சென்ற பதிவுக்கு லைக்,கமெண்ட்ஸ் அளித்த அனைவருக்கும் நன்றி
கதவு தட்டும் சத்தம் கேட்டதும் வெண்ணிலா சூர்யா சென்று விட்டான் போல என்று எண்ணி அறை கதவை திறந்தாள்.
இத்தனை நாட்களாக வெண்ணிலா ஆடிய கண்ணாமூச்சி ஆட்டம் ஒரு வழியாக முடிவுக்கு வர சூர்யாவோ சொல்லண்ணா வேதனையோடு வெண்ணிலாவை பார்த்து கொண்டு நின்றான்.
என்ன பேசுவது என்று தெரியாமல் வெண்ணிலா தடுமாற சூர்யாவோ வெண்ணிலா ஒரு வார்த்தையாவது தன்னோடு பேச மாட்டாளா என்று ஏக்கமாக பார்த்து கொண்டு நின்றான்.
வெண்ணிலாவின் பிடிவாதம் சூர்யா அறிந்த விடயம் என்பதனால் அவனே முதலில் பேச தொடங்கினான்.
"ஐசு..........." என்று சூர்யாவின் ஒற்றை அழைப்பு வெண்ணிலாவின் உயிர் வரை தீண்டிச் சென்றது.
சூர்யாவின் குரலை மறைவாக நின்று அவள் கேட்டிருந்தாலும் இன்று காதலோடும், ஏக்கத்தோடும் வந்த அவனது அழைப்பு அவளை இம்சித்தது.
சட்டென்று கண்கள் கலங்குவது போல இருக்கவும் மறுபுறம் வெண்ணிலா திரும்பி நின்று கொள்ள சூர்யா முகம் வாடிப் போனான்.
"என் கூட பேச மாட்டியா நிலா??? நான் அப்படி என்னடி தப்பு பண்ணேன்???? எதுக்கு என்னை அவாய்ட் பண்ற?? ஒரு வருஷமாச்சுடி உன்னை பார்த்து, பேசி.....ஏன்டி என்னை இப்படி கஷ்டப்படுத்துற???" என்று சூர்யா கேட்கவும் வெண்ணிலா எதுவும் பேசாமல் கண்ணீர் வடித்து கொண்டு நின்றாள்.
"ஏதாவது பேசு நிலா......" என்றவாறு சூர்யா வெண்ணிலாவின் முன்னால் வந்து நிற்க அவளது அழுது விழிகளைப் பார்த்து முற்றாக நொறுங்கிப் போனான்.
"என்னாச்சு நிலா??? இப்போவாது சொல்லு......" என்று சூர்யா கேட்க
நிமிர்ந்து அவனைப் பார்த்தவள்
"உங்களுக்கு வந்த வேலை முடிஞ்சதுனா நீங்க போகலாம்....." என்று அறையின் வாயில் புறமாக கை காட்ட சூர்யாவின் கண்கள் கோபத்தால் சிவந்தது.
"என்னதான் டி நினைச்சுட்டு இருக்க உன் மனசுல??? எதுக்கு இவ்வளவு பிடிவாதம்??? காரணமே சொல்லாம ஒதுங்கி போனா என்ன அர்த்தம்???" என்று சூர்யா கேட்க
"ஏன் உங்களுக்கு தெரியாதா??? அது தான் பிரச்சினையை உங்க கூடவே வைச்சுட்டு சுத்திட்டு இருக்கிங்களே...." என்று வெண்ணிலா கூற
"என் கூடவா????" என்று சூர்யா குழப்பமாக பார்க்கவும் அவனது தொலைபேசியில் ஜனனியின் அழைப்பு வரவும் சரியாக இருந்தது.
சூர்யாவையும், அவனது போனையும் மாறி மாறி முறைத்து பார்த்த வெண்ணிலா கோபமாக அவனை தாண்டி செல்ல போக அவளை போக விடாமல் சூர்யா கை பிடித்து தடுத்தான்.
"இவ தான் உன் பிரச்சினையா????" என்று சூர்யா தன் போனை அவளிடம் காட்டி கேட்க வெண்ணிலாவோ அவனிடமிருந்து தன் கையை பிரித்து எடுக்க போராடிக் கொண்டிருந்தாள்.
"நீ பதில் சொல்லாம இங்க இருந்து ஒரு அடி கூட நகர முடியாது....." என்று சூர்யா அழுத்தமாக கூறவும்
அவன் கண்களை நேருக்கு நேராக நோக்கிய வெண்ணிலா
"ஆமா அவ தான் பிரச்சினை......எனக்கு அவளை பார்த்தாலே புடிக்கல.....அவ பேச்சு, நடவடிக்கை எதுவுமே எனக்கு புடிக்கல......முக்கியமாக உங்க கூட அவ எப்போவும் ஒட்டிக்கிட்டு, குழைஞ்சு பேசிட்டு திரியுறது புடிக்கல......மொத்தத்துல அவ கூட நீங்க பேசுறது, பழகுறது எதுவுமே எனக்கு புடிக்கல......புடிக்கல......புடிக்கல......" என்று கத்த அவளை சிரிப்போடு நோக்கினான் சூர்யா.
சூர்யா சிரிப்பதை பார்த்து கோபம் கொண்ட வெண்ணிலா தன் கையை வேகமாக அவன் கையில் இருந்து உருவி எடுத்து கொண்டு அவனை தாறுமாறாக அடிக்க தொடங்கினாள்.
"என்னோட கஷ்டம் உனக்கு சந்தோஷமா????சந்தோஷமா????" என்று கேட்டுக் கொண்டே வெண்ணிலா சூர்யாவை அடிக்க அவனோ ஏதோ அவார்டு தருவது போல பெருமிதமாக அவளது அடிகள் அனைத்தையும் வாங்கி கொண்டான்.
வெண்ணிலாவின் கைகள் வலிக்கவே கோபமாக அவனை தள்ளி விட்டு தன் கைகள் இரண்டையும் வெண்ணிலா ஊதிக் கொள்ள சூர்யா அவள் கைகளை பற்றி தன் இதழ் பதித்தான்.
வெண்ணிலா கோபமாக தன் கையை பின்னால் இழுத்து கொள்ளப் போக அதில் சூர்யாவின் கண்ணீர் துளிகள் படவே அதிர்ச்சியான வெண்ணிலா
"தேவ்....." என்று அவசரமாக அவன் முகம் நிமிர்த்தி பார்த்தாள்.
சூர்யாவின் கலங்கிய கண்களை கண்டு பதற்றம் அடைந்த வெண்ணிலா
"நான் கோபத்துல இப்படி உங்களை அடிச்சுட்டேன்....இனி அப்படி பண்ண மாட்டேன்.....ப்ளீஸ் அழாதீங்க.....வேணும்னா நீங்க என்னை அடிச்சுக்கோங்க.....ப்ளீஸ்....ப்ளீஸ்.....அழாதீங்க தேவ்.....நான் தெரியாம பண்ணிட்டேன்.....ப்ளீஸ் மன்னிச்சுக்கோங்க.....ப்ளீஸ்...." என்று கெஞ்ச
"அடிப்பாவி......." என்று அதிர்ந்து போய் நின்றான் சூர்யா.
"நீ அடிச்சதுக்காகவாடி நான் கண் கலங்கி நிற்குறேன்????" என்று சூர்யா கேட்கவும்
"அப்போ இல்லையா????" என்று குழப்பமாக கேட்டாள் வெண்ணிலா.
"லூசு பொண்ணே.....நீ என் மேல இந்தளவிற்கு பாசமாக இருக்கியேனு நினைச்சு என் கண் கலங்குதுடி....." என்று சூர்யா அவளது தலையில் செல்லமாக தட்ட
"அப்படி எல்லாம் எதுவும் இல்லை....." என்று முறுக்கிக் கொண்டு நின்றாள் வெண்ணிலா.
"சரி இல்லைனாலும் பரவாயில்லை......உன்னோட கோபம் எனக்கு எல்லாமே காட்டிக் கொடுத்துடுச்சு......இனி நீயாக மறைச்சாலும் இது மாறப் போறது இல்ல ஐசு.....நீ இனிமேல் என் மேல கோபப்பட்டாலும் நான் புரிஞ்சுப்பேன்......என் மேல இருக்குற அளவு கடந்த காதலால தான் உனக்கு இந்தளவிற்கு கோபம் வருதுனு......" என்று சூர்யா கூறவும்
"கரெக்டா கண்டு பிடிச்சுட்டான் இடியட்......" என்று வெண்ணிலா அவனை மனதிற்குள் செல்லமாக திட்டிக் கொண்டு நின்றாள்.
