- Joined
- Jan 17, 2018
- Messages
- 1,547
- Reaction score
- 7,648
அத்தியாயம் – 18
ஐநூறு வருடங்களுக்கு முன்:
அரசபையில் தோட்ட வேலை பார்ப்பவர் தான் ரவிவர்மன், அவரின் மகன் ஆத்தியவர்மன் பத்து வயது சிறுவன். அப்பொழுது கல்வி எல்லாம் அரச குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே இருந்தது, ஆகையால் பாடகசாலை அவன் செல்லவில்லை.
ஆனால், அவனுக்கு இயற்கையிலே சொல்லிக் கொடுத்தால், புரிந்து கொள்ளும் ஞானம் அதிகமாக இருந்தது. அரசர் ஒரு தடவை அதை கவனித்து, அவனை தன் பொறுப்பில் பாடகசாலை அனுப்பி வைத்தார்.
அங்கே படித்துக் கொண்டு இருந்த பாசில், இதை முதலில் பெரிதாக நினைக்கவில்லை. ஆனால் அதன் பிறகான நாட்களில், குருவை மிஞ்சிய சிஷ்யன் என்ற பெயர் எடுத்து, ஆதி பாசிலை பின் தள்ளிய பிறகு தான் பாசிலின் கவனம் அவன் புறம் திரும்பியது.
“ஏய்! கருப்பு இனத்தை சேர்ந்தவனே! நான் சொல்லுவதை கவனமாக கேள்! என் பேச்சு கேட்டு ஒழுங்காக இருந்தால், நீ பிழைத்துக் கொள்வாய், இல்லையேல் உன்னை நான் நசுக்கி விடுவேன், ஜாக்கிரதை!” என்று எச்சரிக்கை செய்தான் பாசில்.
“நான் என்ன தவறு செய்தேன்? தங்களுக்கு அப்படி என்ன என் மேல் கோபம்? என் பெயர் ஆதித்யவர்மன், தாங்கள் அப்படி அழைத்தால் நல்லது” என்று பதிலுக்கு ஆதி கூறியதை கேட்டு, கோபம் கொண்டான் பாசில்.
கோபத்தில் இருந்த பாசில், ஆதியின் முகத்தில் அப்பொழுது இருந்த சிறு சிறு கரும்புள்ளிகளை பார்த்து, அதை வைத்து கிண்டல் செய்ய தொடங்கினான்.
“உன் முகத்தை பார்த்தால், கரும்புள்ளி என்று அழைத்தால் சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது. ஆகையால் இனி உம்மை, நான் கரும்புள்ளியே என்று தான் அழைக்க போகிறேன்” என்று கூறியதோடு அல்லாமல், தன் கூட படிக்கும் மாணவர்களை அழைத்து, அவனை கரும்புள்ளி என்று அழைக்க செய்து இருந்தான்.
கோபம் கொண்டு அவனை அடிக்க எண்ணினாலும், அவனால் அடிக்க முடியவில்லை. காரணம், அவன் தந்தை அவனுக்கு அத்தனை அறிவுரை வழங்கி இருந்தார்.
“உம்முடைய புத்திகூர்மையை சோதித்து தெரிந்த பிறகு தான், அரசர் உம்மை பாடகசாலைக்கு அனுப்பி இருக்கிறார். அங்கே படிப்பவர்கள் எல்லாம், அரச குல பிள்ளைகள். உம்மை வம்பு வளர்த்தால், அதை கண்டுகொள்ளாமல், கடந்து வர வேண்டியது உம்முடைய பொறுப்பு”.
“நாளை உம்மால், அங்கு ஒரு பிரச்சனை வந்தது என்று எனக்கு செய்தி வர கூடாது, புரிகிறதா உமக்கு?” என்று வினவினார் அவனின் தந்தை.
“எமக்கு நன்றாக புரிகிறது தந்தையே! நான் நன்றாக படித்து, கல்வி ஞானம் பெற்று, தங்களுக்கும், அரசருக்கும் புகழ் சேர்ப்பேன்” என்று தந்தைக்கு வாக்குறுதி கொடுத்துவிட்டு தான், இங்கே வந்தான்.
அது மட்டுமில்லாமல், அவனுக்கு குரு சொல்லிக் கொடுத்த முதல் பாடமே, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பது தான். தந்தை என்றுமே, தன் பிள்ளைக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக தான் இருப்பார், ஆகையால் அவர் சொல்வதை கேட்டு நடக்க வேண்டும் என்பதை அறிவுறுத்தி இருந்தார்.
அதை எல்லாம் நினைத்து பார்த்தவன், அந்த இடத்தை விட்டு செல்வது நல்லது என்று தோன்றியது, ஆகையால் ஒன்றும் கூறாமல் அங்கு இருந்து விலகி சென்றான்.
இவ்வளவு அவமானப்படுத்தியும், அவன் ஒன்றும் கூறாமல் வெளியேறியது இன்னும் பாசிலின் கோபத்தை கூட்டியதே தவிர, குறையவில்லை அவனின் கோபம்.
நாட்கள் செல்ல செல்ல, ஆதி அவனின் அந்த அழைப்புக்கு பழகி இருந்தான். ஒரு காதில் வாங்கி, மறு காதில் விட பழகி இருந்தான். சொல்லிக் கொடுக்கும் பாடங்களை தவிர்த்து, மற்றதை எல்லாம் மனதில் பதிய வைக்கவில்லை அவன்.
அவனின் இந்த செய்கையை பார்த்து, பாசில் அதன் பிறகு அவனை அவ்வாறு அழைப்பதை நிறுத்திக் கொண்டான். அதன் பின் ஆறு வருடங்கள் வேகமாக ஓடியது, பாசில் மனதில் இன்னும் ஆதியை பற்றிய எண்ணம் மாறாமல் அப்படியே இருந்தது.
இதன் நடுவில், அரசர் ஆதியை அழைத்து தன் மகள் மதியழகியை பத்திரமாக பாடகசாலையில் பார்த்துக் கொள்ளுமாறு கூறவும், அவன் சரியென்றான்.
மறுநாள், பாடகசாலைக்கு வந்த மதியழகியை பார்த்து மயங்கி இருந்தனர் இருவர். அதில் ஒருவன் ஆதி, மற்றொருவன் பாசில்.
அவளின் அழகில் மயங்கிய பாசில் ஒரு பக்கமும், தன்னையும் ஒரு மனிதனாக மதிக்கும் அவளின் குணத்தை கண்டு மயங்கிய ஆதி மறு பக்கமும் அடுத்து அவளுக்காக சண்டையிட தொடங்கினர்.
எப்பொழுது அரசர் அவளை, தன்னுடைய பொறுப்பில் விட்டு சென்றாரோ, அவன் அப்பொழுதே அவளின் பாதுகாவலனாக மாறி இருந்தான் ஆதி. பாசில் அவளை நெருங்க நினைத்தால், இவன் அவனை நெருங்க விடாமல் தடுத்து விடுவான்.
“மன்னிக்கவும்! இளவரசி அருகே யாரையும் நெருங்க விட வேண்டாம் என்று, அரசர் எனக்கு கட்டளை விதித்து இருக்கிறார். ஆகையால், தாங்கள் ஒதுங்கி இருப்பது நலம் என நினைக்கிறேன்” என்று ஆதி, பாசிலிடம் கூறவும் அவனுக்கு ஆதியை அடித்து நொறுக்க வேண்டும் என்ற வேகம் வந்தது.
“டேய் கரும்புள்ளி! நீ சற்று ஒதுங்கி நில், என் வழியில் குறுக்கிட்டால், விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும் தெரிந்து கொள். ஆகையால், நான் இனி மதியிடம் நெருங்கி பழகுவேன், என்னை தடுக்காதே” என்று எச்சரித்தான் பாசில்.
“அப்படி நெருங்க முயற்சித்தால், அரசர் அடுத்து தங்களின் தலையை கொய்து விடுவார், ஜாக்கிரதை” என்று எச்சரிக்கை செய்துவிட்டு சென்றான் ஆதி.
பாசில், நேராக அதே கோபத்துடன் தன் மாமனிடம் சென்றான்.
“மாமா! அந்த கரும்புள்ளி என் வழியில் குறுக்கே நிற்கிறான். அங்கே குருவிடம் நல்ல பெயர் வாங்கியது மட்டுமில்லாமல், இப்பொழுது அரசரின் மகள் மதியழகிக்கும் பாதுகாவலானாக இருந்து, என்னை அவள் அருகில் விடாமல் செய்கிறான்”.
“இன்றோடு, இதற்க்கு ஒரு முடிவு கட்டியாக வேண்டும். தாங்கள் அதற்க்கு ஒரு வழி சொல்லுங்கள், அவன் இனி எக்காரணம் கொண்டும் என் வழியில் வருவதை நான் விரும்பவில்லை” என்று கூறிய பாசிலை கண்டு புன்னகைத்தார்.
“நீ என் வாரிசு என்று நிருபிக்கிறாய் மருமகனே! கவலை கொள்ளாதே! நாளையே, அவன் கதையை முடிக்க ஏற்பாடு செய்கிறேன்” என்று அவன் மாமன் அலிகான் கூறினார்.
இங்கே அரண்மனையில், அரசர் மதியழகியிடம் பாடகசாலை சென்ற அனுபவம் பற்றி விசாரித்துக் கொண்டு இருந்தார்.
“தந்தையே! எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது, எல்லோரும் என்னிடம் நன்றாக பழகுகிறார்கள், அது மட்டும் இல்லை புதிதாக எனக்கு இரண்டு தோழிகளும் கிடைத்து இருக்கின்றனர்” என்று சந்தோஷத்தில் ஆர்பரிக்கும் மகளை, அனைத்துக் கொண்டார்.
அப்பொழுது அங்கே ஆதி, தன் தந்தைக்கு உதவியாக தோட்டத்தில் வேலை பார்ப்பதை பார்த்த மதி, தந்தையிடம் அவனை பற்றி விசாரித்தாள்.
“தந்தையே! அதோ நிற்கிறாரே அவர் யார்? இன்று சிலர் என்னிடம் பேச நினைக்கையில், அவர் தடுத்துக் கொண்டே இருந்தார்” என்று அங்கு நடந்ததை கூறவும், அரசர் அவன் யார் என்பதை மட்டும் கூறினார்.
அதன் பின் அரசர் மகளிடம் சில விஷயங்கள் பேசிவிட்டு, வெளியே தோட்டத்திற்கு வந்தார். ஆதியிடம் இயல்பாக பாடகசாலை பற்றி பேசிவிட்டு, மகளின் பாதுகாப்பு பற்றி இப்பொழுது விசாரிக்க தொடங்கினார்.
“அரசே! என்னை விட சற்று வயது கூடினவர், அவர் பெயர் சப்பாஹ் பாசில். குருவிடம் அவருக்கு நல்ல பெயர் இருக்கிறது, ஆனாலும் அவர் நம் இளவரசியை பார்க்கும் பார்வை சரியில்லாதது போல் இருந்தது. அதனால் தான், நான் அவரை தடுக்க வேண்டியதாக இருந்தது அரசே”.
“இன்னும் சற்று நேரத்தில், தந்தையுடன் இது பற்றி தங்களிடம் பேச நினைத்து இருந்தேன். இப்பொழுது தாங்கள் கேட்கவும், கூறிவிட்டேன் ” எனவும் அவர் இன்னும் சற்று கவனத்துடன், தன் மகளை பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு சென்றார்.
அரசர் அரண்மனையில், தன்னுடன் வந்த ஆலோசகரிடம் இது பற்றி விவாதித்தார்.
“அரசே! தங்களுக்கு தெரியாதது ஒன்றுமில்லை, அவன் அலிகானின் மருமகன். அவனின் வளர்ப்பு வேறு, கேட்கவும் வேண்டுமா!”.
“அது மட்டுமில்லாமல், அரசியை மட்டுமில்லாமல், நாம் இப்பொழுது ஆதித்ய வர்மனையும் பாதுகாக்க வேண்டும் அரசே. பாசிலை எதிர்த்து இருக்கிறான், நம் இளவரசியின் பாதுகாப்பிற்காக”.
“ஆகையால், அவனும் இப்பொழுது பாதுகாக்கப்பட வேண்டியவன். நாம் மறைமுகமாக பாதுகாப்புக்கு, சில வீரர்களை அனுப்பி வைக்கலாம் அரசே, அது தான் நல்லது என்று படுகிறது எனக்கு” என்று ஆலோசகர் கூறவும், அரசருக்கும் அதுவே சரி என்று பட்டது.
“சரி அதற்க்கான வேலையை பாருங்கள், ஆலோசகரே! இது நமக்குள் இருக்கட்டும், அரசிகளுக்கு இது பற்றி தெரிய வேண்டாம்” என்று கூறிவிட்டு சென்றார்.
அதன் படி மறுநாள் முதல், நம்பிக்கைக்குரிய வீரர்கள் ஐந்து பேர் மதிக்கும், ஆதிக்கும் பாதுகாப்பு கொடுக்க ஏற்பாடு செயப்பட்டது. இதற்கிடையில், அலிகான் பாசிலிடம் சரியான தருனத்திற்காக காத்து இருக்கும்படி கூறினார்.
ஆகையால் அவன் சற்று தள்ளி நின்றே, மதியை கண்களால் பருகிக் கொண்டு இருந்தான். பெண்களுக்கே இருக்கும் மெல்லிய உள்ளுணர்வினால், மதிக்கு தன்னை யாரோ உற்று பார்கின்றனர் என்று புரிந்தது.
யாரென்று திரும்பி பார்க்க, அங்கே பாசில் விடாமல் இவளையே பார்த்துக் கொண்டு இருந்தது, அவளின் கருத்தில் பட்டது. அவனின் பார்வை பயத்தை கொடுக்கவும், அவள் திரும்பி அங்கே ஆதியை தேடினாள்.
ஒரு மறைவிடத்தில் இவர்களை கண்காணித்துக் கொண்டு இருந்த ஆதி, மதி பயத்தில் தன்னை தேடுவதை உணர்ந்து, அவளருகே நெருங்கினான்.
“இளவரசி! தங்களுக்கு ஏதும் தேவையா?” என்று வந்து கேட்கவும், அவள் அவனை சற்று கூடவே இருக்குமாறு கூறவும், அவன் மறுத்தான்.
“மன்னிக்கவும் இளவரசி! தங்கள் பெயருக்கு எந்த களங்கமும் வர கூடாது என்பதற்காக, நான் சற்று தள்ளி நின்று பாதுக்காக்கிறேன். பயப்பட வேண்டாம்! என்னை மீறி யாரும் தங்களை நெருங்க முடியாது” என்று அவன் வாக்குறுதி கொடுக்கவும், மனமே இல்லாமல் சரி என்றாள்.
அவளின் பயத்தை பார்த்தவனுக்கு, பாசிலை நொறுக்க வேண்டும் என்ற வெறியே இருந்தது ஆதிக்கு. ஆனால் அவன் பொறுமை காத்தான், நிச்சயம் அரசர் இதற்க்கு ஒரு முடிவு எடுப்பார் என்று நம்பினான்.
அவன் நினைத்தது போல், அரசருக்கு இந்த செய்தி கிட்டவும் மறைமுகமாக பாசிலுக்கு எச்சரிக்கை செய்தார். அதில் இருந்து அவன் பாடகசாலை வருவதை, நிறுத்தி இருந்தான்.
அதன் பிறகு, மதி நிம்மதியாக உணர்ந்தாள். ஆதிக்கும், அவன் இப்படி வராமல் இருந்தது மகிழ்ச்சி அளித்தது. அவன் இல்லை என்றாலும், இளவரசியை பாதுகாக்க வேண்டியது நம் கடமை என்று கருதி அவன் அதை சரியாக செய்து வந்தான்.
ஐநூறு வருடங்களுக்கு முன்:
அரசபையில் தோட்ட வேலை பார்ப்பவர் தான் ரவிவர்மன், அவரின் மகன் ஆத்தியவர்மன் பத்து வயது சிறுவன். அப்பொழுது கல்வி எல்லாம் அரச குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே இருந்தது, ஆகையால் பாடகசாலை அவன் செல்லவில்லை.
ஆனால், அவனுக்கு இயற்கையிலே சொல்லிக் கொடுத்தால், புரிந்து கொள்ளும் ஞானம் அதிகமாக இருந்தது. அரசர் ஒரு தடவை அதை கவனித்து, அவனை தன் பொறுப்பில் பாடகசாலை அனுப்பி வைத்தார்.
அங்கே படித்துக் கொண்டு இருந்த பாசில், இதை முதலில் பெரிதாக நினைக்கவில்லை. ஆனால் அதன் பிறகான நாட்களில், குருவை மிஞ்சிய சிஷ்யன் என்ற பெயர் எடுத்து, ஆதி பாசிலை பின் தள்ளிய பிறகு தான் பாசிலின் கவனம் அவன் புறம் திரும்பியது.
“ஏய்! கருப்பு இனத்தை சேர்ந்தவனே! நான் சொல்லுவதை கவனமாக கேள்! என் பேச்சு கேட்டு ஒழுங்காக இருந்தால், நீ பிழைத்துக் கொள்வாய், இல்லையேல் உன்னை நான் நசுக்கி விடுவேன், ஜாக்கிரதை!” என்று எச்சரிக்கை செய்தான் பாசில்.
“நான் என்ன தவறு செய்தேன்? தங்களுக்கு அப்படி என்ன என் மேல் கோபம்? என் பெயர் ஆதித்யவர்மன், தாங்கள் அப்படி அழைத்தால் நல்லது” என்று பதிலுக்கு ஆதி கூறியதை கேட்டு, கோபம் கொண்டான் பாசில்.
கோபத்தில் இருந்த பாசில், ஆதியின் முகத்தில் அப்பொழுது இருந்த சிறு சிறு கரும்புள்ளிகளை பார்த்து, அதை வைத்து கிண்டல் செய்ய தொடங்கினான்.
“உன் முகத்தை பார்த்தால், கரும்புள்ளி என்று அழைத்தால் சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது. ஆகையால் இனி உம்மை, நான் கரும்புள்ளியே என்று தான் அழைக்க போகிறேன்” என்று கூறியதோடு அல்லாமல், தன் கூட படிக்கும் மாணவர்களை அழைத்து, அவனை கரும்புள்ளி என்று அழைக்க செய்து இருந்தான்.
கோபம் கொண்டு அவனை அடிக்க எண்ணினாலும், அவனால் அடிக்க முடியவில்லை. காரணம், அவன் தந்தை அவனுக்கு அத்தனை அறிவுரை வழங்கி இருந்தார்.
“உம்முடைய புத்திகூர்மையை சோதித்து தெரிந்த பிறகு தான், அரசர் உம்மை பாடகசாலைக்கு அனுப்பி இருக்கிறார். அங்கே படிப்பவர்கள் எல்லாம், அரச குல பிள்ளைகள். உம்மை வம்பு வளர்த்தால், அதை கண்டுகொள்ளாமல், கடந்து வர வேண்டியது உம்முடைய பொறுப்பு”.
“நாளை உம்மால், அங்கு ஒரு பிரச்சனை வந்தது என்று எனக்கு செய்தி வர கூடாது, புரிகிறதா உமக்கு?” என்று வினவினார் அவனின் தந்தை.
“எமக்கு நன்றாக புரிகிறது தந்தையே! நான் நன்றாக படித்து, கல்வி ஞானம் பெற்று, தங்களுக்கும், அரசருக்கும் புகழ் சேர்ப்பேன்” என்று தந்தைக்கு வாக்குறுதி கொடுத்துவிட்டு தான், இங்கே வந்தான்.
அது மட்டுமில்லாமல், அவனுக்கு குரு சொல்லிக் கொடுத்த முதல் பாடமே, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பது தான். தந்தை என்றுமே, தன் பிள்ளைக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக தான் இருப்பார், ஆகையால் அவர் சொல்வதை கேட்டு நடக்க வேண்டும் என்பதை அறிவுறுத்தி இருந்தார்.
அதை எல்லாம் நினைத்து பார்த்தவன், அந்த இடத்தை விட்டு செல்வது நல்லது என்று தோன்றியது, ஆகையால் ஒன்றும் கூறாமல் அங்கு இருந்து விலகி சென்றான்.
இவ்வளவு அவமானப்படுத்தியும், அவன் ஒன்றும் கூறாமல் வெளியேறியது இன்னும் பாசிலின் கோபத்தை கூட்டியதே தவிர, குறையவில்லை அவனின் கோபம்.
நாட்கள் செல்ல செல்ல, ஆதி அவனின் அந்த அழைப்புக்கு பழகி இருந்தான். ஒரு காதில் வாங்கி, மறு காதில் விட பழகி இருந்தான். சொல்லிக் கொடுக்கும் பாடங்களை தவிர்த்து, மற்றதை எல்லாம் மனதில் பதிய வைக்கவில்லை அவன்.
அவனின் இந்த செய்கையை பார்த்து, பாசில் அதன் பிறகு அவனை அவ்வாறு அழைப்பதை நிறுத்திக் கொண்டான். அதன் பின் ஆறு வருடங்கள் வேகமாக ஓடியது, பாசில் மனதில் இன்னும் ஆதியை பற்றிய எண்ணம் மாறாமல் அப்படியே இருந்தது.
இதன் நடுவில், அரசர் ஆதியை அழைத்து தன் மகள் மதியழகியை பத்திரமாக பாடகசாலையில் பார்த்துக் கொள்ளுமாறு கூறவும், அவன் சரியென்றான்.
மறுநாள், பாடகசாலைக்கு வந்த மதியழகியை பார்த்து மயங்கி இருந்தனர் இருவர். அதில் ஒருவன் ஆதி, மற்றொருவன் பாசில்.
அவளின் அழகில் மயங்கிய பாசில் ஒரு பக்கமும், தன்னையும் ஒரு மனிதனாக மதிக்கும் அவளின் குணத்தை கண்டு மயங்கிய ஆதி மறு பக்கமும் அடுத்து அவளுக்காக சண்டையிட தொடங்கினர்.
எப்பொழுது அரசர் அவளை, தன்னுடைய பொறுப்பில் விட்டு சென்றாரோ, அவன் அப்பொழுதே அவளின் பாதுகாவலனாக மாறி இருந்தான் ஆதி. பாசில் அவளை நெருங்க நினைத்தால், இவன் அவனை நெருங்க விடாமல் தடுத்து விடுவான்.
“மன்னிக்கவும்! இளவரசி அருகே யாரையும் நெருங்க விட வேண்டாம் என்று, அரசர் எனக்கு கட்டளை விதித்து இருக்கிறார். ஆகையால், தாங்கள் ஒதுங்கி இருப்பது நலம் என நினைக்கிறேன்” என்று ஆதி, பாசிலிடம் கூறவும் அவனுக்கு ஆதியை அடித்து நொறுக்க வேண்டும் என்ற வேகம் வந்தது.
“டேய் கரும்புள்ளி! நீ சற்று ஒதுங்கி நில், என் வழியில் குறுக்கிட்டால், விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும் தெரிந்து கொள். ஆகையால், நான் இனி மதியிடம் நெருங்கி பழகுவேன், என்னை தடுக்காதே” என்று எச்சரித்தான் பாசில்.
“அப்படி நெருங்க முயற்சித்தால், அரசர் அடுத்து தங்களின் தலையை கொய்து விடுவார், ஜாக்கிரதை” என்று எச்சரிக்கை செய்துவிட்டு சென்றான் ஆதி.
பாசில், நேராக அதே கோபத்துடன் தன் மாமனிடம் சென்றான்.
“மாமா! அந்த கரும்புள்ளி என் வழியில் குறுக்கே நிற்கிறான். அங்கே குருவிடம் நல்ல பெயர் வாங்கியது மட்டுமில்லாமல், இப்பொழுது அரசரின் மகள் மதியழகிக்கும் பாதுகாவலானாக இருந்து, என்னை அவள் அருகில் விடாமல் செய்கிறான்”.
“இன்றோடு, இதற்க்கு ஒரு முடிவு கட்டியாக வேண்டும். தாங்கள் அதற்க்கு ஒரு வழி சொல்லுங்கள், அவன் இனி எக்காரணம் கொண்டும் என் வழியில் வருவதை நான் விரும்பவில்லை” என்று கூறிய பாசிலை கண்டு புன்னகைத்தார்.
“நீ என் வாரிசு என்று நிருபிக்கிறாய் மருமகனே! கவலை கொள்ளாதே! நாளையே, அவன் கதையை முடிக்க ஏற்பாடு செய்கிறேன்” என்று அவன் மாமன் அலிகான் கூறினார்.
இங்கே அரண்மனையில், அரசர் மதியழகியிடம் பாடகசாலை சென்ற அனுபவம் பற்றி விசாரித்துக் கொண்டு இருந்தார்.
“தந்தையே! எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது, எல்லோரும் என்னிடம் நன்றாக பழகுகிறார்கள், அது மட்டும் இல்லை புதிதாக எனக்கு இரண்டு தோழிகளும் கிடைத்து இருக்கின்றனர்” என்று சந்தோஷத்தில் ஆர்பரிக்கும் மகளை, அனைத்துக் கொண்டார்.
அப்பொழுது அங்கே ஆதி, தன் தந்தைக்கு உதவியாக தோட்டத்தில் வேலை பார்ப்பதை பார்த்த மதி, தந்தையிடம் அவனை பற்றி விசாரித்தாள்.
“தந்தையே! அதோ நிற்கிறாரே அவர் யார்? இன்று சிலர் என்னிடம் பேச நினைக்கையில், அவர் தடுத்துக் கொண்டே இருந்தார்” என்று அங்கு நடந்ததை கூறவும், அரசர் அவன் யார் என்பதை மட்டும் கூறினார்.
அதன் பின் அரசர் மகளிடம் சில விஷயங்கள் பேசிவிட்டு, வெளியே தோட்டத்திற்கு வந்தார். ஆதியிடம் இயல்பாக பாடகசாலை பற்றி பேசிவிட்டு, மகளின் பாதுகாப்பு பற்றி இப்பொழுது விசாரிக்க தொடங்கினார்.
“அரசே! என்னை விட சற்று வயது கூடினவர், அவர் பெயர் சப்பாஹ் பாசில். குருவிடம் அவருக்கு நல்ல பெயர் இருக்கிறது, ஆனாலும் அவர் நம் இளவரசியை பார்க்கும் பார்வை சரியில்லாதது போல் இருந்தது. அதனால் தான், நான் அவரை தடுக்க வேண்டியதாக இருந்தது அரசே”.
“இன்னும் சற்று நேரத்தில், தந்தையுடன் இது பற்றி தங்களிடம் பேச நினைத்து இருந்தேன். இப்பொழுது தாங்கள் கேட்கவும், கூறிவிட்டேன் ” எனவும் அவர் இன்னும் சற்று கவனத்துடன், தன் மகளை பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு சென்றார்.
அரசர் அரண்மனையில், தன்னுடன் வந்த ஆலோசகரிடம் இது பற்றி விவாதித்தார்.
“அரசே! தங்களுக்கு தெரியாதது ஒன்றுமில்லை, அவன் அலிகானின் மருமகன். அவனின் வளர்ப்பு வேறு, கேட்கவும் வேண்டுமா!”.
“அது மட்டுமில்லாமல், அரசியை மட்டுமில்லாமல், நாம் இப்பொழுது ஆதித்ய வர்மனையும் பாதுகாக்க வேண்டும் அரசே. பாசிலை எதிர்த்து இருக்கிறான், நம் இளவரசியின் பாதுகாப்பிற்காக”.
“ஆகையால், அவனும் இப்பொழுது பாதுகாக்கப்பட வேண்டியவன். நாம் மறைமுகமாக பாதுகாப்புக்கு, சில வீரர்களை அனுப்பி வைக்கலாம் அரசே, அது தான் நல்லது என்று படுகிறது எனக்கு” என்று ஆலோசகர் கூறவும், அரசருக்கும் அதுவே சரி என்று பட்டது.
“சரி அதற்க்கான வேலையை பாருங்கள், ஆலோசகரே! இது நமக்குள் இருக்கட்டும், அரசிகளுக்கு இது பற்றி தெரிய வேண்டாம்” என்று கூறிவிட்டு சென்றார்.
அதன் படி மறுநாள் முதல், நம்பிக்கைக்குரிய வீரர்கள் ஐந்து பேர் மதிக்கும், ஆதிக்கும் பாதுகாப்பு கொடுக்க ஏற்பாடு செயப்பட்டது. இதற்கிடையில், அலிகான் பாசிலிடம் சரியான தருனத்திற்காக காத்து இருக்கும்படி கூறினார்.
ஆகையால் அவன் சற்று தள்ளி நின்றே, மதியை கண்களால் பருகிக் கொண்டு இருந்தான். பெண்களுக்கே இருக்கும் மெல்லிய உள்ளுணர்வினால், மதிக்கு தன்னை யாரோ உற்று பார்கின்றனர் என்று புரிந்தது.
யாரென்று திரும்பி பார்க்க, அங்கே பாசில் விடாமல் இவளையே பார்த்துக் கொண்டு இருந்தது, அவளின் கருத்தில் பட்டது. அவனின் பார்வை பயத்தை கொடுக்கவும், அவள் திரும்பி அங்கே ஆதியை தேடினாள்.
ஒரு மறைவிடத்தில் இவர்களை கண்காணித்துக் கொண்டு இருந்த ஆதி, மதி பயத்தில் தன்னை தேடுவதை உணர்ந்து, அவளருகே நெருங்கினான்.
“இளவரசி! தங்களுக்கு ஏதும் தேவையா?” என்று வந்து கேட்கவும், அவள் அவனை சற்று கூடவே இருக்குமாறு கூறவும், அவன் மறுத்தான்.
“மன்னிக்கவும் இளவரசி! தங்கள் பெயருக்கு எந்த களங்கமும் வர கூடாது என்பதற்காக, நான் சற்று தள்ளி நின்று பாதுக்காக்கிறேன். பயப்பட வேண்டாம்! என்னை மீறி யாரும் தங்களை நெருங்க முடியாது” என்று அவன் வாக்குறுதி கொடுக்கவும், மனமே இல்லாமல் சரி என்றாள்.
அவளின் பயத்தை பார்த்தவனுக்கு, பாசிலை நொறுக்க வேண்டும் என்ற வெறியே இருந்தது ஆதிக்கு. ஆனால் அவன் பொறுமை காத்தான், நிச்சயம் அரசர் இதற்க்கு ஒரு முடிவு எடுப்பார் என்று நம்பினான்.
அவன் நினைத்தது போல், அரசருக்கு இந்த செய்தி கிட்டவும் மறைமுகமாக பாசிலுக்கு எச்சரிக்கை செய்தார். அதில் இருந்து அவன் பாடகசாலை வருவதை, நிறுத்தி இருந்தான்.
அதன் பிறகு, மதி நிம்மதியாக உணர்ந்தாள். ஆதிக்கும், அவன் இப்படி வராமல் இருந்தது மகிழ்ச்சி அளித்தது. அவன் இல்லை என்றாலும், இளவரசியை பாதுகாக்க வேண்டியது நம் கடமை என்று கருதி அவன் அதை சரியாக செய்து வந்தான்.