ கூட உன்னை வெறுத்துட்டு என்கிட்ட வந்துட்டாலே.....அப்புறம் எப்படி நீ ஒரு மனைவி அன்ட் அம்மாவாக இருக்க முடியும்???" என்று கேட்கவும் பதில் பேச முடியாமல் விக்கித்துப் போய் நின்றார் சுலோச்சனா.
"ஷோபா என்ன இது?? இந்த பொம்பள என்னென்னவோ எல்லாம் சொல்லுறா....யாரு இவ நீயாவது சொல்லுமா..." என்று ஷோபாவின் கை பிடித்து சுலோச்சனா கேட்கவும்
வேல்முருகனையும், நேத்ராவையும் ஒரு தடவை திரும்பி பார்த்து கொண்ட ஷோபா
"இவங்க என் அப்பா அன்ட் இவங்க என் அம்மா....." என்று அசராமல் சுலோச்சனாவின் தலையில் பாரிய இடி ஒன்றை இறக்கினாள்.
"என்ன ஷோபா விளையாட்டு இது எல்லாம்??? குத்து கல்லாட்டம் உன்னை பெத்த அம்மா இங்க இருக்கேன்.....கண்டவளை உன் அம்மானு சொல்ற??" என்று கோபமாக சுலோச்சனா சத்தமிட
தன் கையை சுலோச்சனாவின் கையில் இருந்து பிரித்து எடுத்துக்கொண்ட ஷோபா
"நீ குத்து கல்லு தான்மா....எல்லோர் வாழ்க்கையிலும் குத்து கல்லு மாதிரி தானே இருக்குற....நீ என்னை பெத்து எடுத்துவ தான்....ஆனா ஒரு அம்மாவா நீ நடந்திருக்கியா சொல்லு....நேரத்துக்கு சாப்பாடு, கேட்காமலே விதம் விதமான ட்ரெஸ்....இது மட்டும் தான் அம்மாவுக்கு உரிய கடமையா??? நல்லது எது? கெட்டது எது? எதுவுமே நீ சொல்லி தரலயே மா....உனக்கு தேவை எல்லாம் பணம்....கட்டுன புருஷனும் தேவை இல்லை, பெத்த பொண்ணும் தேவை இல்லை....இவ்வளவு நாள் பொறுமையாக போயிடுச்சு....ஆனா இனிமேல் இது நடக்காதுமா....
ஒரு பொண்ணோட வாழ்க்கையை அழிச்சு உன் பொண்ணோட வாழ்க்கையை உருவாக்க பார்த்தியே அப்போவே நீ ஒரு பொண்ணா, ஒரு அம்மாவா தோத்துட்டமா...தோத்துட்ட....உனக்கு தேவை சொத்து, பணம், ஆஸ்தி....நானும், அப்பாவும் இப்போவே இந்த நிமிஷமே வீட்டை விட்டு போயிடுறோம்....ஆயுசுக்கும் இந்த சொத்தோடு வாழு....வாங்கப்பா போகலாம்..." என்று விட்டு வேல்முருகன் மற்றும் நேத்ராவையும் அழைத்து கொண்டு வெளியே சென்றாள்.
"போயிடுவீங்களா நீங்க??? உங்களுக்கு அவ்வளவு திமிர் ஆகிடுச்சா??? இப்போ பெரிய இவளாட்டம் பேசிட்டு போறேலே ஷோபா....நீயாவே திரும்ப என்கிட்ட வருவ...அந்த நாள் ரொம்ப தூரத்தில் இல்லை....உங்க அப்பனுக்கும் சொல்லி வை. இருக்குற பணம் எல்லாம் செலவானதும் என்னைத் தேடி தான் வரணும்....மறந்துடாதீங்க...." என்று உச்சஸ்தானியில் சுலோச்சனா சத்தமிட்டு கத்தியும் அவரது பேச்சு காற்றோடு கரைந்து போனது.
வீட்டை விட்டு வெளியேறி வந்த மூவரும் ஏற்கனவே வாடகைக்கு எடுத்து இருந்த அவர்களது வீட்டிற்குள் சென்றனர்.
வீட்டினுள் நுழைந்ததுமே தன் கையில் இருந்த நேத்ராவின் கைகளை அவசரமாக விலக்கி கொண்ட வேல்முருகன்
"ஸாரி ஸாரி....." என்று விட்டு அவசரமாக தனது அறைக்குள் நுழைந்து கொள்ள சென்றார்.
"அப்பா...." என்று ஷோபா அழைக்கவும் திரும்பி பார்க்கமாலேயே அந்த இடத்திலேயே நின்றார் வேல்முருகன்.
அவர் முன்னால் வந்து நின்ற ஷோபா
"என்னாச்சு பா??? உங்க முகமே சரி இல்லையே...." என்று கேட்கவும்
"என்னதான் சுலோச்சனா கெட்டவளாக இருந்தாலும் என்னை எந்த காரணத்துக்காகவும் பிரிஞ்சு இருக்க மாட்டா....ஆபீஸ் வேலையா வெளியூருக்கு போனாலும் ஐந்து நிமிஷத்துக்கு ஒரு தடவை போன் எடுத்துட்டே இருப்பா....இன்னைக்கு என்னை வேற ஒரு பொண்ணு கூட பார்த்ததும் அவ முகம் அப்படியே வாடி, சோர்ந்து போயிடுச்சு.....அதைத் தான் என்னால தாங்கிக்க முடியல...." என்று கண்கள் கலங்க கூற அவரது கைகளை ஆதரவாக பற்றி கொண்டாள் ஷோபா.
"அப்பா உங்க கஷ்டம் எனக்கு புரியுதுபா...ஆனா அம்மாவை இப்படியே விட்டால் இன்னும் எத்தனை பிரச்சினை வருமோனு பயமாக இருக்குபா....அம்மா என்ன பண்ணுணாலும் உங்களை விட்டு கொடுக்க மாட்டாங்க. அதனால தான் இப்படி எல்லாம்....எப்பாடு பட்டாவது இந்த திட்டத்தில் நாம அம்மாவை திருத்தியே ஆகணும்பா..." என்று ஷோபா கூறவும் அவளது தலையை ஆதரவாக தடவி கொடுத்து விட்டு வேல்முருகன் அவரது அறைக்குள் நுழைந்து கொண்டார்.
அறைக்குள் சென்ற வேல்முருகனையே பார்த்து கொண்டு நின்ற ஷோபா
"ஷோபனா...." என்ற நேத்ராவின் அழைப்பில் கலங்கிய தன் கண்களை துடைத்து கொண்டு சிரித்த வண்ணமாக அவரை திரும்பி பார்த்தாள்.
"உங்களோட திட்டம் கண்டிப்பாக வெற்றி அடையும் ஷோபனா. அதற்காக என்னால முடிந்த எல்லா உதவிகளையும் நான் பண்ணுவேன்" என்று நேத்ரா கூறவும் புன்னகையோடு அவரைப் பார்த்து தலை அசைத்தாள் ஷோபா.
மது எல்லா வேலைகளையும் முடித்து விட்டு ஆபிஸ் செல்வதற்காக தயாராகி வந்து வத்சலாவிடம் சொல்லி விட்டு தன் ஸ்கூட்டியை எடுத்து கொண்டு புறப்பட்டாள்.
போகும் வழியில் ஒரு முறை அவளை அறியாமலே ஷோபாவின் வீட்டை ஒரு தடவை திரும்பி பார்த்து கொண்டே மது தன் வண்டியை ஓட்டினாள்.