• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

En kaadhal kanmaniye-33(pre final)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
அடுத்து வைல்ட் கார்டு ரவுண்டு என்பதால் சிம்மாசனத்தில் அமர்ந்தபடி வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தாள்.

ஒரு மாலை வேளையில் ஆனந்தனும் கண்ணாத்தாளும் சோபாவில் அமர்ந்து பேசி கொண்டு இருந்தனர்.

"அண்ணி!" என்றபடி சரண்யா வேகமாக நடந்து வர அதை பார்த்து "சரண்! பார்த்து மெதுவாக போ" என்றபடி பின்னே வந்தான் விவேக்.

விவேக்கின் அக்கறையான வார்த்தைகளால் விஷயம் புரிந்து விட்டாலும் அதை காட்டி கொள்ளாமல் "அக்கா... என்ன கவனிப்பெல்லாம் பலமாக இருக்கிறது. என்ன விஷயம்?" என்றாள் கண்ணாத்தாள்.

சரண்யா வெட்கபட்டு சிரிக்க,
"அடேய்! என்னடா செய்தாய்? என் தங்கை சரண்யா இப்படி வெட்கபட்டு சிரிக்கிறாள்" என்றான் ஆனந்தன்.

"எல்லாம் நல்ல விஷயம்தான். நீ மாமா ஆக போகிறாய்" என்று விவேக் சொல்ல,
"அக்கா!" என்ற கண்ணாத்தாள் உடனே சரண்யாவை பார்த்து கண்களால் ஏதோ கேட்க அவள் சிரித்தபடி தலையசைத்தாள்.

"காங்கிராட்ஸ்டா விவேக்" என்றபடி நன்பனை கட்டித் தழுவி வாழ்த்தினான் ஆனந்தன்.

கிச்சனுக்கு சென்று சர்க்கரை எடுத்து வந்து கண்ணாத்தாள் ஊட்ட ஆனந்தமாய் வாங்கி கொண்டு சிரித்த சரண்யாவை அணைத்து முத்தமிட்டாள் கண்ணாத்தாள்.

"அக்கா... இனி குழந்தை பிறக்கும் வரை உங்களை நன்றாக பார்த்து கொள்வது என் வேலை." என்று கண்ணாத்தாள் சொல்லி விட்டு பார்க்க அவள் அன்பில் பேச்சற்று இருந்தாள் சரண்யா.

சரண்யா கர்ப்பமான விஷயம் அறிந்த காவியா மற்றும் ஜெனிபர் இருவரும் வந்து சரண்யாவை கட்டி அணைத்து முத்தம் இட்டு "வாழ்த்துக்கள் அக்கா" என்றார்கள்.

காவியாவின் அம்மா காமாட்சி, ஜெனிபரின் அம்மா மேரி, தனலட்சுமி, அர்ச்சனா என்று எல்லோரும் வந்து நேரில் பார்த்து வாழ்த்தி விட்டு சென்றார்கள்.

"அண்ணி... நீங்கள் எல்லாம் என்னிடம் காட்டுகிற அன்பு என்னை திக்கு முக்காட வைக்கிறது. நான் வாழ்வில் இதுவரை அனுபவிக்காத ஆனந்தத்தை நான் தற்பொழுது அனுபவிக்கிறேன்" என்றாள் சரண்யா.

"அக்கா... நீங்கள் விதைத்ததை இப்பொழுது அனுபவிக்கீறீர்கள். எங்களை எல்லாம் உங்கள் அன்பால் மூழ்க செய்தீர்கள். இப்பொழுது உங்களுக்கு நாங்கள் அதை திருப்பி தருகிறோம்" என்றாள் கண்ணாத்தாள்.

"அக்கா சரியாக சொன்னீர்கள்" என்றபடி வந்தார்கள் காவியா மற்றும் ஜெனிபர்.

"அக்கா... நீங்கள் காட்டிய அன்பு மற்றும் ஊக்கத்திற்கு முன் நாங்கள் செய்வது எல்லாம் ஒன்றும் இல்லை" என்றபடி சரண்யாவை அணைத்து இருவரும் முத்தமிட்டார்கள்.

"நானும் என் அக்காவுக்கு முத்தம் தருவேன்" என்றபடி கண்ணாத்தாள் முத்தம் தர அவர்கள் அன்பில் திளைத்தாள் சரண்யா.

பைனலுக்கு முந்தைய சுற்றில் "ஒரு பொய்யாவது சொல்லடி கண்ணே""பூ பூக்கும் ஒசை" ஆகிய பாடல்களை பாடினாள்.

முல்லை டிவி பைனல் நெருங்கி வர கண்ணாத்தாளின் பயிற்சி அதிகமாகியது.

"அண்ணி... பைனலில் என்ன பாட்டு பாட போகிறீர்கள்?" என்று கேட்டாள் சரண்யா.

கண்ணாத்தாள் தான் பாட போகும் பாடல்களை சொல்லி விட்டு அவளை பார்த்தாள்.

"அண்ணி... இந்த பாட்டு எல்லாம் பாடி ஜெயிக்க முடியுமா?" என்று சந்தேகமாக கேட்டாள் சரண்யா.

"ஏன் அக்கா முடியாது. நீங்கள் சொன்ன மாதிரி பயிற்சி செய்தால் முடியும்" என்றாள் கண்ணாத்தாள்.

"இரண்டு சாங் கிளாசிக் கர்நாடிக் சாங் அது மட்டுமில்லாமல் நான்கு பாடலும் உணர்ச்சிகளை காட்டுகிற மாதிரி இருக்கிறது. பைனலுக்கு இவ்வளவு கஷ்டமான சாங் தேவையா? கொஞ்சம் எளிதாக எடுத்து பாடலாமே" என்றாள் சரண்யா.

"இல்லை சரண்யா... கண்ணா அந்த பாட்டையே பாடட்டும் கண்டிப்பாக அவள் நன்றாக பாடி வெற்றி பெறுவாள்" என்று ஆனந்தன் கூறினான்.

"அண்ணா... அண்ணி சூப்பராக பாடுவாங்க என்று எனக்கும் தெரியும். பைனலில் இந்த ரிஸ்க்கான முயற்சி தேவையா என்றுதான் கேட்கிறேன். அந்த பாடல்களில் உள்ள பாவத்தை முகத்திலும் குரலிலும் கொண்டு வருவது அவ்வளவு எளிது இல்லையே?"

"அதெல்லாம் கண்ணா செய்து விடுவாள். எனக்கு நம்பிக்கை உள்ளது" என்று ஆனந்தன் அழுத்தமாக கூறிவிட்டு பார்க்க கண்ணாத்தாளுக்கே அவன் எந்த நம்பிக்கையில் கூறுகிறான் என்று புரிய வில்லை.

"ரெண்டு பேரும் ஒரு முடிவில் இருக்கீறீர்கள். இனி நான் பேசி எந்த பிரயோஜனம் இல்லை. அண்ணி... உங்க பாட்டுகளை நீங்கள் நல்லா பலமுறை என்னிடம் பாடி காட்டி விடுங்கள்" என்றாள் சரண்யா.

"நான் பாடுவது இருக்கட்டும். என் தங்கம் என்ன செய்கிறது?" என்று கேட்டாள் கண்ணாத்தாள்.

"நீயே கேட்டு சொல்" என்று சரண்யா சொல்ல அவள் வயிற்றில் கை வைத்து விட்டு "தங்கம்... இப்படியே சமர்த்தாக இருந்து என் அக்காவை நீ தொல்லை செய்யாமல் இருக்க வேண்டும்" என்றாள் கண்ணாத்தாள்.

சரண்யாவுக்கு அவள் செயல் சந்தோஷம் தர புன்னகை பூவாக மலர்ந்து சிரித்தாள்.

Message…
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
"அண்ணி... நீங்கள் பாடினால் போதும். தங்கம் அதை கேட்டு கொண்டு அமைதியாக இருந்து விடும்"

"அப்படியா அக்கா! இனி நான் என் தங்கத்திற்கும் சேர்த்து பாடி விடுகிறேன். தங்கம் தொல்லை செய்தால் என்னிடம் சொல்லி விடுங்கள். தங்கத்துக்கு தாலாட்டு பாடி அமைதி செய்து விடுகிறேன்" என்றாள் கண்ணாத்தாள்.

"தங்கம்! உன் அத்தை சொன்னதை நீ கேட்டாயா? உன் அத்தை உனக்கு இப்பொழுதே தாலாட்டு பாடுகிறேன் என்கிறாள். நீ உண்மையில் அதிர்ஷ்டசாலி" என்றாள் சரண்யா.

"என் அக்கா மாதிரி அம்மா கிடைத்தால் எல்லோரும் அதிர்ஷ்டசாலிதான் "என்று கண்ணாத்தாள் சரண்யாவை அணைத்து முத்தமிட்டு சிரிக்க அங்கே சந்தோஷம் மழையாய் பொழிந்தது.

கண்ணாத்தாளை அவள் தேர்வு செய்த பாடல்களை பலமுறை கேட்க செய்து பலமுறை பாட வைத்து பார்த்தாள் சரண்யா.

சரண்யாவுக்கு அவள் பாடியது நம்பிக்கை தந்தாலும் போட்டி வெற்றியை பாதிக்குமோ என்று கவலை மட்டும் மாறவில்லை.

இறுதி போட்டியில் அவள் பாடும் பாடல்களை கேட்ட தனலட்சுமி, அர்ச்சனா, காவியா, ஜெனிபர், காமாட்சி அம்மாள் எல்லோரும் அதிர்ந்து பாடலை மாற்ற சொல்ல கண்ணாத்தாள் மறுத்து விட்டாள்.

இறுதி சுற்றுக்கு முதல் நாள் இரவு வரை சரண்யா ரிகர்சல் செய்து விட்டு பின்னரும்,
"அண்ணி... நீங்க சூப்பராக பாடறிங்க ஆனாலும் இந்த ரிஸ்க் தேவையா?" என்றாள்.

"சரண்யா... எனக்கு கண்ணா மேல் நம்பிக்கை உள்ளது. அவள் கண்டிப்பாக நன்றாக பாடி பரிசு பெறுவாள்" என்றான் ஆனந்தன்.

"என்ன நம்பிக்கையோ உங்கள் நம்பிக்கை. பார்ப்போம்" என்று நம்பிக்கை இல்லாமல் பேசினாள் சரண்யா.

மறுநாள் முல்லை டிவி சூப்பர் சிங்கர் கிராண்ட் பைனல் கோலகலமாக தொடங்கியது.

ஊரில் இருந்தபடி மரகதம், மாணிக்கம் மாமா, விஜயா அத்தை, அருண், ரஞ்சிதா, மீனாட்சி அத்தை, சண்முகம் மாமா, ஜெயந்தி அத்தை, செல்வராஜ் மாமா ஆகியோர் டிவியில் காண ஆரம்பித்தனர்.

காவியா, ஜெனிபர், சரண்யா, தனலட்சுமி, அர்ச்சனா, விவேக், தனசேகர், ஆகாஷ், ஆனந்தன் ஆகியோர் நேரில் காண்பதற்கு வந்து விட்டார்கள்.

தனலட்சுமீ, சரண்யா, அர்ச்சனா ஆகிய மூவரும் கட்டி தழுவி வாழ்த்தியும் ஆகாஷ், ஆனந்தன், தனசேகர், காவியா, ஜெனிபர் கை குலுக்கியும் இறுதி சுற்றில் பாட அவளை அனுப்பி வைத்து விட்டார்கள்.

சிறப்பு விருந்தினராக பிரபல இசையமைப்பாளர் ஆரியமான் கலந்து கொள்ள அவர்கள் முன்னிலையில் கண்ணாத்தாள் உள்ளிட்ட சகபோட்டியாளர்கள் அறிமுகம் முடிந்தது.

போட்டியாளர்கள் பாடல்களை பாட ஆரம்பித்தார்கள்.

கண்ணாத்தாள் முதல் பாடல் பாட வந்தாள்.Write your reply...
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top