யாழினிக்கு சரஸ்வதி என்ற ஒன்று விட்ட பாடி ஒருவர் புவனூர் என்ற ஊரில் இருந்தார்.அந்த ஊரின் திருவிழாவின் பொழுது யாழினியின் குடும்பம் முழுவதும் அந்த ஊருக்குச் செல்வார்கள்.ஆனால் யாழினிக்கு அங்கு போக புடிக்காது.அங்கிருபவர்கள் யாழினியின் வெகுளித்தனத்தைப் பயன்படுத்தி அவளை எதாவது வம்பில் மாட்ட வைத்துவிடுவார்கள்.சிறு வயதில் அது அவளுக்கு புரியவில்லை.ஆனால் நாளைடவில் அவளுக்கு அது புரிய ஆரம்பித்தது.ஆதனால் அங்கு செல்ல புடிக்காமல் போனது.
ஆனால் விநாயக்கிற்கு அங்கு செல்ல மிகவும் புடிக்கும்.அந்த ஊரின் இயற்கை அழகு அவனை கட்டி இழுக்கும்.எங்கு எப்போது சென்றாலும் ஊர் முழுக்க ஒரு ரௌண்டாவது அடித்து விடுவான்.ஆற்றிற்கு சென்று குளிப்பது,தென்னை மரத்தில் ஏறுவது,கிண்ணற்றில் மேல் இருந்து குதிப்பது,திருட்டு மாங்காய் அடிப்பது போன்ற பல சேட்டைகள் செய்வான்.அவனைப் பொறுத்தவரை அங்கு இருக்கும் நாட்களை அவனுக்கு மிகவும் உற்சாகம் கொடுப்பவை.
யாழினி ஊருக்கு போக வேண்டாம் என்று அடம் பிடித்தால் அவன் எப்படியாவது அவளை சமாதானம் பண்ணி ஊருக்கு அழைத்துச் செல்வான்.அந்த முறையும் அப்படித்தான் நடந்தது.யாழினி அங்கு செல்லவே வேண்டாம் என்று சொல்ல விநாயக் அவளை வற்புறுத்தி அழைத்துச் சென்றான்.
சரஸ்வதி பாட்டியை யாழினிக்கு சுத்தமாக புடிக்காது.அந்த பாட்டிக்கும் யாழினியை சுத்தமாக புடிக்காது.அவருக்கு கவிதா என்ற பேதி இருந்தால்.அவளுக்கும் யாழினியின் வயது தான்.அவருக்கு தன் பேத்தியை எப்படியாவது விநாயக்கிற்கு மனம் முடித்து தர வேண்டும் என்ற ஆசை.அதனால் எப்பொழுதும் விநாயகின் பின்னால் சுற்றிக்கொண்டிருக்கும் யாழினியை சுத்தமாக புடிக்காது.
அப்பொழுது விநாயக் நான்காம் ஆண்டு படித்துக் கொண்டிருன்யளினிதன் 1 ஆம் வருடம் படித்துக் கொண்டிருந்தாள்.யாழினிக்கு “மச்சான்...மச்சான்” என்றும் விநாயக்கிடம் பேசும் கவிதாவை சுத்தமாக பிடிக்காது.அவர்கள் அங்கு சென்றால்”மச்சான் நான் உங்களுக்கு டீ போட்டு தரவா..வாழை தோட்டத்தை சுத்தி காட்ற...” என்று சுற்றிக் கொண்டிருப்பாள்.விநாயக்கும் யாழினியை கடுப்பேற்ற அவளுடன் சுற்றுவான்.
அந்த முறையும் அப்படித்தான் செய்தான்.மேலும்”அவள பாரு யாழி என்ன எவ்வளவு மரியாதையா மச்சான்னு கூபட்டறா...அவள பாத்து கொஞ்சமாச்சு கத்துக்கோ...அவ பாரு எவ்வளவு டேஸ்டா சமைகுற...நல்ல பண்பான பொண்ணு எவ்வளவு மரியாதையா பெரியவங்க கிட்ட நடந்துகுறா..” என்று வேலையாட்டாக அவளிடம் வம்பு வளர்த்துக் கொண்டிருந்தான்.
மாலை வெளியே செல்லலாம் என்று நினைத்தவள் வீட்டின் வெளியே வர அங்கே தண்ணீர் தொட்டியின் அருகில் நின்று விநாயக்கும் கவிதாவும் பேசிக்கொண்டிருந்தது கண்ணில் பட்டது.’இவங்க ஏன் இங்க தனிய நின்னு பேசிட்டு இருகாங்க?’ என்று நினைத்தவள் அதற்குள் தன் அன்னை கூப்பிடவும் உள்ளே சென்றால்.
ஆனால் இதை எல்லாம் யாழினி பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை.வீட்டில் இருக்க போர் அடிக்குறது என்று அவள் வயலில் நடக்கச் சென்றால் அப்பொழுது கவிதா தன் தோழிகளிடம் “விநாயக் மச்சான் இன்னைக்கு என்கிட்ட வந்து என்ன அவரு 1௦ வருஷமா லவ் பன்னறனு சொல்லிடறு டி..எனக்கு என்ன பண்ணறதுன்னு தெர்ல..அந்த இடத்த விட்டு ஓட போன..ஆனா என்னோட கைய புடிச்சு இழுத்துடாரு டி..எனக்கு ஒரே வெக்கமா போச்சு...அப்ப திடிர்னு கன்னத்துல முத்தம் குடுத்துட்டாரு..” என்று சொல்ல அவள் தோழிகள் வாயை பிளந்து கேட்டுக் கொண்டிருந்தனர்.
இதைக் கேட்ட யாழினியின் கண்ணில் இருந்து கண்ணீர் பெருகியது.அப்படியே ஓடி வீட்டிற்குச் சென்றவள் மெத்தையில் படுத்து அழ ஆரம்பித்துவிட்டாள்.அவளுக்கே அப்பொழுது தான் தெரிந்தது தான் விநாயகின் மேல் வைத்திருக்கும் நேசத்தின் அளவைப் பற்றி.அவளால் தன் விநாயக் தான் அப்படிச் செய்தானா என்பதை நம்பவே முடியவில்லை.அழுது கொண்டே இருந்தவளுக்கு சைனஸ் வந்தது.காய்ச்சல் வேறு கொதித்தது.
அதனால் அன்று இரவு அனைவரும் கெளம்பி தங்கள் வீட்டிற்கு வந்து விட்டனர்.யாழினிக்கு 2 நாட்கள் ஆகியும் காய்ச்சல் விடவே இல்லை.அதனால் 3 ஆம் நாள் ஹாஸ்பிட்டல்லில் அட்மிட் செய்தனர்.அந்த 3 நாட்களும் யாழினி விநாயகின் முகத்தை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை.விநாயக்கிற்கு தன் மீது அவள் செம்ம கோபத்தில் உள்ளால் என்பது புரிந்தது.ஆனால் எதனால் என்பது புரியவில்லை அவனும் அவளிடம் பேச எவ்வளவோ முயன்றான் ஆனால் முடியவில்லை.
இந்த 1 வாரத்தில் யாழினியின் பேச்சு சுத்தமாக குறைந்து போயிற்று.எப்பொழுதும் முகத்தில் குடி கொண்டிருக்கும் சோகம்.அவளைப் பார்க்கவே என்னவோ போல் இருந்தது விநாயக்கிற்கு.அனைவரும் அது காய்ச்சலினால் வந்த அசதி என்று நினைத்துக் கொண்டிருக்க விநாயக் தான் வேறு எதோ பிரச்சனை என்பதை உணர்ந்தான்.
அவள் உடம்பு தேறி வீட்டிற்கு வர 1 வாரம் ஆயிற்று.அவள் வீட்டிற்கு வந்தவுடன் அவளிடம் பேச நினைத்தவன் அவள் அறைக்குச் சென்றான்.அவள் விட்டதைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.”யாழி” என்று அவன் அழைக்க திரும்பி பார்த்தவள் அவனை பார்த்ததும் முகத்தை திருப்பிக் கொண்டாள்.
“என்ன ஆச்சு மா?” என்று அவன் தன்மையாக கேட்க “பிளிஸ் இந்த ரூம் விட்டு வெளிய போ” என்றாள்.”நீ முதல என்ன ஆச்சுனு சொல்லு...ஏன் என்கிட்ட ஒரு வாரமா பேசல..என்மேல என்ன கோபம்..எதா இருந்தாலும் சொல்லு சரி பண்ணிக்கலாம்” என்று சொல்ல அவள் கண்ணில் கண்ணீர் துளிகள்.
“எனக்கு நீ தான் ப்ராப்ளம்...தயவுசெஞ்சு வெளிய போ” என்று அவன் சட்டையை பிடித்து அழ ஆரம்பித்து விட்டாள்.அவனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.அவளை கட்டி அணைத்தவன் அவள் முதுகை நீவி விட்டான்.சிறிது நேரத்தில் அழுகை குறைந்தது.பின்பு மெதுவாக வினவ அவள் அன்று நடந்தவற்றை கூறினாள்.
“லூசு..அவ பொய் சொல்லிருக்கா..அவ என்ன சொன்னாலும் நம்புவிய...அணைக்கு நாங்க அங்கே நின்னு என்ன பேசிட்டு இருந்தோம்னு தெரியுமா?அவ என்கிட்ட உன்ன விட +2ல கம்மி மார்க் எடுத்ததுனால நீ அவள கிண்டல் பண்ணற மாறி பேசினணு சொன்ன...நான் அதுக்கு சொன்ன யாழினி எப்பவும் அப்படி நடந்துக்க மாட்ட..நீ அவள பத்தி தப்பா புருஞ்சுகிட்டனு” என்று சொல்ல “உண்மையா” என்று அவள் கேள்வி கேட்க முறைத்தவன் “அவள நான் ககிஸ் பண்ணணு சொன்னத நம்புவாலமா..ஆனா நான் சொல்லறத நம்ப மாட்டலாம..என்ன பத்தி அவ்வளவு நம்பிக்கை” என்று சொன்னவன் அவள் அறையைவிட்டு வெளியே போக “சாரி ..சாரி டா” என்று அவன் பின்னாலைய ஓடினாள்.
“யாரு என்ன சொன்னாலும் நம்பிருவிய டி?என்மேல உனக்கு நம்பிக்கையே இல்லையா..” என்று அவன் மனம் வருந்தி கேட்க உண்மையில் அவளுக்கு வலித்தது.கண்ணில் தண்ணீர்”சாரி டா..சாரி..அவ அப்படி சொன்ன உடனே கொஞ்சம் இமோஷனல் ஆயிட்ட.” என்று கெஞ்ச அவள் முகத்தைப் பார்த்தவனின் கோபம் காணாமல் போக அவளைக் அணைத்துக் கொண்டான்.
யாழினி ஏர்போர்ட் வந்துருச்சு வா போலாம் என்று விநாயக் அழைக்க தன் நினைவுகளில் இருந்து மீண்டாள்.