• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Ennai Ko(Ve)llum Vennilavei - 32

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Aadhiraa

SM Exclusive
Author
Joined
Jan 17, 2018
Messages
1,073
Reaction score
7,772
Location
Tirunelveli
ஹாய் கேடிஸ்...

நான் தான் பெரிய டான்'ன்னு நினைச்சா இங்க இருக்கிறது எல்லாம் என்னைவிட பயங்கரமான டன்டனக்கா டான்ஸா இருக்கு...

என்னோட அத்தனை மிரட்டலையும் மீறி இன்னும் சூப்பர் நைஸ் போட்டவங்க எல்லாம் லைன்ல வாங்க அருவாள தீட்டிட்டு இருக்கேன்...

மத்தபடி உங்க எல்லார் கமெண்ட்ஸும் டூப்பர் ஜுப்பர் தான் போங்க..

போன அத்தியாயத்திற்கு கருத்து தெரிவித்த அனைவருக்கும் ஒரு கூடை நிறைய அன்புகளும் ஒரு அண்டா நிறைய தேங்ஸூக்களும்..

உங்க மதி ஆதியை இன்னொரு தரம் காட்டலாம்னு தூக்கிட்டு வந்திருக்கேன்..போய் படிச்சிட்டு ஓடி வாங்க மக்காஸ்..

இப்படிக்கு
உங்க குயந்த புள்ள..

Note: சூப்பர் நைஸ் என கமெண்ட் செய்து ஒரு மணி நேரத்திற்கு ஒரு யூடி வாங்க நினைப்பவர்களுக்கு ஊசி போடப்படும்..
 




Aadhiraa

SM Exclusive
Author
Joined
Jan 17, 2018
Messages
1,073
Reaction score
7,772
Location
Tirunelveli
~32~

அந்தக் காபியை பருகி ஒரு மணி நேரம் வரை எதுவும் ஆகாததால், “ஆதிக் நீ ஸ்டராங் பாடி..” என வியந்து தான் போனாள் மதியழகி..

அவளின் பாராட்டுதலை புறக்கணித்தவன், “உனக்கு என்ன எங்க அம்மா மேல அவ்ளோ கோபம்..?” என்றவனின் கேள்விக்கு

“கோபம்லாம் இல்ல ஆதிக்...உங்க அம்மா மேல பாசம்…”

“என்னது பாசமா..?”

“ஆமா நிறைய பாசம் அதான் மசாலா காப்பி போட்டுக் கொடுத்தேன்..” என்றவள் ஆதிக்கு பின்னால் நின்று அவனது மடிக்கணினியை நோட்டம் விடத் தொடங்கினாள்..

“என்ன டி பார்க்குற..?” ஒருபுறமாக தலையைத் திருப்பிக் கேட்டவனின், கேசத்தை மெல்லமாய் தொட்டவள்,

“ஆதிக், உனக்கு என்மேல இருக்க கோபம் எப்போ போகும்..?” எனக் கேட்க,

“ஏன் எதுக்கு கேட்குற..?” என்றவன் கால் வைத்திருந்த டீபாயில் ஏறி அமர்ந்தவள்,

“யூ நோ ஆதிக்..எனக்கு லவ் எக்ஸ்பீரியன்ஸ் இல்ல..உனக்கு????” அவளது கேள்விக்கு பதிலளிக்காமல் கணினியில் பார்வையை பதித்தவன்

“வெட்டிப் பேச்சு பேச எனக்கு நேரமில்லை டி..” என்க

அவனது மடிக்கணினியை டக்கென மூடியவள், “என்கிட்ட பேசு..” சட்டமாய் சொன்னவள் இப்போது சம்மனமிட்டு அமர்ந்தேவிட்டாள்..

“சொல்லு..என்ன பேசனும்..?” என்றவன் இப்போது மடிக்கணினியை மற்றொரு சேரில் வைத்துவிட்டு

“இறங்கி சேர்ல உட்காரு மதி, க்ளாஸ் உடைஞ்சிட போகுது..” என்றதும் முறைத்தவள்

“நான் ஒண்ணும் அவ்ளோ வெயிட் இல்ல..ஜஸ்ட் ஃபார்ட்டி எய்ட் கேஜி…” கெத்தாய் சொல்லுபவளிடம்

“நம்ப முடியலையே..கொஞ்சம் எந்திரி தூக்கிப் பார்ப்போம்..” என்றான் கள்ளச் சிரிப்போடு,

அவன் தூக்குகிறேன் என்றதும் வேகமாய் எழுந்தவள், பக்கத்துக்கு இருக்கைக்கு மேலே ஏறி நின்று கொண்டு, “கம் ஆதிக்..” என ரெடியாய் நிற்க

ஆதிக்கு தான் அவள் கைவிரித்து அழைத்ததில் மூச்சடைத்துப் போனது..முடிந்த மட்டிலும் சமாளித்தவனுக்கு காலையில் அவளது இடையின் தரிசனமும் நடுவாயிற்றின் நாபிக்கு மேலிருந்த இருந்த மச்சமும் காலம் நேரமில்லாமல் நினைவுக்கு வந்து உடலைச் சூடேற்றியது..

“ஹே சும்மா சொன்னேன்..” அவளது முகம் பார்க்காமல் சொன்னவன் இப்போது மடிக்கணினியைத் தூக்கி வைத்துக் கொண்டு அமர,

“கமான் ஆதிக்..தூக்கு..” என நச்சரித்தவளுக்கு எங்கிருந்து தெரியப் போகிறது அவனது நிலை..

“ஷட்டப் மதி..எனக்கு வேலையிருக்கு..” கோபம் போலும் கத்தியவன், மடிக்கணினியைத் திறக்க

“என்னைத் தூக்க கூட உனக்கு கட்ஸ் இல்லையா சரி விடு வா நான் உன்னைத் தூக்குறேன்..” பலவிதமாய் அவனை உசுபேத்தியவள் இப்போதும் நின்ற பிடியிலே நிற்க

கணினியைத் தூர வைத்துவிட்டு வேகமாய் எழுந்தவன், அவள் அடுத்த வார்த்தை பேசும் முன் இருகரம் கொண்டு தூக்கியிருந்தான்.. அவனது கைகளில் ஸ்பரிசத்தை முதலில் உணராதவள் கைகளை கோர்த்து அவனது கழுத்தில் மாலையிட்டு,

“ஆதிக் ப்ளீஸ் என்னைக் கொஞ்ச தூரம் தூக்கிட்டு போயேன்..” அவனின் நாடியை பிடித்துக் கெஞ்சுபவளின் நெற்றி அவனது இதழுக்கு அருகே இருந்தது..

அறைக்கதவு சாற்றியிருக்கிறதா என ஒருமுறை திரும்பி பார்த்தவன், அறையைச் சுற்றி ஒருமுறை நடக்க, ஒவ்வொரு அடிக்கும் கைகளின் அழுத்தம் கூடியதே தவிரக் குறையவில்லை..

முதல் சில அடிகளில் உணராத அவனது நெருக்கத்தையும் ஸ்பரிசத்தையும் அடுத்த சில அடிகளில் உணர்ந்தவள், அவனது முகத்தை நிமிர்ந்து பார்க்க, அதில் தெரிந்த எல்லையில்லா மயக்கத்தில், மதிக்கு அடிவயிற்றில் பட்டாம்பூச்சி பறந்தது..

அவனது முகத்தைப் பார்க்க திறனின்றி, அவனது திண்ணிய மார்பில் தனது பார்வையைப் பதித்தவள், “மாமா, போதும்..” எனக் காற்றில் மொழி பேசியது..

அவளது சிவப்பேறிய முகத்தில் பார்வையைப் பதித்திருந்தவனுக்கு மாமா என்ற அழைப்பு வேறு தூபம் போட்டது.. தன்னுடன் சேர்த்து நெருங்கி அணைத்தவன், அவளை முகத்தைத் தனது முகத்திற்கு நேராய் தூக்கி இதழ்கள் இரண்டும் உரசும் நெருக்கத்திற்குக் கொண்டு வர, அடுத்து அவனது இதழ்கள் செய்யப் போகும் மாயாஜாலத்தை உணர்ந்தது போல் இமைகள் இரண்டும் அழகாய் மூடி கருவிழி அசைந்து அழைப்பு விடுத்தது..

கைகள் உணர்ந்து கொண்டிருக்கும் அவளது உடை போர்த்திய அங்கங்களை ரசித்தவன், இதழ் நோக்கிக் குனிந்தான்…

நொடிகள் சில கரைய, திடீரென அருகே இருந்த கட்டிலில் தொப்பென மதியைத் தூக்கி போட்டுவிட்டு, பாத்ரூம் கதவை அறைந்து சாற்ற, எதையோ எதிர்பார்த்தவள் அவன் வேகமாய் சென்றதைப் பார்த்து திருதிருத்து விழித்தாள்..

சில நிமிடங்களில் தன்னை மீட்டுக் கொண்டவள், பாத்ரூம் கதவைத் தட்ட, “என்ன டி..” என்றவனின் குரல் கேட்டதும் தான் மதிக்கு திருப்தியாய் இருந்தது..

“ஒண்ணுமில்லை ஒண்ணுமில்லை...வா..” அவனுக்குப் பதில் கொடுத்தவள், பாத்ரூம் வாசலிலே நிற்க, நேரம் தான் முப்பது நிமிடங்களை விழுங்கியதே தவிர அவன் வந்தபாடில்லை..

“மாமா…” அவளின் அழைப்பில் கொலைவெறி கொண்டவன்

“ஆமா! இப்போ சொல்லு மாமாவாம் மாமா...ஏன் டி இப்படி பண்ணுன..?” என்றவன் முதல் தடவைக்கே அயர்ந்து போய்விட்டான்..

அவனது கத்தலில் முகத்தைச் சுருக்கி யோசித்தவள், “நான் தான் வேண்டாம்னு சொன்னேனே நீதான குடிச்ச..” என்க

“நான் வெளில வரும் போது மவளே நீ அங்க இருந்து தூக்கிப் போட்டு மிதிச்சிடுவேன்..” வலியில் அவன் கத்துவதைக் கண்டவள்,

“சரி சரி..கோபப்படாதீங்க மாமா...இப்ப கூட ஒண்ணும் கெட்டுப் போகல ஒழுங்கா நான் கொடுக்குற மாத்திரையை போடு…” என்றவள் இப்போதும் அவ்விடத்தைவிட்டு அகலாமல் நிற்க

“இம்சை..நீ இன்னுமா போகல..” என்றவனுக்கும் நின்றபாடில்லை..

மேலும் அரை மணி நேரம் கடந்து வெளியே வந்தவன், கட்டிலில் அப்பாவியாய் அமர்ந்திருக்கும் தன் பத்தினி தெய்வத்தை முறைக்க, “இந்தா மாமா இந்த மாத்திரையை போடு..” எனக் கொடுத்தாள்..

அவளது கையைத் தட்டிவிட்டவன், ஏதோ கோபமாய் சொல்ல வர, அவன் திட்டப் போகிறான் எனக் காதை அவள் பொத்த போகையில் அறைந்து சாற்றியது பாத்ரூமின் கதவு..

மதி எவ்வளவோ சொல்லியும் மாத்திரை போட மாட்டேன் என நிராகரித்தவன், பாத்ரூமே கதியாய் கிடக்க, இரவு உணவின் நேரத்துக்குச் சரியாக கீழே சென்றவள் ஒரு வெட்டு வெட்டிவிட்டு அவனுக்குப் பாலும் ரஸ்க்கும் எடுத்து வந்து அறைக்குள் வைத்தாள்..

ஆதிக்கை எங்கே எனக் கேட்டவர்களிடம் அவன் அவசர வேலையாய் இருக்கிறான் எனச் சொல்லிவிட, அவனது அவசர வேலையை புரிந்து கொண்ட வேணிக்கும், ரேகாவிற்கும் ஆதிக்கை நினைத்துச் சிரிப்பு வந்தாலும் பாவமாய் தான் இருந்தது..

மதி பாலோடு அறைக்குள் நுழையும் போது ஆதிக் கட்டிலில் சாய்ந்து படுத்திருந்தான்..அவனது அருகே சென்றவள் தட்டை மேஜை மீது வைத்துவிட்டு, “ஆதிக் சாரி..” என மன்னிப்பு வேண்ட

வயிறு வலியில் துடித்துக் கொண்டிருந்தவனுக்கு அவளது மன்னிப்பு ஒருவித எரிச்சலைக் கொடுத்தது, “என்னடி பண்ணுறதெல்லாம் பண்ணிட்டு சாரி வேற கேட்குற..? நீ பண்ணுற எல்லா தப்புக்கும் அனுபவிக்கிறது நான் தான்...முதல்ல என் இமேஜ் என் வாழ்க்கைன்னு காலி பண்ணிட்டு இப்போ என்னை மொத்தமா கொன்னுடலாம்னு தான் இங்க வந்தியா..?” என்றவனிடம் மறுத்து ஏதோ சொல்ல வருபவளைத் தடுத்தவன்

“நான் உன்னைக் காதலிச்சு உன் பின்னாடி சுத்தி உன்னை ஏமாத்தியா கட்டிக்கிட்டேன்...சொல்லு..உங்க அப்பா அம்மா எனக்கு கட்டி வச்சாங்கன்னா அது உனக்கும் உன் குடும்பத்துக்கும் இருக்கிற பிரச்சனை அதுக்கு நானும் என் குடும்பமும் என்னடி பண்ணுவோம்...ம்..சொல்லு..”
 




Aadhiraa

SM Exclusive
Author
Joined
Jan 17, 2018
Messages
1,073
Reaction score
7,772
Location
Tirunelveli
“முதல்ல என்னை சோலி முடிச்சிட்டு..இப்போ உடம்பு சரியில்லாத எங்க அம்மாவோட சோலியையும் முடிச்சிடலாம்னு நினைச்சுட்ட அப்படித்தானே..தொலைச்சிடுவேன் ரஸ்கல்…எனக்குப் பிடிக்கல போயிட்டேன் பிடிக்கல போயிட்டேன்னு சொல்லுறீயே..இதே மாதிரி நம்ம கல்யாணம் முடிஞ்ச அடுத்த நாளே நான் போயிருந்தா நீ ஒத்துட்டு இருப்பியா..” அவனது ஒவ்வொரு கேள்விக்கும் மதியின் கண்கள் கண்ணீர் வடிக்க

“அழு டி நல்லா அழு...நம்பி வந்தவளை விட்டுக் கொடுக்க கூடாதுன்னு நான் இருக்கேன்..நீ என்னைவிட்டு ஓடிப் போனது என் குடும்பத்துக்கு தெரிஞ்சிருக்காதுன்னு நினைக்கிறியா? ஆனாலும் என்மேல இருக்க பாசத்துல என்னையும் உன் அப்பா அம்மாவையும் எந்தக் கேள்வியும் கேட்காம அமைதியா இருந்தாங்க..ச்சீ..உன்கிட்ட போய் இதெல்லாம் சொல்லுறேன் பாரு..உனக்கு யார் இருந்தா என்ன? செத்தா என்ன? உனக்கு உன் விருப்பம் தான முக்கியம்..”

“உன் அப்பா அம்மாவையே தலைக் குனிய வச்சி அசிங்கப்படுத்துனவளுக்கு நானும் என் குடும்பமும் எம்மாத்திரம்..உன்னால எனக்கு எவ்ளோ அசிங்க தெரியுமா மதி...என் முன்னாடி நிற்கவே யோசிச்சவன் எல்லாம் என் முன்னாடி உட்கார்ந்து என் வாழ்க்கைய விமர்சனம் பண்ணும் போது சொல்லு டி எனக்கு எப்படி இருந்திருக்கும்..? உன்மேல பயங்கர கோபத்துல இருந்தேன் டி...ஆனா பாரு நீ வந்து இரண்டு நாள் ஆச்சு இன்னும் உனக்கெதிரா என்னால துரும்ப கூட அசைக்க முடியல”

“என்னைக் கண்டா எனக்கே வெறுப்பா இருக்கு அதான் நேத்து குடிச்சேன்...உன்னை ஏதாச்சும் பண்ணனும் டீ..” சீற்றமாய் பேசி முடித்தவனுக்கு எதிரே நின்று முகத்தை மூடி அழும் மதியைப் பார்க்கவும் வேதனையாய் இருக்க, பக்கத்து அறைக்குச் சென்று கதவை மூடியவனுக்கு இன்னும் ரெட் சிக்னல் மட்டும் விழவேயில்லை..

நள்ளிரவு வரை அழுது தீர்த்த மதி, ஆதிக் இருக்கும் போது எந்த இடத்தில் நின்றிருந்தாலோ அதே இடத்தில் காலைக் குறுக்கிப் படுத்துக் கொண்டாள்…

ஆதியை விட்டுப் பிரிந்து கலீபோர்னியா சென்ற அன்றும் இப்படி தான் அழுது ஓய்ந்தாள்..அவளுக்கு அவனுடன் இருக்கப் பிடித்திருந்தாலும் அவன் தன்னுடன் கட்டாயத்தில் வாழ்வது பிடிக்காமல் தான் அவனைவிட்டு பிரிந்து அழுது தீர்த்தால்..இன்றும் அழுகிறாள், தன்னால் அவன் அடைந்த வேதனைக்காக..

இரண்டு மணி வாக்கில் அறைக்குள் பிரவேசித்த ஆதிக், குறுகிப் படுத்திருந்த மதியின் கன்னங்களில் இருந்த கண்ணீரின் தடத்தில் தன்னைத் தானே அடித்துக் கொண்டவன், “ஹேய் அழகி..” என அவள் கன்னம் துடைத்து எழுப்ப

“சாரி ஆதிக்...எனக்கு உன்னைப் பிடிக்கும்...ஐ லவ் யூ..” முணுமுணுத்தவள் திரும்பி படுத்துக் கொள்ள, அவளது லவ் யூவை ரசித்தவன்.. மெல்லமாய் அவளுக்கு வலிக்குமோ என நெற்றியிலும் கன்னத்திலும் அவள் உணராதவாறு இதழ் பதித்து பின் அவளது சிகைக் கோதிக் கொடுத்து உலுக்கி எழுப்பினான்..

தூக்கத்தில் எழுந்து மலங்க மலங்க விழித்தவள், “திட்டப் போறியா மாமா..” எனக் கேட்க, அவளது முகப்பாவங்களில் அணைக்கத் துடித்த கரம் கொண்டு தனது சிகையை அழுந்தக் கோதியவன்..

“ரொம்ப பெயின்ஆ இருக்கு மதி..” என்க

அவனது சோம்பலான குரலில் அரக்கபரக்க எழுந்தவள், “நான் போய் உங்களுக்கு சாப்பிட ஏதாச்சும் கொண்டு வரேன்..” என நகரப் போனவளின் கரம் பிடித்து இழுத்தவன்

“நோ மதி..வாட்டர் குடிச்சா கூட..முடியல..” என்றவனைக் கட்டிலில் சாய்வாக அமர வைத்தவள்

“இதுக்கு தான் ஆதி நான் அப்பவே டேப்லட் போடச் சொன்னேன்..இப்போ பன் கொண்டு வரேன் ப்ளாக் டீல முக்கி சாப்பிடு அப்புறம் டேப்லட் போடலாம்..கொஞ்சம் வெயிட் பண்ணு..ப்ளீஸ்..” அவன் பதில் சொல்லும் முன் கீழே விரைந்தவள், கிட்சனில் டீ போட, ஆதிக்கு என்னவாகியிருக்கும் என்ற பதட்டத்தில் தூங்காமல் விழித்திருந்த வேணிக்கு மதியின் அக்கறையில் தான் நிம்மதியே வந்தது..

“இனி மதி பார்த்துக் கொள்வாள்” என்ற நம்பிக்கையில் கவலையை தூக்கி வைத்தவர், அறைக்குள் சென்று படுத்தார்..

இனிப்பில்லாத தேயிலை தண்ணீர் தயாரித்தவள், குளிர்சாதனப் பெட்டியில் இருந்த பன்னை லேசாக சூடுபடுத்தி மேலே விரைவதற்குள் தூங்கிப் போயிருந்தான் ஆதிக்..

அவனது தலைமாட்டில் அமர்ந்தவள் சிகைக் கோதி கன்னம் தட்டியெழுப்ப, அவளது மெல்லிய சீண்டலில் விழித்தவன், அவள் கொடுத்தவற்றை எந்த மறுப்பும் சொல்லாமல் உண்டு முடித்தவன் அடுத்துச் சொன்னதில் மதியின் இதயம் ஒருமுறை நின்று துடித்தது..

ஆதி மதியுடன் இணைவான்..
 




Nadarajan

முதலமைச்சர்
Joined
Apr 28, 2018
Messages
5,558
Reaction score
6,007
Location
Tamilnadu
மிகவும் அருமையான பதிவு. மதி ஆதிக்கை இப்படி பலி வாங்கிட்டியே!! அப்டேட் கொடுத்த குயந்தபுள்ளைக்கு நன்றி:love::love:
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
எத்தனை ஊசின்னு சொல்லலையே!!! ???

என்னடா இது outgoing epi எதிர்பார்த்தா romantic epi வந்திருக்கு அப்படின்னு நினைச்சு முடிக்கிறதுக்குள்ள outgoing start ஆகிடுச்சு... பாவம் ஆதிக்...

வேணிம்மா நீங்க எதுக்கும் உங்க மருமகக்கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையாவே இருங்க, பயபுள்ள உங்களுக்கு மேல இருக்கு...
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ஆதிரா டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
எதிர்பாராமல் இன்னிக்கே
இன்னொரு அப்டேட்
கொடுத்ததுக்கு ரொம்ப
தேங்க்ஸ், குயந்தப்புள்ள
ஆதிரா டியர்
 




Deepivijay

மண்டலாதிபதி
Joined
Jan 29, 2018
Messages
452
Reaction score
976
Location
India
Iniku Enna achu kuyandha pullaiku ud ya potu engala magilchi vellathula medhaka vidringa:love::Dsurprise ud Ku epovume oru thani madhipu than:D(y)sollitale madhi Ava kadhalai:love:aduthu adhi turn a:love:summa irukuravuna usupi vidrathe intha mathi oda velaya pochu:LOL:ivungale ivlo naal irunthu IPO than romance Panna try panranga :Dadukulla ipdi mooku vertha maari red alert a potutingale k.p(kuyandha pulla):LOL:waiting ithe maari k.p surprise uds ku :love:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top