அத்தியாயம் – 3
அனுபமா வீட்டின் முன்னாடி நின்ற தென்றல், பிரதாப் இருவரையும் பார்த்த நிவாஸ், “அம்மா அனு வீட்டிற்கு தென்றல் வந்திருக்கிறாள்.. நான் அங்கே இருக்கிறேன் என்னை தேடாதீங்க..” என்று கூறிவிட்டு தென்றல் அருகில் சென்ற நிவாஸ்,
“ஹாய் தென்றல் என்ன இன்னைக்கு சீக்கிரம் வந்துவிட்டாய்..” சிரித்துக் கொண்டே கேட்ட நிவாஸைப் பார்த்த தென்றல், “ஹோ மைனர் இன்னைக்கு காலேஜ்[ஸ்கூல்] போகலையோ..?!” என்று கேட்டதும்,
“நீ இன்னைக்கு வருவாய் என்று அனு என்னிடம் நேற்றே சொன்னதால் இன்னைக்கு காலேஜிற்கு கட் அடித்துவிட்டேன்..” என்று சந்தோசமாகக் கூறினான்..
“சூப்பர் நிவாஸ் செல்லம்..” என்ற பிரதாப் நிவாஸ் கன்னத்தில் முத்தமிட்டு தன்னிடமிருந்த டைரி மில்கை அவனிடம் கொடுக்க, “தேங்க்ஸ் பிரதாப் அண்ணா..” என்று கூறி டைரி மில்கை பெற்றுக் கொள்ள இருவரையும் மாறிமாறி பார்த்த தென்றல்,
“நல்ல பிரிண்ட்ஷிப்..” என்று சொல்லி அவள் காலிங்பெலில் அடிக்க, “இந்த சத்தம் அனுவிற்கே கேட்காது தென்றல்..” என்று இருவரும் சொல்ல, தென்றலும் தனது வழக்கமான குறும்புடன், காலிங்பெல்லை நிறுத்தாமல் அடித்து விளையாட கதவைத் திறந்த அனு,
“வாங்க என்னோட செல்ல பிசாசுகளா..?! காலையில் நீங்க கழுத்தறுக்க எந்த இளிச்சவாயனும் கிடைக்கவில்லையா..?!” என்று கேட்டுக்கொண்டே, அவர்கள் வீட்டின் உள்ளே வர வழிவிட்டு நின்றாள் அனு..
அவள் சொன்னதைக்கேட்டு சிரித்த தென்றல், “இளிச்சவாயன் கிடைக்கல அனு.. ஆனால் ஒரு நல்ல கடுவன் பூனை மட்டும் கிடைத்தது..” என்று அவள் கன்னத்தை தேய்த்தவண்ணம் கூறினாள்..
அவர்கள் மூவரும் வீட்டிற்கு வந்ததும் கதவை தாழிட்டவள், “யார் நிறுத்தாமல் காலிங்பெல்லை அடித்தது..?” என்று கேட்டதும்,
“நாங்க வந்தும் சும்மா அதிரனும் இல்ல.. அதுதான் காலிங்பெலை கத்தவிட்டோம் அனு...” என்ற நிவாஸ் தலையில் கொட்டியவள், “அது என்னோட வீட்டு காலிங்பெல் மகனே..” என்று சொல்ல,
“அப்படியா! அப்போ அதை காயலான்கடையில் எடைக்கு போட்டு எனக்கு சாக்லேட் வாங்கிதா..” என்று கூறினான் நிவாஸ்.. அவன் சொன்னதைக் கேட்டு பிரதாப், தென்றல் இருவரும் விழுந்து விழுந்து சிரித்தனர்..
“டேய் எலிக்குட்டி சைஸில் இருந்துட்டு என்ன பேச்சு பேசுகிறாய்.. சுண்டெலி போடா போய் உட்காரு..” என்று அனு கோபத்தில் சொல்ல, தென்றல் சோபாவில் அமர அவளின் அருகில் அமர்ந்த நிவாஸ்,
“என்ன தென்றல் உன்னோட தோழி என்னை மரியாதை இல்லாமல் பேசிகிறாள்.. இதை நீ கேட்க மாட்டாயா..?!” என்று கேட்டதும் தென்றலுக்கு எங்கிருந்து வந்ததோ கோபம்,
“உனக்கு இப்பொழுது மரியாதை ரொம்ப முக்கியமா..?!” என்று கேட்டதும், பிரதாப் அவளைப் புரியாமல் பார்வை பார்க்க, அவனின் கண்முன்னே வந்து நின்றான் மனோ..
அவனை நினைத்த பிரதாப், ‘தென்றல் நிஜத்திலேயே கோபத்தில் இருக்கிறாளோ..?!’ என்று சோபாவில் அமர்ந்த வண்ணம் அவளையே பார்த்தான்..
அவளோ, “டேய் ஒழுங்க எனக்கு சாக்லேட்டில் பங்குகொடு..” என்று அவனிடம் சண்டைக் கட்டிக் கொண்டிருக்க இருவரையும் பார்த்து சிரித்த வண்ணம் சமையல் அறைக்குள் நுழைந்தாள் அனு..
“என்னடி வரும் வழியில் கடுவன்பூனையைப் பார்த்தேன் என்று சொன்ன.. யார் அந்த கடுவன்பூனை..?!” என்று அனு சிரிப்புடன் கேட்டது தென்றலின் காதுகளுக்கு கேட்கவே இல்லை.. அவளோ அந்த ஒற்றை டைரி மில்கிற்கு நிவாஸ் கூட சரிக்கு சரி சண்டை கட்டிக் கொண்டிருந்தாள்..
அவளைப் பார்த்த அனு, “அடியே நான் கேட்டது காதில் விழுந்ததா..?!” என்று கத்தவும், தென்றல் புரியாமல் பேய்முழி முழிக்க அவளைப் பார்த்து நிவாஸ், பிரதாப் இருவரும் விழுந்து விழுந்து சிரித்தனர்..
அவள் முழிப்பது பார்த்து அனுவிற்கு கூட சிரிப்பு வர, “அந்த கடுவன்பூனை யார் என்று கேட்டேன் தென்றல்...” என்று அவள் சிரித்த வண்ணம் கேட்டதும், “யாருக்கு தெரியும்..” என்று கூறியவளைப் புரியாமல் பார்ப்பது இப்பொழுது அனுவின் முறையானது..
அதற்குள் பிரதாப் தென்றலிடம், “ஆமா நாம் இருவரும் டைப்ரைடிங் கிளாஸ்க்கு தானே வந்தோம்.. இப்பொழுது இங்கே எதுக்கு அழைத்து வந்தாய் தென்றல்..?!” என்று தனது சந்தேகத்தைக் கேட்டான்..
அவனுக்கு தென்றல் பதில் சொல்லும் முன்னரே மீண்டும், “யார் அந்த கடுவன்பூனை..?!” என்று கேட்டாள் அனு..
அவள் கேட்டதும் சிரித்த தென்றல், “அது ஒரு பெரிய கதை அனு நான் அப்புறமாக உன்னிடம் சொல்கிறேன்..” என்று சொல்ல, ‘அவள் ஏதோவொரு திருவிளையாடலை நடத்திவிட்டுதான் இங்கே வந்திருக்கிறாள்..’ என்பதை உணர்ந்துக் கொண்டாள் அனுபமா..
அவளும் சின்ன வயதில் இருந்தே தென்றலைப் பார்க்கிறாள்.. அவளுக்கு தென்றலின் ஒவ்வொரு செயலுக்கு பின்னால் இருக்கும் அர்த்தம் அவளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை..
“சரிடி என்ன காலையிலேயே வந்திருக்கிறாய்..?!” என்று கேட்டதும், இவர்களை மாறிமாறிப் பார்த்த நிவாஸ், “இவள் நேற்றே வேலையை ரிஷைன் பண்ணிருப்ப அனு..” என்று விளையாட்டாக சொல்ல, அவன் சொன்னதும், “உண்மையாகவா..?!” என்று கேட்டாள் அனு..
