ஹாய்... ஹலோ... மக்களே..!!
சாரிப்பா... லேட்டா வந்துட்டேன்... மழையின் காரணமா லேப்க்கு காச்சல் மாதிரி எனக்கும் உடம்பு சரி இல்லை.... ஆனாலும் உங்களை தேடி வந்திருக்கேன்... சோ லைக், கமெண்ட் கண்டிப்பா பண்ணனும்... அது தான் லேட்.... என்னை வேரோடு சாய்த்தவளே(னே)...!!! அடுத்த எபி 19 போடுறேன்.. படித்து உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க... படிக்கும் அத்தனை மக்களுக்கும் நன்றி செல்ல்லம்ஸ்....... ஹார்ட் இன்னைக்கு சக்திக்கா..? வெற்றிக்கா..? எனக்கு கண்டிப்பாக சொல்லவும்.... எல்லாரும் தேடல் ரிஸல்டில் திக் திக்னு இருப்பாங்க நான் கூலா இங்க அட்டனன்ஸ் போடுறேன்.. என் மன தைரியம் எம்புட்டு பார்த்தீங்களா..??? ஹா...ஹா...
வேர் – 19
அந்த மாலை பொழுது மிக ரம்மியமாக ஆரம்பிக்க... சூரியன், இரவு பெண்ணின் வருகையை ஆவலுடன் எதிர் நோக்கி காத்திருக்க... மரங்களோ தன் கிளைகளில் உள்ள மலர்களை தூவி, பூமியை நலம் விசாரித்து கொண்டிருக்க... தென்னம் கீற்றுகளோ தன் காதலி தென்றல் காற்றுடன் காதல் வசனம் பேச...,
சக்தி அழைக்கவும் “ என்னண்ணா “ என கேட்டுக் கொண்டே அவன் அருகில் வந்தான் வெற்றி..,
“ டேய் வெற்றி, குழந்தை அழுறான்... ஏதாவது செய்டா “ என குழந்தையை தூக்கி வைத்து தட்டிக் கொண்டே கூற..
கடுப்பேத்துறியா எரும உன்னை.. “ டேய் உன் பொண்டாட்டி கிட்ட கொண்டு குடுடா.. அவன் பசில அழறான்.. இது கூட தெரியாமா... போடா போ “ என கடுப்புடன் கூற..
“ டேய்.. அவ டயர்ட்ல இருக்காடா... இப்போ தூங்கிருப்பா.. நீ ஏதாவது செய் “
அவனை கடுப்புடன் முறைத்துக் கொண்டே “ நான் வேணா பால் குடுக்கவா..? “ என கடுப்புடன் கேட்க..
“ ஈஈ.. சரிடா... இந்தா குடு “ என குழந்தையை அவன் கையில் கொடுக்க வர,
“ அய்யோ ஆண்டவா... இவன் தெரிஞ்சு செய்றானா.. இல்லை தெரியாம சொல்லுறானான்னே தெரியலியே..? என புலம்பிய வெற்றி “ அண்ணி கிட்ட கொண்டு குடுடா குழந்தையை “ என அவனிடம் கத்திவிட்டு “ ம்மா “ என அழைத்துக் கொண்டே சென்றான் வெற்றி...
“ டேய் சக்தி.. நீ ரொம்பவே சொதப்புறடா.. போ எப்படியும் அவகிட்ட அடி கன்பார்ம் “ என புலம்பிக் கொண்டே மாடி ஏற கால் வைக்கவும்...
“ செல்லம்.. எதுக்குடா. அழுறீங்க அப்பா அடிச்சுடாங்களா.? நீங்க வாங்க... அப்பாவை பிறகு நாம அடிக்கலாம் “ என குழந்தையிடம் கூறிக் கொண்டே குழந்தையை அவனிடம் இருந்து வாங்கிக் கொண்டு தங்கள் அறைக்கு சென்று மறைந்தாள் இதழினி...
மாலை ஆக வீட்டில் சிறு பூஜை செய்ய வீட்டில் அத்தனை பேரும் பூஜை அறையில் இருந்தனர்... அப்பொழுது தான் பூஜையறையை நன்கு பார்த்தாள் இதழி... இப்பொழுது புதிதாக அவளின் பெற்றோரும், அவளின் பாட்டி மணியும் போட்டோவாக வீற்றிருந்தனர்.....
