அத்தியாயம் – 24
மனோ, தென்றல் இருவரும் கிளம்பிச் சென்றபிறகு, “தாத்தா இந்த தென்றல் லூசுத்தனமாக ஏதாவது செய்து வைப்பாள்.. அவளுக்கு எதுவும் தெரியாது.. நம்மிடம் பொய் கூட சொல்லி இருப்பாள்..” என்று நிவாஸ் யோசனையோடு சொல்ல, அனைவரும் அவனையே பார்த்தனர்..
“ஆமா தாத்தா அவளை நம்பவே முடியாது.. அவள் ஒரு முடிவு எடுத்துவிட்டால் அதிலிருந்து சீக்கிரம் மாறவே மாட்டா.. நம்மை திசை திருப்ப கூட அவள் அப்படி சொல்லிருப்பா..” என்று பிரதாப் கூறினான்..
அவர்கள் இருவரும் சொல்வதைக் கேட்ட அனு, “இவங்க சொல்வதும் சரிதான் தாத்தா.. அவளை நம்பவே முடியாது..” என்று சொல்லவே அவர் கொஞ்சம் யோசிக்க ரிஷி வேறு சொன்னான்..
“இல்ல தாத்தா தென்றல் அங்கேதான் போயிருப்பாள், மனோதான் தேடி போயிருக்கான் இல்ல அவன் அவளைப் பார்த்தும் கண்டிப்பாக நமக்கு போன் பண்ணுவான்.. அதுவரை வெய்ட் பண்ணலாம்..” என்று சொல்ல, “எனக்கும் ரிஷி சொல்றதுதான் சரின்னு படுது..” என்று கூறினாள் சாரு..
அவர் கொஞ்சநேரம் யோசித்துவிட்டு, “இன்னைக்கு நைட் வரை பார்க்கலாம்.. எந்த போனும் வரலை என்றால் காலையில் நாம் எல்லோரும் கோயம்புத்தூர் போலாம்..” என்று சொல்ல,
“சரிங்க தாத்தா..” என்று அனைவரும் ஒப்புக்கொள்ள இரவு வரையில் இவர்களின் போனுக்காக காத்திருந்தனர்.. இரவு பதினொன்று ஆனபிறகும் கூட எந்த போனும் வரவே இல்லை என்றது காலையில் ஊருக்கு செல்வது என்று முடிவானது...
காலைப் பொழுது அழகாக விடிய கிழக்கே தனது பயணத்தைத் தொடங்கினான் கதிரவன். பறவை இரை தேடி வானில் பறந்து சென்றது.. அந்த காலைபொழுதில் தென்றலின் செல்போன் அடிக்க அப்பொழுதுதான் கண்விழித்த தென்றல் முதலில் பார்த்து மனோவின் முகத்தைத்தான்..
மடியில் தலைவைத்து தனது இடையோடு கைகோர்த்துத் தூங்கும் அன்பு கணவனின் முகத்தைப் பார்த்தாள். தாயின் மடியில் தூங்கும் குழந்தை போல அசையாமல் தூங்கும் மனோவைப் பார்த்து அவளின் முகத்தில் புன்னகை அழகாக மலர அவனின் நெற்றியில் இதழ்பதித்தது நிமிர்ந்தாள்..
பிறகு அவனின் தூக்கம் கலையாதவாறு அவனின் தலையை தலையணைக்கு மாற்றிய தென்றல் அந்த இடத்தை விட்டு நகர நினைக்க அவளின் கால்கள் அசைய மறுத்தது.. இரவு முழுக்க மனோ அவளின் மடியில் படுத்திருந்தால் காலுக்கு ரத்தஓட்டம் செல்லாமல் அவளின் கால்கள் இரண்டும் மரத்து போக சிறிது நேரம் கால்களை அசைத்தவள் மெல்ல எழுந்து சென்றாள்.. பிறகு குளியலறைக்குள் புகுந்தவள் குளித்து முடித்துவிட்டு வந்து மணியைப் பார்த்தாள்.. அது ஏழு என்று காட்டியதும் கண்ணாடியின் முன்னே நின்று தலையை வாரி பின்னலிட்டு நெற்றிக்கு ஒரு சின்ன போட்டு வைத்துவிட்டு சமையலறைக்குள் புகுந்தாள்..
அவள் காபி வைத்ததும், ‘மனோவை எழுப்பலாம்’ என்று நினைக்கும் பொழுது மீண்டும் அவளின் செல் அடிக்க அதை எடுத்து, “ஹலோ தாத்தா.. குட் மார்னிங்..” என்று அவள் உற்சாகத்தோடு சொல்ல, “மனோ எங்கே தென்றல்.. நீங்க இருவரும் எங்கே இருக்கீங்க..?! நீ வீட்டில் தான் இருக்கிறாயா..?” என்று வேகமாகக் கேள்வியை அடுக்கினார்..
அப்பொழுதுதான் அவருக்கு அழைத்து தகவல் சொல்லவில்லை என்ற நினைவு வர நாக்கைக் கடித்த தென்றல், “சாரி தாத்தா.. நான் நேராக வீட்டுக்குத்தான் வந்தேன்.. உங்களுக்கு கூப்பிடவே மறந்துவிட்டேன்.. ஸாரி ஸாரி..” என்று கூறினாள்..
“சரிம்மா நீ வீட்டில் இருக்க மனோ எங்கே..? அவனும் இன்னும் ஒரு போனும் பண்ணல.. எனக்கு ஒரே பதட்டமாக இருக்கு..” என்று சொல்ல அவரின் பதட்டம் கண்டு சிரித்த தென்றல், “தாத்தா பாவா நல்ல தூங்கிட்டு இருக்காங்க.. நான் வந்ததும் அவரும் வந்துவிட்டார்..” என்று கூறினாள்..
அவள் சொன்னதைக் கேட்ட ராஜசேகர் பெருமூச்சுடன் பேசும் முன்னே, “தாத்தா நான் பேசுகிறேன்..” என்றுஅவரிடமிருந்துப் போனை வாங்கிய அனு, “உனக்கு எல்லாம் அறிவே இல்லையா தென்றல்..?” என்று கேட்டதும், “எனக்கு அது எல்லாம் இருக்கு என்று உன்னிடம் எப்போ சொன்னேன் அனு..?” என்று கிண்டலாகக் கேட்டாள் தென்றல்..
அவளின் கேள்வியில் அனுவிற்கு அப்படியே பத்திக் கொண்டு வந்தது.. அவள் பல்லைக் கடிப்பதைப் பார்த்து அவளிடமிருந்து செல்லை வாங்கிய சாரு, “அடியே புயல் உனக்கு எதில் விளையாடனும் என்று தெரியாதா..?! இங்கே எல்லோரும் ரொம்ப பதட்டத்துடன் இருக்கோம்.. இருவரும் என்ன பண்றாங்களோ என்று.. கடைசியில் எங்களை எல்லாம் முட்டாள் பண்ணியது நீங்கள் இருவரும்தான்.. இருடி உன்னை நேரில் வந்து பேசிக் கொள்கிறேன்..” என்று அவள் சரம்வாரியாக திட்ட சத்தமில்லாமல் சிரித்த தென்றல் அவளின் அழைப்பை துண்டித்தாள்..
அவள் வைத்துவிட்டால் என்றதும் அனுவை நிமிர்ந்து பார்த்த சாரு, “நீ எப்படி அனு அவளை சமாளிக்கிற..? இந்த மனோ போன ஜென்மத்தில் ரொம்ப பாவம் பண்ணிட்டான் போலவே..” என்று புலம்பினாள்.. அவள் புலம்புவதைப் பார்த்த ரிஷி, “சாரு அந்த டயலாக்கை நான் சொல்லணும்..” என்று சிரிக்காமல் சொல்ல அனுவுக்கும், தாத்தாவுக்கும் சிரிப்பு வந்தது..
இருவரும் சிரிப்பதைப் பார்த்த சாரு, “நீங்க பாவம் செய்தவரா..? உங்களுக்கு எல்லாம் சரியான ராச்சசி வந்து வாச்சிருக்கணும்..” என்று சொல்ல, “அதுதான் நடந்துவிட்டதே இனி மாத்தவா முடியும்..” என்று சாருவை வம்பிற்கு இழுத்தான் ரிஷி.. அவன் சொன்னதைக் கேட்ட சாரு அவனை அடிக்க தூரத்த எழுந்து ஓடியேவிட்டான்.. அவர்கள் அனைவரும் ஊட்டியில் இருந்து இரண்டு காரில் கிளம்பினர்..
அவர்களிடம் பேசிவிட்டு போனை வைத்த தென்றல் படுக்கை அறையின் உள்ளே நுழைய மனோ அசந்து தூங்குவதைப் பார்த்துவிட்டு அவனை எழுப்பாமல் மீண்டும் வந்து வேலையை தொடர்ந்தாள்.. எல்லா வேலையையும் முடித்த தென்றல் சமையலறையை ஒதுக்கி வைத்தாள்..
எங்கிருந்தோ கேட்ட ஒரு குயிலின் சத்தத்தில் கண்விழித்தான் மனோ. அவன் விழித்தும் அவனின் பார்வை தென்றலைத் தேட அவள் அந்த அறையில் இல்லை என்றதும் எழுந்த மனோ அந்த அறையைவிட்டு வெளியே வந்து பார்க்க சமையலறையில் இருந்த தென்றலைப் பார்த்தான்..
உடனே சமையலறைக்குள் நுழைந்த மனோ அங்கிருந்த சமையல் மேடையில் ஏறியமர்ந்து, “குட் மார்னிங் புயல்..” என்று சொல்ல, அப்பொழுதுதான் அவனை கவனித்த தென்றல், “என்ன பாவா ரொம்ப சீக்கிரம் எழுந்துட்டீங்க..?” என்று கேட்டாள்.. அவளின் குரலில் இருந்த கேலியை கவனித்த மனோ,
“நான் நேரத்திலேயே எழுந்துவிடுவேன் என்று உனக்கு தெரியாத புயல்..?!” என்று கேட்டதும், “ஓ நல்ல தெரியுமே..” என்று கூறிய தென்றல், அவனிக்கு காபி போட்டுக் கொடுக்க, “இல்ல பிரஷ் பண்ணிட்டு வந்து குடிக்கிறேன்..” என்று கூறினான்.
“இனி எப்போ குடிக்கிறீங்க..?!” என்று கேட்டவளின் கேள்வியில் மணியைப் பார்க்க கடிகாரமுள் ஒன்றில் நிற்க, “என்னது மணி ஒன்னா..?!” என்று அதிர்ச்சியான மனோ, “நான்தான் நல்ல தூங்கிட்டேன்.. நீயாவது என்னை எழுப்பிவிடலாம் இல்ல.. இன்னைக்கு முக்கியமான மீட்டிங் எல்லாம் இருக்கு..” என்று தென்றலை சரம்வாரியாகத் திட்டினான். சமையல் மேடையில் இருந்து இறங்கிய மனோ படுக்கை அறைக்கு செல்ல,
அவன் திட்டுவதை எல்லாம் சிரிப்புடன் கேட்டுக் கொண்டிருந்த தென்றல் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு மனோவைப் பார்த்து, “பாவா உங்களுக்கு காபி வேண்டாமா..?” என்று கேட்டதும், அறைக்குள் சென்ற மனோ திரும்ப வந்து, “அதை நீயே குடி.. உன்னை வந்து பார்த்துகிறேன்..” என்றவன் கோபத்தோடு எழுந்து செல்ல, “ஏன் இப்போ பார்த்த என்னவாம்..” என்று அவனை வம்பிற்கு இழுக்க, “தென்றல் எனக்கு கோபம் வந்தால் என்ன நடக்குமே என்று உனக்கே தெரியும்..” என்று அவன் அவளை விரல் நீட்டி எச்சரித்தான்..
“பாவா உங்களோட அந்த அரைக்குத்தான் உங்களுக்கு ஆயுள்தண்டனை கொடுத்திருக்கிறேன்..” என்று கூறிய தென்றல் அவனைப் பார்த்து கண்ணடித்து சிரித்தாள்.. அவளின் சிரித்த முகத்தைப் பார்த்த மனோவின் முகத்திலும் புன்னகை அரும்பியது..
“உனக்கு கொழுப்பு அதிகம்டி..” என்று சொல்ல, “நீங்க சமைத்துப் போட்டு ஊட்டிவேற விட்டால் கொழுப்பு ஏறாமல் என்ன பண்ணும்..?” என்று அவள் சிரிப்புடன் கேட்டதும், “உன்னோட பேசிட்டு இருக்கேன் பாரு என்னை சொல்லணும்.. அப்படியே வர கோபத்துக்கு..” என்று அவன் பல்லைக் கடிக்க, “நிஜமா கோபம் வருதா பாவா..” என்று அவனைப் பார்த்து குறும்பாகக் கேட்டாள்..
மனோ, தென்றல் இருவரும் கிளம்பிச் சென்றபிறகு, “தாத்தா இந்த தென்றல் லூசுத்தனமாக ஏதாவது செய்து வைப்பாள்.. அவளுக்கு எதுவும் தெரியாது.. நம்மிடம் பொய் கூட சொல்லி இருப்பாள்..” என்று நிவாஸ் யோசனையோடு சொல்ல, அனைவரும் அவனையே பார்த்தனர்..
“ஆமா தாத்தா அவளை நம்பவே முடியாது.. அவள் ஒரு முடிவு எடுத்துவிட்டால் அதிலிருந்து சீக்கிரம் மாறவே மாட்டா.. நம்மை திசை திருப்ப கூட அவள் அப்படி சொல்லிருப்பா..” என்று பிரதாப் கூறினான்..
அவர்கள் இருவரும் சொல்வதைக் கேட்ட அனு, “இவங்க சொல்வதும் சரிதான் தாத்தா.. அவளை நம்பவே முடியாது..” என்று சொல்லவே அவர் கொஞ்சம் யோசிக்க ரிஷி வேறு சொன்னான்..
“இல்ல தாத்தா தென்றல் அங்கேதான் போயிருப்பாள், மனோதான் தேடி போயிருக்கான் இல்ல அவன் அவளைப் பார்த்தும் கண்டிப்பாக நமக்கு போன் பண்ணுவான்.. அதுவரை வெய்ட் பண்ணலாம்..” என்று சொல்ல, “எனக்கும் ரிஷி சொல்றதுதான் சரின்னு படுது..” என்று கூறினாள் சாரு..
அவர் கொஞ்சநேரம் யோசித்துவிட்டு, “இன்னைக்கு நைட் வரை பார்க்கலாம்.. எந்த போனும் வரலை என்றால் காலையில் நாம் எல்லோரும் கோயம்புத்தூர் போலாம்..” என்று சொல்ல,
“சரிங்க தாத்தா..” என்று அனைவரும் ஒப்புக்கொள்ள இரவு வரையில் இவர்களின் போனுக்காக காத்திருந்தனர்.. இரவு பதினொன்று ஆனபிறகும் கூட எந்த போனும் வரவே இல்லை என்றது காலையில் ஊருக்கு செல்வது என்று முடிவானது...
காலைப் பொழுது அழகாக விடிய கிழக்கே தனது பயணத்தைத் தொடங்கினான் கதிரவன். பறவை இரை தேடி வானில் பறந்து சென்றது.. அந்த காலைபொழுதில் தென்றலின் செல்போன் அடிக்க அப்பொழுதுதான் கண்விழித்த தென்றல் முதலில் பார்த்து மனோவின் முகத்தைத்தான்..
மடியில் தலைவைத்து தனது இடையோடு கைகோர்த்துத் தூங்கும் அன்பு கணவனின் முகத்தைப் பார்த்தாள். தாயின் மடியில் தூங்கும் குழந்தை போல அசையாமல் தூங்கும் மனோவைப் பார்த்து அவளின் முகத்தில் புன்னகை அழகாக மலர அவனின் நெற்றியில் இதழ்பதித்தது நிமிர்ந்தாள்..
பிறகு அவனின் தூக்கம் கலையாதவாறு அவனின் தலையை தலையணைக்கு மாற்றிய தென்றல் அந்த இடத்தை விட்டு நகர நினைக்க அவளின் கால்கள் அசைய மறுத்தது.. இரவு முழுக்க மனோ அவளின் மடியில் படுத்திருந்தால் காலுக்கு ரத்தஓட்டம் செல்லாமல் அவளின் கால்கள் இரண்டும் மரத்து போக சிறிது நேரம் கால்களை அசைத்தவள் மெல்ல எழுந்து சென்றாள்.. பிறகு குளியலறைக்குள் புகுந்தவள் குளித்து முடித்துவிட்டு வந்து மணியைப் பார்த்தாள்.. அது ஏழு என்று காட்டியதும் கண்ணாடியின் முன்னே நின்று தலையை வாரி பின்னலிட்டு நெற்றிக்கு ஒரு சின்ன போட்டு வைத்துவிட்டு சமையலறைக்குள் புகுந்தாள்..
அவள் காபி வைத்ததும், ‘மனோவை எழுப்பலாம்’ என்று நினைக்கும் பொழுது மீண்டும் அவளின் செல் அடிக்க அதை எடுத்து, “ஹலோ தாத்தா.. குட் மார்னிங்..” என்று அவள் உற்சாகத்தோடு சொல்ல, “மனோ எங்கே தென்றல்.. நீங்க இருவரும் எங்கே இருக்கீங்க..?! நீ வீட்டில் தான் இருக்கிறாயா..?” என்று வேகமாகக் கேள்வியை அடுக்கினார்..
அப்பொழுதுதான் அவருக்கு அழைத்து தகவல் சொல்லவில்லை என்ற நினைவு வர நாக்கைக் கடித்த தென்றல், “சாரி தாத்தா.. நான் நேராக வீட்டுக்குத்தான் வந்தேன்.. உங்களுக்கு கூப்பிடவே மறந்துவிட்டேன்.. ஸாரி ஸாரி..” என்று கூறினாள்..
“சரிம்மா நீ வீட்டில் இருக்க மனோ எங்கே..? அவனும் இன்னும் ஒரு போனும் பண்ணல.. எனக்கு ஒரே பதட்டமாக இருக்கு..” என்று சொல்ல அவரின் பதட்டம் கண்டு சிரித்த தென்றல், “தாத்தா பாவா நல்ல தூங்கிட்டு இருக்காங்க.. நான் வந்ததும் அவரும் வந்துவிட்டார்..” என்று கூறினாள்..
அவள் சொன்னதைக் கேட்ட ராஜசேகர் பெருமூச்சுடன் பேசும் முன்னே, “தாத்தா நான் பேசுகிறேன்..” என்றுஅவரிடமிருந்துப் போனை வாங்கிய அனு, “உனக்கு எல்லாம் அறிவே இல்லையா தென்றல்..?” என்று கேட்டதும், “எனக்கு அது எல்லாம் இருக்கு என்று உன்னிடம் எப்போ சொன்னேன் அனு..?” என்று கிண்டலாகக் கேட்டாள் தென்றல்..
அவளின் கேள்வியில் அனுவிற்கு அப்படியே பத்திக் கொண்டு வந்தது.. அவள் பல்லைக் கடிப்பதைப் பார்த்து அவளிடமிருந்து செல்லை வாங்கிய சாரு, “அடியே புயல் உனக்கு எதில் விளையாடனும் என்று தெரியாதா..?! இங்கே எல்லோரும் ரொம்ப பதட்டத்துடன் இருக்கோம்.. இருவரும் என்ன பண்றாங்களோ என்று.. கடைசியில் எங்களை எல்லாம் முட்டாள் பண்ணியது நீங்கள் இருவரும்தான்.. இருடி உன்னை நேரில் வந்து பேசிக் கொள்கிறேன்..” என்று அவள் சரம்வாரியாக திட்ட சத்தமில்லாமல் சிரித்த தென்றல் அவளின் அழைப்பை துண்டித்தாள்..
அவள் வைத்துவிட்டால் என்றதும் அனுவை நிமிர்ந்து பார்த்த சாரு, “நீ எப்படி அனு அவளை சமாளிக்கிற..? இந்த மனோ போன ஜென்மத்தில் ரொம்ப பாவம் பண்ணிட்டான் போலவே..” என்று புலம்பினாள்.. அவள் புலம்புவதைப் பார்த்த ரிஷி, “சாரு அந்த டயலாக்கை நான் சொல்லணும்..” என்று சிரிக்காமல் சொல்ல அனுவுக்கும், தாத்தாவுக்கும் சிரிப்பு வந்தது..
இருவரும் சிரிப்பதைப் பார்த்த சாரு, “நீங்க பாவம் செய்தவரா..? உங்களுக்கு எல்லாம் சரியான ராச்சசி வந்து வாச்சிருக்கணும்..” என்று சொல்ல, “அதுதான் நடந்துவிட்டதே இனி மாத்தவா முடியும்..” என்று சாருவை வம்பிற்கு இழுத்தான் ரிஷி.. அவன் சொன்னதைக் கேட்ட சாரு அவனை அடிக்க தூரத்த எழுந்து ஓடியேவிட்டான்.. அவர்கள் அனைவரும் ஊட்டியில் இருந்து இரண்டு காரில் கிளம்பினர்..
அவர்களிடம் பேசிவிட்டு போனை வைத்த தென்றல் படுக்கை அறையின் உள்ளே நுழைய மனோ அசந்து தூங்குவதைப் பார்த்துவிட்டு அவனை எழுப்பாமல் மீண்டும் வந்து வேலையை தொடர்ந்தாள்.. எல்லா வேலையையும் முடித்த தென்றல் சமையலறையை ஒதுக்கி வைத்தாள்..
எங்கிருந்தோ கேட்ட ஒரு குயிலின் சத்தத்தில் கண்விழித்தான் மனோ. அவன் விழித்தும் அவனின் பார்வை தென்றலைத் தேட அவள் அந்த அறையில் இல்லை என்றதும் எழுந்த மனோ அந்த அறையைவிட்டு வெளியே வந்து பார்க்க சமையலறையில் இருந்த தென்றலைப் பார்த்தான்..
உடனே சமையலறைக்குள் நுழைந்த மனோ அங்கிருந்த சமையல் மேடையில் ஏறியமர்ந்து, “குட் மார்னிங் புயல்..” என்று சொல்ல, அப்பொழுதுதான் அவனை கவனித்த தென்றல், “என்ன பாவா ரொம்ப சீக்கிரம் எழுந்துட்டீங்க..?” என்று கேட்டாள்.. அவளின் குரலில் இருந்த கேலியை கவனித்த மனோ,
“நான் நேரத்திலேயே எழுந்துவிடுவேன் என்று உனக்கு தெரியாத புயல்..?!” என்று கேட்டதும், “ஓ நல்ல தெரியுமே..” என்று கூறிய தென்றல், அவனிக்கு காபி போட்டுக் கொடுக்க, “இல்ல பிரஷ் பண்ணிட்டு வந்து குடிக்கிறேன்..” என்று கூறினான்.
“இனி எப்போ குடிக்கிறீங்க..?!” என்று கேட்டவளின் கேள்வியில் மணியைப் பார்க்க கடிகாரமுள் ஒன்றில் நிற்க, “என்னது மணி ஒன்னா..?!” என்று அதிர்ச்சியான மனோ, “நான்தான் நல்ல தூங்கிட்டேன்.. நீயாவது என்னை எழுப்பிவிடலாம் இல்ல.. இன்னைக்கு முக்கியமான மீட்டிங் எல்லாம் இருக்கு..” என்று தென்றலை சரம்வாரியாகத் திட்டினான். சமையல் மேடையில் இருந்து இறங்கிய மனோ படுக்கை அறைக்கு செல்ல,
அவன் திட்டுவதை எல்லாம் சிரிப்புடன் கேட்டுக் கொண்டிருந்த தென்றல் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு மனோவைப் பார்த்து, “பாவா உங்களுக்கு காபி வேண்டாமா..?” என்று கேட்டதும், அறைக்குள் சென்ற மனோ திரும்ப வந்து, “அதை நீயே குடி.. உன்னை வந்து பார்த்துகிறேன்..” என்றவன் கோபத்தோடு எழுந்து செல்ல, “ஏன் இப்போ பார்த்த என்னவாம்..” என்று அவனை வம்பிற்கு இழுக்க, “தென்றல் எனக்கு கோபம் வந்தால் என்ன நடக்குமே என்று உனக்கே தெரியும்..” என்று அவன் அவளை விரல் நீட்டி எச்சரித்தான்..
“பாவா உங்களோட அந்த அரைக்குத்தான் உங்களுக்கு ஆயுள்தண்டனை கொடுத்திருக்கிறேன்..” என்று கூறிய தென்றல் அவனைப் பார்த்து கண்ணடித்து சிரித்தாள்.. அவளின் சிரித்த முகத்தைப் பார்த்த மனோவின் முகத்திலும் புன்னகை அரும்பியது..
“உனக்கு கொழுப்பு அதிகம்டி..” என்று சொல்ல, “நீங்க சமைத்துப் போட்டு ஊட்டிவேற விட்டால் கொழுப்பு ஏறாமல் என்ன பண்ணும்..?” என்று அவள் சிரிப்புடன் கேட்டதும், “உன்னோட பேசிட்டு இருக்கேன் பாரு என்னை சொல்லணும்.. அப்படியே வர கோபத்துக்கு..” என்று அவன் பல்லைக் கடிக்க, “நிஜமா கோபம் வருதா பாவா..” என்று அவனைப் பார்த்து குறும்பாகக் கேட்டாள்..