# கேரட்_கேசரி
.
சுவையான இனிப்பு வகைகள் என்றால் குழந்தைகளுக்கு மிகப் பிடிக்கும். அதுவும், ஓய்வாக இருக்கும் ஞாயிறு மாலை நேரங்களில் குடும்பத்துடன் ஒரு இனிப்பைப் பகிர்ந்துகொண்டு தேநீர் அருந்துவது அலாதியான அனுபவம். அந்த அனுபவத்தின் சுவையை இன்னும் கூட்டக் கூடியது இந்த கெரட் கேசரி.
.
# தேவையானவை:
கெரட் - 200 கிராம்
பால் - 200 கிராம்
பேரீச்சம்பழம் - 10
கோதுமை மா - 2 தேக்கரண்டி
சீனி - 100 கிராம்
தேங்காய்த் துருவல் - 2 தேக்கரண்டி
லவங்கம் - 3
நெய் - 2 தேக்கரண்டி
வறுத்த முந்திரிப்பொடி - 1 தேக்கரண்டி
.
# செய்முறை:
பேரீச்சம்பழங்களின் கொட்டையை நீக்கி, கெரட் துருவலைச் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் விட்டு குக்கரில் வேக வைக்க வேண்டும். நெய் விட்டு கோதுமை மாவைப் பொன் நிறமாக வறுக்க வேண்டும்.
.
பாலை, பால்கோவா பதத்தில் காய்ச்ச வேண்டும். கெரட், தேங்காய்த் துருவல் இரண்டையும் சேர்த்து மசிய அரைக்க வேண்டும். கனமான அடியுள்ள பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீர்விட்டு, அடுப்பில் வைத்து சீனியைப் போட்டு அது பாகானவுடன் மற்ற எல்லாச் சாமான்களையும் போட்டு அடிப் பிடிக்காமல் கெட்டியாகக் கிளறவும்.
.
கேசரி பதம் வந்தவுடன் தட்டில் நெய் தடவி, அதில் கொட்டிப் பரத்தி விட்டு, மேலே முந்திரியை வறுத்துத் தூவினால் சுவையான, ஆரோக்கியமான கெரட் கேசரி தயார்.
.
சுவையான இனிப்பு வகைகள் என்றால் குழந்தைகளுக்கு மிகப் பிடிக்கும். அதுவும், ஓய்வாக இருக்கும் ஞாயிறு மாலை நேரங்களில் குடும்பத்துடன் ஒரு இனிப்பைப் பகிர்ந்துகொண்டு தேநீர் அருந்துவது அலாதியான அனுபவம். அந்த அனுபவத்தின் சுவையை இன்னும் கூட்டக் கூடியது இந்த கெரட் கேசரி.
.
# தேவையானவை:
கெரட் - 200 கிராம்
பால் - 200 கிராம்
பேரீச்சம்பழம் - 10
கோதுமை மா - 2 தேக்கரண்டி
சீனி - 100 கிராம்
தேங்காய்த் துருவல் - 2 தேக்கரண்டி
லவங்கம் - 3
நெய் - 2 தேக்கரண்டி
வறுத்த முந்திரிப்பொடி - 1 தேக்கரண்டி
.
# செய்முறை:
பேரீச்சம்பழங்களின் கொட்டையை நீக்கி, கெரட் துருவலைச் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் விட்டு குக்கரில் வேக வைக்க வேண்டும். நெய் விட்டு கோதுமை மாவைப் பொன் நிறமாக வறுக்க வேண்டும்.
.
பாலை, பால்கோவா பதத்தில் காய்ச்ச வேண்டும். கெரட், தேங்காய்த் துருவல் இரண்டையும் சேர்த்து மசிய அரைக்க வேண்டும். கனமான அடியுள்ள பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீர்விட்டு, அடுப்பில் வைத்து சீனியைப் போட்டு அது பாகானவுடன் மற்ற எல்லாச் சாமான்களையும் போட்டு அடிப் பிடிக்காமல் கெட்டியாகக் கிளறவும்.
.
கேசரி பதம் வந்தவுடன் தட்டில் நெய் தடவி, அதில் கொட்டிப் பரத்தி விட்டு, மேலே முந்திரியை வறுத்துத் தூவினால் சுவையான, ஆரோக்கியமான கெரட் கேசரி தயார்.