பிரதாப் அவளை சந்தேகமாகப் பார்க்க, “என்னோட செல்லம் சூப்பர் கண்டுபிடிப்பு..” என்று சொல்ல அவன் சொன்னது உண்மை என்றது காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ள சமையல் அறையில் வேலைகளை முடித்துவிட்டு வெளியே வந்த அனு,
“ஏண்டி ஒரு இடத்தில் ஒழுங்காக வேலை செய்யவே மாட்டாயா..?! ஒருவருசத்தில் கோயம்புத்தூரில் இருக்கும் அனைத்துக் கம்பெனியிலும் வேலை செய்துவிட்டாய்.. உன்னோட மனதில் என்ன தான் நினைத்துக் கொண்டிருக்கிறாய்..” என்று திட்ட ஆரமிக்க அவளோ அனு திட்டுவதை காதிலேயே வாங்காமல் அமர்ந்திருக்க பிரதாப் அவளை முறைத்தான்..
அவனின் முறைப்பைப் பார்த்த தென்றல், “என்னடா பார்வை எல்லாம் ஒரு மாதிரி இருக்கிறது..?!” என்று கேட்டதும், “ஆமா இது எல்லாம் தெளிவாக பேசு.. அங்கே என்ன ஆட்டம் கட்டிட்டு வந்த..?!” என்று கேட்டான் பிரதாப்..
“அவளை பேசாமல் வேலை பார்க்க சொல்லி மேனேஜர் சொல்லிருப்பான்.. இவள் அதை கண்டுக்காமல் பேசிட்டு இருந்திருப்பாள்.. அதுதான் சீட்டை கிழித்து தாட்டிவிட்டான்..” என்று நிவாஸ் கூலாக சொல்ல, ‘எப்படிடா..?’ என்ற பார்வை பார்த்த தென்றலை பார்த்து,
“உன் மூஞ்சி.. பிசாசே உன்னை நம்பி வேலை வாங்கிக் கொடுத்தால் அங்கே எங்க அப்பாவின் பெயரைக் கெடுத்துவிட்டாய் என்று என்னோட அப்பா என்னிடம் நேற்றே சொல்லிவிட்டார்..” என்றான் நிவாஸ்.. அவன் சொன்னதும் அவனைப் பார்த்து சிரித்த தென்றலைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்டான் நிவாஸ்..
அவனைப் பார்த்த அனு, “இவளுக்கு ரெகமண்ட் பண்ணும் பொழுதே நான் உன்னிடம் சொன்னேன் இல்ல.. அப்பொழுது நீ என்னோட பேச்சைக் கேட்ட.. இல்லல்ல.. இப்பொழுது நல்லாவே அனுபவி..” என்று கோபத்துடன் கூறினாள்..
“பாருடி உன்னால என்னோட மானமே போகிறது.. உனக்கு சப்போர்ட் பண்ணியதற்கு எனக்கு இதுவும் தேவை.. இன்னமும் தேவை..” என்று அவன் தலையில் அடித்துக் கொள்ள, “டேய் என்னடா வாய் நீளுது.. உன்னோட வயது தெரியும் இல்ல..” என்று கேட்டதும்,
“ஐ எம் டென் இயர்ஸ் ஓல்டு..” என்று நிவாஸ் சொல்ல, “இப்பொழுது அது ரொம்ப முக்கியம்..” என்று தென்றல் சொல்ல, பிரதாப் மற்றும் அனு இருவரும் தென்றலை முறைத்தனர்..
அவர்கள் முறைக்க நிவாஸோ, “ம்ம் இப்பொழுது எதற்கு வந்தாய் அதை முதலில் சொல்லு..” என்று அதிகாரமாக சொல்ல, “அனு உன்னோட கன்ஸ்ட்ரக்ஷனில் பி.ஏ. வேலைக்கு ஆள் எடுக்கிறாங்க என்று சொன்னாய் இல்ல அதுக்கு நான் அப்லே பண்ணலாம் என்று இருக்கிறேன்..” என்று சொல்ல,
“ஆட்டை கடித்து, மாட்டை கடித்து கடைசியில் அனுவின் தலையிலும் கை வைத்துவிட்டாயா..?!” என்று கோபத்தோடு கேட்டான் பிரதாப்..