லக்ஷ்மியின் இத்தகைய புது மாற்றம் எல்லாருக்கும் மகிழ்ச்சியளிக்க கடவுளை வேண்டி நின்றனர்... இதழியோ அங்கிருந்த கண்ணன் சிலையைப் பார்த்து தன்னையும் அறியாமல் எப்பொழுதும் பாடும் அவளின் மனதுக்கு நெருங்கிய பாடலை அவள் பாட ஆரம்பித்தாள்...
அவளுக்கு பாட எல்லாம் தெரியாது.. ஆனால் சந்தோசத்திலோ இல்லை கவலையிலோ அவளின் வாய் தானாக பாடலை பாடும்.. இப்பொழுது ஒரு பரவச நிலையில் இருக்க... சக்தியின் மேல் தான் வைத்த காதலும் மனதில் எழ..., அவளின் கண்களோ தானாக மூடிக் கொள்ள.., இதழோ மெதுவாக....
“ அலைபாயுதே கண்ணா... என் மனம் மிக அலைபாயுதே... உன் ஆனந்த மோஹன ” என்று ஆரம்பித்த பொழுது அவள் குரல் குழைந்து, இழைந்து அனைவரின் மனதில் தேனாய் பாய்ந்தது...
இதழியின் அலைபாயும் மனது சக்திக்கு மட்டுமே புரிந்தது... வார்த்தைகளால் கூற முடியாத செய்திகளை அந்த பாடல் அவனுக்கு உணர்த்துவதாய் தோன்றியது...
பாடலின் இடையே வரும் “ தனித்த மனத்தில் உருக்கி பதத்தை எனக்கு அளித்து மகிழ்த்தவா....
ஒரு தனித்த வனத்தில் அணைத்து எனக்கு உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா..? “ என்ற வரிகள் பாடும் பொழுது தன்னையும் அறியாமல் கண்களை திறந்தவளின் பார்வை சக்தியையே நோக்க...
அவளின் பாடலில் லயிதிருந்தவன், அவளின் அந்த வரியில் அன்றொரு நாள் தன் கையில் மலரைப் போல் மென்மையாய், இனிமையாய் அடங்கி லயித்திருந்த அவளின் உருவம், அவனின் மனதின் உணர்வுகளை மீட்டுவதாய் இருந்தது...
கண்மூடி மெய்யுருக அவள் பாடிக் கொண்டிருக்க, கன்னத்தில் ஈரத்தின் சாயல் தெரிய கண்திறந்தவளின் முன்னே, கன்னத்தில் முத்தமிட்டு நிமிர்ந்த சக்தி அவளை நோக்கி கைகளை நீட்டி நிற்க... அவனை நோக்கி எட்டு எடுத்து வைத்தவளின் நினைவலையில் கடந்த காலம் வர அப்படியே தன் நடையை நிறுத்திக் கொண்டாள்....
அவளின் நிலை புரிந்த சக்தியும் தன்னை சமாளித்துக் கொண்டு குழந்தையை பார்ப்பதுப் போல் குனிந்துக் கொண்டான்.... ஆனாலும் மனதின் ஓரம் சிறு வலியெடுக்க தான் செய்தது....
பூஜை முடிந்து சக்திக்கும், குழந்தைக்கும் விபூதி வைத்து விட்ட லக்ஷ்மி இதழி பக்கமாய் திரும்ப
“ ம்மா “ என சக்தி அழைக்கவும் “ என்னடா “ என கேட்டு அவன் பக்கம் திரும்பினார் லக்ஷ்மி...
“ ம்மா.. அவளுக்கு நான் வைக்குறேன்மா “
மனதில் பய நல்லா தேறிட்டான் போலவே என எண்ணி “ சரிடா “ என கூறி அவனிடம் குங்கும சிமிழை நீட்ட குங்குமம் எடுத்து இதழியின் நெற்றியிலும், வகிட்டிலும் வைத்த சக்தி மெதுவாக அவளை அணைத்து நெற்றியில் முத்தமிட... இதழியோ அவனைப் பார்த்து நின்றாள்...
“ ம்மா.. நானு “ என வெற்றியும் வர..
