கதவைத் திறந்த ஷோபா எதிரில் நின்ற சுலோச்சனாவைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போக பேச நா எழாமல் விழித்து கொண்டு நின்றாள்.
"யாரு வந்துருக்காங்கனு பார்க்க போறேனு சொல்லிட்டு போனவ இன்னும் என்ன பண்ணிட்டு இருக்கா?? ஷோபா யாரு வந்துருக்காங்க???" என்றவாறே வாயிலை நோக்கி சென்ற ஸ்ரீதர்வெளியே நின்று கொண்டிருந்த சுலோச்சனாவைப் பார்த்து சட்டென்று நின்றான்.
"என்னாச்சு இவனுக்கு??? ஏதோ பேய், பிசாசைப் பார்த்த மாதிரி ஜெர்க் ஆகி நிற்குறான். ஒரு வேளை சுலோச்சனா அத்தை வந்துட்டாங்களோ???" என்று கேலியாக சிரித்துக் கொண்டே அருள் சத்தமிட்டு கேட்கவும்
அவனைத் திரும்பிப் பார்த்த ஸ்ரீதர்
"அத்தையே தான் வந்துருக்காங்க..." என்று கூற
"என்ன????....." என்று அதிர்ந்து போய் அனைவரும் ஸ்ரீதரின் அருகில் வந்து நின்றனர்.
வாசலில் நின்று கொண்டிருந்த சுலோச்சனா மதுவைக் காணவும்
அவசரமாக அவளருகில் ஓடி வந்து அவளது காலில் விழப் போக
"ஐயோ!!!! என்ன பண்ணுறீங்க நீங்க???" என்றவாறு அவரைத் தடுத்து நிறுத்தினாள்.
"நான் பாவி!!! நான் பாவி!!! என்னால எத்தனை பேர் வாழ்க்கை சீரழியப் பார்த்துருக்கு....நான் பாவி!!!! காலம் பூரா உங்க எல்லாருக்கும் சேவகம் பண்ணுணாலும் நான் பண்ண தப்புக்கு பரிகாரம் கிடைக்காது.....நான் பாவி ஆகிட்டேனே...." என்றவாறு தன் முகத்தில் அறைந்து கொண்டு சுலோச்சனா அழவும்
ஓடி வந்து அவரை அணைத்துக் கொண்ட ஷோபா
"அம்மா அழாதேமா....நீ அதெல்லாம் தெரியாம பண்ண தப்புமா....நீ அழுதா என்னால பார்த்துட்டு இருக்க முடியுமா சொல்லு....ப்ளீஸ் மா அழாதேமா....நீ மனசு மாறி திருந்தி வாழுறது தான் எங்களுக்கு தேவை.....இப்படி நீ உன்னையே அடிச்சுக்காதேமா ப்ளீஸ்...." என்று கண்ணீரோடு கூற சூழ நின்ற மற்றவர்களும் சிறிது கலங்கி தான் போயினர்.
இரண்டு, மூன்று வாரங்களாக வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்ததால் என்னவோ சுலோச்சனாவின் முகமெல்லாம் வாடி, கண்கள் எல்லாம் கலங்கி, எந்த வித ஆபரணங்களோ, ஒப்பனையோ இல்லாமல் எளிமையான கசங்கிய காட்டன் புடவை ஒன்றை அணிந்து கொண்டு வந்து நின்ற இந்த சுலோச்சனா முற்றிலும் புதிதாகவே தெரிந்தார்.
