அத்தியாயம் – 41 [பாகம் – 2]
பத்து வருடங்களுக்குப் பிறகு....
மாலைநேரம் சூர்யன் மறைவதற்கு தயாராகிக் கொண்டிருக்க இளநிலா, இளமாறன், கிருஷ்ணா, ஆதித்யா மட்டும் ரோட்டோர சாலையில் ஓரமாக நடந்துக் கொண்டிருக்க தூரத்தில் இருக்கும் பஸ் ஸ்டாப்பில் சுனிலும், நிவாஸும் நிற்பதைப் பார்த்த இளநிலா கிருஷ்ணாவின் பக்கம் திரும்பினாள்..
“டேய் கிருஷ்ணா நான் நேற்று சொன்னப்போ நம்பலை இல்ல அங்கே பாரு சுனில் மாமாவையும் , நிவாஸ் மாமாவையும்” என்று கூறியதும் கிருஷ்ணாவின் பார்வை பஸ் ஸ்டாப்பிற்கு சென்றது.. கிருஷ்ணா சாருவின் மகன்..
அவனைத் தொடர்ந்து பார்த்த இளமாறனும், ஆதித்யாவும், “இதுதான் தினமும் நடக்குது.. இதை இப்படியே விடக்கூடாதே..” என்று சொல்ல, “இருவரையும் மிரட்டுவோமா..?” என்று இளநிலா கேட்டதும், “ஓகே நிலா..” என்று கூறினான் மாறன்..
அவங்க பக்கத்தில் வந்துக்கொண்டிருந்த அவங்க ஸ்கூல் டீச்சர் அவர்களை முறைக்க, “டேய் மாறா இவங்களுக்கு முதலில் ஆப்பு வைக்கணும்.. இந்த மாசம் எக்ஸாம்ல எழுதாமல் பேப்பர் கொடுத்துவிடலாம்.. அப்போதான் நம்ம பிரின்சி குண்டம்மாகிட்ட நல்ல திட்டு வாங்குவாங்க..” என்று நிலா சொல்ல மாறனும் சரியென்று தலையசைத்தான்..
இவர்கள் இதை அடிக்கடி செய்வதுதான்.. இரண்டும் வாலுங்க இல்ல.. அதுதான் வாலுதனத்தை டீச்சரிடமே காட்டுதுங்க.. கிருஷ்ணாவும், ஆதித்யாவும் “அந்த டீச்சர் செப்டர் க்ளோஸ்..” என்று சொல்ல நால்வரும் சிரித்தபடியே பஸ் ஸ்டாப் அருகில் வந்து சேர்ந்தனர்..
ராகினியிடம் சுனிலும், கீதாவிடம் நிவாஸும் வம்பு வளர்த்துக் கொண்டிருக்க அவர்களிடம் வம்பு வளர்க்க வந்தது நாலு வாலுகளும்.. என்ன செய்வது பஞ்ச பாண்டவர்களுக்கு வந்த கால கொடுமை..?! சுனில், நிவாஸ் இருவரும் படிப்பை முடித்துவிட்டு நிவாஸ், மனோவின் நிறுவனத்தில் வேலைப்பார்க்கிறான்.. சுனில் சூர்யாவின் நிறுவனத்தில் வேலைப்பார்க்கிறான்..
அவர்களில் அருகில் வந்த நிலாவும், மாறனும், “அம்மாடி இதுதான் காதலா..” என்று பாட ஆதியும், கிருஷ்ணாவும் கோரஸ் போடராகினியும், கீதாவும் திருதிருவென விழித்தனர்.. அவர்கள் பார்வை கண்ட நிவாஸும், சுனிலும் திரும்பிப்பார்க்க அங்கே நின்று கொண்டிருந்த நால்வரையும் பார்த்தனர்..
“மச்சி இவங்க கண்ணில் பட்டுவிட்டோமே..” என்று நிவாஸ் சொல்ல, “தலை எழுத்தை யாரால் மாற்ற முடியும்..” என்று கூறிய சுனில், “நிலா மேடம் உங்களுக்கு இங்கே என்ன வேலை..?” என்று பணிவாகக் கேட்க, “மாமாவிற்கு இங்கே என்ன வேலை..?” என்று கிடுக்குப்பிடி போட்டான் மாறன்..
அவனை சமாளிக்க வேண்டுமே என்று இருவரும் பேய் முழிமுழித்துவிட்டு, “டேய் மாறா வீட்டில் யாருக்கும் தெரியாதுடா.. போட்டு மட்டும் கொடுத்துவிடாதே..” என்று இருவரும் ஒரே மாதிரி சரண்டர் ஆக, “அது அந்த பயம் இருக்கணும்..” என்று கூறிய நிலா,
“மாமா இப்படி எல்லாம் நின்று பேசினால் நாலு நல்லவங்க கண்ணிலும், நல்லு கொள்ளிக்கட்டை கண்ணிலும் படத்தான் செய்யும்.. சோ இனிமேல் இப்படி நின்னு பேச கூடாது..” என்று நிலா சொல்ல அவர்கள் இருவரும் சரியென தலையசைத்தனர்..
“ஸ்வீட் மாமா..” என்று சொல்லிய நிலா, “எங்களுக்கு நடந்து வர முடியவில்லை.. சோ பைக்கில் ட்ராப் பண்ணுங்க..” என்று சொல்ல, “கீதா, ராகினி இருவரும் பஸில் போங்க..” என்று சொல்ல பெண்கள் இருவரும் சுனிலையும், நிவாசையும் எரிப்பது போல பார்த்தனர்..
அவர்கள் பார்வையைக் கண்ட மாறன், “எங்க மாமா இருவரும் நல்லவங்கதான்.. அவங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்ல.. அவங்களுக்கு இது எல்லாம் ஜுஜிபி மேட்டர்.. பட் உங்க வீட்டில் அப்படியா அத்தை..?” என்று கேட்டவனைப் பார்த்து பயத்துடன் நின்றனர்..
அவனின் அத்தை அழைப்பில் நிம்மதி அடைந்தவர்கள், “வேற யாருக்காவது கட்டிக் கொடுத்துவிடுவாங்க குட்டிப்பையா..” என்று ராகினி சொல்லவும், “அதுக்குதான் நாங்களும் சொல்கிறோம்.. நீங்க பொறுமையாக இருங்க நடக்க வேண்டியதை நாங்க பார்த்துக்கிறோம்..” என்று சொல்ல இருவரும் சரியென தலையசைத்தனர்..
அதன்பிறகு நால்வரையும் கொண்டுவந்து விட்டுச்சென்றனர்.. அன்று மாலையே வீடு திரும்பிய மனோவிடம் எல்லா உண்மையையும் சொன்ன வாலுகள் இரண்டும் தங்கள் வேலை முடித்ததும் தூங்க சென்றனர்..
அவர்கள் தூங்கியதும் மனோவின் அறைக்குள் வந்த தென்றல், “பாவா இந்த பசங்க இந்த வேலையெல்லாம் பண்றாங்க சரியான சமத்து சக்கரைக்கட்டிங்க..” என்று சொல்ல சிரித்த மனோ, “நம்ம பிள்ளைகள் இல்லையா தென்றல்.. அதுதான் இந்த வாலுத்தனம் பண்ணுதுங்க.. பட் எல்லாத்தையும் சரியான திசையில் வழி நடத்த கத்துகிட்டாங்க..” என்று அவன் பெருமையாகக் கூறினான்..
தென்றலும், மனோவும் தங்களின் சேட்டையை கொஞ்சம் குறைத்தாலும் கூட பிள்ளைகள் சந்தோசத்தை மையமாகக் கொண்டு அவர்களின் காதல் சக்கரம் அழகாக சுழன்றது.. இருவரும் பேசி ஒரு முடிவுக்கு வந்தனர்.. அதன்பிறகே இருவரும் தூங்க ஆரம்பித்தனர்..
அந்த மழையை வெடிக்கப் பார்த்தபடி அமர்ந்திருந்த நிலாவின் அருகில் வந்து அமர்ந்த மனோ மகளை ஒரு பார்வை பார்த்துவிட்டு தென்றலைப் பார்க்க அவள் வெளியே கையைக் காட்டிவிட்டு தன்னுடைய வேலையைத் தொடர்ந்தாள்..
மகளின் அருகில் சென்ற மனோ, “மழை நல்ல பெய்து.. என்ன பண்ணலாம்..?!” என்று அவன் யோசிக்க, “மழையில் நனையலாப்பா..” என்று கூறினான் மாறன்.. மனோ தென்றலைப் பார்க்க அவள் சரியென தலையசைக்க பிள்ளைகளுடன் தோட்டத்து சென்றான் மனோ..
காலை விடியும் பொழுதே மழை கொட்டிக் கொண்டிருக்க கொட்டும் மழையில் பிள்ளைகளுடன் தோட்டத்தில் செடி நட்டுக்கொண்டு இருந்தான் மனோ.. அவனைப் பார்த்து சிரித்த நிலாவும், மாறனையும் பார்த்து புன்னகை பூத்தான் மனோ..
“இப்படி மழையில் உட்கார்ந்து செடி நட்டால் அதற்கு சீக்கிரம் வேர் பிடிக்கும்..” என்று மனோ குறும்புடன் சொல்ல அவனின் குறும்பைக் கண்டு சிரித்த நிலாவும், மாறனும் தங்களின் உடையைப் பார்க்க அது முழுவதும் நனைத்திருக்க அவர்களால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை..
நிலாவையும் மாறனையும் பார்த்த மனோ, “நாளைக்கும் இப்படியே மழையில் ஆடினால் நல்ல இருக்கும் இல்ல..?!” என்று கேட்டதும் சிரித்த நிலா, “அப்பா அப்படியே டாக்டரை நம்ம வீட்டில் தங்க வைத்துவிட்டால் செலவு மிச்சம் தானே..?” என்று கேட்டதும், “நிலா அதுக்குதான் நம்ம பிரதாப் மாமா இருக்காரு இல்ல..?!” என்று மாறன் சொல்ல, “டேய் அவனே இப்பொழுதுதான் படிப்பை முடிச்சிருக்கான்..” என்று இருவரையும் அடக்கினான் மனோ..
ம்ம் நீங்கள் நினைப்பது சரிதான் பிரதாப் டாக்டர்க்கு படித்து இப்பொழுது கோவையில் ஒரு பெரிய ஹாஸ்பிடலில் வேலையில் இருக்கிறான்.. அடுத்து ராகுல், ஷிவானி இருவரும் படிப்பை முடித்துவிட்டு கோவையில் பெரிய சாப்ட்வேர் கம்பெனியில் வேலையில் இருக்கின்றனர்..
அவர்கள் மூவரும் மழையில் நனைந்த படியே பேசிக்கொண்டிருப்பதை வாசலில் அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள் தென்றல்.. அப்பொழுது அவளின் அருகில் வந்த ராஜசேகர் தோட்டத்தைப் பார்த்தார்..
மூவரும் மழையில் நனைவதைப் பார்த்த ராஜசேகர், “தென்றல் என்னம்மா இது மூவரும் மழையில் நனைகின்றனர்.. நீ வாசலில் அமர்ந்து வேடிக்கைப் பார்க்கிறாய்..?” என்று அவர் கேட்டதும் வாசலில் அமர்ந்திருந்த தென்றல் ராஜசேகரைப் பார்த்து வாய்விட்டு சிரித்தாள்..
அவள் சிரிப்பதைப் பார்த்த ராஜசேகர், “இன்னும் உன்னோட விளையாட்டு குறையவே இல்லையா..?” என்று கேட்டதும், “தாத்தா சூரியன் உதிக்கும் பொழுதே காலை பொழுதை ரசிக்கணும்.. அப்பொழுது விட்டால் அடுத்தநாள் வரை காத்திருக்கணும்.. இல்ல அது உதிக்கும் பொழுது நம்ம மனநிலை வேறாக இருக்கும்.. சோ எதுவாக இருந்தாலும் அந்த நொடி வாழ்க்கையை ரசிக்க கத்துக்கணும்.. இன்னைக்கு மழை பெய்து நாளைக்கு மழை வருமா தெரியாது.. இன்னைக்கு மழை வருது இல்ல..” என்று கூறியவள் அவரின் முகத்தைப் பார்த்துவிட்டு தொடர்ந்தாள்..
“நிலாவும், மாறனும் அவங்களுக்கு விருப்பமானதை அப்பொழுதே செய்ய நான் முழு சுதந்திரம் கொடுத்திருக்கிறேன்.. அவங்க தவறு செய்யும் பொழுது அவங்களை கண்டிக்க பாவாவும், நானும் இருக்கோம்.. இந்த வயசில் அவங்க எதை எல்லாம் ரசிக்கணும், அனுபவிக்கனும் என்று நினைக்கிறார்களோ அதை எல்லாம் ஒரு தாய், தகப்பன் என்ற முறையில் நாங்க அவங்களுக்கு செய்வோம்..” என்று கூறியவளைப் பார்த்தவர் மனம் சந்தோசம் அடைந்தது..
பத்து வருடங்களுக்குப் பிறகு....
மாலைநேரம் சூர்யன் மறைவதற்கு தயாராகிக் கொண்டிருக்க இளநிலா, இளமாறன், கிருஷ்ணா, ஆதித்யா மட்டும் ரோட்டோர சாலையில் ஓரமாக நடந்துக் கொண்டிருக்க தூரத்தில் இருக்கும் பஸ் ஸ்டாப்பில் சுனிலும், நிவாஸும் நிற்பதைப் பார்த்த இளநிலா கிருஷ்ணாவின் பக்கம் திரும்பினாள்..
“டேய் கிருஷ்ணா நான் நேற்று சொன்னப்போ நம்பலை இல்ல அங்கே பாரு சுனில் மாமாவையும் , நிவாஸ் மாமாவையும்” என்று கூறியதும் கிருஷ்ணாவின் பார்வை பஸ் ஸ்டாப்பிற்கு சென்றது.. கிருஷ்ணா சாருவின் மகன்..
அவனைத் தொடர்ந்து பார்த்த இளமாறனும், ஆதித்யாவும், “இதுதான் தினமும் நடக்குது.. இதை இப்படியே விடக்கூடாதே..” என்று சொல்ல, “இருவரையும் மிரட்டுவோமா..?” என்று இளநிலா கேட்டதும், “ஓகே நிலா..” என்று கூறினான் மாறன்..
அவங்க பக்கத்தில் வந்துக்கொண்டிருந்த அவங்க ஸ்கூல் டீச்சர் அவர்களை முறைக்க, “டேய் மாறா இவங்களுக்கு முதலில் ஆப்பு வைக்கணும்.. இந்த மாசம் எக்ஸாம்ல எழுதாமல் பேப்பர் கொடுத்துவிடலாம்.. அப்போதான் நம்ம பிரின்சி குண்டம்மாகிட்ட நல்ல திட்டு வாங்குவாங்க..” என்று நிலா சொல்ல மாறனும் சரியென்று தலையசைத்தான்..
இவர்கள் இதை அடிக்கடி செய்வதுதான்.. இரண்டும் வாலுங்க இல்ல.. அதுதான் வாலுதனத்தை டீச்சரிடமே காட்டுதுங்க.. கிருஷ்ணாவும், ஆதித்யாவும் “அந்த டீச்சர் செப்டர் க்ளோஸ்..” என்று சொல்ல நால்வரும் சிரித்தபடியே பஸ் ஸ்டாப் அருகில் வந்து சேர்ந்தனர்..
ராகினியிடம் சுனிலும், கீதாவிடம் நிவாஸும் வம்பு வளர்த்துக் கொண்டிருக்க அவர்களிடம் வம்பு வளர்க்க வந்தது நாலு வாலுகளும்.. என்ன செய்வது பஞ்ச பாண்டவர்களுக்கு வந்த கால கொடுமை..?! சுனில், நிவாஸ் இருவரும் படிப்பை முடித்துவிட்டு நிவாஸ், மனோவின் நிறுவனத்தில் வேலைப்பார்க்கிறான்.. சுனில் சூர்யாவின் நிறுவனத்தில் வேலைப்பார்க்கிறான்..
அவர்களில் அருகில் வந்த நிலாவும், மாறனும், “அம்மாடி இதுதான் காதலா..” என்று பாட ஆதியும், கிருஷ்ணாவும் கோரஸ் போடராகினியும், கீதாவும் திருதிருவென விழித்தனர்.. அவர்கள் பார்வை கண்ட நிவாஸும், சுனிலும் திரும்பிப்பார்க்க அங்கே நின்று கொண்டிருந்த நால்வரையும் பார்த்தனர்..
“மச்சி இவங்க கண்ணில் பட்டுவிட்டோமே..” என்று நிவாஸ் சொல்ல, “தலை எழுத்தை யாரால் மாற்ற முடியும்..” என்று கூறிய சுனில், “நிலா மேடம் உங்களுக்கு இங்கே என்ன வேலை..?” என்று பணிவாகக் கேட்க, “மாமாவிற்கு இங்கே என்ன வேலை..?” என்று கிடுக்குப்பிடி போட்டான் மாறன்..
