snehasree
SM Exclusive
அடுத்து வைல்ட் கார்டு ரவுண்டு என்பதால் சிம்மாசனத்தில் அமர்ந்தபடி வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தாள்.
ஒரு மாலை வேளையில் ஆனந்தனும் கண்ணாத்தாளும் சோபாவில் அமர்ந்து பேசி கொண்டு இருந்தனர்.
"அண்ணி!" என்றபடி சரண்யா வேகமாக நடந்து வர அதை பார்த்து "சரண்! பார்த்து மெதுவாக போ" என்றபடி பின்னே வந்தான் விவேக்.
விவேக்கின் அக்கறையான வார்த்தைகளால் விஷயம் புரிந்து விட்டாலும் அதை காட்டி கொள்ளாமல் "அக்கா... என்ன கவனிப்பெல்லாம் பலமாக இருக்கிறது. என்ன விஷயம்?" என்றாள் கண்ணாத்தாள்.
சரண்யா வெட்கபட்டு சிரிக்க,
"அடேய்! என்னடா செய்தாய்? என் தங்கை சரண்யா இப்படி வெட்கபட்டு சிரிக்கிறாள்" என்றான் ஆனந்தன்.
"எல்லாம் நல்ல விஷயம்தான். நீ மாமா ஆக போகிறாய்" என்று விவேக் சொல்ல,
"அக்கா!" என்ற கண்ணாத்தாள் உடனே சரண்யாவை பார்த்து கண்களால் ஏதோ கேட்க அவள் சிரித்தபடி தலையசைத்தாள்.
"காங்கிராட்ஸ்டா விவேக்" என்றபடி நன்பனை கட்டித் தழுவி வாழ்த்தினான் ஆனந்தன்.
கிச்சனுக்கு சென்று சர்க்கரை எடுத்து வந்து கண்ணாத்தாள் ஊட்ட ஆனந்தமாய் வாங்கி கொண்டு சிரித்த சரண்யாவை அணைத்து முத்தமிட்டாள் கண்ணாத்தாள்.
"அக்கா... இனி குழந்தை பிறக்கும் வரை உங்களை நன்றாக பார்த்து கொள்வது என் வேலை." என்று கண்ணாத்தாள் சொல்லி விட்டு பார்க்க அவள் அன்பில் பேச்சற்று இருந்தாள் சரண்யா.
சரண்யா கர்ப்பமான விஷயம் அறிந்த காவியா மற்றும் ஜெனிபர் இருவரும் வந்து சரண்யாவை கட்டி அணைத்து முத்தம் இட்டு "வாழ்த்துக்கள் அக்கா" என்றார்கள்.
காவியாவின் அம்மா காமாட்சி, ஜெனிபரின் அம்மா மேரி, தனலட்சுமி, அர்ச்சனா என்று எல்லோரும் வந்து நேரில் பார்த்து வாழ்த்தி விட்டு சென்றார்கள்.
"அண்ணி... நீங்கள் எல்லாம் என்னிடம் காட்டுகிற அன்பு என்னை திக்கு முக்காட வைக்கிறது. நான் வாழ்வில் இதுவரை அனுபவிக்காத ஆனந்தத்தை நான் தற்பொழுது அனுபவிக்கிறேன்" என்றாள் சரண்யா.
"அக்கா... நீங்கள் விதைத்ததை இப்பொழுது அனுபவிக்கீறீர்கள். எங்களை எல்லாம் உங்கள் அன்பால் மூழ்க செய்தீர்கள். இப்பொழுது உங்களுக்கு நாங்கள் அதை திருப்பி தருகிறோம்" என்றாள் கண்ணாத்தாள்.
"அக்கா சரியாக சொன்னீர்கள்" என்றபடி வந்தார்கள் காவியா மற்றும் ஜெனிபர்.