"என்ன அத்தை இப்படி ஆகிட்டீங்க???" என்றவாறு விஜி அவரருகில் வந்து நின்று கேட்க
அவளைப் பார்த்து புன்னகத்து கொண்ட சுலோச்சனா
"எத்தனை பேர் எத்தனை விதமான அறிவுரைகள் எடுத்து சொல்லியும் கேட்காமல் இருந்த என் புத்திக்கு என் பொண்ணும், என் கணவரும் நல்லா உறைக்குற மாதிரி புரிய வைச்சுட்டாங்க.....என்ன நடந்தாலும் அவங்க என் கூட தானே இருக்கப் போறாங்கனு எல்லாத் தப்பையும் யோசிக்காமல் பண்ணுணேன்.....ஆனா அன்னைக்கு ஷோபா சொன்ன வார்த்தை என் தப்பை எனக்கு உணர்த்திடுச்சு.....ஒரு பொண்ணோட வாழ்க்கையை அழித்து உன் பொண்ணுக்கு வாழ்க்கை அமைக்கப் போறியானு கேட்டா....அந்த வார்த்தை என் வாழ்க்கையில் நடந்த போது தான் என்னோட தப்பெல்லாம் நான் உணர்ந்தேன்....." என்று கண்கள் கலங்க கூறினார்.
"ஒரு விஷயம் அவங்களுக்கு நடக்கும் போது தான் அதோட வீரியம் புரியும்....அதே தான் என்னோட இந்த மாற்றங்களுக்கும் காரணம்...." என்று சுலோச்சனா கூறவும் அன்போடு அவரை இறுக அணைத்துக் கொண்டாள் ஷோபா.
"எல்லோரும் என்னை மன்னிச்சுடுங்க.....இத்தனை நாள் பணம் தான் எல்லாம்னு வாழ்ந்துட்டு இருந்தேன்.....ஆனா இன்னைக்கு உறவுகளும் முக்கியம்னு நான் புரிஞ்சுகிட்டேன்....ஆனால் நான் இதை உணர்ந்து கொள்றதுக்கு முதல் எல்லாம் கை மீறி போயிடுச்சு...." என்று வருத்தத்துடன் சுலோச்சனா கூறவும்
"என்ன கை மீறி போயிடுச்சு???" என்று புரியாமல் அனைவரும் கேட்டனர்.
"அதுதான் அவர்... வேற ஒரு பொண்ணு....." என்று மேற் கொண்டு கூற முடியாமல்
சேலை முந்தானையால் தன் வாயை மூடிக்கொண்டு அழ அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு தங்களுக்குள் சிரித்து கொண்டு நின்றனர்.
அனைவரும் சிரித்த வண்ணமாக நிற்பதைப் பார்த்து குழப்பம் கொண்ட சுலோச்சனா
"ஏன் எல்லாரும் சிரிக்குறீங்க???" என்று கேட்கவும்
அவர் தாடையைப் பிடித்து ஆட்டிய ஷோபா
"என் செல்ல அம்மா.....அவ்வளவு ஈஸியாக உங்க ஹப்பி வேல்முருகன் வேற பொண்ணு பின்னாலே போயிடுவாருனு நினைச்சீங்களா....இந்த பிளான்க்கு அப்பாவை சம்மதிக்க வைக்கப் பட்ட பாடு எங்களுக்கு தான் தெரியும்......அய்யோ.....போதும் போதும்னு ஆயிடுச்சு...." என்று போலியாக அலுத்துக் கொள்வது போல கூற
"அப்போ இதெல்லாம் டிராமாவா???" என்று அதிர்ச்சியாக கேட்டார் சுலோச்சனா.
"ஆமா எங்க அத்தையை நல்லவங்களா மாற்ற நாங்க போட்ட டிராமா...." என்று மது கூறவும்
தன் கண்களை துடைத்து கொண்ட சுலோச்சனா
"எனக்கு தெரியும் என்னோட வீட்டுக்காரர் அப்படி எல்லாம் பண்ண மாட்டாருனு...." என்று மகிழ்ச்சியுடன் கூற
"இத்தனை மாசப் போராட்டம் இந்த அத்தையை நாங்க வெளியில் கொண்டு வர்றதுக்காகதான்...." என்று கூறினான் அருள்.
"ஷோபா உங்க அம்மா....." என்றவாறே வீட்டினுள் நுழைந்த வேல்முருகன் ஹாலில் நின்று கொண்டிருந்த சுலோச்சனாவைப் பார்த்து ஆணியடித்தாற் போல உறைந்து நின்றார்.
வேல்முருகனைப் பார்த்ததும் இடுப்பில் கை வைத்து முறைத்து கொண்டு அவர் முன்னால் வந்து நின்ற சுலோச்சனா
"ரொம்ப சந்தோஷமாக இருக்கீங்களோ??? புது பொண்டாட்டி, புது வீடு....ஒரே குதூகலம் தான் போல....அப்படியே இந்த வீட்டுலேயே இருந்துக்கோங்க.....நான் மாற எல்லாம் மாட்டேன்...." என்று கோபமாக கூற புரியாமல் சுலோச்சனாவை பார்த்து கொண்டு நின்றார் வேல்முருகன்.
சுலோச்சனாவின் பேச்சை கேட்டு அதிர்ந்து போன ஷோபா
"அம்மா...." என்று அழைக்கவும்
சுலோச்சனா பின்னால் திரும்பிப் பார்த்து
"உன் அம்மாவை குறைச்சு எடை போட்டுட்டியே ஷோபா...." என்று கேலியாக சிரித்தார்.
"அம்மா என்னம்மா பேசுற நீ??? இவ்வளவு நேரமாக நல்லா தானே பேசிட்டு இருந்த??" என்று ஷோபா கேட்கவும்
அனைவரையும் ஒரு பார்வை பார்த்த சுலோச்சனா அங்கே இருந்த கதிரையில் அமர்ந்து கொண்டு வாகாக கால் மேல் கால் போட்டுக்கொண்டே விரலை சொடக்கிட நேத்ரா தலை குனிந்த வண்ணம் வந்து நின்றார்.
"நேத்ரா ஆன்டி...." என்று மது முணுமுணுத்துக் கொள்ள எல்லோரும் அதிர்ச்சியாக நடப்பது புரியாமல் நின்றனர்.
"என்ன நினைச்சுட்டீங்க எல்லாரும் என்னை பற்றி??? நீங்க எல்லாரும் போனா என்னால இருக்க முடியாதா??? உங்க எல்லாரையும் நம்ப வைக்கத்தான் இத்தனை நாள் சோகமாக இருக்கிற மாதிரி நடந்துக்கிட்டேன்.....
இந்த ஆளு வேற ஒருத்தியை கூட்டிட்டு வந்து நின்னா....அவர் காலடியில் போய் விழுந்துடுவேனா என்ன?? ஆனாலும் என் நடிப்பை நம்பி அநியாயமாக எல்லாரும் ஏமாந்துட்டீங்க போல.....நீங்க இந்த வீட்டுக்கு குடி வந்து நான்கு, ஐந்து நாள்லயே இதெல்லாம் டிராமானு எனக்கு தெரியும்....எத்தனை நாள் உங்க திட்டம் போகுதுனு பார்க்கலாம்னு தான் அமைதியாக இருந்தேன். இன்னைக்கு வந்து சும்மா ஒரு ஆக்ட் கொடுத்தா எல்லாவற்றையும் உளறிட்டிங்கலே....." என்று விட்டு விகாரமாக சுலோச்சனா சிரிக்க அனைவரும் அவரது இந்த நடவடிக்கையை பார்த்து முகம் சுருங்கி நின்றனர்.
"ஆன்டி ஏன் இப்படி இருக்கீங்க??? உங்க நல்லதுக்கு தானே நாங்க...." என்று பேசிய மதுவை கை காட்டி நிறுத்திய சுலோச்சனா
"உன்னால தான் இத்தனை பிரச்சினையும்...நீ மட்டும் அருள் வாழ்க்கையில் வராம இருந்திருந்தால் என் பொண்ணு வாழ்க்கை நல்லா அமைஞ்சிருக்கும்....எல்லாம் உன்னால தான் பாவி...." என்றவரின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார் லோகநாதன்.
லோகநாதனை அங்கு எதிர்பார்க்காத சுலோச்சனா
"அண்ணா......" என்று அதிர்ந்து போய் நிற்க
"நீ உண்மையாகவே திருந்திட்டேனு நினைச்சேன்.....ஆனா நீ.....சே.....உன்னை எல்லாம் என் தங்கச்சினு சொல்லவே அசிங்கமாக இருக்கு......எந்த சொத்துக்காக நீ இப்படி பேயாட்டம் திரிஞ்சியோ அந்த சொத்து எல்லாம் எப்போவோ உன் கணவர் பேர்லயும், உன் பொண்ணு பேர்லயும் எழுதி வைச்சிட்டேன்.....இந்த விஷயம் எல்லாருக்கும் தெரியும்....இருந்தும் நீ திருந்தணும்னு இத்தனை நாள் பொறுமையாக இருந்தா நீ இப்படி பண்ணிட்டு இருக்க....
இப்போ சொல்றேன்....மரியாதையாக இந்த வீட்டை விட்டு போயிடு....உனக்கும் இந்த குடும்பத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை....இனி உன் வீடு, சொத்து எல்லாமே ஷோபாவுக்கும், வேல்முருகனுக்கும் தான்.....நீ போகலாம்..." என்று வாசலை நோக்கி லோகநாதன் கை காட்ட அதிர்ச்சியடைந்து நின்றார் சுலோச்சனா.
கோபம் தலைக்கேற அனைவரையும் முறைத்து பார்த்த சுலோச்சனா
"எல்லாத்துக்கும் காரணம் இதோ இந்த மது தானே.....இவளை...." என்று வேக எட்டு வைத்து மதுவை நெருங்கியவர் தன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவள் வயிற்றில் குத்தப் போக மதுவை பாய்ந்து அருள் தன் புறம் இழுத்து கொண்டான்.
"யாரு வந்துருக்காங்கனு பார்க்க போறேனு சொல்லிட்டு போனவ இன்னும் என்ன பண்ணிட்டு இருக்கா?? ஷோபா யாரு வந்துருக்காங்க???" என்றவாறே வாயிலை நோக்கி சென்ற ஸ்ரீதர்வெளியே நின்று கொண்டிருந்த சுலோச்சனாவைப் பார்த்து சட்டென்று நின்றான்.
"என்னாச்சு இவனுக்கு??? ஏதோ பேய், பிசாசைப் பார்த்த மாதிரி ஜெர்க் ஆகி நிற்குறான். ஒரு வேளை சுலோச்சனா அத்தை வந்துட்டாங்களோ???" என்று கேலியாக சிரித்துக் கொண்டே அருள் சத்தமிட்டு கேட்கவும்
அவனைத் திரும்பிப் பார்த்த ஸ்ரீதர்
"அத்தையே தான் வந்துருக்காங்க..." என்று கூற
"என்ன????....." என்று அதிர்ந்து போய் அனைவரும் ஸ்ரீதரின் அருகில் வந்து நின்றனர்.
வாசலில் நின்று கொண்டிருந்த சுலோச்சனா மதுவைக் காணவும்
அவசரமாக அவளருகில் ஓடி வந்து அவளது காலில் விழப் போக
"ஐயோ!!!! என்ன பண்ணுறீங்க நீங்க???" என்றவாறு அவரைத் தடுத்து நிறுத்தினாள்.
"நான் பாவி!!! நான் பாவி!!! என்னால எத்தனை பேர் வாழ்க்கை சீரழியப் பார்த்துருக்கு....நான் பாவி!!!! காலம் பூரா உங்க எல்லாருக்கும் சேவகம் பண்ணுணாலும் நான் பண்ண தப்புக்கு பரிகாரம் கிடைக்காது.....நான் பாவி ஆகிட்டேனே...." என்றவாறு தன் முகத்தில் அறைந்து கொண்டு சுலோச்சனா அழவும்
ஓடி வந்து அவரை அணைத்துக் கொண்ட ஷோபா
"அம்மா அழாதேமா....நீ அதெல்லாம் தெரியாம பண்ண தப்புமா....நீ அழுதா என்னால பார்த்துட்டு இருக்க முடியுமா சொல்லு....ப்ளீஸ் மா அழாதேமா....நீ மனசு மாறி திருந்தி வாழுறது தான் எங்களுக்கு தேவை.....இப்படி நீ உன்னையே அடிச்சுக்காதேமா ப்ளீஸ்...." என்று கண்ணீரோடு கூற சூழ நின்ற மற்றவர்களும் சிறிது கலங்கி தான் போயினர்.
இரண்டு, மூன்று வாரங்களாக வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்ததால் என்னவோ சுலோச்சனாவின் முகமெல்லாம் வாடி, கண்கள் எல்லாம் கலங்கி, எந்த வித ஆபரணங்களோ, ஒப்பனையோ இல்லாமல் எளிமையான கசங்கிய காட்டன் புடவை ஒன்றை அணிந்து கொண்டு வந்து நின்ற இந்த சுலோச்சனா முற்றிலும் புதிதாகவே தெரிந்தார்.
"என்ன அத்தை இப்படி ஆகிட்டீங்க???" என்றவாறு விஜி அவரருகில் வந்து நின்று கேட்க
அவளைப் பார்த்து புன்னகத்து கொண்ட சுலோச்சனா
"எத்தனை பேர் எத்தனை விதமான அறிவுரைகள் எடுத்து சொல்லியும் கேட்காமல் இருந்த என் புத்திக்கு என் பொண்ணும், என் கணவரும் நல்லா உறைக்குற மாதிரி புரிய வைச்சுட்டாங்க.....என்ன நடந்தாலும் அவங்க என் கூட தானே இருக்கப் போறாங்கனு எல்லாத் தப்பையும் யோசிக்காமல் பண்ணுணேன்.....ஆனா அன்னைக்கு ஷோபா சொன்ன வார்த்தை என் தப்பை எனக்கு உணர்த்திடுச்சு.....ஒரு பொண்ணோட வாழ்க்கையை அழித்து உன் பொண்ணுக்கு வாழ்க்கை அமைக்கப் போறியானு கேட்டா....அந்த வார்த்தை என் வாழ்க்கையில் நடந்த போது தான் என்னோட தப்பெல்லாம் நான் உணர்ந்தேன்....." என்று கண்கள் கலங்க கூறினார்.
"ஒரு விஷயம் அவங்களுக்கு நடக்கும் போது தான் அதோட வீரியம் புரியும்....அதே தான் என்னோட இந்த மாற்றங்களுக்கும் காரணம்...." என்று சுலோச்சனா கூறவும் அன்போடு அவரை இறுக அணைத்துக் கொண்டாள் ஷோபா.
"எல்லோரும் என்னை மன்னிச்சுடுங்க.....இத்தனை நாள் பணம் தான் எல்லாம்னு வாழ்ந்துட்டு இருந்தேன்.....ஆனா இன்னைக்கு உறவுகளும் முக்கியம்னு நான் புரிஞ்சுகிட்டேன்....ஆனால் நான் இதை உணர்ந்து கொள்றதுக்கு முதல் எல்லாம் கை மீறி போயிடுச்சு...." என்று வருத்தத்துடன் சுலோச்சனா கூறவும்
"என்ன கை மீறி போயிடுச்சு???" என்று புரியாமல் அனைவரும் கேட்டனர்.
"அதுதான் அவர்... வேற ஒரு பொண்ணு....." என்று மேற் கொண்டு கூற முடியாமல்
சேலை முந்தானையால் தன் வாயை மூடிக்கொண்டு அழ அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு தங்களுக்குள் சிரித்து கொண்டு நின்றனர்.
அனைவரும் சிரித்த வண்ணமாக நிற்பதைப் பார்த்து குழப்பம் கொண்ட சுலோச்சனா
"ஏன் எல்லாரும் சிரிக்குறீங்க???" என்று கேட்கவும்
அவர் தாடையைப் பிடித்து ஆட்டிய ஷோபா
"என் செல்ல அம்மா.....அவ்வளவு ஈஸியாக உங்க ஹப்பி வேல்முருகன் வேற பொண்ணு பின்னாலே போயிடுவாருனு நினைச்சீங்களா....இந்த பிளான்க்கு அப்பாவை சம்மதிக்க வைக்கப் பட்ட பாடு எங்களுக்கு தான் தெரியும்......அய்யோ.....போதும் போதும்னு ஆயிடுச்சு...." என்று போலியாக அலுத்துக் கொள்வது போல கூற
"அப்போ இதெல்லாம் டிராமாவா???" என்று அதிர்ச்சியாக கேட்டார் சுலோச்சனா.
"ஆமா எங்க அத்தையை நல்லவங்களா மாற்ற நாங்க போட்ட டிராமா...." என்று மது கூறவும்
தன் கண்களை துடைத்து கொண்ட சுலோச்சனா
"எனக்கு தெரியும் என்னோட வீட்டுக்காரர் அப்படி எல்லாம் பண்ண மாட்டாருனு...." என்று மகிழ்ச்சியுடன் கூற
"இத்தனை மாசப் போராட்டம் இந்த அத்தையை நாங்க வெளியில் கொண்டு வர்றதுக்காகதான்...." என்று கூறினான் அருள்.
"ஷோபா உங்க அம்மா....." என்றவாறே வீட்டினுள் நுழைந்த வேல்முருகன் ஹாலில் நின்று கொண்டிருந்த சுலோச்சனாவைப் பார்த்து ஆணியடித்தாற் போல உறைந்து நின்றார்.
வேல்முருகனைப் பார்த்ததும் இடுப்பில் கை வைத்து முறைத்து கொண்டு அவர் முன்னால் வந்து நின்ற சுலோச்சனா
"ரொம்ப சந்தோஷமாக இருக்கீங்களோ??? புது பொண்டாட்டி, புது வீடு....ஒரே குதூகலம் தான் போல....அப்படியே இந்த வீட்டுலேயே இருந்துக்கோங்க.....நான் மாற எல்லாம் மாட்டேன்...." என்று கோபமாக கூற புரியாமல் சுலோச்சனாவை பார்த்து கொண்டு நின்றார் வேல்முருகன்.
சுலோச்சனாவின் பேச்சை கேட்டு அதிர்ந்து போன ஷோபா
"அம்மா...." என்று அழைக்கவும்
சுலோச்சனா பின்னால் திரும்பிப் பார்த்து
"உன் அம்மாவை குறைச்சு எடை போட்டுட்டியே ஷோபா...." என்று கேலியாக சிரித்தார்.
"அம்மா என்னம்மா பேசுற நீ??? இவ்வளவு நேரமாக நல்லா தானே பேசிட்டு இருந்த??" என்று ஷோபா கேட்கவும்
அனைவரையும் ஒரு பார்வை பார்த்த சுலோச்சனா அங்கே இருந்த கதிரையில் அமர்ந்து கொண்டு வாகாக கால் மேல் கால் போட்டுக்கொண்டே விரலை சொடக்கிட நேத்ரா தலை குனிந்த வண்ணம் வந்து நின்றார்.
"நேத்ரா ஆன்டி...." என்று மது முணுமுணுத்துக் கொள்ள எல்லோரும் அதிர்ச்சியாக நடப்பது புரியாமல் நின்றனர்.
"என்ன நினைச்சுட்டீங்க எல்லாரும் என்னை பற்றி??? நீங்க எல்லாரும் போனா என்னால இருக்க முடியாதா??? உங்க எல்லாரையும் நம்ப வைக்கத்தான் இத்தனை நாள் சோகமாக இருக்கிற மாதிரி நடந்துக்கிட்டேன்.....
இந்த ஆளு வேற ஒருத்தியை கூட்டிட்டு வந்து நின்னா....அவர் காலடியில் போய் விழுந்துடுவேனா என்ன?? ஆனாலும் என் நடிப்பை நம்பி அநியாயமாக எல்லாரும் ஏமாந்துட்டீங்க போல.....நீங்க இந்த வீட்டுக்கு குடி வந்து நான்கு, ஐந்து நாள்லயே இதெல்லாம் டிராமானு எனக்கு தெரியும்....எத்தனை நாள் உங்க திட்டம் போகுதுனு பார்க்கலாம்னு தான் அமைதியாக இருந்தேன். இன்னைக்கு வந்து சும்மா ஒரு ஆக்ட் கொடுத்தா எல்லாவற்றையும் உளறிட்டிங்கலே....." என்று விட்டு விகாரமாக சுலோச்சனா சிரிக்க அனைவரும் அவரது இந்த நடவடிக்கையை பார்த்து முகம் சுருங்கி நின்றனர்.
"ஆன்டி ஏன் இப்படி இருக்கீங்க??? உங்க நல்லதுக்கு தானே நாங்க...." என்று பேசிய மதுவை கை காட்டி நிறுத்திய சுலோச்சனா
"உன்னால தான் இத்தனை பிரச்சினையும்...நீ மட்டும் அருள் வாழ்க்கையில் வராம இருந்திருந்தால் என் பொண்ணு வாழ்க்கை நல்லா அமைஞ்சிருக்கும்....எல்லாம் உன்னால தான் பாவி...." என்றவரின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார் லோகநாதன்.
லோகநாதனை அங்கு எதிர்பார்க்காத சுலோச்சனா
"அண்ணா......" என்று அதிர்ந்து போய் நிற்க
"நீ உண்மையாகவே திருந்திட்டேனு நினைச்சேன்.....ஆனா நீ.....சே.....உன்னை எல்லாம் என் தங்கச்சினு சொல்லவே அசிங்கமாக இருக்கு......எந்த சொத்துக்காக நீ இப்படி பேயாட்டம் திரிஞ்சியோ அந்த சொத்து எல்லாம் எப்போவோ உன் கணவர் பேர்லயும், உன் பொண்ணு பேர்லயும் எழுதி வைச்சிட்டேன்.....இந்த விஷயம் எல்லாருக்கும் தெரியும்....இருந்தும் நீ திருந்தணும்னு இத்தனை நாள் பொறுமையாக இருந்தா நீ இப்படி பண்ணிட்டு இருக்க....
இப்போ சொல்றேன்....மரியாதையாக இந்த வீட்டை விட்டு போயிடு....உனக்கும் இந்த குடும்பத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை....இனி உன் வீடு, சொத்து எல்லாமே ஷோபாவுக்கும், வேல்முருகனுக்கும் தான்.....நீ போகலாம்..." என்று வாசலை நோக்கி லோகநாதன் கை காட்ட அதிர்ச்சியடைந்து நின்றார் சுலோச்சனா.
கோபம் தலைக்கேற அனைவரையும் முறைத்து பார்த்த சுலோச்சனா
"எல்லாத்துக்கும் காரணம் இதோ இந்த மது தானே.....இவளை...." என்று வேக எட்டு வைத்து மதுவை நெருங்கியவர் தன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவள் வயிற்றில் குத்தப் போக மதுவை பாய்ந்து அருள் தன் புறம் இழுத்து கொண்டான்.