அதற்கும் அவள் சிரிக்க, “அவளாவது ஒரு இடத்தில் வேலைப் பார்க்கிறாள் என்று நாங்கள் இருவரும் சந்தோசமாக இருந்தோம்.. இனி அவளும் ஒவ்வொரு கம்பெனியை ஏறி இறங்க போகிறாள்..” என்று பிரதாப் வருத்ததோடு சொல்ல மற்ற மூவரும் அமைதியாக இருந்தனர்..
தென்றல் அவளின் தவறை உணர்ந்து அமைதியாக இருக்க சுவற்றில் சாய்ந்தவண்ணம் தென்றலையே பார்த்துக் கொண்டிருந்தாள் அனு.. பிரதாப் அமைதியாக இருக்க, நிவாஸ் தென்றலின் முகத்தைப் பார்க்க அவள் முகத்தைப் பாவமாக வைத்திருப்பதைப் பார்த்து அந்த சின்னகுட்டி நன்றாகவே ஏமாந்துவிட்டது.. அந்த அமைதியை முதலில் கலைத்தான் நிவாஸ்..
“அனு ப்ளீஸ் அனு.. தென்றலைப் பார்த்தாலும் பாவமாக இருக்கிறது.. அதனால் இந்த ஒருமுறை அவளுக்காக ஹெல்ப் பண்ணலாம்..” என்று சொல்ல, அனுவும் யோசித்த வண்ணம்..
“இவளை அங்கே வேலைக்கு அழைத்து செல்வதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல நிவாஸ்.. ஆனால் அவள் அங்கே வந்தும் அவளின் வாலுத்தனை காட்டினால் நான் மனுசியாகவே இருக்க மாட்டேன்..” என்று கூறினாள்..
தென்றல் அவளை நிமிர்ந்து பார்த்துக்கொண்டே, ‘இப்பொழுது மட்டும் நீ மனித பிறவி போலவா இருக்கிறாய்..?’ என்று மனதில் நினைத்த வண்ணம் அவளைப் பார்க்க அவளுக்கு சிரிப்பு வர சிரித்தால் காரியமே கெட்டுவிடும் என்பதால் அமைதியான பொண்ணாக அமர்ந்திருந்தாள்..
இவளின் மனநிலை அறியாத மற்ற மூவரும், “சரிடா நீ சொல்வது போல இவளை நான் என்னோட கன்ஸ்ட்ரக்ஷனுக்கு அழைத்து செல்கிறேன் என்றே வை.. இவள் அந்த சிடுமூஞ்சியிடம் சிரிக்காமல் வேலை செய்வாளா..?!” என்று கேட்டாள் அனு..
அதற்கு அவளைப் பார்த்த பிரதாப், “அவன் சிடுமூஞ்சியா..? அப்போ பத்துநாள் தான் அந்த வேலைக்கு ஆய்சு..” என்று அவன் நம்பிக்கை இல்லாமல் சொல்ல, “இவளை அங்கே வேலையில் சேர்க்க வேண்டியது உன்னோட பொறுப்பு அனு.. மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்..” என்று தைரியமாகக் கூறியவன்,
“தென்றல் நீ போய் பாண்டு பேப்பர் வாங்கிட்டு வா..” என்று அவன் சொல்ல தென்றல் மட்டும் அல்ல பிரதாப் மற்றும் அனுவும் நிவாஸைப் புரியாமல் பார்க்க, “அது எதுக்குடா..?!” என்று புரியாமல் கேட்டாள் தென்றல்..
“நீ முதலில் அதை வாங்கிட்டு வா..” என்று சொல்ல தென்றல் எதுவும் பேசாமல் எழுந்து சென்றாள்.. அவளின் மனம், ‘இந்த சுண்டெலி எல்லாம் என்னை வேலை சொல்கிறது.. எல்லாம் என்னோட நேரம்..’ என்று மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டே ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு சென்றாள்..
அவன் சொன்ன பாண்டு பேப்பர் வாங்கிட்டு வந்த தென்றலைப் பார்த்து மூவரும் மனதிற்குள் சிரித்துக் கொண்டிருந்தனர்.. அவளே வம்படியாக வந்து மாட்டும் பொழுது அவர்களும் என்ன தான் செய்வார்கள்.. சரி அடுத்து என்ன நடக்கிறது என்று கொஞ்சம் கவனிங்க..