"அக்கா... நீங்கள் காட்டிய அன்பு மற்றும் ஊக்கத்திற்கு முன் நாங்கள் செய்வது எல்லாம் ஒன்றும் இல்லை" என்றபடி சரண்யாவை அணைத்து இருவரும் முத்தமிட்டார்கள்.
"நானும் என் அக்காவுக்கு முத்தம் தருவேன்" என்றபடி கண்ணாத்தாள் முத்தம் தர அவர்கள் அன்பில் திளைத்தாள் சரண்யா.
பைனலுக்கு முந்தைய சுற்றில் "ஒரு பொய்யாவது சொல்லடி கண்ணே""பூ பூக்கும் ஒசை" ஆகிய பாடல்களை பாடினாள்.
முல்லை டிவி பைனல் நெருங்கி வர கண்ணாத்தாளின் பயிற்சி அதிகமாகியது.
"அண்ணி... பைனலில் என்ன பாட்டு பாட போகிறீர்கள்?" என்று கேட்டாள் சரண்யா.
கண்ணாத்தாள் தான் பாட போகும் பாடல்களை சொல்லி விட்டு அவளை பார்த்தாள்.
"அண்ணி... இந்த பாட்டு எல்லாம் பாடி ஜெயிக்க முடியுமா?" என்று சந்தேகமாக கேட்டாள் சரண்யா.
"ஏன் அக்கா முடியாது. நீங்கள் சொன்ன மாதிரி பயிற்சி செய்தால் முடியும்" என்றாள் கண்ணாத்தாள்.
"இரண்டு சாங் கிளாசிக் கர்நாடிக் சாங் அது மட்டுமில்லாமல் நான்கு பாடலும் உணர்ச்சிகளை காட்டுகிற மாதிரி இருக்கிறது. பைனலுக்கு இவ்வளவு கஷ்டமான சாங் தேவையா? கொஞ்சம் எளிதாக எடுத்து பாடலாமே" என்றாள் சரண்யா.
"இல்லை சரண்யா... கண்ணா அந்த பாட்டையே பாடட்டும் கண்டிப்பாக அவள் நன்றாக பாடி வெற்றி பெறுவாள்" என்று ஆனந்தன் கூறினான்.
"அண்ணா... அண்ணி சூப்பராக பாடுவாங்க என்று எனக்கும் தெரியும். பைனலில் இந்த ரிஸ்க்கான முயற்சி தேவையா என்றுதான் கேட்கிறேன். அந்த பாடல்களில் உள்ள பாவத்தை முகத்திலும் குரலிலும் கொண்டு வருவது அவ்வளவு எளிது இல்லையே?"
"அதெல்லாம் கண்ணா செய்து விடுவாள். எனக்கு நம்பிக்கை உள்ளது" என்று ஆனந்தன் அழுத்தமாக கூறிவிட்டு பார்க்க கண்ணாத்தாளுக்கே அவன் எந்த நம்பிக்கையில் கூறுகிறான் என்று புரிய வில்லை.
"ரெண்டு பேரும் ஒரு முடிவில் இருக்கீறீர்கள். இனி நான் பேசி எந்த பிரயோஜனம் இல்லை. அண்ணி... உங்க பாட்டுகளை நீங்கள் நல்லா பலமுறை என்னிடம் பாடி காட்டி விடுங்கள்" என்றாள் சரண்யா.
"நான் பாடுவது இருக்கட்டும். என் தங்கம் என்ன செய்கிறது?" என்று கேட்டாள் கண்ணாத்தாள்.
"நீயே கேட்டு சொல்" என்று சரண்யா சொல்ல அவள் வயிற்றில் கை வைத்து விட்டு "தங்கம்... இப்படியே சமர்த்தாக இருந்து என் அக்காவை நீ தொல்லை செய்யாமல் இருக்க வேண்டும்" என்றாள் கண்ணாத்தாள்.
சரண்யாவுக்கு அவள் செயல் சந்தோஷம் தர புன்னகை பூவாக மலர்ந்து சிரித்தாள்.
Message…
ஒரு மாலை வேளையில் ஆனந்தனும் கண்ணாத்தாளும் சோபாவில் அமர்ந்து பேசி கொண்டு இருந்தனர்.
"அண்ணி!" என்றபடி சரண்யா வேகமாக நடந்து வர அதை பார்த்து "சரண்! பார்த்து மெதுவாக போ" என்றபடி பின்னே வந்தான் விவேக்.
விவேக்கின் அக்கறையான வார்த்தைகளால் விஷயம் புரிந்து விட்டாலும் அதை காட்டி கொள்ளாமல் "அக்கா... என்ன கவனிப்பெல்லாம் பலமாக இருக்கிறது. என்ன விஷயம்?" என்றாள் கண்ணாத்தாள்.
சரண்யா வெட்கபட்டு சிரிக்க,
"அடேய்! என்னடா செய்தாய்? என் தங்கை சரண்யா இப்படி வெட்கபட்டு சிரிக்கிறாள்" என்றான் ஆனந்தன்.
"எல்லாம் நல்ல விஷயம்தான். நீ மாமா ஆக போகிறாய்" என்று விவேக் சொல்ல,
"அக்கா!" என்ற கண்ணாத்தாள் உடனே சரண்யாவை பார்த்து கண்களால் ஏதோ கேட்க அவள் சிரித்தபடி தலையசைத்தாள்.
"காங்கிராட்ஸ்டா விவேக்" என்றபடி நன்பனை கட்டித் தழுவி வாழ்த்தினான் ஆனந்தன்.
கிச்சனுக்கு சென்று சர்க்கரை எடுத்து வந்து கண்ணாத்தாள் ஊட்ட ஆனந்தமாய் வாங்கி கொண்டு சிரித்த சரண்யாவை அணைத்து முத்தமிட்டாள் கண்ணாத்தாள்.
"அக்கா... இனி குழந்தை பிறக்கும் வரை உங்களை நன்றாக பார்த்து கொள்வது என் வேலை." என்று கண்ணாத்தாள் சொல்லி விட்டு பார்க்க அவள் அன்பில் பேச்சற்று இருந்தாள் சரண்யா.
சரண்யா கர்ப்பமான விஷயம் அறிந்த காவியா மற்றும் ஜெனிபர் இருவரும் வந்து சரண்யாவை கட்டி அணைத்து முத்தம் இட்டு "வாழ்த்துக்கள் அக்கா" என்றார்கள்.
காவியாவின் அம்மா காமாட்சி, ஜெனிபரின் அம்மா மேரி, தனலட்சுமி, அர்ச்சனா என்று எல்லோரும் வந்து நேரில் பார்த்து வாழ்த்தி விட்டு சென்றார்கள்.
"அண்ணி... நீங்கள் எல்லாம் என்னிடம் காட்டுகிற அன்பு என்னை திக்கு முக்காட வைக்கிறது. நான் வாழ்வில் இதுவரை அனுபவிக்காத ஆனந்தத்தை நான் தற்பொழுது அனுபவிக்கிறேன்" என்றாள் சரண்யா.
"அக்கா... நீங்கள் விதைத்ததை இப்பொழுது அனுபவிக்கீறீர்கள். எங்களை எல்லாம் உங்கள் அன்பால் மூழ்க செய்தீர்கள். இப்பொழுது உங்களுக்கு நாங்கள் அதை திருப்பி தருகிறோம்" என்றாள் கண்ணாத்தாள்.
"அக்கா சரியாக சொன்னீர்கள்" என்றபடி வந்தார்கள் காவியா மற்றும் ஜெனிபர்.
"அக்கா... நீங்கள் காட்டிய அன்பு மற்றும் ஊக்கத்திற்கு முன் நாங்கள் செய்வது எல்லாம் ஒன்றும் இல்லை" என்றபடி சரண்யாவை அணைத்து இருவரும் முத்தமிட்டார்கள்.
"நானும் என் அக்காவுக்கு முத்தம் தருவேன்" என்றபடி கண்ணாத்தாள் முத்தம் தர அவர்கள் அன்பில் திளைத்தாள் சரண்யா.
பைனலுக்கு முந்தைய சுற்றில் "ஒரு பொய்யாவது சொல்லடி கண்ணே""பூ பூக்கும் ஒசை" ஆகிய பாடல்களை பாடினாள்.
முல்லை டிவி பைனல் நெருங்கி வர கண்ணாத்தாளின் பயிற்சி அதிகமாகியது.
"அண்ணி... பைனலில் என்ன பாட்டு பாட போகிறீர்கள்?" என்று கேட்டாள் சரண்யா.
கண்ணாத்தாள் தான் பாட போகும் பாடல்களை சொல்லி விட்டு அவளை பார்த்தாள்.
"அண்ணி... இந்த பாட்டு எல்லாம் பாடி ஜெயிக்க முடியுமா?" என்று சந்தேகமாக கேட்டாள் சரண்யா.
"ஏன் அக்கா முடியாது. நீங்கள் சொன்ன மாதிரி பயிற்சி செய்தால் முடியும்" என்றாள் கண்ணாத்தாள்.
"இரண்டு சாங் கிளாசிக் கர்நாடிக் சாங் அது மட்டுமில்லாமல் நான்கு பாடலும் உணர்ச்சிகளை காட்டுகிற மாதிரி இருக்கிறது. பைனலுக்கு இவ்வளவு கஷ்டமான சாங் தேவையா? கொஞ்சம் எளிதாக எடுத்து பாடலாமே" என்றாள் சரண்யா.
"இல்லை சரண்யா... கண்ணா அந்த பாட்டையே பாடட்டும் கண்டிப்பாக அவள் நன்றாக பாடி வெற்றி பெறுவாள்" என்று ஆனந்தன் கூறினான்.
"அண்ணா... அண்ணி சூப்பராக பாடுவாங்க என்று எனக்கும் தெரியும். பைனலில் இந்த ரிஸ்க்கான முயற்சி தேவையா என்றுதான் கேட்கிறேன். அந்த பாடல்களில் உள்ள பாவத்தை முகத்திலும் குரலிலும் கொண்டு வருவது அவ்வளவு எளிது இல்லையே?"
"அதெல்லாம் கண்ணா செய்து விடுவாள். எனக்கு நம்பிக்கை உள்ளது" என்று ஆனந்தன் அழுத்தமாக கூறிவிட்டு பார்க்க கண்ணாத்தாளுக்கே அவன் எந்த நம்பிக்கையில் கூறுகிறான் என்று புரிய வில்லை.
"ரெண்டு பேரும் ஒரு முடிவில் இருக்கீறீர்கள். இனி நான் பேசி எந்த பிரயோஜனம் இல்லை. அண்ணி... உங்க பாட்டுகளை நீங்கள் நல்லா பலமுறை என்னிடம் பாடி காட்டி விடுங்கள்" என்றாள் சரண்யா.
"நான் பாடுவது இருக்கட்டும். என் தங்கம் என்ன செய்கிறது?" என்று கேட்டாள் கண்ணாத்தாள்.
"நீயே கேட்டு சொல்" என்று சரண்யா சொல்ல அவள் வயிற்றில் கை வைத்து விட்டு "தங்கம்... இப்படியே சமர்த்தாக இருந்து என் அக்காவை நீ தொல்லை செய்யாமல் இருக்க வேண்டும்" என்றாள் கண்ணாத்தாள்.
சரண்யாவுக்கு அவள் செயல் சந்தோஷம் தர புன்னகை பூவாக மலர்ந்து சிரித்தாள்.
Message…