• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

DUECP | Vijay | Episode 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
கலாவிக்

நீனா சைகை காட்ட வாசலில் இருந்த இரண்டு காவலர்கள் வெளியேற முயன்ற ஜீவாவைத் தடுப்பதைப் போல அவனுக்கு முன் வந்து நின்றனர்.

”ஜீவா... நில்லு, இல்லேனா உன்னைக் கைது பண்ண வேண்டி இருக்கும்!”

நீனா போலியான கோவத்தோடு அவனை நோக்கிச் சொன்னாள்.

ஜீவா மெல்ல இவளைத் திரும்பிப் பார்த்து அலட்சியமாய்ப் புன்னகைத்தான்.

”அது உங்களால முடியாது, டாக்டர். நீனா!”

“சோதிச்சுப் பார்க்க விருப்பமா?”

நீனா ஒரு கையை இடுப்பில் வைத்துக்கொண்டு சீண்டலாகக் கேட்டாள்.

“பாருங்க... நீங்கதான் ஏமாந்து போவீங்க! என்னைப் பத்தி உங்களுக்குத் தெரியும்னு நினைக்குறேன்!”

ஜீவா மெல்லிய எரிச்சலுடன் தோள்களைக் குலுக்கிச் சொன்னான்.

”நல்லா தெரியும் கமாண்டர் ஜீவா! தெரிஞ்சதனாலத்தான் முக்கியமான வேலைலாம் விட்டுட்டு உங்க பின்னாடி அலைஞ்சிட்டு இருக்கேன்! உங்களுக்குத்தான் உங்களைப் பத்தி முழுசாத் தெரியுமான்னு எனக்குச் சந்தேகமா இருக்கு!”

நீனாவும் குரலில் எரிச்சலைக் காட்டிப் பேசினாள்.

“என்னப் பத்தி எனக்கே தெரியாதா! ஏன் இப்படி என்னைப் போகவிடாம புடிச்சு வெச்சிக்கிட்டு உளறிட்டு இருக்கீங்க? வழிய விடுங்க!”

ஜீவா முன்னால் நகர முற்பட்டான், இரண்டு காவலர்களும் தங்கள் கையில் இருந்த மின்லட்டியை அவனது முகத்துக்கு நேராய் நீட்டினர்.

“நான் ஒன்னும் உளறல டா! நீதான் கிறுக்கு மாதிரி பேசிட்டு இருக்க!”

நீனா அவனை நோக்கி ஓரடி எடுத்து வைத்தாள்.

ஏற்கனவே அவள் சட்டென மரியாதைகளைக் கைவிட்டு ‘டா’ என்றதில் இலேசாய் அதிர்ந்திருந்தவன், அவள் தன்னை நெருங்குவதைப் பார்த்து மேலும் கொஞ்சம் அதிர்ந்தான்.

”இங்க பாருங்க டாக்டர். நீனா, நீங்க புரோட்டோகாலை மீறுறீங்க... செயற்கை மனிதர் சிறப்பு விதி 2, பிரிவு ஆ படி நான் இந்த கிரகத்தின் ஆளுநர்க்கு மட்டுமே முழுதாகக் கட்டுப்பட வேண்டியவன், என் மேல நீங்க கை-”

சொல்லி முடிப்பதற்கு முன் ஜீவா உயிரற்ற உடலைப் போலக் கீழே சரிந்தான்.

அவன் பேசிக்கொண்டிருக்கும் போதே நீனா சைகை காட்ட, காவலர்களில் ஒருவர் ஜீவாவின் பின்கழுத்தில் இருந்த அந்த இரகசிய சிறிய பொத்தானை அழுத்தியிருந்தார், அடுத்த நொடி அவன் தரையில் கிடந்தான்.

*******
புவி

ளவன் குழப்பத்தோடே டிராகனின் அறையைவிட்டு வெளி வந்து நேராக நந்தினியின் க்யூபிக்கலை நோக்கிச் சென்றான்.

அதற்குள் பிரபு அவனை இடையில் பிடித்துக்கொண்டான்.

“என்ன மச்சி ஆச்சு? டிராகன் பொறிஞ்சு தள்ளிடுச்சா?”

“நீ வேற டா... அவர் கோட்-சூட் போட்ட புத்தர் மாதிரி ரொம்ப அமைதியா பேசினார்...”

“என்ன டா சொல்ற? நம்ம டிராகனா? அமைதியாவா? ரூம் மாறிப் போயிட்டியா?”

வளவன் பிரபுவை முறைத்தான்.

“நந்தினியைப் பார்க்கச் சொல்லிருக்கார்... அவளையும் என்னையும் ஏதோ புது அசைன்மெண்ட்ல அனுப்பப் போறாராம்...”

வளவனுக்கு இருந்த குழப்பம் அவனது குரலில் தெரிந்தது. பிரபு அதை வருத்தம் என்று நினைத்துக்கொண்டான்.

“வாட்? நந்தினியோடவா? அதையேண்டா இப்படி அழுது வடிஞ்சுட்டுச் சொல்ற? நியாயப்படி டிரீட் வெக்கனும் நீ!”

“அட இருடா, என்ன ஏதுன்னே ஒன்னும் புரியல, அதுக்குள்ள உனக்கு டிரீட் ஒரு கேடா!”

“இப்பதான் மச்சி புரியுது... நீ முரளி மோட்ல இருக்க... அப்பாவியா மூஞ்சிய வெச்சுக்கிட்டே நந்தினையைக் கரெக்ட் பண்ணிடலாம்னு பாக்குற, அதான?”

”வாட்?”

பின்னாலிருந்து கேட்ட நந்தினியின் குரலில் இருவருமே திகைத்தனர்.

‘இவ வேற, வோல்டமோர்ட் மாதிரி பேரச் சொல்லும் போதெல்லாம் உடனே உடனே வந்து உசுர எடுக்குறாளே!’ என்று பிரபு மனத்திற்குள் எண்ணி அங்கலாய்த்தான்.

“இ- இது வேற நந்தினி மா...” பிரபு என்ன சொல்லிச் சமாளிப்பது என்று யோசித்தபடியே மெள்ள அவள் புறம் திரும்பினான்,

“எ- எங்க வீட்டுகிட்ட நந்தினி ஐஸ்க்ரீம் இருக்குனு சொன்னேனே... அங்க சாயங்காலம் கரெக்ட்டா வந்துடு டான்னு சொல்லிட்டு இருந்தேன்... ஆமா, நீ ஏன் எப்ப பாரு பின்னால வந்து நின்னுக்கிட்டு அதிர்ச்சியாவே பேச ஆரம்பிக்குற, எனக்கு பக்குனு ஆயிடுது... இனிமே வரதுன்னா கால் பண்ணிட்டு வா, சரியா...”

பிரபு வளவளவென்று பேச நந்தினி அவனை முறைத்தபடி நின்றாள்.

“ந- நந்தினி... டிரா- ம்ஹ்கும், பாஸ் உன்ன வந்து பார்க்கச் சொன்னார், அடுத்த அசைன்மெண்ட்டுக்கான விவரங்களை நீ சொல்லுவனு சொன்னார்...”

வளவன் பேச்சைத் திசைதிருப்பி கேட்டான்.

“யெஸ்! அதுக்குத்தான் நீ வருவ வருவனு நானும் காத்துக்கிட்டே இருந்தேன், நீ இங்க ஐஸ்க்ரீம் சாப்பிட திட்டம் போட்டுட்டு இருக்க!”

இலேசான எரிச்சலுடன் அவள் சொல்ல வளவன் அசடு வழிந்தான்.

“நீயும் வேணா வாயேன்...”

என்று பிரபு சொன்னதை அவள் கவனிக்காதவளைப் போல வளவனைப் பார்த்துப் பேசினாள்.

“இந்தா, இதுல ப்ரீஃப் இருக்கு, படிச்சுட்டு என் க்யூபிக்களுக்கு வா, விவரமா பேசுவோம்!”

சொல்லிவிட்டு அவனது பதிலுக்குக் காத்திராமல் திரும்பிச் சென்றாள்.

வளவன் அவள் கொடுத்த கோப்பை வாங்கிக்கொண்டு அவள் போவதையே பார்த்துக்கொண்டு நின்றான்.

“நல்லா சமாளிச்சேன்ல மச்சி...”

பிரபு பெருமையாகக் கேட்க, வளவன் அவனைப் பார்த்து முறைத்தான்.

“முண்டம், அவளையும் ஐஸ்க்ரீம் சாப்பிட வான்னு கூப்பிடுறியே, அதுவே டுபாக்கூர் கதை, அவ டக்குனு வரேன்னு சொல்லிட்டா எங்கடா கூட்டிட்டுப் போவ?”

வளவன் கோவமாகக் கேட்க, பிரபு பெரிதாய் நகைத்தான்.

“அவளாவது ஐஸ்க்ரீம் சாப்பிட வரதாவது... இத்தன மாசமா விண்டோ ஷாப்பிங் மாதிரி அவளையே வெறிச்சு வெறிச்சுப் பார்க்குற உன்னையே அவ கண்டுக்குறதில்ல, நான் கூப்ட உடனே ‘வா பிரபு, நாம நந்தினி ஐஸ்க்ரீம் சாப்பிட போலாம்’னு வந்துடுவாளாக்கும்...”

பிரபு சொல்லிக்கொண்டிருக்கும் போதே பின்னால் அவள் நிற்கிறாள் என்பதை வளவனின் முகக்கோணல் மூலம் அறிந்துகொண்டான்.

”சத்தியமா இனிமே உன் பேரச் சொல்லவே மாட்டேன் மா!”

என்று திரும்பி அவளை நோக்கிக் கும்பிட்டான்.

“பாஸ் இந்த பெண்டிரைவையும் உன் கிட்டக் கொடுக்கச் சொன்னார், மறந்துட்டேன், இந்தா!”

விறைப்புடன் சொன்னவள் வளவனின் கையில் அதைத் திணித்துவிட்டு, பிரபுவை ஒரு முறை முறைத்துவிட்டு விறுவிறுவென்று தனது குற்றறையை (க்யூபிக்கல்) நோக்கிச் சென்றாள்.

“சத்தியமா இவ சூன்யக்காரிதான் மச்சி... சந்தேகமே இல்ல...”

பிரபு பேசுவதைக் கவனிக்காமல் வளவன் அவள் செல்வதையே ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டிருந்தான்.

அவள் சென்றதும் தனது கையில் அவள் திணித்த கோப்பைப் புரட்டினான்.

‘பிராஜக்ட் பிளூ பேர்ல்’ (நீல முத்து) என்று அதன் தலைப்புப் பக்கம் அறிவித்தது.

(தொடரும்...)
*******

கலாவிக் கையேடு - குறிப்பு #15

கலாவிக் குறுங்கிரகத்தின் கட்டமைப்பு முழுதும் செயற்கையாக உருவாக்கப்பட்டவை. மனிதர்கள் உயிர்வாழ ஏதுவான வளிமண்டலம் இல்லாத காரணத்தினால் பெரும்பான்மையான கட்டமைப்பு தரைக்கு அடியில் செயற்கை வளிமண்டலத்துடனும் கட்டுப்படுத்தப்பட்ட சூழலுடனும் உருவாக்கப்பட்டது. அக்கிரகத்தில் மனிதர்களைக் குடியேற்றுவதற்கு முன் 100 ஆண்டுகளுக்கு அதைப் பதப்படுத்த வேண்டியிருந்தது.
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India

Kavichithra

அமைச்சர்
Joined
Apr 11, 2019
Messages
1,331
Reaction score
4,129
Location
Chennai
அருமையான பதிவு ஆசிரியரே....செயற்கை மனிதக் காதலும் இயற்கை மனிதக் காதலும்.....ப்ளூ பேர்ல் என்ன சொல்லுது?நந்தினி பிரபு பாவம்மா..நீனா ஜீவாவ என்ன பண்ணிட்டா
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top