“ நீயுமாடா “ என செல்லமாக சலித்த லக்ஷ்மி அவனிடம் குங்கும சிமிழை நீட்ட வாங்கிய அவன் இனியாளுக்கு வைத்து விட்டு அவளை தோளோடு அணைத்துக் கொண்டான்...
அவர்கள் இத்தனை சந்தோசமாக இருப்பதை கண்ட லக்ஷ்மிக்கு கண்கள் கலங்க, மெதுவாக கண்களை துடைத்தவரைக் கண்ட நாராயணன் “ என்ன லச்சு “ என கேட்டு தோளோடு அணைத்துக் கொள்ள..
“ ப்பா.. நீங்களுமா.. சரி சரி அம்மாவுக்கும் குங்குமம் வைத்து விடுங்க “ என வெற்றிக் கூற லக்ஷ்மியிடம் இருந்து கும்கும சிமிழை வாங்கிய நாராயணன் லக்ஷ்மி நெற்றியில் வைத்து விட்டு.. மெதுவாக ஊதி விட அதை கண்ட வெற்றி “ ஓஹோ “ என குரல் கொடுக்க...
முகத்தில் தோன்றிய வெட்க புன்னகையுடன் நாராயணன் தோளில் சாய்ந்துக் கொண்டார் லக்ஷ்மி... அவருக்கு தன் குடும்பத்தை இப்படி பார்க்க அத்தனை சந்தோசமாக இருந்தது...
சக்தி கையில் இருந்து குழந்தையை வாங்கிய லக்ஷ்மி “ டேய் செல்லம்.. உன்னோட ரெண்டு அம்மாவும் வந்த ராசி எல்லாருக்கும் எத்தனை சந்தோசமா.. இருக்கு பாரேன் “ என கூறி குழந்தையின் கன்னத்தில் முத்தமிட அவனும் தன் பொக்கை வாயை திறந்து சிரிக்க.. அந்த நேரம் எல்லார் முகங்களும் புன்னகையை தத்தெடுத்துக் கொண்டன....
அதே புன்னகையுடன் எல்லாரும் தங்கள் அறைக்கு செல்ல.., இனியாளை அழைத்த லக்ஷ்மி அவளிடம் “ என் மூத்த மருமகளை போல, சீக்கிரமே ஒரு பேரனையோ, பேத்தியையோ பெத்து குடுத்துட்டு உன் படிப்பை தொடரு இனியாள்... இதை என்னோட வேண்டுதலா எடுத்துக்கோ சரியா.. அத்தை இப்படி சொல்லுறாங்களேன்னு அத்தை மேல கோபப்படாத இனி.... இத்தனை நாளும் இதழியையும், ஆருஷ் குட்டியையும் பார்த்துட்டு, உன் படிப்பையும் பார்த்து உங்க வாழ்கையை பார்க்காம விட்டுட்ட.. இனியாவது அப்படி இருக்காத... அவங்க ரெண்டு பேரையும் அத்தை நல்லா பாத்துகிறேன்.. முக்கியமா சக்தியையும், இதழியையும் பார்த்துகிறேன்... நீ வெற்றியை மட்டும் கவனிம்மா... ஏற்கனவே என மேல செம காண்டுல இருப்பான்.. போ அவன் காத்துகிட்டு இருப்பான் “ அவளை அவன் அறைக்கு அனுப்ப..
அந்த நேரம் அவர் அறைக்குள் நுழைந்தாள் இதழி.. லக்ஷ்மி இத்தனை நேரம் பேசிக் கொண்டிருந்ததை கேட்டுக் கொண்டு தான் இருந்தாள்... லக்ஷ்மியின் இந்த மாற்றம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது... இவர்கள் திருமணத்தை மீண்டும் நடத்தியதிலே மகிழ்ந்துப் போய் இருந்தவள்.. இப்பொழுது முழுதாக அவர் அன்பில் குளிர்ந்துப் போனாள்...
ஆனாலும் எதையும் காட்டாமல் அவளிடம் பேசிக் கொண்டே இனியாளுக்கு மெலிதாக அலங்காரம் செய்ய “ ஏய் இதழி.. ஏண்டி இப்படி என்னை பேய் மாதிரி மாத்துற “ என இனியாள் அலற..
“ அக்கா நீ சும்மா இரு.. வெற்றி மாமா உன்னை பார்த்து மயங்கணும்ல “ என கண் சிமிட்டிக் கூற...
இனியாள் மனதோ “ நீ இப்படியே பண்ணிட்டு இருந்தா.. வெற்றிமாமா இங்கையே ஓடி வந்துருவாரு “ என எண்ணிக் கொண்டே அவளிடம் மெல்லமாக சிரித்து வைத்தாள்... ஏற்கனவே இந்த நாலுமாதமாக அவனை ரொம்பவே அலைய விட்டுவிடோம் என தவித்துக் கொண்டு இருந்தாள்..... அதற்குள் இதழி அலங்காரத்தை முடிக்க.. அவள் முன் வந்து கொஞ்சம் தள்ளி நின்று அவளை ரசித்தாள்... ஏற்கனவே இதழி, இனி இருவரும் அழகிகள்.... இப்பொழுதோ பேரழகாக மிளிர்ந்தாள்...
கொடியிடை தாண்டிய கூந்தலும், தங்க நிறமும், எடுப்பான நாசியும், மஸ்காரா போட்ட மைவிழியும், கொஞ்சமே கொஞ்சம் லிப்ஸ்டிக் என ஜொலித்தவளை கண்ட இதழி மனது திருப்திப் பட “ அக்கா செம்மையா இருக்க.. மாமா பிளாட் “ என கண்ணடித்து....
“ அக்கா.. இங்க வா.... கன்னத்துல சின்னதா ஒரு திருஷ்டி பொட்டு வச்சுக்க... என் கண்ணே பட்டுடும்... முகம் அவ்வளவு பிரகாசமா இருக்கு.. எல்லாம் வெற்றி மாமா மயமா ..? “ என கிண்டல் செய்தபடி ஆருஷ்க்கு வைத்து விடும் கருப்பு ****** குச்சியில் சிறு புள்ளியாய் எடுத்து முகவாய் ஓரத்தில் வைத்து விட்டாள் இதழினி...
உடனே அதை கையில் வாங்கிய இனியாள், இதழியின் கன்னத்திலும் ஒரு புள்ளியை வைத்து விட, நெகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்த லக்ஷ்மி
“ ரொம்ப அழகா ரெடி பண்ணிட்ட இதழி.. காலையில் கோவிலுக்கு போகணும் சீக்கிரம் வாங்க “ என கூறி அவர்களை அழைத்துக் கொண்டு வெளியில் வந்தார்.. இனியாளை வெற்றி அறைக்கு அனுப்பிய லக்ஷ்மி தன் அறைக்கு சென்று ஆருஷனை அவள் கையில் கொடுக்க துங்கிய மகனை வாங்கிக் கொண்டு தங்கள் அறைக்கு சென்றாள் இதழினி...
தன் அறைக்கு சென்ற இதழி மெதுவாக பார்வையை திருப்பி சக்தியை தேட அவன் இருபதற்க்கான அறிகுறி இல்லாமல் போக குழந்தையை தொட்டிலில் படுக்க வைத்து விட்டு அவனை தேடி பால்கனிக்கு செல்ல அவனோ...
கையில் சிகரெட்டை கையில் வைத்துக் கொண்டு ஆழ்ந்த சிந்தனையில் இருப்பது பட “ மகனே உனக்கு இந்த பழக்கம் வேற இருக்கா... இத்தனை நாள் உன்னை சரியா கவனிக்கல... உனக்கு இருக்கு... இன்னைக்கு நீ கீழ தான் படுக்கணும்...கட்டிலில் உனக்கு இடம் இல்ல “ என அவனை திட்டிக் கொண்டே தொட்டிலில் தூங்கிய மகனை கட்டிலில் படுக்க வைத்து இருபக்கம் அவனுக்கு அரணாக தலைகாணியை வைத்து விட்டு சக்திக்கு இடம் இல்லாமல் அந்த கட்டிலை மகனும், மனைவியும் பிடித்துக் கொண்டனர்....
பால்கனியில் நின்ற சக்திக்கு தூக்கம் வருவதுப் போல் இல்ல... அவன் மனம்முழுவதும் இதழியே நிறைந்திருந்தாள்... அவளின் பாடலும், அவளின் வேதனையும் அவனை கலங்க வைப்பதாய்.... அந்த நேரம்
சாரிப்பா... லேட்டா வந்துட்டேன்... மழையின் காரணமா லேப்க்கு காச்சல் மாதிரி எனக்கும் உடம்பு சரி இல்லை.... ஆனாலும் உங்களை தேடி வந்திருக்கேன்... சோ லைக், கமெண்ட் கண்டிப்பா பண்ணனும்... அது தான் லேட்.... என்னை வேரோடு சாய்த்தவளே(னே)...!!! அடுத்த எபி 19 போடுறேன்.. படித்து உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க... படிக்கும் அத்தனை மக்களுக்கும் நன்றி செல்ல்லம்ஸ்....... ஹார்ட் இன்னைக்கு சக்திக்கா..? வெற்றிக்கா..? எனக்கு கண்டிப்பாக சொல்லவும்.... எல்லாரும் தேடல் ரிஸல்டில் திக் திக்னு இருப்பாங்க நான் கூலா இங்க அட்டனன்ஸ் போடுறேன்.. என் மன தைரியம் எம்புட்டு பார்த்தீங்களா..??? ஹா...ஹா...
வேர் – 19
அந்த மாலை பொழுது மிக ரம்மியமாக ஆரம்பிக்க... சூரியன், இரவு பெண்ணின் வருகையை ஆவலுடன் எதிர் நோக்கி காத்திருக்க... மரங்களோ தன் கிளைகளில் உள்ள மலர்களை தூவி, பூமியை நலம் விசாரித்து கொண்டிருக்க... தென்னம் கீற்றுகளோ தன் காதலி தென்றல் காற்றுடன் காதல் வசனம் பேச...,
சக்தி அழைக்கவும் “ என்னண்ணா “ என கேட்டுக் கொண்டே அவன் அருகில் வந்தான் வெற்றி..,
“ டேய் வெற்றி, குழந்தை அழுறான்... ஏதாவது செய்டா “ என குழந்தையை தூக்கி வைத்து தட்டிக் கொண்டே கூற..
கடுப்பேத்துறியா எரும உன்னை.. “ டேய் உன் பொண்டாட்டி கிட்ட கொண்டு குடுடா.. அவன் பசில அழறான்.. இது கூட தெரியாமா... போடா போ “ என கடுப்புடன் கூற..
“ டேய்.. அவ டயர்ட்ல இருக்காடா... இப்போ தூங்கிருப்பா.. நீ ஏதாவது செய் “
அவனை கடுப்புடன் முறைத்துக் கொண்டே “ நான் வேணா பால் குடுக்கவா..? “ என கடுப்புடன் கேட்க..
“ ஈஈ.. சரிடா... இந்தா குடு “ என குழந்தையை அவன் கையில் கொடுக்க வர,
“ அய்யோ ஆண்டவா... இவன் தெரிஞ்சு செய்றானா.. இல்லை தெரியாம சொல்லுறானான்னே தெரியலியே..? என புலம்பிய வெற்றி “ அண்ணி கிட்ட கொண்டு குடுடா குழந்தையை “ என அவனிடம் கத்திவிட்டு “ ம்மா “ என அழைத்துக் கொண்டே சென்றான் வெற்றி...
“ டேய் சக்தி.. நீ ரொம்பவே சொதப்புறடா.. போ எப்படியும் அவகிட்ட அடி கன்பார்ம் “ என புலம்பிக் கொண்டே மாடி ஏற கால் வைக்கவும்...
“ செல்லம்.. எதுக்குடா. அழுறீங்க அப்பா அடிச்சுடாங்களா.? நீங்க வாங்க... அப்பாவை பிறகு நாம அடிக்கலாம் “ என குழந்தையிடம் கூறிக் கொண்டே குழந்தையை அவனிடம் இருந்து வாங்கிக் கொண்டு தங்கள் அறைக்கு சென்று மறைந்தாள் இதழினி...
மாலை ஆக வீட்டில் சிறு பூஜை செய்ய வீட்டில் அத்தனை பேரும் பூஜை அறையில் இருந்தனர்... அப்பொழுது தான் பூஜையறையை நன்கு பார்த்தாள் இதழி... இப்பொழுது புதிதாக அவளின் பெற்றோரும், அவளின் பாட்டி மணியும் போட்டோவாக வீற்றிருந்தனர்.....
லக்ஷ்மியின் இத்தகைய புது மாற்றம் எல்லாருக்கும் மகிழ்ச்சியளிக்க கடவுளை வேண்டி நின்றனர்... இதழியோ அங்கிருந்த கண்ணன் சிலையைப் பார்த்து தன்னையும் அறியாமல் எப்பொழுதும் பாடும் அவளின் மனதுக்கு நெருங்கிய பாடலை அவள் பாட ஆரம்பித்தாள்...
அவளுக்கு பாட எல்லாம் தெரியாது.. ஆனால் சந்தோசத்திலோ இல்லை கவலையிலோ அவளின் வாய் தானாக பாடலை பாடும்.. இப்பொழுது ஒரு பரவச நிலையில் இருக்க... சக்தியின் மேல் தான் வைத்த காதலும் மனதில் எழ..., அவளின் கண்களோ தானாக மூடிக் கொள்ள.., இதழோ மெதுவாக....
“ அலைபாயுதே கண்ணா... என் மனம் மிக அலைபாயுதே... உன் ஆனந்த மோஹன ” என்று ஆரம்பித்த பொழுது அவள் குரல் குழைந்து, இழைந்து அனைவரின் மனதில் தேனாய் பாய்ந்தது...
இதழியின் அலைபாயும் மனது சக்திக்கு மட்டுமே புரிந்தது... வார்த்தைகளால் கூற முடியாத செய்திகளை அந்த பாடல் அவனுக்கு உணர்த்துவதாய் தோன்றியது...
பாடலின் இடையே வரும் “ தனித்த மனத்தில் உருக்கி பதத்தை எனக்கு அளித்து மகிழ்த்தவா....
ஒரு தனித்த வனத்தில் அணைத்து எனக்கு உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா..? “ என்ற வரிகள் பாடும் பொழுது தன்னையும் அறியாமல் கண்களை திறந்தவளின் பார்வை சக்தியையே நோக்க...
அவளின் பாடலில் லயிதிருந்தவன், அவளின் அந்த வரியில் அன்றொரு நாள் தன் கையில் மலரைப் போல் மென்மையாய், இனிமையாய் அடங்கி லயித்திருந்த அவளின் உருவம், அவனின் மனதின் உணர்வுகளை மீட்டுவதாய் இருந்தது...
கண்மூடி மெய்யுருக அவள் பாடிக் கொண்டிருக்க, கன்னத்தில் ஈரத்தின் சாயல் தெரிய கண்திறந்தவளின் முன்னே, கன்னத்தில் முத்தமிட்டு நிமிர்ந்த சக்தி அவளை நோக்கி கைகளை நீட்டி நிற்க... அவனை நோக்கி எட்டு எடுத்து வைத்தவளின் நினைவலையில் கடந்த காலம் வர அப்படியே தன் நடையை நிறுத்திக் கொண்டாள்....
அவளின் நிலை புரிந்த சக்தியும் தன்னை சமாளித்துக் கொண்டு குழந்தையை பார்ப்பதுப் போல் குனிந்துக் கொண்டான்.... ஆனாலும் மனதின் ஓரம் சிறு வலியெடுக்க தான் செய்தது....
பூஜை முடிந்து சக்திக்கும், குழந்தைக்கும் விபூதி வைத்து விட்ட லக்ஷ்மி இதழி பக்கமாய் திரும்ப
“ ம்மா “ என சக்தி அழைக்கவும் “ என்னடா “ என கேட்டு அவன் பக்கம் திரும்பினார் லக்ஷ்மி...
“ ம்மா.. அவளுக்கு நான் வைக்குறேன்மா “
மனதில் பய நல்லா தேறிட்டான் போலவே என எண்ணி “ சரிடா “ என கூறி அவனிடம் குங்கும சிமிழை நீட்ட குங்குமம் எடுத்து இதழியின் நெற்றியிலும், வகிட்டிலும் வைத்த சக்தி மெதுவாக அவளை அணைத்து நெற்றியில் முத்தமிட... இதழியோ அவனைப் பார்த்து நின்றாள்...
“ ம்மா.. நானு “ என வெற்றியும் வர..
“ நீயுமாடா “ என செல்லமாக சலித்த லக்ஷ்மி அவனிடம் குங்கும சிமிழை நீட்ட வாங்கிய அவன் இனியாளுக்கு வைத்து விட்டு அவளை தோளோடு அணைத்துக் கொண்டான்...
அவர்கள் இத்தனை சந்தோசமாக இருப்பதை கண்ட லக்ஷ்மிக்கு கண்கள் கலங்க, மெதுவாக கண்களை துடைத்தவரைக் கண்ட நாராயணன் “ என்ன லச்சு “ என கேட்டு தோளோடு அணைத்துக் கொள்ள..
“ ப்பா.. நீங்களுமா.. சரி சரி அம்மாவுக்கும் குங்குமம் வைத்து விடுங்க “ என வெற்றிக் கூற லக்ஷ்மியிடம் இருந்து கும்கும சிமிழை வாங்கிய நாராயணன் லக்ஷ்மி நெற்றியில் வைத்து விட்டு.. மெதுவாக ஊதி விட அதை கண்ட வெற்றி “ ஓஹோ “ என குரல் கொடுக்க...
முகத்தில் தோன்றிய வெட்க புன்னகையுடன் நாராயணன் தோளில் சாய்ந்துக் கொண்டார் லக்ஷ்மி... அவருக்கு தன் குடும்பத்தை இப்படி பார்க்க அத்தனை சந்தோசமாக இருந்தது...
சக்தி கையில் இருந்து குழந்தையை வாங்கிய லக்ஷ்மி “ டேய் செல்லம்.. உன்னோட ரெண்டு அம்மாவும் வந்த ராசி எல்லாருக்கும் எத்தனை சந்தோசமா.. இருக்கு பாரேன் “ என கூறி குழந்தையின் கன்னத்தில் முத்தமிட அவனும் தன் பொக்கை வாயை திறந்து சிரிக்க.. அந்த நேரம் எல்லார் முகங்களும் புன்னகையை தத்தெடுத்துக் கொண்டன....
அதே புன்னகையுடன் எல்லாரும் தங்கள் அறைக்கு செல்ல.., இனியாளை அழைத்த லக்ஷ்மி அவளிடம் “ என் மூத்த மருமகளை போல, சீக்கிரமே ஒரு பேரனையோ, பேத்தியையோ பெத்து குடுத்துட்டு உன் படிப்பை தொடரு இனியாள்... இதை என்னோட வேண்டுதலா எடுத்துக்கோ சரியா.. அத்தை இப்படி சொல்லுறாங்களேன்னு அத்தை மேல கோபப்படாத இனி.... இத்தனை நாளும் இதழியையும், ஆருஷ் குட்டியையும் பார்த்துட்டு, உன் படிப்பையும் பார்த்து உங்க வாழ்கையை பார்க்காம விட்டுட்ட.. இனியாவது அப்படி இருக்காத... அவங்க ரெண்டு பேரையும் அத்தை நல்லா பாத்துகிறேன்.. முக்கியமா சக்தியையும், இதழியையும் பார்த்துகிறேன்... நீ வெற்றியை மட்டும் கவனிம்மா... ஏற்கனவே என மேல செம காண்டுல இருப்பான்.. போ அவன் காத்துகிட்டு இருப்பான் “ அவளை அவன் அறைக்கு அனுப்ப..
அந்த நேரம் அவர் அறைக்குள் நுழைந்தாள் இதழி.. லக்ஷ்மி இத்தனை நேரம் பேசிக் கொண்டிருந்ததை கேட்டுக் கொண்டு தான் இருந்தாள்... லக்ஷ்மியின் இந்த மாற்றம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது... இவர்கள் திருமணத்தை மீண்டும் நடத்தியதிலே மகிழ்ந்துப் போய் இருந்தவள்.. இப்பொழுது முழுதாக அவர் அன்பில் குளிர்ந்துப் போனாள்...
ஆனாலும் எதையும் காட்டாமல் அவளிடம் பேசிக் கொண்டே இனியாளுக்கு மெலிதாக அலங்காரம் செய்ய “ ஏய் இதழி.. ஏண்டி இப்படி என்னை பேய் மாதிரி மாத்துற “ என இனியாள் அலற..
“ அக்கா நீ சும்மா இரு.. வெற்றி மாமா உன்னை பார்த்து மயங்கணும்ல “ என கண் சிமிட்டிக் கூற...
இனியாள் மனதோ “ நீ இப்படியே பண்ணிட்டு இருந்தா.. வெற்றிமாமா இங்கையே ஓடி வந்துருவாரு “ என எண்ணிக் கொண்டே அவளிடம் மெல்லமாக சிரித்து வைத்தாள்... ஏற்கனவே இந்த நாலுமாதமாக அவனை ரொம்பவே அலைய விட்டுவிடோம் என தவித்துக் கொண்டு இருந்தாள்..... அதற்குள் இதழி அலங்காரத்தை முடிக்க.. அவள் முன் வந்து கொஞ்சம் தள்ளி நின்று அவளை ரசித்தாள்... ஏற்கனவே இதழி, இனி இருவரும் அழகிகள்.... இப்பொழுதோ பேரழகாக மிளிர்ந்தாள்...
கொடியிடை தாண்டிய கூந்தலும், தங்க நிறமும், எடுப்பான நாசியும், மஸ்காரா போட்ட மைவிழியும், கொஞ்சமே கொஞ்சம் லிப்ஸ்டிக் என ஜொலித்தவளை கண்ட இதழி மனது திருப்திப் பட “ அக்கா செம்மையா இருக்க.. மாமா பிளாட் “ என கண்ணடித்து....
“ அக்கா.. இங்க வா.... கன்னத்துல சின்னதா ஒரு திருஷ்டி பொட்டு வச்சுக்க... என் கண்ணே பட்டுடும்... முகம் அவ்வளவு பிரகாசமா இருக்கு.. எல்லாம் வெற்றி மாமா மயமா ..? “ என கிண்டல் செய்தபடி ஆருஷ்க்கு வைத்து விடும் கருப்பு ****** குச்சியில் சிறு புள்ளியாய் எடுத்து முகவாய் ஓரத்தில் வைத்து விட்டாள் இதழினி...
உடனே அதை கையில் வாங்கிய இனியாள், இதழியின் கன்னத்திலும் ஒரு புள்ளியை வைத்து விட, நெகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்த லக்ஷ்மி
“ ரொம்ப அழகா ரெடி பண்ணிட்ட இதழி.. காலையில் கோவிலுக்கு போகணும் சீக்கிரம் வாங்க “ என கூறி அவர்களை அழைத்துக் கொண்டு வெளியில் வந்தார்.. இனியாளை வெற்றி அறைக்கு அனுப்பிய லக்ஷ்மி தன் அறைக்கு சென்று ஆருஷனை அவள் கையில் கொடுக்க துங்கிய மகனை வாங்கிக் கொண்டு தங்கள் அறைக்கு சென்றாள் இதழினி...
தன் அறைக்கு சென்ற இதழி மெதுவாக பார்வையை திருப்பி சக்தியை தேட அவன் இருபதற்க்கான அறிகுறி இல்லாமல் போக குழந்தையை தொட்டிலில் படுக்க வைத்து விட்டு அவனை தேடி பால்கனிக்கு செல்ல அவனோ...
கையில் சிகரெட்டை கையில் வைத்துக் கொண்டு ஆழ்ந்த சிந்தனையில் இருப்பது பட “ மகனே உனக்கு இந்த பழக்கம் வேற இருக்கா... இத்தனை நாள் உன்னை சரியா கவனிக்கல... உனக்கு இருக்கு... இன்னைக்கு நீ கீழ தான் படுக்கணும்...கட்டிலில் உனக்கு இடம் இல்ல “ என அவனை திட்டிக் கொண்டே தொட்டிலில் தூங்கிய மகனை கட்டிலில் படுக்க வைத்து இருபக்கம் அவனுக்கு அரணாக தலைகாணியை வைத்து விட்டு சக்திக்கு இடம் இல்லாமல் அந்த கட்டிலை மகனும், மனைவியும் பிடித்துக் கொண்டனர்....
பால்கனியில் நின்ற சக்திக்கு தூக்கம் வருவதுப் போல் இல்ல... அவன் மனம்முழுவதும் இதழியே நிறைந்திருந்தாள்... அவளின் பாடலும், அவளின் வேதனையும் அவனை கலங்க வைப்பதாய்.... அந்த நேரம்
Last edited: