ஹாய்.. ஹலோ... மக்களே....
என்னை வேரோடு சாய்த்தவளே(னே).. !! அடுத்த எபி 17 கொண்டு வந்துட்டேன்... கதையை தேடுன மக்கள் எல்லாரும் ஓடி வந்து படிச்சுட்டு லைக் & கமெண்ட் பண்ணுங்க... கமெண்ட் பண்ணுறவங்க அப்படியே ஒரு சக்திக்கு ஒரு ஹார்ட் விட்டுட்டு போங்கப்பா.. மீ பாவம்.... இந்த எபியில் ஏதாவது டவுட் சந்தேகம் இருந்தா கேளுங்க... எதுக்குன்னா அடுத்த எபியோட பிளாஷ்பேக் முடிக்கலாம் என்று நினைக்கிறேன்.... “ என்ன கண்ணு பாட்டிய இப்படி சாச்சுபுட்டீங்க “ என்று கேட்டவங்களுக்காக அவங்க இன்னும் இருக்காங்க.. “ என்னோட நண்பி வருங்கால டாக்டர் மஹா அவர்கள் கூறிய படி பாட்டியை கொஞ்சமாக தான் சாய்த்திருகிறேன்... அடுத்து எப்படி சாய்க்க என்று நாளை டாக்டர் ஐடியா தருவதாக கூறி இருக்கிறார்.... இந்த எபிக்கு கொஞ்சம் டவுட் கிளியர் செய்த டாக்டர் படித்துக் கொண்டிருக்கும் என் தோழி மகாவுக்கு ரொம்ப நன்றிகள் “.... கூடவே “ எபியை படித்து உங்க கருத்து கூறும் உங்க எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி செல்லம்ஸ் “...
வேர் – 17
சக்திவேலுக்கு தன் தாயை திட்டியதில் இருந்து மனதே கேட்கவில்லை... அவனுக்கு லக்ஷ்மி என்றால் உயிர் என்று கூட சொல்லுவான்... எந்த பிள்ளைக்கு தான் தன் தாயை பிடிக்காமல் போகும்...
வெற்றியை விட லக்ஷ்மி அதிகம் கைக்குள் வைத்திருந்தது சக்தியை தான்... தன் குணத்தை அப்படியே அவனுக்கு தள்ளிவிட்டிருந்தார்.. ஆனாலும் அவன் வளர வளர குணத்தை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் கொண்டான்...
ஆனாலும் அவரை திட்டியது மனத்தை வருத்த அவரை நோக்கி சென்றான்... கட்டிலில் படுத்திருந்தவர், இவனை கண்டதும் அந்த பக்கம் திரும்பி படுத்துக் கொண்டார்..
மெதுவாக சிரித்துக் கொண்டு “ ம்மா “ என அழைத்துக் கொண்டே கட்டிலின் அந்த பக்கம் அமர்ந்துக் கொண்டான்..
அவர் மீண்டும் திரும்பி படுக்க.. “ ம்மா.. என்னம்மா நீ... இதுகெல்லாம் கோச்சுகிட்டா எப்படி... நான் என்ன தப்பா சொல்லிட்டேன்.. நீ பண்ணுறது நல்லதில்லைம்மா... பெண் பாவம் பொல்லாதது.. அதிலும் இப்படி ஏழைகளின் சாபம் நம்மை சும்மா விடாதும்மா... உங்க பிள்ளைகள் நல்லா இருக்கணும்ன்னா இப்படி கொஞ்சம் நல்லது செய்யணும்மா... அவங்க ரெண்டு பேர் மேலையும் உங்களுக்கு அப்படி என்ன கோபம் சொல்லுங்க “
“ நம்ம வீட்டுல வேலைகாரிகளை தலையில் எடுத்து வச்சு கொஞ்சுறாங்கடா... எங்க வீட்டுல அவங்களை சமையலறை தவிர எங்கையும் விடமாட்டங்க... ஆனா இங்க எல்லாம் தலைகீழா நடக்குது... அதிலும் உன் பாட்டி அவளுகளையே எனக்கு மருமகளா கொண்டு வர பாக்குறாங்க... நம்ம குடும்பம் என்ன, கௌரவம் என்ன.. இவங்களை நம்ம வீட்டுக்கு மருமகளா கொண்டு வந்தா நம்ம மதிப்பு, மரியாதை என்ன ஆகிறது...
காலம் காலமா பாரம்பரியமா வாழுற குடும்பம்டா... அதை இந்த ஒன்னும் இல்லாதவளுக வந்து அழிக்கணுமா..? எனக்கு ஒரு ஆசை இருக்கும்டா... உங்க பாட்டி மட்டும் உங்க அப்பாவுக்கு என்னை கல்யாணம் பண்ண நினைக்கும் போது முதலில் விசாரித்ததே நல்ல குடும்பமா..? நம்ம ஸ்டேட்டஸ்க்கு ஒத்து வருமா இப்படி எல்லாம் பார்த்து தான் என்னை இங்க கொண்டு வந்தாங்க..
அதே போல தான நானும் இருப்பேன்.. எனக்கு வர மருமகளும் நல்ல வீட்டுல இருந்து வரணும், என் பசங்களும் நல்லா வாழணும் என்று நான் நினைகுறதுல என்ன தப்பிருக்கு... அது தான் அவங்களை இந்த வீட்டுக்கு மருமகளா.? கொண்டு வந்திர கூடாதே என்ற ஒரே காரணத்துக்காக மட்டும் தான் நான் அவங்களை வெறுத்து ஒதுக்குறேன்..
இதே இது நாளைக்கே ரெண்டு பேருக்கும் ஒரு கல்யாணத்தை பண்ணி வெளியில் அனுப்பின பிறகு இந்த வீட்டுக்கு தாராளமா வரட்டும், போகட்டும் நான் ஒண்ணுமே சொல்லமாட்டேன்...
ஆனா என்னமோ அவங்க வீடு மாதிரி அதிக உரிமை எடுக்குறதும், உங்க பாட்டி, உன் தம்பி, என் புருஷன் அது தான் உங்க அப்பா எல்லாரும் தலையில் தூக்கி வச்சு ஆடுறதும் எனக்கு பிடிக்கலை...
நீ மட்டும் தான் அவங்களை கண்டும் காணாம இருந்த.. ஆனா இப்போ அதுவும் போச்சு.. உன்னை நல்லா மயக்கி வச்சுட்டாங்க “ என கண்ணீர் வடிக்க...
அவர் கூறுவதும் அவனுக்கு சரியாக பட அமைதிக்காத்தான்.. அவனும் இந்த தகுதி பார்த்து பழகும் ரகம் என்பதால் அவர் கூற்று சரியாக பட்டதோ என்னவோ... ஆனாலும் அவர்கள் அத்தை பொண்ணுங்க என்று அவனுக்கும் சொல்ல மனது வரவில்ல...
அதிலும் அவன் எண்ணம் முழுவதும் ஒன்றே ஓன்று தான்... இதழியை தன் தாய்க்கு நன்கு பிடித்த பிறகு அவளை கைபிடிக்க வேண்டும் என்று எண்ணி இருந்தான்... ஆனால் அவன் ஓன்று நினைக்க, நடப்பது வேறாக இருக்கிறது... என்ன செய்வது... “ ஆனாலும் அவரின் கண்ணீர் அவனுக்கு வேதனையளிக்க.. அம்மாவை முதலில் சமாளிப்போம் என எண்ணி.., அவரை சகஜம் ஆக்கும் பொருட்டு “ ம்மா.. என்னம்மா நீ.. இதுக்கு போய் அழுற.... நான் யாரு... என்னை யாரும் மயக்க முடியாது.. நான் உன் சக்திம்மா “ என காலரை தூக்கி விட..
அவனின் மனசாட்சியோ “ குட்டிமாமா என்று ஒரு சத்தம் கேட்டா போதும் அய்யா சத்தமில்லாம மயங்கிருவாறு “ என அவனை வார... “ சகுனி.. சகுனி.. “ என அதை அடித்து விரட்டிய அவன்..
“ ம்மா... எல்லாம் நான் பாத்துகிறேன்.. நீ அவங்களை திட்டாமல் மட்டும் இரு... உனக்கு நேரத்துக்கு நேரம் சாப்பாடு தருவது அவங்க தான்... வீட்டுல எல்லாம் பொறுப்பா பாத்துகிறாங்க.. நீ எதுக்கும்மா அவங்க மேல வெறுப்பை சம்பாதிக்குற..
ஒரு வேளை வெற்றி எனக்கு முன்னாடியே இனியை சத்தமில்லாமல் கல்யாணம் பண்ணிட்டு வந்தா நம்ம கெளரவம் என்ன ஆகிறது... அதிலும் நீ இப்படி அவங்களை பேசிட்டே இருந்தா யாரும் வேண்டாம் என்று சக்தி தனியா போய்ட்டானா.? நம்ம மதிப்பு என்ன ஆகுறது....
கொஞ்ச நாள் தாம்மா அவங்களை சகிச்சுக்கோ... எல்லாம் சரியா போகும் என கூறி வெளியில் வரவும், நித்தி லக்ஷ்மி அறைக்கு செல்லவும் சரியாக இருந்தது... அவளை ஒரு பார்வைப் பார்த்துக் கொண்டே அறையை விட்டு வெளியில் வந்தான்....
வெளியில் வந்தவன் இதழி கையால் “ ஒரு காதல் டீயை “ குடித்துவிட்டு செங்கல் சூளைக்கு சென்றான் அவன்..
வெற்றியோ திருநெல்வேலி ஆபிஸ் மட்டுமே குறி என்று அங்கயே படுத்துக் கொண்டான்..
மாலை எப்படியும் ஒரு அரைமணிநேரம் இனியாளுக்காக வந்து விடுவான் வெற்றி... எம்.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் முதல் வருடத்தில் இருக்கிறாள்.. அதிலும் லக்ஷ்மி முன் இருவரும் பார்த்துக் கொள்வதே இல்ல... வெற்றி வீட்டில் அதிகம் இருப்பதும் இல்ல...
முன்னொரு நாள் இனியாள் கல்லூரி விட்டு பஸ் ஸ்டாண்ட் வர திடீரென அவள் முன் காரை நிறுத்திய வெற்றி கதவை அவளுக்காக திறந்து விட்டு “ ஏறு “ என கூற....
“ ஊஹும்.. நான் மாட்டேன் “ என சிறுகுழந்தையாக மறுத்தவளை.., முறைத்துப் பார்த்த அவன் “ இப்போ ஏற போறியா இல்ல இறங்கி வந்து உன்னை தூக்கி காரில் உட்காரவைக்கவா “ என கேட்டுக் கொண்டே காரை விட்டு இறங்க...
“ வேண்டாம்.. வேண்டாம்.. நானே ஏறிக்கிறேன் “ என பயந்து கூறிக் கொண்டே சுற்றும் முற்றும் பார்த்து மெதுவாக ஏற கால் வைக்க..
“ யம்மா.. தாயே ஏறும்மா.. கொஞ்சம் உன்கிட்ட பேசணும் “ என கெஞ்சி அழைக்க
அவன் கெஞ்சுவது பொறுக்காமல்.... இல்லை சகிக்காமல் உடனே ஏறிக் கொண்டாள் இனியாள்...
காரை கொஞ்ச நேரம் அமைதியாக ஓட்டி சென்ற வெற்றி ஒரு இடத்தில நிறுத்தி அவளை நோக்கி திரும்பி அவளுக்கு வாங்கி வைத்திருந்த பாணி பூரியை அவளிடம் கொடுக்க...
அவள் “ வேண்டாம் “ என மறுக்க.. “ தாயே.. என் பொண்டாட்டி... மயக்க மருந்து எதையும் கலக்கல... அதிலும் அப்படி மயக்க மருந்து தந்து உன்னை நான் கிஸ் பண்ணனும்னு எந்த அவசியமும் இல்லடி... “ என சம்பந்தமே இல்லாமல் பேச..
அவளின் முழியை கண்ட அவன் “ என்ன இப்போ சம்பந்தமே இல்லாமல் கிஸ் பத்தி பேசுறானேன்னு நினைக்குறியா.. நினைக்கணும்டி... அவன் இவன் லவ் பண்ணும் போதே அப்படி கிஸ் பண்ணுனேன்.. அங்க போனேன் இங்க போனேன் என்று சொல்லுறானுக..
இங்க பல வருசமா லவ் பண்ணி ஒண்ணுக்கும் வழியை காணும் “ என புலம்ப...
“ அன்னைக்கு குற்றாலத்துல வச்சு கிஸ் பண்ணிட்டு பொய்யா சொல்லுற “ என மனதில் எண்ணிய அவள் எம்பி அவன் தலையில் கொட்ட..
தலையை தேய்த்து விட்ட அவன் “ அது ஒரு கிஸ்ஸாடி... நான் அது தான் கிராமத்து கிஸ்ன்னு நெனச்சேன்.. பார்த்தா அது பழங்கால பட்டிக்காடு கிஸ்ஸாம்... அந்த கால கருப்பு வெள்ளை கிஸ்... “ என முகத்தை சுளித்துக் கொண்டு “ இங்க வாயேன் “ என மெதுவாக அழைக்க..
அவனை சந்தேகமாக பார்த்த அவள்.. அவனை விட்டு தள்ளி அமர.., “ அட போமா.. நீ தள்ளி போனா நான் பக்கத்துல நெருங்கி வருவேன் “ என கூறி அவள் அருகில் வந்து.. “ இந்த கிராமத்து கிஸ் என்றால் பச்சக்குன்னு நச்சுன்னு கன்னத்துல அழுந்த குடுக்கணுமாம்.. ஒன்னும் எனக்கு தரியா ” என ஹஸ்கி வாய்சில் கேட்க...
முகம் சிவக்க தலையை குனிந்துக் கொண்டாள் அவள்... அவளின் வெட்கத்தை ரசித்துக் கொண்டே.. இந்தா என பானிபூரியை அவள் கையில் கொடுக்க.. மெதுவாக வாங்கிக் கொண்டாள் அவள்...
அதை சாப்ட்டுக் கொண்டே பேசிக் கொண்டு இருக்க... ஒரு பானிபூரியை எடுத்து அவனிடம் நீட்ட “ வேண்டாம்மா நீ சாப்டு “என கூறி அவள் சாப்டும் அழகை ரசித்துக் கொண்டு இருந்தான்...
மெதுவாக “ இனி “ என அழைக்க...
என்னை வேரோடு சாய்த்தவளே(னே).. !! அடுத்த எபி 17 கொண்டு வந்துட்டேன்... கதையை தேடுன மக்கள் எல்லாரும் ஓடி வந்து படிச்சுட்டு லைக் & கமெண்ட் பண்ணுங்க... கமெண்ட் பண்ணுறவங்க அப்படியே ஒரு சக்திக்கு ஒரு ஹார்ட் விட்டுட்டு போங்கப்பா.. மீ பாவம்.... இந்த எபியில் ஏதாவது டவுட் சந்தேகம் இருந்தா கேளுங்க... எதுக்குன்னா அடுத்த எபியோட பிளாஷ்பேக் முடிக்கலாம் என்று நினைக்கிறேன்.... “ என்ன கண்ணு பாட்டிய இப்படி சாச்சுபுட்டீங்க “ என்று கேட்டவங்களுக்காக அவங்க இன்னும் இருக்காங்க.. “ என்னோட நண்பி வருங்கால டாக்டர் மஹா அவர்கள் கூறிய படி பாட்டியை கொஞ்சமாக தான் சாய்த்திருகிறேன்... அடுத்து எப்படி சாய்க்க என்று நாளை டாக்டர் ஐடியா தருவதாக கூறி இருக்கிறார்.... இந்த எபிக்கு கொஞ்சம் டவுட் கிளியர் செய்த டாக்டர் படித்துக் கொண்டிருக்கும் என் தோழி மகாவுக்கு ரொம்ப நன்றிகள் “.... கூடவே “ எபியை படித்து உங்க கருத்து கூறும் உங்க எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி செல்லம்ஸ் “...
வேர் – 17
சக்திவேலுக்கு தன் தாயை திட்டியதில் இருந்து மனதே கேட்கவில்லை... அவனுக்கு லக்ஷ்மி என்றால் உயிர் என்று கூட சொல்லுவான்... எந்த பிள்ளைக்கு தான் தன் தாயை பிடிக்காமல் போகும்...
வெற்றியை விட லக்ஷ்மி அதிகம் கைக்குள் வைத்திருந்தது சக்தியை தான்... தன் குணத்தை அப்படியே அவனுக்கு தள்ளிவிட்டிருந்தார்.. ஆனாலும் அவன் வளர வளர குணத்தை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் கொண்டான்...
ஆனாலும் அவரை திட்டியது மனத்தை வருத்த அவரை நோக்கி சென்றான்... கட்டிலில் படுத்திருந்தவர், இவனை கண்டதும் அந்த பக்கம் திரும்பி படுத்துக் கொண்டார்..
மெதுவாக சிரித்துக் கொண்டு “ ம்மா “ என அழைத்துக் கொண்டே கட்டிலின் அந்த பக்கம் அமர்ந்துக் கொண்டான்..
அவர் மீண்டும் திரும்பி படுக்க.. “ ம்மா.. என்னம்மா நீ... இதுகெல்லாம் கோச்சுகிட்டா எப்படி... நான் என்ன தப்பா சொல்லிட்டேன்.. நீ பண்ணுறது நல்லதில்லைம்மா... பெண் பாவம் பொல்லாதது.. அதிலும் இப்படி ஏழைகளின் சாபம் நம்மை சும்மா விடாதும்மா... உங்க பிள்ளைகள் நல்லா இருக்கணும்ன்னா இப்படி கொஞ்சம் நல்லது செய்யணும்மா... அவங்க ரெண்டு பேர் மேலையும் உங்களுக்கு அப்படி என்ன கோபம் சொல்லுங்க “
“ நம்ம வீட்டுல வேலைகாரிகளை தலையில் எடுத்து வச்சு கொஞ்சுறாங்கடா... எங்க வீட்டுல அவங்களை சமையலறை தவிர எங்கையும் விடமாட்டங்க... ஆனா இங்க எல்லாம் தலைகீழா நடக்குது... அதிலும் உன் பாட்டி அவளுகளையே எனக்கு மருமகளா கொண்டு வர பாக்குறாங்க... நம்ம குடும்பம் என்ன, கௌரவம் என்ன.. இவங்களை நம்ம வீட்டுக்கு மருமகளா கொண்டு வந்தா நம்ம மதிப்பு, மரியாதை என்ன ஆகிறது...
காலம் காலமா பாரம்பரியமா வாழுற குடும்பம்டா... அதை இந்த ஒன்னும் இல்லாதவளுக வந்து அழிக்கணுமா..? எனக்கு ஒரு ஆசை இருக்கும்டா... உங்க பாட்டி மட்டும் உங்க அப்பாவுக்கு என்னை கல்யாணம் பண்ண நினைக்கும் போது முதலில் விசாரித்ததே நல்ல குடும்பமா..? நம்ம ஸ்டேட்டஸ்க்கு ஒத்து வருமா இப்படி எல்லாம் பார்த்து தான் என்னை இங்க கொண்டு வந்தாங்க..
அதே போல தான நானும் இருப்பேன்.. எனக்கு வர மருமகளும் நல்ல வீட்டுல இருந்து வரணும், என் பசங்களும் நல்லா வாழணும் என்று நான் நினைகுறதுல என்ன தப்பிருக்கு... அது தான் அவங்களை இந்த வீட்டுக்கு மருமகளா.? கொண்டு வந்திர கூடாதே என்ற ஒரே காரணத்துக்காக மட்டும் தான் நான் அவங்களை வெறுத்து ஒதுக்குறேன்..
இதே இது நாளைக்கே ரெண்டு பேருக்கும் ஒரு கல்யாணத்தை பண்ணி வெளியில் அனுப்பின பிறகு இந்த வீட்டுக்கு தாராளமா வரட்டும், போகட்டும் நான் ஒண்ணுமே சொல்லமாட்டேன்...
ஆனா என்னமோ அவங்க வீடு மாதிரி அதிக உரிமை எடுக்குறதும், உங்க பாட்டி, உன் தம்பி, என் புருஷன் அது தான் உங்க அப்பா எல்லாரும் தலையில் தூக்கி வச்சு ஆடுறதும் எனக்கு பிடிக்கலை...
நீ மட்டும் தான் அவங்களை கண்டும் காணாம இருந்த.. ஆனா இப்போ அதுவும் போச்சு.. உன்னை நல்லா மயக்கி வச்சுட்டாங்க “ என கண்ணீர் வடிக்க...
அவர் கூறுவதும் அவனுக்கு சரியாக பட அமைதிக்காத்தான்.. அவனும் இந்த தகுதி பார்த்து பழகும் ரகம் என்பதால் அவர் கூற்று சரியாக பட்டதோ என்னவோ... ஆனாலும் அவர்கள் அத்தை பொண்ணுங்க என்று அவனுக்கும் சொல்ல மனது வரவில்ல...
அதிலும் அவன் எண்ணம் முழுவதும் ஒன்றே ஓன்று தான்... இதழியை தன் தாய்க்கு நன்கு பிடித்த பிறகு அவளை கைபிடிக்க வேண்டும் என்று எண்ணி இருந்தான்... ஆனால் அவன் ஓன்று நினைக்க, நடப்பது வேறாக இருக்கிறது... என்ன செய்வது... “ ஆனாலும் அவரின் கண்ணீர் அவனுக்கு வேதனையளிக்க.. அம்மாவை முதலில் சமாளிப்போம் என எண்ணி.., அவரை சகஜம் ஆக்கும் பொருட்டு “ ம்மா.. என்னம்மா நீ.. இதுக்கு போய் அழுற.... நான் யாரு... என்னை யாரும் மயக்க முடியாது.. நான் உன் சக்திம்மா “ என காலரை தூக்கி விட..
அவனின் மனசாட்சியோ “ குட்டிமாமா என்று ஒரு சத்தம் கேட்டா போதும் அய்யா சத்தமில்லாம மயங்கிருவாறு “ என அவனை வார... “ சகுனி.. சகுனி.. “ என அதை அடித்து விரட்டிய அவன்..
“ ம்மா... எல்லாம் நான் பாத்துகிறேன்.. நீ அவங்களை திட்டாமல் மட்டும் இரு... உனக்கு நேரத்துக்கு நேரம் சாப்பாடு தருவது அவங்க தான்... வீட்டுல எல்லாம் பொறுப்பா பாத்துகிறாங்க.. நீ எதுக்கும்மா அவங்க மேல வெறுப்பை சம்பாதிக்குற..
ஒரு வேளை வெற்றி எனக்கு முன்னாடியே இனியை சத்தமில்லாமல் கல்யாணம் பண்ணிட்டு வந்தா நம்ம கெளரவம் என்ன ஆகிறது... அதிலும் நீ இப்படி அவங்களை பேசிட்டே இருந்தா யாரும் வேண்டாம் என்று சக்தி தனியா போய்ட்டானா.? நம்ம மதிப்பு என்ன ஆகுறது....
கொஞ்ச நாள் தாம்மா அவங்களை சகிச்சுக்கோ... எல்லாம் சரியா போகும் என கூறி வெளியில் வரவும், நித்தி லக்ஷ்மி அறைக்கு செல்லவும் சரியாக இருந்தது... அவளை ஒரு பார்வைப் பார்த்துக் கொண்டே அறையை விட்டு வெளியில் வந்தான்....
வெளியில் வந்தவன் இதழி கையால் “ ஒரு காதல் டீயை “ குடித்துவிட்டு செங்கல் சூளைக்கு சென்றான் அவன்..
வெற்றியோ திருநெல்வேலி ஆபிஸ் மட்டுமே குறி என்று அங்கயே படுத்துக் கொண்டான்..
மாலை எப்படியும் ஒரு அரைமணிநேரம் இனியாளுக்காக வந்து விடுவான் வெற்றி... எம்.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் முதல் வருடத்தில் இருக்கிறாள்.. அதிலும் லக்ஷ்மி முன் இருவரும் பார்த்துக் கொள்வதே இல்ல... வெற்றி வீட்டில் அதிகம் இருப்பதும் இல்ல...
முன்னொரு நாள் இனியாள் கல்லூரி விட்டு பஸ் ஸ்டாண்ட் வர திடீரென அவள் முன் காரை நிறுத்திய வெற்றி கதவை அவளுக்காக திறந்து விட்டு “ ஏறு “ என கூற....
“ ஊஹும்.. நான் மாட்டேன் “ என சிறுகுழந்தையாக மறுத்தவளை.., முறைத்துப் பார்த்த அவன் “ இப்போ ஏற போறியா இல்ல இறங்கி வந்து உன்னை தூக்கி காரில் உட்காரவைக்கவா “ என கேட்டுக் கொண்டே காரை விட்டு இறங்க...
“ வேண்டாம்.. வேண்டாம்.. நானே ஏறிக்கிறேன் “ என பயந்து கூறிக் கொண்டே சுற்றும் முற்றும் பார்த்து மெதுவாக ஏற கால் வைக்க..
“ யம்மா.. தாயே ஏறும்மா.. கொஞ்சம் உன்கிட்ட பேசணும் “ என கெஞ்சி அழைக்க
அவன் கெஞ்சுவது பொறுக்காமல்.... இல்லை சகிக்காமல் உடனே ஏறிக் கொண்டாள் இனியாள்...
காரை கொஞ்ச நேரம் அமைதியாக ஓட்டி சென்ற வெற்றி ஒரு இடத்தில நிறுத்தி அவளை நோக்கி திரும்பி அவளுக்கு வாங்கி வைத்திருந்த பாணி பூரியை அவளிடம் கொடுக்க...
அவள் “ வேண்டாம் “ என மறுக்க.. “ தாயே.. என் பொண்டாட்டி... மயக்க மருந்து எதையும் கலக்கல... அதிலும் அப்படி மயக்க மருந்து தந்து உன்னை நான் கிஸ் பண்ணனும்னு எந்த அவசியமும் இல்லடி... “ என சம்பந்தமே இல்லாமல் பேச..
அவளின் முழியை கண்ட அவன் “ என்ன இப்போ சம்பந்தமே இல்லாமல் கிஸ் பத்தி பேசுறானேன்னு நினைக்குறியா.. நினைக்கணும்டி... அவன் இவன் லவ் பண்ணும் போதே அப்படி கிஸ் பண்ணுனேன்.. அங்க போனேன் இங்க போனேன் என்று சொல்லுறானுக..
இங்க பல வருசமா லவ் பண்ணி ஒண்ணுக்கும் வழியை காணும் “ என புலம்ப...
“ அன்னைக்கு குற்றாலத்துல வச்சு கிஸ் பண்ணிட்டு பொய்யா சொல்லுற “ என மனதில் எண்ணிய அவள் எம்பி அவன் தலையில் கொட்ட..
தலையை தேய்த்து விட்ட அவன் “ அது ஒரு கிஸ்ஸாடி... நான் அது தான் கிராமத்து கிஸ்ன்னு நெனச்சேன்.. பார்த்தா அது பழங்கால பட்டிக்காடு கிஸ்ஸாம்... அந்த கால கருப்பு வெள்ளை கிஸ்... “ என முகத்தை சுளித்துக் கொண்டு “ இங்க வாயேன் “ என மெதுவாக அழைக்க..
அவனை சந்தேகமாக பார்த்த அவள்.. அவனை விட்டு தள்ளி அமர.., “ அட போமா.. நீ தள்ளி போனா நான் பக்கத்துல நெருங்கி வருவேன் “ என கூறி அவள் அருகில் வந்து.. “ இந்த கிராமத்து கிஸ் என்றால் பச்சக்குன்னு நச்சுன்னு கன்னத்துல அழுந்த குடுக்கணுமாம்.. ஒன்னும் எனக்கு தரியா ” என ஹஸ்கி வாய்சில் கேட்க...
முகம் சிவக்க தலையை குனிந்துக் கொண்டாள் அவள்... அவளின் வெட்கத்தை ரசித்துக் கொண்டே.. இந்தா என பானிபூரியை அவள் கையில் கொடுக்க.. மெதுவாக வாங்கிக் கொண்டாள் அவள்...
அதை சாப்ட்டுக் கொண்டே பேசிக் கொண்டு இருக்க... ஒரு பானிபூரியை எடுத்து அவனிடம் நீட்ட “ வேண்டாம்மா நீ சாப்டு “என கூறி அவள் சாப்டும் அழகை ரசித்துக் கொண்டு இருந்தான்...
மெதுவாக “ இனி “ என அழைக்க...