அனுபமா வீட்டின் முன்னாடி நின்ற தென்றல், பிரதாப் இருவரையும் பார்த்த நிவாஸ், “அம்மா அனு வீட்டிற்கு தென்றல் வந்திருக்கிறாள்.. நான் அங்கே இருக்கிறேன் என்னை தேடாதீங்க..” என்று கூறிவிட்டு தென்றல் அருகில் சென்ற நிவாஸ்,
“ஹாய் தென்றல் என்ன இன்னைக்கு சீக்கிரம் வந்துவிட்டாய்..” சிரித்துக் கொண்டே கேட்ட நிவாஸைப் பார்த்த தென்றல், “ஹோ மைனர் இன்னைக்கு காலேஜ்[ஸ்கூல்] போகலையோ..?!” என்று கேட்டதும்,
“நீ இன்னைக்கு வருவாய் என்று அனு என்னிடம் நேற்றே சொன்னதால் இன்னைக்கு காலேஜிற்கு கட் அடித்துவிட்டேன்..” என்று சந்தோசமாகக் கூறினான்..
“சூப்பர் நிவாஸ் செல்லம்..” என்ற பிரதாப் நிவாஸ் கன்னத்தில் முத்தமிட்டு தன்னிடமிருந்த டைரி மில்கை அவனிடம் கொடுக்க, “தேங்க்ஸ் பிரதாப் அண்ணா..” என்று கூறி டைரி மில்கை பெற்றுக் கொள்ள இருவரையும் மாறிமாறி பார்த்த தென்றல்,
“நல்ல பிரிண்ட்ஷிப்..” என்று சொல்லி அவள் காலிங்பெலில் அடிக்க, “இந்த சத்தம் அனுவிற்கே கேட்காது தென்றல்..” என்று இருவரும் சொல்ல, தென்றலும் தனது வழக்கமான குறும்புடன், காலிங்பெல்லை நிறுத்தாமல் அடித்து விளையாட கதவைத் திறந்த அனு,
“வாங்க என்னோட செல்ல பிசாசுகளா..?! காலையில் நீங்க கழுத்தறுக்க எந்த இளிச்சவாயனும் கிடைக்கவில்லையா..?!” என்று கேட்டுக்கொண்டே, அவர்கள் வீட்டின் உள்ளே வர வழிவிட்டு நின்றாள் அனு..
அவள் சொன்னதைக்கேட்டு சிரித்த தென்றல், “இளிச்சவாயன் கிடைக்கல அனு.. ஆனால் ஒரு நல்ல கடுவன் பூனை மட்டும் கிடைத்தது..” என்று அவள் கன்னத்தை தேய்த்தவண்ணம் கூறினாள்..
அவர்கள் மூவரும் வீட்டிற்கு வந்ததும் கதவை தாழிட்டவள், “யார் நிறுத்தாமல் காலிங்பெல்லை அடித்தது..?” என்று கேட்டதும்,
“நாங்க வந்தும் சும்மா அதிரனும் இல்ல.. அதுதான் காலிங்பெலை கத்தவிட்டோம் அனு...” என்ற நிவாஸ் தலையில் கொட்டியவள், “அது என்னோட வீட்டு காலிங்பெல் மகனே..” என்று சொல்ல,
“அப்படியா! அப்போ அதை காயலான்கடையில் எடைக்கு போட்டு எனக்கு சாக்லேட் வாங்கிதா..” என்று கூறினான் நிவாஸ்.. அவன் சொன்னதைக் கேட்டு பிரதாப், தென்றல் இருவரும் விழுந்து விழுந்து சிரித்தனர்..
“டேய் எலிக்குட்டி சைஸில் இருந்துட்டு என்ன பேச்சு பேசுகிறாய்.. சுண்டெலி போடா போய் உட்காரு..” என்று அனு கோபத்தில் சொல்ல, தென்றல் சோபாவில் அமர அவளின் அருகில் அமர்ந்த நிவாஸ்,
“என்ன தென்றல் உன்னோட தோழி என்னை மரியாதை இல்லாமல் பேசிகிறாள்.. இதை நீ கேட்க மாட்டாயா..?!” என்று கேட்டதும் தென்றலுக்கு எங்கிருந்து வந்ததோ கோபம்,
“உனக்கு இப்பொழுது மரியாதை ரொம்ப முக்கியமா..?!” என்று கேட்டதும், பிரதாப் அவளைப் புரியாமல் பார்வை பார்க்க, அவனின் கண்முன்னே வந்து நின்றான் மனோ..
அவனை நினைத்த பிரதாப், ‘தென்றல் நிஜத்திலேயே கோபத்தில் இருக்கிறாளோ..?!’ என்று சோபாவில் அமர்ந்த வண்ணம் அவளையே பார்த்தான்..
அவளோ, “டேய் ஒழுங்க எனக்கு சாக்லேட்டில் பங்குகொடு..” என்று அவனிடம் சண்டைக் கட்டிக் கொண்டிருக்க இருவரையும் பார்த்து சிரித்த வண்ணம் சமையல் அறைக்குள் நுழைந்தாள் அனு..
“என்னடி வரும் வழியில் கடுவன்பூனையைப் பார்த்தேன் என்று சொன்ன.. யார் அந்த கடுவன்பூனை..?!” என்று அனு சிரிப்புடன் கேட்டது தென்றலின் காதுகளுக்கு கேட்கவே இல்லை.. அவளோ அந்த ஒற்றை டைரி மில்கிற்கு நிவாஸ் கூட சரிக்கு சரி சண்டை கட்டிக் கொண்டிருந்தாள்..
அவளைப் பார்த்த அனு, “அடியே நான் கேட்டது காதில் விழுந்ததா..?!” என்று கத்தவும், தென்றல் புரியாமல் பேய்முழி முழிக்க அவளைப் பார்த்து நிவாஸ், பிரதாப் இருவரும் விழுந்து விழுந்து சிரித்தனர்..
அவள் முழிப்பது பார்த்து அனுவிற்கு கூட சிரிப்பு வர, “அந்த கடுவன்பூனை யார் என்று கேட்டேன் தென்றல்...” என்று அவள் சிரித்த வண்ணம் கேட்டதும், “யாருக்கு தெரியும்..” என்று கூறியவளைப் புரியாமல் பார்ப்பது இப்பொழுது அனுவின் முறையானது..
அதற்குள் பிரதாப் தென்றலிடம், “ஆமா நாம் இருவரும் டைப்ரைடிங் கிளாஸ்க்கு தானே வந்தோம்.. இப்பொழுது இங்கே எதுக்கு அழைத்து வந்தாய் தென்றல்..?!” என்று தனது சந்தேகத்தைக் கேட்டான்..
அவனுக்கு தென்றல் பதில் சொல்லும் முன்னரே மீண்டும், “யார் அந்த கடுவன்பூனை..?!” என்று கேட்டாள் அனு..
அவள் கேட்டதும் சிரித்த தென்றல், “அது ஒரு பெரிய கதை அனு நான் அப்புறமாக உன்னிடம் சொல்கிறேன்..” என்று சொல்ல, ‘அவள் ஏதோவொரு திருவிளையாடலை நடத்திவிட்டுதான் இங்கே வந்திருக்கிறாள்..’ என்பதை உணர்ந்துக் கொண்டாள் அனுபமா..
அவளும் சின்ன வயதில் இருந்தே தென்றலைப் பார்க்கிறாள்.. அவளுக்கு தென்றலின் ஒவ்வொரு செயலுக்கு பின்னால் இருக்கும் அர்த்தம் அவளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை..
“சரிடி என்ன காலையிலேயே வந்திருக்கிறாய்..?!” என்று கேட்டதும், இவர்களை மாறிமாறிப் பார்த்த நிவாஸ், “இவள் நேற்றே வேலையை ரிஷைன் பண்ணிருப்ப அனு..” என்று விளையாட்டாக சொல்ல, அவன் சொன்னதும், “உண்மையாகவா..?!” என்று கேட்டாள் அனு..
பிரதாப் அவளை சந்தேகமாகப் பார்க்க, “என்னோட செல்லம் சூப்பர் கண்டுபிடிப்பு..” என்று சொல்ல அவன் சொன்னது உண்மை என்றது காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ள சமையல் அறையில் வேலைகளை முடித்துவிட்டு வெளியே வந்த அனு,
“ஏண்டி ஒரு இடத்தில் ஒழுங்காக வேலை செய்யவே மாட்டாயா..?! ஒருவருசத்தில் கோயம்புத்தூரில் இருக்கும் அனைத்துக் கம்பெனியிலும் வேலை செய்துவிட்டாய்.. உன்னோட மனதில் என்ன தான் நினைத்துக் கொண்டிருக்கிறாய்..” என்று திட்ட ஆரமிக்க அவளோ அனு திட்டுவதை காதிலேயே வாங்காமல் அமர்ந்திருக்க பிரதாப் அவளை முறைத்தான்..
அவனின் முறைப்பைப் பார்த்த தென்றல், “என்னடா பார்வை எல்லாம் ஒரு மாதிரி இருக்கிறது..?!” என்று கேட்டதும், “ஆமா இது எல்லாம் தெளிவாக பேசு.. அங்கே என்ன ஆட்டம் கட்டிட்டு வந்த..?!” என்று கேட்டான் பிரதாப்..
“அவளை பேசாமல் வேலை பார்க்க சொல்லி மேனேஜர் சொல்லிருப்பான்.. இவள் அதை கண்டுக்காமல் பேசிட்டு இருந்திருப்பாள்.. அதுதான் சீட்டை கிழித்து தாட்டிவிட்டான்..” என்று நிவாஸ் கூலாக சொல்ல, ‘எப்படிடா..?’ என்ற பார்வை பார்த்த தென்றலை பார்த்து,
“உன் மூஞ்சி.. பிசாசே உன்னை நம்பி வேலை வாங்கிக் கொடுத்தால் அங்கே எங்க அப்பாவின் பெயரைக் கெடுத்துவிட்டாய் என்று என்னோட அப்பா என்னிடம் நேற்றே சொல்லிவிட்டார்..” என்றான் நிவாஸ்.. அவன் சொன்னதும் அவனைப் பார்த்து சிரித்த தென்றலைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்டான் நிவாஸ்..
அவனைப் பார்த்த அனு, “இவளுக்கு ரெகமண்ட் பண்ணும் பொழுதே நான் உன்னிடம் சொன்னேன் இல்ல.. அப்பொழுது நீ என்னோட பேச்சைக் கேட்ட.. இல்லல்ல.. இப்பொழுது நல்லாவே அனுபவி..” என்று கோபத்துடன் கூறினாள்..
“பாருடி உன்னால என்னோட மானமே போகிறது.. உனக்கு சப்போர்ட் பண்ணியதற்கு எனக்கு இதுவும் தேவை.. இன்னமும் தேவை..” என்று அவன் தலையில் அடித்துக் கொள்ள, “டேய் என்னடா வாய் நீளுது.. உன்னோட வயது தெரியும் இல்ல..” என்று கேட்டதும்,
“ஐ எம் டென் இயர்ஸ் ஓல்டு..” என்று நிவாஸ் சொல்ல, “இப்பொழுது அது ரொம்ப முக்கியம்..” என்று தென்றல் சொல்ல, பிரதாப் மற்றும் அனு இருவரும் தென்றலை முறைத்தனர்..
அவர்கள் முறைக்க நிவாஸோ, “ம்ம் இப்பொழுது எதற்கு வந்தாய் அதை முதலில் சொல்லு..” என்று அதிகாரமாக சொல்ல, “அனு உன்னோட கன்ஸ்ட்ரக்ஷனில் பி.ஏ. வேலைக்கு ஆள் எடுக்கிறாங்க என்று சொன்னாய் இல்ல அதுக்கு நான் அப்லே பண்ணலாம் என்று இருக்கிறேன்..” என்று சொல்ல,
“ஆட்டை கடித்து, மாட்டை கடித்து கடைசியில் அனுவின் தலையிலும் கை வைத்துவிட்டாயா..?!” என்று கோபத்தோடு கேட்டான் பிரதாப்..