அவனை சமாளிக்க வேண்டுமே என்று இருவரும் பேய் முழிமுழித்துவிட்டு, “டேய் மாறா வீட்டில் யாருக்கும் தெரியாதுடா.. போட்டு மட்டும் கொடுத்துவிடாதே..” என்று இருவரும் ஒரே மாதிரி சரண்டர் ஆக, “அது அந்த பயம் இருக்கணும்..” என்று கூறிய நிலா,
“மாமா இப்படி எல்லாம் நின்று பேசினால் நாலு நல்லவங்க கண்ணிலும், நல்லு கொள்ளிக்கட்டை கண்ணிலும் படத்தான் செய்யும்.. சோ இனிமேல் இப்படி நின்னு பேச கூடாது..” என்று நிலா சொல்ல அவர்கள் இருவரும் சரியென தலையசைத்தனர்..
“ஸ்வீட் மாமா..” என்று சொல்லிய நிலா, “எங்களுக்கு நடந்து வர முடியவில்லை.. சோ பைக்கில் ட்ராப் பண்ணுங்க..” என்று சொல்ல, “கீதா, ராகினி இருவரும் பஸில் போங்க..” என்று சொல்ல பெண்கள் இருவரும் சுனிலையும், நிவாசையும் எரிப்பது போல பார்த்தனர்..
அவர்கள் பார்வையைக் கண்ட மாறன், “எங்க மாமா இருவரும் நல்லவங்கதான்.. அவங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்ல.. அவங்களுக்கு இது எல்லாம் ஜுஜிபி மேட்டர்.. பட் உங்க வீட்டில் அப்படியா அத்தை..?” என்று கேட்டவனைப் பார்த்து பயத்துடன் நின்றனர்..
அவனின் அத்தை அழைப்பில் நிம்மதி அடைந்தவர்கள், “வேற யாருக்காவது கட்டிக் கொடுத்துவிடுவாங்க குட்டிப்பையா..” என்று ராகினி சொல்லவும், “அதுக்குதான் நாங்களும் சொல்கிறோம்.. நீங்க பொறுமையாக இருங்க நடக்க வேண்டியதை நாங்க பார்த்துக்கிறோம்..” என்று சொல்ல இருவரும் சரியென தலையசைத்தனர்..
அதன்பிறகு நால்வரையும் கொண்டுவந்து விட்டுச்சென்றனர்.. அன்று மாலையே வீடு திரும்பிய மனோவிடம் எல்லா உண்மையையும் சொன்ன வாலுகள் இரண்டும் தங்கள் வேலை முடித்ததும் தூங்க சென்றனர்..
அவர்கள் தூங்கியதும் மனோவின் அறைக்குள் வந்த தென்றல், “பாவா இந்த பசங்க இந்த வேலையெல்லாம் பண்றாங்க சரியான சமத்து சக்கரைக்கட்டிங்க..” என்று சொல்ல சிரித்த மனோ, “நம்ம பிள்ளைகள் இல்லையா தென்றல்.. அதுதான் இந்த வாலுத்தனம் பண்ணுதுங்க.. பட் எல்லாத்தையும் சரியான திசையில் வழி நடத்த கத்துகிட்டாங்க..” என்று அவன் பெருமையாகக் கூறினான்..
தென்றலும், மனோவும் தங்களின் சேட்டையை கொஞ்சம் குறைத்தாலும் கூட பிள்ளைகள் சந்தோசத்தை மையமாகக் கொண்டு அவர்களின் காதல் சக்கரம் அழகாக சுழன்றது.. இருவரும் பேசி ஒரு முடிவுக்கு வந்தனர்.. அதன்பிறகே இருவரும் தூங்க ஆரம்பித்தனர்..
அந்த மழையை வெடிக்கப் பார்த்தபடி அமர்ந்திருந்த நிலாவின் அருகில் வந்து அமர்ந்த மனோ மகளை ஒரு பார்வை பார்த்துவிட்டு தென்றலைப் பார்க்க அவள் வெளியே கையைக் காட்டிவிட்டு தன்னுடைய வேலையைத் தொடர்ந்தாள்..
மகளின் அருகில் சென்ற மனோ, “மழை நல்ல பெய்து.. என்ன பண்ணலாம்..?!” என்று அவன் யோசிக்க, “மழையில் நனையலாப்பா..” என்று கூறினான் மாறன்.. மனோ தென்றலைப் பார்க்க அவள் சரியென தலையசைக்க பிள்ளைகளுடன் தோட்டத்து சென்றான் மனோ..
காலை விடியும் பொழுதே மழை கொட்டிக் கொண்டிருக்க கொட்டும் மழையில் பிள்ளைகளுடன் தோட்டத்தில் செடி நட்டுக்கொண்டு இருந்தான் மனோ.. அவனைப் பார்த்து சிரித்த நிலாவும், மாறனையும் பார்த்து புன்னகை பூத்தான் மனோ..
“இப்படி மழையில் உட்கார்ந்து செடி நட்டால் அதற்கு சீக்கிரம் வேர் பிடிக்கும்..” என்று மனோ குறும்புடன் சொல்ல அவனின் குறும்பைக் கண்டு சிரித்த நிலாவும், மாறனும் தங்களின் உடையைப் பார்க்க அது முழுவதும் நனைத்திருக்க அவர்களால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை..
நிலாவையும் மாறனையும் பார்த்த மனோ, “நாளைக்கும் இப்படியே மழையில் ஆடினால் நல்ல இருக்கும் இல்ல..?!” என்று கேட்டதும் சிரித்த நிலா, “அப்பா அப்படியே டாக்டரை நம்ம வீட்டில் தங்க வைத்துவிட்டால் செலவு மிச்சம் தானே..?” என்று கேட்டதும், “நிலா அதுக்குதான் நம்ம பிரதாப் மாமா இருக்காரு இல்ல..?!” என்று மாறன் சொல்ல, “டேய் அவனே இப்பொழுதுதான் படிப்பை முடிச்சிருக்கான்..” என்று இருவரையும் அடக்கினான் மனோ..
ம்ம் நீங்கள் நினைப்பது சரிதான் பிரதாப் டாக்டர்க்கு படித்து இப்பொழுது கோவையில் ஒரு பெரிய ஹாஸ்பிடலில் வேலையில் இருக்கிறான்.. அடுத்து ராகுல், ஷிவானி இருவரும் படிப்பை முடித்துவிட்டு கோவையில் பெரிய சாப்ட்வேர் கம்பெனியில் வேலையில் இருக்கின்றனர்..
அவர்கள் மூவரும் மழையில் நனைந்த படியே பேசிக்கொண்டிருப்பதை வாசலில் அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள் தென்றல்.. அப்பொழுது அவளின் அருகில் வந்த ராஜசேகர் தோட்டத்தைப் பார்த்தார்..
மூவரும் மழையில் நனைவதைப் பார்த்த ராஜசேகர், “தென்றல் என்னம்மா இது மூவரும் மழையில் நனைகின்றனர்.. நீ வாசலில் அமர்ந்து வேடிக்கைப் பார்க்கிறாய்..?” என்று அவர் கேட்டதும் வாசலில் அமர்ந்திருந்த தென்றல் ராஜசேகரைப் பார்த்து வாய்விட்டு சிரித்தாள்..
அவள் சிரிப்பதைப் பார்த்த ராஜசேகர், “இன்னும் உன்னோட விளையாட்டு குறையவே இல்லையா..?” என்று கேட்டதும், “தாத்தா சூரியன் உதிக்கும் பொழுதே காலை பொழுதை ரசிக்கணும்.. அப்பொழுது விட்டால் அடுத்தநாள் வரை காத்திருக்கணும்.. இல்ல அது உதிக்கும் பொழுது நம்ம மனநிலை வேறாக இருக்கும்.. சோ எதுவாக இருந்தாலும் அந்த நொடி வாழ்க்கையை ரசிக்க கத்துக்கணும்.. இன்னைக்கு மழை பெய்து நாளைக்கு மழை வருமா தெரியாது.. இன்னைக்கு மழை வருது இல்ல..” என்று கூறியவள் அவரின் முகத்தைப் பார்த்துவிட்டு தொடர்ந்தாள்..
“நிலாவும், மாறனும் அவங்களுக்கு விருப்பமானதை அப்பொழுதே செய்ய நான் முழு சுதந்திரம் கொடுத்திருக்கிறேன்.. அவங்க தவறு செய்யும் பொழுது அவங்களை கண்டிக்க பாவாவும், நானும் இருக்கோம்.. இந்த வயசில் அவங்க எதை எல்லாம் ரசிக்கணும், அனுபவிக்கனும் என்று நினைக்கிறார்களோ அதை எல்லாம் ஒரு தாய், தகப்பன் என்ற முறையில் நாங்க அவங்களுக்கு செய்வோம்..” என்று கூறியவளைப் பார்த்தவர் மனம் சந்தோசம் அடைந்தது..
Last edited: