sakthipriya
SM Exclusive
மாலை வேளை கயல்விழி வீட்டில் சின்னதாக ஒர் பர்த்டே பார்ட்டி ஏற்பாடு செய்து இருந்தார்கள்.
கயல்விழியின் தோழிகள், பக்கத்து வீட்டுகாரார்கள், முக்கிய உறவினர்கள் என பலரும் அழைக்கப்பட்டு இருந்தார்கள்.
மதியழகன் கேக்குடன் முன்னரே வந்து ரிப்பன் கட்றது, பலூன் கட்றது என பல விஷயத்தில் அவளுக்கு உதவி செய்ய கயல்விழி சந்தோஷமாக இருந்தாள்.
மதியழகனின் பெற்றோர்கள் முதலில் வந்தார்கள்.
மதியழகனின் அப்பா சண்முக நாதன் அரசு பள்ளி தலைமை ஆசிரியர். மதியழகன் அம்மா வடிவாம்பிகை அன்பான இல்லத்தரசி. அவர்களுக்கு ஒரு மகன் மதியழகன், ஒரு மகள் சந்திரா. பி.இ இரண்டாமாண்டு படிக்கும் மாணவி.
"கயல் செல்லம்!" என்று அத்தை அழைத்ததும் திரும்பி பார்த்த அவள் "அத்தை!" என்று அழைத்தபடி தாவி சென்று அணைத்துக் கொண்டாள் கயல்விழி.
தன்னை அணைத்தபடி இருந்த கயலை அணைத்து முத்தமிட்ட பின் "பிறந்த வாழ்த்துக்கள் செல்லம்" என்றாள் அத்தை.
சில நிமிட அணைப்புக்குபின் பிரிந்த கயல்விழி "என்னை பார்த்ததும் செல்லம், தங்கம் அப்படிங்கறிங்க. எனக்கு காலைலயே வந்து ஏன் விஷ் பன்னலை" என்று சட்டென்று பொய்க் கோபத்துடன் முகத்தை திருப்பிக் கொண்டு நின்றாள்.
"சாரிடா செல்லம்! கொஞ்சம் முக்கியமான பங்ஷன் போக வேண்டியதாக போச்சு. அதான் எங்களால வரமுடியலை. சாரிடா தங்கம்!" என்று கொஞ்சினாள் அத்தை.
"என் அத்தையை பற்றி எனக்கு தெரியாதா?" என்று பாசம் காட்டிய கயலிடம் "உன் மாமாவை எதுவும் கேட்க மாட்டியா நீ?" என்றாள் அத்தை.
கயலின் பார்வை மாமாவின் பக்கம் திரும்ப "கயல்! மாமா அத்தைகிட்ட என்ன வம்பு பன்னிட்டு இருக்க?" என்றபடி வந்தாள் அன்னலட்சுமி.
"அன்னம்! அவ எங்க வம்பு பன்றா? அவ எங்க சமர்த்து பொண்ணாச்சே" என்று மாமா பரிந்து பேசினார்.
"நீங்க ரெண்டுபேரூம்தான் அவளை செல்லம் கொடுத்து கெடுக்கறிங்க?" என்று குற்றம் சாட்டினாள் அன்னம்.
"எங்க தங்கம் உனக்கு என்ன தொல்லையா தந்துகிட்டிருக்கா? அவ அப்பா இல்லாத பொண்ணாக இருந்தாலும் அப்பா பற்றி கேட்டு உன்னை படுத்தாமதான் இருக்காள்" என்ற கயலுக்கு ஆதரவாக வடிவு பேசத் தொடங்கினாள்.
ஆம். கயலுக்கு ஆறு வயது இருக்கும்போது பாங்க மேனேஜர் பொறுப்பில் இருந்த அவள் அப்பா ரவிச்சந்திரன் இறந்துவிட அன்றிலிருந்து இன்றுவரை தாயாக தந்தையாக இருந்து வருபவள் அவள் அம்மா.
அன்னலட்சுமி ஒர் அரசு மகளிர் பள்ளியில் ஆசிரியை. தன் மகளையும் தனியார் பள்ளியில் எங்கும் சேர்க்காமல் தான் வேலை பார்க்கும் பள்ளியில் பிளஸ்டு வரை படிக்க வைத்து விட்டாள்.
கயல்விழிக்கு பள்ளியில் எந்த சலுகையும் அவள் காட்டாமல் கண்டிப்பாக இருக்கும் தாய்.
கயல்விழியும் தன் தாயிடம் தந்தையை பற்றி கேட்டு இதுவரை தொல்லை செய்யாமல் அம்மாவுக்கு எல்லா விஷயத்திலும் உதவியாக உள்ளாள்.
"சந்திராக்கா உங்க கூட வரலையா அத்தை?" என்றாள் கயல்விழி
"உனக்கு தனியா கிப்ட் வாங்க போகிறதா போனா தங்கம்" என்றாள் அத்தை வடிவு.
அக்கம் பக்கம் நபர்கள், உறவினர்கள் எல்லாம் வரத் தொடங்க அன்னம் அவர்களை கவனிக்க தொடங்க மற்றவர்கள் அவளுக்கு உதவி செய்ய ஆரம்பித்தார்கள்.
கயலின் தோழிகள் வர அவள் கும்பலில் ஐக்கியமாக பார்ட்டி களை கட்ட தொடங்கியது.
"கயல்!" என்றழைத்தபடி கிப்ட் பொருளுடன் சந்திரா வர "அக்கா!" என்றபடி அவளிடம் வந்துவிட்டாள்.
கயல்விழியை கட்டி அணைத்து முத்தமிட்டு "ஹேப்பி பர்த்டே கயல்" என்று சொல்ல "தாங்க்ஸ் அக்கா" என்றாள்.
"ஏய் பெரிய மனுசி! நீ எனக்கே தாங்க்ஸ் சொல்றியா?" என்று செல்லமாக அதட்டினாள்.
"அக்கா!" என்று அவள் சிணுங்க,"சரி சரி நேரமாச்சு வா கேக் வெட்டலாம்" என்றாள் சந்திரா.
Message…
கயல்விழியின் தோழிகள், பக்கத்து வீட்டுகாரார்கள், முக்கிய உறவினர்கள் என பலரும் அழைக்கப்பட்டு இருந்தார்கள்.
மதியழகன் கேக்குடன் முன்னரே வந்து ரிப்பன் கட்றது, பலூன் கட்றது என பல விஷயத்தில் அவளுக்கு உதவி செய்ய கயல்விழி சந்தோஷமாக இருந்தாள்.
மதியழகனின் பெற்றோர்கள் முதலில் வந்தார்கள்.
மதியழகனின் அப்பா சண்முக நாதன் அரசு பள்ளி தலைமை ஆசிரியர். மதியழகன் அம்மா வடிவாம்பிகை அன்பான இல்லத்தரசி. அவர்களுக்கு ஒரு மகன் மதியழகன், ஒரு மகள் சந்திரா. பி.இ இரண்டாமாண்டு படிக்கும் மாணவி.
"கயல் செல்லம்!" என்று அத்தை அழைத்ததும் திரும்பி பார்த்த அவள் "அத்தை!" என்று அழைத்தபடி தாவி சென்று அணைத்துக் கொண்டாள் கயல்விழி.
தன்னை அணைத்தபடி இருந்த கயலை அணைத்து முத்தமிட்ட பின் "பிறந்த வாழ்த்துக்கள் செல்லம்" என்றாள் அத்தை.
சில நிமிட அணைப்புக்குபின் பிரிந்த கயல்விழி "என்னை பார்த்ததும் செல்லம், தங்கம் அப்படிங்கறிங்க. எனக்கு காலைலயே வந்து ஏன் விஷ் பன்னலை" என்று சட்டென்று பொய்க் கோபத்துடன் முகத்தை திருப்பிக் கொண்டு நின்றாள்.
"சாரிடா செல்லம்! கொஞ்சம் முக்கியமான பங்ஷன் போக வேண்டியதாக போச்சு. அதான் எங்களால வரமுடியலை. சாரிடா தங்கம்!" என்று கொஞ்சினாள் அத்தை.
"என் அத்தையை பற்றி எனக்கு தெரியாதா?" என்று பாசம் காட்டிய கயலிடம் "உன் மாமாவை எதுவும் கேட்க மாட்டியா நீ?" என்றாள் அத்தை.
கயலின் பார்வை மாமாவின் பக்கம் திரும்ப "கயல்! மாமா அத்தைகிட்ட என்ன வம்பு பன்னிட்டு இருக்க?" என்றபடி வந்தாள் அன்னலட்சுமி.
"அன்னம்! அவ எங்க வம்பு பன்றா? அவ எங்க சமர்த்து பொண்ணாச்சே" என்று மாமா பரிந்து பேசினார்.
"நீங்க ரெண்டுபேரூம்தான் அவளை செல்லம் கொடுத்து கெடுக்கறிங்க?" என்று குற்றம் சாட்டினாள் அன்னம்.
"எங்க தங்கம் உனக்கு என்ன தொல்லையா தந்துகிட்டிருக்கா? அவ அப்பா இல்லாத பொண்ணாக இருந்தாலும் அப்பா பற்றி கேட்டு உன்னை படுத்தாமதான் இருக்காள்" என்ற கயலுக்கு ஆதரவாக வடிவு பேசத் தொடங்கினாள்.
ஆம். கயலுக்கு ஆறு வயது இருக்கும்போது பாங்க மேனேஜர் பொறுப்பில் இருந்த அவள் அப்பா ரவிச்சந்திரன் இறந்துவிட அன்றிலிருந்து இன்றுவரை தாயாக தந்தையாக இருந்து வருபவள் அவள் அம்மா.
அன்னலட்சுமி ஒர் அரசு மகளிர் பள்ளியில் ஆசிரியை. தன் மகளையும் தனியார் பள்ளியில் எங்கும் சேர்க்காமல் தான் வேலை பார்க்கும் பள்ளியில் பிளஸ்டு வரை படிக்க வைத்து விட்டாள்.
கயல்விழிக்கு பள்ளியில் எந்த சலுகையும் அவள் காட்டாமல் கண்டிப்பாக இருக்கும் தாய்.
கயல்விழியும் தன் தாயிடம் தந்தையை பற்றி கேட்டு இதுவரை தொல்லை செய்யாமல் அம்மாவுக்கு எல்லா விஷயத்திலும் உதவியாக உள்ளாள்.
"சந்திராக்கா உங்க கூட வரலையா அத்தை?" என்றாள் கயல்விழி
"உனக்கு தனியா கிப்ட் வாங்க போகிறதா போனா தங்கம்" என்றாள் அத்தை வடிவு.
அக்கம் பக்கம் நபர்கள், உறவினர்கள் எல்லாம் வரத் தொடங்க அன்னம் அவர்களை கவனிக்க தொடங்க மற்றவர்கள் அவளுக்கு உதவி செய்ய ஆரம்பித்தார்கள்.
கயலின் தோழிகள் வர அவள் கும்பலில் ஐக்கியமாக பார்ட்டி களை கட்ட தொடங்கியது.
"கயல்!" என்றழைத்தபடி கிப்ட் பொருளுடன் சந்திரா வர "அக்கா!" என்றபடி அவளிடம் வந்துவிட்டாள்.
கயல்விழியை கட்டி அணைத்து முத்தமிட்டு "ஹேப்பி பர்த்டே கயல்" என்று சொல்ல "தாங்க்ஸ் அக்கா" என்றாள்.
"ஏய் பெரிய மனுசி! நீ எனக்கே தாங்க்ஸ் சொல்றியா?" என்று செல்லமாக அதட்டினாள்.
"அக்கா!" என்று அவள் சிணுங்க,"சரி சரி நேரமாச்சு வா கேக் வெட்டலாம்" என்றாள் சந்திரா.
Message…
Last edited: