ஹாய் தோழிகளே,
இந்த கவிதை நான் பானும்மாவிற்கு எழுதியது.. நல்ல இருக்கிறதா என்று கொஞ்சம் சொல்லுங்கள்....
சூரியனும் சந்திரனும் இணைத்தது
தான் இந்த மலரின் பெயரோ..?!
இந்த மலருக்கும் அல்லி பிடிக்குமா..?
இல்லை தாமரைதான் பிடிக்குமோ..?
என்று நானும் யோசிக்கிறேன்..
தோழியே ஒரு வருடமாகவே...
சூரியனை போல கோபம் வந்து
நான் இன்னும் பார்த்ததில்லை..
முழு மதியுடன் அறிவுரை சொல்லி
வழி நடந்தும் மங்கையே..
உனது மதி முகத்தை
நானும் கண்டதில்லையே..
புது வருடத்தில் பிறந்த
இந்த அன்னைக்கு தான்
எத்தனை மகள்கள்
இந்த உலகம் முழுவதும்..
முதுமை வந்தும் முகம் மாறும்
மனிதரிடையே பௌர்ணமியாக
வலம் வருகிறாரே இணையதளம்
என்னும் இனிய தளத்தின் மூலம்!
பிறந்தநாள் வாழ்த்தில் இருந்து
புது மலர்களுக்கு பாராட்டு
இதழ்களை வழங்க முன்னே
செல்லும் இவளின் வயது கூட
அந்த வானம்பாடியின் வயதுதான்...!
மலருக்கு மெல்லிய மனமும்,
வயதிற்கு ஏற்ற நல்ல குணமும்
பாராட்ட இலகிய மனமும்,
வயதிற்கும் மனதிற்கும்
சம்மந்தம் இல்லையென
எங்களுக்கு தினம் தினம் கற்பிக்கும்
ஒரு இனிய உள்ளம் படைத்தவள்...
எல்லோரையும் பாராட்டுவதில்
முன்நின்று நாளைய தலைமுறைக்கு
இன்றைய வழிகாட்டியாய் வாழ்ந்து
இள நெஞ்சங்களை வழிநடத்தும்
எங்களின் அன்னையும் இவள்தானே...!
- சந்தியா ஸ்ரீ
இந்த கவிதை நான் பானும்மாவிற்கு எழுதியது.. நல்ல இருக்கிறதா என்று கொஞ்சம் சொல்லுங்கள்....
சூரியனும் சந்திரனும் இணைத்தது
தான் இந்த மலரின் பெயரோ..?!
இந்த மலருக்கும் அல்லி பிடிக்குமா..?
இல்லை தாமரைதான் பிடிக்குமோ..?
என்று நானும் யோசிக்கிறேன்..
தோழியே ஒரு வருடமாகவே...
சூரியனை போல கோபம் வந்து
நான் இன்னும் பார்த்ததில்லை..
முழு மதியுடன் அறிவுரை சொல்லி
வழி நடந்தும் மங்கையே..
உனது மதி முகத்தை
நானும் கண்டதில்லையே..
புது வருடத்தில் பிறந்த
இந்த அன்னைக்கு தான்
எத்தனை மகள்கள்
இந்த உலகம் முழுவதும்..
முதுமை வந்தும் முகம் மாறும்
மனிதரிடையே பௌர்ணமியாக
வலம் வருகிறாரே இணையதளம்
என்னும் இனிய தளத்தின் மூலம்!
பிறந்தநாள் வாழ்த்தில் இருந்து
புது மலர்களுக்கு பாராட்டு
இதழ்களை வழங்க முன்னே
செல்லும் இவளின் வயது கூட
அந்த வானம்பாடியின் வயதுதான்...!
மலருக்கு மெல்லிய மனமும்,
வயதிற்கு ஏற்ற நல்ல குணமும்
பாராட்ட இலகிய மனமும்,
வயதிற்கும் மனதிற்கும்
சம்மந்தம் இல்லையென
எங்களுக்கு தினம் தினம் கற்பிக்கும்
ஒரு இனிய உள்ளம் படைத்தவள்...
எல்லோரையும் பாராட்டுவதில்
முன்நின்று நாளைய தலைமுறைக்கு
இன்றைய வழிகாட்டியாய் வாழ்ந்து
இள நெஞ்சங்களை வழிநடத்தும்
எங்களின் அன்னையும் இவள்தானே...!
- சந்தியா ஸ்ரீ
Last edited: