சிறிது நேரம் வரை காத்திருந்த மது
"இப்படி நிற்குறத ஸ்டெப்ஸ்லயே போயிடலாம் வா ஸ்ரீ" என்று விட்டு ஸ்ரீதரின் கை பற்றி அழைத்து சென்றாள்.
அப்போது லிப்ட்டும் திறந்து விட
"மது லிப்ட் ஓபன் ஆகிடுச்சு போல. வா மது லிப்ட்லயே போயிடலாம்" என்று ஸ்ரீதர் மதுவை அழைக்க
"நோ இன்னைக்கு நீ நாலு ப்ளோரையும் ஸ்டெப்ஸ்ல நடந்து தான் இறங்கணும் வா" என்று விட்டு செல்ல
"எங்கே செல்லும் இந்த பாதை.....
யாரோ யாரோ அறிவாரோ....." என்று பாடிக் கொண்டே படியிறங்கி சென்றான் ஸ்ரீதர்.
லோகநாதனின் அறைக்குச் சென்ற அருளும், வினித்தும் அறையில் லோகநாதன் மாத்திரம் இருப்பதை பார்த்தனர்.
"ஸாரி லோகு கொஞ்சம் லேட் ஆகிடுச்சு. எங்கே அவங்க??" என்று அருள் கேட்கவும்
"ஏன்டா அருள் இந்தா பக்கத்தில் இருக்குற ஹாஸ்பிடல்ல இருந்து வர்றதுக்கு உனக்கு இவ்வளவு நேரமா? ஏன்பா வினித் இவன் கூட சேர்ந்து நீயும் கெட்டுப் போயிட்டியா??" என்று கேட்டார் லோகநாதன்.
"ஐயோ மாமா!!! நீங்க போன் பண்ணுணீங்கனு சொன்ன உடனேயே நான் கிளம்பி வந்துட்டேன். டிராபிக்ல தான் கொஞ்சம் லேட் ஆகிடுச்சு" என்று வினித் விளக்கம் அளிக்க
"நீங்க வருவீங்கனு காத்துட்டு இருந்த அந்த பசங்க இப்போ தான் போறாங்க. நீங்க அவசரமாக வராம விட்டதும் பரவாயில்லை. அவங்க டிசைன்ஸ் ஆல்பம் வேற கொண்டு வரல. அதனால சன்டே வீட்டுக்கு வர சொல்லிட்டேன். அங்க வைச்சே பேசிக்கலாம் தானே? உங்க இரண்டு பேருக்கும் ஓகே தானே?" என்று லோகநாதன் கேட்க
"சன்டேவா???" என யோசித்தான் அருள்.
"ஏன்டா??? சன்டே ஃப்ரீ தானே நமக்கு?" என்று வினித் கேட்க
"சடர்டே, சன்டே திருச்சியில் ஒரு கான்பிரன்ஸ் இருக்குடா. கண்டிப்பாக போகணும்" என்ற அருள் சிறிது நேரம் யோசித்து விட்டு
"பார்க்கலாம் சடர்டே மட்டும் தான் இம்ப்பார்ட்டண்ட்னு சீப் டாக்டர் சொன்னாரு. சன்டே எப்படியும் வீட்ட வர்றதுக்கு ட்ரை பண்ணுறேன். அம்மா வேற போன் பண்ணி வரச் சொல்லிட்டே இருந்தாங்க" என்று அருள் கூறவும்
"நல்ல வேளை இரண்டு நாள் அந்த கர்ண கொடூரமான இசை மழையில் இருந்து நான் தப்பிட்டேன்டா சாமி" என்று அருளின் காதில் கூறினான் வினித்.
வினித்தை முறைத்து பார்த்த அருள் சட்டென்று அவன் காலில் ஒரு மிதி மிதிக்க
"அய்யய்யோ!!! உலக்கை காலால மிதிச்சுட்டானே!! என் கால் போச்சே!! ஐயோ!! ஐயோ!!" என்று தன் காலைத் தூக்கி கொண்டு அலறினான் வினித்.
"ஏன்டா அருள் அவன் காலை மிதிச்ச??" என்று லோகநாதன் கேட்கவும்
"சும்மா ஒரு வேண்டுதல் தான் லோகு. அப்புறம் பிஸ்னஸ் எல்லாம் எப்படி போகுது?" என்று பேச்சை மாற்றினான் அருள்.
அதன் பிறகு அரசியல், நாட்டு நடப்பு என அவர்களின் பேச்சு வளர்ந்து கொண்டே சென்றது.
ஆபிஸ் வந்திறங்கிய மது முதலில் தன்னுடைய அறைக்குள் சென்று டிசைன்ஸ் ஆல்பத்தை தேடினாள்.
எங்கு தேடியும் ஆல்பம் கிடைக்காமல் போக சோர்ந்து போன மது ஸ்ரீதரைப் பார்க்க அவனோ போனில் மூழ்கி இருந்தான்.
மேஜை மேல் இருந்த டேபிள் வெயிட்டை எடுத்து ஸ்ரீதரின் மேல் தூக்கி போடப் பார்த்த மது
"சேச்சே டேபிள் வெயிட் உடைஞ்சிடும்" என்று நினைத்து கொண்டவள் அருகில் இருந்த பேப்பர் ஒன்றை எடுத்து சுருட்டி அவன் மேல் எறிந்தாள்.
"என்னைப் பார்த்தா குப்பை தொட்டி மாதிரியா இருக்கு?? எதுக்கு இப்போ பேப்பரை எறிஞ்ச?" என்று ஸ்ரீதர் கேட்க
"நான் இங்க தனியா இருந்து ஆல்பத்தை தேடுறேன். கொஞ்சம் வந்து ஹெல்ப் பண்ணலாம்னு உன் புத்திக்கு தோணலயா??" என்று கேட்டாள் மது.
"உன் மேல செம காண்டுல இருக்கேன். இன்னைக்கு அங்கே ரிசப்சன்ல இருந்த பொண்ண நான் சைட் அடிச்சு மொக்கை வாங்குனத அர்ஜுன் கிட்ட எதுக்கு சொன்ன?" என்று ஸ்ரீதர் கேட்கவும் திருதிருவென்று விழித்தாள் மது.
"நானா?? நான் யார்கிட்டயும் எதுவும் சொல்லலயே!!" என்று மது சமாளிப்பாக கூற அவள் காதைப் பிடித்து திருகினான் ஸ்ரீதர்.
"ஸ்ரீ வலிக்குது விடு ஸ்ரீ..." என்று மது கத்த அவள் காதில் இருந்து கையை எடுத்த ஸ்ரீதர்
"நீ அம்மாகிட்டயோ, அப்பாகிட்டயோ ஏன் இங்க கூட்டிப் பெருக்குற ஆயாகிட்ட கூட சொல்லி இருந்தாலும் பரவாயில்லை. அவன்கிட்ட போய் சொல்லிருக்க. அவன் ஒரு பி.பி.ஸி ஆச்சே. இந்நேரத்துக்கு ஊர் புல்லா சொல்லி இருப்பான். இனி நான் எப்படி பக்கத்து வீட்டு மாலா, எதிர் வீட்டு கமலா, பின் வீட்டு வாணி முகத்தை எல்லாம் பார்ப்பேன்??" என்று கூறவும்
அவனை பார்த்து சிரித்த மது
"இனியாவது அந்த பொண்ணுங்க எல்லாம் உன் அறுவையில் இருந்து தப்பிக்கட்டுமே!!!" என்று கூறினாள்.
மேஜை மேல் இருந்த ஒரு பைலை ஸ்ரீதர் தூக்க அதிலிருந்து அந்த டிசைன் ஆல்பம் வீழ்ந்தது.
"ஹேய்...ஸ்ரீ!! பரவாயில்லையே ஆல்பத்தை கண்டு பிடிச்சிட்டியே வெல் டன்" என்று ஆல்பத்தை எடுத்து கொண்டு
ஸ்ரீதரின் கையைக் குலுக்கி பாராட்டிய மது
"நான் சாப்பிட கேன்டீன் போறேன். நீயும் வர்றதா இருந்தா வா" என்று விட்டு செல்ல அவளைத் தொடர்ந்து சென்றான் ஸ்ரீதர்.
சிறிது நேரம் லோகநாதனோடு பேசி கொண்டிருந்த அருளும், வினித்தும் வேலை
இருப்பதாக கூறி விட்டு புறப்பட்டு சென்றனர்.
மாலை வேளை எல்லா வேலைகளையும் முடித்த மது ஆபீஸை பூட்டி விட்டு வெளியேறி வர அவள் முன்னால் வந்து காரை நிறுத்தினான் ஸ்ரீதர்.
"இப்படி நிற்குறத ஸ்டெப்ஸ்லயே போயிடலாம் வா ஸ்ரீ" என்று விட்டு ஸ்ரீதரின் கை பற்றி அழைத்து சென்றாள்.
அப்போது லிப்ட்டும் திறந்து விட
"மது லிப்ட் ஓபன் ஆகிடுச்சு போல. வா மது லிப்ட்லயே போயிடலாம்" என்று ஸ்ரீதர் மதுவை அழைக்க
"நோ இன்னைக்கு நீ நாலு ப்ளோரையும் ஸ்டெப்ஸ்ல நடந்து தான் இறங்கணும் வா" என்று விட்டு செல்ல
"எங்கே செல்லும் இந்த பாதை.....
யாரோ யாரோ அறிவாரோ....." என்று பாடிக் கொண்டே படியிறங்கி சென்றான் ஸ்ரீதர்.
லோகநாதனின் அறைக்குச் சென்ற அருளும், வினித்தும் அறையில் லோகநாதன் மாத்திரம் இருப்பதை பார்த்தனர்.
"ஸாரி லோகு கொஞ்சம் லேட் ஆகிடுச்சு. எங்கே அவங்க??" என்று அருள் கேட்கவும்
"ஏன்டா அருள் இந்தா பக்கத்தில் இருக்குற ஹாஸ்பிடல்ல இருந்து வர்றதுக்கு உனக்கு இவ்வளவு நேரமா? ஏன்பா வினித் இவன் கூட சேர்ந்து நீயும் கெட்டுப் போயிட்டியா??" என்று கேட்டார் லோகநாதன்.
"ஐயோ மாமா!!! நீங்க போன் பண்ணுணீங்கனு சொன்ன உடனேயே நான் கிளம்பி வந்துட்டேன். டிராபிக்ல தான் கொஞ்சம் லேட் ஆகிடுச்சு" என்று வினித் விளக்கம் அளிக்க
"நீங்க வருவீங்கனு காத்துட்டு இருந்த அந்த பசங்க இப்போ தான் போறாங்க. நீங்க அவசரமாக வராம விட்டதும் பரவாயில்லை. அவங்க டிசைன்ஸ் ஆல்பம் வேற கொண்டு வரல. அதனால சன்டே வீட்டுக்கு வர சொல்லிட்டேன். அங்க வைச்சே பேசிக்கலாம் தானே? உங்க இரண்டு பேருக்கும் ஓகே தானே?" என்று லோகநாதன் கேட்க
"சன்டேவா???" என யோசித்தான் அருள்.
"ஏன்டா??? சன்டே ஃப்ரீ தானே நமக்கு?" என்று வினித் கேட்க
"சடர்டே, சன்டே திருச்சியில் ஒரு கான்பிரன்ஸ் இருக்குடா. கண்டிப்பாக போகணும்" என்ற அருள் சிறிது நேரம் யோசித்து விட்டு
"பார்க்கலாம் சடர்டே மட்டும் தான் இம்ப்பார்ட்டண்ட்னு சீப் டாக்டர் சொன்னாரு. சன்டே எப்படியும் வீட்ட வர்றதுக்கு ட்ரை பண்ணுறேன். அம்மா வேற போன் பண்ணி வரச் சொல்லிட்டே இருந்தாங்க" என்று அருள் கூறவும்
"நல்ல வேளை இரண்டு நாள் அந்த கர்ண கொடூரமான இசை மழையில் இருந்து நான் தப்பிட்டேன்டா சாமி" என்று அருளின் காதில் கூறினான் வினித்.
வினித்தை முறைத்து பார்த்த அருள் சட்டென்று அவன் காலில் ஒரு மிதி மிதிக்க
"அய்யய்யோ!!! உலக்கை காலால மிதிச்சுட்டானே!! என் கால் போச்சே!! ஐயோ!! ஐயோ!!" என்று தன் காலைத் தூக்கி கொண்டு அலறினான் வினித்.
"ஏன்டா அருள் அவன் காலை மிதிச்ச??" என்று லோகநாதன் கேட்கவும்
"சும்மா ஒரு வேண்டுதல் தான் லோகு. அப்புறம் பிஸ்னஸ் எல்லாம் எப்படி போகுது?" என்று பேச்சை மாற்றினான் அருள்.
அதன் பிறகு அரசியல், நாட்டு நடப்பு என அவர்களின் பேச்சு வளர்ந்து கொண்டே சென்றது.
ஆபிஸ் வந்திறங்கிய மது முதலில் தன்னுடைய அறைக்குள் சென்று டிசைன்ஸ் ஆல்பத்தை தேடினாள்.
எங்கு தேடியும் ஆல்பம் கிடைக்காமல் போக சோர்ந்து போன மது ஸ்ரீதரைப் பார்க்க அவனோ போனில் மூழ்கி இருந்தான்.
மேஜை மேல் இருந்த டேபிள் வெயிட்டை எடுத்து ஸ்ரீதரின் மேல் தூக்கி போடப் பார்த்த மது
"சேச்சே டேபிள் வெயிட் உடைஞ்சிடும்" என்று நினைத்து கொண்டவள் அருகில் இருந்த பேப்பர் ஒன்றை எடுத்து சுருட்டி அவன் மேல் எறிந்தாள்.
"என்னைப் பார்த்தா குப்பை தொட்டி மாதிரியா இருக்கு?? எதுக்கு இப்போ பேப்பரை எறிஞ்ச?" என்று ஸ்ரீதர் கேட்க
"நான் இங்க தனியா இருந்து ஆல்பத்தை தேடுறேன். கொஞ்சம் வந்து ஹெல்ப் பண்ணலாம்னு உன் புத்திக்கு தோணலயா??" என்று கேட்டாள் மது.
"உன் மேல செம காண்டுல இருக்கேன். இன்னைக்கு அங்கே ரிசப்சன்ல இருந்த பொண்ண நான் சைட் அடிச்சு மொக்கை வாங்குனத அர்ஜுன் கிட்ட எதுக்கு சொன்ன?" என்று ஸ்ரீதர் கேட்கவும் திருதிருவென்று விழித்தாள் மது.
"நானா?? நான் யார்கிட்டயும் எதுவும் சொல்லலயே!!" என்று மது சமாளிப்பாக கூற அவள் காதைப் பிடித்து திருகினான் ஸ்ரீதர்.
"ஸ்ரீ வலிக்குது விடு ஸ்ரீ..." என்று மது கத்த அவள் காதில் இருந்து கையை எடுத்த ஸ்ரீதர்
"நீ அம்மாகிட்டயோ, அப்பாகிட்டயோ ஏன் இங்க கூட்டிப் பெருக்குற ஆயாகிட்ட கூட சொல்லி இருந்தாலும் பரவாயில்லை. அவன்கிட்ட போய் சொல்லிருக்க. அவன் ஒரு பி.பி.ஸி ஆச்சே. இந்நேரத்துக்கு ஊர் புல்லா சொல்லி இருப்பான். இனி நான் எப்படி பக்கத்து வீட்டு மாலா, எதிர் வீட்டு கமலா, பின் வீட்டு வாணி முகத்தை எல்லாம் பார்ப்பேன்??" என்று கூறவும்
அவனை பார்த்து சிரித்த மது
"இனியாவது அந்த பொண்ணுங்க எல்லாம் உன் அறுவையில் இருந்து தப்பிக்கட்டுமே!!!" என்று கூறினாள்.
மேஜை மேல் இருந்த ஒரு பைலை ஸ்ரீதர் தூக்க அதிலிருந்து அந்த டிசைன் ஆல்பம் வீழ்ந்தது.
"ஹேய்...ஸ்ரீ!! பரவாயில்லையே ஆல்பத்தை கண்டு பிடிச்சிட்டியே வெல் டன்" என்று ஆல்பத்தை எடுத்து கொண்டு
ஸ்ரீதரின் கையைக் குலுக்கி பாராட்டிய மது
"நான் சாப்பிட கேன்டீன் போறேன். நீயும் வர்றதா இருந்தா வா" என்று விட்டு செல்ல அவளைத் தொடர்ந்து சென்றான் ஸ்ரீதர்.
சிறிது நேரம் லோகநாதனோடு பேசி கொண்டிருந்த அருளும், வினித்தும் வேலை
இருப்பதாக கூறி விட்டு புறப்பட்டு சென்றனர்.
மாலை வேளை எல்லா வேலைகளையும் முடித்த மது ஆபீஸை பூட்டி விட்டு வெளியேறி வர அவள் முன்னால் வந்து காரை நிறுத்தினான் ஸ்ரீதர்.