AkilaMathan
முதலமைச்சர்
Superb
thanks akkaSuperb
சூப்பர் ஸ்ரீ.. சாரிப்பா நேத்து கமெண்ட்ஸ் போடலை.. தென்றல் சூப்பர்யா..மாடியில் மூன்று படுக்கை அறைகள் இருக்கிறது அதில் ஒரு அறை மட்டுமே தனக்கு என்று எடுத்துக்கொண்டு அந்த வீட்டில் இருக்கிறான்... ‘எங்கும் அமைதி, எதிலும் அமைதி..’ என்று இருக்கும் அந்த வீட்டில் ஒரு அழகான கானம் கேட்கிறது..
“ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும் போதெல்லாம் சில ஞாபகம் தாலாட்டும்!
என் கண்களின் இமைகளிலே சில ஞாபகம் சிறகடிக்கும்!
நான் சுவாசிக்கும் மூச்சினிலே சில ஞாபகம் கலந்திருக்கும்!” என்ற பாடலின் வரிகளை கேட்டு எழுந்தவனின் முகத்தில் புன்னகை என்பது மருந்துக்கும் கிடையாது.. காலையில் எழுத்தும் ஜாக்கிங் சென்றுவிட்டு வந்தவன் குளித்துவிட்டு ஆபீசிற்கு கிளம்பினான்..
அலையலையாய் கேசமும், அடர்ந்த புருவம், அடுத்தவரை எரிக்கும் நிலையிலேயே இருக்கும் கோபத்தை மட்டும் சுமந்து நிற்கும் சிவந்த கண்கள்.. கூர்மையான நாசி, அழுத்தமான உதடுகள்.. இதில் இருந்து வரும் வார்த்தைகள் அடுத்தவரின் மனத்தைக் காயப்படுத்துமே தவிர சந்தோஷப்படுத்தாது.. இவனுக்கு என்று இருக்கும் ஒரே சொந்தம் அவனின் தாத்தா ராஜசேகர். அவர் ஊட்டியில் இருக்கிறார்..
இவனின் வயது இருபத்தி ஏழு. இந்த வயதிலேயே சிறந்த இளம் தொழிலதிபர் என்ற பட்டத்தை பெற்று தனது கம்பெனியை திறமையுடன் நடத்தி வருகிறார்.. “ரஞ்சன் கன்ஸ்ட்ரக்ஷன்” எம்.டி. மிஸ்டர் மனோ ரஞ்சன்.
பணத்தால் கட்டப்பட்ட அதிகார கோட்டைக்கு மூடி சூட மன்னன் தான் மனோரஞ்சன்.. பணம் என்பது கடல் அளவு இருந்து தன்னை சுற்றியும் நெருப்பு வளையத்தைப் போட்டு அதற்குள் நின்றவனிடம் நெருங்க யாருக்கும் தைரியம் இல்லை.. அவனை நெருங்க நினைத்தாலே அனைவரும் நடுங்குவார்கள்..
அவனின் முகத்தை யாரும் இதுவரையில் அறிந்ததே இல்லை.. அவனின் முகத்தில் புன்னகை மலராத என்று எங்கும் பெண்களின் மத்தியில் கம்பீரமாக நடைபோடும் இளவரசன் மனோரஞ்சன்..
இவனின் தனிமையை இவன் யாருக்காகவும் விட்டுக் கொடுத்ததே கிடையாது.. பாசம், பந்தம் என்ற சொல்லே இவனின் அகராதியில் கிடையாது.. இவனின் முகம் அப்படியே தென்றலுக்கு எதிர் துருவம்..!
அவன் காரை எடுத்தும் அவனது கன்ஸ்ட்ரக்ஷனில் இருந்து கால் வர, “ஹலோ ரஞ்சன் ஸ்பீகிங்..” என்று சொல்ல எதிர் புறம் இருந்து, அங்கே வொர்க்ஸ் பிரச்சனை பண்றாங்க என்று சொல்ல கோபத்தில் பல்லைக் கடித்தவன் வேகமாக காரை எடுத்தான்..
அந்த கோயம்புத்தூர் மாநகரமே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்க சாலையில் தனது காரை மின்னல் வேகத்தில் செலுத்துக் கொண்டிருந்தான் மனோ..
அவன் வேகமாக சென்றதால் குறிப்பிட்ட நேரத்திற்குள் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தவன் என்ன விஷயம் என்பதை விசாரிக்க, “நீங்கள் மட்டும் நல்ல லாபம் பார்க்கிறீங்க.. எங்களுக்கு மட்டும் போனஸ் கொடுப்பதே இல்லை.. இனிமேல் நாங்க வேலை செய்ய மாட்டோம்..” என்று சொல்ல மனோவிற்கு கோபம் வந்தது..
“நான் மட்டும் லாபம் பார்க்கிறேன் உங்களின் உழைப்பை நான் சுரண்டுகிறேனா..?! என்னோட லாபத்தில் நாற்பது சதவீதம் உங்களுக்கு தான் நான் தருகிறேன். இதற்கு மேலும் நீங்கள் எதிர்பார்ப்பது உங்களுக்கே அதிகம் என்று புரியவில்லையா..?!” என்று கேட்டதும் எல்லோரும் அமைதியாக நின்றனர்..
“இந்த கம்பெனியில் நானும் ஒரு தொழிலாளியாகவே தான் இருக்கிறேன்.. முதலாளி என்று நினைத்தேன் என்றால் அறிவிப்பே இல்லாமல் கம்பெனியை இழுத்து மூடிவிட்டு செல்ல எனக்கும் தெரியும்.. இதில் நான் அதிகம் நஷ்டம் அடைய மாட்டேன்.. ஏனென்றால் எனக்கு நிறைய தொழில்கள் இருக்கிறது.. ஆனால் உங்களின் நிலையை கொஞ்சம் மனதில் வைத்து யோசிங்க..” என்றவன் யூனியன் சேர்மேனை முறைத்த முறைப்பில் அவனின் கோபத்தை அறிந்த ரகுராமன், “ஸாரி சார்..” என்று சொல்ல,
“இனிமேல் ப்ராபிளம் பண்ணினால் இன்னைக்கு மாதிரி அமைதியாக போகமாட்டேன்... அப்புறம் என்னை யாரும் தடுக்க முடியாது கம்பெனியை இழுத்து மூடிவிட்டுப் போயிட்டே இருப்பேன்..” என்றவன் காரில் ஏறிச்செல்ல அந்த இடத்தைவிட்டு சென்றான்..
இதுதான் மனோவின் குணம் யாராக இருந்தாலும் நேருக்கு நேர் பதில் கொடுப்பான்.. அவனை குறுக்கு வழியில் அடிக்க நினைத்தால் அப்புறம் அவனின் வலியையை யாராலும் கணிக்கவே முடியாது.. அந்த அளவிற்கு அவனுக்கு கோபமும், வேகமும் அதிகம்.
அவன் காரில் வந்து கொண்டிருக்க அவனின் தாத்தா அழைப்பு வருவதைப் பார்த்து கோபத்தை குறைத்தவன், “தாத்தா நான் டிரைவிங் பண்ணிட்டு இருக்கிறேன்.. நான் பிறகு பேசுகிறேன்..” என்று சொல்லவும் அவர் எதுவும் பேசாமல் போனை வைக்க காரை வேகமாகச் செலுத்த ஆரமித்தான்..
ஒரு திருப்பத்தில் ஒன்வே என்பதை கவனிக்காமல் திருப்பியவன், அங்கே வைத்திருக்கும் போர்டைப் பார்த்துவிட்டு ரிவர்ஸ் எடுத்தான்.. ஆனால் அவன் காரை செலுத்திய வேகத்திற்கு போர்டைக் கவனித்தவன் எதிரே வந்த ஸ்கூட்டியை கவனிக்காமல் வண்டியை எடுக்க காரின் கண்ணாடி உடைந்த சத்தம், கேட்டு காரின் முன்னாடி இருந்த கண்ணாடியைப் பார்க்க, அதில் துப்பட்டாவை இடுப்பில் கட்டிக் கொண்டு, சரியான கோபத்தோடு நின்றிருந்தாள் தென்றல்..
தென்றல், பிரதாப் இருவரும் ஸ்கூட்டியில் வர, அவள் ஒன்வேயில் திருப்புவதைப் பார்த்த பிரதாப், “இப்பொழுது எதுக்கு ஒன்வே ல போகிறாய்..” என்று கேட்டான்.. “ஏண்டா நான் சரியாக தானே போகிறேன்..” என்று புரியாமல் கேட்டாள் தென்றல்..
அவள் சொன்னதைக் கேட்டு, “நீ சரியாகத்தான் போவாய்.. ஆனால் ஏதாவது குறுக்கு வழியில் புகுந்து போகலாம் என்று வந்தால் நம்ம நிலை என்ன என்று யோசி..” என்று சொல்லவும் தென்றலின் ஸ்கூட்டி காரில் மோதி கீழே சரியவும் சரியாக இருந்தது..
இது நடக்கும் என்று எதிர்பார்க்காத தென்றல் கீழே சரியும் முன்னே வண்டியை பேலன்ஸ் பண்ணி நிறுத்தியவள், “பிரதாப் உனக்கு ஒண்ணும் ஆகவில்லையே..” என்று கேட்க, “இல்ல தென்றல் எனக்கும் ஒண்ணும் ஆகவில்லை..” என்று அவன் சொன்னதும்,
“டேய் பிரதாப் இறங்குடா...”வண்டியை நிறுத்திவிட்டு இறங்கிய தென்றல் துப்பட்டா எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு, காரை நோக்கி செல்ல இவர்கள் கீழே விழுந்ததைக் கவனிக்காமல் காரை ரிவர்ஸ் எடுத்துக் கொண்டிருந்தான் மனோ..
கார் நிற்காமல் ரிவர்ஸ் போவதை கவனித்தவள் அவன் தப்பிக்க நினைப்பதாக நினைத்துவிட்டு, “பிரதாப் அந்த பேப்பர் வெய்ட்டை எடு..” என்று சொல்லவும், அதை அவளின் கையில் கொடுத்தான் பிரதாப்..
அவனுக்கு தெரிந்துவிட்டது தென்றல் நல்ல வைச்சி செய்ய போகிறாள் என்று அவன் கொடுத்த பேப்பர் வெய்ட்டை காரின் கண்ணாடியை உடைத்தாள்.. அது உடைந்த மறுநொடியே கோபத்தில் காரை விட்டு இறங்கினான் மனோ..
அவன் காரை விட்டு இறங்கியதும், அவனை பார்வையில் அளந்தவள், “உனக்கு கண்ணு இரண்டும் நல்லதானே இருக்கிறது.. ஒன்வே என்பதை கவனிக்காமல் யார் கூட பேசிட்டு வந்த..?!” என்று கேட்டதும் ஒரு நொடி சிலையாக நின்றான் மனோ..
அவன் தொழில் எதிரிகளை நேரில் சந்தித்தே பழக்கப்பட்டவன், இவளின் நேரடி அதிரடியில் எதுவும் புரியாமல் அவளையே பார்த்த வண்ணம் நின்றான்..
அவள் அவனின் பார்வையை கவனிக்காமல் கோபத்தில் கண்கள் இரண்டும் சிவக்க, அவள் சுடிதாருக்கு போடும் துப்பட்டாவை இடுப்பில் கட்டிக் கொண்டு நிற்பது பழைய படங்களில் வரும் விஜயசாந்தி ரேஞ்சில் நின்றிருந்தாள்..
இவளின் பேச்சிற்கு பதில் அடி கொடுப்பான நம்ம மனோ..?! அடுத்து என்ன நடக்கும்..?!
தேங்க்ஸ் சாந்தினி.. இட்ஸ் ஓகே செல்லம்..சூப்பர் ஸ்ரீ.. சாரிப்பா நேத்து கமெண்ட்ஸ் போடலை.. தென்றல் சூப்பர்யா..
மாடியில் மூன்று படுக்கை அறைகள் இருக்கிறது அதில் ஒரு அறை மட்டுமே தனக்கு என்று எடுத்துக்கொண்டு அந்த வீட்டில் இருக்கிறான்... ‘எங்கும் அமைதி, எதிலும் அமைதி..’ என்று இருக்கும் அந்த வீட்டில் ஒரு அழகான கானம் கேட்கிறது..
“ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும் போதெல்லாம் சில ஞாபகம் தாலாட்டும்!
என் கண்களின் இமைகளிலே சில ஞாபகம் சிறகடிக்கும்!
நான் சுவாசிக்கும் மூச்சினிலே சில ஞாபகம் கலந்திருக்கும்!” என்ற பாடலின் வரிகளை கேட்டு எழுந்தவனின் முகத்தில் புன்னகை என்பது மருந்துக்கும் கிடையாது.. காலையில் எழுத்தும் ஜாக்கிங் சென்றுவிட்டு வந்தவன் குளித்துவிட்டு ஆபீசிற்கு கிளம்பினான்..
அலையலையாய் கேசமும், அடர்ந்த புருவம், அடுத்தவரை எரிக்கும் நிலையிலேயே இருக்கும் கோபத்தை மட்டும் சுமந்து நிற்கும் சிவந்த கண்கள்.. கூர்மையான நாசி, அழுத்தமான உதடுகள்.. இதில் இருந்து வரும் வார்த்தைகள் அடுத்தவரின் மனத்தைக் காயப்படுத்துமே தவிர சந்தோஷப்படுத்தாது.. இவனுக்கு என்று இருக்கும் ஒரே சொந்தம் அவனின் தாத்தா ராஜசேகர். அவர் ஊட்டியில் இருக்கிறார்..
இவனின் வயது இருபத்தி ஏழு. இந்த வயதிலேயே சிறந்த இளம் தொழிலதிபர் என்ற பட்டத்தை பெற்று தனது கம்பெனியை திறமையுடன் நடத்தி வருகிறார்.. “ரஞ்சன் கன்ஸ்ட்ரக்ஷன்” எம்.டி. மிஸ்டர் மனோ ரஞ்சன்.
பணத்தால் கட்டப்பட்ட அதிகார கோட்டைக்கு மூடி சூட மன்னன் தான் மனோரஞ்சன்.. பணம் என்பது கடல் அளவு இருந்து தன்னை சுற்றியும் நெருப்பு வளையத்தைப் போட்டு அதற்குள் நின்றவனிடம் நெருங்க யாருக்கும் தைரியம் இல்லை.. அவனை நெருங்க நினைத்தாலே அனைவரும் நடுங்குவார்கள்..
அவனின் முகத்தை யாரும் இதுவரையில் அறிந்ததே இல்லை.. அவனின் முகத்தில் புன்னகை மலராத என்று எங்கும் பெண்களின் மத்தியில் கம்பீரமாக நடைபோடும் இளவரசன் மனோரஞ்சன்..
இவனின் தனிமையை இவன் யாருக்காகவும் விட்டுக் கொடுத்ததே கிடையாது.. பாசம், பந்தம் என்ற சொல்லே இவனின் அகராதியில் கிடையாது.. இவனின் முகம் அப்படியே தென்றலுக்கு எதிர் துருவம்..!
அவன் காரை எடுத்தும் அவனது கன்ஸ்ட்ரக்ஷனில் இருந்து கால் வர, “ஹலோ ரஞ்சன் ஸ்பீகிங்..” என்று சொல்ல எதிர் புறம் இருந்து, அங்கே வொர்க்ஸ் பிரச்சனை பண்றாங்க என்று சொல்ல கோபத்தில் பல்லைக் கடித்தவன் வேகமாக காரை எடுத்தான்..
அந்த கோயம்புத்தூர் மாநகரமே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்க சாலையில் தனது காரை மின்னல் வேகத்தில் செலுத்துக் கொண்டிருந்தான் மனோ..
அவன் வேகமாக சென்றதால் குறிப்பிட்ட நேரத்திற்குள் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தவன் என்ன விஷயம் என்பதை விசாரிக்க, “நீங்கள் மட்டும் நல்ல லாபம் பார்க்கிறீங்க.. எங்களுக்கு மட்டும் போனஸ் கொடுப்பதே இல்லை.. இனிமேல் நாங்க வேலை செய்ய மாட்டோம்..” என்று சொல்ல மனோவிற்கு கோபம் வந்தது..
“நான் மட்டும் லாபம் பார்க்கிறேன் உங்களின் உழைப்பை நான் சுரண்டுகிறேனா..?! என்னோட லாபத்தில் நாற்பது சதவீதம் உங்களுக்கு தான் நான் தருகிறேன். இதற்கு மேலும் நீங்கள் எதிர்பார்ப்பது உங்களுக்கே அதிகம் என்று புரியவில்லையா..?!” என்று கேட்டதும் எல்லோரும் அமைதியாக நின்றனர்..
“இந்த கம்பெனியில் நானும் ஒரு தொழிலாளியாகவே தான் இருக்கிறேன்.. முதலாளி என்று நினைத்தேன் என்றால் அறிவிப்பே இல்லாமல் கம்பெனியை இழுத்து மூடிவிட்டு செல்ல எனக்கும் தெரியும்.. இதில் நான் அதிகம் நஷ்டம் அடைய மாட்டேன்.. ஏனென்றால் எனக்கு நிறைய தொழில்கள் இருக்கிறது.. ஆனால் உங்களின் நிலையை கொஞ்சம் மனதில் வைத்து யோசிங்க..” என்றவன் யூனியன் சேர்மேனை முறைத்த முறைப்பில் அவனின் கோபத்தை அறிந்த ரகுராமன், “ஸாரி சார்..” என்று சொல்ல,
“இனிமேல் ப்ராபிளம் பண்ணினால் இன்னைக்கு மாதிரி அமைதியாக போகமாட்டேன்... அப்புறம் என்னை யாரும் தடுக்க முடியாது கம்பெனியை இழுத்து மூடிவிட்டுப் போயிட்டே இருப்பேன்..” என்றவன் காரில் ஏறிச்செல்ல அந்த இடத்தைவிட்டு சென்றான்..
இதுதான் மனோவின் குணம் யாராக இருந்தாலும் நேருக்கு நேர் பதில் கொடுப்பான்.. அவனை குறுக்கு வழியில் அடிக்க நினைத்தால் அப்புறம் அவனின் வலியையை யாராலும் கணிக்கவே முடியாது.. அந்த அளவிற்கு அவனுக்கு கோபமும், வேகமும் அதிகம்.
அவன் காரில் வந்து கொண்டிருக்க அவனின் தாத்தா அழைப்பு வருவதைப் பார்த்து கோபத்தை குறைத்தவன், “தாத்தா நான் டிரைவிங் பண்ணிட்டு இருக்கிறேன்.. நான் பிறகு பேசுகிறேன்..” என்று சொல்லவும் அவர் எதுவும் பேசாமல் போனை வைக்க காரை வேகமாகச் செலுத்த ஆரமித்தான்..
ஒரு திருப்பத்தில் ஒன்வே என்பதை கவனிக்காமல் திருப்பியவன், அங்கே வைத்திருக்கும் போர்டைப் பார்த்துவிட்டு ரிவர்ஸ் எடுத்தான்.. ஆனால் அவன் காரை செலுத்திய வேகத்திற்கு போர்டைக் கவனித்தவன் எதிரே வந்த ஸ்கூட்டியை கவனிக்காமல் வண்டியை எடுக்க காரின் கண்ணாடி உடைந்த சத்தம், கேட்டு காரின் முன்னாடி இருந்த கண்ணாடியைப் பார்க்க, அதில் துப்பட்டாவை இடுப்பில் கட்டிக் கொண்டு, சரியான கோபத்தோடு நின்றிருந்தாள் தென்றல்..
தென்றல், பிரதாப் இருவரும் ஸ்கூட்டியில் வர, அவள் ஒன்வேயில் திருப்புவதைப் பார்த்த பிரதாப், “இப்பொழுது எதுக்கு ஒன்வே ல போகிறாய்..” என்று கேட்டான்.. “ஏண்டா நான் சரியாக தானே போகிறேன்..” என்று புரியாமல் கேட்டாள் தென்றல்..
அவள் சொன்னதைக் கேட்டு, “நீ சரியாகத்தான் போவாய்.. ஆனால் ஏதாவது குறுக்கு வழியில் புகுந்து போகலாம் என்று வந்தால் நம்ம நிலை என்ன என்று யோசி..” என்று சொல்லவும் தென்றலின் ஸ்கூட்டி காரில் மோதி கீழே சரியவும் சரியாக இருந்தது..
இது நடக்கும் என்று எதிர்பார்க்காத தென்றல் கீழே சரியும் முன்னே வண்டியை பேலன்ஸ் பண்ணி நிறுத்தியவள், “பிரதாப் உனக்கு ஒண்ணும் ஆகவில்லையே..” என்று கேட்க, “இல்ல தென்றல் எனக்கும் ஒண்ணும் ஆகவில்லை..” என்று அவன் சொன்னதும்,
“டேய் பிரதாப் இறங்குடா...”வண்டியை நிறுத்திவிட்டு இறங்கிய தென்றல் துப்பட்டா எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு, காரை நோக்கி செல்ல இவர்கள் கீழே விழுந்ததைக் கவனிக்காமல் காரை ரிவர்ஸ் எடுத்துக் கொண்டிருந்தான் மனோ..
கார் நிற்காமல் ரிவர்ஸ் போவதை கவனித்தவள் அவன் தப்பிக்க நினைப்பதாக நினைத்துவிட்டு, “பிரதாப் அந்த பேப்பர் வெய்ட்டை எடு..” என்று சொல்லவும், அதை அவளின் கையில் கொடுத்தான் பிரதாப்..
அவனுக்கு தெரிந்துவிட்டது தென்றல் நல்ல வைச்சி செய்ய போகிறாள் என்று அவன் கொடுத்த பேப்பர் வெய்ட்டை காரின் கண்ணாடியை உடைத்தாள்.. அது உடைந்த மறுநொடியே கோபத்தில் காரை விட்டு இறங்கினான் மனோ..
அவன் காரை விட்டு இறங்கியதும், அவனை பார்வையில் அளந்தவள், “உனக்கு கண்ணு இரண்டும் நல்லதானே இருக்கிறது.. ஒன்வே என்பதை கவனிக்காமல் யார் கூட பேசிட்டு வந்த..?!” என்று கேட்டதும் ஒரு நொடி சிலையாக நின்றான் மனோ..
அவன் தொழில் எதிரிகளை நேரில் சந்தித்தே பழக்கப்பட்டவன், இவளின் நேரடி அதிரடியில் எதுவும் புரியாமல் அவளையே பார்த்த வண்ணம் நின்றான்..
அவள் அவனின் பார்வையை கவனிக்காமல் கோபத்தில் கண்கள் இரண்டும் சிவக்க, அவள் சுடிதாருக்கு போடும் துப்பட்டாவை இடுப்பில் கட்டிக் கொண்டு நிற்பது பழைய படங்களில் வரும் விஜயசாந்தி ரேஞ்சில் நின்றிருந்தாள்..
இவளின் பேச்சிற்கு பதில் அடி கொடுப்பான நம்ம மனோ..?! அடுத்து என்ன நடக்கும்..?!