Monisha
அமைச்சர்
- Joined
- Jan 17, 2018
- Messages
- 3,233
- Reaction score
- 58,772
ஹாய் மக்களே!
எல்லோருக்கும் அன்பான ஆரோக்கியமான கோலாகலமான... நம் sm site day வாழ்த்துக்கள்...
எல்லோருக்கும் தோணும்.... இப்படி ஒரு கொண்டாட்டத்துக்கு என்ன அவசியம், அப்படி என்ன நம்ம சைட்ல.... புதுசா பெருசான்னு ?
அதுவும் இன்னைக்கு மானாவாரியாய் சமூகவலைத்தளங்கள் மண்டி கிடக்கு. நாவல்கள் படிக்க நிறைய blogs sites apps ன்னு வந்திருச்சு. எல்லா தளங்களிலும் ரொம்பவும் சிறப்பான கைதேர்ந்த எழுத்தாளர்கள் அவர்களோட திறமையான எழுத்துக்களால் எண்ணற்ற வாசக பெருமக்களை கட்டிப்போட்டு வைசிருக்காங்க. ஆனா மற்ற தளங்களுக்கும் நம் sm தளத்திற்கும் ஒரு பெரிய வித்தியாசம் இருக்குங்க. என்ன தெரியுங்களா?
இங்க வாசகர்கள்தான் எழுத்தாளர்களைக் கட்டி போட்டு வைச்சிருக்காங்க... யாராச்சும் இதை மறுக்க முடியுமா.?
இன்னைக்கு இருக்கிற காலகட்டத்தில யாருடைய திறமையும் யாருக்கும் பாராட்ட கூட நேரமில்லை. அன்றும் அதே 24 மணி நேரம்தான். இன்றும் அதே 24 மணி நேரம்தான். ஆனால் நேரமில்ல
இத்தனைக்கும் அன்னைக்கு தன் மனம் கவர்ந்த கதைக்கும் எழுத்தாளருக்கும் வாசகர்கள் மெனக்கெட்டுதங்கள் கருத்துக்களைக் கடிதம் மூலமா எழுதி அனுப்புவாங்க. பதில் வரலனாலும் நாம சொல்ல நினைத்ததை சொல்லிடோங்கிற ஓர் திருப்தி.
ஆனா இன்னைக்கு கைக்கு எட்டிய தூரத்தில கமெண்ட் பாக்ஸ் இருந்தும் கமெண்ட் போட நேரமில்லை. இன்னும் கேட்டா அன்னைக்கு எல்லாம் வாரத்துக்கோ அல்லது மாதத்துக்கு ஒரு முறைதான் update...இன்னைக்கு நினைக்கும் தருவாயில் விதவிதமாய் ரகம்ரகமாய் latest episodes.
படிப்பவர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டதா இல்லை எழுத்துக்களோட தரம் குறைந்து விட்டதான்னு கேட்டா எனக்கு சத்தியமா பதில் தெரியல?
.இப்படி ஓர் சூழ்நிலையில் சூப்பர் நைஸ்ங்கிற வார்த்தையே என்னை மாறி வளர்ந்து வரும் எழுத்தாளர்களுக்கு பெரிய மேட்டர்.
ஆனா இந்த எண்ணங்களை முற்றிலுமாய் மாற்றி அமைத்தது sm சைட்டின் இந்த புதிய பரிமாணமும் தேடல் போட்டியும்.
அப்பப்பா.... பதில் போட முடியாதளவுக்கு அவ்வளவு கமெண்ட்ஸ் ... வியந்து போகிற அளவுக்கு அத்தனை views and likes.
இதெல்லாம் தாண்டி நம்ம சைட்ல வேறு ஒரு miracle நடந்துது.
sm தள தோழமைகள்
அதற்கான சான்றுதாங்க இந்த சைட் டே கொண்டாட்டம்.
சரியா சொல்லணும்னா இது நம்ம smsite குடும்ப விழா.
