• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Chocolate boy - 07

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

பர்வீன்.மை

மண்டலாதிபதி
Author
Joined
Jun 20, 2019
Messages
266
Reaction score
2,133
Location
Chennai
சாக்லேட் பாய் – 07

ஹர்ஷாவும் தர்ஷினியும் அலுவலகம் முடிவதற்காக காத்திருந்தனர். அதுவரை வேறு வழியில்லாமல் பணியை செய்துக் கொண்டிருந்தனர். இருவருக்குமே மாலை அவனது வீட்டில் சந்திப்பது குறித்த யோசனை தான்.

“ அப்படியென்ன வீட்டில் வைத்து சொல்ல வேண்டிய அவசியம்” என தர்ஷினி யோசித்துக் கொண்டிருந்தாள் என்றால் “ நாம் கூப்பிட்டதுமே மறுக்காமல் வர சம்மதிக்குறானா அவள் நம் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறாள்” என ஹர்ஷா வியந்து கொண்டிருந்தான்.

“ டேய் ஹர்ஷா! என்னடா ரெண்டு நாளா ரொம்ப அமைதியா இருக்கே? எனி ப்ராபளம்” என அவன் சிந்தனையை கலைப்பது போல அவனது முகத்திற்கு நேரே தன் கையை ஆட்டியபடி கேட்டாள் சாரு.

“ம்ப்ச்.... அதெல்லாம் ஒன்றுமில்லை. கொஞ்சம் வேலை ஜாஸ்தி. அவ்ளோ தான்”

“பார்றா...... ரொம்பா சின்சியர் சிகாமணி ஆயிட்டே.....? பட் உன் கூட பேசாம எனக்கு ஓவர் பீலிங்ஸா இருக்குடா. நீ பேசுனா தான் எனக்கு பூஸ்ட் குடிச்ச மாதிரி இருக்கும்.”

“ஆஹா..... இவ ஏழரைய கூட்டாம விட மாட்டா போலயே” என மனதிற்குள் பதறியவன்,” இப்போ என்ன உனக்கு பூஸ்ட் குடிக்கணும் அவ்ளோ தானே. நம்ம சீனு அண்ணா கிட்ட சொன்னா வாங்கிட்டு வர போறாரு. என்ன சொல்லட்டா?” என்றான்.

“டேய்.... டேய்... இதெல்லாம் ரொம்ப ஓவர்டா. புதுசா சீனெல்லாம் போடுற? என்னவோ ஆயிடுச்சு டா உனக்கு. கண்டுபிடிக்கிறேன்” என்றாள் பல்லை கடித்தபடி.

“ ம்..... நம்மாளு வேற சீரியஸா ஏதோ வொர்க் பண்ணிட்டு இருக்கா..... இது சரியில்லையே....” என நினைத்தவன் ,” சாரு! நான் முக்கியமான வேலைல இருக்கேன். அப்புறம் பேசலாம்” என்றான்.

“ சரி போ.... ஒரு நாள் என் கிட்ட மாட்டுவே... அப்போ இருக்கு உனக்கு” என்றபடி நகர்ந்தாள் அவள்.

அவள் சென்றதும் தர்ஷினிக்கு மின்னஞ்சல் ஒன்றை தட்டினான்.

“ என்ன ஸ்வீட்டி! பார்க்கவே மாட்டேன்ங்குற”

“ நீங்க தான் ரொம்ப பிஸியா இருக்கீங்களே” அவளிடமிருந்து பதில் வந்தது.

“கோவமா....?”

“எதுக்கு?”

“நான் சாரு கிட்ட பேசுனதுக்கு. நான் ப்ரெண்ட்லியா தான் பேசுறேன். நீ என்னை தப்பா நினைக்கிறியா?”

“ நான் அவ்ளோ சீப் இல்ல”

“ ஹே.... நான் அப்படி சொல்லல. ஜஸ்ட் அன் எக்ஸ்ப்ளனேஷன் (just an explanation)”

“அவசியமில்லை....”

“சாரி பேபி.....”
அதன் பின் அவளிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. சிறிது நேரம் காத்திருந்தவன் எழுந்து தர்ஷினி அருகே சென்றான்.

“சிஸ்டம்ல ஏதோ ப்ராபளம் னு சொன்னீங்களாமே? தள்ளுங்க நான் பார்க்குறேன்.” என்று லேசாக சிரித்தபடி.

“ நான் சொல்லலியே....” என்றாள் அவனது கண்களை பாராமல்.

“ நீங்க தான் சொன்னீங்க.... தள்ளுங்க”

“ம்ஹூம்” என அவள் மறுத்துக் கொண்டிருந்த சமயம் தற்செயலாக ரீனா அவனை கண்டாள்.

“ என்ன ஹர்ஷா? இங்க நிற்குறே?”

“ இவங்க சிஸ்டம்ல ப்ராபளம் னு சொன்னாங்க. அதான் வந்தேன்”

“இவ இங்கேயே தானே உட்கார்ந்திருந்தா. எப்போ வந்து சொன்னா?” என்றாள் ஆச்சரியமாக.

“இவங்க வரல.... சாரு வந்து சொன்னா”

“சாரு வந்து சொன்னாளா? நீ சாரு கிட்ட சொன்னீயா தர்ஷினி?” என கேட்டாள் ரீனா.

இல்லை என கூறி ஹர்ஷாவை காட்டி கொடுக்க விரும்பாதவள்,” ஆமாம்” என்றாள்.



அவள் பதிலில் கடுப்பானவள்,” ஏன்டா! அன்னைக்கு நான் வந்து சொன்னப்போ அப்படி சட்டம் பேசுனே. இப்போ சாரு வந்து சொன்னதுமே வந்து நிற்குறே? என்னடா உனக்கும் சாருக்கும் தனியா ஏதாவது டிராக் ஓடுதா?” என வினவ, பதறி போனான் ஹர்ஷா.

“என்னது எனக்கும் சாருக்கும் மா? எம்மா.... தாயே... எதையாவது கொளுத்தி போட்டு தீபாவளி கொண்டாடிடாத.... ஆள விடு” என பொரிந்தவன்,” இன்னைக்கு தான் லவ்வ சொல்லி காதலிக்கவே ஆரம்பிச்சிருக்கோம். இவளுங்க இன்னைக்கே எண்ட் கார்டு போட்டுடுவாளுங்க போல “ என தனக்குள் நொந்து கொண்டான்.

“ சரி...சரி.... பொழச்சி போ....” என சிரித்த ரீனா தன் வேலையில் மூழ்கினாள்.

“ தள்ளுங்க தர்ஷினி.... நான் பார்க்குறேன்” என்றான் அழுத்தமாக குரலில்.

“ இல்ல.... வேண்டாம்”

“ நான் பார்த்தே ஆகணும்” என்றான் உறுதியாக. வேறு வழியில்லாமல் தர்ஷினி எழுந்தாள். அவளது இருக்கையை இழுத்து அமர்ந்து கணினியை நோட்டமிட்டான். அவன் நினைத்தது போலவே அவள் மீம் ஓன்றை தான் தயார் பண்ணிக் கொண்டிருந்தாள். உடைமைதனம்( possessiveness) மிகுந்த அவளது மீம்மை உள்ளுற ரசித்தவன் எதுவும் பேசாமல் எழுந்து சென்றான்.

“ ஒ....ஒன்றும் சொல்லாம போறீங்க” மெல்லிய குரலில் வினவினாள்.
அவளை திரும்பி பார்த்தவன், “ வீட்ல வைச்சி சொல்றேன்” என்றான். அவள் மௌனமாக சிரித்தாள்.

அலுவலக நேரம் முடிய, அனைவரும் கலைய தொடங்கினர். ஏறக்குறைய எல்லாருமே கிளம்பி விட, முகம் கழுவி, சிகை திருத்தி லேசான ஓப்பனையோடு தயாராக இருந்தவளை கண்டு விசிலடித்தபடி அருகில் வந்தான் ஹர்ஷா.

“ சும்மாவே என்னை இம்சை பண்ணுவே..... இதுல இப்படி கும்முனு ரெடியாகி ஏன் என்னை சோதிக்குற” என்றான் கண்களை சிமிட்டி.

“ அச்சச்சோ.... ஓவர் மேக்கப் போடுட்டேனா ஹர்ஷா. பர்ஸ்ட் டைம் உங்க வீட்டுக்கு வரேனே னு கொஞ்ச.....” என பதறியவளை கையமர்த்தினான் ஹர்ஷா.

“ ஹேய்..... தர்ஷி! ஓவர் மேக்கபெல்லாம் இல்லை. அழகாயிருக்க. வா..... நாம என் பைக்குல ஒண்ணா போயிடலாம்”

“உங்க கூடயா? அதுவும் பைக்குல? ம்ஹூம்.... நான் வர மாட்டேன்.”

“ ஏன்? உனக்காக லாரி ஏதும் எடுத்துட்டு வரணுமா?” என்றான் சற்று எரிச்சலான குரலில்.

அவனை முறைத்தவள்,” நான் என் ஸ்கூட்டில வரேன்” என்றாள். அவளோடு ஒன்றாக போகலாம் என்ற ஆசை பொய்ய,” என்னவோ பண்ணு....” என முணுமுணுத்துவிட்டு முன்னே சென்றான்.

இதுவரை தர்ஷினி அவனை கடுமையான முகத்தோடு பார்த்ததேயில்லை. தன்னால் அவனது மகிழ்ச்சி கெட்டுவிட்டதே எண்ணி கலங்கியவள் எதுவும் பேசாமல் அவன் பின்னே சென்றாள்.
காதலும் ஊடலும் ஒட்டி பிறந்த இரட்டையர் போல. காதல் பிறந்த கண நேரத்தில் ஊடலும் அங்கே நுழைந்துவிட்டது.
வேகமாக சென்றுக் கொண்டிருந்தவன் அவளுக்கு தன் வீட்டு முகவரியை சொல்ல எண்ணி சட்டென திரும்ப, கலங்கிய விழிகளை அவனுக்கு காட்டாது தலைகுனிந்தபடி வந்து கொண்டிருந்த தர்ஷினி அவன் மீது மோதினாள். நிலை தடுமாறி விழ போனவளை ஹர்ஷா தாங்கி பிடிக்க, எதிர்பாராத அவளது ஸ்பரிசத்தில் கோபம் எல்லாம் பறந்தே போனது. கீழே விழுந்துவிடுவோமோ என பயந்தவள் கண்களை இறுக மூடி அவனது சட்டையையும் இறுக பற்றியிருந்தாள். காதலும் ஊடலும் இரட்டையர் போல் ஒட்டி கொண்டு திரிந்தாலும் அழையா விருந்தாளியாக அங்கே வந்து சேரும் கூடல்.

அவளது பூ முகத்தில் தன்னை தொலைத்தவன் ,“வீட்டுக்கு போலாமா தர்ஷி?”என்றான் கிசுகிசுப்பான குரலில். அவனது குரலில் தன்னிலை உணர்ந்தவள் சட்டென அவனை விட்டு விலகினாள்.

சற்று முன்பு அவன் முகத்தில் கப்பியிருந்த கடுமை மாறி சிரிப்பு மலர, மங்கையின் முகமோ சிவந்து போனது.

“வீட்டு அட்ரஸ் சொல்லலாம் னு திரும்பினேன்” – ஹர்ஷா.

அவனை நிமிர்ந்து பார்க்க முடியாமல் குனிந்தே நின்றவள், “ தெரியும்” என்றாள்.

“அட்ரஸ் தெரியுமா? எப்படி?"

“ வீட்ல வைச்சி சொல்றேன்” என்றவள் அவனை தாண்டி முன்னே நடந்தாள்.

“ உம்மு னு இருக்குற பொண்ணுங்கள கூட நம்பிடலாம். இந்த கம்மு னு இருக்குற பொண்ணுங்கள மட்டும் நம்பவே கூடாதுப்பா” என தனக்குள்ளே சொல்லி கொண்டவன் வேகமாக சென்று அவளோடு இணைந்து நடந்தாள்.

தொடரும்......

தங்கள் ஆதரவை எதிர்நோக்கும்

பர்வீன்.மை
FB_IMG_1561637170032.jpg
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top