நடந்த திருமணத்தை ஏற்க முடியாமல் நிராகரிக்கவும் முடியாமல் கயல் வருத்தத்தில் இருந்தாள் ...இரவு 10 மணி வரைக்கும் அரவிந்த்
வரவில்லை...அறையில் இருந்த சோபா வில் மெல்ல தலைசாய்த்தவள் அயர்வினால் அப்படியே உறங்கிவிட்டாள் .
இரவு 11.30 மணிக்கு வேலையை முடித்துவிட்டு உள்ளே நுழைந்த அரவிந்த் சோபா வில் தூங்கிகொண்டிருந்த கயலின் முகத்தை
அன்புடன் நோக்கினான்...நிலவை போன்ற அவள் முகம் சோகத்தில் இருப்பது அவனுக்கு தெள்ள தெளிவாக புரிந்தது.....தூக்கத்துல கூட மூஞ்ச உர்ர்ன்னு வச்சுருக்கா....
இவுங்க அம்மா இவளை எப்படி தான் சமாளிச்சாங்களோ.....உம்மனாமூஞ்சி ...என்ன பார்த்து ஒரு வார்த்தை நேத்துல இருந்து
பேசிருப்பாளா ....தாலி தானே கட்டுனேன் ...ஏதோ தேள் கடிச்ச மாதிரி முகத்தை வச்சுருக்கா....
ஆனாலும் ஏதோ ஒன்னு இவகிட்ட இம்ப்ரெஸ் பண்ணுது.....ம்...குட் நைட் டியர் ..
காலை ஆறுமணிக்கு உறக்கத்திலிருந்து எழுந்தவள் அறையில் அவன் இல்லாமல் இருப்பது கண்டு இன்னும் வரலியா......என்று
என்னும் பொழுதே ஜாகிங் முடித்து அறைக்குள் நுழைந்தான் அரவிந்த்..
ம்ம்...என்ன நைட் நல்ல தூங்கினியா .............
ம்ம் .................சரி சீக்கிரம் ரெடி ஆகு....அம்மா கோயிலுக்கு போக சொன்னாங்க....
"ம்ம்...சரி " என்றவள் குளியறைக்குள் நுழைந்தாள் ..ஒரு நிமிஷம்...
அம்மா உன் கிட்ட இந்த புடவைய குடுத்து கட்ட சொன்னாங்க...தாய் குடுத்த பட்டு வேட்டி , சட்டை அணிந்து கொண்டு கம்பீரமாக
கீழிறங்கி சென்றான்...பார்ப்பதற்கு பாரதிக்கு அவ்வளவு ஆனந்தமாக இருந்தது....தன் மகளுக்கு ராஜா மாதிரி மாப்பிள்ளை
கிடைத்திருப்பதாக எண்ணினார்.
கயல் அந்த பச்சை நிற பட்டு புடவையில் தேவதை போல் இருந்தாள் ..
கயலை பார்த்த பாரதியின் கண்கள் ஆனந்த கண்ணீர் வடித்தது ..பிறர் அறியாமல் துடைத்து கொண்டார்...
அரவிந்தும் கயலை வைத்தகண் வைத்தபடி பார்த்து கொண்டிருந்தான்.....
இருவரும் பிரகாஷ்,அன்புக்கரசியின் காலில் விழுந்து வணங்கினர் ..
நல்ல இருங்கப்பா ரெண்டுபேரும் ...பிரகாஷ் கண்களிலும் கண்ணீர் வந்தது....தன் மகளை, மகள் என்று கூறமுடியவில்லை என்பது ஒரு
புறம்......அவள் தாயை நிர்கதியாய் விட்டு சென்றது மறுபுறம் என்று வேதனையை சுமந்த வண்ணம் நின்று கொண்டிருந்தார்...............
உனக்கு அப்பாவா இருந்து பண்ணவேண்டிய கடமையை இனிமேலாது செய்வேன் என்று மனதிற்குள் உறுதிபூண்டார்...
காரில் ஏறியதிலிருந்து கயல் அமைதியுடன் வெளியில் நோக்கியவாறே இருந்தாள் ...
அவன் தான் அவளை எப்படி பேசவைப்பது என்று யோசித்து கொண்டிருந்தான்...
ம்கூம் ....கயல் உனக்கு இந்த costume நல்லா இருக்கு....
ம்ம்...தேங்க்ஸ்...
அப்புறம் நாம கோயிலுக்கு போயிடு ஷாப்பிங் போலாம்...உனக்கு என்ன வேணுன்னு சொல்லு...எல்லாத்தையும் வாங்கிட்டு லஞ்ச்
வெளிய சாப்பிடலாம்....
ம்ம்.....
உன் வாயில ஏதாது லட்டு வச்சிருக்கியா ..........
ஏன்.....எதுகேட்டாலும் ம்ம்....மட்டும் சொல்ற....
நான் இப்போ உன்னோட புருஷன் ...ஏதோ சமையல் போட்டிக்கு ஜட்ஜ் பண்ண வந்த மாதிரி ம்ம்..ம்ம்...
சொன்னா குடும்பம் எப்படி விளங்கும் .....
see முதல்ல உனக்குள்ள இருக்கிற குழப்பத்துல இருந்து வெளிய வா.....
உன்ன பத்தி என்னைக்கும் ,என்ன பத்தி உனக்கும் இதுவரைக்கும் எதுவும் தெரியாது...
அதெல்லாத்தையும் ஷேர் பண்ணுவோம் ...உன்னோட கண்ணுக்கு இதுவரைக்கும் நான் ஒரு முள் மாதிரி தெரிஞ்சிருக்கலாம்...
பட் இனிமே இந்த ரோஜாவை பாதுகாக்கிற முள்ளாதான் இருப்பேனே தவிர குத்துற முள்ளா இருக்கமாட்டேன்...I swear டியர்....
தான் அன்று பேசியது இவனுக்கு எப்படி தெரியும் என்று அதிர்ச்சியடைந்தாள் ....
ஒகே ....இப்போ உனக்கு பிடிச்ச கோயில் சொல்லு...நம்ம போலாம்...
அவன் இவ்வாறு கூறியவுடன் , தன் தாயுடன் செல்லும் கோயில் நினைவில் வந்தது....அங்கே செல்லலாம் என்றாள் ..
அப்பா..................ஒரு வழியா வாய்க்குள்ள இருந்த லட்டு வ முழுங்கிட்டியா....
மெலிதாக புன்னகைத்தாள் ......
காரை விட்டு இறங்கி கோயிலுக்குள் சென்றனர்...
கயல் மனதளவில் அம்மா! உனக்கு நான் குடுத்த வாக்கை காப்பாற்ற முடியலைங்கற குற்ற உணர்ச்சி எனக்குள்ள இருக்கு...என்ன
மன்னிச்சிடுமா....அன்பு அம்மா என்ன ரொம்ப அக்கறையா பாத்துக்கிட்டாங்க....அவுங்க உயிரை காப்பாத்தாதான் நான் இவரை
கல்யாணம் பண்ணேன்....என் வாழ்க்கையை இந்த கடவுள் பாத்துக்கட்டும் ....உனக்கு என் மேல கோபம்னா என்ன மன்னிச்சிடுமா.....
கயல் என்ன தீவிரமா.....வேண்டிக்கிட்டு இருக்க.....
வேண்டுனத வெளிய சொல்லக்கூடாது....ம்...அப்படியா....
சரி .... இப்போ நாம ஷாப்பிங் போலாம்....உனக்கு தேவையானதை வாங்கிக்கோ...
...................இரவு உணவு முடித்து வீட்டுக்கு திரும்பியவர்கள் அன்புவின் அறைக்கு சென்று அவருக்கு வாங்கிய பொருட்களை அவருடன்
குடுத்துவிட்டு ,அரவிந்த் அவளிடம் ," கயல் என்னக்கு ஒரு கால் பண்ணனும் ..நீ போய் அப்பா கிட்ட குடுத்துட்டு வா....ம்...சரிங்க....
கயல் மட்டும் பிரகாஷ் அறைக்குள் நுழைந்தாள்
சார்...........!!!மாமா....அதிர்ச்சியுடன் நோக்கினார்....
கயல்...உனக்கு நான் அப்பா முறை வேணும்....அன்பு உங்கிட்ட சொல்லிருப்பா ....அரவிந்த் என் தங்கச்சி பையன்...
நீ என்ன அப்பா.....னு தான் கூப்பிடனும் மா....
ம்....சரி பா....உங்களுக்கு இது வாங்கிட்டு வந்தோம்...அவரு உங்க கிட்ட குடுக்க சொன்னாரு....உங்களுக்கு பிடிச்சிருக்கானு பாருங்க..பா.....
ம்....நீ அன்போட வாங்கிட்டு வந்த எதுவானாலும் எனக்கு பிடிக்கும் மா....
அப்புறம் உங்கிட்ட ஒன்னு சொல்லணும் ... நீ என்னோட மகள்....மாதிரி...உனக்கு இந்த வீட்ல எல்லா உரிமையும் இருக்கு....அதுனால
எந்த தயக்கமும் வேண்டாம்....எதுனாலும் என் கிட்ட உரிமையா கேளு மா...
ம்ம்...சரி பா..என்று புன்னகையுடன் வெளியேறினாள் ........