அதற்கும் அவள் சிரிக்க, “அவளாவது ஒரு இடத்தில் வேலைப் பார்க்கிறாள் என்று நாங்கள் இருவரும் சந்தோசமாக இருந்தோம்.. இனி அவளும் ஒவ்வொரு கம்பெனியை ஏறி இறங்க போகிறாள்..” என்று பிரதாப் வருத்ததோடு சொல்ல மற்ற மூவரும் அமைதியாக இருந்தனர்..
தென்றல் அவளின் தவறை உணர்ந்து அமைதியாக இருக்க சுவற்றில் சாய்ந்தவண்ணம் தென்றலையே பார்த்துக் கொண்டிருந்தாள் அனு.. பிரதாப் அமைதியாக இருக்க, நிவாஸ் தென்றலின் முகத்தைப் பார்க்க அவள் முகத்தைப் பாவமாக வைத்திருப்பதைப் பார்த்து அந்த சின்னகுட்டி நன்றாகவே ஏமாந்துவிட்டது.. அந்த அமைதியை முதலில் கலைத்தான் நிவாஸ்..
“அனு ப்ளீஸ் அனு.. தென்றலைப் பார்த்தாலும் பாவமாக இருக்கிறது.. அதனால் இந்த ஒருமுறை அவளுக்காக ஹெல்ப் பண்ணலாம்..” என்று சொல்ல, அனுவும் யோசித்த வண்ணம்..
“இவளை அங்கே வேலைக்கு அழைத்து செல்வதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல நிவாஸ்.. ஆனால் அவள் அங்கே வந்தும் அவளின் வாலுத்தனை காட்டினால் நான் மனுசியாகவே இருக்க மாட்டேன்..” என்று கூறினாள்..
தென்றல் அவளை நிமிர்ந்து பார்த்துக்கொண்டே, ‘இப்பொழுது மட்டும் நீ மனித பிறவி போலவா இருக்கிறாய்..?’ என்று மனதில் நினைத்த வண்ணம் அவளைப் பார்க்க அவளுக்கு சிரிப்பு வர சிரித்தால் காரியமே கெட்டுவிடும் என்பதால் அமைதியான பொண்ணாக அமர்ந்திருந்தாள்..
இவளின் மனநிலை அறியாத மற்ற மூவரும், “சரிடா நீ சொல்வது போல இவளை நான் என்னோட கன்ஸ்ட்ரக்ஷனுக்கு அழைத்து செல்கிறேன் என்றே வை.. இவள் அந்த சிடுமூஞ்சியிடம் சிரிக்காமல் வேலை செய்வாளா..?!” என்று கேட்டாள் அனு..
அதற்கு அவளைப் பார்த்த பிரதாப், “அவன் சிடுமூஞ்சியா..? அப்போ பத்துநாள் தான் அந்த வேலைக்கு ஆய்சு..” என்று அவன் நம்பிக்கை இல்லாமல் சொல்ல, “இவளை அங்கே வேலையில் சேர்க்க வேண்டியது உன்னோட பொறுப்பு அனு.. மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்..” என்று தைரியமாகக் கூறியவன்,
“தென்றல் நீ போய் பாண்டு பேப்பர் வாங்கிட்டு வா..” என்று அவன் சொல்ல தென்றல் மட்டும் அல்ல பிரதாப் மற்றும் அனுவும் நிவாஸைப் புரியாமல் பார்க்க, “அது எதுக்குடா..?!” என்று புரியாமல் கேட்டாள் தென்றல்..
“நீ முதலில் அதை வாங்கிட்டு வா..” என்று சொல்ல தென்றல் எதுவும் பேசாமல் எழுந்து சென்றாள்.. அவளின் மனம், ‘இந்த சுண்டெலி எல்லாம் என்னை வேலை சொல்கிறது.. எல்லாம் என்னோட நேரம்..’ என்று மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டே ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு சென்றாள்..
அவன் சொன்ன பாண்டு பேப்பர் வாங்கிட்டு வந்த தென்றலைப் பார்த்து மூவரும் மனதிற்குள் சிரித்துக் கொண்டிருந்தனர்.. அவளே வம்படியாக வந்து மாட்டும் பொழுது அவர்களும் என்ன தான் செய்வார்கள்.. சரி அடுத்து என்ன நடக்கிறது என்று கொஞ்சம் கவனிங்க..
Last edited: