“முதல்ல என்னை சோலி முடிச்சிட்டு..இப்போ உடம்பு சரியில்லாத எங்க அம்மாவோட சோலியையும் முடிச்சிடலாம்னு நினைச்சுட்ட அப்படித்தானே..தொலைச்சிடுவேன் ரஸ்கல்…எனக்குப் பிடிக்கல போயிட்டேன் பிடிக்கல போயிட்டேன்னு சொல்லுறீயே..இதே மாதிரி நம்ம கல்யாணம் முடிஞ்ச அடுத்த நாளே நான் போயிருந்தா நீ ஒத்துட்டு இருப்பியா..” அவனது ஒவ்வொரு கேள்விக்கும் மதியின் கண்கள் கண்ணீர் வடிக்க
“அழு டி நல்லா அழு...நம்பி வந்தவளை விட்டுக் கொடுக்க கூடாதுன்னு நான் இருக்கேன்..நீ என்னைவிட்டு ஓடிப் போனது என் குடும்பத்துக்கு தெரிஞ்சிருக்காதுன்னு நினைக்கிறியா? ஆனாலும் என்மேல இருக்க பாசத்துல என்னையும் உன் அப்பா அம்மாவையும் எந்தக் கேள்வியும் கேட்காம அமைதியா இருந்தாங்க..ச்சீ..உன்கிட்ட போய் இதெல்லாம் சொல்லுறேன் பாரு..உனக்கு யார் இருந்தா என்ன? செத்தா என்ன? உனக்கு உன் விருப்பம் தான முக்கியம்..”
“உன் அப்பா அம்மாவையே தலைக் குனிய வச்சி அசிங்கப்படுத்துனவளுக்கு நானும் என் குடும்பமும் எம்மாத்திரம்..உன்னால எனக்கு எவ்ளோ அசிங்க தெரியுமா மதி...என் முன்னாடி நிற்கவே யோசிச்சவன் எல்லாம் என் முன்னாடி உட்கார்ந்து என் வாழ்க்கைய விமர்சனம் பண்ணும் போது சொல்லு டி எனக்கு எப்படி இருந்திருக்கும்..? உன்மேல பயங்கர கோபத்துல இருந்தேன் டி...ஆனா பாரு நீ வந்து இரண்டு நாள் ஆச்சு இன்னும் உனக்கெதிரா என்னால துரும்ப கூட அசைக்க முடியல”
“என்னைக் கண்டா எனக்கே வெறுப்பா இருக்கு அதான் நேத்து குடிச்சேன்...உன்னை ஏதாச்சும் பண்ணனும் டீ..” சீற்றமாய் பேசி முடித்தவனுக்கு எதிரே நின்று முகத்தை மூடி அழும் மதியைப் பார்க்கவும் வேதனையாய் இருக்க, பக்கத்து அறைக்குச் சென்று கதவை மூடியவனுக்கு இன்னும் ரெட் சிக்னல் மட்டும் விழவேயில்லை..
நள்ளிரவு வரை அழுது தீர்த்த மதி, ஆதிக் இருக்கும் போது எந்த இடத்தில் நின்றிருந்தாலோ அதே இடத்தில் காலைக் குறுக்கிப் படுத்துக் கொண்டாள்…
ஆதியை விட்டுப் பிரிந்து கலீபோர்னியா சென்ற அன்றும் இப்படி தான் அழுது ஓய்ந்தாள்..அவளுக்கு அவனுடன் இருக்கப் பிடித்திருந்தாலும் அவன் தன்னுடன் கட்டாயத்தில் வாழ்வது பிடிக்காமல் தான் அவனைவிட்டு பிரிந்து அழுது தீர்த்தால்..இன்றும் அழுகிறாள், தன்னால் அவன் அடைந்த வேதனைக்காக..
இரண்டு மணி வாக்கில் அறைக்குள் பிரவேசித்த ஆதிக், குறுகிப் படுத்திருந்த மதியின் கன்னங்களில் இருந்த கண்ணீரின் தடத்தில் தன்னைத் தானே அடித்துக் கொண்டவன், “ஹேய் அழகி..” என அவள் கன்னம் துடைத்து எழுப்ப
“சாரி ஆதிக்...எனக்கு உன்னைப் பிடிக்கும்...ஐ லவ் யூ..” முணுமுணுத்தவள் திரும்பி படுத்துக் கொள்ள, அவளது லவ் யூவை ரசித்தவன்.. மெல்லமாய் அவளுக்கு வலிக்குமோ என நெற்றியிலும் கன்னத்திலும் அவள் உணராதவாறு இதழ் பதித்து பின் அவளது சிகைக் கோதிக் கொடுத்து உலுக்கி எழுப்பினான்..
தூக்கத்தில் எழுந்து மலங்க மலங்க விழித்தவள், “திட்டப் போறியா மாமா..” எனக் கேட்க, அவளது முகப்பாவங்களில் அணைக்கத் துடித்த கரம் கொண்டு தனது சிகையை அழுந்தக் கோதியவன்..
“ரொம்ப பெயின்ஆ இருக்கு மதி..” என்க
அவனது சோம்பலான குரலில் அரக்கபரக்க எழுந்தவள், “நான் போய் உங்களுக்கு சாப்பிட ஏதாச்சும் கொண்டு வரேன்..” என நகரப் போனவளின் கரம் பிடித்து இழுத்தவன்
“நோ மதி..வாட்டர் குடிச்சா கூட..முடியல..” என்றவனைக் கட்டிலில் சாய்வாக அமர வைத்தவள்
“இதுக்கு தான் ஆதி நான் அப்பவே டேப்லட் போடச் சொன்னேன்..இப்போ பன் கொண்டு வரேன் ப்ளாக் டீல முக்கி சாப்பிடு அப்புறம் டேப்லட் போடலாம்..கொஞ்சம் வெயிட் பண்ணு..ப்ளீஸ்..” அவன் பதில் சொல்லும் முன் கீழே விரைந்தவள், கிட்சனில் டீ போட, ஆதிக்கு என்னவாகியிருக்கும் என்ற பதட்டத்தில் தூங்காமல் விழித்திருந்த வேணிக்கு மதியின் அக்கறையில் தான் நிம்மதியே வந்தது..
“இனி மதி பார்த்துக் கொள்வாள்” என்ற நம்பிக்கையில் கவலையை தூக்கி வைத்தவர், அறைக்குள் சென்று படுத்தார்..
இனிப்பில்லாத தேயிலை தண்ணீர் தயாரித்தவள், குளிர்சாதனப் பெட்டியில் இருந்த பன்னை லேசாக சூடுபடுத்தி மேலே விரைவதற்குள் தூங்கிப் போயிருந்தான் ஆதிக்..
அவனது தலைமாட்டில் அமர்ந்தவள் சிகைக் கோதி கன்னம் தட்டியெழுப்ப, அவளது மெல்லிய சீண்டலில் விழித்தவன், அவள் கொடுத்தவற்றை எந்த மறுப்பும் சொல்லாமல் உண்டு முடித்தவன் அடுத்துச் சொன்னதில் மதியின் இதயம் ஒருமுறை நின்று துடித்தது..
ஆதி மதியுடன் இணைவான்..