"இப்போ நீ என்ன நினைச்சேன்னு நான் சொல்லவா???" என்று சூர்யா கேட்கவும்
"ஒண்ணும் தேவை இல்லை....நீங்க முதல்ல என் ரூமை விட்டு வெளியே போங்க...." என்று வெண்ணிலா கூற
"முடியாது...." என்று விட்டு அங்கு போடப்பட்டிருந்த நாற்காலியில் சூர்யா சட்டமாக அமர்ந்து கொண்டான்.
வெண்ணிலா கோபமாக அவனை பார்க்கவும் சூர்யா சிரித்துக் கொண்டே அவளருகில் எழுந்து வந்து அவள் முகத்தை தன் இரு கைகளாலும் ஏந்தினான்.
வெண்ணிலா அவனிடமிருந்து விலகப் பார்க்க
"ப்ளீஸ்......" என்று சூர்யாவின் கெஞ்சலான ஒரு வார்த்தையில் வெண்ணிலா கட்டுப் பட்டு நின்றாள்.
"இதோ பாரு ஐசு......என்ன பிரச்சனை வந்தாலும் எத்தனை பேர் நம்ம லைஃப்ல பிரச்சினையை உருவாக்கினாலும்.....ஏன் நீயாகவே என்னை விட்டு விலகி போக நினைச்சாலும் என் உடம்புல கடைசி மூச்சு இருக்குற வரைக்கும் என் மனசுல உன்னை தவிர வேற எந்த பொண்ணுக்கும் இடம் கிடையாது......என்ன தான் உலகி அழகியே வந்து என் முன்னாடி நின்னாலும் என்னுடைய காதல் உனக்கு மட்டும் தான்......" என்று சூர்யா கூற வெண்ணிலா கண்கள் கலங்க அவனை தாவி அணைத்துக் கொண்டாள்.
"என்ன தான் சொன்னாலும் என் புத்திக்கு ஏற மாட்டேங்குதே தேவ்......அவளை பார்த்தாலே எனக்கு கோபம் கோபமாக வருது.....எனக்கு பிராமிஸ் பண்ணுங்க இனிமேல் அவளை பார்க்க மாட்டேன், பேச மாட்டேன்னு......" என்று வெண்ணிலா கூறவும்
தன்னிடமிருந்து அவளை பிரித்து நிறுத்திய சூர்யா
"நிலா அவளும் உன்னை மாதிரியே ஒரு பொண்ணு தானே....அப்படி இருக்கும் போது நீயே ஒரு பொண்ண பத்தி தப்பாக நினைக்கலாமா சொல்லு???? எனக்கு அபி, அச்சு எப்படியோ அப்படி தான் ஜனனியும்......அவ என்னோட பிரண்ட்.....நல்லா கேட்டுக்கோ பிரண்ட் தட்ஸ் இட்.....ஏன் ஒரு பையனும், பொண்ணும் பிரண்ட்ஸா பழக கூடாதா என்ன????" என்று கேட்க வெண்ணிலாவோ முழுமையாக அவனது கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் நின்றாள்.
"நிலா இப்போ நான் உனக்கு ஒண்ணு சொல்றேன்....எனக்கு ஜனனியோட நட்பும் முக்கியம் உன் மேல இருக்குற காதலும் முக்கியம்.....இரண்டையும் எந்த பிரச்சினையும் இல்லாமல் நான் சுமூகமாக என் லைஃப்ல கொண்டு போவேன்.....புரிஞ்சுதா????" என்று சூர்யா கேட்கவும்
அவன் மனது கஷ்டப்பட்டு விடக் கூடாது என்பதற்காக சிரித்த முகமாக அவனை பார்த்து தலை ஆட்டினாள் வெண்ணிலா.
ஆனால் சூர்யா பின்னாளில் தான் கொடுத்த வாக்கிற்காக திண்டாடப் போவதை அறியாமல் வெண்ணிலாவை சமாதானப்படுத்தி விட்டேன் என்று பெருமிதத்துடன் நின்று கொண்டிருந்தான்.
கடலினில் மீனாக இருந்தவள் நான்
உனக்கென கரை தாண்டி வந்தவள் தான்
துடித்திருந்தேன் தரையினிலே
திரும்பிவிட்டேன் என் கடலிடமே
ஒரு நாள் சிரித்தேன் மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா
கண்ணே தடுமாறி நடந்தேன்
நூலில் ஆடும் மழையாகி போனேன்
உன்னால்தான் கலைஞனாய் ஆனேனே
தொலை தூரத்தில் வெளிச்சம் நீ
உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே
மேலும் மேலும் உருகி உருகி உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்
ஓஹோ உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்
ஓடும் நீரில் ஓர் அலைதான் நான்
உள்ளே உள்ள ஈரம் நீதான்
வரம் கிடைத்தும் நான் தவர விட்டேன்
மன்னிப்பாயா அன்பே
காற்றிலே ஆடும் காகிதம் நான்
நீதான் என்னை கடிதம் ஆக்கினாய்
அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன்
என் கலங்கரை விளக்கமே
ஒரு நாள் சிரித்தேன் மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்
அன்பிற்க்கும் உண்டோ அடைக்கும் தாழ்
ஆர்வளர் புண் கண்ணீர் பூசல் தரும்
அன்பிலார் எல்லாம் தமக்குரியர்
அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு
புலம்பல் என சென்றேன்
புலினேன் நெஞ்சம் கலத்தல் உருவது கண்டேன்
ஏன் என் வாழ்வில் வந்தாய் கண்ணா நீ
போவாயா காணல் நீர் போலே தோன்றி
அனைவரும் உறங்கிடும் இரவெனும் நேரம்
எனக்கது தலையணை நனைத்திடும் நேரம்
ஒரு நாள் சிரித்தேன் மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா மன்னிப்பாயா
கண்ணே தடுமாறி நடந்தேன்
நூலில் ஆடும் மழையாகி போனேன்
உன்னால்தான் கலைஞனாய் ஆனேனே
தொலை தூரத்தில் வெளிச்சம் நீ
உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே
மேலும் மேலும் உருகி உருகி
உனை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்
ஓஹோ உனை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்
மறுபடியும் சூர்யாவின் தொலைபேசி அடிக்க மனதில் எழுந்த சிறு பயத்தோடு போனை எடுத்து பார்த்த சூர்யா திரையில் வேறு பெயர் தெரியவும் நிம்மதியாக பெருமூச்சு விட்டு கொள்ள வெண்ணிலா அவனைப் பார்த்து வாய் விட்டு சிரித்தாள்.
வெண்ணிலாவின் சந்தோஷம் சூர்யாவையும் தொற்றிக் கொள்ள வெண்ணிலாவிடம் விடைபெற்று விட்டு சூர்யா தன் ஆபீஸை நோக்கி புறப்பட்டான்.
வெண்ணிலா தன் மனதினுள் நிலவிய ஜனனி பற்றிய பயத்தை தற்காலிகமாக தூர ஒதுக்கி விட்டு தன் அன்றாட வேலைகளை கவனிக்க சென்றாள்.
அதன் பிறகு சூர்யாவோடு வெண்ணிலா சுமூகமாக பேசிக் கொண்டு இருந்தாலும் அவ்வப்போது ஜனனி பற்றிய பயம் அவளை சூழ்ந்து கொள்ளும்.
சூர்யாவோடு வெண்ணிலா வெளியே எங்காவது சென்றால் ஜனனியும் ஏதாவது காரணம் சொல்லி அவர்களோடு இணைந்து கொள்வாள்.
வெண்ணிலாவிற்கு இதை நினைத்து கோபமாக வந்தாலும் சூர்யாவிற்காக எதுவும் பேசாமல் சிரித்த முகத்துடன் இருக்க பெரும் பாடு படுவாள்.
சில வேலைகளில் ஜனனியின் பார்வை சூர்யாவையே சுற்றி வருவதைப் பார்த்து வெண்ணிலாவிற்கு அச்சம் தொற்றிக் கொண்டாலும் வெளியில் தைரியமாக இருப்பதை போல அவள் தன்னை காட்டிக் கொள்வாள்.
ஜனனியோ வெண்ணிலாவை எப்படியாவது சூர்யாவிடமிருந்து பிரித்து விட வேண்டும் என்று தன் மனதிற்குள் கங்கணம் கட்டிக்கொண்டு இருந்தாள்.
கதவு தட்டும் சத்தம் கேட்டதும் வெண்ணிலா சூர்யா சென்று விட்டான் போல என்று எண்ணி அறை கதவை திறந்தாள்.
இத்தனை நாட்களாக வெண்ணிலா ஆடிய கண்ணாமூச்சி ஆட்டம் ஒரு வழியாக முடிவுக்கு வர சூர்யாவோ சொல்லண்ணா வேதனையோடு வெண்ணிலாவை பார்த்து கொண்டு நின்றான்.
என்ன பேசுவது என்று தெரியாமல் வெண்ணிலா தடுமாற சூர்யாவோ வெண்ணிலா ஒரு வார்த்தையாவது தன்னோடு பேச மாட்டாளா என்று ஏக்கமாக பார்த்து கொண்டு நின்றான்.
வெண்ணிலாவின் பிடிவாதம் சூர்யா அறிந்த விடயம் என்பதனால் அவனே முதலில் பேச தொடங்கினான்.
"ஐசு..........." என்று சூர்யாவின் ஒற்றை அழைப்பு வெண்ணிலாவின் உயிர் வரை தீண்டிச் சென்றது.
சூர்யாவின் குரலை மறைவாக நின்று அவள் கேட்டிருந்தாலும் இன்று காதலோடும், ஏக்கத்தோடும் வந்த அவனது அழைப்பு அவளை இம்சித்தது.
சட்டென்று கண்கள் கலங்குவது போல இருக்கவும் மறுபுறம் வெண்ணிலா திரும்பி நின்று கொள்ள சூர்யா முகம் வாடிப் போனான்.
"என் கூட பேச மாட்டியா நிலா??? நான் அப்படி என்னடி தப்பு பண்ணேன்???? எதுக்கு என்னை அவாய்ட் பண்ற?? ஒரு வருஷமாச்சுடி உன்னை பார்த்து, பேசி.....ஏன்டி என்னை இப்படி கஷ்டப்படுத்துற???" என்று சூர்யா கேட்கவும் வெண்ணிலா எதுவும் பேசாமல் கண்ணீர் வடித்து கொண்டு நின்றாள்.
"ஏதாவது பேசு நிலா......" என்றவாறு சூர்யா வெண்ணிலாவின் முன்னால் வந்து நிற்க அவளது அழுது விழிகளைப் பார்த்து முற்றாக நொறுங்கிப் போனான்.
"என்னாச்சு நிலா??? இப்போவாது சொல்லு......" என்று சூர்யா கேட்க
நிமிர்ந்து அவனைப் பார்த்தவள்
"உங்களுக்கு வந்த வேலை முடிஞ்சதுனா நீங்க போகலாம்....." என்று அறையின் வாயில் புறமாக கை காட்ட சூர்யாவின் கண்கள் கோபத்தால் சிவந்தது.
"என்னதான் டி நினைச்சுட்டு இருக்க உன் மனசுல??? எதுக்கு இவ்வளவு பிடிவாதம்??? காரணமே சொல்லாம ஒதுங்கி போனா என்ன அர்த்தம்???" என்று சூர்யா கேட்க
"ஏன் உங்களுக்கு தெரியாதா??? அது தான் பிரச்சினையை உங்க கூடவே வைச்சுட்டு சுத்திட்டு இருக்கிங்களே...." என்று வெண்ணிலா கூற
"என் கூடவா????" என்று சூர்யா குழப்பமாக பார்க்கவும் அவனது தொலைபேசியில் ஜனனியின் அழைப்பு வரவும் சரியாக இருந்தது.
சூர்யாவையும், அவனது போனையும் மாறி மாறி முறைத்து பார்த்த வெண்ணிலா கோபமாக அவனை தாண்டி செல்ல போக அவளை போக விடாமல் சூர்யா கை பிடித்து தடுத்தான்.
"இவ தான் உன் பிரச்சினையா????" என்று சூர்யா தன் போனை அவளிடம் காட்டி கேட்க வெண்ணிலாவோ அவனிடமிருந்து தன் கையை பிரித்து எடுக்க போராடிக் கொண்டிருந்தாள்.
"நீ பதில் சொல்லாம இங்க இருந்து ஒரு அடி கூட நகர முடியாது....." என்று சூர்யா அழுத்தமாக கூறவும்
அவன் கண்களை நேருக்கு நேராக நோக்கிய வெண்ணிலா
"ஆமா அவ தான் பிரச்சினை......எனக்கு அவளை பார்த்தாலே புடிக்கல.....அவ பேச்சு, நடவடிக்கை எதுவுமே எனக்கு புடிக்கல......முக்கியமாக உங்க கூட அவ எப்போவும் ஒட்டிக்கிட்டு, குழைஞ்சு பேசிட்டு திரியுறது புடிக்கல......மொத்தத்துல அவ கூட நீங்க பேசுறது, பழகுறது எதுவுமே எனக்கு புடிக்கல......புடிக்கல......புடிக்கல......" என்று கத்த அவளை சிரிப்போடு நோக்கினான் சூர்யா.
சூர்யா சிரிப்பதை பார்த்து கோபம் கொண்ட வெண்ணிலா தன் கையை வேகமாக அவன் கையில் இருந்து உருவி எடுத்து கொண்டு அவனை தாறுமாறாக அடிக்க தொடங்கினாள்.
"என்னோட கஷ்டம் உனக்கு சந்தோஷமா????சந்தோஷமா????" என்று கேட்டுக் கொண்டே வெண்ணிலா சூர்யாவை அடிக்க அவனோ ஏதோ அவார்டு தருவது போல பெருமிதமாக அவளது அடிகள் அனைத்தையும் வாங்கி கொண்டான்.
வெண்ணிலாவின் கைகள் வலிக்கவே கோபமாக அவனை தள்ளி விட்டு தன் கைகள் இரண்டையும் வெண்ணிலா ஊதிக் கொள்ள சூர்யா அவள் கைகளை பற்றி தன் இதழ் பதித்தான்.
வெண்ணிலா கோபமாக தன் கையை பின்னால் இழுத்து கொள்ளப் போக அதில் சூர்யாவின் கண்ணீர் துளிகள் படவே அதிர்ச்சியான வெண்ணிலா
"தேவ்....." என்று அவசரமாக அவன் முகம் நிமிர்த்தி பார்த்தாள்.
சூர்யாவின் கலங்கிய கண்களை கண்டு பதற்றம் அடைந்த வெண்ணிலா
"நான் கோபத்துல இப்படி உங்களை அடிச்சுட்டேன்....இனி அப்படி பண்ண மாட்டேன்.....ப்ளீஸ் அழாதீங்க.....வேணும்னா நீங்க என்னை அடிச்சுக்கோங்க.....ப்ளீஸ்....ப்ளீஸ்.....அழாதீங்க தேவ்.....நான் தெரியாம பண்ணிட்டேன்.....ப்ளீஸ் மன்னிச்சுக்கோங்க.....ப்ளீஸ்...." என்று கெஞ்ச
"அடிப்பாவி......." என்று அதிர்ந்து போய் நின்றான் சூர்யா.
"நீ அடிச்சதுக்காகவாடி நான் கண் கலங்கி நிற்குறேன்????" என்று சூர்யா கேட்கவும்
"அப்போ இல்லையா????" என்று குழப்பமாக கேட்டாள் வெண்ணிலா.
"லூசு பொண்ணே.....நீ என் மேல இந்தளவிற்கு பாசமாக இருக்கியேனு நினைச்சு என் கண் கலங்குதுடி....." என்று சூர்யா அவளது தலையில் செல்லமாக தட்ட
"அப்படி எல்லாம் எதுவும் இல்லை....." என்று முறுக்கிக் கொண்டு நின்றாள் வெண்ணிலா.
"சரி இல்லைனாலும் பரவாயில்லை......உன்னோட கோபம் எனக்கு எல்லாமே காட்டிக் கொடுத்துடுச்சு......இனி நீயாக மறைச்சாலும் இது மாறப் போறது இல்ல ஐசு.....நீ இனிமேல் என் மேல கோபப்பட்டாலும் நான் புரிஞ்சுப்பேன்......என் மேல இருக்குற அளவு கடந்த காதலால தான் உனக்கு இந்தளவிற்கு கோபம் வருதுனு......" என்று சூர்யா கூறவும்
"கரெக்டா கண்டு பிடிச்சுட்டான் இடியட்......" என்று வெண்ணிலா அவனை மனதிற்குள் செல்லமாக திட்டிக் கொண்டு நின்றாள்.
"இப்போ நீ என்ன நினைச்சேன்னு நான் சொல்லவா???" என்று சூர்யா கேட்கவும்
"ஒண்ணும் தேவை இல்லை....நீங்க முதல்ல என் ரூமை விட்டு வெளியே போங்க...." என்று வெண்ணிலா கூற
"முடியாது...." என்று விட்டு அங்கு போடப்பட்டிருந்த நாற்காலியில் சூர்யா சட்டமாக அமர்ந்து கொண்டான்.
வெண்ணிலா கோபமாக அவனை பார்க்கவும் சூர்யா சிரித்துக் கொண்டே அவளருகில் எழுந்து வந்து அவள் முகத்தை தன் இரு கைகளாலும் ஏந்தினான்.
வெண்ணிலா அவனிடமிருந்து விலகப் பார்க்க
"ப்ளீஸ்......" என்று சூர்யாவின் கெஞ்சலான ஒரு வார்த்தையில் வெண்ணிலா கட்டுப் பட்டு நின்றாள்.
"இதோ பாரு ஐசு......என்ன பிரச்சனை வந்தாலும் எத்தனை பேர் நம்ம லைஃப்ல பிரச்சினையை உருவாக்கினாலும்.....ஏன் நீயாகவே என்னை விட்டு விலகி போக நினைச்சாலும் என் உடம்புல கடைசி மூச்சு இருக்குற வரைக்கும் என் மனசுல உன்னை தவிர வேற எந்த பொண்ணுக்கும் இடம் கிடையாது......என்ன தான் உலகி அழகியே வந்து என் முன்னாடி நின்னாலும் என்னுடைய காதல் உனக்கு மட்டும் தான்......" என்று சூர்யா கூற வெண்ணிலா கண்கள் கலங்க அவனை தாவி அணைத்துக் கொண்டாள்.
"என்ன தான் சொன்னாலும் என் புத்திக்கு ஏற மாட்டேங்குதே தேவ்......அவளை பார்த்தாலே எனக்கு கோபம் கோபமாக வருது.....எனக்கு பிராமிஸ் பண்ணுங்க இனிமேல் அவளை பார்க்க மாட்டேன், பேச மாட்டேன்னு......" என்று வெண்ணிலா கூறவும்
தன்னிடமிருந்து அவளை பிரித்து நிறுத்திய சூர்யா
"நிலா அவளும் உன்னை மாதிரியே ஒரு பொண்ணு தானே....அப்படி இருக்கும் போது நீயே ஒரு பொண்ண பத்தி தப்பாக நினைக்கலாமா சொல்லு???? எனக்கு அபி, அச்சு எப்படியோ அப்படி தான் ஜனனியும்......அவ என்னோட பிரண்ட்.....நல்லா கேட்டுக்கோ பிரண்ட் தட்ஸ் இட்.....ஏன் ஒரு பையனும், பொண்ணும் பிரண்ட்ஸா பழக கூடாதா என்ன????" என்று கேட்க வெண்ணிலாவோ முழுமையாக அவனது கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் நின்றாள்.
"நிலா இப்போ நான் உனக்கு ஒண்ணு சொல்றேன்....எனக்கு ஜனனியோட நட்பும் முக்கியம் உன் மேல இருக்குற காதலும் முக்கியம்.....இரண்டையும் எந்த பிரச்சினையும் இல்லாமல் நான் சுமூகமாக என் லைஃப்ல கொண்டு போவேன்.....புரிஞ்சுதா????" என்று சூர்யா கேட்கவும்
அவன் மனது கஷ்டப்பட்டு விடக் கூடாது என்பதற்காக சிரித்த முகமாக அவனை பார்த்து தலை ஆட்டினாள் வெண்ணிலா.
ஆனால் சூர்யா பின்னாளில் தான் கொடுத்த வாக்கிற்காக திண்டாடப் போவதை அறியாமல் வெண்ணிலாவை சமாதானப்படுத்தி விட்டேன் என்று பெருமிதத்துடன் நின்று கொண்டிருந்தான்.
கடலினில் மீனாக இருந்தவள் நான்
உனக்கென கரை தாண்டி வந்தவள் தான்
துடித்திருந்தேன் தரையினிலே
திரும்பிவிட்டேன் என் கடலிடமே
ஒரு நாள் சிரித்தேன் மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா
கண்ணே தடுமாறி நடந்தேன்
நூலில் ஆடும் மழையாகி போனேன்
உன்னால்தான் கலைஞனாய் ஆனேனே
தொலை தூரத்தில் வெளிச்சம் நீ
உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே
மேலும் மேலும் உருகி உருகி உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்
ஓஹோ உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்
ஓடும் நீரில் ஓர் அலைதான் நான்
உள்ளே உள்ள ஈரம் நீதான்
வரம் கிடைத்தும் நான் தவர விட்டேன்
மன்னிப்பாயா அன்பே
காற்றிலே ஆடும் காகிதம் நான்
நீதான் என்னை கடிதம் ஆக்கினாய்
அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன்
என் கலங்கரை விளக்கமே
ஒரு நாள் சிரித்தேன் மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்
அன்பிற்க்கும் உண்டோ அடைக்கும் தாழ்
ஆர்வளர் புண் கண்ணீர் பூசல் தரும்
அன்பிலார் எல்லாம் தமக்குரியர்
அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு
புலம்பல் என சென்றேன்
புலினேன் நெஞ்சம் கலத்தல் உருவது கண்டேன்
ஏன் என் வாழ்வில் வந்தாய் கண்ணா நீ
போவாயா காணல் நீர் போலே தோன்றி
அனைவரும் உறங்கிடும் இரவெனும் நேரம்
எனக்கது தலையணை நனைத்திடும் நேரம்
ஒரு நாள் சிரித்தேன் மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா மன்னிப்பாயா
கண்ணே தடுமாறி நடந்தேன்
நூலில் ஆடும் மழையாகி போனேன்
உன்னால்தான் கலைஞனாய் ஆனேனே
தொலை தூரத்தில் வெளிச்சம் நீ
உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே
மேலும் மேலும் உருகி உருகி
உனை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்
ஓஹோ உனை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்
மறுபடியும் சூர்யாவின் தொலைபேசி அடிக்க மனதில் எழுந்த சிறு பயத்தோடு போனை எடுத்து பார்த்த சூர்யா திரையில் வேறு பெயர் தெரியவும் நிம்மதியாக பெருமூச்சு விட்டு கொள்ள வெண்ணிலா அவனைப் பார்த்து வாய் விட்டு சிரித்தாள்.
வெண்ணிலாவின் சந்தோஷம் சூர்யாவையும் தொற்றிக் கொள்ள வெண்ணிலாவிடம் விடைபெற்று விட்டு சூர்யா தன் ஆபீஸை நோக்கி புறப்பட்டான்.
வெண்ணிலா தன் மனதினுள் நிலவிய ஜனனி பற்றிய பயத்தை தற்காலிகமாக தூர ஒதுக்கி விட்டு தன் அன்றாட வேலைகளை கவனிக்க சென்றாள்.
அதன் பிறகு சூர்யாவோடு வெண்ணிலா சுமூகமாக பேசிக் கொண்டு இருந்தாலும் அவ்வப்போது ஜனனி பற்றிய பயம் அவளை சூழ்ந்து கொள்ளும்.
சூர்யாவோடு வெண்ணிலா வெளியே எங்காவது சென்றால் ஜனனியும் ஏதாவது காரணம் சொல்லி அவர்களோடு இணைந்து கொள்வாள்.
வெண்ணிலாவிற்கு இதை நினைத்து கோபமாக வந்தாலும் சூர்யாவிற்காக எதுவும் பேசாமல் சிரித்த முகத்துடன் இருக்க பெரும் பாடு படுவாள்.
சில வேலைகளில் ஜனனியின் பார்வை சூர்யாவையே சுற்றி வருவதைப் பார்த்து வெண்ணிலாவிற்கு அச்சம் தொற்றிக் கொண்டாலும் வெளியில் தைரியமாக இருப்பதை போல அவள் தன்னை காட்டிக் கொள்வாள்.
ஜனனியோ வெண்ணிலாவை எப்படியாவது சூர்யாவிடமிருந்து பிரித்து விட வேண்டும் என்று தன் மனதிற்குள் கங்கணம் கட்டிக்கொண்டு இருந்தாள்.
Last edited: