Kalavalliram
நாட்டாமை
அன்று இளங்காளி அம்மன் கோயில் உறவினர் ஊரவர் நண்பர்களால் நிரம்பி வழிந்தது.சுத்துப்பட்டு பத்து பன்னிரண்டு ஊர்களுக்கு அவள் தான் காவல் தெய்வம்.திருமணம் காதுக்குத்து பெயர் சூட்டு விழா என கோயிலிலேயே செய்வதாக வேண்டிக் கொண்டவர்கள் அங்கு வந்து செய்வதற்கு ஏற்றாற்போல் கோயில் வளாகம் பெரியதாக இருந்தது.பத்மா-சுரேஷ் திருமணம் அங்கு தான் நடந்துக் கொண்டிருந்தது.விசேஷங்களுக்கு வந்தவர்கள் தங்குவதற்கென்று கோயில் பக்கத்திலேயே ரூம்கள் கட்டப்பட்டிருந்தது.அதில் மணமகளுக்கென்று ஒதுக்கியிருந்த மாடி அறையில் பத்மாவிற்கு அலங்காரம் செய்துக் கொண்டிருந்தாள் இந்து.
தலையில் மல்லிகை பூவை பத்மாவின் நீண்ட கூந்தலில் அழகாக சுத்தி விட்டாள் இந்து.
"ம்.... இப்ப பாரு கண்ணாடிய சூப்பரா இருக்கு...என் திருஷ்டியே பட்டுடும் உனக்கு"
என அவளின் கன்னத்தை தடவி திருஷ்டி எடுத்தாள்.
இந்துமதியின் கைகளை கெட்டியாக பிடித்துக் கொண்ட பத்மா
"ரொம்ப தேங்க்ஸ்டி இந்து!நீ மட்டும் முயற்சி எடுக்கலேன்னா இன்னிக்கு இந்த கல்யாணம் நடந்திருக்காது... எங்க வீட்டு கவுரவத்த காப்பாத்திக் கொடுத்திட்டே நீ"
எனவும் அவள் முதுகில் லேசா தட்டியவள்.
"ஏய் இத எத்தன வாட்டி தான் சொல்லுவ?இத்தோட நூறு வாட்டி ஆயிடுச்சு..."
"என் வாழ்நாளு பூரா சொல்லிக்கிட்டே இருப்பேன்...நீ தைரியமா போய் பேசலேன்னா இது கண்டிப்பா நடந்திருக்காது"
"போதும் போதும்.. நன்றி சொன்னது...நா இதுல ஒண்ணுமே செய்யலே... எல்லாம் அந்த பெரிய வீட்ல இருக்கறவரு தான் செஞ்சாரு...நீ நன்றி சொல்லனும்னா அவருக்கு சொல்லு"
"அவரு யாருன்னு இன்னும் தெரியலையேடி...இன்னிக்கி கல்யாணத்துக்கு ஊர்ல எல்லருக்கும் பத்திரிக வெச்சிருக்கு...நீ சொன்னவரு யாருன்னு இன்னிக்கு எப்பிடியாவது கண்டுபிடிச்சிரு"
"ஆமாடி அவரு பேரக் கூட கேக்கலை நானு"
என்றவள் அவனைப் பற்றிய எண்ணங்களில் முழுகி விட்டாள்.அன்று சுந்தர் வந்து சொன்னதும் அவளால் அவளின் காதுகளையே நம்ப முடியவில்லை.இவ்வளவு வேகமாக அவன் நடத்திக் காட்டுவான் என அவள் எண்ணவேயில்லை.எல்லாரும் கஷ்டத்தில் இருப்பவருக்கு உதவுகிறேன் என்று சொல்லலாம் தான்.ஆனால் சொன்னது போலவே நடத்திக் காட்டுவது என்பது எல்லாராலும் முடிவதில்லை.அதிலும் அன்று தான் அறிமுகமான நபருக்காக ஒரு குடும்பத்தையே ஒரு பெரிய விஷயத்துக்கு சம்மதிக்க செய்வதென்றால் அது சாதாரண விஷயமல்ல.அவன் எப்படி இதை சாதித்திருப்பான் என்பதை அறிந்துக் கொள்ளும் ஆவல் பொங்கி எழுந்தது அவளுள்.எல்லாவற்றையும் விட அவன் செய்த உதவிக்கு நன்றி கூற வேண்டுமே...அதற்காகவாவது அவனை உடனே பார்க்க வேண்டும் என பரபரத்தது அவள் உள்ளம்.
ஆனால் பத்மாவின் வீட்டிற்கு சென்ற போது சுரேஷ் வீட்டவரைத் தவிர வேறு யாருமே அங்கு இல்லை.அவளுக்கு அதில் சிறிது ஏமாற்றமாகி விட்டது.திருமணத்தின் முன் தினமே தோழியின் வீட்டிற்கு வந்து விட்டாள்.இன்று காலைக் கோயிலுக்கு வந்ததிலிருந்தே அவள் கண்கள் அவனைத் தான் தேடிக் கொண்டிருந்தது.ஆனால் அத்தனைக் கூட்டத்தில் அவனை மட்டும் காணவில்லை.இரண்டு மூன்றுமுறை யாரோ திரும்பி நின்றிருந்தவரை அவன்தான் என அருகில் ஓடி சென்றுப் பார்த்து அது அவன் இல்லை என்றானதும் ஏமாற்றத்தோடு திரும்பி வந்துக் கொண்டிருந்தாள்.
தோழியின் அலங்காரம் முடியவும் அவளுக்கு குடிப்பதற்கு ஜூஸ் தருவதற்கு சென்றவள் அங்கு ஊர் நாட்டாமைக்காரரோடு பேசியபடி நின்றிருந்த அவனைப் பார்த்து விட்டாள்.ஜூஸை அங்கு வைத்தவள் அவனை நோக்கி விரைந்தாள்.அவன் பின்னே நின்றிருந்தவள் அவனை எப்படி அழைப்பது என்று அறியாமல் திகைத்தாள்.
நாட்டாமைக்காரர் விடைப்பெற்று செல்லவும் ஏதோ உணர்வில் படக்கென திரும்பிய ரங்கதுரை அவன் பின்னே பச்சை நிற பாவாடை தாவணியில் சர்வலங்கார தேவதையாய் நின்றிருந்த இந்துவைக் கண்டு மூச்சடைக்க நின்று விட்டான்.அந்த பேரெழிலை விட்டு அவனால் கண்களை எடுக்கவே முடியவில்லை.
அவன் பார்வை தன் மேலேயே இருக்கவும் அவனை நிமிர்ந்து பார்க்க முடியாமல் திண்டாடினாள் இந்து.தான் வந்தது அவனுக்கு நன்றி உரைக்கல்லவா என்று கஷ்டப்பட்டு நினைவுப்படுத்திக் கொண்டவள்
"அது...அது உங்களுக்கு ரொம்ப தேங்க்ஸ்.... நீங்க முயற்சி எடுக்காட்டி இன்னிக்கு இந்த கல்யாணமே நடந்திருக்காது... என் பிரண்டு வாழ்க்கைய காப்பத்திக் கொடுத்துட்டீங்க"
மிகவும் முயற்சி செய்து தன்னைக் கட்டுக்குள் கொண்டு வந்த துரை அவன் கவனத்தை அவள் பேச்சில் திருப்பினான்.அவள் நன்றி உரைத்ததும்
"சே..சே..நன்றியெல்லாம் எதுக்குங்க...என் இடத்துல யாரு இருந்தாலும் இததான் செய்திருப்பாங்க...ஒரு பொண்ணு வாழ்க்கை சரியாக என்னால முடிஞ்ச சின்ன உதவிய செஞ்சேன்...இத போயி பெருசு பண்ணிக்கிட்டு.."
"சின்னன உதவியா!அவ வாழ்க்கை என்னாகுமோன்னு நா எவ்ளோ பயந்துட்டேன் தெரியுமா... பெரிய வீட்டுக்கு வரும் போது கூட ரொம்ப ஒண்ணு நம்பிக்கை இல்ல....ஆனா முன்ன பின்ன தெரியாத என் பிரண்டுக்காக இவ்ளோ பெரிய உதவி செஞ்சுருக்கீங்க...இத நா உயிரு உள்ள வர மறக்க மாட்டேன்"
என கண்களில் துளிர்த்த கண்களால் அவனைப் பார்த்தாள்.
அவள் கண்ணீரைக் கண்டதும் அவளை அப்படியே இறுக்கி அணைத்து ஆறுதல் கூற வேண்டும் என்று எழுந்த உணர்வைக் கண்டு திடுக்கிட்டான்.திருமண வீட்டில் கண்ணீர் விடக் கூடாது என கண்களைத் துடைத்த இந்து
"ஆமா...பெரிய வீட்டு துரைய்யா அவங்க வீட்டம்மா எல்லாரும் வந்திருக்காங்களா? எங்க இருக்காங்க?என்னைய கூட்டிப் போறீங்களா...? எனக்கு பாக்கனும் போல ஆசையா இருக்கு"
'கெட்டுது குடி..!துரை வீட்டம்மாவ எங்கேந்து காட்டறது?!பாத்தே ஆகனும்னு சொன்னா என்ன பண்றது'என்று திருதிருவென முழித்த துரை ஏதோ சொல்ல வாயெடுக்கும் முன் அவன் பின்னே
"என்ன ரங்கதுரை எப்படி இருக்க?பாத்து ரொம்ப நாளாச்சே?"என்று அவனின் உறவுமுறை மாமா அழைத்தாரே பார்க்கலாம்.
'ஐய்யோ மாட்னம்... இன்னிக்கு'என்று எண்ணியபடி திரும்பி நின்று அழைத்தவருடன் சிறிது நேரம் பேசி அவரை அனுப்பி விட்டு திரும்பிய போது அங்கே தன் இரு கைகளையும் இடுப்பில் வைத்தவாறு அவனை முறைத்தபடி கோபாவேசமாக நின்றிருந்தாள் இந்து.
தலையில் மல்லிகை பூவை பத்மாவின் நீண்ட கூந்தலில் அழகாக சுத்தி விட்டாள் இந்து.
"ம்.... இப்ப பாரு கண்ணாடிய சூப்பரா இருக்கு...என் திருஷ்டியே பட்டுடும் உனக்கு"
என அவளின் கன்னத்தை தடவி திருஷ்டி எடுத்தாள்.
இந்துமதியின் கைகளை கெட்டியாக பிடித்துக் கொண்ட பத்மா
"ரொம்ப தேங்க்ஸ்டி இந்து!நீ மட்டும் முயற்சி எடுக்கலேன்னா இன்னிக்கு இந்த கல்யாணம் நடந்திருக்காது... எங்க வீட்டு கவுரவத்த காப்பாத்திக் கொடுத்திட்டே நீ"
எனவும் அவள் முதுகில் லேசா தட்டியவள்.
"ஏய் இத எத்தன வாட்டி தான் சொல்லுவ?இத்தோட நூறு வாட்டி ஆயிடுச்சு..."
"என் வாழ்நாளு பூரா சொல்லிக்கிட்டே இருப்பேன்...நீ தைரியமா போய் பேசலேன்னா இது கண்டிப்பா நடந்திருக்காது"
"போதும் போதும்.. நன்றி சொன்னது...நா இதுல ஒண்ணுமே செய்யலே... எல்லாம் அந்த பெரிய வீட்ல இருக்கறவரு தான் செஞ்சாரு...நீ நன்றி சொல்லனும்னா அவருக்கு சொல்லு"
"அவரு யாருன்னு இன்னும் தெரியலையேடி...இன்னிக்கி கல்யாணத்துக்கு ஊர்ல எல்லருக்கும் பத்திரிக வெச்சிருக்கு...நீ சொன்னவரு யாருன்னு இன்னிக்கு எப்பிடியாவது கண்டுபிடிச்சிரு"
"ஆமாடி அவரு பேரக் கூட கேக்கலை நானு"
என்றவள் அவனைப் பற்றிய எண்ணங்களில் முழுகி விட்டாள்.அன்று சுந்தர் வந்து சொன்னதும் அவளால் அவளின் காதுகளையே நம்ப முடியவில்லை.இவ்வளவு வேகமாக அவன் நடத்திக் காட்டுவான் என அவள் எண்ணவேயில்லை.எல்லாரும் கஷ்டத்தில் இருப்பவருக்கு உதவுகிறேன் என்று சொல்லலாம் தான்.ஆனால் சொன்னது போலவே நடத்திக் காட்டுவது என்பது எல்லாராலும் முடிவதில்லை.அதிலும் அன்று தான் அறிமுகமான நபருக்காக ஒரு குடும்பத்தையே ஒரு பெரிய விஷயத்துக்கு சம்மதிக்க செய்வதென்றால் அது சாதாரண விஷயமல்ல.அவன் எப்படி இதை சாதித்திருப்பான் என்பதை அறிந்துக் கொள்ளும் ஆவல் பொங்கி எழுந்தது அவளுள்.எல்லாவற்றையும் விட அவன் செய்த உதவிக்கு நன்றி கூற வேண்டுமே...அதற்காகவாவது அவனை உடனே பார்க்க வேண்டும் என பரபரத்தது அவள் உள்ளம்.
ஆனால் பத்மாவின் வீட்டிற்கு சென்ற போது சுரேஷ் வீட்டவரைத் தவிர வேறு யாருமே அங்கு இல்லை.அவளுக்கு அதில் சிறிது ஏமாற்றமாகி விட்டது.திருமணத்தின் முன் தினமே தோழியின் வீட்டிற்கு வந்து விட்டாள்.இன்று காலைக் கோயிலுக்கு வந்ததிலிருந்தே அவள் கண்கள் அவனைத் தான் தேடிக் கொண்டிருந்தது.ஆனால் அத்தனைக் கூட்டத்தில் அவனை மட்டும் காணவில்லை.இரண்டு மூன்றுமுறை யாரோ திரும்பி நின்றிருந்தவரை அவன்தான் என அருகில் ஓடி சென்றுப் பார்த்து அது அவன் இல்லை என்றானதும் ஏமாற்றத்தோடு திரும்பி வந்துக் கொண்டிருந்தாள்.
தோழியின் அலங்காரம் முடியவும் அவளுக்கு குடிப்பதற்கு ஜூஸ் தருவதற்கு சென்றவள் அங்கு ஊர் நாட்டாமைக்காரரோடு பேசியபடி நின்றிருந்த அவனைப் பார்த்து விட்டாள்.ஜூஸை அங்கு வைத்தவள் அவனை நோக்கி விரைந்தாள்.அவன் பின்னே நின்றிருந்தவள் அவனை எப்படி அழைப்பது என்று அறியாமல் திகைத்தாள்.
நாட்டாமைக்காரர் விடைப்பெற்று செல்லவும் ஏதோ உணர்வில் படக்கென திரும்பிய ரங்கதுரை அவன் பின்னே பச்சை நிற பாவாடை தாவணியில் சர்வலங்கார தேவதையாய் நின்றிருந்த இந்துவைக் கண்டு மூச்சடைக்க நின்று விட்டான்.அந்த பேரெழிலை விட்டு அவனால் கண்களை எடுக்கவே முடியவில்லை.
அவன் பார்வை தன் மேலேயே இருக்கவும் அவனை நிமிர்ந்து பார்க்க முடியாமல் திண்டாடினாள் இந்து.தான் வந்தது அவனுக்கு நன்றி உரைக்கல்லவா என்று கஷ்டப்பட்டு நினைவுப்படுத்திக் கொண்டவள்
"அது...அது உங்களுக்கு ரொம்ப தேங்க்ஸ்.... நீங்க முயற்சி எடுக்காட்டி இன்னிக்கு இந்த கல்யாணமே நடந்திருக்காது... என் பிரண்டு வாழ்க்கைய காப்பத்திக் கொடுத்துட்டீங்க"
மிகவும் முயற்சி செய்து தன்னைக் கட்டுக்குள் கொண்டு வந்த துரை அவன் கவனத்தை அவள் பேச்சில் திருப்பினான்.அவள் நன்றி உரைத்ததும்
"சே..சே..நன்றியெல்லாம் எதுக்குங்க...என் இடத்துல யாரு இருந்தாலும் இததான் செய்திருப்பாங்க...ஒரு பொண்ணு வாழ்க்கை சரியாக என்னால முடிஞ்ச சின்ன உதவிய செஞ்சேன்...இத போயி பெருசு பண்ணிக்கிட்டு.."
"சின்னன உதவியா!அவ வாழ்க்கை என்னாகுமோன்னு நா எவ்ளோ பயந்துட்டேன் தெரியுமா... பெரிய வீட்டுக்கு வரும் போது கூட ரொம்ப ஒண்ணு நம்பிக்கை இல்ல....ஆனா முன்ன பின்ன தெரியாத என் பிரண்டுக்காக இவ்ளோ பெரிய உதவி செஞ்சுருக்கீங்க...இத நா உயிரு உள்ள வர மறக்க மாட்டேன்"
என கண்களில் துளிர்த்த கண்களால் அவனைப் பார்த்தாள்.
அவள் கண்ணீரைக் கண்டதும் அவளை அப்படியே இறுக்கி அணைத்து ஆறுதல் கூற வேண்டும் என்று எழுந்த உணர்வைக் கண்டு திடுக்கிட்டான்.திருமண வீட்டில் கண்ணீர் விடக் கூடாது என கண்களைத் துடைத்த இந்து
"ஆமா...பெரிய வீட்டு துரைய்யா அவங்க வீட்டம்மா எல்லாரும் வந்திருக்காங்களா? எங்க இருக்காங்க?என்னைய கூட்டிப் போறீங்களா...? எனக்கு பாக்கனும் போல ஆசையா இருக்கு"
'கெட்டுது குடி..!துரை வீட்டம்மாவ எங்கேந்து காட்டறது?!பாத்தே ஆகனும்னு சொன்னா என்ன பண்றது'என்று திருதிருவென முழித்த துரை ஏதோ சொல்ல வாயெடுக்கும் முன் அவன் பின்னே
"என்ன ரங்கதுரை எப்படி இருக்க?பாத்து ரொம்ப நாளாச்சே?"என்று அவனின் உறவுமுறை மாமா அழைத்தாரே பார்க்கலாம்.
'ஐய்யோ மாட்னம்... இன்னிக்கு'என்று எண்ணியபடி திரும்பி நின்று அழைத்தவருடன் சிறிது நேரம் பேசி அவரை அனுப்பி விட்டு திரும்பிய போது அங்கே தன் இரு கைகளையும் இடுப்பில் வைத்தவாறு அவனை முறைத்தபடி கோபாவேசமாக நின்றிருந்தாள் இந்து.