ஹாய்!! ஹலோ!! ப்ரெண்ட்ஸ்!!!
சென்ற பதிவுக்கு லைக், கமெண்ட்ஸ் அளித்த அனைவருக்கும் நன்றி!!! நன்றி!!!
தன் கையில் இருந்த திருமண அழைப்பிதழைப் பார்த்த அருள்
"யாரோட வெடிங் இன்விடேஷன் இது? 2016னு டேட் போட்டு இருக்கு" என்று தனக்குள் பேசி கொண்டே அந்த திருமண அழைப்பிதழைப் பிரித்து பார்த்தான்.
மணமகன் என்ற இடத்தில் கார்த்திக் என்றும், மணமகள் என்று இருந்த இடத்தில் மதுமிதா என்ற பெயர் இருக்கவும் யோசித்து பார்த்த அருள்
"இந்த இரண்டு நேமும் நான் இதுக்கு முன்னாடி கேள்வி பட்ட மாதிரியே இல்லையே!!" என்று நினைத்து கொண்டவன்
"வினித் கிட்ட கேட்கலாம்" என்று விட்டு வினித்தைத் தேடி சென்றான்.
"வினித்....வினித்...." என்று அழைத்தவாறு அருள் வரவும் போன் பேசுவதை நிறுத்தி விட்டு வந்த வினித்
"என்ன அருள்?? ஏதாவது பிரச்சினையா??" என்று கேட்டான்.
"இந்த வெடிங் இன்விடேஷன் யாரோடது வினித்? இதுல இருக்குற நேம் எதுவும் நமக்கு ரிலேடட் ஆன மாதிரி தெரியலையே!" என்று அருள் கூறவும்
அந்த திருமண அழைப்பிதழை வாங்கி பார்த்தான் வினித்.
கையில் இருந்த போனை காதில் வைத்த வினித்
"மீனும்மா நான் கொஞ்சம் லேட்டா போன் பண்ணுறேன். ஒரு சின்ன வேளை இருக்கு" என்று விட்டு போனை கட் செய்தான்.
"இந்த இன்விடேஷனை எங்க இருந்துடா எடுத்த? எவ்வளவு நாளா இதை தேடுறேன் தெரியுமா?" என்று வினித் கேட்கவும்
குழப்பமாக அவனைப் பார்த்த அருள்
"உனக்கு தெரிஞ்சவங்களா??" என்று கேட்டான்.
"அட மக்கு சாம்பிராணியே!!! இது உனக்கு இம்ப்பார்ட்டண்ட் ஆன இன்விடேஷன்டா!" என்று வினித் கூறவும்
"நீ புரியுற மாதிரியே பேச மாட்டியாடா?" என்று கேட்டான் அருள்.
"என் பாசத்துக்குரிய நண்பா!! இது நீ இரண்டு வருஷமா வெயிட் பண்ணிட்டு இருக்கியே உன் பெயர் தெரியாத ஏஞ்சல் அவங்க கிட்ட இருந்து எடுத்த இன்விடேஷன்" என்று வினித் கூறவும்
அதிர்ச்சியாக அவனை பார்த்தான் அருள்.
"அவகிட்ட இருந்தா எப்படிடா? எங்கே இருந்துடா எடுத்த? இது யாரோடது? சொல்லுடா!" என்று அருள் பதட்டத்துடன் கேட்கவும்
"பொறுமை!! பொறுமை!! இந்த இன்விடேஷன் யாரோடதுனு எனக்கு தெரியாது. பட் அந்த பொண்ணு கிட்ட இருந்து எடுத்தேன். செகன்ட் டைம் அந்த பொண்ண மால்ல மீட் பண்ணப்போ அவகிட்ட நாலு தடியனுங்க வம்பு பண்ணிட்டு இருந்தாங்கனு நீ போனலே. அப்போ அந்த பொண்ணு கைல இருந்து இந்த இன்விடேஷன் விழுந்துச்சு. அவ பார்க்காம போயிட்டா. நான் எடுத்து வைச்சேன்.
உன் கிட்ட தர்றதுக்கு மறந்து போயிட்டேன்.
அதுக்கு அப்புறம் நீ அந்த பொண்ண பத்தி பேசுறப்போலாம் இந்த இன்விடேஷனைத் தேடுனேன் கிடைக்கல. இரண்டு வருஷம் கழிச்சு இன்னைக்கு கிடைச்சுருக்கு பாரேன்" என்று வினித் ஆச்சரியப்பட்டவனாக கூற
அவனை கட்டித் தழுவி அவன் கன்னத்தில் முத்தமிட்டான் அருள்.
"அய்யே!!! சீ!!!" என்று தன் கன்னத்தை அழுந்த துடைத்து கொண்ட வினித்
"நான் ஆம்பள டா. நீ கிஸ் பண்றதுக்காகவா என் கன்னத்தை இவ்வளவு பொலிஸா, பளபளப்பாக வைச்சிருக்கேன்??" என்று கேட்கவும்
"அதெல்லாம் விடுடா. அப்போ அவ இந்த இன்விடேஷன் வைச்சிருந்தானா அவளுக்கு சொந்தமான யாரோ ஒருத்தரோட வெடிங்கா இது இருந்துருக்கலாம் இல்ல??" என்று கேட்டான் அருள்.
"ஹ்ம்ம்ம்.... யாஹ் ரைட். மே பீ அந்த பொண்ணோட வெடிங் இன்விடேஷனாக் கூட இருக்கலாம்" என்று வினித் கூறவும் கொலைவெறியுடன் அவனை முறைத்து பார்த்தான் அருள்.
அருளின் முறைப்பை பார்த்த வினித்
"நான் அப்படி சொல்லலடா. அவங்க வீட்ல யாரோடயும் வெடிங்கா கூட இருக்கலாம்னு சொல்ல வந்தேன்" என்று கூற
"அது....." என்று ஒரு விரல் நீட்டி வினித்தை எச்சரித்தான் அருள்.
"இங்க பாரு இதுல ஒரே ஒரு வீட்டு அட்ரஸ் மட்டும் தான் போட்டுருக்கு. ஷோ இந்த அட்ரஸ்ல போய் கேட்டா அந்த பொண்ணப் பத்தி ஏதாவது ஒரு டீடெய்ல் கிடைக்கலாம்லே" என்று அருள் கூறவும்
"உன் அறிவுல பெட்ரோல் ஊத்தி கொளுத்த. அந்த பொண்ணோட பேர், ஊர் எதுவுமே உனக்கு தெரியாது. அட்லீஸ்ட் அவ போட்டோ கூட இல்ல அப்புறம் எப்படிடா கண்டுபிடிப்ப?" என்று கேட்டான் வினித்.
"அவ பேர், ஊர் தெரியாது தான். பட் அவ போட்டோ இல்லனு யாரு சொன்னா. அதெல்லாம் என் கிட்ட இருக்கு. நாளைக்கு முதல் வேலை இந்த அட்ரஸுக்கு போய் என் ஏன்ஜலைப் பத்தி டீடெய்ல்ஸ் தெரிஞ்சுக்குறது தான். ஷோ காலையில ஸார்ப்பா எட்டு மணிக்கு ரெடியா இருடா என் பாசமிகு மச்சானே!!!" என்று கூறி விட்டு உல்லாசமாக விசிலடித்தபடியே சென்றான் அருள்.
"இவன் கூட தானே நான் இருந்தேன் எப்படி போட்டோ எடுத்தான்??" என்று வினித் யோசிக்க அவன் போன் அடித்தது.
'மீனு' என்ற பெயரைப் பார்த்ததும் மற்ற எல்லா சிந்தனைகளும் பின்னால் சென்று விட மறுபடியும் போனில் மூழ்கி போனான் வினித்.
அவனுடைய அறைக்குள் வந்து கதவைத் தாழிட்டு கொண்ட அருள் அவனுடைய கப்போர்ட்டைத் திறக்க அதனுள் பெரிய அளவில் லெமினேட் செய்யப்பட்டு இருந்தது மதுவின் புகைப்படம்.
அவளை முதன் முதலாக மாலில் வைத்து பார்த்ததும் அவளுக்கே தெரியாமல் அவன் திருட்டுத்தனமாக எடுத்த புகைப்படம்.
ஆசையாக அந்த புகைப்படத்தை வருடிக் கொண்ட அருள்
"மை டியர் ஏன்ஜல்!!! உன்னை தேடி இந்த மாமன் வந்துட்டே இருக்கேன்" என்று கூறி கொண்டே அந்த புகைப்படத்தை ஆரத்தழுவிய படி கட்டிலில் சரிந்தான்.
அவன் மனப் பெட்டகத்தில் சேர்த்து வைத்திருந்த பொக்கிஷமான அந்த தருணம் அவன் கண் முன்னே காட்சியாக விரிந்தது.
இரண்டு வருடங்களுக்கு முன்னர்...
"டேய் அருள்!!! சீக்கிரம் வாடா. உனக்கு ரெடியாக இவ்வளவு நேரமா? பொண்ணுங்கள விட லேட்டா ரெடி ஆகுற!" என வினித் கூறிக் கொண்டிருக்கும் போதே அவனுடைய அறையில் இருந்து வெளியேறி வந்தான் அருள்.
"எதுக்குடா கத்துற?? மாலுக்கு போகப் போறோம். அங்க அழகழகாக பொண்ணுங்க வருவாங்க. நாம கொஞ்சம் பெர்ஸ்னாலிட்டியா போனா ஏதாவது பொண்ணு நம்மள பார்த்து இம்ப்ரெஸ் ஆகலாம்லே" என்று அருள் கண்ணடித்து கூற
"என்ன கொடுமை சார் இது???" என்று கூறி கொண்டே அறையை விட்டு வெளியேறினான் வினித்.
பைக்கை பார்க் செய்து விட்டு அருளும், வினித்தும் மாலுக்குள் நுழைந்தனர்.
ஒவ்வொரு தளமாக ஏறி இறங்கி நடந்து சென்று கொண்டிருந்த வினித்தைப் பார்த்த அருள்
"ஏன்டா உனக்கு வாக்கிங் போக இந்த மால் தானா கிடைச்சது? இரண்டு மணி நேரமாக இப்படியே அலைஞ்சு திரிய வைக்குறியேடா! உனக்கே இது அடுக்குமா??" என்று கேட்டான்.
"நெக்ஸ்ட் வீக் மீனுவோட பர்த்டே டா. அது தான் என்ன கிப்ட் வாங்குறதுனு ஒவ்வொரு ப்ளோரா பார்த்துட்டே வரேன்" என்று வினித் கூறவும்
"அடப்பாவி!!! என் தங்கச்சிக்கு கிப்ட் வாங்க என்னையே கூட்டிட்டு வந்துருக்கியா?? நீயெல்லாம் நல்லா வருவடா!!" என்று கூறினான் அருள்.
"என்னால இதுக்கு மேல நடக்க முடியாது. நீயே போய் அலைந்து திரிந்து கிப்ட் வாங்கிட்டு வா" என்று அருள் கூறவும்
"ஓகே..." என்று தோளைக் குலுக்கி கூறி விட்டு சென்றான் வினித்.
"கால் வேற ரொம்ப வலிக்குதே!! எங்கேயாவது போய் உட்காரலாம்" என்று எண்ணி கொண்டு அருள் திரும்ப அவன் மேல் பூங்குவியலாய் வந்து வீழ்ந்தாள் ஒரு பெண்.
"எவ அவ??" என்று கோபத்துடன் நிமிர்ந்த அருள் தன் மேல் மோதி நின்ற பெண்ணை பார்த்து அசந்து போனான்.
தன் மேல் மோதிய பதட்டத்தில் படபடவென பட்டாம்பூச்சி போல அடித்துக் கொண்ட விழிகள், கூர்மையான மூக்கு, கொவ்வைப் பழம் போன்ற உதடுகள், பளபளக்கும் கன்னங்கள், அசைந்தாடும் அவள் கம்மல் என மெய் மறந்து அவளை ரசித்து கொண்டிருந்தான் அருள்.
அவனிடமிருந்து விலகி கொண்டவள்
"ஸாரி ஸார் பசங்க கூட விளையாடிட்டு வந்து தெரியாம இடிச்சுட்டேன் ஸாரி ஸார்..." என்று விட்டு சிட்டாக அவள் பறந்து சென்று விட அவளின் பின்னால் மந்திரித்து விட்டவன் போல் சென்றான் அருள்.
அந்த தருணம் பார்த்து எங்கிருந்தோ
அழகியே மேரி மீ....
மேரி மீ....
என்ற பாடல் காற்றில் கலந்து அவனின் செவிகளை வந்தடைந்தது.
"செம்ம...சிட்டுவேஷன் சாங் தான்..." என்று அந்த பாடலை ஹம் செய்தவாறே அவள் செல்லும் வழியெல்லாம் அவள் பின்னாலேயே சென்றவன் அவளின் ஒவ்வொரு செயலையும் ரசித்து கொண்டு நின்றான்.
அவள் பார்க்காத தருணம் அவளுக்கே தெரியாமல் அவளை போனில் புகைப்படம் எடுத்தவன்
"ஸாரி ஏஞ்சல் உன் பெர்மிஷன் இல்லாமல் உன்ன போட்டோ எடுத்துட்டேன் ஸாரி ஏஞ்சல்..." என்று மானசீகமாக மனதினுள் அவளிடம் மன்னிப்பு கேட்டு கொண்டான்.
அவள் மாலை விட்டு வெளியேறி செல்வதைப் பார்த்தவன் அவசரமாக அவள் பின்னாலேயே சென்று அவள் செல்லும் இடத்தை பார்க்கலாம் என்று வேகமாக படியிறங்கி சென்று கொண்டிருக்கையில் அருளின் தொலைபேசி சிணுங்கியது.
போனை எடுத்து காதில் வைத்தவன்
"ஹலோ...அருள்!!! எங்கேடா இருக்க?" என்று வினித்தின் குரலில் சுய நினைவுக்கு வந்தான்.
"ஹலோ....ஹலோ....அருள்....நான் பேசுறது கேட்குதா? இல்லையா?" என்று வினித் மீண்டும் மீண்டும் கேட்கவும்
"சொல்லுடா வினித்!!! நான் என்ட்ரன்ஸ் ஏரியால நிற்குறேன்" என்று கூறினான் அருள்.
"அங்கே எதுக்குடா போன? சரி அங்கேயே நில்லு...நான் வரேன்" என்று விட்டு போனை வைத்த வினித் அருள் நின்ற பகுதிக்கு சென்றான்.
அருள் யாரையோ மும்முரமாக தேடிக் கொண்டிருப்பதைப் பார்த்த வினித்
"யாரடா தேடிட்டு இருக்க??" என்று கேட்கவும்
"யாரையும் இல்லையே!!..சரி நீ கிப்ட் வாங்கிட்டியா? போகலாமா?" என்று அருள் கூற
அவனை வித்தியாசமாக பார்த்த வினித்
"சரி போகலாம்.." என்று விட்டு பார்க்கிங்கை நோக்கி சென்றான்.
அறைக்கு வந்த சேர்ந்த பின்பும் அருளுக்கு அந்த பெயர் தெரியாத ஏஞ்சலின் நினைவாகவே இருந்தது.
இரவு தூங்க சென்றவன் புரண்டு புரண்டு படுத்தும் அவன் கண்களை தூக்கம் எட்டவில்லை.
அருள் அவனது போனை எடுத்து அதிலிருந்த அவளுடைய போட்டோவை ரசித்து பார்த்தான்.
"உன்னை ஒரு நாள் தானே பார்த்தேன் ஏஞ்சல். என்னை இந்தளவிற்கு டிஸ்டர்ப் பண்ணிட்டே. ஏன்??ஏன்???" என்று யோசித்துக் கொண்டிருந்தான் அருள்.
"ஒரு வேளை இது தான் காதலா????...." என்று அவன் மனம் யோசிக்க ஆயிரம் பட்டாம்பூச்சிகள் அவனை சுற்றி பறப்பதை போல உணர்ந்தான்.
சென்ற பதிவுக்கு லைக், கமெண்ட்ஸ் அளித்த அனைவருக்கும் நன்றி!!! நன்றி!!!
தன் கையில் இருந்த திருமண அழைப்பிதழைப் பார்த்த அருள்
"யாரோட வெடிங் இன்விடேஷன் இது? 2016னு டேட் போட்டு இருக்கு" என்று தனக்குள் பேசி கொண்டே அந்த திருமண அழைப்பிதழைப் பிரித்து பார்த்தான்.
மணமகன் என்ற இடத்தில் கார்த்திக் என்றும், மணமகள் என்று இருந்த இடத்தில் மதுமிதா என்ற பெயர் இருக்கவும் யோசித்து பார்த்த அருள்
"இந்த இரண்டு நேமும் நான் இதுக்கு முன்னாடி கேள்வி பட்ட மாதிரியே இல்லையே!!" என்று நினைத்து கொண்டவன்
"வினித் கிட்ட கேட்கலாம்" என்று விட்டு வினித்தைத் தேடி சென்றான்.
"வினித்....வினித்...." என்று அழைத்தவாறு அருள் வரவும் போன் பேசுவதை நிறுத்தி விட்டு வந்த வினித்
"என்ன அருள்?? ஏதாவது பிரச்சினையா??" என்று கேட்டான்.
"இந்த வெடிங் இன்விடேஷன் யாரோடது வினித்? இதுல இருக்குற நேம் எதுவும் நமக்கு ரிலேடட் ஆன மாதிரி தெரியலையே!" என்று அருள் கூறவும்
அந்த திருமண அழைப்பிதழை வாங்கி பார்த்தான் வினித்.
கையில் இருந்த போனை காதில் வைத்த வினித்
"மீனும்மா நான் கொஞ்சம் லேட்டா போன் பண்ணுறேன். ஒரு சின்ன வேளை இருக்கு" என்று விட்டு போனை கட் செய்தான்.
"இந்த இன்விடேஷனை எங்க இருந்துடா எடுத்த? எவ்வளவு நாளா இதை தேடுறேன் தெரியுமா?" என்று வினித் கேட்கவும்
குழப்பமாக அவனைப் பார்த்த அருள்
"உனக்கு தெரிஞ்சவங்களா??" என்று கேட்டான்.
"அட மக்கு சாம்பிராணியே!!! இது உனக்கு இம்ப்பார்ட்டண்ட் ஆன இன்விடேஷன்டா!" என்று வினித் கூறவும்
"நீ புரியுற மாதிரியே பேச மாட்டியாடா?" என்று கேட்டான் அருள்.
"என் பாசத்துக்குரிய நண்பா!! இது நீ இரண்டு வருஷமா வெயிட் பண்ணிட்டு இருக்கியே உன் பெயர் தெரியாத ஏஞ்சல் அவங்க கிட்ட இருந்து எடுத்த இன்விடேஷன்" என்று வினித் கூறவும்
அதிர்ச்சியாக அவனை பார்த்தான் அருள்.
"அவகிட்ட இருந்தா எப்படிடா? எங்கே இருந்துடா எடுத்த? இது யாரோடது? சொல்லுடா!" என்று அருள் பதட்டத்துடன் கேட்கவும்
"பொறுமை!! பொறுமை!! இந்த இன்விடேஷன் யாரோடதுனு எனக்கு தெரியாது. பட் அந்த பொண்ணு கிட்ட இருந்து எடுத்தேன். செகன்ட் டைம் அந்த பொண்ண மால்ல மீட் பண்ணப்போ அவகிட்ட நாலு தடியனுங்க வம்பு பண்ணிட்டு இருந்தாங்கனு நீ போனலே. அப்போ அந்த பொண்ணு கைல இருந்து இந்த இன்விடேஷன் விழுந்துச்சு. அவ பார்க்காம போயிட்டா. நான் எடுத்து வைச்சேன்.
உன் கிட்ட தர்றதுக்கு மறந்து போயிட்டேன்.
அதுக்கு அப்புறம் நீ அந்த பொண்ண பத்தி பேசுறப்போலாம் இந்த இன்விடேஷனைத் தேடுனேன் கிடைக்கல. இரண்டு வருஷம் கழிச்சு இன்னைக்கு கிடைச்சுருக்கு பாரேன்" என்று வினித் ஆச்சரியப்பட்டவனாக கூற
அவனை கட்டித் தழுவி அவன் கன்னத்தில் முத்தமிட்டான் அருள்.
"அய்யே!!! சீ!!!" என்று தன் கன்னத்தை அழுந்த துடைத்து கொண்ட வினித்
"நான் ஆம்பள டா. நீ கிஸ் பண்றதுக்காகவா என் கன்னத்தை இவ்வளவு பொலிஸா, பளபளப்பாக வைச்சிருக்கேன்??" என்று கேட்கவும்
"அதெல்லாம் விடுடா. அப்போ அவ இந்த இன்விடேஷன் வைச்சிருந்தானா அவளுக்கு சொந்தமான யாரோ ஒருத்தரோட வெடிங்கா இது இருந்துருக்கலாம் இல்ல??" என்று கேட்டான் அருள்.
"ஹ்ம்ம்ம்.... யாஹ் ரைட். மே பீ அந்த பொண்ணோட வெடிங் இன்விடேஷனாக் கூட இருக்கலாம்" என்று வினித் கூறவும் கொலைவெறியுடன் அவனை முறைத்து பார்த்தான் அருள்.
அருளின் முறைப்பை பார்த்த வினித்
"நான் அப்படி சொல்லலடா. அவங்க வீட்ல யாரோடயும் வெடிங்கா கூட இருக்கலாம்னு சொல்ல வந்தேன்" என்று கூற
"அது....." என்று ஒரு விரல் நீட்டி வினித்தை எச்சரித்தான் அருள்.
"இங்க பாரு இதுல ஒரே ஒரு வீட்டு அட்ரஸ் மட்டும் தான் போட்டுருக்கு. ஷோ இந்த அட்ரஸ்ல போய் கேட்டா அந்த பொண்ணப் பத்தி ஏதாவது ஒரு டீடெய்ல் கிடைக்கலாம்லே" என்று அருள் கூறவும்
"உன் அறிவுல பெட்ரோல் ஊத்தி கொளுத்த. அந்த பொண்ணோட பேர், ஊர் எதுவுமே உனக்கு தெரியாது. அட்லீஸ்ட் அவ போட்டோ கூட இல்ல அப்புறம் எப்படிடா கண்டுபிடிப்ப?" என்று கேட்டான் வினித்.
"அவ பேர், ஊர் தெரியாது தான். பட் அவ போட்டோ இல்லனு யாரு சொன்னா. அதெல்லாம் என் கிட்ட இருக்கு. நாளைக்கு முதல் வேலை இந்த அட்ரஸுக்கு போய் என் ஏன்ஜலைப் பத்தி டீடெய்ல்ஸ் தெரிஞ்சுக்குறது தான். ஷோ காலையில ஸார்ப்பா எட்டு மணிக்கு ரெடியா இருடா என் பாசமிகு மச்சானே!!!" என்று கூறி விட்டு உல்லாசமாக விசிலடித்தபடியே சென்றான் அருள்.
"இவன் கூட தானே நான் இருந்தேன் எப்படி போட்டோ எடுத்தான்??" என்று வினித் யோசிக்க அவன் போன் அடித்தது.
'மீனு' என்ற பெயரைப் பார்த்ததும் மற்ற எல்லா சிந்தனைகளும் பின்னால் சென்று விட மறுபடியும் போனில் மூழ்கி போனான் வினித்.
அவனுடைய அறைக்குள் வந்து கதவைத் தாழிட்டு கொண்ட அருள் அவனுடைய கப்போர்ட்டைத் திறக்க அதனுள் பெரிய அளவில் லெமினேட் செய்யப்பட்டு இருந்தது மதுவின் புகைப்படம்.
அவளை முதன் முதலாக மாலில் வைத்து பார்த்ததும் அவளுக்கே தெரியாமல் அவன் திருட்டுத்தனமாக எடுத்த புகைப்படம்.
ஆசையாக அந்த புகைப்படத்தை வருடிக் கொண்ட அருள்
"மை டியர் ஏன்ஜல்!!! உன்னை தேடி இந்த மாமன் வந்துட்டே இருக்கேன்" என்று கூறி கொண்டே அந்த புகைப்படத்தை ஆரத்தழுவிய படி கட்டிலில் சரிந்தான்.
அவன் மனப் பெட்டகத்தில் சேர்த்து வைத்திருந்த பொக்கிஷமான அந்த தருணம் அவன் கண் முன்னே காட்சியாக விரிந்தது.
இரண்டு வருடங்களுக்கு முன்னர்...
"டேய் அருள்!!! சீக்கிரம் வாடா. உனக்கு ரெடியாக இவ்வளவு நேரமா? பொண்ணுங்கள விட லேட்டா ரெடி ஆகுற!" என வினித் கூறிக் கொண்டிருக்கும் போதே அவனுடைய அறையில் இருந்து வெளியேறி வந்தான் அருள்.
"எதுக்குடா கத்துற?? மாலுக்கு போகப் போறோம். அங்க அழகழகாக பொண்ணுங்க வருவாங்க. நாம கொஞ்சம் பெர்ஸ்னாலிட்டியா போனா ஏதாவது பொண்ணு நம்மள பார்த்து இம்ப்ரெஸ் ஆகலாம்லே" என்று அருள் கண்ணடித்து கூற
"என்ன கொடுமை சார் இது???" என்று கூறி கொண்டே அறையை விட்டு வெளியேறினான் வினித்.
பைக்கை பார்க் செய்து விட்டு அருளும், வினித்தும் மாலுக்குள் நுழைந்தனர்.
ஒவ்வொரு தளமாக ஏறி இறங்கி நடந்து சென்று கொண்டிருந்த வினித்தைப் பார்த்த அருள்
"ஏன்டா உனக்கு வாக்கிங் போக இந்த மால் தானா கிடைச்சது? இரண்டு மணி நேரமாக இப்படியே அலைஞ்சு திரிய வைக்குறியேடா! உனக்கே இது அடுக்குமா??" என்று கேட்டான்.
"நெக்ஸ்ட் வீக் மீனுவோட பர்த்டே டா. அது தான் என்ன கிப்ட் வாங்குறதுனு ஒவ்வொரு ப்ளோரா பார்த்துட்டே வரேன்" என்று வினித் கூறவும்
"அடப்பாவி!!! என் தங்கச்சிக்கு கிப்ட் வாங்க என்னையே கூட்டிட்டு வந்துருக்கியா?? நீயெல்லாம் நல்லா வருவடா!!" என்று கூறினான் அருள்.
"என்னால இதுக்கு மேல நடக்க முடியாது. நீயே போய் அலைந்து திரிந்து கிப்ட் வாங்கிட்டு வா" என்று அருள் கூறவும்
"ஓகே..." என்று தோளைக் குலுக்கி கூறி விட்டு சென்றான் வினித்.
"கால் வேற ரொம்ப வலிக்குதே!! எங்கேயாவது போய் உட்காரலாம்" என்று எண்ணி கொண்டு அருள் திரும்ப அவன் மேல் பூங்குவியலாய் வந்து வீழ்ந்தாள் ஒரு பெண்.
"எவ அவ??" என்று கோபத்துடன் நிமிர்ந்த அருள் தன் மேல் மோதி நின்ற பெண்ணை பார்த்து அசந்து போனான்.
தன் மேல் மோதிய பதட்டத்தில் படபடவென பட்டாம்பூச்சி போல அடித்துக் கொண்ட விழிகள், கூர்மையான மூக்கு, கொவ்வைப் பழம் போன்ற உதடுகள், பளபளக்கும் கன்னங்கள், அசைந்தாடும் அவள் கம்மல் என மெய் மறந்து அவளை ரசித்து கொண்டிருந்தான் அருள்.
அவனிடமிருந்து விலகி கொண்டவள்
"ஸாரி ஸார் பசங்க கூட விளையாடிட்டு வந்து தெரியாம இடிச்சுட்டேன் ஸாரி ஸார்..." என்று விட்டு சிட்டாக அவள் பறந்து சென்று விட அவளின் பின்னால் மந்திரித்து விட்டவன் போல் சென்றான் அருள்.
அந்த தருணம் பார்த்து எங்கிருந்தோ
அழகியே மேரி மீ....
மேரி மீ....
என்ற பாடல் காற்றில் கலந்து அவனின் செவிகளை வந்தடைந்தது.
"செம்ம...சிட்டுவேஷன் சாங் தான்..." என்று அந்த பாடலை ஹம் செய்தவாறே அவள் செல்லும் வழியெல்லாம் அவள் பின்னாலேயே சென்றவன் அவளின் ஒவ்வொரு செயலையும் ரசித்து கொண்டு நின்றான்.
அவள் பார்க்காத தருணம் அவளுக்கே தெரியாமல் அவளை போனில் புகைப்படம் எடுத்தவன்
"ஸாரி ஏஞ்சல் உன் பெர்மிஷன் இல்லாமல் உன்ன போட்டோ எடுத்துட்டேன் ஸாரி ஏஞ்சல்..." என்று மானசீகமாக மனதினுள் அவளிடம் மன்னிப்பு கேட்டு கொண்டான்.
அவள் மாலை விட்டு வெளியேறி செல்வதைப் பார்த்தவன் அவசரமாக அவள் பின்னாலேயே சென்று அவள் செல்லும் இடத்தை பார்க்கலாம் என்று வேகமாக படியிறங்கி சென்று கொண்டிருக்கையில் அருளின் தொலைபேசி சிணுங்கியது.
போனை எடுத்து காதில் வைத்தவன்
"ஹலோ...அருள்!!! எங்கேடா இருக்க?" என்று வினித்தின் குரலில் சுய நினைவுக்கு வந்தான்.
"ஹலோ....ஹலோ....அருள்....நான் பேசுறது கேட்குதா? இல்லையா?" என்று வினித் மீண்டும் மீண்டும் கேட்கவும்
"சொல்லுடா வினித்!!! நான் என்ட்ரன்ஸ் ஏரியால நிற்குறேன்" என்று கூறினான் அருள்.
"அங்கே எதுக்குடா போன? சரி அங்கேயே நில்லு...நான் வரேன்" என்று விட்டு போனை வைத்த வினித் அருள் நின்ற பகுதிக்கு சென்றான்.
அருள் யாரையோ மும்முரமாக தேடிக் கொண்டிருப்பதைப் பார்த்த வினித்
"யாரடா தேடிட்டு இருக்க??" என்று கேட்கவும்
"யாரையும் இல்லையே!!..சரி நீ கிப்ட் வாங்கிட்டியா? போகலாமா?" என்று அருள் கூற
அவனை வித்தியாசமாக பார்த்த வினித்
"சரி போகலாம்.." என்று விட்டு பார்க்கிங்கை நோக்கி சென்றான்.
அறைக்கு வந்த சேர்ந்த பின்பும் அருளுக்கு அந்த பெயர் தெரியாத ஏஞ்சலின் நினைவாகவே இருந்தது.
இரவு தூங்க சென்றவன் புரண்டு புரண்டு படுத்தும் அவன் கண்களை தூக்கம் எட்டவில்லை.
அருள் அவனது போனை எடுத்து அதிலிருந்த அவளுடைய போட்டோவை ரசித்து பார்த்தான்.
"உன்னை ஒரு நாள் தானே பார்த்தேன் ஏஞ்சல். என்னை இந்தளவிற்கு டிஸ்டர்ப் பண்ணிட்டே. ஏன்??ஏன்???" என்று யோசித்துக் கொண்டிருந்தான் அருள்.
"ஒரு வேளை இது தான் காதலா????...." என்று அவன் மனம் யோசிக்க ஆயிரம் பட்டாம்பூச்சிகள் அவனை சுற்றி பறப்பதை போல உணர்ந்தான்.