காலையில் எல்லாரிடமும் கூற லக்ஷ்மிக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது.... அவன் அருகில் வந்தவர் “ ரொம்ப சந்தோசம் வெற்றி உன்கிட்ட அவளை எங்கையாவது அழைச்சுட்டு போக சொல்லணும்னு இருந்தேன்... உன்கிட்ட சொன்னா, சக்திகிட்டயும் சொல்லணும், ஆனா குழந்தையை வச்சுக்கிட்டு சக்தி எங்கையும் போக முடியாது அது தான் மனசுக்குள்ளையே வச்சுகிட்டேன்... சந்தோசமா போய்ட்டுவாங்க “ என கூற
இதழியோ அப்படியோ சந்தோசமாக இனியாளை அணைத்துக் கொண்டாள்...
அன்று மாலையே இருவரும் முணார் நோக்கி கிளம்பினர்... சுற்றிலும் பச்சை கம்பளம் விரிக்கபட்டதுப் போல் எங்கும் சுற்றி தெரிந்த தேயிலை தோட்டத்தின் அழகை ரசித்தபடி காரிலிருந்து இறங்கினர் இருவரும்...
சட்டென்று தாவி அணைத்த ஈர தென்றலும், நாசிக்குள்நிறைந்த தைல வாசனையும், மனதை பெரிதும் வசபடுத்த, கன்னத்தில் கைவைத்து அப்படியே அதிசயித்து நின்றாள் இனியாள்...
அவளின் மகிழ்ச்சியை பார்த்து கொண்டிருந்த வெற்றி, அவள் அருகில் வந்து “ ஜில்லு ஒரு வாரம் இங்க தான் இருக்க போறோம் மெதுவா ரசிக்கலாம் வா “ எனஅவர்களுகென்று ஏற்பாடு செய்திருந்த காட்டேஜ்நோக்கி அழைத்து சென்றான்...
குளித்து, உண்டு முடித்துமீண்டும் வெளியில் வர, உடலை ஊசி போல் குளிர் தாக்க இருகைகளையும் தேய்த்து கன்னத்தில் வைத்து அந்த இயற்கையோடு இயற்கையாக சிறுகுழந்தையாக குதுகளித்தவளை அப்படியேவாரி அணைக்க கைகள் பரபரக்க சுற்றிலும் இருக்கும் ஆட்களை கண்டு அடக்கி கொண்டான் வெற்றி...
சிறிது நேரத்தில் அறைக்கு திரும்ப, அவளோ ஜன்னல் கதவுகளை திறந்து புகை மண்டலங்களுக்கு இடையே வீற்றிருக்கும் மலைராணியை ரசித்திருக்க..
கட்டிலில் அமர்ந்திருந்த வெற்றியோ அவனின் ராணியை ரசித்திருந்தான்... குளிர் தாங்கமுடியாமல் கைகளை தேய்த்து,கன்னத்தில் அழுத்தி இயற்கையை ரசித்திருக்க, காண்டான வெற்றி “ இவளை இவளை இப்படியே விட்டு வைக்கிறது நல்லதில்லை “ என எண்ணி அவள் அருகில் சென்றான்..
அவளோ வாயை குவித்து “ உஷ் “ என்ற சத்தத்துடன் கைகளை தேய்த்து கன்னத்தில் வைக்க, அவள் அருகில் வந்த வெற்றி அவளை பின்னிலிருந்து அணைத்து கன்னத்தில் முகத்தை பதித்தவன்..
“ என்ன ஜில்லு செம குளிர்ல “ என கிறக்கமாக வினவ..
அவனை நோக்கி திரும்பியவள் “ ஆமா மாமா.. செம குளிர் “ என கூறி மீண்டும் வாயை குவித்து ஊத வர அவளின் கன்னத்தை பிடித்து அவளின் இதழை சிறைசெய்ய,
உடலை ஊசியாக தழுவிய குளிர் இதமாக மாற, அந்த இதத்தில் மிதமாக கரைந்து போக ஆரம்பித்தனர் அந்த காதல் ஜோடிகள்....
அன்று ஆருஷை தூக்கி நெஞ்சில் படுக்க வைத்திருந்த சக்தி கண்ணை மூடி கட்டிலில் படுத்திருந்தான்... ஆருஷோ அவனின் நெஞ்சில் சுகமாக படுத்திருக்க.. அதிலும் ஆருஷ் ஏதோ புரியாத மொழியில் அவனிடம் ஏதோ கூறிக் கொண்டிருந்தான்... இப்பொழுதுதான் சின்ன சின்ன எட்டு எடுத்து வைக்கும் அளவுக்கு வளர்ந்திருந்தான் ஆருஷன்...
குழந்தையோ அவனின்மீசையை பிடித்து “ ப்பா..ப்பா..” என கூறிக் கொண்டிருக்க “ செல்லம் அப்பா சொல்லுறீங்களா.? “ எனசக்தி கொஞ்ச.. அந்த நேரம் அறைக்கு வந்த இதழி கண்ணில் இக்காட்சி பட....
மனமோ“ டேய் வர வர.. நீ என் இடத்தை பிடிச்சுகிட்டு இருக்க... மாமா உன்னையே சுத்தி சுத்தி வாரார்.. என்னை கண்டுக்கிறதே இல்ல.. பேசாமமாமா மனசுல இருக்கிறதை என்கிட்ட சொல்லாமலே இருந்திருக்கலாம் ” என எண்ணிக் கொண்டே அவன் அருகில் வந்து குழந்தையை தூக்க வர,
மனமோ“ நீ ஏண்டி அவங்களை பார்த்து பொறாமை படுற நீ வேண்ணா அவன் பக்கத்துல போய் இன்னொரு நெஞ்சுல படுத்து கிட்டு அவன் கிட்ட பேசு அதை விட்டுட்டு இப்படி பொறாமை படாத “ என அவள் மனது தலையில் கொட்ட..
அவர்களைப் பார்த்துக் கொண்டே அருகில் இருந்த சோபாவில் கையில் வைத்திருந்த ஆருஷ் உணவை அருகில் வைத்துக் கொண்டு அமர்ந்துக் கொண்டாள்...
அப்பொழுது தான் அவளை கவனித்த சக்தி “ டேய் செல்லம்.. அம்மா வந்துட்டா.. இனி உன்னை கொஞ்சுனா ரொம்ப ஜெலஸ் ஆகிருவாங்க... அவங்க பாவம் தானே “ எனகுறும்புடன் கூறி அவளைப் பார்த்து கண்சிமிட்ட..,
“ ரொம்பத்தான்“ என இதழை சுழித்த அவள் அவனை தூக்க வர,
அவன் கூறுவதுப் புரிந்ததுப் போல் ஆருஷ்சிணுங்கலாகஅழ ஆரம்பிக்க, அவன் அருகில் வேகமாக வந்த இதழி “ அம்மாகிட்ட வாங்கசெல்லம்“ என அவனை தூக்க வர, அவள் அருகில் வரவும் “ அம்மா தன்னை அப்பாகிட்ட இருந்து தூக்கி விடுவாளோ “ என எண்ணிய ஆருஷ் வேகமாக அழ ஆரம்பித்தான்...
அவன் வேகமாக அழவும் பதறியசக்தி“ இங்கையே இருக்கட்டும் லிப்ஸ்.. இப்படியே அவனுக்கு ஊட்டி விடு “ என கூறி ஆருஷை நோக்கி “ அப்பாமடியிலயே இருங்க செல்லம்,அம்மா ஊட்டி விடுவா “ என கூற, இருவரையும் பார்த்து இப்பொழுது தான் முளைத்த நான்கு பல்லையும் காட்டி “ ஈஈ“ என சிரித்து வைத்தான் அவன்...
சக்தி முகத்தை இதழி பார்க்க அவன் ஆசையும், குழந்தையின் சிரிப்பும் கண்ணில் பட கிண்ணத்தை அருகில் வைத்து விட்டு அங்கிருந்த சிறு நாற்காலியைஅவன் அருகில் இழுத்துப் போட்டு அமர்ந்தாள்...இப்பொழுதெல்லாம் அவனின் முகத்தை வைத்தே அவனின் சந்தோசத்தை அறிந்துக் கொள்வாள் அவள்...
ஆருஷை மடியில் வைத்திருக்க, கொஞ்சம் கொஞ்சமாக அவனுக்கு ஊட்ட அவனோ நாலு பல்லையும் காட்டி அப்பாவையும், அம்மாவையும் பார்த்துக் கொண்டே சாப்பிட, சக்தியோ ஊட்டும் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான்...
எப்பொழுதும் அவளின் முகம் ஒரு சோக சித்திரமாக அவன் கண்களுக்கு தெரியும், ஆனால் இன்றோ அவளின் முகம் பல வர்ண ஜாலங்களை காட்ட அப்படியே பார்த்திருந்தான்... அவளின் இந்த மாற்றத்துக்கு காரணம் அவளின் சின்ன சின்ன ஆசை கூட நிறைவேறிய சந்தோசமே...!!
அவனின்முகம்குறுஞ்சிரிப்பை காட்ட திடீரென “ டேய் செல்லம். அப்பாக்கு அம்மா ஊட்டி விடமாட்டாங்களாமா..? “ என வினவ.
அவனைப் பார்த்த அவள்“ அம்மாவுக்கு அப்பாவை ஊட்டி விட சொல்லுடா செல்லம் “ எனகுழந்தையிடம் கூறி, அவனிடம்“ இனி இப்படி குழந்தையை வச்சுக்கிட்டு என்கிட்ட பேசுவியா“ என கண்ணால் முறைக்க..
அவளின் முறைப்பை புறம் தள்ளியவன் “ அப்படியா... அம்மாவுக்கு ஊட்டி விட்டா, அப்பாவுக்கு அம்மா ஊட்டி விடுவாங்களாமா ..? “ எனஅவளை பார்த்துக் கொண்டே கள்ள சிரிப்புடன் கேட்க...
அவன் பார்வையை கண்டவள் “ இவன் பார்வையே சரி இல்லையே இதழி கவனமா இருடி“ என தனக்கு தானே கூறிக் கொண்டவள், அவனை சந்தேகமாக பார்க்க,
“ ஆஹா.. உசாராயிட்டா.. சக்தி மீதியை பிறகு வச்சுக்கலாம் “ என எண்ணிய அவன் “ என்ன சாப்பிட ரெடியா..? “ என கேட்க..
அவனின் கேள்வியை அறிந்தும் அறியாதவள் போல் “ இவன் குழந்தையா இருக்கதுனால தான இவனை வச்சு என்னை வம்பிளுகிறீங்க “ என சிணுங்கலுடன் கேட்க..
“ இவன் மட்டும் வளர்ந்திருந்தா..? உன்னை எனக்கு ஊட்ட வச்சுட்டு தான் வேறு வேலை பார்த்திருப்பான்... இப்படி கெஞ்ச விட்டிருக்க மாட்டான் “ எனகுழந்தையை பார்த்துக் கொண்டே புன்சிரிப்புடன் கூற..
அவனின் சிரிப்பை அப்படியே ரசித்துப் பார்த்திருந்தாள்... அவளின் முகத்தை கண்டவன் “ இவளுக்கு இப்படி தூரத்தில இருந்து ரசிக்கிறதே வேலையாப் போச்சு “ என எண்ணி அவளை நோக்கி “ என்ன“ என இருபுருவம் உயர்த்தி கேட்க...
“இத்தனை காதலை வச்சுகிட்டு இன்னும் எத்தனை நாள் இப்படி தள்ளி தள்ளி போவ குட்டிமாமா “ என அவனைப் பார்த்து கேட்க..
" ஏன் அது உனக்கு தெரியாதா " என அவளை பார்த்து கண்களால் கேட்டு குழந்தையை அவள் கையில் கொடுத்துவிட்டு வெளியில்செல்ல எத்தனிக்க..
இந்த முறை அவனின் பார்வையை சரியாக படித்தவள், அவன் வெளியில் செல்லும் முன் அவளின் ஷர்ட்டை பற்றி இழுத்து " யோவ் உனக்கு என்னதான்யா பிரச்னை..? " என அதிரடியாய் பழைய இதழியாய் வீறு கொண்டு எழுந்து கேட்க…
அவளின் இந்த அதிரடியில் அவளை நோக்கி திரும்பிய அவன் கண்கள்மின்ன அவளை பார்த்தான்...
வேர் மெல்ல சாய்ந்தது....