காலையில் எழுந்து தயாரான அருள் என்றும் இல்லாதவாறு மிகவும் படபடப்பாக உணர்ந்தான்.
ஏதோ தவறான விடயம் நடக்கப் போவதாக அவன் மனம் அடித்துக் கொண்டே இருந்தது.
எல்லா எண்ணங்களையும் தூக்கி போட்டவன் அவனுடைய ஏஞ்சலைப் பார்க்கப் போகிறோம் என்ற சந்தோஷ உணர்வுடன் வினித்தைத் தேடி சென்றான்.
அங்கு வினித் அருளிற்கு முதலே தயாராகி நிற்க அவனை வியப்பாக பார்த்தான் அருள்.
"என்னடா அதிசயமாக இருக்கு! எனக்கு முன்னாடியே ரெடி ஆகிட்ட!" என்று அருள் கேட்கவும்
அவனைப் பார்த்த வினித்
"எதுக்கு வீணா வம்பு??? ஒரு வாட்டி அந்த பொண்ண பார்க்கப் போறதுக்கு நீ என்னை எப்படி எழுப்புனனேனு நான் இன்னும் மறக்கலடா. அது தான் காலையில ஆறு மணிக்கு அலாரம் வைச்சு எழும்பி நான் ரெடி ஆகிட்டேன். வா போகலாம்" என்று கூற
அவனைத் தோளோடு அணைத்துக் கொண்ட அருள்
"நண்பேன்டா...." என்று கூற
"அடச்சீ...கையை எடு" என்று விட்டு பைக்கை ஸ்டார்ட் செய்தான் வினித்.
வினித்தின் பைக்கில் ஏறி அமர்ந்து கொண்ட அருள் மனம் படபடவென அடித்துக் கொண்டது.
"ஒரு வேளை நாங்கள் செல்லும் இந்த வீட்டிலேயே அவள் இருந்தால் என்னை பார்த்து அதிர்ச்சி அடைவாளா?? என்னைப் பார்த்து என்ன சொல்வாள்?" என்று பலவிதமான யோசனைகளோடு பயணித்து கொண்டிருந்தான் அருள்.
பல்வேறு நபர்களிடம் வழி கேட்டு கேட்டு பயணித்தவர்கள் இறுதியாக அந்த வீட்டைக் கண்டு பிடித்து வந்து சேர்ந்தனர்.
வீட்டின் கதவை தட்டி விட்டு காத்து நின்ற ஒவ்வொரு நொடியும் அருளுக்கு ஒவ்வொரு யுகங்களாக தோன்றியது.
"என்னடா யாரையும் காணோம்??" என்று அருள் கூறவும்
அவனைப் பார்த்து சிரித்த வினித்
"எதுக்குடா இவ்வளவு டென்சன்?? இப்போ தானே கதவைத் தட்டி இருக்கோம் வருவாங்க இருடா" என்று கூறினாலும் அருளின் பதட்டம் குறையவில்லை.
அப்போது கதவு திறக்கப்படும் ஓசை கேட்டு ஆவலாக கதவையே பார்த்து கொண்டு நின்றான் அருள்.
ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு நபர் வெளியேறி வந்து
"நீங்க யாரு??" என்று அவர்கள் இருவரையும் பார்த்து கேட்டார்.
"இங்க கார்த்திக், மதுமிதானு யாரும் இருக்காங்களா?" என்று வினித் கேட்கவும்
"கார்த்திக், மதுமிதா வா??" என சிறிது நேரம் யோசித்தவர்
"அப்படி யாரும் எனக்கு தெரியாதே தம்பி" என்று கூறவும் மொத்தமாக சோர்ந்து போனான் அருள்.
"ஐயா நல்லா யோசித்து பாருங்க. இரண்டு வருஷத்துக்கு முன்னாடி இந்த கல்யாணப் பத்திரிகை அடிச்சுருக்காங்க. அதுல இந்த வீட்டு அட்ரஸ் தான் போட்டுருக்கு. ப்ளீஸ் கொஞ்சம் யோசித்து சொல்லுங்க" என்று வினித் கேட்கவும் அந்த திருமண அழைப்பிதழை வாங்கி பார்த்தார் அந்த பெரியவர்.
"இரண்டு வருஷத்துக்கு முன்னாடியா?? நாங்க இந்த வீட்டுக்கு குடி வந்து ஒரு வருஷம் தான் தம்பி ஆகுது" என்று அவர் கூறவும்
"அப்போ இதுக்கு முன்னாடி இங்கே இருந்தவங்க பத்தி ஏதாவது உங்களுக்கு தெரியுமா?" என்று ஆவலுடன் கேட்டான் அருள்.
"இல்லை தம்பி. நாங்க இந்த வீட்ட ஹவுஸ் ப்ரோக்கர் நாராயணன் மூலமாக தான் வாங்குனோம். அவருக்கு வேணும்னா தெரிஞ்சுருக்கலாம்" என்று அந்த பெரியவர் கூறினார்.
"நாராயணனா? அவர் எங்கே இருப்பார்?" என்று ஒரு சேர அருளும், வினித்தும் கேட்டனர்.
"அவர்...." என்று யோசித்தவர்
தெருவில் ஒரு நபர் சென்று கொண்டிருக்க அவரை சுட்டிக் காட்டி
"அதோ பச்சை சட்டை போட்டு நடந்து போயிட்டு இருக்காறே அவர் தான் நாராயணன்" என்று கூறவும்
"ரொம்ப நன்றி ஸார்..." என்று விட்டு தெருவில் சென்று கொண்டிருந்த அந்த நபரை நெருங்கி சென்றனர்.
"ஸார் ஒரு நிமிஷம்...." என்று வினித் கூறவும் அவனை திரும்பிப் பார்த்தவர்
"யாரு தம்பி நீங்க???" என்று கேட்டார்.
"ஸார் என்னோட பேரு வினித். இது என் பிரண்ட் அருள்" என்று கூறியவன்
அவர்கள் இருவரும் சிறிது நேரத்திற்கு முன்பு நின்று கொண்டிருந்த வீட்டை சுட்டிக் காட்டி
"இந்த வீட்டுல இரண்டு வருஷத்துக்கு கார்த்திக், மதுமிதானு யாரும் இருந்தாங்களா? அவங்களைப் பத்தி ஏதாவது உங்களுக்கு தெரியுமா?" என்று வினித் கேட்கவும்
சிறிது நேரம் யோசித்து கொண்டு நின்றார் நாராயணன்.
"ஆமா இது நம்ம கார்த்திக் தம்பியோட வீடு தான். இரண்டு வருஷத்துக்கு முன்னாடி அவங்க வீடு காலி பண்ணிட்டு போயிட்டாங்க. கார்த்தி தம்பி அவரோட மாமா பொண்ணு மதுமிதாவோட கல்யாணம்னு இன்விடேஷன்லாம் தந்தாரு. அந்த நேரம் எங்க அம்மாக்கு உடம்புக்கு முடியல. அதனால நாங்க எல்லாரும் ஊருக்கு போயிட்டோம். கல்யாணத்துக்கும் போக கிடைக்கல" என்று வருத்தத்துடன் நாராயணன் கூறவும்
"அப்போ மதுமிதாவையும் உங்களுக்கு தெரியுமா? அவங்க வீடு எங்கே இருக்கு?" என்று கேட்டான் வினித்.
"மதுமிதா கார்த்தியோட மாமா பொண்ணு. சின்ன வயசுல இருந்து அடிக்கடி இங்க வரும் போது பார்த்துருக்கேன். ஆனா அவங்க வீடு எனக்கு தெரியாது தம்பி" என்று அவர் கூறினார்.
"இப்போ கார்த்திக் எங்கே இருக்கார்னு தெரியுமா?" என்று அருள் கேட்கவும்
"அது தெரியாது தம்பி. நான் ஊர்ல இருக்கும் போது ஒரு நாள் கார்த்தியோட அப்பா போன் பண்ணி இந்த வீட்டை யாருக்கும் வித்து கொடுங்க.
நாங்க வேற வீடு மாறிட்டோம்னு சொன்னாரு. அப்புறம் ஒரு இரண்டு மாதம் கழிச்சு வீட்ல இருந்த சாமான்லாம் ஏத்திட்டு இருந்தாங்க. ஏன் ஸார் திடீர்னு வீடு மாறுறீங்கனு கேட்கவும் எல்லாம் என் பையனுக்கு கல்யாணம் பேசுன ராசினு சொன்னாரு. அதுக்கு அப்புறம் நான் அவங்கள பார்க்கல" என்று கூறினார் நாராயணன்.
"ஆமா இதெல்லாம் நீங்க ஏன் கேட்குறீங்க? நீங்க இரண்டு பேரும் யாரு?" என நாராயணன் கேட்கவும்
"நாங்க கார்த்தியோட பிரண்ட்ஸ். அவனோட மேரேஜ்க்கு வர முடியல. அப்போ நாங்க பாரின்ல இருந்தோம். இரண்டு வாரத்துக்கு முன்னாடி தான் இந்தியா வந்தோம். கார்த்திகோட போன் நம்பர் மிஸ் ஆகிடுச்சு. இந்த இன்விடேஷன் மட்டும் தான் எங்க கிட்ட இருந்துச்சு. அது தான் அவரை தேடி வந்தோம்" என்று வினித் கூற
"ஓஹ்...அப்படியா???" என்று கேட்டுக் கொண்டார் நாராயணன்.
ஏதோ தவறான விடயம் நடக்கப் போவதாக அவன் மனம் அடித்துக் கொண்டே இருந்தது.
எல்லா எண்ணங்களையும் தூக்கி போட்டவன் அவனுடைய ஏஞ்சலைப் பார்க்கப் போகிறோம் என்ற சந்தோஷ உணர்வுடன் வினித்தைத் தேடி சென்றான்.
அங்கு வினித் அருளிற்கு முதலே தயாராகி நிற்க அவனை வியப்பாக பார்த்தான் அருள்.
"என்னடா அதிசயமாக இருக்கு! எனக்கு முன்னாடியே ரெடி ஆகிட்ட!" என்று அருள் கேட்கவும்
அவனைப் பார்த்த வினித்
"எதுக்கு வீணா வம்பு??? ஒரு வாட்டி அந்த பொண்ண பார்க்கப் போறதுக்கு நீ என்னை எப்படி எழுப்புனனேனு நான் இன்னும் மறக்கலடா. அது தான் காலையில ஆறு மணிக்கு அலாரம் வைச்சு எழும்பி நான் ரெடி ஆகிட்டேன். வா போகலாம்" என்று கூற
அவனைத் தோளோடு அணைத்துக் கொண்ட அருள்
"நண்பேன்டா...." என்று கூற
"அடச்சீ...கையை எடு" என்று விட்டு பைக்கை ஸ்டார்ட் செய்தான் வினித்.
வினித்தின் பைக்கில் ஏறி அமர்ந்து கொண்ட அருள் மனம் படபடவென அடித்துக் கொண்டது.
"ஒரு வேளை நாங்கள் செல்லும் இந்த வீட்டிலேயே அவள் இருந்தால் என்னை பார்த்து அதிர்ச்சி அடைவாளா?? என்னைப் பார்த்து என்ன சொல்வாள்?" என்று பலவிதமான யோசனைகளோடு பயணித்து கொண்டிருந்தான் அருள்.
பல்வேறு நபர்களிடம் வழி கேட்டு கேட்டு பயணித்தவர்கள் இறுதியாக அந்த வீட்டைக் கண்டு பிடித்து வந்து சேர்ந்தனர்.
வீட்டின் கதவை தட்டி விட்டு காத்து நின்ற ஒவ்வொரு நொடியும் அருளுக்கு ஒவ்வொரு யுகங்களாக தோன்றியது.
"என்னடா யாரையும் காணோம்??" என்று அருள் கூறவும்
அவனைப் பார்த்து சிரித்த வினித்
"எதுக்குடா இவ்வளவு டென்சன்?? இப்போ தானே கதவைத் தட்டி இருக்கோம் வருவாங்க இருடா" என்று கூறினாலும் அருளின் பதட்டம் குறையவில்லை.
அப்போது கதவு திறக்கப்படும் ஓசை கேட்டு ஆவலாக கதவையே பார்த்து கொண்டு நின்றான் அருள்.
ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு நபர் வெளியேறி வந்து
"நீங்க யாரு??" என்று அவர்கள் இருவரையும் பார்த்து கேட்டார்.
"இங்க கார்த்திக், மதுமிதானு யாரும் இருக்காங்களா?" என்று வினித் கேட்கவும்
"கார்த்திக், மதுமிதா வா??" என சிறிது நேரம் யோசித்தவர்
"அப்படி யாரும் எனக்கு தெரியாதே தம்பி" என்று கூறவும் மொத்தமாக சோர்ந்து போனான் அருள்.
"ஐயா நல்லா யோசித்து பாருங்க. இரண்டு வருஷத்துக்கு முன்னாடி இந்த கல்யாணப் பத்திரிகை அடிச்சுருக்காங்க. அதுல இந்த வீட்டு அட்ரஸ் தான் போட்டுருக்கு. ப்ளீஸ் கொஞ்சம் யோசித்து சொல்லுங்க" என்று வினித் கேட்கவும் அந்த திருமண அழைப்பிதழை வாங்கி பார்த்தார் அந்த பெரியவர்.
"இரண்டு வருஷத்துக்கு முன்னாடியா?? நாங்க இந்த வீட்டுக்கு குடி வந்து ஒரு வருஷம் தான் தம்பி ஆகுது" என்று அவர் கூறவும்
"அப்போ இதுக்கு முன்னாடி இங்கே இருந்தவங்க பத்தி ஏதாவது உங்களுக்கு தெரியுமா?" என்று ஆவலுடன் கேட்டான் அருள்.
"இல்லை தம்பி. நாங்க இந்த வீட்ட ஹவுஸ் ப்ரோக்கர் நாராயணன் மூலமாக தான் வாங்குனோம். அவருக்கு வேணும்னா தெரிஞ்சுருக்கலாம்" என்று அந்த பெரியவர் கூறினார்.
"நாராயணனா? அவர் எங்கே இருப்பார்?" என்று ஒரு சேர அருளும், வினித்தும் கேட்டனர்.
"அவர்...." என்று யோசித்தவர்
தெருவில் ஒரு நபர் சென்று கொண்டிருக்க அவரை சுட்டிக் காட்டி
"அதோ பச்சை சட்டை போட்டு நடந்து போயிட்டு இருக்காறே அவர் தான் நாராயணன்" என்று கூறவும்
"ரொம்ப நன்றி ஸார்..." என்று விட்டு தெருவில் சென்று கொண்டிருந்த அந்த நபரை நெருங்கி சென்றனர்.
"ஸார் ஒரு நிமிஷம்...." என்று வினித் கூறவும் அவனை திரும்பிப் பார்த்தவர்
"யாரு தம்பி நீங்க???" என்று கேட்டார்.
"ஸார் என்னோட பேரு வினித். இது என் பிரண்ட் அருள்" என்று கூறியவன்
அவர்கள் இருவரும் சிறிது நேரத்திற்கு முன்பு நின்று கொண்டிருந்த வீட்டை சுட்டிக் காட்டி
"இந்த வீட்டுல இரண்டு வருஷத்துக்கு கார்த்திக், மதுமிதானு யாரும் இருந்தாங்களா? அவங்களைப் பத்தி ஏதாவது உங்களுக்கு தெரியுமா?" என்று வினித் கேட்கவும்
சிறிது நேரம் யோசித்து கொண்டு நின்றார் நாராயணன்.
"ஆமா இது நம்ம கார்த்திக் தம்பியோட வீடு தான். இரண்டு வருஷத்துக்கு முன்னாடி அவங்க வீடு காலி பண்ணிட்டு போயிட்டாங்க. கார்த்தி தம்பி அவரோட மாமா பொண்ணு மதுமிதாவோட கல்யாணம்னு இன்விடேஷன்லாம் தந்தாரு. அந்த நேரம் எங்க அம்மாக்கு உடம்புக்கு முடியல. அதனால நாங்க எல்லாரும் ஊருக்கு போயிட்டோம். கல்யாணத்துக்கும் போக கிடைக்கல" என்று வருத்தத்துடன் நாராயணன் கூறவும்
"அப்போ மதுமிதாவையும் உங்களுக்கு தெரியுமா? அவங்க வீடு எங்கே இருக்கு?" என்று கேட்டான் வினித்.
"மதுமிதா கார்த்தியோட மாமா பொண்ணு. சின்ன வயசுல இருந்து அடிக்கடி இங்க வரும் போது பார்த்துருக்கேன். ஆனா அவங்க வீடு எனக்கு தெரியாது தம்பி" என்று அவர் கூறினார்.
"இப்போ கார்த்திக் எங்கே இருக்கார்னு தெரியுமா?" என்று அருள் கேட்கவும்
"அது தெரியாது தம்பி. நான் ஊர்ல இருக்கும் போது ஒரு நாள் கார்த்தியோட அப்பா போன் பண்ணி இந்த வீட்டை யாருக்கும் வித்து கொடுங்க.
நாங்க வேற வீடு மாறிட்டோம்னு சொன்னாரு. அப்புறம் ஒரு இரண்டு மாதம் கழிச்சு வீட்ல இருந்த சாமான்லாம் ஏத்திட்டு இருந்தாங்க. ஏன் ஸார் திடீர்னு வீடு மாறுறீங்கனு கேட்கவும் எல்லாம் என் பையனுக்கு கல்யாணம் பேசுன ராசினு சொன்னாரு. அதுக்கு அப்புறம் நான் அவங்கள பார்க்கல" என்று கூறினார் நாராயணன்.
"ஆமா இதெல்லாம் நீங்க ஏன் கேட்குறீங்க? நீங்க இரண்டு பேரும் யாரு?" என நாராயணன் கேட்கவும்
"நாங்க கார்த்தியோட பிரண்ட்ஸ். அவனோட மேரேஜ்க்கு வர முடியல. அப்போ நாங்க பாரின்ல இருந்தோம். இரண்டு வாரத்துக்கு முன்னாடி தான் இந்தியா வந்தோம். கார்த்திகோட போன் நம்பர் மிஸ் ஆகிடுச்சு. இந்த இன்விடேஷன் மட்டும் தான் எங்க கிட்ட இருந்துச்சு. அது தான் அவரை தேடி வந்தோம்" என்று வினித் கூற
"ஓஹ்...அப்படியா???" என்று கேட்டுக் கொண்டார் நாராயணன்.