எழுத்தாளர்கள் வாசகர்கள்னு துளியளவு கூட வேறுபாடில்லாம எல்லோரும் ஒன்றாய் சேர்ந்து நடத்தின விழா. அதுவும் எல்லோரும் இந்தப் பூமி பந்தோட ஒவ்வொரு மூலையில் இருந்துக்கிட்டு. அதுதாங்க வியப்பின் உச்சம்!
அதாவது தனி தனி புள்ளிகளா தனித்து இருந்தாலும் ஒரே கோலமா smsiteல இணைந்தோம்னு சொல்லணும்.
அப்படி நம்மை இணைத்து வைத்திருக்கும் நம்ம sm சைட்டுக்கு ஒரு பெரிய
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ.................
இந்த ஒ லண்டன் மாகணத்தில இறங்கி அப்படியே அமெரிக்கா கண்டத்தில தடுக்கி விழுந்து ஒரு லாங் ஜம்ப் பண்ணி ஜப்பானை தொட்டுட்டு நேரா மலேசியாவில குதிச்சு இலங்கைக்கு வந்து தமிழ்நாட்டில தரை தட்டும்.
அதான்டா தமிழன்... எங்கயும் இருப்பான்,.. எங்க இருந்தாலும் அவன் தமிழனா இருப்பான்,..
இப்படி நம்மை வெவ்வேறு இடங்களில் இருந்தாலும் நாம் எல்லோரும் ஓர் புள்ளியில் இணைந்ததிற்கு இன்னொரு முக்கிய காரணி இருக்கு. அதுதான் vne shyama.
வீணையடி நீ கதையை அத்தனை உயிரோட்டமா எழுதி நம்மை எல்லாம் ஓர் உறவா உணர வைச்ச நம்ம சைட் நிறுவனர் மற்றும் நம் தலைவி @smteam சஷி அக்காவுக்கு ஒரு பெரிய பெரிய பெரிய பெரிய சலாம்.....
இறுதியா நம்ம சைட் டே கொண்டாட்டத்தின் உச்சகட்ட ஓர் அறிவிப்பு..
எப்போதும் நான் என் கதைகள் மூலமா கற்பனையான சில நிழல் கதைநாயகிகளையே அறிமுகப்படுத்தியிருக்கேன். பாரதி கண்ட புதுமை பெண், வீரமான தீரமான அறிவானன்னு ஒரே மாதிரியான பல முகங்கள். ஆனா இன்னைக்கு ரொம்பவே வித்தியாசமா... நம்ம சைட் டே ஸ்பெஷலா சில நிஜ கதைநாயகிகளை அறிமுகப்படுத்த போறேன். அதாவது நிஜ முகங்களை நிஜ பாரதி கண்ட புதுமை பெண்களை
அவங்கதான் நம்ம நடத்தின போட்டிகளின் ஜட்ஜஸ்
ஒரு பக்க கதை போட்டி:
இவங்க தன் இளம் வயதில் டைப்பிஸ்ட்டா அரசுப்பணியில் சேர்ந்து நேர்மையாக வேலை செய்து பின் அவரே தாசில்தாராக உயர்ந்து வேலைகளிலும் வாழ்க்கையிலும் பலதரப்பட்ட இன்னல்களைக் கடந்து தற்போது பணி ஓய்வு பெற்றுவிட்ட போதும் அசறாம அதே உத்வேகத்தோடும் உற்சாகத்தோடும் நமக்கிடையில் வெகுசாதரணமாய் உலவி வரும் ஓர் சாதனை பெண்மணி..
இவங்க கதைகள் படிக்க ஆரம்பித்து குறிகிய காலமே ஆனாலும் எழுதிற எல்லோரையும் பாரட்டனுங்கிற அந்த பரந்த மனப்பான்மை இருக்கு இல்ல.அதுக்கே பெரிய hats off. கொடுக்கணும் இவங்களுக்கு . இவங்க பாராட்டுக்கள்தாம் பல அறிமுக எழுத்தாளர்களுக்கு எழுதிற உத்வேகத்தை கொடுத்திட்டு இருக்கு..
இவங்களை பத்தி இன்னும் சரியா சொல்லணும்னா... நம்ம தலைவர் ஸ்டைல்ல.... இவங்க எப்படி வருவாங்க எப்போ வருவாங்கனெல்லாம் தெரியாது. ஆனா வர வேண்டிய நேரத்தில கரெக்டா வருவாங்க.
@banumathi jayaraman அது பானுமா. இவங்கதான் நம்ம சிறு கதை போட்டிக்கு தீர்ப்பு வழங்க போற நாட்டாமை ங்கோ.
பட்டிமன்றம் :
அடுத்ததா நான் அறிமுகப் படுத்த போற நாயகி விதவிதமா பலதரப்பட்ட நாவல்களை படிக்கும் ஓர் புத்தக பூங்காவனம்...
பெயரன் பேத்திகள் பார்த்துவிட்ட இந்த நாயகிக்கிட்ட நம்ம பேசும் போது சொன்ன ஆச்சர்யம் என்னன்னா இவங்க மூணாப்பிலேயே புத்தகம் படிக்க ஆரம்பிச்சிட்டாங்களா... இன்னுமும் படிக்கிறாங்க. சும்மா பெயருக்கு இல்ல. அன்றிலிருந்து இன்று வரை புத்தகங்கள் மீதான அதே காதலோடு...
இவங்கள பத்தி இன்னொரு வியப்புக்குரிய விஷயம் இருக்கு. அவங்களோட நாற்பதுகளில் கேன்செர் நோயை எதிர்கொண்டாங்க. சாதாரணமா இல்ல. அசாத்திய துணிச்சலோடு. இன்னைக்கு அதிலிருந்து முழுவதுமாய் மீண்ட நம் நாயகி சொல்றாங்க... புத்தகங்கள்தான் என்னை மீட்டெடுத்துசுன்னு. அந்தளவுக்கு ஆழமா அழுத்தமா அவங்க வாழ்கையில் புத்தகங்கங்கள் பின்னப்பட்டு இருக்கு.
பீனக்ஸ் பறவையாய் இருக்கும் அந்த முகம் தெரியா நாயகி யார் தெரியுங்களா... நம் தள வாசகி... @Chitrasaraswathi
சித்ராம்மா... நம் புதுமையான பட்டிமன்ற முயற்சியில் இன்றைய நாவல்களா அன்றைய நாவல்களா தலைப்பிற்கு வெகுபொருத்தாமான நடுவர்.
பாட்டுப் போட்டி;
ஓர் அழகான கிராமம். அதில ஓர் அழகான குடும்பம். அப்படி ஓர் அழகான குடும்பத்தில இருந்து பிறந்து வளர்ந்து இளமை காலம் தொட்டு புத்தகங்களோடு இயைந்திருந்த இந்த நாயகியோட ஸ்பெஷல் அவங்க இனிமையான குணமும் எளிமையா பழகிற விதமும்தாங்க. வாசகர்கள் தொடங்கி எழுத்தாளர்கள் வரை எல்லோரிடமும் ரொம்பவும் இயல்பா நட்பு பாராட்டிறவங்க, இந்த மாதிரி குணம் இன்றைய காலகட்டத்தில ரொம்பவும் அரிதிலும் அரிது... அவங்கதான் நம்ம ஒன் அன் ஒன்லி பெல் அக்கா...@Manikodi
இவங்கதான் பாட்டு போட்டிக்கு நடுவர். நம்ம பாட்டு போட்டியோட முக்கிய அம்சம் கதை மாந்தர்களோட அந்த பாடல் எந்தளவுக்கு பொருந்துது என்பதுதான். அப்படி பார்த்தா எல்லா கதையில இருக்க கதை மாந்தர்களை பற்றி இவங்களுக்கு ரொம்ப நல்லா தெரியும். அப்படி இருக்க இவங்கள விட பாட்டு போட்டிக்கு ஜட்ஜா வேற யார் இருக்க முடியும். என்ன ஒரே கவலை... ரிசல்ட் சொல்றதுக்குள்ள இவங்க காதுக்கு எந்த டேமேஜூம் ஆகாம இருக்கணும்னு சொல்லி நம்ம அந்த எல்லாம்வல்ல இறைவனை பிராத்திப்போமாக.
அடுத்து creativity ஜட்ஜ்
இவங்க மை டார்லிங்... இவங்கள பத்தி நினைச்சாலே கலர் கலரா பட்டாம்பூச்சி பறக்குது. வயசில அம்பதை தொட்டாலும் பேச்சில செயலில சிந்தனையிலன்னு இவங்க என்றும் பதினாறு. கிரியேடிவ்வா கமெண்ட் போடறதில இவங்களுக்கு நிகர் இவங்கதான். அன் என்னை மாதிரி இவங்களுக்கும் வேறெங்கும் கிளைகள் கிடையாது. smsiteதான் ஒரே போக்கிடம். அவங்கதான் நம்ம கிரியேட்டிவ் க்வின் மஹா. @Maha
இவங்களுக்கு பத்தி முக்கியமா சொல்ல வேண்டிய விஷயம் தமிழ் இவங்களுக்கு தாய்மொழி இல்லைனாலும் தன்னோடு முயற்சியின் மூலமா தமிழ்ல அழகா கமெண்ட் போட்டுட்டு இருக்காங்க. தனியா இதுக்காகவே இவங்களுக்கு applause கொடுக்கணும்.
இவங்க creativity judgingல நிச்சயம் அசால்ட் பண்ணிடுவாங்க. நோ டவுட். ஆனா எனக்கு ஒரே ஒரு கோரிக்கை. கலாய்ப்பது மற்றும் கவுன்டர்கள் கொடுப்பது எப்படி? உங்க செந்தமிழால ஒரு புக் ரிலீஸ் பண்ணனும் மஹா டார்லிங்... அது என்னை மாறியான அம்மாஞ்சிகளுக்கு வரும்காலங்களில் உதவிக்கரமா இருக்கும்.
last but not the least.... பெண் குழந்தைகள் கட்டுரைக்கான ஜட்ஜ்
‘கடுகை துளைத்து ஏழ் கடலை புகட்டி குறுக தறித்த குறள்’ இந்த வரிகள் இடைக்காடர் திருக்குறளை பற்றி கூறியது.
கிட்டத்தட்ட எனக்கு இவங்க கதைகளை பற்றி யோசிக்கும் போது இந்த வரிகள்தான் நினைவுக்கு வருது. ரொம்பவும் குறுகிய பக்கங்களில் எவ்வளவு விஷயங்களை புகட்டி இருக்காங்கன்னு யோசிக்கும் போதே வியப்பா இருக்கு.
இவங்கதான் உண்மையான பாரதி கண்ட புதுமை பெண்...
நம்ம @lakshmi2407 ஆதிமா... ஆதி லக்ஷ்மி. நடமாடும் encyclopedia.... இவங்களுக்கு தெரியாத மேட்டரே இல்ல... எந்த profession பத்தி எழுதினாலும் சும்மா அசால்ட் பண்றாங்க... புதுசா எழுத ஆரம்பிச்சேன்னு ஒரு போர்வையில சுத்துவாங்க ஆனா நம்பாதீங்க... நிறைய சிறு கதைகள் எழுதி இருக்காங்க. பெரும் அர்த்தங்களோட.....
அவங்க எழுத்திலயும் சரி... குரலையும் சரி... ஒரு தனி கம்பீரம். பெண்மை எப்படி இருக்கணும்னு ஓர் உதாரணம் அவங்க.. அதோடு இவங்க நிறைய நிறைய படிப்பாங்க. கதைகள் மட்டுமல்லாது நிறைய கட்டுரைகளையும்... ஆக பெண் குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய கட்டுரையில இவங்க நீதிபதியாக இருப்பதே சிறப்பு.
எல்லோருக்கும் அன்பான ஆரோக்கியமான கோலாகலமான... நம் sm site day வாழ்த்துக்கள்...
எல்லோருக்கும் தோணும்.... இப்படி ஒரு கொண்டாட்டத்துக்கு என்ன அவசியம், அப்படி என்ன நம்ம சைட்ல.... புதுசா பெருசான்னு ?
அதுவும் இன்னைக்கு மானாவாரியாய் சமூகவலைத்தளங்கள் மண்டி கிடக்கு. நாவல்கள் படிக்க நிறைய blogs sites apps ன்னு வந்திருச்சு. எல்லா தளங்களிலும் ரொம்பவும் சிறப்பான கைதேர்ந்த எழுத்தாளர்கள் அவர்களோட திறமையான எழுத்துக்களால் எண்ணற்ற வாசக பெருமக்களை கட்டிப்போட்டு வைசிருக்காங்க. ஆனா மற்ற தளங்களுக்கும் நம் sm தளத்திற்கும் ஒரு பெரிய வித்தியாசம் இருக்குங்க. என்ன தெரியுங்களா?
இங்க வாசகர்கள்தான் எழுத்தாளர்களைக் கட்டி போட்டு வைச்சிருக்காங்க... யாராச்சும் இதை மறுக்க முடியுமா.?
இன்னைக்கு இருக்கிற காலகட்டத்தில யாருடைய திறமையும் யாருக்கும் பாராட்ட கூட நேரமில்லை. அன்றும் அதே 24 மணி நேரம்தான். இன்றும் அதே 24 மணி நேரம்தான். ஆனால் நேரமில்ல
இத்தனைக்கும் அன்னைக்கு தன் மனம் கவர்ந்த கதைக்கும் எழுத்தாளருக்கும் வாசகர்கள் மெனக்கெட்டுதங்கள் கருத்துக்களைக் கடிதம் மூலமா எழுதி அனுப்புவாங்க. பதில் வரலனாலும் நாம சொல்ல நினைத்ததை சொல்லிடோங்கிற ஓர் திருப்தி.
ஆனா இன்னைக்கு கைக்கு எட்டிய தூரத்தில கமெண்ட் பாக்ஸ் இருந்தும் கமெண்ட் போட நேரமில்லை. இன்னும் கேட்டா அன்னைக்கு எல்லாம் வாரத்துக்கோ அல்லது மாதத்துக்கு ஒரு முறைதான் update...இன்னைக்கு நினைக்கும் தருவாயில் விதவிதமாய் ரகம்ரகமாய் latest episodes.
படிப்பவர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டதா இல்லை எழுத்துக்களோட தரம் குறைந்து விட்டதான்னு கேட்டா எனக்கு சத்தியமா பதில் தெரியல?
.இப்படி ஓர் சூழ்நிலையில் சூப்பர் நைஸ்ங்கிற வார்த்தையே என்னை மாறி வளர்ந்து வரும் எழுத்தாளர்களுக்கு பெரிய மேட்டர்.
ஆனா இந்த எண்ணங்களை முற்றிலுமாய் மாற்றி அமைத்தது sm சைட்டின் இந்த புதிய பரிமாணமும் தேடல் போட்டியும்.
அப்பப்பா.... பதில் போட முடியாதளவுக்கு அவ்வளவு கமெண்ட்ஸ் ... வியந்து போகிற அளவுக்கு அத்தனை views and likes.
இதெல்லாம் தாண்டி நம்ம சைட்ல வேறு ஒரு miracle நடந்துது.
sm தள தோழமைகள்
‘முகம் பார்க்காமல் நண்பர்கள் ஆனோம்
வயது மறந்து மீண்டும் வாலிபம் திரும்பினோம்
காலம் நேரங்களை கடந்து பேசி பழகினோம்
இணையத்தளம் என்கிற கருவி மூலமாக இதயத்தால் இணைந்தோம்.
இறுதியாய் தீண்டாமலே கரம் கோர்த்து ஓர் குடும்பமாய் மாறினோம்’
வயது மறந்து மீண்டும் வாலிபம் திரும்பினோம்
காலம் நேரங்களை கடந்து பேசி பழகினோம்
இணையத்தளம் என்கிற கருவி மூலமாக இதயத்தால் இணைந்தோம்.
இறுதியாய் தீண்டாமலே கரம் கோர்த்து ஓர் குடும்பமாய் மாறினோம்’
அதற்கான சான்றுதாங்க இந்த சைட் டே கொண்டாட்டம்.
சரியா சொல்லணும்னா இது நம்ம smsite குடும்ப விழா.
எழுத்தாளர்கள் வாசகர்கள்னு துளியளவு கூட வேறுபாடில்லாம எல்லோரும் ஒன்றாய் சேர்ந்து நடத்தின விழா. அதுவும் எல்லோரும் இந்தப் பூமி பந்தோட ஒவ்வொரு மூலையில் இருந்துக்கிட்டு. அதுதாங்க வியப்பின் உச்சம்!
அதாவது தனி தனி புள்ளிகளா தனித்து இருந்தாலும் ஒரே கோலமா smsiteல இணைந்தோம்னு சொல்லணும்.
அப்படி நம்மை இணைத்து வைத்திருக்கும் நம்ம sm சைட்டுக்கு ஒரு பெரிய
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ.................
இந்த ஒ லண்டன் மாகணத்தில இறங்கி அப்படியே அமெரிக்கா கண்டத்தில தடுக்கி விழுந்து ஒரு லாங் ஜம்ப் பண்ணி ஜப்பானை தொட்டுட்டு நேரா மலேசியாவில குதிச்சு இலங்கைக்கு வந்து தமிழ்நாட்டில தரை தட்டும்.
அதான்டா தமிழன்... எங்கயும் இருப்பான்,.. எங்க இருந்தாலும் அவன் தமிழனா இருப்பான்,..
இப்படி நம்மை வெவ்வேறு இடங்களில் இருந்தாலும் நாம் எல்லோரும் ஓர் புள்ளியில் இணைந்ததிற்கு இன்னொரு முக்கிய காரணி இருக்கு. அதுதான் vne shyama.
வீணையடி நீ கதையை அத்தனை உயிரோட்டமா எழுதி நம்மை எல்லாம் ஓர் உறவா உணர வைச்ச நம்ம சைட் நிறுவனர் மற்றும் நம் தலைவி @smteam சஷி அக்காவுக்கு ஒரு பெரிய பெரிய பெரிய பெரிய சலாம்.....
இறுதியா நம்ம சைட் டே கொண்டாட்டத்தின் உச்சகட்ட ஓர் அறிவிப்பு..
எப்போதும் நான் என் கதைகள் மூலமா கற்பனையான சில நிழல் கதைநாயகிகளையே அறிமுகப்படுத்தியிருக்கேன். பாரதி கண்ட புதுமை பெண், வீரமான தீரமான அறிவானன்னு ஒரே மாதிரியான பல முகங்கள். ஆனா இன்னைக்கு ரொம்பவே வித்தியாசமா... நம்ம சைட் டே ஸ்பெஷலா சில நிஜ கதைநாயகிகளை அறிமுகப்படுத்த போறேன். அதாவது நிஜ முகங்களை நிஜ பாரதி கண்ட புதுமை பெண்களை
அவங்கதான் நம்ம நடத்தின போட்டிகளின் ஜட்ஜஸ்
ஒரு பக்க கதை போட்டி:
இவங்க தன் இளம் வயதில் டைப்பிஸ்ட்டா அரசுப்பணியில் சேர்ந்து நேர்மையாக வேலை செய்து பின் அவரே தாசில்தாராக உயர்ந்து வேலைகளிலும் வாழ்க்கையிலும் பலதரப்பட்ட இன்னல்களைக் கடந்து தற்போது பணி ஓய்வு பெற்றுவிட்ட போதும் அசறாம அதே உத்வேகத்தோடும் உற்சாகத்தோடும் நமக்கிடையில் வெகுசாதரணமாய் உலவி வரும் ஓர் சாதனை பெண்மணி..
இவங்க கதைகள் படிக்க ஆரம்பித்து குறிகிய காலமே ஆனாலும் எழுதிற எல்லோரையும் பாரட்டனுங்கிற அந்த பரந்த மனப்பான்மை இருக்கு இல்ல.அதுக்கே பெரிய hats off. கொடுக்கணும் இவங்களுக்கு . இவங்க பாராட்டுக்கள்தாம் பல அறிமுக எழுத்தாளர்களுக்கு எழுதிற உத்வேகத்தை கொடுத்திட்டு இருக்கு..
இவங்களை பத்தி இன்னும் சரியா சொல்லணும்னா... நம்ம தலைவர் ஸ்டைல்ல.... இவங்க எப்படி வருவாங்க எப்போ வருவாங்கனெல்லாம் தெரியாது. ஆனா வர வேண்டிய நேரத்தில கரெக்டா வருவாங்க.
@banumathi jayaraman அது பானுமா. இவங்கதான் நம்ம சிறு கதை போட்டிக்கு தீர்ப்பு வழங்க போற நாட்டாமை ங்கோ.
பட்டிமன்றம் :
அடுத்ததா நான் அறிமுகப் படுத்த போற நாயகி விதவிதமா பலதரப்பட்ட நாவல்களை படிக்கும் ஓர் புத்தக பூங்காவனம்...
பெயரன் பேத்திகள் பார்த்துவிட்ட இந்த நாயகிக்கிட்ட நம்ம பேசும் போது சொன்ன ஆச்சர்யம் என்னன்னா இவங்க மூணாப்பிலேயே புத்தகம் படிக்க ஆரம்பிச்சிட்டாங்களா... இன்னுமும் படிக்கிறாங்க. சும்மா பெயருக்கு இல்ல. அன்றிலிருந்து இன்று வரை புத்தகங்கள் மீதான அதே காதலோடு...
இவங்கள பத்தி இன்னொரு வியப்புக்குரிய விஷயம் இருக்கு. அவங்களோட நாற்பதுகளில் கேன்செர் நோயை எதிர்கொண்டாங்க. சாதாரணமா இல்ல. அசாத்திய துணிச்சலோடு. இன்னைக்கு அதிலிருந்து முழுவதுமாய் மீண்ட நம் நாயகி சொல்றாங்க... புத்தகங்கள்தான் என்னை மீட்டெடுத்துசுன்னு. அந்தளவுக்கு ஆழமா அழுத்தமா அவங்க வாழ்கையில் புத்தகங்கங்கள் பின்னப்பட்டு இருக்கு.
பீனக்ஸ் பறவையாய் இருக்கும் அந்த முகம் தெரியா நாயகி யார் தெரியுங்களா... நம் தள வாசகி... @Chitrasaraswathi
சித்ராம்மா... நம் புதுமையான பட்டிமன்ற முயற்சியில் இன்றைய நாவல்களா அன்றைய நாவல்களா தலைப்பிற்கு வெகுபொருத்தாமான நடுவர்.
பாட்டுப் போட்டி;
ஓர் அழகான கிராமம். அதில ஓர் அழகான குடும்பம். அப்படி ஓர் அழகான குடும்பத்தில இருந்து பிறந்து வளர்ந்து இளமை காலம் தொட்டு புத்தகங்களோடு இயைந்திருந்த இந்த நாயகியோட ஸ்பெஷல் அவங்க இனிமையான குணமும் எளிமையா பழகிற விதமும்தாங்க. வாசகர்கள் தொடங்கி எழுத்தாளர்கள் வரை எல்லோரிடமும் ரொம்பவும் இயல்பா நட்பு பாராட்டிறவங்க, இந்த மாதிரி குணம் இன்றைய காலகட்டத்தில ரொம்பவும் அரிதிலும் அரிது... அவங்கதான் நம்ம ஒன் அன் ஒன்லி பெல் அக்கா...@Manikodi
இவங்கதான் பாட்டு போட்டிக்கு நடுவர். நம்ம பாட்டு போட்டியோட முக்கிய அம்சம் கதை மாந்தர்களோட அந்த பாடல் எந்தளவுக்கு பொருந்துது என்பதுதான். அப்படி பார்த்தா எல்லா கதையில இருக்க கதை மாந்தர்களை பற்றி இவங்களுக்கு ரொம்ப நல்லா தெரியும். அப்படி இருக்க இவங்கள விட பாட்டு போட்டிக்கு ஜட்ஜா வேற யார் இருக்க முடியும். என்ன ஒரே கவலை... ரிசல்ட் சொல்றதுக்குள்ள இவங்க காதுக்கு எந்த டேமேஜூம் ஆகாம இருக்கணும்னு சொல்லி நம்ம அந்த எல்லாம்வல்ல இறைவனை பிராத்திப்போமாக.
அடுத்து creativity ஜட்ஜ்
இவங்க மை டார்லிங்... இவங்கள பத்தி நினைச்சாலே கலர் கலரா பட்டாம்பூச்சி பறக்குது. வயசில அம்பதை தொட்டாலும் பேச்சில செயலில சிந்தனையிலன்னு இவங்க என்றும் பதினாறு. கிரியேடிவ்வா கமெண்ட் போடறதில இவங்களுக்கு நிகர் இவங்கதான். அன் என்னை மாதிரி இவங்களுக்கும் வேறெங்கும் கிளைகள் கிடையாது. smsiteதான் ஒரே போக்கிடம். அவங்கதான் நம்ம கிரியேட்டிவ் க்வின் மஹா. @Maha
இவங்களுக்கு பத்தி முக்கியமா சொல்ல வேண்டிய விஷயம் தமிழ் இவங்களுக்கு தாய்மொழி இல்லைனாலும் தன்னோடு முயற்சியின் மூலமா தமிழ்ல அழகா கமெண்ட் போட்டுட்டு இருக்காங்க. தனியா இதுக்காகவே இவங்களுக்கு applause கொடுக்கணும்.
இவங்க creativity judgingல நிச்சயம் அசால்ட் பண்ணிடுவாங்க. நோ டவுட். ஆனா எனக்கு ஒரே ஒரு கோரிக்கை. கலாய்ப்பது மற்றும் கவுன்டர்கள் கொடுப்பது எப்படி? உங்க செந்தமிழால ஒரு புக் ரிலீஸ் பண்ணனும் மஹா டார்லிங்... அது என்னை மாறியான அம்மாஞ்சிகளுக்கு வரும்காலங்களில் உதவிக்கரமா இருக்கும்.
last but not the least.... பெண் குழந்தைகள் கட்டுரைக்கான ஜட்ஜ்
‘கடுகை துளைத்து ஏழ் கடலை புகட்டி குறுக தறித்த குறள்’ இந்த வரிகள் இடைக்காடர் திருக்குறளை பற்றி கூறியது.
கிட்டத்தட்ட எனக்கு இவங்க கதைகளை பற்றி யோசிக்கும் போது இந்த வரிகள்தான் நினைவுக்கு வருது. ரொம்பவும் குறுகிய பக்கங்களில் எவ்வளவு விஷயங்களை புகட்டி இருக்காங்கன்னு யோசிக்கும் போதே வியப்பா இருக்கு.
இவங்கதான் உண்மையான பாரதி கண்ட புதுமை பெண்...
நம்ம @lakshmi2407 ஆதிமா... ஆதி லக்ஷ்மி. நடமாடும் encyclopedia.... இவங்களுக்கு தெரியாத மேட்டரே இல்ல... எந்த profession பத்தி எழுதினாலும் சும்மா அசால்ட் பண்றாங்க... புதுசா எழுத ஆரம்பிச்சேன்னு ஒரு போர்வையில சுத்துவாங்க ஆனா நம்பாதீங்க... நிறைய சிறு கதைகள் எழுதி இருக்காங்க. பெரும் அர்த்தங்களோட.....
அவங்க எழுத்திலயும் சரி... குரலையும் சரி... ஒரு தனி கம்பீரம். பெண்மை எப்படி இருக்கணும்னு ஓர் உதாரணம் அவங்க.. அதோடு இவங்க நிறைய நிறைய படிப்பாங்க. கதைகள் மட்டுமல்லாது நிறைய கட்டுரைகளையும்... ஆக பெண் குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய கட்டுரையில இவங்க நீதிபதியாக இருப்பதே சிறப்பு.