• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Enathu Punnagaiyin Mugavari - 34

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

N.Palaniappan

மண்டலாதிபதி
Joined
May 22, 2018
Messages
164
Reaction score
277
Location
Coimbatore
அதை கார் கடந்து செல்ல அந்த மலைகளின் மீது மிதந்து சென்ற மேகங்களைப் பார்த்த தென்றல் அந்த இடத்தில் உள்ள எழில் அழகுகளை ரசித்தவள் அந்த வீட்டை கண்டதும், “பாவா இந்த வீட்டில் ஒரு குட்டிப்பையன் மட்டும் இருந்தனே அவன் இப்போ எங்கே இருப்பான்..” என்று குறும்புடன் வேகமாகக் கேட்டாள்..

அவளின் அந்த கேள்வியில் அவளை நிமிர்ந்துப் பார்த்த மனோ, “அவனை எதற்கு தென்றல் கேட்கற..?” என்று கேட்டதும், “பாவம் பாவா அவன்.. அவனுக்கு அப்பா, அம்மா இருவரும் இல்ல.. அவனை இங்கே இருக்கும் ஒரு பெரிய மரத்துக்கு பக்கத்தில் தான் பார்த்தேன்..” என்று குறும்புடன் கூறியவள் கார் நின்றதும் காரைவிட்டு வேகமாக இறங்கியவள் அந்த இடத்தை தேடிசென்றாள்..

அவள் முன்னே செல்வதைப் பார்த்த மனோ, “ஏய் தென்றல் அவனை நீ மீண்டும் பார்க்க முடியுமா..?” என்று கேட்துக்கொண்டே காரைவிட்டு இறங்கினான் மனோ..

அவனின் கேள்வியில் நின்று அவனை திரும்பிப் பார்த்த தென்றல், “ஏன் முடியாது அவன் இங்கேதான் இருப்பான்.. என்னால் அவனைப் பார்க்க முடியும் பாவா..” என்று கூறிய தென்றலை பின்தொடர்ந்து அந்த இடத்துக்கு இருவரும் சென்றனர்.. அந்த வீட்டின் பின்னோடு செல்லும் சின்ன பாதையில் வேகமாக சென்ற தென்றலை புன்னகையோடு பின்தொடர்ந்தான் மனோ..

அவள் அந்த இடத்தை அடைய அந்த இடத்தில் இருந்த ஒரு சின்ன பாறையைப் பார்த்த தென்றல் பின்னோடு வந்த மனோவைப் பார்த்து, “இதுதான் அவன் நின்ற இடம் பாவா..” என்று கூறியவள் கண்களில் மகிழ்ச்சி போங்க மனோவின் கையைப்பிடித்து இழுத்து அந்த இடத்தில் நிறுத்தினாள்..

அந்த மரத்தின் மீது சாய்ந்து நின்ற மனோவின் மார்போடு சாய்ந்த தென்றல், “டேய் பிராடு இங்கே அழைத்துவர உனக்கு இத்தனை நாள் ஆச்சா..?” என்று சிரிப்புடன் கேட்டதும், “எனக்கு உன்னை தெரியாதுடி.. தெரிஞ்ச இத்தனை நாள் உன்னை நான் காயப்படுத்தி இருப்பேனா..?” என்று புன்னகை முகத்துடன் கேட்டான் மனோ.. அவளின் மனதிற்குள் புதைந்த காதல் மெல்ல மெல்ல மலர்ந்தது அவளின் இதயத்தின் அடி ஆழத்தில்..

“டேய் என்னை கண்டுபிடிக்க உனக்கு இத்தனை நாள் ஆச்சு இல்ல.. வருஷ வருஷம் எனது புன்னகையின் முகவரி என்று உனக்கு டைரி அனுப்பும் என்னை கண்டுபிடிக்க உனக்கு இத்தனை ஆனது..?” என்று கேட்டவளுக்கு, “நான்தான் இளந்தென்றல் என்று எப்படிடா கண்டுபிடிச்சே..” என்று கேட்டாள்..

அவளின் மலர்ந்த முகத்தைப் பார்த்த மனோ, “நீ சொன்ன ஒரு வார்த்தை தாண்டி உன்னை எனக்கு அடையாளம் காட்டுச்சு ஆனால் ஒரு சந்தேகம் இருந்துட்டே இருந்தது....” என்று சொல்ல, “என்ன வார்த்தை..?” என்று ஆவலுடன் கேட்டாள் தென்றல்

அவளின் கன்னத்தில் தனது விரலால் கோலமிட்ட மனோ, “தென்றலுக்கு உறைவிடம் இல்லை என்று தானே சொன்னாங்க.. அமையாது என்று யாரும் சொல்லலையே..” என்று அவள் போலவே சொல்லிக்காட்டிய மனோ,

“எனக்கு நீதான் தென்றலா என்ற சந்தேகம் இருந்தது.. அதுதான் உன்னிடம் அடிகடி சொல்வேன் இல்ல காதலை உன்னை போல மறைத்துவைக்க முடியாது என்று சொன்னேன்.. அடுத்து உன்னிடம் நிறைய பேசணும் தென்றல் என்று சொன்னதும் இதைதான்.. அடுத்து நீ எனக்கு முத்தம் கொடுத்தப்ப நீயும் என்னைப் போல தனிமையை உணர்ந்திருக்க என்று சொன்னதும் உன்னை கண்டுபிடிக்க சொன்னதுதான்..” என்று கூறினான்..

“பாவா அது நான் முதல்நாள் வேலைக்கு சேர்ந்த பொழுது பேசியது..” என்று கூறியபடியே அவனின் முகத்தைப் பார்த்த, “வேண்டும் என்றே சிரிக்காமல் இருந்ததும் என்னை திருமணம் செய்யத்தான் இல்ல..?” என்று கேட்டவள், “எனக்கு உன்னோட பெயர் தெரியாது பாவா.. உன்னோட புன்னகை இல்லாத முகம் என்னை பாதுச்சிது.. அதுதான் எனக்குள் காதல் வர வச்சது..” என்று கூறியவள்,

“நான்தான் சொன்னேனே நான் ஏதாவது சொல்லி நீ கிளம்பிப் போய்ட்ட நான் எப்படி உன்னை கண்டுபிடிக்க..?” என்று கேட்டான்.. அவனின் குரலில் அவ்வளவு சந்தோசம்.. தென்றலுக்கு மனதில் இருந்த கேள்விக்கு விடை கிடைத்தது..

அவனின் முகத்தை நிமிர்ந்துப் பார்த்த தென்றல், “பாவா அப்போ நீ தானே ஊட்டியில் அந்த ஓடை அருகில் தனிமையில் அமர்ந்திருந்தது.. அப்போதானே நீ என்னை மறுபடியும் பார்த்தாய் அப்பொழுது நான் சொன்ன தீர்வு தான் நீ இதுவரை கடைபிடிக்கிறாயா..?!” என்று கேட்டதும் அவன் அமைதியாக அவளைப் பார்த்து புன்னகைக்க, “அந்த சந்திப்பில் நீ யார் என்றே எனக்கு தெரியாது பாவா..” என்று உண்மையைக் கூறியவள் தொடர்ந்தாள்..

“ரவிச்சந்திரன் அங்கிள் உன்னோட அப்பா.. ஆனால் அவருக்கு பிறந்த மகன் சூர்யா இல்ல.. சூர்யாவோட அப்பா கேசவன்.. நான் சொல்வது சரிதானே..?! அதனால் தான் உனக்கு அப்பா மேல கோபம் இல்ல..” என்று கேட்டாள்..

அவளின் முகத்தைப் பார்த்த மனோ, “எப்படி புயல் இப்படி எல்லாம் கலக்கற..?! ஆர் – ரவிசந்திரன். கே – கேசவன் கன்ஸ்ட்ரக்ஷன் எம்.டி. சூர்யா. கோமதியம்மா ஒரு விடோ. அவங்களைத்தான் என்னோட அப்பா மறுமணம் செஞ்சாரு.. கேசவன் – கோமதி தம்பதிக்கு பிறந்து ரவிச்சந்திரன் – கோமதி தம்பதியினருக்கு மகனாக வளர்ந்தவன்.. அவனுக்கும் எனக்கும் மூன்று வருஷம் வித்தியாசம் போதுமா..?” என்று கேட்டவன் அவளை இழுத்து மார்போடு அணைத்துக் கொண்டான்..

அவளும் அவனின் அணைப்பில் மயங்கி நிற்க, “உனக்கு எப்போ உண்மை தெரியும் தென்றல்..” என்று கேட்டதும், “உன்னைப் பற்றி எனக்கு தெரியாது பாவா.. ஆனால் அன்னைக்கு உன்னோட அப்பா, அம்மா பற்றி சொன்ன பொழுது என்னை மறந்து நான் அழுதது உன்னை நான் கண்டுபிடிச்சிடேன் என்ற சந்தோசத்தில் தான்..” என்று கூறிய தென்றல்,

“நான் அனுப்பிய டைரியில் ஒரு பக்கம் கூட எழுதாமல் வச்சிருக்க அது என்னடா பண்ணுச்சு உன்ன..?” என்று கேட்டதும் மனம் விட்டு சிரித்த மனோ, “என்னோட செல்ல புயலே.. அது எல்லாம் ஒரே அட்ரஸ் இருந்து வரல.. ஆனால் உன்னோட ஒவ்வொரு டைரியும் எனக்கு டிசம்பர் 31ம் தேதி கிடைத்துவிடும்..” என்று கூறினான் மனோ..

அவன் கூறியதைக் கேட்டு சிரித்த தென்றல், “அது எல்லாம் ஷீலாம்மா அனுப்புவாங்க.. அவங்க வெளியூர் போகும் போது அவங்களிடம் கொடுத்து உங்க தாத்தா அட்ரஸ்க்கு அனுப்புவேன்.. ஆனால் பாவா உன்னையும், உன்னோட தாத்தாவையும் எனக்கு தெரியாது.. அப்புறம் நீ சொன்னதும் தான் எல்லாம் புரிஞ்சது..” என்று கூறினாள்..

தென்றலின் முகத்தைப் பார்த்து, “ ‘எனது புன்னகையின் முகவரி..’ என்று வரும் டைரியில் நான் என்ன எழுதுவது..? அப்படி எழுத என்னோட வாழ்க்கையில் என்ன நிகழ்வுகள் நடந்தது..? ஆனால் இனிமேல் உன்னோட டைரி முழுக்க எழுதிவிடுவேன்..” என்று கூறிய மனோ,

“இத்தனை நாளும் உண்மை சொல்லாமல் மறச்சு வச்சிருந்த இல்ல..” என்று கேட்டவன் அதற்கு தண்டனை வேண்டாமா..?” என்று கேட்டவன் தென்றலின் இதழை சிறை செய்தான்.. அவனின் முத்தத்தை ஆழ்ந்து அனுபவித்தாள் தென்றல்..
சந்தோசமே
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top