அந்த புன்னகைக்கு ஆயுசு கம்மி என்பது அவளுக்கு தெரியவில்லை............
வரவில்லை...அறையில் இருந்த சோபா வில் மெல்ல தலைசாய்த்தவள் அயர்வினால் அப்படியே உறங்கிவிட்டாள் .
இரவு 11.30 மணிக்கு வேலையை முடித்துவிட்டு உள்ளே நுழைந்த அரவிந்த் சோபா வில் தூங்கிகொண்டிருந்த கயலின் முகத்தை
அன்புடன் நோக்கினான்...நிலவை போன்ற அவள் முகம் சோகத்தில் இருப்பது அவனுக்கு தெள்ள தெளிவாக புரிந்தது.....தூக்கத்துல கூட மூஞ்ச உர்ர்ன்னு வச்சுருக்கா....
இவுங்க அம்மா இவளை எப்படி தான் சமாளிச்சாங்களோ.....உம்மனாமூஞ்சி ...என்ன பார்த்து ஒரு வார்த்தை நேத்துல இருந்து
பேசிருப்பாளா ....தாலி தானே கட்டுனேன் ...ஏதோ தேள் கடிச்ச மாதிரி முகத்தை வச்சுருக்கா....
ஆனாலும் ஏதோ ஒன்னு இவகிட்ட இம்ப்ரெஸ் பண்ணுது.....ம்...குட் நைட் டியர் ..
காலை ஆறுமணிக்கு உறக்கத்திலிருந்து எழுந்தவள் அறையில் அவன் இல்லாமல் இருப்பது கண்டு இன்னும் வரலியா......என்று
என்னும் பொழுதே ஜாகிங் முடித்து அறைக்குள் நுழைந்தான் அரவிந்த்..
ம்ம்...என்ன நைட் நல்ல தூங்கினியா .............
ம்ம் .................சரி சீக்கிரம் ரெடி ஆகு....அம்மா கோயிலுக்கு போக சொன்னாங்க....
"ம்ம்...சரி " என்றவள் குளியறைக்குள் நுழைந்தாள் ..ஒரு நிமிஷம்...
அம்மா உன் கிட்ட இந்த புடவைய குடுத்து கட்ட சொன்னாங்க...தாய் குடுத்த பட்டு வேட்டி , சட்டை அணிந்து கொண்டு கம்பீரமாக
கீழிறங்கி சென்றான்...பார்ப்பதற்கு பாரதிக்கு அவ்வளவு ஆனந்தமாக இருந்தது....தன் மகளுக்கு ராஜா மாதிரி மாப்பிள்ளை
கிடைத்திருப்பதாக எண்ணினார்.
கயல் அந்த பச்சை நிற பட்டு புடவையில் தேவதை போல் இருந்தாள் ..
கயலை பார்த்த பாரதியின் கண்கள் ஆனந்த கண்ணீர் வடித்தது ..பிறர் அறியாமல் துடைத்து கொண்டார்...
அரவிந்தும் கயலை வைத்தகண் வைத்தபடி பார்த்து கொண்டிருந்தான்.....
இருவரும் பிரகாஷ்,அன்புக்கரசியின் காலில் விழுந்து வணங்கினர் ..
நல்ல இருங்கப்பா ரெண்டுபேரும் ...பிரகாஷ் கண்களிலும் கண்ணீர் வந்தது....தன் மகளை, மகள் என்று கூறமுடியவில்லை என்பது ஒரு
புறம்......அவள் தாயை நிர்கதியாய் விட்டு சென்றது மறுபுறம் என்று வேதனையை சுமந்த வண்ணம் நின்று கொண்டிருந்தார்...............
உனக்கு அப்பாவா இருந்து பண்ணவேண்டிய கடமையை இனிமேலாது செய்வேன் என்று மனதிற்குள் உறுதிபூண்டார்...
காரில் ஏறியதிலிருந்து கயல் அமைதியுடன் வெளியில் நோக்கியவாறே இருந்தாள் ...
அவன் தான் அவளை எப்படி பேசவைப்பது என்று யோசித்து கொண்டிருந்தான்...
ம்கூம் ....கயல் உனக்கு இந்த costume நல்லா இருக்கு....
ம்ம்...தேங்க்ஸ்...
அப்புறம் நாம கோயிலுக்கு போயிடு ஷாப்பிங் போலாம்...உனக்கு என்ன வேணுன்னு சொல்லு...எல்லாத்தையும் வாங்கிட்டு லஞ்ச்
வெளிய சாப்பிடலாம்....
ம்ம்.....
உன் வாயில ஏதாது லட்டு வச்சிருக்கியா ..........
ஏன்.....எதுகேட்டாலும் ம்ம்....மட்டும் சொல்ற....
நான் இப்போ உன்னோட புருஷன் ...ஏதோ சமையல் போட்டிக்கு ஜட்ஜ் பண்ண வந்த மாதிரி ம்ம்..ம்ம்...
சொன்னா குடும்பம் எப்படி விளங்கும் .....
see முதல்ல உனக்குள்ள இருக்கிற குழப்பத்துல இருந்து வெளிய வா.....
உன்ன பத்தி என்னைக்கும் ,என்ன பத்தி உனக்கும் இதுவரைக்கும் எதுவும் தெரியாது...
அதெல்லாத்தையும் ஷேர் பண்ணுவோம் ...உன்னோட கண்ணுக்கு இதுவரைக்கும் நான் ஒரு முள் மாதிரி தெரிஞ்சிருக்கலாம்...
பட் இனிமே இந்த ரோஜாவை பாதுகாக்கிற முள்ளாதான் இருப்பேனே தவிர குத்துற முள்ளா இருக்கமாட்டேன்...I swear டியர்....
தான் அன்று பேசியது இவனுக்கு எப்படி தெரியும் என்று அதிர்ச்சியடைந்தாள் ....
ஒகே ....இப்போ உனக்கு பிடிச்ச கோயில் சொல்லு...நம்ம போலாம்...
அவன் இவ்வாறு கூறியவுடன் , தன் தாயுடன் செல்லும் கோயில் நினைவில் வந்தது....அங்கே செல்லலாம் என்றாள் ..
அப்பா..................ஒரு வழியா வாய்க்குள்ள இருந்த லட்டு வ முழுங்கிட்டியா....
மெலிதாக புன்னகைத்தாள் ......
காரை விட்டு இறங்கி கோயிலுக்குள் சென்றனர்...
கயல் மனதளவில் அம்மா! உனக்கு நான் குடுத்த வாக்கை காப்பாற்ற முடியலைங்கற குற்ற உணர்ச்சி எனக்குள்ள இருக்கு...என்ன
மன்னிச்சிடுமா....அன்பு அம்மா என்ன ரொம்ப அக்கறையா பாத்துக்கிட்டாங்க....அவுங்க உயிரை காப்பாத்தாதான் நான் இவரை
கல்யாணம் பண்ணேன்....என் வாழ்க்கையை இந்த கடவுள் பாத்துக்கட்டும் ....உனக்கு என் மேல கோபம்னா என்ன மன்னிச்சிடுமா.....
கயல் என்ன தீவிரமா.....வேண்டிக்கிட்டு இருக்க.....
வேண்டுனத வெளிய சொல்லக்கூடாது....ம்...அப்படியா....
சரி .... இப்போ நாம ஷாப்பிங் போலாம்....உனக்கு தேவையானதை வாங்கிக்கோ...
...................இரவு உணவு முடித்து வீட்டுக்கு திரும்பியவர்கள் அன்புவின் அறைக்கு சென்று அவருக்கு வாங்கிய பொருட்களை அவருடன்
குடுத்துவிட்டு ,அரவிந்த் அவளிடம் ," கயல் என்னக்கு ஒரு கால் பண்ணனும் ..நீ போய் அப்பா கிட்ட குடுத்துட்டு வா....ம்...சரிங்க....
கயல் மட்டும் பிரகாஷ் அறைக்குள் நுழைந்தாள்
சார்...........!!!மாமா....அதிர்ச்சியுடன் நோக்கினார்....
கயல்...உனக்கு நான் அப்பா முறை வேணும்....அன்பு உங்கிட்ட சொல்லிருப்பா ....அரவிந்த் என் தங்கச்சி பையன்...
நீ என்ன அப்பா.....னு தான் கூப்பிடனும் மா....
ம்....சரி பா....உங்களுக்கு இது வாங்கிட்டு வந்தோம்...அவரு உங்க கிட்ட குடுக்க சொன்னாரு....உங்களுக்கு பிடிச்சிருக்கானு பாருங்க..பா.....
ம்....நீ அன்போட வாங்கிட்டு வந்த எதுவானாலும் எனக்கு பிடிக்கும் மா....
அப்புறம் உங்கிட்ட ஒன்னு சொல்லணும் ... நீ என்னோட மகள்....மாதிரி...உனக்கு இந்த வீட்ல எல்லா உரிமையும் இருக்கு....அதுனால
எந்த தயக்கமும் வேண்டாம்....எதுனாலும் என் கிட்ட உரிமையா கேளு மா...
ம்ம்...சரி பா..என்று புன்னகையுடன் வெளியேறினாள் ........
அந்த புன்னகைக்கு ஆயுசு கம்மி என்பது அவளுக்கு தெரியவில்லை............